Aggregator

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

5 days 16 hours ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Edirisinghe Edible Oil (Pvt) Ltd நிதி நன்கொடை 19 Dec, 2025 | 12:15 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Edirisinghe Edible Oil (Pvt) Ltd இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Edirisinghe Edible Oil (Pvt) Ltdஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் வினிதா ஜயசிங்க மற்றும் பணிப்பாளர் சுஹான் ஜயசிங்க ஆகியோர் வியாழக்கிழமை (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினர். https://www.virakesari.lk/article/233814

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

5 days 16 hours ago
வடகீழ் பருவமழை தீவிரம் : எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்! - வளிமண்டலவியல் திணைக்களம் Published By: Digital Desk 1 19 Dec, 2025 | 12:11 PM நாட்டில் தற்போது நிலவி வரும் வடகீழ் பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்சாதனப் பயன்பாடு மற்றும் மரங்களுக்கு அருகில் நிற்பது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை அவதானிப்புகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/233813

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

5 days 17 hours ago
மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்! 19 Dec, 2025 | 11:45 AM மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்கான கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக நாங்கள் வீதியோரத்தில் உள்ள மரங்களையும் வெட்டி புனரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். இதன்போது குறித்த வீதிக்கு தரமான அடித்தளம் இடப்படாமல், தரமற்ற வகையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. இதுகுறித்து நாங்கள் பிரதேச சபை தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருடன் முரண்பட்டோம். இதன்போது தவிசாளரும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும் ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினை, ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினை கூறினர். பின்னர் ஓரளவு தரமான நிலையில் வீதிக்கு அடித்தளம் இடப்பட்டது. இருப்பினும் அதுவும் திருப்திகரமாக இல்லை. குறித்த வீதியானது முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல் அந்த வீதிக்கு வந்த மூலப்பொருட்கள் வேறு ஒரு வீதிக்கு, எமது அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனரமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதனைக் கண்டித்த நாங்கள், வைரவர் வீதியை முழுமையாக புனரமைக்குமாறும் மற்றைய பகுதியில் உள்ள வீதியை வேறொரு நிதியியல் புனரமைக்குமாறும் கூறினோம். காரணம், இரண்டு வீதிகளும் அரைகுறையில் காணப்படும் என்பதால் ஒரு வீதியை முழுமையாக புனரமைக்குமாறு நாங்கள் கூறினோம். சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன், தங்கள் மீது பிழை இருப்பதனை ஒத்துக்கொண்டார். மற்றைய வீதியில் பரவப்பட்ட மூலப் பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியை முழுமையாக புனரமைப்பதாக கூறினார். அந்த வீதியில் பரவப்பட்ட மூலப்பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியில் பரவுமாறு ஊர் மக்களாகிய எங்களிடம் கூறினார். அவர்கள் விட்ட தவறுக்கு நாங்கள் அந்த வேலையை செய்ய தேவையில்லை. இருப்பினும் நாங்கள் அதையும் செய்வதாக கூறினோம். இருப்பினும் இதுவரை மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதுவரை காலமும் புனரமைக்காது காணப்பட்ட எமது வீதியானது தற்போதாவது புனரமைப்பு செய்யப்படுகின்றது என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. எனவே இது குறித்து பிரதேச சபையானது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/233808

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

5 days 17 hours ago

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

19 Dec, 2025 | 11:45 AM

image

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்கான கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக நாங்கள் வீதியோரத்தில் உள்ள மரங்களையும் வெட்டி புனரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

இதன்போது குறித்த வீதிக்கு தரமான அடித்தளம் இடப்படாமல், தரமற்ற வகையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. இதுகுறித்து நாங்கள் பிரதேச சபை தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருடன் முரண்பட்டோம்.

இதன்போது தவிசாளரும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும் ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினை, ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினை கூறினர். பின்னர் ஓரளவு தரமான நிலையில் வீதிக்கு அடித்தளம் இடப்பட்டது. இருப்பினும் அதுவும் திருப்திகரமாக இல்லை.

குறித்த வீதியானது முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல் அந்த வீதிக்கு வந்த மூலப்பொருட்கள் வேறு ஒரு வீதிக்கு, எமது அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனரமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனைக் கண்டித்த நாங்கள், வைரவர் வீதியை முழுமையாக புனரமைக்குமாறும் மற்றைய பகுதியில் உள்ள வீதியை வேறொரு நிதியியல் புனரமைக்குமாறும் கூறினோம். காரணம், இரண்டு வீதிகளும் அரைகுறையில் காணப்படும் என்பதால் ஒரு வீதியை முழுமையாக புனரமைக்குமாறு நாங்கள் கூறினோம்.

சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன், தங்கள் மீது பிழை இருப்பதனை ஒத்துக்கொண்டார். மற்றைய வீதியில் பரவப்பட்ட மூலப் பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியை முழுமையாக புனரமைப்பதாக கூறினார்.

அந்த வீதியில் பரவப்பட்ட மூலப்பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியில் பரவுமாறு ஊர் மக்களாகிய எங்களிடம் கூறினார். அவர்கள் விட்ட தவறுக்கு நாங்கள் அந்த வேலையை செய்ய தேவையில்லை. இருப்பினும் நாங்கள் அதையும் செய்வதாக கூறினோம். இருப்பினும் இதுவரை மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

இதுவரை காலமும் புனரமைக்காது காணப்பட்ட எமது வீதியானது தற்போதாவது புனரமைப்பு செய்யப்படுகின்றது என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. எனவே இது குறித்து பிரதேச சபையானது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG-20251219-WA0027.jpg

IMG-20251219-WA0025.jpg

IMG-20251219-WA0024.jpg

IMG-20251219-WA0028.jpg

VID-20251218-WA0107.jpg

20251218_173116.jpg

https://www.virakesari.lk/article/233808

பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!

5 days 17 hours ago
அமெரிக்காவையே அதிர வைக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் பற்றி இதுவரை தெரிந்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2004 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கட்டுரை தகவல் டாம் ஜியோகேகன் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் 19 டிசம்பர் 2025, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் புதிய தொகுப்பு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். புகைப்படங்களில் இடம்பெறுவதால் மட்டுமே, அவர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என எந்த உத்தரவாதமும் இல்லை, மேலும் அதில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் எப்ஸ்டீன் தொடர்பாக எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர். எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) என்றால் என்ன? 2008-ஆம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம், எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் தங்கள் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். ஆனால் எப்ஸ்டீன், அரசு வழக்கறிஞர்களுடன் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை (plea deal) மேற்கொண்டார். அந்த பாம் பீச் வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன, மேலும் அவர் ஒரு மைனரிடம் பாலியல் சேவையை நாடியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டார். குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தின் விளைவாக அவர் கடுமையான சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் தொழிலுக்காகக் குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு நெட்வொர்க்கை நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் விசாரணைக்காகக் காத்திருந்த காலகட்டத்தில் சிறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு குற்றவியல் விசாரணைகள் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுடனான நேர்காணல்களின் எழுத்துப் பிரதிகள் மற்றும் எப்ஸ்டீனின் பல்வேறு சொத்துக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உட்பட ஒரு பெரிய ஆவணக் குவியல் திரட்டப்பட்டது. அமெரிக்க நீதித்துறையின் 2025-ஆம் ஆண்டின் குறிப்பாணையின்படி, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அதன் தரவுத்தளங்கள், வன்வட்டுகள் (hard drives) மற்றும் பிற சேமிப்பகங்களில் 300 ஜிகாபைட்டிற்கும் அதிகமான தரவுகள் மற்றும் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. இந்தக் கோப்புகளில் சில, எப்ஸ்டீனை விசாரிக்க ஃபெடரல் மட்டத்திலும் புளோரிடா மாநில மட்டத்திலும் பணியாற்றும் விசாரணை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருக்கலாம் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் பிற சட்டவிரோத சிறார் துஷ்பிரயோகப் பொருட்கள் 'பெருமளவில்' இருப்பதாக நீதித்துறை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டும் தகவல்களைத் தடுத்து வைக்க, அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட சமீபத்திய சட்டம் நீதித்துறைக்கு அனுமதி அளிப்பதால், இந்தக் கோப்புகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாது. பாலியல் கடத்தலுக்காகச் சிறுமிகளைப் பயன்படுத்த எப்ஸ்டீனுடன் சதி செய்ததாக 2021-ஆம் ஆண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட, அவரது பிரிட்டிஷ் கூட்டாளியும் முன்னாள் காதலியுமான கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீதும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே சிவில் வழக்குகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். எப்ஸ்டீன் தொடர்பாக ஏற்கனவே என்ன வெளியிடப்பட்டுள்ளது? கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டங்களில், இந்த வழக்குகள் தொடர்பான சில ஆவணங்கள் பொதுவெளியில் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம், எப்ஸ்டீன் எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆவணங்களை 'ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி' வெளியிட்டது, அவை பெரும்பாலும் மின்னஞ்சல்கள் ஆகும். முன்னதாக செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பில், பிறந்தநாள் வாழ்த்து புத்தகம் ஒன்று இருந்தது; அதில் டிரம்ப் பெயரில் எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது, ஆனால் அதை எழுதியதை டிரம்ப் மறுத்துள்ளார். பிப்ரவரி மாதம், டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பிறகு, நீதித்துறையும் எஃப்பிஐ அமைப்பும், எப்ஸ்டீன் கோப்புகளின் "முதல் கட்ட வகைப்படுத்தப்படாத கோப்புகள்" என்று விவரித்ததை வெளியிட்டன. வலதுசாரி இன்ஃப்ளூயன்ஸர்களின் ஒரு குழு வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வழங்கப்பட்ட 341 பக்கங்கள் ஏற்கனவே வெளிவந்திருந்த ஆவணங்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது ஏமாற்றமடைந்தனர். அதில் எப்ஸ்டீனின் விமானத்தின் பயணப் பதிவுகள் (flight logs) மற்றும் அவருக்குத் தெரிந்த பிரபலமான நபர்களின் பெயர்களைக் கொண்ட அவரது தொடர்பு புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிப்பு ஆகியவை அடங்கும். ஜூலை மாதத்தில், நீதித்துறை மற்றும் எஃப்பிஐ ஒரு குறிப்பாணையில் இனி கூடுதல் ஆவணங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று கூறின. அது இப்போது மாறியுள்ளது. எப்ஸ்டீன் கோப்புகளில் எந்தெந்த பெயர்கள் உள்ளன? வெளியிடப்படாத ஆவணங்களின் உள்ளடக்கங்கள் இன்னும் அறியப்படவில்லை. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியின்படி, 'மே மாதம் அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை டிரம்பிடம், அவரது பெயர் எஃப்பிஐ ஆவணங்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.' 'அவர் எப்ஸ்டீனுடன் நண்பராக இருந்தார், ஆனால் கோப்புகளில் பெயரிடப்படுவது தவறான செயலுக்கான ஆதாரம் அல்ல' என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டது. வெள்ளை மாளிகைப் செய்தித் தொடர்பாளர் இந்தச் செய்தியை 'பொய்யானது' என்று விவரித்தார், இருப்பினும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், 'டிரம்பின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதை நிர்வாகம் மறுக்கவில்லை' என்று கூறினார். பொதுவெளியில் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பல உயர்மட்ட நபர்களைக் குறிப்பிடுகின்றன. அதேசமயம், பெயர்கள் இடம்பெறுவது அந்த நபர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என்பதைக் குறிக்கவில்லை. 2024-ஆம் ஆண்டில் நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டபோது, அரசர் மூன்றாம் சார்லஸின் சகோதரரும் முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் உட்பட பல பெயர்கள் வந்தன. கிளிண்டன் மற்றும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று மறுக்கின்றனர். ஜாக்சன் 2009-இல் காலமானார். சிறார் பாலியல் கடத்தலுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மேக்ஸ்வெல்லின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவை. செப்டம்பரில் வெளியிடப்பட்ட விமானப் பயணப் பதிவுகளில் பில்லியனர் ஈலோன் மஸ்க் மற்றும் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் ஏற்கனவே எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளார். எப்ஸ்டீன் தன்னைத் தீவுக்கு அழைத்ததாகவும் ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் மஸ்க் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் எஸ்டேட்டுக்குச் சொந்தமான மின்னஞ்சல்களின் தொகுப்பில் கிளிண்டனின் முன்னாள் கருவூலச் செயலர் லாரி சம்மர்ஸ் மற்றும் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பானன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். சம்மர்ஸ் பின்னர் பொதுப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகக் கூறினார், அவர் ஒரு அறிக்கையில்: "எப்ஸ்டீனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எனது தவறான முடிவிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்" என்று குறிப்பிட்டார். எந்தத் தவறும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படாத பானன், பிபிசியின் கருத்துக்கான கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை. அந்த சமீபத்திய ஆவண வெளியீட்டிலும் டிரம்பின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் எப்போதும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2005 ஆம் ஆண்டில் மேக்ஸ்வெல்லுடன் எப்ஸ்டீன் டிரம்ப்/எப்ஸ்டீன் உறவு பற்றி இதுவரை தெரியவந்தது என்ன? டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்ததாகவும் ஒரே மாதிரியான சமூக வட்டத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. முன்பு வெளியிடப்பட்ட கோப்புகள், எப்ஸ்டீனின் தொடர்புகளின் 'கருப்பு புத்தகத்தில்' (Black book) டிரம்பின் விவரங்கள் இருந்ததைக் காட்டுகின்றன. டிரம்பின் விமானப் பதிவுகள் அவர் எப்ஸ்டீனின் விமானத்தில் பல சந்தர்ப்பங்களில் பறந்ததைக் காட்டின. அவர்கள் 1990-களில் உயர்மட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது புகைப்படம் எடுக்கப்பட்டது, மேலும் சிஎன்என் வெளியிட்ட புகைப்படங்கள் டிரம்பிற்கும் அவரது அப்போதைய மனைவி மார்லா மேப்பிள்ஸிற்கும் நடந்த திருமணத்தில் எப்ஸ்டீன் கலந்து கொண்டதைக் காட்டுகின்றன. 2002-இல், டிரம்ப் எப்ஸ்டீனை ஒரு 'அற்புதமான மனிதர்' (Terrific guy) என்று விவரித்தார். எப்ஸ்டீன் பின்னர், "நான் 10 ஆண்டுகளாக டொனால்டின் நெருங்கிய நண்பராக இருந்தேன்" என்று குறிப்பிட்டார். டிரம்பின் கூற்றுப்படி, எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2000-களின் தொடக்கத்தில் அவர்கள் பிரிந்தனர். 2008-வாக்கில், தான் "அவரது ரசிகர் அல்ல" என்று டிரம்ப் கூறி வந்தார். அவர்களது பிரிவு எப்ஸ்டீனின் நடத்தையுடன் தொடர்புடையது என்றும், "அதிபர் அவரை ஒரு அருவருப்பானவர் (creep) என்பதால் தனது கிளப்பிலிருந்து வெளியேற்றினார்" என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதற்கிடையில், வாஷிங்டன் போஸ்ட் 'அவர்களது உறவு முறிவு புளோரிடாவில் உள்ள சில ரியல் எஸ்டேட் தொடர்பான அவர்களது போட்டி காரணமாக இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளது. மக்கள் எப்ஸ்டீன் வழக்குகள் மீது ஏன் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்? எப்ஸ்டீனின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய முக்கிய உண்மைகளை அதிகாரிகள் மறைப்பதாக, டிரம்பின் 'மாகா' (MAGA) இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் நீண்டகாலமாக நம்பினர். அவர்களில் சிலர், அமெரிக்க சமூகத்தின் உயர்மட்டங்களில் சிறார் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு குழு (cabal) இயங்கி வருகிறது, அது அரசால் பாதுகாக்கப்படுகிறது என்ற கோட்பாட்டை நம்புகின்றனர். 'க்யூ' (Q) என்று அழைக்கப்படும் ஒரு புனைப்பெயரால் வெளியிடப்பட்ட மறைபொருளான செய்திகள் மூலம் இந்தக் கோட்பாடு பரவியது. சில மாகா (MAGA) இன்ஃப்ளூயன்ஸர்களால் முன்வைக்கப்பட்ட சதி கோட்பாடுகளில் ஒன்றில், எப்ஸ்டீன் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஏஜென்ட்டாக இருந்தார் என்று கூறப்பட்டது. பொது மக்களிடமும் எப்ஸ்டீன் குறித்துப் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன - குறிப்பாக ஏன் அவருக்குப் புளோரிடா வழக்கில் இவ்வளவு மென்மையான தண்டனை வழங்கப்பட்டது, அவரும் மேக்ஸ்வெல்லும் உண்மையில் தனியாகத்தான் செயல்பட்டார்களா, மற்றும் அவரால் சிறையில் எப்படித் தற்கொலை செய்து கொள்ள முடிந்தது என்பது போன்ற கேள்விகள். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy07284rngyo

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

5 days 17 hours ago
சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலில்…. கோழி முட்டை வாங்கப் போகிற ஆள். தோற்கிற தேர்தலுக்கு… இந்தளவு எடுப்பு எடுக்கிறதை பார்க்க ஒரே தமாசாக இருக்கு. 😂 🤣

புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.

5 days 18 hours ago
"சந்திப்பின் பின் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனும் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வைக்கப்படுகிறது. எனவே மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்." .ஓநாய்கள் ஊழையிட்டது இதற்குதானே ஆடுகள் நனைகின்றது என😆😁;

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

5 days 18 hours ago
அவர்களையும் சிங்கள வரையும் ஒரு காலத்தில் வீட்டு வேலைக்கு வைத்து பலகிய மோட்டு குடிகளுக்கு, வடகிழக்கில் குடியேற்றுவது வரப்பிரசாதமாக இருக்கலாம்👍

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

5 days 18 hours ago
சுத்துமாத்து சுமந்திரனின்… “லூஸ்” கதையை கேட்டு, எவனும் வடக்கிற்கு வர மாட்டான் என்று அடித்து சொல்லலாம். மலையக மக்களுக்கு… சுமந்திரன், ஒரு முத்தின பைத்தியம் என்று நன்கு தெரியும்.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

5 days 20 hours ago
அதனால் தான் நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை என்ற பேச்சு இதர தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஈழத்தமிழர்கள் மீதான கரிசனையும் அது போன்றதே

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

5 days 20 hours ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 மில்லியன் நன்கொடை 19 Dec, 2025 | 10:47 AM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CBL குழுமம் (CBL Group)100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. அதற்கான காசோலையை CBL குழுமத்தின் (CBL Group) குழும பணிப்பாளர் ஆர். விக்ரமசிங்க வியாழக்கிழமை (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். CBL குழுமத்தின் (CBL Group) குழும பணிப்பாளர் என். விக்ரமசிங்க மற்றும் பணிப்பாளர் /பிரதான நிறைவேற்று அதிகாரி ரந்தீவ மலலசூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233799

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

5 days 20 hours ago
எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையில் சந்திப்பு! 19 Dec, 2025 | 10:04 AM தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை (18) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 40 நிமிட நேரம் இடம்பெற்றது. இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்களும் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்துகொண்டிருந்தார். தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் இதில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP, பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் ததேமமு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233790

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

5 days 21 hours ago
ராதாகிருஸ்ணன் ஏன் போக போறார்? அவர் என்ன லைனிலா வாழ்கிறார்? அவர் சம்பளம் என்ன 1000 மா? அந்த மக்கள் கொட்டடியில் மாய்ந்தால்தான், இவர் எம்பி இல்லாவிட்டால்? ஆகவே அவர் இப்படித்தான் பசப்பு வார்த்தை பேசுவார். நாங்களும் பதிலுக்கு நிகர்நிலை உதவி கரம் நீட்டினால் - எல்லாம் சுபம் 😂. இவர்களின் மலையக மக்கள் மீதான கரிசனையும், கருணாநிதியின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும் ஒரே வகை.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

5 days 21 hours ago
[ நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை ] நீங்கள் யாழ்பாணத்தில் குடியேறுவதற்கான நினைப்புக்கள் திட்டங்கள் வைத்து கொள்ளாதீர்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

5 days 21 hours ago
தயவு செய்து அப்டேட் ஆகவும். அதில் பாதிப்பேர் தற்போது அனுர படையணியின் சிறப்பு தளபதிகள்😂

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

5 days 21 hours ago
மேலே கு சா அண்ணைக்கு கொடுத்த விளக்கத்தை போய் மீள வாசிக்கவும்😂. நடைமுறையில் சரி வரும், நாளைக்கே செய்யலாம் என நான் எழுதவில்லை. கொள்கை அளவில் இது நல்ல விடயம் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது மட்டுமே நான் எழுதியது. என்ன நினைப்பில் அல்லது மிதப்பில் வந்தாலும் - கிடைத்த வேலை ஒன்றை பழகி, அதில் திறமை காட்டி, மேலேபோய், மேளாளர் ஆகி, பெற்றோல் ஷெட்டையிம் வாங்கினார்களா இல்லையா? இதையே ஏன் வடக்கில் மலையக மக்கள் செய்ய கூடாது. முடியாது? ஏன் என்றார் அவர்கள் எம்மை போல் ஊக்கம், திறமை, உந்தல் அற்றவர்கள்?

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

5 days 21 hours ago
ரத்த திலகம் வைத்த காலங்களில் கூட்டணி தலைவர்கள் உசுபேற்றும் வகையில் பேசுவார்கள் என கேள்விப்பட்டேன். டெமோ காட்டியமைக்கு நன்றி. இத்து போன ஈரோஸ், ஈபி யை தவிர, அவர்களும் பின்னர் இதை கைவிட்டு விட்டார்கள் - எவரும் எந்த காலத்திலும் மலையகம் தமிழர் தாயகம் என கோரியதே இல்லை. மலையகத்தை விட கொழும்பு மாவட்டத்தில் தமிழர் செறிவு அதிகம். அதற்காக கொழும்பு தமிழர் தாயகமா? இனவழி, மரபுபழி தாயாகம் என்பது சும்மா புல்டா போண்டா கதை அல்ல. எழுந்தமானமாக யாழில் வீரவசனம் எழுதுவதால் மட்டும் மலையகம் தமிழர் தாயகம் என ஆகிவிடாது. சக தமிழனை அடுத்த நூறு ஆண்டுக்கு லைன்களில் கட்டி வைத்து, சிங்கள மேலாண்மையின் ரத்த கூலிகளாக இருக்க வைக்கும் -வடக்கில் தமிழ் இனப்பரம்பல் குறைந்து போனாலும் பரவாயில்லை எனது ஆள் இல்லா காணியில் இன்னொரு தமிழனை (இன்னொரு சாதியை சார்ந்த யாழ்ப்பாண தமிழனை கூட) இருக்க விடேன் எனும் நவீன பொன்னம்பலங்கள் சமூகத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.