Aggregator

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 11 hours ago
ஏன் வரலாற்றை 1954 ஓடு நிறுத்தி விட்டீர்கள்😂? அப்படியே 1922 வரை பின்னோக்கிப் போனால் உக்ரைன் பிரதேசமே சோவியத் ஒன்றியத்தில் இருக்கவில்லை. 1922 இல் வலுக்கட்டாயமாக இணைத்தார்கள். இன்னும் ஒரு 600 ஆண்டுகள் பின்னோக்கிப் போனால் கிரைமியா இன்றைய துருக்கியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமான் பேரரசின் சொத்து. 1800 களில் ரஷ்ய சாம்ராஜ்ஜியம் கைப்பற்றிக் கொண்டது. இதெல்லாம் தாண்டி 1991 - 94 களில் ரஷ்யா கிரைமியாவை உள்ளடக்கிய உக்ரைன் தேசத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது - இது தான் இறுதியாக எல்லைகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட சந்தர்ப்பம். "கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட வர மாட்டோம்.." என்ற வாய் வார்த்தையை இங்கே மந்திரம் போல ஓதும் "புரின் புரியன்மார்" எவரும் 90 களில் ஏற்றுக் கொண்ட உக்ரைன் எல்லையை 2014 இல் ஏன் புரின் கிழித்தெறிந்தார் என்று ஆராய முனைய மாட்டார்கள்! ஏனெனில், அவர்கள் தகவல் பெறுவது சந்திரனுக்குப் போன ஸ்புட்னிக்கில் இருந்து😎!

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 11 hours ago
1954 வரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. பின்பு குருஷேவினால் உக்ரேனுடன் இணைக்கப்பட்டதாகவும், சோவியத் உடைவின் பின்னர் உக்ரேனிடம் இருந்த கிரிமியா மேற்குலகினூடான உக்ரேனின் நெருக்கத்தின் காரணமாக கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் கனிமங்களின் சுரண்டலும் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிக்க காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது நான் சொல்லி கிருபன் அறியும் நிலையில் இருக்காது என்று நினைக்கிறேன், அதன் தொடர்ச்சியே மறைமுக மேற்குலகுக்கெதிராக ரஷ்யா தொடுத்த கீவ் நோக்கிய ரஷ்யாவின் படையெடுப்பும் என்பது பின்னாளில் அனைவரும் அறிந்த வரலாறு. உக்ரேன் ரஷ்ய பலத்துடன் ஒப்பிடும்போது நோஞ்சான்தான், ஆனால் உக்ரேனுக்கு பின்னாலிருந்த மேற்குலகும் நேட்டோ ஆதரவும் நிச்சயமா நோஞ்சான்கள் இல்லை என்பது நம் அன்னைவரையும்விட ரஷ்யாவுக்கு நல்லாவே தெரியும். அதுவே போராக வெடித்தது. ஆக்கிரமிப்புகள் நியாயப்படுத்த முடியாதவை, இங்கே காரணங்களைதான் சொல்கிறேன், மற்றும்படி ரஷ்ய &உக்ரேன் பக்கம் நிக்கவோ நியாயப்படுத்தவோ எந்த நிமிடமும் முயற்சிக்கவில்லை, ஒரு இன ஆக்கிரமிப்புபோரில் இருவருமே எமக்கெதிராய் நின்றவர்கள். இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் 1987ல் வந்த உடன்படிக்கையும் அதன் பின்னரான புலிகள் நிலைப்பாடு பற்றியும் சிலமாதங்களின் முன்னர் ஏற்கனவே நீண்ட விளக்கம் ஒன்றை உங்களுக்கு தந்திருந்தேன் அதனை மீண்டும் பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் விரும்பினால் தேடி பிடித்து சரிபார்த்து கொள்ளுங்கள். அப்புறம் 1990,94,2002ல் எந்த வகையான சிங்கள அரச உள சுத்தியான பாலைபழம்போன்ற தீர்வுகள் தமிழர்களை நோக்கி நெருங்கி வந்தன , எப்படி அநியாயமாக அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்பதை உங்களிடமிருந்து அறியவிரும்புகிறேன்.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

6 days 11 hours ago
இந்த நிக்கசனின் செயற்பாடு தற்போதுள்ள நாணய முறைமையினைன் உருவாக்கியது (முக பெறுமதி நாணயங்களை உலக வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் முறை). முன்னர் இருந்த pegged (அமெரிக்க நாணயத்தினை தங்கத்தின் பெறுமதிக்கு ஈடாக பேணுவதன் மூலம்) முறைமியில் இருந்து மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை உருப்பெற்றது(Float), தற்போது இரண்டு வகையுடன் (pegged, Float) இரண்டும் இணைந்த 3வது முறையும் உள்ளது.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

6 days 12 hours ago
தற்போதய ட்ரம்ப் போல நிக்சன் பிரட்டன்வூட் தீர்மானத்திற்கெதிராக இறக்குமதி தீர்வைகளை அறிமுகப்படுத்தினார் இதனை நிக்சனின் வர்த்தக போர் என குறிப்பிடுகிறார்கள்.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

6 days 12 hours ago
60 களின் நடுப்பகுதியிலேயே அமெரிக்க வியட்நாம் போருக்குத்தேவையான நிதியினை பெறுவதற்காக ஒப்பந்த அடிப்படைகளை மீறி அமெரிக்கா நாணயங்களை அச்சிட்டது, இதனால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தின் பெறுபேறாக அமெரிக்காவினால் செலுத்தப்பட்ட அமெரிக்க நாணயங்கள் மற்ற நாடுகளின் மத்திய வங்கியில் 14 பில்லியன் காணப்பட்ட வேளை அமெரிக்காவிடம் தங்கம் வெறும் 13.2 பில்லியன் பெறுமதியில் இருப்பு காணப்பட்டதாக கூறப்படுகிறது, அதனால் பிராண்ச் ஜேர்மனி போன்ற நாடுகள் பிச்சை வேண்டாம் (அமெரிக்க நாணயம்) நாயை பிடி (பதிலாக தங்கத்தினை தா) என நின்றார்கள். இதன் பின்னர் நிக்சன் தங்க நாணயத்திற்கு ஈடான அமெரிக்க நாணய கொள்கையினை கைவிட்டு முக பெறுமதிகொண்ட தற்போதய நாணய முறைமைக்கு மாறினார். இதனையே நாணயங்களின் முழுப்பெறுமதி மற்றும் முகப்பெறுமதி என கூறப்படுகிறது.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

6 days 12 hours ago
தற்போதய நவீன உலக வர்த்தகத்தின் அடிப்படை 1944 இல் பிரட்டன்வூட் எனும் அமெரிக்க இடத்தில் ஏற்பட்ட உடன்பாடுகளுடன் ஆரம்பமாகிறது, அப்போது நிலவியிருந்த நாடுகளுக்கிடையேயான முறையற்ற நாணய கொள்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், அதிக வரி என்பதனால் உலக வர்த்தகம் பாதிப்பிற்குள்ளாகியிருந்தது, அதனை தீர்ப்பது மற்றும் உலக பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியினை அடிப்படையாக கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உலக வர்த்தகத்திற்கு தங்கத்திற்கு ஈடாக முழு பெறுமதியுடன் அமெரிக்க நாணயத்தினை உருவாக்கினார்கள், அதன் மூலம் அமெரிக்க நாணயம் உலக வர்த்தக நாணயமாகியது அப்போதிருந்த அமெரிக்க நாணயத்தினை Gold exchange standard என அழைத்தார்கள், இதனை adjustable pegged foreign exchange system என்பதன் மூலம் நாடுகளின் நாணயங்களை இணைத்தார்கள். பின்னர் வியட்நாம் யுத்த செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையில் நிக்சன் ஆட்சிக்காலத்தில் இந்த தங்க நாணய அந்தஸ்தினை நிக்சன் கைவிட்டார் (70 களி என நினைக்கிறேன்).

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

6 days 12 hours ago
நாணய வர்த்தகத்தின் நீண்டகால முதலீடுகளினடைப்படையான (Fundamental analysis) பற்றி எழுதும் ஒரு ஆர்வம் ஏற்பட்டுள்ளது, இதற்கு அடிப்படையான காரணமான நிகழ்கால உலக அரசியல் மாற்றங்கள் காணப்படுகின்றது (குறிப்பாக உக்கிரேன் இரஸ்சிய போர்), அனைத்து பக்க தரப்பு வாதங்களையும் உள்ளடக்க அனைத்து விருபமுள்ள கள உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமாகிறது, எனது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் அதனால் உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். நாணய வர்த்தகத்தின் அடிப்படை ஆய்விற்கு (Fundamental analysis) அதன் வரலாறு முக்கியமாக உள்ளது ஆனாலும் முடிந்தளவு மிக மிக சுருக்கமாக வரலாறு பற்றிய குறிப்புக்களை பதிய முயற்சிக்கிறேன்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 12 hours ago
இந்த பணம் யூரோ கிளியர் வங்கியில் பெல்ஜியத்தில் முடக்கியுள்ளது (இது முழுக்க இரஸ்சிய மத்தியவங்கியின் பணம்) இதனை பற்றியே தற்போது பேசுகிறார்கள், இந்த பணத்தினில் கை வைப்பது சட்ட விரோதமானது (உலக மற்றும் ஐரோப்பிய), அதற்கு மாற்று வழி தேடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது, இதனை ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்ரின் லகார்ட் கூட எதிராக கருத்து கூறியுள்ளார்.

ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன? களத்தில் பிபிசி கண்டது என்ன?

6 days 13 hours ago

ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன? களத்தில் பிபிசி கண்டது என்ன?

ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன?  பிபிசி கள நிலவரம்

பட மூலாதாரம்,TVK

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வக்குமார்

  • பிபிசி தமிழ்

  • 18 டிசம்பர் 2025, 15:38 GMT

    புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்

ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகள், உரிய நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 84 நிபந்தனைகளை இந்த கூட்டத்துக்கு காவல்துறை விதித்தது.

இருவர் மயக்கமடைந்தது, தடுப்பை ஏறிக் குதித்தபோது ஒருவருக்கு காலில் அடிபட்டது ஆகியவை தவிர இந்த கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்தது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல் துறை செய்த மாற்றங்கள் என்ன?

கரூர் சம்பவத்திற்குப் பிறகான முதல் பொதுக்கூட்டம்

கரூரில் கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர்.

இதனால் தவெக மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து, இதுகுறித்து விஜய் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர், தமிழக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன?  பிபிசி கள நிலவரம்

பட மூலாதாரம்,TVK

ஈரோடு பொதுக் கூட்டம், கரூர் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், இதற்கு 84 விதமான நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டதன் பேரில் இந்தக் கூட்டதிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கரூரில் 'ரோடு ஷோ' நடத்த விஜய் பல மணி நேரம் தாமதமாக, இரவு நேரத்தில் வந்ததும் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்று தமிழக அரசின் தரப்பில் கூறப்பட்டது.

இந்தநிலையில் ஈரோட்டில் காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டுமென்று அனுமதியில் குறிப்பிடப்பட்டிருந்தது என்கிறார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா.

தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல் துறை செய்த மாற்றங்கள் என்ன?

படக்குறிப்பு,விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது...

பொதுக்கூட்ட ஏற்பாடுகள் எப்படி இருந்தன?

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சுமார் 20 ஏக்கரில் செய்யப்பட்டு இருந்தபோதும், கார்கள் மற்றும் டூ வீலர்கள் நிறுத்த வெவ்வேறு பகுதிகளில் இடம் தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பொதுக்கூட்ட திடலுக்கு அரை கி.மீ. நடந்து வரும் வகையில் ஏற்பாடுகள் இருந்தன. பிரதான வாயில் உள்படப் பல திசைகளிலும் வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல் துறை செய்த மாற்றங்கள் என்ன?

பொதுமக்கள் நின்று கூட்டத்தைப் பார்ப்பதற்கான இடம், மொத்தம் 72 'பப்ளிக் பாக்ஸ்' எனப்படும் 72 தடுப்புகளால் ஆன பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்குள் தொண்டர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர்.

பெண்கள் அனுமதிக்கப்பட்ட 'பப்ளிக் பாக்ஸ்'களில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று அப்பகுதிகளில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு பப்ளிக் பாக்ஸ் பகுதியிலும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு, தேவைப்படுவோர் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவை தவிர்த்து மக்கள் நடந்து வரும் வழிகளில் பல இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாகச் சில குடிநீர் லாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

விஜய் பரப்புரை பேருந்தில் நின்று பேசுவதைப் பார்க்கும் வகையில் ஆங்காங்கே எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் பொதுக்கூட்டம் நடந்தபோது கடுமையான வெயில் இருந்ததால் அவற்றில் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை இருந்தது.

இவற்றைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கி மதியம் 12:45 மணிக்குள் முடிவடைந்தது.

தவெக பொதுக்கூட்டம் பாதுகாப்பாக நடக்க காவல் துறை செய்த மாற்றங்கள் என்ன?

இருவர் மயக்கம், ஒருவர் காலில் காயம்

விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஓருவர் ஸ்பீக்கர்கள் வைக்கப்படிருந்த இரும்பு தூணின் மீது ஏறியிருந்தனர். அருகில் இருந்தவர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் கூறியும் அவர்கள் இறங்க மறுத்துவிட்டனர்.

அதைப் பார்த்த விஜய், ''தம்பி! உடனே கீழே இறங்குப்பா... நீ கீழே இறங்கு நான் முத்தம் கொடுக்கிறேன்!'' என்று கூறியதும் அவர்கள் இருவரும் இறங்கிவிட்டனர். இதேபோன்று தடுப்பில் ஏறிக் குதித்த ஓர் இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

பொதுக்கூட்டம் நடக்கும் விஜயமங்கலம் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில், கோவையில் இருந்து வந்த விஜயை காண மக்கள் திரண்டிருந்தனர்.

அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் கனமான கயிறுகளை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஏற்கெனவே குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் பொதுக் கூட்டத்திற்கு வரவேண்டாமென்று தலைமை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை பார்ப்பது அரிதாக இருந்தது.

கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் நின்றபடியே விஜய் பேச்சை கேட்டனர்

பள்ளி வயதுடைய மாணவர்கள், மாணவிகள் சிலரை பெற்றோர்கள் அழைத்து வந்தபோது, அவர்களை பொதுக்கூட்டத்திற்கு வரும் வழியிலும், வாயில் பகுதியிலும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர்.

''வழக்கமான நிபந்தனைகளுடன் சில விஷயங்களை கட்டாயமாகச் செய்ய வேண்டுமென்று கூறியிருந்தோம். குறிப்பாக குடிநீர் வசதி போதிய அளவில் செய்யப்பட வேண்டும்; நெரிசல் ஏற்படாத வகையில் தனித்தனியாக பல பகுதிகளை அமைத்து, பலமான தடுப்புகளை அமைக்க வேண்டும்; மருத்துவக் குழு தயாராக இருக்க வேண்டும்; ஆம்புலன்ஸ் செல்ல வழிகள் விட வேண்டும்; முக்கியமாக தாமதமின்றி உரிய நேரத்துக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டுமென்று கூறியிருந்தோம்.'' என்றார் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சுஜாதா.

மேலும் ''பொதுக்கூட்டத்துக்கான இடம் சகல வசதிகளையும் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதும் அதில் முக்கிய நிபந்தனை. இந்த இடத்தில் அவை எல்லாமே இருந்தன. அதுமட்டுமின்றி, நாங்கள் கூறிய நிபந்தனைகளை சரியாகச் செய்துள்ளனரா என்பதை ஆய்வும் செய்தோம். குறிப்பாக 'பப்ளிக் பாக்ஸ்'களுக்கு இடையிலான இரும்புக் கம்பிகளை 3 அடி ஆழத்துக்குத் தோண்டி வலுவான அடித்தளத்துடன் அமைக்கவும் அறிவுறுத்தியிருந்தோம். அதனால் நெரிசல் எங்குமே ஏற்படவில்லை.'' என்றார்.

''பொதுக் கூட்டத்தில் இருவர் மயக்கம் அடைந்திருந்தனர். தடுப்பை ஏறிக் குதித்த ஒரு இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அவை தவிர்த்து, வேறு எங்கும் எந்தவித விபத்துகளும், அசம்பாவிதங்களும் நடந்ததாகத் தகவல் இல்லை. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்றும் கண்காணித்து வருகிறோம். மற்றபடி பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது'' என்றார் சுஜாதா.

''கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பெண்கள் பகுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதற்காக 400 பெண் காவலர்களை நியமித்திருந்தோம். அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது'' என்றார் சுஜாதா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj69063xd3eo

ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன? களத்தில் பிபிசி கண்டது என்ன?

6 days 13 hours ago
ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன? களத்தில் பிபிசி கண்டது என்ன? பட மூலாதாரம்,TVK கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2025, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகள், உரிய நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 84 நிபந்தனைகளை இந்த கூட்டத்துக்கு காவல்துறை விதித்தது. இருவர் மயக்கமடைந்தது, தடுப்பை ஏறிக் குதித்தபோது ஒருவருக்கு காலில் அடிபட்டது ஆகியவை தவிர இந்த கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்தது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கரூர் சம்பவத்திற்குப் பிறகான முதல் பொதுக்கூட்டம் கரூரில் கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதனால் தவெக மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து, இதுகுறித்து விஜய் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர், தமிழக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பட மூலாதாரம்,TVK ஈரோடு பொதுக் கூட்டம், கரூர் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், இதற்கு 84 விதமான நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டதன் பேரில் இந்தக் கூட்டதிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கரூரில் 'ரோடு ஷோ' நடத்த விஜய் பல மணி நேரம் தாமதமாக, இரவு நேரத்தில் வந்ததும் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்று தமிழக அரசின் தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் ஈரோட்டில் காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டுமென்று அனுமதியில் குறிப்பிடப்பட்டிருந்தது என்கிறார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா. படக்குறிப்பு,விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது... பொதுக்கூட்ட ஏற்பாடுகள் எப்படி இருந்தன? பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சுமார் 20 ஏக்கரில் செய்யப்பட்டு இருந்தபோதும், கார்கள் மற்றும் டூ வீலர்கள் நிறுத்த வெவ்வேறு பகுதிகளில் இடம் தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பொதுக்கூட்ட திடலுக்கு அரை கி.மீ. நடந்து வரும் வகையில் ஏற்பாடுகள் இருந்தன. பிரதான வாயில் உள்படப் பல திசைகளிலும் வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நின்று கூட்டத்தைப் பார்ப்பதற்கான இடம், மொத்தம் 72 'பப்ளிக் பாக்ஸ்' எனப்படும் 72 தடுப்புகளால் ஆன பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்குள் தொண்டர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் அனுமதிக்கப்பட்ட 'பப்ளிக் பாக்ஸ்'களில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று அப்பகுதிகளில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பப்ளிக் பாக்ஸ் பகுதியிலும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு, தேவைப்படுவோர் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவை தவிர்த்து மக்கள் நடந்து வரும் வழிகளில் பல இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாகச் சில குடிநீர் லாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. விஜய் பரப்புரை பேருந்தில் நின்று பேசுவதைப் பார்க்கும் வகையில் ஆங்காங்கே எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் பொதுக்கூட்டம் நடந்தபோது கடுமையான வெயில் இருந்ததால் அவற்றில் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை இருந்தது. இவற்றைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கி மதியம் 12:45 மணிக்குள் முடிவடைந்தது. இருவர் மயக்கம், ஒருவர் காலில் காயம் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஓருவர் ஸ்பீக்கர்கள் வைக்கப்படிருந்த இரும்பு தூணின் மீது ஏறியிருந்தனர். அருகில் இருந்தவர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் கூறியும் அவர்கள் இறங்க மறுத்துவிட்டனர். அதைப் பார்த்த விஜய், ''தம்பி! உடனே கீழே இறங்குப்பா... நீ கீழே இறங்கு நான் முத்தம் கொடுக்கிறேன்!'' என்று கூறியதும் அவர்கள் இருவரும் இறங்கிவிட்டனர். இதேபோன்று தடுப்பில் ஏறிக் குதித்த ஓர் இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பொதுக்கூட்டம் நடக்கும் விஜயமங்கலம் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில், கோவையில் இருந்து வந்த விஜயை காண மக்கள் திரண்டிருந்தனர். அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் கனமான கயிறுகளை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் பொதுக் கூட்டத்திற்கு வரவேண்டாமென்று தலைமை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை பார்ப்பது அரிதாக இருந்தது. கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் நின்றபடியே விஜய் பேச்சை கேட்டனர் பள்ளி வயதுடைய மாணவர்கள், மாணவிகள் சிலரை பெற்றோர்கள் அழைத்து வந்தபோது, அவர்களை பொதுக்கூட்டத்திற்கு வரும் வழியிலும், வாயில் பகுதியிலும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர். ''வழக்கமான நிபந்தனைகளுடன் சில விஷயங்களை கட்டாயமாகச் செய்ய வேண்டுமென்று கூறியிருந்தோம். குறிப்பாக குடிநீர் வசதி போதிய அளவில் செய்யப்பட வேண்டும்; நெரிசல் ஏற்படாத வகையில் தனித்தனியாக பல பகுதிகளை அமைத்து, பலமான தடுப்புகளை அமைக்க வேண்டும்; மருத்துவக் குழு தயாராக இருக்க வேண்டும்; ஆம்புலன்ஸ் செல்ல வழிகள் விட வேண்டும்; முக்கியமாக தாமதமின்றி உரிய நேரத்துக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டுமென்று கூறியிருந்தோம்.'' என்றார் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சுஜாதா. மேலும் ''பொதுக்கூட்டத்துக்கான இடம் சகல வசதிகளையும் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதும் அதில் முக்கிய நிபந்தனை. இந்த இடத்தில் அவை எல்லாமே இருந்தன. அதுமட்டுமின்றி, நாங்கள் கூறிய நிபந்தனைகளை சரியாகச் செய்துள்ளனரா என்பதை ஆய்வும் செய்தோம். குறிப்பாக 'பப்ளிக் பாக்ஸ்'களுக்கு இடையிலான இரும்புக் கம்பிகளை 3 அடி ஆழத்துக்குத் தோண்டி வலுவான அடித்தளத்துடன் அமைக்கவும் அறிவுறுத்தியிருந்தோம். அதனால் நெரிசல் எங்குமே ஏற்படவில்லை.'' என்றார். ''பொதுக் கூட்டத்தில் இருவர் மயக்கம் அடைந்திருந்தனர். தடுப்பை ஏறிக் குதித்த ஒரு இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அவை தவிர்த்து, வேறு எங்கும் எந்தவித விபத்துகளும், அசம்பாவிதங்களும் நடந்ததாகத் தகவல் இல்லை. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்றும் கண்காணித்து வருகிறோம். மற்றபடி பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது'' என்றார் சுஜாதா. ''கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பெண்கள் பகுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதற்காக 400 பெண் காவலர்களை நியமித்திருந்தோம். அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது'' என்றார் சுஜாதா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj69063xd3eo

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

6 days 13 hours ago
இங்கு சிட்னியிலும் வெய்யில் 40 பாகை செல்சியஸில் உள்லது இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக மோசமாக விளையாடுவதால் அனைத்து துறை ஆட்டக்காரர்களும் பந்து வீச்சாளர்களும் பெரும் நெருக்கடியினை இந்த அதிக வெய்யிலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

6 days 13 hours ago
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன் 18 Dec, 2025 | 05:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மலையகம் எமது தாயகம். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அனத்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களிலும் பாடசாலைகளிலும் தங்கிவரும் நிலையல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் தற்போது அவர்களை தங்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்து வருகிறது. தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமையவே அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வந்தார்கள்.அதனால் கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் முறையான அறிக்கையை பெற்றுகொண்ட பின்னரே அந்த மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பொருத்தமாகும். வேவெண்டன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு அல்லது தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்கு போங்கல் என தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அந்த மக்களின் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாறாக நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. மலையகம் எமது தாயகம். நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். அது சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது நீங்களாவது செய்யுங்கள். நாட்டில் இன்று தேயிலை, இறப்பர் போன்றவை ஒரு லட்சத்தி 3ஆயிரம் ஹெக்டயர்களில் பயிர்ச் செய்யப்படுகின்றன. அகவே பெருந்தோட்ட மக்களுக்கு அதிலே 7பேர்ச் காணி ஒதுக்குவதாக இருந்தால், வெறும் 5ஆயிரம் ஏக்கர் காணியே தேவைப்படுகிறது. அதனை ஒதுக்கிக்கொடுப்பதால் எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை. அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால் அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், இந்த சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/233750

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

6 days 13 hours ago

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

18 Dec, 2025 | 05:48 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையகம் எமது தாயகம். நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அனத்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களிலும் பாடசாலைகளிலும் தங்கிவரும் நிலையல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் தற்போது அவர்களை தங்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்து  வருகிறது.  தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமையவே  அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வந்தார்கள்.அதனால்  கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் முறையான அறிக்கையை பெற்றுகொண்ட  பின்னரே அந்த  மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பொருத்தமாகும்.

 வேவெண்டன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது  வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு அல்லது  தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்கு போங்கல் என  தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அந்த மக்களின் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.

மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாறாக நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. மலையகம் எமது தாயகம்.  நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும்.

தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். அது  சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது  நீங்களாவது செய்யுங்கள்.

நாட்டில் இன்று தேயிலை, இறப்பர் போன்றவை ஒரு லட்சத்தி 3ஆயிரம் ஹெக்டயர்களில்  பயிர்ச் செய்யப்படுகின்றன. அகவே பெருந்தோட்ட மக்களுக்கு அதிலே 7பேர்ச் காணி ஒதுக்குவதாக இருந்தால், வெறும் 5ஆயிரம் ஏக்கர் காணியே தேவைப்படுகிறது.

அதனை ஒதுக்கிக்கொடுப்பதால் எந்த  நட்டமும் ஏற்படப்போவதில்லை. அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால்  அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு  நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், இந்த  சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும்.

அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/233750

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 13 hours ago
இரஸ்சிய மத்திய வங்கியின் பணம் அது. அனைத்து நாடுகளு இதே போல நடைமுறையினை பின்பற்றுகின்றன, இது தனியார் பணமல்ல.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 13 hours ago
உந்த நரிப்புத்தி தெரிந்துதான் ரஷ்யா உக்ரேனின் கரைப்பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மற்றவர்கள் சொத்துக்களை ஆட்டைய போடுவதில் மேற்குலகினருக்கு நிகர் யாருமில்லை.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

6 days 13 hours ago
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா 18 Dec, 2025 | 03:55 PM (நெவில் அன்தனி) அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் போராடி வருகின்ற போதிலும் இங்கிலாந்து மற்றொரு மோசமான முடிவை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பின்னிலையில் இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது. தனது துடுப்பாட்டத்தை 33 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து மிச்செல் ஸ்டார்க் தனது 13ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 54 ஓட்டங்களைப் பெற்து 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸ்கோட் போலண்ட் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் முதலாம் நாளன்று அலெக்ஸ் கேரி 106 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 92 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோவ்ரா ஆச்சர் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி தனது நான்காவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். அவரைவிட ப்றைடன் கார்ஸ் 89 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 45 ஓட்டங்களுடனும் ஜொவ்ரா ஆச்சர் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களை விட ஹெரி ப்றூக்ஸ் 45 ஓட்டங்களையும் பென் டக்கெட் 29 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் லயன் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/233722

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 days 13 hours ago
ரஸ்ஸிய கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், புட்டினுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் என்று பலராலும் ஐரோப்பாவில் பல வங்கிகளில் பணமாகவும், ஆடம்பர கப்பல்கள், மாளிகைகள் போன்றவற்றி முதலீடாகவும் வைப்பிலிடப்பட்ட சுமார் 245 பில்லியன் யூரோக்களின் ஒரு பகுதியினை உக்ரேனின் செலவுகளுக்காகப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது. தனது பணத்தினை உக்ரேனுக்குக் கொடுத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஸ்ஸியா அச்சுருத்தியிருக்கும் நேரத்திலும், போலந்து இந்த முடிவில் உறுதியாக இருப்பதுடன் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் இதுகுறித்து சாதகமான முடிவினை எடுக்கும்படி கேட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் உக்ரேன் ஜனாதிபதியின் வேண்டுகோள்களில் ஒன்றான ரஸ்ஸியப் பணத்தினை உக்ரேனுக்கு வழங்கும் கோரிக்கையினை ஐரோப்பிய நாடுகள் சாதகமான முறையில் பரிசீலிக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்பணத்தினை வெறுமனே ஆயுதங்களை வாங்குவதற்காக மட்டுமே பாவிப்பதுடன் நின்றுவிடாது ரஸ்ஸிய ஆக்கிரமிப்பினால் அழிக்கப்பட்டிருக்கும் உக்ரேனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் பாவிப்பது சாலப்பொறுத்தமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

6 days 13 hours ago
இன்றைய எமது/மலையக சமூக சூழலில் எத்தனை பேர் விவசாயம் செய்ய காத்திருக்கின்றர்கள்?