Aggregator

தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு!

5 days 3 hours ago
தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு! 28 Oct 2025, 8:18 PM தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து தனது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். அதன்படி கட்சியின் அன்றாட செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் குழுவை இன்று நியமித்து உத்தரவிட்டார். பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதல் கழக உறுப்பினர் மரிய வில்சன் என 28 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். தமது வழிகாட்டுதல் படி இயங்கும் இந்த புதிய குழுவுக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைய்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளரான ஆனந்த் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/tvk-management-meeting-will-be-held-in-panaiyur/

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!

5 days 3 hours ago
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்! October 28, 2025 கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளநிலையில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நினைவேந்தலுக்காக தனியார் காணியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. https://www.errimalai.com/?p=105889

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!

5 days 3 hours ago

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!

October 28, 2025

கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளநிலையில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நினைவேந்தலுக்காக தனியார் காணியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

1000035026.jpg

1000035027-768x1024.jpg

1000035028-768x1024.jpg

1000035029.jpg

https://www.errimalai.com/?p=105889

தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்

5 days 3 hours ago
தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட தொழில்களினால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் தெரிவித்தார். பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகளவில் சுருக்குவலை, கணவாய் குழைகளை கடலில் போடுவது உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் வடமராட்சி வடக்கு கடற்பரப்பை நம்பி இருக்கும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தான் தான் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் எம்மவர்கள் நடப்பதன் காரணமாகவே தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு உடந்தையாக செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்கால சந்ததிக்கு எமது கடல் வளத்தை பாதுகாக்கும் அக்கறை இல்லாது போய்விட்டது. இது விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகளது மெத்தனப்போக்கு மாற்றமின்றியே தொடர்ந்து வருகின்றது. கடற்றொழில் அமைச்சராக தமிழர்கள் வந்தபின்னரே வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுபோயுள்ளது. தமிழ் அமைச்சர்களாக முன்னர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது சந்திரசேர் தரப்புகளின் அரசியல் ஆதிக்கம் சங்கங்கள் சமாசங்களுக்குள் ஊடுருவியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த அரசியல் ஆதாயங்களுக்காக மீனவர் சமுதாயத்தை பயன்படுத்தி வருகின்றனர். சங்களில் பொறுப்புகளில் உள்ள பலர் மீனவ சமூதாயத்தின் நலன்களை கைவிட்டு சுயநல காரணங்களுக்காக இவ்வாறான தரப்புகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர். இதனால் சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ முடியாதுள்ளது. தொடர்ச்சியாக கடற்றொழில் வருவாயேதும் இன்றி ஏமாற்றமாகி வருவதன் காரணமாக எமது இளைஞர் சமூகம் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றமை எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் எமது கடலிலே மீன்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரம் அங்குள்ள அரசியல் கட்சிகளால் கையாளப்பட்டு வருகிறது. ஏதாவது தேர்தல் வந்தால் தமது அரசியல் நலன்களுக்காக அதனை பேசுவார்கள். மீனவர் பிரச்சினை அரசியலாக்கப்படுவதன் காரணமாகதான் தீர்வு காண்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது கடலுக்குள் வராதீர்கள் என நாங்கள் வலியுறுத்துவது எவ்வாறு தவறாகும். ஆனால் அவ்வாறு நாங்கள் கூறுவது திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு வருகிறது. 1983 க்கு முன்னர் இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் வந்ததில்லை. கடல்வலய தடைச்சட்டம் காரணமாகவே இந்திய மீனவர்கள் வந்து எமது கடல் வளத்தை சுரண்டிச்சென்றனர். கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மீது இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. அதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்றனர். அதனை முற்றுமுழுதாக தடுத்த நிறுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக நேர்மையாக குரல்கொடுத்து செயற்படுவதற்கு எமது பிரதிநிதிகளும் தயாராக இல்லை. தத்தமது அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையில் தலையிடுவதோடு சரி. நிலையான தீர்வுக்காக ஒருவரும் துணைநிற்பதும் இல்லை, குரல்கொடுப்பதும் இல்லை. எமது பிரதிநிதிகளே இவ்வாறு இருப்பதன் காரணமாகவே அரசாங்கத்தில் உள்ளவர்களும் வடக்கு மீனவர் பிரச்சினையில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டுவருதற்கு காரணமாக அமைகிறது. சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. இதுதான் இன்று வடக்கு மீனவர்களாகிய எமது நிலை. எம்மிடையே உள்ள ஒற்றுமையீனமே இதற்கு காரணம். உடனடியாக மீனவர் சமுதாயம் விழிப்படைந்து ஒன்றுபட்டு தீவிரமாக போராட முன்வர வேண்டும். இல்லாவிடில் கடல் வளம் அழிக்கப்பட்டு எமது வாழ்வாதாரமும் இல்லாமல் போகும் என அவர் கூறினார். https://akkinikkunchu.com/?p=346534

தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்

5 days 3 hours ago

தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்

fishers-780x434.jpg

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட தொழில்களினால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் தெரிவித்தார்.

பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகளவில் சுருக்குவலை, கணவாய் குழைகளை கடலில் போடுவது உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் வடமராட்சி வடக்கு கடற்பரப்பை நம்பி இருக்கும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தான் தான் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் எம்மவர்கள் நடப்பதன் காரணமாகவே தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு உடந்தையாக செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்கால சந்ததிக்கு எமது கடல் வளத்தை பாதுகாக்கும் அக்கறை இல்லாது போய்விட்டது.

இது விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகளது மெத்தனப்போக்கு மாற்றமின்றியே தொடர்ந்து வருகின்றது.

கடற்றொழில் அமைச்சராக தமிழர்கள் வந்தபின்னரே வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுபோயுள்ளது. தமிழ் அமைச்சர்களாக முன்னர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது சந்திரசேர் தரப்புகளின் அரசியல் ஆதிக்கம் சங்கங்கள் சமாசங்களுக்குள் ஊடுருவியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த அரசியல் ஆதாயங்களுக்காக மீனவர் சமுதாயத்தை பயன்படுத்தி வருகின்றனர். சங்களில் பொறுப்புகளில் உள்ள பலர் மீனவ சமூதாயத்தின் நலன்களை கைவிட்டு சுயநல காரணங்களுக்காக இவ்வாறான தரப்புகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர். இதனால் சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ முடியாதுள்ளது.

தொடர்ச்சியாக கடற்றொழில் வருவாயேதும் இன்றி ஏமாற்றமாகி வருவதன் காரணமாக எமது இளைஞர் சமூகம் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றமை எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் எமது கடலிலே மீன்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும்.

தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரம் அங்குள்ள அரசியல் கட்சிகளால் கையாளப்பட்டு வருகிறது. ஏதாவது தேர்தல் வந்தால் தமது அரசியல் நலன்களுக்காக அதனை பேசுவார்கள். மீனவர் பிரச்சினை அரசியலாக்கப்படுவதன் காரணமாகதான் தீர்வு காண்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களது கடலுக்குள் வராதீர்கள் என நாங்கள் வலியுறுத்துவது எவ்வாறு தவறாகும். ஆனால் அவ்வாறு நாங்கள் கூறுவது திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு வருகிறது.

1983 க்கு முன்னர் இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் வந்ததில்லை. கடல்வலய தடைச்சட்டம் காரணமாகவே இந்திய மீனவர்கள் வந்து எமது கடல் வளத்தை சுரண்டிச்சென்றனர்.

கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மீது இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. அதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்றனர். அதனை முற்றுமுழுதாக தடுத்த நிறுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக நேர்மையாக குரல்கொடுத்து செயற்படுவதற்கு எமது பிரதிநிதிகளும் தயாராக இல்லை. தத்தமது அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையில் தலையிடுவதோடு சரி. நிலையான தீர்வுக்காக ஒருவரும் துணைநிற்பதும் இல்லை, குரல்கொடுப்பதும் இல்லை. எமது பிரதிநிதிகளே இவ்வாறு இருப்பதன் காரணமாகவே அரசாங்கத்தில் உள்ளவர்களும் வடக்கு மீனவர் பிரச்சினையில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டுவருதற்கு காரணமாக அமைகிறது.

சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. இதுதான் இன்று வடக்கு மீனவர்களாகிய எமது நிலை. எம்மிடையே உள்ள ஒற்றுமையீனமே இதற்கு காரணம். உடனடியாக மீனவர் சமுதாயம் விழிப்படைந்து ஒன்றுபட்டு தீவிரமாக போராட முன்வர வேண்டும். இல்லாவிடில் கடல் வளம் அழிக்கப்பட்டு எமது வாழ்வாதாரமும் இல்லாமல் போகும் என அவர் கூறினார்.

https://akkinikkunchu.com/?p=346534

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

5 days 3 hours ago
சைக்கிளில் வந்த அவர் பாகிஸ்தானில் எல்லை மூடப்பட்டு இருந்ததால் விமானத்தில் இந்தியா டெல்லி வந்து பின்பு சைக்கிளில் நாகப்பட்டினம் வந்து கப்பல் எடுத்து சைக்கிளுடன் காங்கேசன்துறை வந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று!

5 days 3 hours ago
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று! 29 Oct, 2025 | 11:42 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228949

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று!

5 days 3 hours ago

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று!

29 Oct, 2025 | 11:42 AM

image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/228949

மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி

5 days 3 hours ago
மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி 29 October 2025 அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களை ஹமாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டமைக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போர் நிறுத்தத்துக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் உபகரணப் பற்றாக்குறையால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சப்ரா மற்றும் கான் யூனிஸ் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள பணயக்கைதிகளைத் திருப்பி அளிக்கும் முதல் கட்ட ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதில் ஹமாஸ் விதிமுறைகளை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பணயக்கைதிகள் விவகாரத்தில் பதற்றம் நீடிக்கிறது. https://hirunews.lk/tm/427873/war-breaks-out-again-33-palestinians-killed-in-israeli-attack

மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி

5 days 3 hours ago

மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி

29 October 2025

1761709247_4660666_hirunews.jpg

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களை ஹமாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டமைக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போர் நிறுத்தத்துக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் உபகரணப் பற்றாக்குறையால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சப்ரா மற்றும் கான் யூனிஸ் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் உள்ள பணயக்கைதிகளைத் திருப்பி அளிக்கும் முதல் கட்ட ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதில் ஹமாஸ் விதிமுறைகளை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் பணயக்கைதிகள் விவகாரத்தில் பதற்றம் நீடிக்கிறது.

https://hirunews.lk/tm/427873/war-breaks-out-again-33-palestinians-killed-in-israeli-attack

டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

5 days 3 hours ago
டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி! பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451457

டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

5 days 3 hours ago

New-Project-321.jpg?resize=750%2C375&ssl

டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1451457

கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்!

5 days 3 hours ago
கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்! புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி வாடியில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். அதன் பின்னர், மீன்பிடி வாடியிலிருந்த மற்றொரு நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவம் தொட்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451439

செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி!

5 days 3 hours ago
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்கும் இரண்டு சோதனையை நடத்தியது. இருந்தாலும் மழை பொழியவில்லை. டில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பின‍ை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சமயத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த டில்லி அமைச்சரவை முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக மே 7 அன்று டெல்லி அமைச்சரவை மேக விதைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஐந்து சோதனைகளுக்கு ₹3.21 கோடி ஒதுக்கியது – ஒரு முயற்சிக்கு சுமார் ₹64 லட்சம். கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து திட்டமிடப்பட்ட இந்த சோதனைகள் ஆரம்பத்தில் மே மாத இறுதியில் மற்றும் ஜூன் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டன. ஆனால் இரண்டு ஒத்திவைப்புகளை எதிர்கொண்டன: இந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளுக்கும் மொத்தம் தோராயமாக ₹1.28 கோடி செலவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மேக விதைப்பு என்றால் என்ன? மேக விதைப்பு (Cloud Seeding) என்பது — மழை பெய்யும் அளவை அதிகரிக்க செயற்கையாக மேகங்களில் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வானிலை மாற்றுதல் தொழில்நுட்பம் ஆகும். இதில் பொதுவாக வெள்ளி அயோடைடு (Silver Iodide), சோடியம் குளோரைடு (உப்பு), அல்லது டிரை ஐஸ் (Dry Ice – கார்பன் டைஆக்சைடு உறைவு வடிவம்) போன்ற பொருட்கள் விமானங்கள் அல்லது ராக்கெட் மூலம் மேகங்களுக்குள் விடப்படுகின்றன. இவ்வித பொருட்கள் மேகங்களுக்குள் உள்ள நீராவியை துகள்களாக ஒட்டச் செய்து, மழைத்துளிகள் உருவாக வழி செய்கின்றன. அதன் விளைவாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். https://athavannews.com/2025/1451447

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

5 days 3 hours ago
இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி! கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்டத்தரணி நேற்று இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தின் துப்பாக்கிதாரி அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷார செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். அவர் கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். https://newuthayan.com/article/இஷாராவுக்கு_உதவிய__பெண்_சட்டத்தரணியை__விசாரிக்க__CIDக்கு_அனுமதி!

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

5 days 3 hours ago

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

312787659.jpg

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து  விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்டத்தரணி நேற்று இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தின் துப்பாக்கிதாரி அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷார செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். அவர் கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

https://newuthayan.com/article/இஷாராவுக்கு_உதவிய__பெண்_சட்டத்தரணியை__விசாரிக்க__CIDக்கு_அனுமதி!

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

5 days 3 hours ago
ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது. இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451468

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

5 days 3 hours ago

New-Project-323.jpg?resize=750%2C375&ssl

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது.

அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது.

மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.

கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. 

பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது.

"Witness the raw power of nature as a U.S. Air Force pilot navigates through the eye wall of Hurricane Melissa, a Category 5 storm with 185 mph winds sweeping across Jamaica, Haiti, and the Dominican Republic. The accompanying image captures the storm's mesmerizing eye, where life persists amidst the chaos. #HurricaneMelissa #ClimateCrisis #NatureUnleashed"

Image

செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது. 

இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451468

யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை!

5 days 3 hours ago
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை! நாட்டின் டெங்குத் தொற்றின் அபாயம் அதிகளவில் உள்ள பகுதிகளில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்குத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். தற்போது 11 மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாகக் காணப்படுகின்றன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பருவகால மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து 22 மாவட்டகளில் நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்றுள்ளது. https://newuthayan.com/article/யாழில்_டெங்கு_அபாயம்_அதியுச்ச_நிலை!#google_vignette