5 days 11 hours ago
இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்டத்தரணி நேற்று இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தின் துப்பாக்கிதாரி அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷார செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். அவர் கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
https://newuthayan.com/article/இஷாராவுக்கு_உதவிய__பெண்_சட்டத்தரணியை__விசாரிக்க__CIDக்கு_அனுமதி!
5 days 11 hours ago
ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது. இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451468
5 days 11 hours ago

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!
இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது.
அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது.
மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.
கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது.
பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது.


செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது.
இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1451468
5 days 11 hours ago
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை! நாட்டின் டெங்குத் தொற்றின் அபாயம் அதிகளவில் உள்ள பகுதிகளில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்குத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். தற்போது 11 மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாகக் காணப்படுகின்றன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பருவகால மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து 22 மாவட்டகளில் நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்றுள்ளது. https://newuthayan.com/article/யாழில்_டெங்கு_அபாயம்_அதியுச்ச_நிலை!#google_vignette
5 days 11 hours ago
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை!

நாட்டின் டெங்குத் தொற்றின் அபாயம் அதிகளவில் உள்ள பகுதிகளில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்குத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர்.
தற்போது 11 மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாகக் காணப்படுகின்றன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பருவகால மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து 22 மாவட்டகளில் நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்றுள்ளது.
https://newuthayan.com/article/யாழில்_டெங்கு_அபாயம்_அதியுச்ச_நிலை!#google_vignette
5 days 11 hours ago
போராடி நின்ற பூமியின் காற்றுக்குடித்து கவிதை பாடுவதற்கும்.. தூர இருந்து கவனித்து கவிதை பாடுவதற்கும் இடையில் உள்ள கணதியை வைரம் அறிவார். வைரமுத்து ஈழத்தமிழ் சொந்தங்களுக்காக குரல் கொடுத்தே வந்த ஒருவர். புலம்பெயர் நாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகள் மூலம் ஆதரவு கொடுத்தவர். அவரின் யாழ்ப்பாண பயணம் அவருக்கும் யாழ் மண்ணிற்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். எதிர்கால சந்ததிக்கு கவிஞரிடம் இருந்து பெறத்தக்க கவித்துவ வித்துவம் கடத்தப்பட இது உதவினால் நல்லது. சிலர் சிம்மையியை இதில கோர்த்துவிட்டு.. அநாவசியமாக கவிஞரின் யாழ் விஜயத்துக்கு ஒரு விதத்திலும் சம்பந்தப்படாததை பேசுகிறார்கள். சிம்மையி நவீன பத்தினியும் அல்ல.. கவிஞர் நவீன இராமரும் அல்ல. அது இங்கு பேசு பொருளும் அல்ல.. ஈழத்தமிழருக்கு.
5 days 11 hours ago
வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள்! adminOctober 29, 2025 வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளை நம்பித்தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் உள்ளது. அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். செய்தவற்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்காமல் புத்தாக்கமாக சிந்தித்து அடுத்த ஆண்டு செயற்படவேண்டும். வன்னி போன்ற பிரதேசங்களில் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் அலைந்து திரிந்து சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் உள்ளன. கால்நடை மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும், என ஆளுநர் தெரிவித்தார். இதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வாகனப் பிரச்சினை என்பன முன்வைக்கப்பட்டது. அத்துடன் கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு மாகாண ரீதியிலான பொறிமுறையை உருவாக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேபோன்று கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு, கால்நடை மருத்துவர்களையும் பொறிமுறையை முன்மொழியுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/222057/
5 days 11 hours ago
வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள்!
adminOctober 29, 2025

வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை வளர்ப்பு உள்ளது.
கால்நடைகளை நம்பித்தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் உள்ளது. அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.
செய்தவற்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்காமல் புத்தாக்கமாக சிந்தித்து அடுத்த ஆண்டு செயற்படவேண்டும்.
வன்னி போன்ற பிரதேசங்களில் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் அலைந்து திரிந்து சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் உள்ளன. கால்நடை மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும், என ஆளுநர் தெரிவித்தார்.
இதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டது.
ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வாகனப் பிரச்சினை என்பன முன்வைக்கப்பட்டது.
அத்துடன் கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு மாகாண ரீதியிலான பொறிமுறையை உருவாக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
அதேபோன்று கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு, கால்நடை மருத்துவர்களையும் பொறிமுறையை முன்மொழியுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
https://globaltamilnews.net/2025/222057/
5 days 11 hours ago
சென்ற தலைமுறை.... மொத்த தாலிக்கொடி கட்டி கெத்தாக வாழ்ந்தார்கள். பாவம்... வாற தலைமுறை, மஞ்சள் கயிறுதான் தஞ்சம் போலை. 😂
5 days 11 hours ago
Published By: Vishnu 29 Oct, 2025 | 12:43 AM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் 22 துறைகளில் சுமார் 8000 ஆட்சேர்ப்புக்களும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர3 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களைப் நிரப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அந்த விதந்துரைகளுக்கமைய அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 79 ஆட்சேர்ப்புக்களுக்கும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 120 ஆட்சேர்ப்புக்களுக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 44 ஆட்சேர்ப்புக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் 17 ஆட்சேர்ப்புக்களுக்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் 123 ஆட்சேர்ப்புக்களுக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் 310 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சிர் ஒரு ஆட்சேர்ப்புக்கும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் 48 ஆட்சேர்ப்புக்களுக்கும், வெளி விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் 54 ஆட்சேர்ப்புக்களுக்கும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மறும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சில் 6 ஆட்சேர்ப்புக்களுக்கும், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சில் 355 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் 5,198 ஆட்சேர்ப்புக்களுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் 213 ஆட்சேர்ப்புக்களுக்கும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு 1,261 ஆட்சேர்ப்புக்களுக்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரு ஆட்சேர்ப்புக்களுக்கும், வடக்கு மாகாண சபையில் 115 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சப்பிரகமுவ மாகாண சபையில் 11 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமேல் மாகாண சபையில் 85 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமத்திய மாகாண சபையில் 89 ஆட்சேர்ப்புக்களுக்கும், மேல் மாகாண சபை 414 ஆட்சேர்ப்புக்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 8,547 ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில் 2003 ஆட்சேர்ப்புக்களுக்கும், மார்ச்சில் 5882 ஆட்சேர்ப்புக்களுக்கும், மே மாதம் 15 073 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228932
5 days 11 hours ago
Published By: Vishnu
29 Oct, 2025 | 12:43 AM

(எம்.மனோசித்ரா)
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் 22 துறைகளில் சுமார் 8000 ஆட்சேர்ப்புக்களும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர3 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களைப் நிரப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
அந்த விதந்துரைகளுக்கமைய அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 79 ஆட்சேர்ப்புக்களுக்கும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 120 ஆட்சேர்ப்புக்களுக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 44 ஆட்சேர்ப்புக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் 17 ஆட்சேர்ப்புக்களுக்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் 123 ஆட்சேர்ப்புக்களுக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் 310 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சிர் ஒரு ஆட்சேர்ப்புக்கும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் 48 ஆட்சேர்ப்புக்களுக்கும், வெளி விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் 54 ஆட்சேர்ப்புக்களுக்கும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மறும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சில் 6 ஆட்சேர்ப்புக்களுக்கும், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சில் 355 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் 5,198 ஆட்சேர்ப்புக்களுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் 213 ஆட்சேர்ப்புக்களுக்கும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு 1,261 ஆட்சேர்ப்புக்களுக்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரு ஆட்சேர்ப்புக்களுக்கும், வடக்கு மாகாண சபையில் 115 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சப்பிரகமுவ மாகாண சபையில் 11 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமேல் மாகாண சபையில் 85 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமத்திய மாகாண சபையில் 89 ஆட்சேர்ப்புக்களுக்கும், மேல் மாகாண சபை 414 ஆட்சேர்ப்புக்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 8,547 ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில் 2003 ஆட்சேர்ப்புக்களுக்கும், மார்ச்சில் 5882 ஆட்சேர்ப்புக்களுக்கும், மே மாதம் 15 073 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/228932
5 days 11 hours ago
கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' - 8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை பட மூலாதாரம்,IMD படக்குறிப்பு,ஆந்திராவில் கரையைக் கடந்த பின்னரும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து) 29 அக்டோபர் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆந்திராவில் கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோன்தா புயல் வடக்கு, வட மேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கடந்த ஆறு மணி நேரங்களில் நகர்ந்துள்ளது. ஆந்திராவில் நர்சாபூரிலிருந்து வடமேற்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து மேற்கில் 100 கி.மீ தொலைவிலும் புயல் நிலைக் கொண்டுள்ளது. இது அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த ஆறு மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எட்டு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் புதுவையின் ஏனாம் பகுதியிலும், தெற்கு ஒடிசாவிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும், ஆங்காங்கே அதி கனமழை பெய்யக்கூடும். அதே போன்று வடக்கு ஒடிசாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையோரம் காற்று மணிக்கு 75 முதல் 85 கி.மீ வேகத்திலும் இடையிடையே 95 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று முற்பகல் நேரத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகமாக குறையும். தமிழக, புதுவை கரையோரங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலையில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ ஆக குறையும். இதனால் இந்தப் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் ஆந்திர, தமிழக, புதுவை கரையோர பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பு மோன்தா புயல் காரணமாக, விஜயவாடாவில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரிக்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் விமான சேவைக்கான வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddr3rm9gn1o
5 days 12 hours ago
நீங்கள் சொல்வதும் சரி தான் வாத்தி அண்ணா......................
5 days 15 hours ago
நீங்கள் எல்லோரும், நான் உட்பட உந்தக்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரது ஊடகப்பிரிவு முந்திக்கொண்டது உங்களுக்கு முதல். அவர், தங்கம் வாங்கவோ கடத்தவோ முயன்றது உண்மை. ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும். நடத்துவார்களா?
5 days 16 hours ago
இந்த செய்தியை சிறியர் எங்கோ இணைத்து வாசித்தேன். ஆனால், சிறியரின் வீரகேசரி இணைப்பில் செய்தி விபரம் காணப்படவில்லை. யாரோ இந்த சூரன் இது என்ன பயணமோ என நினைத்தேன். சூரத்தனமான வேலைதான் பார்த்து உள்ளார். சைக்கிளில் பாக்கு நீரிணையை எப்படி கடந்தார் என அறிய ஆவல்.
5 days 17 hours ago
தலை! நீ கலக்கு தலை! 😎
5 days 18 hours ago
நண்டுக்குணம் படைத்த இனம், நாசமாகிப் போகும் வரலாற்றில்... அறிந்திரு தமிழா.
5 days 18 hours ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன் காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன் சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான் மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர். 2007 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் - மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில் மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில் மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில் லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில் மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது 2008இல் கடற்கரும்புலியானோரில்: திருமலை துறைமுகத்தில் "பழிவாங்கல்-2" நடவடிக்கையின் போது 10.05.2008: நீரடி நீச்சல் கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் 2009 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009 லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009 சத்தியமாய் இவற்றை நன்னிச் சோழன் பல்வேறு இடங்களிலிருந்து "கேட்டு அறிந்து படித்து" சேகரித்தார் என்பதை தலைவரின் மெய்க்காவலராய் இருந்த புளிகளுக்கு அறியத்தருகிறேன். - கோப்ரல் காகிதப்புலி
5 days 18 hours ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்:
2006 இல் கடற்கரும்புலிகளானோரில்:
தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி
மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள்
மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன்
பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர்.
புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி
தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி
பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன்
காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன்
தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன்
சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான்
மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி
ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர்.
2007 இல் கடற்கரும்புலிகளானோரில்
லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் -
மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில்
மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில்
மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில்
கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில்
லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில்
லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில்
மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில்
கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில்
லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது
2008இல் கடற்கரும்புலியானோரில்:
2009 இல் கடற்கரும்புலிகளானோரில்
லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009
லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009
சத்தியமாய் இவற்றை நன்னிச் சோழன் பல்வேறு இடங்களிலிருந்து "கேட்டு அறிந்து படித்து" சேகரித்தார் என்பதை தலைவரின் மெய்க்காவலராய் இருந்த புளிகளுக்கு அறியத்தருகிறேன்.
- கோப்ரல் காகிதப்புலி
5 days 18 hours ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன் காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன் சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான் மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர். 2007 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் - மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில் மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில் மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில் லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில் மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது 2009 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009 லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009 சத்தியமாய் இவற்றை நன்னிச் சோழன் பல்வேறு இடங்களிலிருந்து "கேட்டு அறிந்து படித்து" சேகரித்தார் என்பதை தலைவரின் மெய்க்காவலராய் இருந்த புளிகளுக்கு அறியத்தருகிறேன். - கோப்ரல் காகிதப்புலி