Aggregator

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

6 days 21 hours ago
எமது தலைவருக்கு ரசியா மீது கோபம் கோபமாக வருகிறது.அது தான் உங்க தலைவர் ரம். பாரிய பொருளாதாரத் தடை கொண்டுவந்து எழும்ப முடியாமல் செய்யப் போகிறாராம்.

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

6 days 21 hours ago
பரவாயில்லை மோகன். தனிமடல் பகுதி எப்போதாவது தானே எழுதுவது.கருத்துக் களத்தில் எழுதிவிட்டு வெட்டி ஒட்டினால் சரிதானே. உங்கள் கரிசனைக்கு மிக்க நன்றி மோகன்.

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!

6 days 21 hours ago
எந்த உணவகம் என்று பெயரை வெளியிட, வீரகேசரி ஏன் பஞ்சிப் படுகின்றது. முஸ்லீம் உணவகம் என்றால்… வீரகேசரி பம்மிக் கொண்டு, விழுங்காமல் நலுங்காமல் செய்தி வெளியிடுவது ஒரு வகை பயபக்தி என நினைக்கின்றேன். 🤔

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!

6 days 22 hours ago
09 Sep, 2025 | 04:50 PM மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார் மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த ஹோட்டல் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மிலை(8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இரு தினங்களின் பின்னர் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலினை தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார். குறித்த ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எது வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு! | Virakesari.lk

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!

6 days 22 hours ago

09 Sep, 2025 | 04:50 PM

image

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு  மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார் 

மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது  சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன 

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த ஹோட்டல் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார் 

நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மிலை(8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. 

இரு தினங்களின் பின்னர் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலினை தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எது வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு! | Virakesari.lk

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்

6 days 22 hours ago
9 Sep, 2025 | 05:25 PM ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது. அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்

6 days 22 hours ago

9 Sep, 2025 | 05:25 PM

image

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ்  அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே  காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே  மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது.

அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து  போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ்  அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன்  விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான  தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின்  கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

6 days 22 hours ago
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

6 days 22 hours ago

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

மேலும்.....

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital

  • Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha

  • A Hamas official says its negotiating team was targeted during a meeting

  • Explosions are heard and smoke is rising above Doha

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்

6 days 23 hours ago
🔴 கொழுத்தி எரிக்கப்பட்டது நேபாள பாராளுமன்றம்! சமூக ஊடக தடையை கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் போராட்டமானது வன்முறையாக வெடித்து தொடர்வதுடன், பிரதமர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதுடன் பாராளுமன்றமும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

6 days 23 hours ago
சிலருக்கு... புட்டின் என்ன செய்தாலும் பிழை கண்டு பிடிப்பதே முழு நேரத் தொழில். அவர்கள்... கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதில் ஒரு அற்ப திருப்தி. அதுக்கு ஜால்ரா போட பின்னாலை இரண்டு பேர் திரியும் போது.. அவர்களுக்கும் குசி வந்து பினாத்திக் கொண்டு இருப்பது வாடிக்கை. இதுகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கடந்து போவதே புத்திசாலித்தனம்.

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

1 week ago
மேலே நீங்கள் காண்பித்த பதிலெழுதும் பெட்டியே உங்களுக்கு காண்பிக்கவில்லை என்று ஒரு குழப்பம் இருந்தது. உங்களுக்கு களத்தில் கருத்துக்களுக்கு பதில் எழுதும் போது காண்பிப்பது போன்று தமிழில் எழுதுவதற்கு உரிய பகுதி காண்பிக்குவில்லை என்று விளங்குகின்றேன். முன்னைய பதிப்பில் அவ்வாறான ஒரு தெரிவு இருந்திருக்கலாம் என நினைக்கின்றேன். புதிய பதிப்பிற்கு மாறிய பின்னர் அந்த பகுதி தனிமடல் பகுதியில் இல்லை. மாற்று வழி ஏதாவது உள்ளதா எனப் பார்க்கின்றேன்.

நேபாளத்தில் அரசு கவிழ்ந்தது: இளைஞர் போராட்டத்தால் பிரதமர் கே.பி.ஒலி ராஜினாமா

1 week ago
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2025, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். அவர் ராஜினாமா செய்திருப்பதை அவரது செயலகம் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அந்த அறிக்கை கூறுகிறது. தலைநகர் காத்மாண்டுவிலும், நேபாளம் முழுவதும் அதிகாலை முதல் போராட்டங்கள் நடந்தன. ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீடுகள் உட்பட பல மூத்த அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. நேபாளத்தில் என்ன நடக்கிறது? முன்னதாக உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கவும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கள் இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. "ஜென் Z இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு அமைச்சர்கள் தற்போது வரை ராஜினாமா செய்துள்ளனர். தலைநகருக்கு வெளியே நடைபெற்ற போராட்டங்களிலும் ஏற்பட்ட மோதல்களில் 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். பொழுதுபோக்கு, செய்தி மற்றும் வணிகத்திற்காக சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சு மற்றும் இணைய மோசடிகளை எதிர்கொள்வதற்காக அவற்றை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என நேபாள அரசு நியாயப்படுத்தியது. திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இது அரசின் சர்வாதிகார அணுகுமுறை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர். சில போராட்டக்காரர்கள் தற்போது ராஜினாமா செய்துள்ள நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாகில் உள்ள அவரின் வீட்டின் மீது கற்களை வீசினர். முன்னதாக சபானா புடாதோகி என்கிற போராட்டக்காரர் பிபிசியிடம் பேசியபோது, சமூக ஊடகத் தடை தான் அவர்கள் ஒன்று கூடியதற்கு காரணம் என்றார். "சமூக ஊடகத் தடையை விட அனைவரின் கவனமும் ஊழலின் மீது தான் உள்ளது. எங்களுக்கு எங்களின் நாடு திரும்பவும் வேண்டும். ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும்." என அவர் தெரிவித்தார். நேபாளத்தில் சமீபத்தில் "நெபோ கிட்" என்கிற பிரசாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை சுட்டிக்காட்டியும் அது ஊழலால் தான் எனக் குற்றம்சாட்டியும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, போராட்டங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை, காவல்துறை தண்ணீரை பீச்சியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றது. இதன் தொடர்ச்சியாக, ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. வன்முறைக்கும் உயிரிழப்புக்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள கேபி சர்மா ஒலி, அசம்பாவிதங்களுக்கு சுய நலன் சார்ந்த குழுக்கள் ஊடுருவியதே காரணம் எனத் தெரிவித்துள்ளார். போராட்டத்தை விசாரிக்க அரசு குழு அமைக்கும் என்றும் தெரிவித்த ஒலி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் காவல்துறையைப் பயன்படுத்தியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் ராஜினாமா செய்துள்ளார். கடந்த வாரம் சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்த நேபாள அரசு அவற்றை முழுமையாக தடை செய்யவில்லையென்றும் நேபாளம் சட்டத்தின் கீழ் அவற்றை கொண்டு வர மட்டுமே முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தது. பட மூலாதாரம், Getty Images மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களில் வன்முறையால் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சரும் நேபாள காங்கிரஸ் தலைவருமான ராம்நாத் அதிகாரி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை பேஸ்புக் மூலமாக அறிவித்துள்ளார். பிரதமரைச் சந்திக்க முடியாததால் தனது ராஜினாமா சமூக ஊடகம் மூலம் அறிவித்ததாக பிபிசி நியூஸ் நேபாளி சேவையிடம் அவர் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பதிவில் நேபாளம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகக் கூறியுள்ளார் ராம்நாத், "கேள்வி கேட்பதும் அமைதியான முறையில் போராடுவதும் குடிமக்களின் அடிப்படை உரிமை, ஒரு ஜனநாயகத்தில் அதனை அங்கீகரிக்காமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பரவலான அடக்குமுறை, கொலைகள் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறோம்." என்றுள்ளார் மேலும் அவர் தனது பதிவில், "இந்த நாட்டை கட்டமைக்க உதவியிருக்க வேண்டிய ஒரு தலைமுறையை போரைப் போல எப்படி அணுக முடியும்? இந்த கேள்விகளுக்கு பதில் காணாமல் அதிகாரத்தில் இருப்பது எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனது மனசாட்சி என்னை எச்சரிக்கிறது. இளம் குழந்தைகள் ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு தேசமே கவலையில் ஆழ்ந்துள்ளபோது அரசாங்கத்தில் தொடர்வது நான் என் கட்சியில் பெற்றுள்ள தார்மீக உணர்வு மற்றும் கல்விக்கு எதிரானது. எனது அதிகாரப்பூர்வ கடமைகளில் தொடர்வது எனக்கு குற்றவுணர்ச்சியைத் தருகிறது" என்றார். மறுபுறம் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் சொந்த மாவட்டத்திலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவரின் வீட்டை சூரையாடிய போராடிய போராட்டக்காரர்கள் அவரின் வீட்டை தீக்கிரையாக்கினர். படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்தனர். நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக, கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவையின் பல அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவரை மூன்று மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சிறிது நேரத்திற்கு முன்பு, குடிநீர் அமைச்சர் பிரதீப் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். "அன்புள்ள இளம் சகோதர சகோதரிகளே, நீங்கள்தான் எனது முதல் கூட்டாளிகள் மற்றும் எனது ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் ஆதாரம். நேற்று தொடங்கிய போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce84n39w7wwo

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 week ago
ஆசியக் கிண்ணம் 2025 : போட்டி நடுவர்கள் குறித்த அட்டவணை அறிவிப்பு! Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 09:36 AM ஆசியக் கிண்ணம் 2025 போட்டிக்கான நடுவர்கள் தொடர்பான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணப்போட்டி, செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 9) ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த போட்டியின் நடுவர்களாக ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஆண்டி பைக்ராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குழு டீ உள்ளடங்கியுள்ள ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் சீனா ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டியுடன் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இன்று (செப்டம்பர் 9 ) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த போட்டிகள் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 12 போட்டிகள் கொண்ட குழு நிலைக்கான போட்டி நடுவர்களின் நியமனங்களை ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. போட்டி நடுவர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவர்களாக * அஹ்மத் பக்டீன் (ஆப்கானிஸ்தான்) * ஆசிப் யாகூப் (பாகிஸ்தான்) * ஃபைசல் அப்ரிடி (பாகிஸ்தான்) * காஸி சோஹெல் (பங்களாதேஷ்) * இஜாத்துல்லா சஃபி (ஆப்கானிஸ்தான்) * மசுதூர் ரஹ்மான் (பங்களாதேஷ்) * ரவீந்திர விமலசிரி (இலங்கை) * ரோஹன் பண்டிட் (இந்தியா) * ருசிரா பல்லியகுருகே (இலங்கை) * வீரேந்தர் ஷர்மா (இந்தியா) ஆசிய கிண்ணம் 2025 - குழு நிலைக்கான போட்டி அதிகாரிகளின் நியமனங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, செவ்வாய், 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி - ஆப்கானிஸ்தான் எதிர் ஹொங்கொங் சீனா ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது. கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா. தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி நான்காவது நடுவர்: ரவீந்திர விமலசிறி போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் புதன், 2025 செப்டம்பர் 10ஆம் திகதி - இந்தியா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, துபாயயில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது. கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி தொலைக்காட்சி நடுவர் : ருச்சிர பல்லியகுருகே நான்காவது நடுவர் : மசுதூர் ரஹ்மான் போட்டி நடுவர் : ஆண்டி பைக்ராஃப்ட் வியாழக்கிழமை, 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் ஹொங்காங் சீனா மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் ரோஹன் பண்டிட் தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப் நான்காவது நடுவர்: பைசல் அஃப்ரிடி போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 12ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: மசுதூர் ரஹ்மான் மற்றும் அஹ்மத் பக்தீன் தொலைக்காட்சி நடுவர்: காசி சோஹெல், நான்காவது நடுவர்: ருசிர பள்ளியகுருகே போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் சனிக்கிழமை, 2025 செப்டம்பர் 13ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் இலங்கை ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரோஹன் பண்டிட் மற்றும் பைசல் அப்ரிடி தொலைக்காட்சி நடுவர்: வீரேந்திர சர்மா நான்காவது நடுவர்: ஆசிப் யாகூப் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் ஞாயிறு, 2025 செப்டம்பர் 14ஆம் திகதி - இந்தியா எதிர் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ருச்சிர பள்ளியகுருகே மற்றும் மசுதுர் ரஹ்மான் தொலைக்காட்சி நடுவர்: அஹ்மத் பக்தீன் நான்காவது நடுவர்: இசதுல்லா சஃபி போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் திங்கள், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி - ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 4:00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: வீரேந்திர சர்மா மற்றும் ஆசிப் யாகூப் தொலைக்காட்சி நடுவர்: ரவீந்திரன் விமலசிறி நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் திங்கள், 2025 செப்டம்பர் 15ஆம் திகதி - இலங்கை எதிர் ஹொங்காங் சீனா ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி தொலைக்காட்சி நடுவர்: மசுதூர் ரஹ்மான் நான்காவது நடுவர்: அஹ்மத் பக்தீன் போட்டி நடுவர்: ஆண்டி பைக்ராஃப்ட் செவ்வாய், 2025 செப்டம்பர் 16ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: பைசல் அப்ரிடி மற்றும் ரவீந்திர விமலசிறி தொலைக்காட்சி நடுவர்: ரோஹன் பண்டிட் நான்காவது நடுவர்: வீரேந்தர் சர்மா போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் புதன், 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: அஹ்மத் பக்தீன் மற்றும் ருச்சிர பல்லியகுருகே தொலைக்காட்சி நடுவர்: இசதுல்லா சஃபி நான்காவது நடுவர்: காசி சோஹல் போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் வியாழன், 2025 செப்டம்பர் 18 ஆம் திகதி - இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 19ஆம் திகதி - இந்தியா எதிர் ஓமன் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் பைசல் அப்ரிடி தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப் நான்காவது நடுவர்: வீரேந்திர சர்மா போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் https://www.virakesari.lk/article/224544

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்

1 week ago
நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கம் Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 09:27 AM நேபாளத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால், சுமார் 19 பேர் கொல்லப்பட்டதையடுத்து, சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நேற்றையதினம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நுழைந்து, பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, அங்கு இடம்பெறும் ஊழலை எதிர்த்துப் போராடவும் அழைப்பு விடுத்துள்ளனர். ஜெனரல் இசட்டின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக நேற்று இரவு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தடையை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கருத்து வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேபாளத்தின் தலைநகரிலும், தலைநகருக்கு வெளியிலுள்ள நகரங்களிலும் இடம்பெற்ற போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/224590

யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை

1 week ago
Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 12:32 PM யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை(நேற்று) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் . குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும், இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும், கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் அரசாங்க நிதியில்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224612

யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை

1 week ago

Published By: Digital Desk 1

09 Sep, 2025 | 12:32 PM

image

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில்   கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தலைமையில்  திங்கட்கிழமை(நேற்று)  நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக  தெரிவித்தார் . 

குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும், இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும், கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் அரசாங்க நிதியில்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. 

யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது. 

மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார். 

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/224612

சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் மனமுடைந்து உயிரை மாய்த்த நபர் : விசாரணையில் குற்றமற்றவரென வெளியான தகவல் !

1 week ago
Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 12:46 PM கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார். முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/224617