Aggregator

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 21 hours ago
உந்த நரிப்புத்தி தெரிந்துதான் ரஷ்யா உக்ரேனின் கரைப்பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மற்றவர்கள் சொத்துக்களை ஆட்டைய போடுவதில் மேற்குலகினருக்கு நிகர் யாருமில்லை.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

6 days 21 hours ago
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா 18 Dec, 2025 | 03:55 PM (நெவில் அன்தனி) அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் போராடி வருகின்ற போதிலும் இங்கிலாந்து மற்றொரு மோசமான முடிவை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பின்னிலையில் இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது. தனது துடுப்பாட்டத்தை 33 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து மிச்செல் ஸ்டார்க் தனது 13ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 54 ஓட்டங்களைப் பெற்து 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸ்கோட் போலண்ட் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் முதலாம் நாளன்று அலெக்ஸ் கேரி 106 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 92 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோவ்ரா ஆச்சர் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி தனது நான்காவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். அவரைவிட ப்றைடன் கார்ஸ் 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 45 ஓட்டங்களுடனும் ஜொவ்ரா ஆச்சர் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களை விட ஹெரி ப்றூக்ஸ் 45 ஓட்டங்களையும் பென் டக்கெட் 29 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் லயன் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/233722

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 21 hours ago
ரஸ்ஸிய கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், புட்டினுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் என்று பலராலும் ஐரோப்பாவில் பல வங்கிகளில் பணமாகவும், ஆடம்பர கப்பல்கள், மாளிகைகள் போன்றவற்றி முதலீடாகவும் வைப்பிலிடப்பட்ட சுமார் 245 பில்லியன் யூரோக்களின் ஒரு பகுதியினை உக்ரேனின் செலவுகளுக்காகப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது. தனது பணத்தினை உக்ரேனுக்குக் கொடுத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஸ்ஸியா அச்சுருத்தியிருக்கும் நேரத்திலும், போலந்து இந்த முடிவில் உறுதியாக இருப்பதுடன் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் இதுகுறித்து சாதகமான முடிவினை எடுக்கும்படி கேட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் உக்ரேன் ஜனாதிபதியின் வேண்டுகோள்களில் ஒன்றான ரஸ்ஸியப் பணத்தினை உக்ரேனுக்கு வழங்கும் கோரிக்கையினை ஐரோப்பிய நாடுகள் சாதகமான முறையில் பரிசீலிக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்பணத்தினை வெறுமனே ஆயுதங்களை வாங்குவதற்காக மட்டுமே பாவிப்பதுடன் நின்றுவிடாது ரஸ்ஸிய ஆக்கிரமிப்பினால் அழிக்கப்பட்டிருக்கும் உக்ரேனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் பாவிப்பது சாலப்பொறுத்தமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

6 days 21 hours ago
இன்றைய எமது/மலையக சமூக சூழலில் எத்தனை பேர் விவசாயம் செய்ய காத்திருக்கின்றர்கள்?

கண்டி உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

6 days 22 hours ago
உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி Dec 18, 2025 - 07:57 PM கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. உடுதும்பரை பகுதியில் மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பகுதி மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கோரிக்கை விடுத்துள்ளது. நிலவும் மழை நிலைமையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான 'வெளியேற்றல்' (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். அப்பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அல்லது மண்மேடு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்விடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjbjbw6b02w2o29nu17fjd93

கண்டி உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

6 days 22 hours ago

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

Dec 18, 2025 - 07:57 PM

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. 

உடுதும்பரை பகுதியில் மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பகுதி மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கோரிக்கை விடுத்துள்ளது. 

நிலவும் மழை நிலைமையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான 'வெளியேற்றல்' (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். 

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். 

அப்பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அல்லது மண்மேடு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்விடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjbjbw6b02w2o29nu17fjd93

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 22 hours ago
நேட்டொவில் இணைந்துகொள்ளும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுவதுமாகக் கைவிட்டு விட்டது என்று நான் நினைக்கவில்லை. நடைபெற்றுவரும் பேச்சுக்களுக்கு உக்ரேனின் நேட்டோவில் இணையும் கோரிக்கை தடங்கலாக அமையும் என்பதாலேயே அது அடக்கி வாசிப்பதாக நினைக்கிறேன். மேலும் நடைபெற்று வரும் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் கைவிடவேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தாலும், நேட்டோவிற்கு வெளியே இருந்துகொண்டு தனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கக்கூடிய ஏற்பாடுகளை நேட்டோ நடுகளிடமிருந்து அது பெற்றிருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் நாடொன்றின் மீது எதிரி நாடொன்று தாக்குதல் நடத்தும் வேளையில் ஏனைய அங்கத்துவ நாடுகள் அந்நாட்டினைப் பாதுகாக்க போரில் இறங்கும் எனும் சரத்துக்கு இணையான உத்தரவாதத்தினை நேட்டோவிற்கு வெளியில் இருந்து உக்ரேன் பெற்றுக்கொள்ளவிருக்கிறது. இது நேட்டோவில் இணையும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுமையாகக் கைவிட்டு விட்டது என்பதற்கு மாறாக, சூழ்நிலைகளுக்கேற்ப தனது தந்திரங்களை உக்ரேன் மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும். இதைத்தவிரவும் உக்ரேனினை தற்போது நேட்டோவினுள் உள்வாங்குவதன் ஊடாக , ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் புட்டினுடன் நேரடியான மோதல் ஒன்றிற்குச் செல்வதையும் சில நேட்டோ அங்கத்துவ நாடுகள் தற்போதைக்கு விரும்பவில்லை. ஆகவே தன்னை நோக்கி இதுவரையில் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பினை எந்த நாடும் முன்வைக்காத நிலையிலும், மாறிவரும் உலக சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டுமே உக்ரேன் நேட்டோவில் இணையும் தனது விருப்பினை தற்காலிகமாக மடித்து வைத்திருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் என்ன‌வென்றால், நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் தனது அரசியலமைப்புச் சட்டத்தினுள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது என்பதுடன், அச்சரத்து இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இதைவிடவும் உக்ரேனின் அரசியல்வாதிகள் இன்றுவரை உக்ரேன் நேட்டொவில் இணைவதையே தாம் விரும்புவதாகக் கூறிவருகின்றனர். ஆக, நேட்டோவில் இணையும் தமது கோரிக்கையினைத் தற்போதைக்குக் கிடப்பில் போட்டாலும் நீண்டகால அடிப்படியில் உக்ரேன் நிச்சயமாக‌ நேட்டோவில் சேரும் அல்லது உள்வாங்கப்படும் என்பது தவிர்க்க முடியாதது. இது இன்னுமொரு 10 வருடங்களிலோ அல்லது நாளை ரஸ்ஸியாவின் சர்வாதிகாரி புட்டினின் மரணத்துடன் நடந்தாலுமோ ஆச்சரியப்படுதற்கில்லை.

மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய்

6 days 22 hours ago
மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய் Published By: Digital Desk 2 18 Dec, 2025 | 04:37 PM மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் - லெட்சுமி தம்பதிக்கு 2 மாத ஆண்குழந்தை உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தாயார் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார். பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தையை 2 பெண்களின் உதவியுடன் புனேயைச் சேர்ந்த எ ர் நிறுவன ஊழியருக்கு இந்திய மதிப்பில் ரூ.2.4 இலட்சத்திற்கு விற்றுள்ளார். எனினும் அந்த பெண்ணின் கணவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தாய் உட்பட குழந்தையை விலைக்கு வாங்கிய தரப்பினரை அந்த மாநில பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/233735

119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

6 days 22 hours ago
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் Dec 18, 2025 - 04:48 PM 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். '119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடைவதுடன், இவ்வாறான தேவையற்ற முறைப்பாடுகளுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொலிஸாரின் உடனடி உதவி தேவைப்படும் அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 01. Police Emergency Service - 119 02. Ministry Of Child Development and Women's Affairs (Women Help Line) - 1938 03. Ministry Of Child Development and Women's Affairs (Child Help Line) - 1929 04. Fire and Rescue Service - 110 05. National Transport Commission - 1955 06. Drug Organized Crime Issues Emergency Notification unit - 1997 07. The Bureau for the Prevention and Investigation of Abuse of Children and women - 109 08. Emergency Call Center (Tamil Medium) - 107 09. Commission to Investigate Allegations of Bribery or Corruption - 1954 10. Expressway Emergency - 1969 11. Department of Immigration and Emigration - 1962 12. National Dangerous Drug Control Board - 1984 13. Sri Lanka Bureau Of foreign Employment - 1989 14. National Help Desk (Ministry of Defance) - 118 15. Disaster Management Call Center - 117 16. Sri Lanka Tourism - 1912 17. Government Information Center - 1919 https://adaderanatamil.lk/news/cmjbckst002voo29n0l3czd9u

119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

6 days 22 hours ago

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

Dec 18, 2025 - 04:48 PM

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

'119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடைவதுடன், இவ்வாறான தேவையற்ற முறைப்பாடுகளுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொலிஸாரின் உடனடி உதவி தேவைப்படும் அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இந்த 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01. Police Emergency Service - 119

02. Ministry Of Child Development and Women's Affairs (Women Help Line) - 1938

03. Ministry Of Child Development and Women's Affairs (Child Help Line) - 1929

04. Fire and Rescue Service - 110

05. National Transport Commission - 1955

06. Drug Organized Crime Issues Emergency Notification unit - 1997

07. The Bureau for the Prevention and Investigation of Abuse of Children and women - 109

08. Emergency Call Center (Tamil Medium) - 107

09. Commission to Investigate Allegations of Bribery or Corruption - 1954

10. Expressway Emergency - 1969

11. Department of Immigration and Emigration - 1962

12. National Dangerous Drug Control Board - 1984

13. Sri Lanka Bureau Of foreign Employment - 1989

14. National Help Desk (Ministry of Defance) - 118

15. Disaster Management Call Center - 117

16. Sri Lanka Tourism - 1912

17. Government Information Center - 1919

https://adaderanatamil.lk/news/cmjbckst002voo29n0l3czd9u

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 22 hours ago
தவறான தகவல்களையும், வெறுமனே காலா காலமாக சொல்லிவரும் சென்றிமென்ற் உணர்சசி வசனங்களையும் உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க பயன்படுத்தியுள்ளீர்கள். உக்கிரேன் ரஷயாவை மிரட்ட யுத்தத்தை ஆரம்பித்ததாக கதை கூறி நடந்த உண்மைகளை அப்படியே உங்களுக்கு ஏற்ற போல் திரித்துள்ளீர்கள். உக்கிரேன் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. ரஷ்யாதான் யுத்தத்தை ஆரம்பித்தது. உக்கிரேனின் பக்கத்து நாடு ரஷ்யா ஆதலால் அதனை அனுசரித்து யுத்தத்தையும் அதனால் விளைந்த இழப்புகளையும் தவிர்த்திருக்கவேண்டும் என்று உக்கிரேனுக்கு அறிவுரை கூறும் நீங்கள் ஈழத்தில் நாம் உலக அரசியல் சூழ்நிலைகள் எமக்கு சாதகம் இல்லாத நிலையை உணர்ந்தும், இணைத்தலைமை நாடுகளின் கடும் எச்சரிக்கையும் புறக்கணித்து யுத்தத்திற்கு சென்று ஏற்கனவே இருந்ததைக் கூட இழந்த செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். உக்கிரேன் தனது மக்களை காப்பாற்ற யுத்தத்தை தவிர்த்து பக்கது நாட்டுடன் உடன் பாட்டுக்கு வந்திருக்க வேண்டுமென்றால் எமது தலைமையும் ஆயுதப்போராட்டம் இனி சரி வராது என்பதை உரிய நேரத்தில் உணர்ந்து யுத்தத்தை தவிர்த்திருக்க வேண்டும், ராஜதந்திர அணுகுமுறை மூலம் போராட்டத்தை தொடர்ந்து தம்மை நம்பிய மக்களை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு? ஆண்டுகளை 1958, 1977, 1983 என வகைப்படுத்திய நீங்கள் 1987, 1990, 1994, 2002 என வந்த சந்தர்பங்களை எல்லாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தாமல், பிடிவாதமாக புறக்கணித்ததில் எம்மவருக்கு இருந்த பங்கைப் பற்றி எதுவும் கூறவில்லை. “போராட்டம்” என்பது, ஆயுதப்போராட்டம் அல்லது வெறுமனே பிடிவாதம் பிடிப்பது மட்டுமல்ல, பேச்சுவார்ததை மேசையில் கலந்து அங்கு செய்வதும் போராட்டம் தான். நட்பு சக்திகளை இயன்ற அளவுக்கு வளர்தது கொள்வதும் அவர்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் ஒரு வழி முறை தான். மக்கள் போராடினார்கள் மக்கள் போராடினார்கள் என்கின்றீர்கள். ஆனால், போராட்ட வழிமுறைகளையோ தீர்மானங்களையோ எடுப்பதில் மக்கள் பங்களிப்பு இருக்கவில்லை தலைமை மட்டுமே தீர்மானித்தது . 1987 ல் சுதுமலைக் கூட்டதிலேயே ஆயுதங்களை கையளிக்கிறோம் என்ற கூறியவுடன் கரகோசம் செய்து அதை ஆதரித்தவர்கள் தமிழ் மக்கள். ஆனால் அவ்வேளையில் மக்களின் மனவோட்டத்தை புறக்கணித்ததன் விளைவு என்ன,? பாரிய மக்கள் அழிவுக்கு பின்னர் 22 வருடம் கழித்து ஆயுதங்களை பலவந்தமாக கைவிட வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அதாவது 1987 மக்கள் எதை கரகோசம் செய்து வரவேற்றார்களோ அதே முடிவை அவமானத்துடன் பின்னர் எடுக்க வேண்டிய நிலை வந்தது. உக்கிரேன் அதிபர் ரஷயாவின் ஆக்கிரமிப்பை எதிர்தது போராடியதை தவறு என்று ஏளனப்படுத்துகின்றீர்கள், இத்தனைக்கும் உக்கிரேன் இன்றும் இராணுவ பொருளாதார பலத்துடன் தான் இருக்கிறது. இழந்ததை கட்டியெழுப்புவது அவர்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் , தமிழ் மக்களின் அரசியல் நிலை அப்படியா உள்ளது? இந்த நிலையில் உக்கிரேனுக்கு அட்வைஸ் வேறு.

சூரிய குடும்பத்தைவிட பல கோடி ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

6 days 23 hours ago
3I/ATLAS: பூமியை நெருங்கும் வால்மீன் - இதை வேற்றுகிரக விண்கலம் எனப் பலரும் சந்தேகித்தது ஏன்? பட மூலாதாரம்,NASA, ESA, David Jewitt (UCLA) படக்குறிப்பு,நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று படம்பிடித்த 3ஐ/அட்லஸ் வால்மீனின் புகைப்படம் கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் "டிசம்பர் மாதத்தில் வால்மீன் வந்து பூமியின் மீது மோதி அழிவு ஏற்படப் போகிறது" என்று கவலைப்பட்டுக்கொண்டே கேட்டார் எனக்கு அழைத்த ஒரு சிறுமி. அதேபோல, ஒரு பதின்ம வயது மாணவர், "வேற்றுகிரகவாசிகள் வேவு பார்க்க வருகிறார்கள்," என்று உறுதிபடப் பேசினார். வாராது வந்த மாமணியைப் போல, சூரிய குடும்பத்திற்குள் திடீரென வந்துள்ள 3I/Atlas என்று அழைக்கப்படும் வால்மீன், பல புதிரான தன்மைகள் காரணமாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வால்மீன் ஏன் புதிராக இருக்கிறது? இதுகுறித்துப் பல்வேறு ஊகங்கள் கிளம்புவதற்கும் வானியலாளர்கள் இதைக் கூர்ந்து கவனிப்பதற்கும் என்ன காரணம்? இங்கு விரிவாகக் காண்போம். இந்திய நேரப்படி, வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணிக்கு, '3ஐ/அட்லஸ்' எனும் ஒரு மர்ம வால்மீன் நமது பால்வெளியின் எங்கோ தொலைதூரத்தில் இருந்து வந்து பூமியின் அருகே கடந்து செல்லும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் போல சுமார் இரு மடங்கு தொலைவான, 27 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இது கடந்து செல்வதால் வெறும் கண்களுக்குப் புலப்படாது. டிசம்பர் 20 அதிகாலையில், சூரிய உதயத்திற்கு முன்பு, வடகிழக்குத் திசையில் சிம்ம ராசி பகுதியில் உள்ள ரெகுலஸ் எனும் பிரகாசமான "மகம்" நட்சத்திரத்தின் அருகே இது காணப்படும். இதன் ஒளி முழு நிலவைவிட 40 கோடி மடங்கு மங்கலாக இருப்பதால், இதைக் காண குறைந்தபட்சம் 30 சென்டிமீட்டர் குழிலென்ஸ் கொண்ட தொலைநோக்கி தேவைப்படும். 3I/ATLAS: சூரிய குடும்பத்திற்கு வந்துள்ள புதிய விருந்தாளி கடந்த ஜூலை 2 ஆம் தேதி இரவு 21:31 யுடிசி நேரத்தில் (இந்திய நேரம் ஜூலை 3 அதிகாலை 3:01) வெளியிடப்பட்ட சிறுகோள் மின்னணு சுற்றறிக்கை(M.P.E.C. 2025-N12) உலக வானியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலகெங்கும் உள்ள ஐந்து தொலைநோக்கி வலைப்பின்னல் அமைப்பான 'ATLAS' தானியங்கித் தொலைநோக்கி அமைப்பு, பூமிக்கு அருகில் வரும் ஒரு புதிய பொருளைக் கண்டறிந்தது. அதன் காரணமாகவே வானியலாளர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வான்பொருளாக அது மாறியது. மறுபுறம் சமூக ஊடகங்களில், பல்வேறு கவலைகளும் புனைவுகளும் பரவத் தொடங்கின. சரி, இதற்கெல்லாம் காரணமான அந்த மூன்று புதிர்கள் என்ன? அதில் முதலாவது, 3ஐ/அட்லஸ் வால்மீனின் பாதை. பூமியை எடுத்துக்கொண்டால் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. மேலும் சில வான்பொருட்கள் வட்டமான பாதையில் சுற்றலாம். அதுவே வெகுதொலைவில் இருந்து வரக்கூடிய வால்மீன் போன்ற வான்பொருட்கள் பரவளையத்தில்(Parabolic) சுற்றுகின்றன. ஆனால் இந்த வால்மீனின் பாதை, சூரியனுக்கு அருகே கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டைப் போல அமைந்த அதிபரவளையப் பாதையாக உள்ளது. சூரியனின் ஈர்ப்புத் தளையில் கட்டுண்டு இயங்கும் பொருட்கள் அனைத்தும் மூடிய வட்ட, நீள்வட்ட அல்லது பரவளையப் பாதைகளிலேயே செல்லும். அதற்கு மாறாக, அதிபரவளையப் பாதை ஒரு திறந்த பாதை; நேர்கோட்டைப் போன்றது. எனவே, இந்த வான் பொருள் சூரியக் குடும்பத்துக்கு வெளியிலிருந்து வந்தது; அடுத்த சில மாதங்களில் சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறும் என்பதும் உறுதியானது. பட மூலாதாரம்,Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani இரண்டாவதாக, வால்மீனின் வேகம் ஒரு புதிரான விஷயமாக இருந்தது. பொதுவாக, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் போல சுமார் முப்பது முதல் ஐம்பது மடங்கு தொலைவில் உள்ள கைப்பர் வளையப் பகுதியில், ஐம்பது முதல் இருநூறு ஆண்டுகள் காலத்திற்குள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் வால்மீன்கள் குடிகொண்டுள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான, பத்தாயிரம் லட்சம் வருடங்கள் வரையிலான ஊசல் காலத்தைக் கொண்ட வால்மீன்கள், பூமி-சூரியன் தொலைவைப் போல 2,000 முதல் 2,00,000 மடங்கு தொலைவிலுள்ள ஊர்ட் மண்டலத்தில் இருந்து வருகின்றன. இவற்றின் பாதை நீள்வட்டமாகவோ அல்லது பரவளையமாகவோ அமையும். ஆனால் 3ஐ/அட்லஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, இதன் வேகம் மணிக்கு 2,21,000 கிலோமீட்டர் (நொடிக்கு 61 கிமீ) ஆக இருந்தது. சூரியனை நெருங்க நெருங்க இந்த வேகம் கூடியது. அக்டோபர் 30, 2025 அன்று சூரியனுக்கு அருகே 21 கோடி கிலோமீட்டர் தொலைவில் இது கடந்து சென்றபோது, அதன் வேகம் மணிக்கு 2,46,000 கிலோமீட்டர் வரை உயர்ந்தது. மூன்றாவதாக, இந்த வால்மீனில் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்தான் அதிகமாக உள்ளது. பிற தனிமங்களின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. சூரிய குடுமபத்தில் இருக்கும் வான் பொருட்களில் ஹைட்ரஜன், ஹீலியம் மட்டுமே இருக்காது. பிற பொருட்களின் செறிவும் அதிகமாக இருக்கும். இந்த மூன்றையும் வைத்துப் பார்த்தால், 3ஐ/அட்லஸ் வால்மீன் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது இல்லை என்பதையும் அது வேறு ஏதோவொரு விண்மீன் குடும்பத்தில் உருவாகி சூரிய குடும்பத்திற்குள் வந்திருக்கக்கூடிய ஒரு விருந்தாளி என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. பட மூலாதாரம்,Atlas/University of Hawaii/Nasa படக்குறிப்பு,அட்லஸ் தொலைநோக்கி, பூமியுடன் மோதக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட வான்பொருட்களைக் கண்டறிய விண்வெளியை ஆய்வு செய்கிறது. இருப்பினும் 3ஐ/அட்லஸ்ஸால் அத்தகைய ஆபத்து இல்லை என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள். 3ஐ/அட்லஸ் வால்மீன் எங்கிருந்து வருகிறது? ஒரு பந்து செல்லும் பாதையைப் பார்த்து அது எங்கிருந்து வந்தது என ஊகிக்க முடியும். அதுபோல, இந்த வால்மீனின் வந்த பாதையைக் கணக்கிட்டு, ஒரு கோடி ஆண்டுகள் பின்னோக்கி அது கடந்து வந்த வழியை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இருப்பினும், பால்வெளி மண்டலத்தின் மற்றொரு பகுதியில் இந்த வால்மீன் பிறந்திருக்கலாம் எனத் தெரிய வந்தாலும், எந்தக் குறிப்பிட்ட விண்மீனின் அருகே இது உருவானது என்பதை இன்னும் இனங்காண முடியவில்லை. அதுகுறித்த சமீபத்திய ஆய்வுகள், வயது குறைந்த விண்மீன்கள் நிரம்பிய பால்வெளியின் மெல்லிய வட்டுப் பகுதியிலிருந்தே இது வந்திருக்கலாம் எனக் கூறுகின்றன. இதன் வேகம், பாதை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட விஞ்ஞானிகள், "சுமார் 700 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தொலைதூரத்தில் ஏதோவொரு விண்மீன் பிறக்கும்போது அதனுடன் உருவாகி, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வால்மீன் தற்போது நமது சூரிய மண்டலத்தைக் கடந்து செல்வதாக" கணித்துள்ளனர். இதற்கு முன்னர், 2017இல் கண்டுபிடிக்கப்பட்ட 1ஐ/ஓமுவாமுவா எனும் வால்மீனும், 2019இல் கண்டறியப்பட்ட 2ஐ/போரிசோவ் எனும் வால்மீனும் இதேபோன்ற தன்மைகளைக் கொண்டிருந்தன. எனவே நாம் இதுவரை அறிந்துள்ள தகவல்களின்படி, நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாலிருந்து வரும் மூன்றாவது வான் பொருளே இந்த 3ஐ/அட்லஸ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட, ஒளிரும் பச்சை நிறத்தில், கண்ணுக்குத் தெரியும் வால் பகுதியுடன் பயணிக்கும் C/2025 A6 (லெம்மன்) வால்மீன் (கோப்புப் படம்) 3I/ATLAS என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்? கடந்த சில பத்தாண்டுகளாக பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு இருக்கக் கூடிய விண்பாறைகள், விண்கற்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கான வலைப்பின்னல் போன்ற தொலைநோக்கி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பின் பெயர் ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல் இம்பாக்ட் லாஸ்ட் அலெர்ட் சிஸ்டம் (Asteroid Terrestrial Impact Last Alert System). அதாவது சுருக்கமாக அட்லஸ் (ATLAS). அதன் மூலமாகத்தான் இந்த வால்மீன் அவதானிக்கப்பட்டது என்பதால் அட்லஸ் என்ற பெயர் அதற்குச் சூட்டப்பட்டது. மேலும் ஐ என்பதற்கு இன்டர்ஸ்டெல்லார் என்று பொருள். அதாவது, இரண்டு விண்மீன் குடும்பங்களுக்கு இடையிலுள்ள விண்வெளிப் பகுதியே இன்டர்ஸ்டெல்லார் என்று அழைக்கப்படுகிறது. இந்த வால்மீனும் அந்தப் பகுதியில் காணப்படும் ஒரு வான்பொருள் என்பதால் அதைக் குறிப்பதற்காக ஐ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றோடு, இதுவரை நாம் கண்டுபிடித்துள்ள விண்மீன்களுக்கு இடையிலான வான்பொருட்களில் இது மூன்றாவது பொருள். அதைக் குறிக்கவே 3 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே, சூரிய குடும்பத்திற்குள் நுழைந்துள்ள இந்தப் புதிய வால்மீனுக்கு 3ஐ/அட்லஸ் (3I/ATLAS) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani படக்குறிப்பு,வால் மீன் 3ஐ/அட்லஸ் சூரிய குடும்பம் வழியாக நகரும்போது அதன் வண்ணமயமான பாதையை ஹவாயில் உள்ள ஜெமினி வடக்குத் தொலைநோக்கி படம்பிடித்தது. ஹார்வர்ட் விஞ்ஞானி முன்வைத்த வேற்றுகிரக விண்கலம் கருதுகோள் இந்த வால்மீனை சிலர் வேற்றுகிரகத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய ஒரு விண்கலம் என்று சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள். இத்தகைய பரபரப்பான பேச்சுகளுக்கெல்லாம் தொடக்கமாக இருந்தது, முனைவர் அவி லோப் என்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிதான். இந்த வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அப்போதிருந்த தகவல்களை அடிப்படையாக வைத்து "இதுவொரு வேற்றுகிரக விண்கலமாக இருக்க வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார். இதை ஓர் அளவீட்டை வைத்துப் புரிந்துகொள்ள முயல்வோம். அதாவது, 0 என்றால், அது இயற்கையான வான்பொருள்; 10 என்று கூறினால், அதுவொரு முற்றிலும் செயற்கையான விண்கலம். இத்தகைய மதிப்பீட்டில், அப்போதைக்குத் தம்மிடம் இருந்த தகவல்களை அடிப்படையாக வைத்து, இந்த வான்பொருளுக்கு 4 என்ற மதிப்பீட்டை விஞ்ஞானி அவி லோப் வழங்கினார். அதாவது "பெருமளவுக்கு இயற்கையான வான்பொருளைப் போலத்தான் இருக்கிறது. ஆனால், சில புதிர்களும் இதில் இருக்கின்றன" என்பதே அந்த மதிப்பீட்டிற்கான காரணம். அதில் அவர் புதிர்கள் உள்ளன என்று கூறியதைச் சிலர் ஊதிப் பெரிதாக்கியதால், பல்வேறு விதமான அச்சங்களைக் கிளப்பிவிடக் கூடிய கோட்பாடுகள் பரவி வருவதை நாம் பார்க்கிறோம். அதில் இருப்பதாகச் சொல்லப்பட்ட மர்மங்களில் ஒன்றாக, "செயற்கையாக ஏவப்படும் ராக்கெட் போன்றவற்றின் பாதை பெருமளவுக்கு நேர்க்கோடு போலவே இருக்கும். அதேபோல இந்த 'விண்கலத்தின்' பாதையும் இருகிறது" என்று கூறப்பட்டது. அவி லோப், சூரிய குடும்பத்தில் உள்ள வான்பொருட்களில் இப்படி இருக்க முடியாது என்று ஒரு கருத்தை முன்வைத்தார். முதலில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த வால்மீனின் பாதையை ஆராய்ந்தபோது அதுவொரு நேர்க்கோடு போலத்தான் தெரிந்தது. ஆனால், கிட்டத்தட்ட நேர்க்கோடு போலத் தெரிந்தாலும், அந்த வால்மீன் அதிபரவளையத்தில் சுற்றி வருகிறது என்பது தெரிய வந்தது. பட மூலாதாரம்,M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar படக்குறிப்பு,வால் மீன் 3ஐ/அட்லஸ் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதை), நமது சூரியன் (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட பாதை) போலவே நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது. வால்மீனுக்கு வால் தோன்றுவதில் ஏற்பட்ட தாமதம் ஒரு வால்மீனை எடுத்துக்கொண்டால், அதில் பனி போன்றவை இருக்கும். சூரியனில் இருந்து வெகுதொலைவில் இருக்கும்போது மிகவும் குளிர்ந்த நிலையில் அதிக பனியுடன் இருக்கும். அதுவே சூரியனை நெருங்கி வரும்போது வெப்பநிலை உயர்ந்து பனி உருகத் தொடங்கும். அதோடு சேர்த்து, சூரியனில் இருந்து வரும் சூரியக் காற்று காரணமாக, உருகும் பனியால் வால்மீனின் பின்புறத்தில் ஒரு வால் உருவாகும். அந்த வால், சூரியனுக்கு மேலும் நெருக்கமாக வர வரப் பெரிதாகிக் கொண்டே செல்லும். ஆனால், வியப்பளிக்கும் வகையில் இந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் முதல் சில மாதங்களுக்கு வால் தோன்றவே இல்லை. அது மிகவும் புதிரான அம்சமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால், அந்த வால்மீனில் வால் உருவாகி, வளர்ந்தும் வருகிறது. எனவே அது தற்போது ஒரு முக்கியமான புதிராக இல்லை. ஜூலை 21 அன்று ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி எடுத்த கூர் படங்களில், இது ஒரு கண்ணீர்த்துளி போன்ற வடிவில் சிறு வாலுடன் தென்பட்டது. பின்னர் சூரியனை நெருங்க நெருங்க, அதன் வால் நீண்டுகொண்டே போனது. கடந்த நவம்பரில் சூரியனுக்கு மிக அருகில் இருந்த நிலையில், ஹபிள் தொலைநோக்கி மற்றும் வியாழன் கிரகம் நோக்கிப் பயணிக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 'ஜூஸ்' (JUICE) விண்கலம் நுட்பமாகப் படம் எடுத்தபோது, வளர்ந்த வால் தெளிவாகத் தென்பட்டது. அவற்றின் மூலம் இதுவொரு வால்மீன்தான் என உறுதிப்படுத்தப்பட்டது. சில வால்மீன்களுக்கு ஏற்படுவது போலவே, சூரியனுக்கு அருகே செல்லும் நிலையில் நவம்பர் மாதத்தில் இதற்கு இரண்டு வால்கள் உருவாயின; தூசும் தும்பும் கொண்ட ஒரு வால் சூரியனுக்கு எதிர்த்திசையிலும், பிளாஸ்மா எனும் அயனி கலவைப் பொருள்கள் நிறைந்த இன்னொரு வால் சூரியன் உள்ள திசையிலும் என எதிரெதிர்த் திசைகளில் முளைத்தன. பட மூலாதாரம்,Nasa/SPHEREx படக்குறிப்பு,ஒளியியல் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியால் வானத்தை ஸ்கேன் செய்யும் நாசாவின் SPHEREx ஆய்வகம், வால் மீன் 3ஐ/அட்லஸ்ஸில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனிக்கட்டியை அளவிட்டது. விண்கலம் போல திடீரென வேகம் பெற்றது எப்படி? இவைபோக, முன்பு பார்த்தபோது ஒரு நிறத்திலும், பின்னர் வேறொரு நிறத்திலும் தெரிவதாகவும் வால்மீன் பிரகாசமடைவதாகவும், இத்தகைய பிரகாசம் செயற்கை ஒளிகளின் வாயிலாகவே தோன்றியிருக்கும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. உண்மையில், வால்மீன் சூரியனுக்கு நெருக்கமாக வரும்போது, அதிலுள்ள பனியில் பட்டுப் பிரதிபலிக்கிறது. பொதுவாக, பூமியில் பனி என்றால் அது தண்ணீரால் ஆனது. ஆனால், இத்தகைய வால்மீன்களில், கார்பன் டை ஆக்சைடால் ஆன பனி இருக்கும். அந்தப் பனி சூரியனுடைய வெப்பத்தில் உருகி, வால்மீனை சுற்றி பனிமூட்டம் போலப் படர்ந்திருந்தது. அந்தப் பனிமூட்டத்தில் பட்டு சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது பிரகாசமாகத் தெரிகிறது. இதன் மூலம், செயற்கை ஒளிகள் அதில் இருப்பதைப் போலத் தெரிந்தது ஒரு தோற்றமயக்கம்தான் என்பது மேலதிக ஆய்வுகளில் நமக்குத் தெளிவாகியுள்ளது. இவற்றைப் போலவே முன்வைக்கப்பட்ட மற்றொரு புதிர், வால்மீனின் வேகம் குறித்தானது. வால்மீன் ஒரு பாதையில், குறிப்பிட்ட வேகத்தில் சீராகச் செல்ல வேண்டும். ஆனால், இந்த வால்மீன் திடீரென வேகமெடுத்து நகர்ந்தது. அது 'எப்படிச் சாத்தியமானது?' என்ற கேள்விகளும் சந்தேகங்களும் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்ற கருதுகோள் குறித்த பேச்சுகள் ஏற்படக் காரணமாயின. அதோடு, "வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ஒரு காரணியாக வைத்து, இதுவொரு ராக்கெட் போன்ற பொருள், செயற்கையாக அதில் வேகம் கூட்டப்பட்டுள்ளது" என்றெல்லாம் விவாதங்கள் எழத் தொடங்கின. ஆனால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு இதற்கான உண்மைக் காரணம் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வுகளின்படி, வால்மீனில் பனி உருகி வெளியேறும்போது, அதிலுள்ள பல்வேறு விதமான வாயுப் பொருட்கள் வெளியே சிதறுகின்றன. அந்த வாயுப் பொருட்களின் சிதறல் காரணமாகவே வேகம் அதிகரித்தது. அதாவது, ஒரு பலூனை நன்கு ஊதிய பிறகு அதன் மீதுள்ள பிடியை விடுவித்தால் உள்ளிழுத்த காற்றை முழு வேகத்துடன் வெளியேற்றியபடி பறக்கும் அல்லவா, அதேபோல வாயுப் பொருட்கள் வெளியேறும்போது கிடைத்த உந்துதலின் விளைவாகவே வால்மீன் வேகம் பெற்றது. பட மூலாதாரம்,ESO/O. Hainaut படக்குறிப்பு,3I/Atlas வால்மீன் இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் சீன விண்கலம் எடுத்த புகைப்படத்தில் என்ன தெரிந்தது? ஆரம்பக் கட்டத்தில் பார்க்கும்போது மேலோட்டமான சிவப்பு நிறத்தில் அதன் தூசுகள் தென்பட்டன. அதற்குப் பிறகு கூடுதலான திறன் கொண்ட தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்தபோது அது நீல சாயல் கொண்ட நிறத்தையுடையது என்பது தெளிவானது. ஆனால், இந்த வால்மீன் பச்சோந்தியை போலத் தனது நிறத்தை மாற்றிக் கொள்வதாகச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர். உண்மையில் அனைத்து வால்மீன்களுக்குமே ஒவ்வொரு தனித்துவமான பண்புகள் இருக்கும். அத்தகைய தனித்துவமான பண்புகளின் பின்னுள்ள காரணங்களைத் தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகே அறிய முடியும். அதேபோல, 3ஐ/அட்லஸ் வால்மீனுக்கு சில தனித்துவமான பண்புகள் உண்டு. அவை குறித்த அறிவியல் விளக்கங்களை மேலதிக ஆராய்ச்சிகளில்தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். சமீபத்தில் செவ்வாய் கோளை சுற்றி வரும் சீனாவின் தியான்வென்-1 விண்கலத்தின் உயர்தெளிவுத் திறன் கொண்ட கேமரா உதவியுடன் 3ஐ/அட்லஸ் வால்மீனை புகைப்படம் எடுத்துப் பார்த்தார்கள். அந்தத் தெளிவான புகைப்படத்தில், இதுவொரு விண்கலமாக இருப்பதற்கான எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை என்பதும் இயல்பான வால் விண்மீன் என்பதும் நமக்குத் தெரிய வந்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அதெல்லாம் சரி, ஒரு வால் விண்மீன் குறித்து இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுவதற்கு என்ன காரணம்? விஞ்ஞானிகள் இதன்மீது மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன்? இதை ஒரு சிறு உதாரணத்துடன் பார்ப்போம். ஓரிடத்தில் கட்டடம் ஒன்றைக் கட்டுகிறார்கள். கட்டடத்தை கட்டி முடித்த பிறகு அந்த இடத்தைச் சுற்றி செங்கல், மண் போன்ற அதைக் கட்டுவதற்குப் பயன்பட்ட பொருட்களின் மிச்சங்கள் கிடக்குமல்லவா! அதேபோல, சூரிய குடும்பத்தில், சூரியன், கோள்கள் ஆகியவை உருவான பிறகு, அவற்றின் உருவாக்கம் போக மிச்சம் எஞ்சியுள்ள வான்பொருட்கள்தான் வால்மீன்களாக, விண்கற்களாக சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில், சிறு கற்கள், மணல் துகள்கள், கடும் குளிர் நிலையில் உறைந்த கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற எளிதில் ஆவியாகக்கூடிய வாயுக்கள், பனிக்கட்டி வடிவில் உள்ள நீர் ஆகியவை கலந்த கலவையே வால்மீன்கள். சூரியனைச் சுற்றி வரும் வால்மீன்களைப் போலவே, வேறொரு விண்மீன் அருகே கோள்கள் உருவாகும்போது அதோடு சேர்ந்து 3ஐ/அட்லஸ் உருவாகியிருக்க வேண்டும். எனவே, இந்த வால்மீனை ஆய்வு செய்வதன் மூலம், வேறொரு விண்மீன் குடும்பத்திலுள்ள கோள்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது குறித்தும் அறிய முடியும். இந்த அரிய வாய்ப்புக்காகத்தான், "வாராது வந்த மாமணி" போன்ற இந்த 3ஐ/அட்லஸ் மீது உலகின் கவனம் குவிந்தது. (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn81d64zznpo

அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

6 days 23 hours ago
Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0 - 60 கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர். இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருநாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

6 days 23 hours ago

Editorial   / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0     - 60

 

image_6da9aacce1.jpg

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று  விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருநாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

image_7e36fbd0eb.jpgimage_abeb2a210a.jpgimage_b6083ca7bc.jpgimage_5713e8681f.jpgimage_e6df0714af.jpgimage_ba95c407c6.jpg

 Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

6 days 23 hours ago
18 Dec, 2025 | 02:29 PM கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்ட மாஅதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கோப்புகள் சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்ட மாஅதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Virakesari.lk

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

6 days 23 hours ago

18 Dec, 2025 | 02:29 PM

image

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. 

அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். 

ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்ட மாஅதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கோப்புகள் சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்ட மாஅதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Virakesari.lk

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!

6 days 23 hours ago
18 Dec, 2025 | 02:10 PM இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர். இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது. உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! | Virakesari.lk

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!

6 days 23 hours ago

18 Dec, 2025 | 02:10 PM

image

இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர்.

இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது.

உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு  கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! | Virakesari.lk

முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

6 days 23 hours ago
18 Dec, 2025 | 02:18 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது. கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகளும் வழங்கப்பட்டன. தென்னியன்குளம் சந்தி முதல் அம்பலப்பெருமாள்குளம் சந்தி வரையிலான பிரதான வீதி முற்றாகச் சிதைவடைந்துள்ளமையை மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதற்குத் தீர்வாக, அவ்வீதியின் ஒரு பகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாகவும், எஞ்சிய பகுதியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிராமத்தினுள் அமைந்துள்ள பாடசாலை வீதி, கோட்டைகட்டியகுளம் பாடசாலைப் பின்வீதி மற்றும் விடத்தை வீதி ஆகியவற்றை உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அமைதிபுரம் முதல் துணுக்காய் பிரதேச செயலகம் வரை ஏழு கிராமங்களை இணைக்கும் அரச பேருந்து சேவைக் கோரிக்கை தொடர்பில், தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பேருந்துச் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார். அம்பலப்பெருமாள்குளம் பகுதியில் சிதைவடைந்து ஆபத்தான நிலையிலுள்ள கலிங்குக்குப் பதிலாக நிரந்தர மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதனைத் தற்காலிகமாகத் திருத்தியமைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். அத்துடன், கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் கலிங்கு நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமையால் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க, வனவளத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, நீர்பாசனத் திணைக்களத்தின் ஊடாகச் சீர்செய்ய மாவட்டச் செயலர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார். அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தொலைதூர மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளமைக்குத் தீர்வாக, முதற்கட்டமாக வாரத்தில் ஒரு நாள் பொதுக்கட்டடம் ஒன்றில் மருத்துவ நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும், இரு கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளூராட்சித் திணைக்களம் அல்லது மாற்று வழிகள் ஊடாக அமைத்துத் தருவதாக ஆளுநர் உறுதியளித்தார். பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளைச் சாதகமாக அணுகுவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அம்பலப்பெருமாள்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் களஞ்சிய அறையுடன் கூடிய மண்டபம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அந்த மைதானத்துக்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் பதிலளித்தார். குடியிருப்புக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “அபிவிருத்திகள் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும்போதே அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே அதிகாரிகளுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். இப்பகுதி இளைஞர்கள் மதுபாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலர், பிரதேச சபை தவிசாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்! | Virakesari.lk