Aggregator

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

6 days 9 hours ago
வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் ! Published By: Digital Desk 1 19 Dec, 2025 | 10:19 AM வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/233785

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

6 days 9 hours ago

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

Published By: Digital Desk 1

19 Dec, 2025 | 10:19 AM

image

வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_20251219_080149.jpg

IMG_20251219_083935.jpg

IMG_20251219_075904.jpg

https://www.virakesari.lk/article/233785

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

6 days 12 hours ago
கிளிநொச்சி A9 வீதியின் ஓராமாக அமைந்திருந்த வேறொரு விதமான மாவீரர் நினைவாலயம். 27-11-2007 | இது பாண்டியன் சுவையூற்று என்று நினைக்கிறன்... சரியாக ஞாபகமில்லை!

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

6 days 12 hours ago
பாகம் - 18 26.11.1990 கரிகாலனுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் யோகன் வந்தார். மட்டக்களப்புப் பிராந்தியத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். ‘பொதுமக்களின் இரண்டு ட்றக்ரர்களுக்கு இராணுவம் சுட்டுவிட்டது என்றார். என்ன நடந்தது? என்று கேட்டேன், 'தமது பொருள்களை எடுத்து வர ஊருக்குள் போனபோது இராணுவம் சுட்டு விட்டது' என்றார். ‘எந்த இடத்தில்' என்று கேட்டேன் 'வந்தாறுமூலை அம்பலத்தடியில்' என்றார். 'பொதுமக்களுக்கு ஏதாவது...’ என்று கேட்டேன் ‘அதைப்பற்றி தெரியவில்லை’ என்றார். மீண்டும் அடுத்த நாள் (03-10-90) அகதிகளைப்பார்க்கப் புறப்பட்டோம். அன்று செல்லும் குழுவுக்கு மட்டக் களப்பு அரசியல் பொறுப்பாளர் விசு தலைமை தாங்கினார். புறப்படும்போது பொம்மர்கள் வந்தன. எனவே ஒரு இடத்தில் தங்கிவிட்டோம். பொம்மர்களின் குழப்படி முடிந்தவுடன் மீண்டும் புறப்பட்டோம். வழியில் சந்தித்தவர்களிடம் எங்கே பொம்மர் தாக்கியது என்று விசாரித்தோம். இலுப்பையடிச்சேனை, களங்காட்டுமுனை ஆகிய பகுதிகளில் தான் தாக்குதல் நடந்ததாகவும் நாலு மாடுகள் இறந்ததாகவும் தெரிவித்தனர். சிவத்தப்பாலம் என்னும் இடத்தை அடைந்தோம். இந்த இடத்திற்குப் பக்கத்தில் ‘மீசைக்காரர்’ என்று அழைக்கப்படும் ஒருவர் எனக்குப் பரிச்சயமானவர். வயதானாலும் திட காத்திரமானவர். நான் அடிக்கடி அவரிடம் செல்வதுண்டு. எனவே ‘மீசைக்காரரிடம் போய்வருவோம்’ என்றேன். ‘அவர் இப்போது உயிரோடு இல்லை. இந்திய இராணுவத்தின் காலத்தில் அவரைக கொன்றுவிட்டார்கள்’ என்றார் யோகன். என்ன நடந்தது?' என்றுகேட்டேன். ‘இந்திய இராணுவம் பிரதான பாதையை அண்டிய கிராமங்களில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கிய சமயம் பயத்தினால் ஓடிய மக்கள் இவரது வாடியில் தமது ரீ.வி. போன்ற பொருட்களை வைத்துவிட்டு காட்டுக்குள் ஓடினர். இந்திய இராணுவத்தினர் இவரது வாடிக்கு வந்த சமயம் எல். ரி, ரியின் ரீவியா’ என்று கேட்டனர். இவர் ‘இல்லை’ யென்றார். இவரை அடிக்க முயன்றனர். ‘நீ அடித்தால் நானும் அடிட்பேன்’ என்றார். ஒருவன் அடித்தான், அடித்த இராணுவத்தை இடுப்பில் பிடித்து தலை கீழாக குத்தினார் மீசைக்காரர். அவரை அடித்தே கொன்று விட்டனர் இந்திய இராணு வத்தினர்’ என்றார். இதைப்போல எத்தனை விடயங்கள் தான் வெளியுல்கிற்குத் தெரியாமல் இருக்கின்றன. மீசைக்காரரின் வாடியைப் பார்த்தேன். சூழ்நிலை அமைதியாக இருந்தது. அந்து கம்பீரமான குரலை இனிக் கேட்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஜீரணித்துக்கொள்ளவேண்டி இருந்து. அவரது அன்புக்கு பாத்திரமான மாடுகள் நிமிர்ந்து பார்த்தன. பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்தபடி புறப்பட்டேன். போகும்போது விசுவிடம் “மட்டக்களப்பு அகதிகளின் உணவு நிலைமை என்ன மாதிரி?” என்று கேட்டேன். “கொஞ்ச நாட்களுக்கு சமாளிப்பார்கள். அதன் பிறகு தான் பெரும் உணவுப் பஞ்சம் வரவிருக்கிறது” என்றார். “அந்த கொஞ்ச நாட்களும் எப்படிச் சமாளிப்பார்கள்” என்று கேட்டேன். அறுவடை செய்த வயல்களில் கதிர் பொறுக்குகிறார்கள். அறுவடை செய்யப்பயந்து வெட்டப்படாமலிருக்கும் வயல்களில் யானைகள் மிதித்து சேதம் பண்ணியிருக்கின்றன. அந்த வயல்களிலும் போய் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டு வருகிறார்கள். அதன் பிறகுதான் சிரமம். பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர் நோக்க வேண்டியிருக்கும்” என்றார். நிவாரண உதவிகள் என்னமாதிரி? என்று கேட்டேன். “தற்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள் அதிலும்கூட முஸ்லிம்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது” என்றார். ஏன் அரசாங்க அதிபர் தமிழர் தானே? ஏன் அவரால் இயன்றளவு செய்யமுடியாதா?” என்று கேட்டேன். அரச அதிபர் தமிழர்தான். ஆனால் அவர் ஒரு பொம்மை மாதிரி இருக்கவேண்டியது தான். நடைமுறையில் அதிகாரம் அவரிடம் இல்லை. ஒரு முஸ்லிம் உதவி அரசாங்க அதிபரிடம் தான் என்றார். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கேட்டேன். நிவாரணத்துக்கென வாங்கும் அரிசியை காத்தான்குடியிலுள்ள தனது மைத்துனனின் அரிசி ஆலையில் மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது அவரது மில்லில் ஒரு மூட்டைக்கு மூட்டைக்கு ஆறு கிலோ அரிசி குறைவு இதை யார் எதிர்த்துக் கேட்கமுடியும். நிறுத்து தரும்படி கேட்க கூட்டுறவாளர்களுக்கு பயம், மூட்டைக்கு ஆறு கிலோ என்றால் அதை எப்படி; எந்தக் கணக்கில் பகிர்ந்தளிப்பது என்று கூட்டுறவுச் சங்கங்களும் கிராம சேவையாளர்களும் திணறுகின்றனர். இதே நிலைமை கூட சில நாட்களாகத்தான். அதற்கு முதல் எந்த உதவிகளும் இல்லை என்றார். உலகத்தை ஏமாற்ற நிவாரணம் கொடுக்கிறோம் என்று அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது. அந்த நிவாரணத்தில் கூட மூட்டைக்கு ஆறுகிலோ முஸ்லிம்களின் அதிகாரத்துக்குப் போகவேண்டிய நிலை நிலவுகிறது. “முஸ்லிம்களின் நிவாரணங்கள் என்னமாதிரி” என்று கேட்டேன். அவர்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. அரசு இவர்கள் விடயத்தில் விசேட அக்கறை எடுக்கிறது. சண்டை தொடங்கியதும் நகரத்தில் இருந்த முஸ்லிம் வீடுகளுக்கு இராணுவம் சென்று உங்களை நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம் என்று கூறி வெபர் அரங்குக்கும் அருகிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்பி முஸ்லிம்கள் அகதிகளாகின்றனர் என்று உலகிற்கு பிரச்சாரப்படுத்தி தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பார்க்கிறது என்றார். “அரசியல் நோக்கங்களென்றால்.... என்றேன். 'இங்சேமுஸ்லிம்கள் அகதிளாகின்றனர் என்று முஸ்லிம் நாடுகளுக்கு பிரச்சாரப்படுத்திதான் உதவிகள் பெற முனைகிறது ஸ்ரீலங்கா அரசு” என்றார். தொடர்ந்து முஸ்லிம்களோ இராணுவமோ இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியும், ஆனால் ரெலோவினர் செய்வதை நீங்கள் கேட்டால்" என்றார் "சொல்லுங்கள்'' என்றேன். (தொடரும்)

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

6 days 12 hours ago
பாகம் - 17 23.11.1990 அந்தப் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றோம். வழியில் ஒரு மரத்தடியில் சிலர் படுத்திருந்தார்கள். சில மூட்டை முடிச்சுக்களும் காணப்பட்டன. அவர்களை அணுகினோம். அங்கிருந்த பெண்மணியிடம் “ஏனம்மா ஏதாவது பள்ளிக்கூடத்திலோ, அல்லது யாரிடமாவது உதவிபெற்று கொட்டிலோ குடிசையோ அமைத்து இருக்கலாம் தானே? இந்த மாதிரி ஏன் மரத்துக்குக் கீழ் படுத் திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன் “பள்ளிக்கூடங்கள் எல்லாம் நிறைந்து விட்டன. எங்களுக்கு இனிமேல் தான் வாடியடிக்கவேண்டும். அதுக்கு வசதியில்லை. எங்களுடைய வீடு வாசலெல்லாம் இழந்து இப்படி அலைய வேண்டியிருக்கிறது” என்றார் அவர். ஏனம்மா உங்கள் வீடு எங்கே இருக்கிறது? என்று விசாரித்தேன். ‘செங்கலடி' என்றார். தொடர்ந்து "இப்போது அது வீடாக இருக்குமோ என்பது சந்தேகமே" என்றார். “வீட் டுக்கு என்ன நடந்தது?" என்றேன். அப்போது அங்கே இருந்த ஒரு பெரியவர் இடையே குறுக்கிட்டார். “இராணுவம் நகருக்குள் புகும்போது கூடவே வெற்று லொறிகளும் வரும்” என்றார். “வெற்று லொறிகளா, எதற்கு?” என்றேன், ஸ்டிக்கரோடு வரும் இராணுவத்துக்கு சாமான் ஏற்றத்தான்” என்றார். “கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள்” என்றேன். “இராணுவம் வரும் போது கூட்டங் கூட்டமாகத்தான் வீடுகளுக்குள் வரும். ஒவ்வொரு இராணுவத்தினரும் தமது பெயரைக் கொண்ட ஸ்டிக்கர்களைக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பொருள்களில் தனக்குத் தேவை யான பொருள்களின் மீது தமது ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டியதுதான். அப்டி ஓட்டப்படும் பொருள்கள் மீது மற்றவர் உரிமை கொண்டாட முடியாது. ஸ்டிக்கர் ஒட்டி முடிந்ததும் லொறியை அழைப்பார்கள். லொறியில் வருபவர்கள் பொருள்களை ஏற்றிக் கொண்டு போவார்கள் என்றார். “இது இராணுவத்தினரின் சொந்தத் தேவைக்குத்தான் போகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். அதற்கு அவர் “எனது நண்பர் ஒருவர் உயர் பதவியில் உள்ளார். அவருக்குச் சிங்களம் நன்றாகத் தெரியும். இவரது வீட்டிற்கு வந்த இராணுவத்தினரில் ஒருவன் இவரிடம் 'உமக்கு சிங்களம் பேசத் தெரியுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான். இவர் ‘தெரியாது’ என்றார் அதைக் கேட்டதும் அவன் முகம் பிரகாசமடைந்தது. அவரது வீட்டிலிருந்த தொலைபேசியை எடுத்து எவருடனோ தொடர்புகொள்ள முயற்சித்தான் - நீண்ட நேர பிரயத்தனத்தின் பின் அவனுக்குத் தொடர்பு கிடைத்தது. பேசினான்: ‘அப்பா நான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தேன் - வீட்டுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் சேகரித்து விட்டேன் - தங்கச்சியிடம் சொல்லுங்கள் அவள் கேட்ட தங்கநகைகள்தான் இன்னும் சேகரிக்க முடியவில்லை. வெகு விரைவில் அவற்றையும் சேகரித்துவிடுவேன் என்றான். முந்தித்தான் சிங்களவன் மொக்கன் என்று சொன்னோம். ஆனால் அவன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்து முடிக்கிறான்” என்றார். “எதைக் கொண்டு இப்படிச் சொல்கிறீர்கள்?” என்றேன். 1977ஆம் ஆண்டுக் கலவரத்தில் ஆட்களைக் கொல்வதிலும், வீடு வாசல் பொருள்களை எரிப்ப திலுமாக தாறுமாறாக நடந்து கொண்டான். இந்த முறை தமிழரைக் கொல்லும் பொறுப்பை முஸ்லிம்கள் கையில் ஒப்படைத்து, அவர்கள் தான் உங்களைக் கொல்கிறார்கள் என்ற தோற்றத்தை எமக்கு ஏற்படுத்துகிறான், அதே வேளை வீடுகளிலுள்ள பொருள்களைப் பத்திரமாகத் தமது வீடுகளுக்கு ஏற்றி அனுப்புகிறான்” இந்தப் பொருட்களை ஒரு இராணுவச் சிப்பாயால் சேகரிக்க, எத்தனை வருடம் பிடிக்கும்? தமிழரிடம் இருந்து எடுப்பதெல்லாம் உங்களுக்குத்தாள் என்று சொன்னால் தமது வாழ்க்கைத்தரம் விரைவில் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இராணுவத்தில் சேர முயற்சிப்பார்கள். சி ஏற்கனவே வீணாகக் சாகிறோம் என்ற மனநிலையில் இருக்கும் இராணுவத்தினரை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை உதவுகிறது” என்றார். ‘சரி முஸ்லிம்கள் தொடர்பாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன். ‘இளனி குடிப்பவன் குடிக்க கோம்பை சூப்புபவனின் நிலைதான் இவர்களது நிலை ரி.வி., டெக், றேடியோ போல விலை உயர்ந்த பொருள்களை இராணுவத்தினர் எடுத்துக் கொண்டு போக எஞ்சியிருக்கும் பொருள்களையும் நிலை, ஜன்னல், கதவு போன்றவற்றை எடுப்பதிலும்தான் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்றார். சரி தமிழரைக் கொல்வதையும், பெண்களைக் கற்பழிப்பதையும் பற்றி என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன். சிங்களவன் இவர்களைச் சரியாக ஏமாற்றிவிட்டான். யாருடைய ஏவுதலாலோ இவர்கள் தாறுமாறாக நடந்து கொள்கின்றனர். தமிழர்களைத்தானே கொல்கிறார்கள், தமிழ் பெண்களைத்தானே கற்பழிக்கிறார்கள் என்று முஸ்லிம் சமூகம் தற்போது அசட்டையாக இருக்கலாம். நாளை இது இவர்களையே சூழும்' என்றார். 'அப்படியென்றால்? என்றேன். தமிழர்களைக் கொலை செய்துவிட்டு தமிழ்ப் பெண்களைக் கற்பழித்து விட்டு கொட்டியாவைத்தான் கொன்றோம் என்றபோது மனிதாபிமானம், தர்மம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு இராணுவத்தினரின் தீரச்செயலைப் புகழ்ந்தார்கள் சிங்களவர்கள். கொலைசெய்தும், கற்பழித்தும் பழக்கப்பட்ட இராணுவம் பின்னர் ஜே. வி, பி. பிரச்சினையில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர் களைக் கொன்றபோது, ரயர் போட்டுக் கொளுத்தியபோது தான் தமது தவறை உணர்ந்து கொண்டார்கள். அதேபோலத்தான் இன்று அல்லாவைத் தொழாத தமிழர்களைக் கொல்வது பாவமில்லை என முஸ்லிம் மக்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கொலைசெய்து பழக்கப்பட்ட, கற்பழித்துப் பழக்கப்பட்ட முஸ்லிம் காடையர் நாளை தமது இனத்தில் இவ்வாறானசெயல்களில் ஈடுபடும்போதுதான் தமது தவறை உணர்வார்கள். அப்போது அவர்களைக் காப்பாற்ற யாருமே இருக்க மாட்டார்கள் என்றார். (தொடரும்)

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

6 days 15 hours ago
சுமந்திரன் போன்றோரின் போலி அரசியல் வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். எம் உதவிக்கரம் என்றும் உங்கள் பக்கம்.

தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.

6 days 15 hours ago
இவ்வளவு காலமும் இந்தியாவிற்கு மதிப்பளித்து அல்லது இந்தியாவின் மீது கரிசனை காட்டியதெல்லாம் போதும். அமெரிக்காவே வருக வருக.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 15 hours ago
உலக இனங்களின் வரலாறுகளை திரும்ப திரும்ப நாம் எடுத்து பேசக்கூடாது. அப்படி பேச வெளிக்கிட்டால் குடியேறிய அமெரிக்கனும் கனேடியனும் அவுஸ்ரேலியனும் எங்கே போய் மீள குடியேறுவதாம்? அமெரிக்கா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது. கனடா செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது அவுஸ்ரேலியா பூர்வீக தொல்குடிகளுக்கு சொந்தமானது. முதலில் நாகரீகமடைந்த உலகினர் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கட்டும்.அவர்களுக்குள்ளேயே சீழ் பிடித்த பிரச்சனைகள்.இதில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பிரிவினைகளுக்கு தீர்வு காண்பார்களாம்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

6 days 16 hours ago
உண்மையை சொன்னால்; மடைமாற்று, காவடி, தூக்குகாவடி என்பீர்கள். சுமந்திரனை சொன்னால் ஓடி வந்து காப்பாற்றுவீர்கள். பாவம் ஐயா நீங்கள்! அவர் செய்யும் அரசியலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உங்களால், அவரை விட்டுகொடுக்கவும் முடியவில்லை. உங்கள் பாடு திண்டாட்டந்தான். ஒருவற்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்யவேண்டும். நான் விரும்பியதை எல்லாம் சொல்லிவிட்டு, அதுதான் அவர்களது தேவையென வாய் வம்பம் பேசக்கூடாது. இப்போவாவது அவர்களுக்கு என்ன தேவை என பாதிக்கப்பட்ட மக்களைகேட்டு செய்யுங்கள். அடுத்தவேளை தூங்க இடமில்லை, சாப்பிட ஏதுமில்லை, அவர்களை பாசத்துடன் அழைக்கிறோம் வாருங்கள் என்றால் எப்படி? ஏதாவது ஆயத்தங்கள் உண்டா? மலையகம் அவர்களது தாயகம். அங்கு அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக வாழவேண்டிய சூழலை உருவாக்குவது அவர்களது பிரதிநிதிகளின் கடமை. தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாமல் அந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டவர், மலையக மக்களுக்கு ஏதோ செய்யபோகிறாராம். இதைச்சொன்னால் மடைமாற்று, காவடி என்று தூக்கிக்கொண்டு, நிதர்சனத்தை ஏற்க மறுத்து ஏதோ ஜாம்பவானாக கயிறு திரிப்பு.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

6 days 16 hours ago
இப்படியான ஒரு கருத்து பொதுவாக எல்லோருக்கும் பொருந்தாது கலவரத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லப்பயந்து உயிர் அச்சம் கருதி பெற்றோரால் கட்டாயமாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம் பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம் இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம் என்ற நினைப்பில் வரவில்லை ஒரு சில காலத்தில் திரும்பவும் நாட்டு நிலைமை சரி வந்துவிடும் 70 களில் ஜேவிபி ஐ அழித்தமாதிரி தமிழர்களின் போராட்டமும் அழிந்துவிடும் என்று நினைத்த பெற்றோர்களும் இருந்தார்கள் காலப்போக்கில் நிலைமையை உணர்ந்தவர்கள் தான் ஐரோப்பாவில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தார்கள் இது என் அனுபவமும் கூட

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

6 days 16 hours ago
இங்கே யாரும் மலையக்த் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் ஒரு கருத்தைத் தன்னும் எழுதவில்லை. ஒரு வேளையில் அவர்கள் வடக்கில் குடியேற்றப்பட்டால் எந்த விதத்தில் அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..... . வடக்கு மக்கள் அவர்களை எப்படி அனுசரித்துச் செல்வார்கள்....... . அவர்கள் ஒருவேளை அழைத்துவரப் பட்டால்..... தமிழ் அரசியல் வாதிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிப்பார்களா ....... அன்றைய கால கட்டத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தோட்ட வேலைகளுக்காக வடக்கு மக்கள் அவர்களை அழைத்து வந்து எப்படியான விதத்தில் வேலை வாங்கினார்கள் என்பதையெல்லாம்....... உணர்ந்த வகையில் தான் இந்த அழைப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம். இதையே மடைமாற்றி அவர்கள் வருவதை இவர்கள் விரும்பவில்லை அவர்கள் வந்தால் இவர்களுக்கு ஒத்துவராது இவர்கள் அவர்களை மதிக்காமல் பார்க்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களைத் திரித்து எழுதுவதால் எல்லாம் சரியென்றாகி விடாது. மலையக மக்கள் மலையகத்தில் சுதந்திரமாக தங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் .மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

6 days 16 hours ago
மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு! written by admin December 18, 2025 மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சிறைபிடிக்கப்பட்டுள்ளன. 🔍 சம்பவத்தின் விபரங்கள்: இடம்: மாலைத்தீவின் வடக்கு பகுதியில் உள்ள கேலா (Kelaa) தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. நேரம்: நேற்று முற்பகல் 8:30 மணியளவில், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 🚩 பின்னணி: கடந்த காலங்களிலும் இதேபோன்று இலங்கை மீனவர்களின் படகுகள் மாலைத்தீவு எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னதாக இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் பேரில், 300 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் சென்ற இலங்கை படகொன்றை மாலைத்தீவு படைகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 💬 மீனவர்களின் கவனத்திற்கு: கடல் எல்லைகளைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதோடு, இது போன்ற கைதுகள் மீனவ குடும்பங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த மேலதிக விழிப்புணர்வு அவசியமாகும். #SriLankaFishermen #MaldivesNavy #MNDF #MaritimeSecurity #BreakingNews #LKA #Maldives #TamilNews #FishermenIssue https://globaltamilnews.net/2025/224471/

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

6 days 16 hours ago

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

written by admin December 18, 2025

srilankan-boats-roundup-in-malteives.jpg

மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

🔍 சம்பவத்தின் விபரங்கள்:

  • இடம்: மாலைத்தீவின் வடக்கு பகுதியில் உள்ள கேலா (Kelaa) தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

  • நேரம்: நேற்று முற்பகல் 8:30 மணியளவில், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய நிலை: கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

🚩 பின்னணி:

கடந்த காலங்களிலும் இதேபோன்று இலங்கை மீனவர்களின் படகுகள் மாலைத்தீவு எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னதாக இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் பேரில், 300 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் சென்ற இலங்கை படகொன்றை மாலைத்தீவு படைகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

💬 மீனவர்களின் கவனத்திற்கு:

கடல் எல்லைகளைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதோடு, இது போன்ற கைதுகள் மீனவ குடும்பங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த மேலதிக விழிப்புணர்வு அவசியமாகும்.

#SriLankaFishermen #MaldivesNavy #MNDF #MaritimeSecurity #BreakingNews #LKA #Maldives #TamilNews #FishermenIssue


https://globaltamilnews.net/2025/224471/

முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

6 days 16 hours ago
முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! written by admin December 18, 2025 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இலங்கையில் சிக்குன்குனியா (Chikungunya) வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இலங்கைக்கு ‘Level 2’ பயண சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> முக்கிய பின்னணி: 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">காரணம்: கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா வைரஸின் அதீத பரவல். 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">தற்போதைய நிலை: அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளது. 🛡️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்: இலங்கைக்கு பயணம் செய்வோர் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு (Enhanced Precautions) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொசுக்கடியிலிருந்து தப்பிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். காய்ச்சல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். இலங்கையிலுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்து விழிப்புடன் இருக்க உதவுங்கள்! 🙏" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> #SriLanka #Chikungunya #CDCalert #TravelNotice #HealthAlert #CycloneDitwah #StaySafe #SLNews #PublicHealth #இலங்கை #சிக்குன்குனியா https://globaltamilnews.net/2025/224478/

முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

6 days 16 hours ago

முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

written by admin December 18, 2025

US-Warning.png?fit=820%2C820&ssl=1

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இலங்கையில் சிக்குன்குனியா (Chikungunya) வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இலங்கைக்கு ‘Level 2’ பயண சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> முக்கிய பின்னணி:

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">காரணம்: கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா வைரஸின் அதீத பரவல்.

<span class=🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">தற்போதைய நிலை:

அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளது.

<span class=🛡️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:

இலங்கைக்கு பயணம் செய்வோர் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு (Enhanced Precautions) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

காய்ச்சல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

இலங்கையிலுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்து விழிப்புடன் இருக்க உதவுங்கள்! <span class=🙏" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">

#SriLanka #Chikungunya #CDCalert #TravelNotice #HealthAlert #CycloneDitwah #StaySafe #SLNews #PublicHealth #இலங்கை #சிக்குன்குனியா


https://globaltamilnews.net/2025/224478/

🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

6 days 16 hours ago
🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! written by admin December 18, 2025 அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ✈️ என்ன நடந்தது? விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது. உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமானி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொடூரத் தீ: விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் தீப்பிழம்பாக மாறியது. சம்பவ இடத்திலேயே பலரும் பலியாகியுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 🔍 விசாரணையில் அதிர்ச்சித் தகவல்: இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகத் தரையிறங்க முயன்றுள்ளது. அந்த நேரத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் மற்றும் சீரற்ற வானிலையும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. #NASCAR #GregBiffle #PlaneCrash #NorthCarolina #Statesville #BreakingNews #BreakingNewsTamil #AviationAccident #LKA #Tragedy https://globaltamilnews.net/2025/224482/