Aggregator

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 week ago
எம்ஜிஆர் நடித்த படங்களில் எப்போதும் ஒரு இனிமையான மெலோடி பாடல் இடம்பெறும். எம்ஜிஆரின் இந்தப் பாணியை இயக்குனர் எஸ்.சங்கரும் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். எம்ஜிஆர் படங்களின் மெலோடி பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா, பி.பி.சிறீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.ஜே.யேசுதாஸ் போன்ற மென்மையான குரலுடைய பாடகர்களை அவர் பயன்படுத்தினார். சில சமயங்களில் ரி.எம்.எஸ். பாடியபோது, பெண் குரலுக்கு எஸ்.ஜானகியை இணைத்திருப்பார். அறுபதுகளில் எம்ஜிஆர் பட பிரபல மெலோடி பாடல்கள் என, குலேபகாவலி – ஏ.எம்.ராஜா& ஜிக்கி பாடிய "மயக்கும் மாலை பொழுதே நீ போ..." மஹாதேவி – ஏ.எம்.ராஜா & சுசீலா பாடிய "கண்மூடும் வேளையிலும் கலை என்ன…" திருடாதே – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம்..." பாசம் – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "பால் வண்ணம் பருவம் கண்டு..." என்று பலதை சொல்லிக் கொள்ளலாம். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் வர்ணத்திரைப்படமாக வெளியான படம் "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" ஆகும். அந்தப் படத்தின் "மாசிலா உண்மைக் காதலே" பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வண்ணப் படத்தின் பாடல் காட்சி இங்கே கறுப்பு வெள்ளையில் வந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த இந்தப் பாடல், அன்றைய காதலர்களை கட்டிப்போட்ட இனிமையான மெலோடியாக இருந்தது.

மனிதகுல அழிவுக்கு வழி வகுக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு : எச்சரிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை

1 week ago
நீண்ட நாட்களின் பின் தம்பியைக் கண்டது சந்தோசம். என்னப்பா திருமணத்தோடு கால்க்கட்டு இறுகிப் போச்சோ? ஏதாவது குழந்தைகள் கிடைத்ததா? சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவமில்ல. வாழ்த்துக்களும் சொல்லுவமில்ல.

மனிதகுல அழிவுக்கு வழி வகுக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு : எச்சரிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை

1 week ago
இது செயற்கை நுண்ணறிவு பற்றிய பயங்காட்டலாகவே பார்க்கிறேன்ன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனின் கூட்டு நுண்ணறிவின் தொகுப்பே தவிர.. புதிதாக உருவானதொன்றல்ல. மனித சிந்தனைக்குள் பிறந்தவை தான் செயற்கை நுண்ணறிவு. ஒரு வித்தியசாயம்.. செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனை விட விரைவாக ஒப்பாய்வு செய்து முடிவுகளை எடுக்கும். ஆனால் மனிதன் கட்டிவைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் இருந்து தான் இது நிகழும் என்பதால் மனிதனால்.. செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த அதிக நேரம் எடுக்காது. செயற்கை நுண்ணறிவை விரைவான பகுப்பாய்வு தர்க்க ரீதியான முடிவுகளை மனிதனை விடை விரைவாக எடுக்கப் பயன்படுத்த முடியும். இது ஆரோக்கியமானதும் மனித குலத்துக்கு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தக் கூடிய ஆற்றலாகும்.

உயரத்துக்கு ஏற்ற வீடு; உயர்ந்து நிற்கும் காதல் - நெகிழ வைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

1 week ago

இந்த மினி தம்பதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மண்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பிரபலமான இந்த ஜோடி, தங்கள் உயரத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டியுள்ளனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்னைகள் குறித்தும் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க விரும்புகிறார்கள்.

#Couple #MiniCouple

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

உயரத்துக்கு ஏற்ற வீடு; உயர்ந்து நிற்கும் காதல் - நெகிழ வைக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

1 week ago
இந்த மினி தம்பதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மண்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பிரபலமான இந்த ஜோடி, தங்கள் உயரத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டியுள்ளனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்னைகள் குறித்தும் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க விரும்புகிறார்கள். #Couple #MiniCouple இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியின் கடிதம் குறித்து அவதானம் - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு

1 week ago
08 Sep, 2025 | 04:34 PM (நா.தனுஜா) கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியினால் கடந்த ஜூலை மாதம் தமக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் அறிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அக்கடிதத்தில் 7ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோருக்கு கடந்த ஜுலை மாதம் அனுப்பிவைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவியின் ஊடாக கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்திருந்தார். செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் 'மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் முன்வைக்கும் மேன்முறையீடு எனும் தலைப்பின்கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறியத்தருகிறோம்' என அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் லஹிரு சமரசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதம் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரமவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/224539

சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியின் கடிதம் குறித்து அவதானம் - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு

1 week ago

08 Sep, 2025 | 04:34 PM

image

(நா.தனுஜா)

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியினால் கடந்த ஜூலை மாதம் தமக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் அறிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

அக்கடிதத்தில் 7ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோருக்கு கடந்த ஜுலை மாதம் அனுப்பிவைக்கப்பட்ட இக்கடிதம் தொடர்பில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவியின் ஊடாக கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்திருந்தார்.

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் 'மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் ஜனாதிபதியிடம் முன்வைக்கும் மேன்முறையீடு எனும் தலைப்பின்கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அக்கடிதம் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறியத்தருகிறோம்' என அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பிரத்யேக செயலாளர் லஹிரு சமரசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட பதில் கடிதம் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரமவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/224539

மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சர்வதேச அறிக்கை வெளியீடு

1 week ago
ஒரு வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படக்கூடாது என்பதற்கான உதாரணமே மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை வழக்கு - சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் புதிய அறிக்கை 08 Sep, 2025 | 05:14 PM (நா.தனுஜா) ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக்கொண்ட ஒரு வழக்காகும் என ரெட்ரெஸ் மற்றும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் இணைந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.பி.சி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தோல்வி பற்றி சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தப்பிப்பிழைத்தவர்களுக்கான நீதியைக் கோருவதற்குமான 'ரெட்ரெஸ்' அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 70 பக்க விரிவான அறிக்கை திங்கட்கிழமை (8)வெளியிடப்பட்டது. 'இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டுவருகின்றனர். 2000 - 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உள்நாட்டுப்போர் குறித்து செய்தியறிக்கையிட்டுவந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களின் சுமார் 44 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் இன்றுவரை இப்படுகொலைகளுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை' என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் தொடரும் இத்தகைய தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கானது, தமது உயிரைப் பயணம்வைத்து, சுயதணிக்கை செய்து அல்லது வேறு நாடுகளில் வாழும் இலங்கையைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலை விளைவித்திருப்பதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா விசனம் வெளியிட்டுள்ளார். அதேபோன்று ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய விசாரணை சார்ந்த தோல்விகளைக்கொண்ட ஒரு வழக்காகும் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமலராஜனின் கொலை இடம்பெற்ற இடம் ஒருபோதும் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. படங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. தடயவியல் ஆதாரங்கள் எவையும் சேகரிக்கப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு கடமையில் இருந்த சில பாதுகாப்புப்படையினரை விசாரிப்பதற்கே பல வருடங்கள் எடுத்தது. ஆனால், பலர் ஒருபோதும் அடையாளம் காணப்படவும் இல்லை. விசாரணைக்கு உட்படுத்தப்படவும் இல்லை என இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224551

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்

1 week ago
இலங்கைக்கு மிக முக்கியத்துவமானது : அரசாங்கம் மிக நுணுக்கமாக அணுக வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹாநாம 08 Sep, 2025 | 01:58 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2010 இலிருந்து இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகள் நிறைவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அவற்றை இணைத்து ஐ.நா. பொதுசபைக் கூட்டத்திலும் பின்னர் பாதுகாப்பு சபையிலும் சமர்ப்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே அரசாங்கம் இதனை மிகவும் நுணுக்கமாக அணுக வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில் இவ்வாண்டும் புதிய பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகளை நாம் நிறைவுக்கு கொண்டு வராவிட்டால் இவை அனைத்தையும் இணைத்து நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பர். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதனை நேரடியாக பாதுகாப்பு சபை கூட்டத்துக்கும் அனுப்ப முடியும். இது மிகவும் பாரதூரமானதாகும். பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எமக்கு சார்பாக இந்த பிரேரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிட்டால் எமக்கு வெவ்வேறு தடைகள் விதிக்கப்படக் கூடும். எனவே இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்முறை இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த வரைவொன்று வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்டது. அதில் இலங்கை செய்ய வேண்டியவை தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பிரதானமானது புதிய பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க வேண்டும் என்பதாகும். ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை சிறந்ததாகும். காரணம் இலங்கை ஒரு சுயாதீன இராச்சியமாகும். எவ்வாறிருப்பினும் இதற்கு முந்தைய பிரேரணைக்கு அமெரிக்க இணை அனுசரணை வழங்கியிருக்கிறது. ஆனால் தற்போது அமெரிக்கா அதன் அங்கத்தவர்களை விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் இதற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. எனவே தான் அவர்கள் எம்சார்பில் சிறந்த விடயங்களை முன்வைத்திருந்தனர். தற்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் பிரதான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றில் முதலாவது ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும். இதில் கையெழுத்திட்டால் இராணுவத்தினர் எவருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இரண்டாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு நாம் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம். அதற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த விடயமாகும். திட்டமிட்ட குற்றச்செயல்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுவதால் இது தொடர்பில் சிந்தித்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அடுத்தது தேசிய நல்லிணக்கம், புனர்வாழ்வளிப்பு உள்ளிட்டவையாகும். அவை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இறுதியான வடக்கிலுள்ள காணி விடுவிப்பு பிரச்சினையாகும். தற்போது வடக்கில் பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜெனீவாவில் 77 அங்கத்துவ நாடுகள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றால் போதுமானது. அதற்கான சாதகமான சூழல் எமக்கு காணப்படுகிறது. இதில் கால அவகாசத்தை கோருவதை விட முறையான நீண்டகால வேலைத்திட்டத்தை திட்டமிட வேண்டும். எவ்வாறிருப்பினும் இவற்றில் முக்கியமானது இந்தியாவின் நிலைப்பாடாகும். இந்தியா, இலங்கைக்கு சாதமாக தீர்மானத்தை எடுக்கும் பட்சத்தில் அதிகளவான நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்றார். https://www.virakesari.lk/article/224511

இளம் தலைமுறைக்கு சட்டம் கற்பிக்கவேண்டும் - ஆணைக்குழு தலைவர் ரங்க திஸாநாயக்க

1 week ago
08 Sep, 2025 | 01:46 PM (இராஜதுரை ஹஷான்) சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம். தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் சமூகம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கைதுகள் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கிறார்கள். 225 உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆகவே மக்கள் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் பற்றி போதுமான தெளிவை பெற்றிருக்க வேண்டும். நாட்டின் சட்டத்தை பற்றி மக்கள் பூரண தெளிவில்லாமல் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தால் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆகவே அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் தொடர்பில் முதலில் மக்கள் தெளிவுப்பெற வேண்டும். எமது கால சூழல் தற்போது கிடையாது.தற்போதைய இளம் தலைமுறையினர் மாறுப்பட்ட வகையில் உள்ளார்கள். அவர்களுக்கு சட்டம் மற்றும் அடிப்படை விடயங்கள் குறித்து போதுமான புரிதல் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் பத்திரிகை கூட வாசிப்பது கிடையாது. சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம்.தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். முதலில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் அதற்கு முதலில் சட்டத்தை பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எவ்வாறு சட்டத்தின் ஊடாக காப்பீடு பெற்றுக்கொள்வது, எங்கு சென்று முறையிடுவது என்பது கூட பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆகவே அடிப்படை சட்டத்தை கல்வி கட்டமைப்புக்குள் உள்ளடக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/224518

இளம் தலைமுறைக்கு சட்டம் கற்பிக்கவேண்டும் - ஆணைக்குழு தலைவர் ரங்க திஸாநாயக்க

1 week ago

08 Sep, 2025 | 01:46 PM

image

(இராஜதுரை ஹஷான்)

சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம். தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.

சட்டத்தை மதிக்கும் சமூகம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கைதுகள் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கிறார்கள்.

225 உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆகவே மக்கள் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் பற்றி போதுமான தெளிவை பெற்றிருக்க வேண்டும்.

நாட்டின் சட்டத்தை பற்றி மக்கள் பூரண தெளிவில்லாமல் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தால் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. 

ஆகவே அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் தொடர்பில் முதலில் மக்கள் தெளிவுப்பெற வேண்டும்.

எமது கால சூழல் தற்போது கிடையாது.தற்போதைய இளம் தலைமுறையினர் மாறுப்பட்ட வகையில் உள்ளார்கள். அவர்களுக்கு சட்டம் மற்றும் அடிப்படை விடயங்கள் குறித்து போதுமான புரிதல் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் பத்திரிகை கூட வாசிப்பது கிடையாது.

சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். 

அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம்.தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

முதலில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் அதற்கு முதலில் சட்டத்தை பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எவ்வாறு சட்டத்தின் ஊடாக காப்பீடு பெற்றுக்கொள்வது, எங்கு சென்று முறையிடுவது என்பது கூட பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆகவே அடிப்படை சட்டத்தை கல்வி கட்டமைப்புக்குள் உள்ளடக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/224518

15 வைத்தியசாலைகளுக்கு தொற்றுக் கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைத்தது ஜப்பான்

1 week ago
08 Sep, 2025 | 06:29 PM இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொற்று கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் JICA இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி கென்ஜி குரொணுமா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த உபகரணங்கள் தொற்று கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன, இதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் ஏப்ரல் 2023இல் JPY 503 மில்லியன் (அண்ணளவாக USD 3.7 மில்லியன்) நிதி உதவியுடன் குறிப்புகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இலங்கையின் 9 மாகாணங்களிலும் உள்ள 15 வைத்தியசாலைகளுக்கு வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் வெளியேற்ற வாயு சுத்திகரிப்பு அமைப்புகளுடன் கூடிய மருத்துவ கழிவு எரியூட்டிகள் வழங்கப்படுகின்றன. முறையான கழிவு மேலாண்மை மற்றும் உபகரண செயல்பாடு குறித்த தொழில்நுட்பப் பயிற்சியுடன், நாடு முழுவதும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதஇந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தூதுவர் இசொமதா தனது கருத்துக்களில், இந்தத் திட்டம் தொற்றுக் கழிவு மேலாண்மைக்கான மேம்பட்ட வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கைசன், 5S மற்றும் TQM முறைகளின் பயிற்சி மூலம் சுகாதாரப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார். இந்தத் திட்டம் அதன் திறன் மேம்பாட்டுக் கூறு, பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) அணுகுமுறையில், நவீன நடத்தை அறிவியலை அடிப்படையாகக் கொண்ட நட்ஜ் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த ToT அணுகுமுறையைப் பயன்படுத்தி, சுகாதார அமைச்சக அதிகாரிகளிடமிருந்து மருத்துவமனை தொற்று கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மருத்துவ சேவை பணியாளர்களின் பரந்த குழுக்களுக்கு கற்றறிந்த அறிவு, பரந்த அடிப்படையில் பாதுகாப்பான மருத்துவ சூழலை திறம்பட உருவாக்குகிறது. திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒரு வடிகுழாய் ஆய்வகம் இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான யென் கடன் திட்டத்தின் மூலம் நிறுவப்படும் என்றும், இதன் மூலம் கிழக்கு மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு நிலையானதாக இருக்க, அரசாங்கத்திற்கு அரசு ஒத்துழைப்பு மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் தொடர்புடைய தொழில்துறை துறைகள் உட்பட தனியார் துறை கூட்டாண்மையும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். நிலையான வளர்ச்சியை அடைவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் ஆழப்படுத்துவதிலும் இலங்கையை ஆதரிப்பதில் ஜப்பான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது. https://www.virakesari.lk/article/224566

15 வைத்தியசாலைகளுக்கு தொற்றுக் கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைத்தது ஜப்பான்

1 week ago

08 Sep, 2025 | 06:29 PM

image

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொற்று கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் JICA இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி கென்ஜி குரொணுமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த உபகரணங்கள் தொற்று கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன, இதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் ஏப்ரல் 2023இல் JPY 503 மில்லியன் (அண்ணளவாக USD 3.7 மில்லியன்) நிதி உதவியுடன் குறிப்புகள் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், இலங்கையின் 9 மாகாணங்களிலும் உள்ள 15 வைத்தியசாலைகளுக்கு வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் வெளியேற்ற வாயு சுத்திகரிப்பு அமைப்புகளுடன் கூடிய மருத்துவ கழிவு எரியூட்டிகள் வழங்கப்படுகின்றன. 

முறையான கழிவு மேலாண்மை மற்றும் உபகரண செயல்பாடு குறித்த தொழில்நுட்பப் பயிற்சியுடன், நாடு முழுவதும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதஇந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

தூதுவர் இசொமதா தனது கருத்துக்களில், இந்தத் திட்டம் தொற்றுக் கழிவு மேலாண்மைக்கான மேம்பட்ட வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கைசன், 5S மற்றும் TQM முறைகளின் பயிற்சி மூலம் சுகாதாரப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார். இந்தத் திட்டம் அதன் திறன் மேம்பாட்டுக் கூறு, பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) அணுகுமுறையில், நவீன நடத்தை அறிவியலை அடிப்படையாகக் கொண்ட நட்ஜ் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். 

இந்த ToT அணுகுமுறையைப் பயன்படுத்தி, சுகாதார அமைச்சக அதிகாரிகளிடமிருந்து மருத்துவமனை தொற்று கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மருத்துவ சேவை பணியாளர்களின் பரந்த குழுக்களுக்கு கற்றறிந்த அறிவு, பரந்த அடிப்படையில் பாதுகாப்பான மருத்துவ சூழலை திறம்பட உருவாக்குகிறது.

திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒரு வடிகுழாய் ஆய்வகம் இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான யென் கடன் திட்டத்தின் மூலம் நிறுவப்படும் என்றும், இதன் மூலம் கிழக்கு மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு நிலையானதாக இருக்க, அரசாங்கத்திற்கு அரசு ஒத்துழைப்பு மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் தொடர்புடைய தொழில்துறை துறைகள் உட்பட தனியார் துறை கூட்டாண்மையும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

நிலையான வளர்ச்சியை அடைவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் ஆழப்படுத்துவதிலும் இலங்கையை ஆதரிப்பதில் ஜப்பான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது.

e6cb85e0-7176-4ae2-b980-e8ca5946306b.jpg

6bbb3cd0-f980-4237-92b8-0d294b27be4c.jpg

dee21193-4f06-4dff-a600-8b0b93077f18.jpg

https://www.virakesari.lk/article/224566

அவுஸ்திரேலியாவில் விஷக்காளான் உணவைக் கொடுத்து மூவரை கொன்ற பெண்! - 33 ஆண்டுகள் பிணையில்லாத ஆயுள் தண்டனை!

1 week ago
Published By: Digital Desk 1 08 Sep, 2025 | 01:23 PM அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. 50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கண்களை மூடிக்கொண்டு நின்ற எரின், நீதிபதி தீர்ப்பினை அறிவிக்கையில் குற்றத்துக்கான தண்டனையை வாசிக்கும்போது மட்டுமே கண்களைத் திறந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி எரின் பரிமாறிய உணவினை உட்கொண்டவர்களில் எரினின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் அந்த உணவை உட்கொண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சில நாட்கள் கழித்து உயிரிழந்தனர். அத்துடன், நச்சுத்தன்மையான உணவினை உட்கொண்ட மற்றுமொருவரான, ஹீதர் வில்கின்சனின் கணவர் இயன் வில்கின்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்த நிலையில், நீதிமன்ற அறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/224495