4 days 13 hours ago
உண்மையில் இண்ட தடையின் பரந்த தாக்கத்தை கதைக்க முதல் - சிறிது சிறிதாக மேட்ற்கு தனித்து போகிறது, விளைவுகள் விலைவாசி அதிகரிப்பு .. போன்ற கண்ணனுக்கு தெரியாதவை. உண்மையில் இந்த 2 நாடுகளிடம் eu க்கு, அமெரிக்காவுக்கு கறார். ஜோர்ஜியா இல் ஐ சொல்வதை போல ருஸ்சிய சார்புக்கு ஆட்சி அல்ல. ஜோர்ஜியா அதன் நலனுக்கு எது உகந்ததோ அதை செய்கிறது அதில் வசதியாக இருப்பது ருசியா, அத்துடன் ஜோர்ஜியா ஒருமுறை அமெரிக்கா. மேற்றுகின் சொல்லை கேட்டு ருசிஷ்யவை தாக்கி, (அதில் இஸ்ரேல் எக்காளமிட்டது அது கொடுத்த பயிற்றசியை கொண்டு ருசியா மீது ஜோர்ஜியா நடத்திய தாக்குதல் வெற்றி அளித்தது என்று, அதன் பைன் ருஸ்சிய இஸ்ரேல் மீது முதல் கொன்டு இருந்த கனிந்த , இரக்க பார்வை அகன்று,இஸ்ரேல் மீது கடிந்த போக்கை கடைபிடிக்க தொடங்கியது), அழிவு வந்தது, தென் ossetia இராணுவ அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் eu இந்த ஆத்திரம், உலோகவளங்களில் , இந்தநேசியா நிக்கல் இங்காட்கள், இரும்புத் தாதுக்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதை தடுத்து, இப்போது இந்தினேசியாவில் பதப்படுத்தி, க்கொய்ய விலைக்கு ஏற்றுமதி செய்கிறது,இதற்கு, சீனாவே இந்தோனேசியாவுக்கு பணமும், தொழில்சார் நிபுணத்துவமும் வழங்கி, இந்தினேசியாவை அதன் கால்களில் நிற்க வைத்தது. மற்ற மதீய ஆசிய நாடுகளிலும் இப்படியான தடுப்புகளை EU மீது வெளியே ஒன்றும் சொல்லாமல் செய்கின்றன.
4 days 15 hours ago
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி adminFebruary 11, 2026 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (BC) டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாற்றில் மிக மோசமான பள்ளித் துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகின்றது. நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்பிளர் ரிட்ஜ் மேல்நிலைப் பா்சாலையில் (Tumbler Ridge Secondary School) துப்பாக்கித் தாரி ஒருவர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளாா். மொத்தமாக 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் உள்ளே 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாடசாலையுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். துப்பாக்கிதார தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலையின் உள்ளே கண்டெடுக்கப்பட்டார். சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பழுப்பு நிற முடி (Brown hair) கொண்டவர் என்றும், ஒரு ஆடை (Dress) அணிந்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.காவல்துறையினா் அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ள போதிலும், தற்போதைய விசாரணைக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிடவில்லை. பிரதமர் மார்க் கார்னி (PM Mark Carney) இச்சம்பவத்தால் தான் கடும் வேதனை அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாகாண முதல்வர் டேவிட் ஈபி (Premier David Eby) டம்பிளர் ரிட்ஜ் சமூகம் முழுவதுமே இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/228864/