Aggregator

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி

6 days 21 hours ago
இந்தப்பிக்கு கூட்டத்திற்கு ஒரு தலைமை இருப்பதாக தெரியவில்லை. ஒழுக்கம் இல்லை, பொறுப்புகூறல் இல்லை, கேள்வி இல்லை, கோட்பாடு இல்லை, தண்டனை இல்லை, அதது தன் வயிற்றுக்கு இனவாதம் பேசுது, நிலம் பிடிக்குது, இதற்கு இல்லறத்திலேயே இருந்திருக்கலாம்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

6 days 21 hours ago
பின் எதற்காக அச்சப்படுகின்றீர்கள்? முழு உண்மையும் வெளியில் வர விடுங்கள். இவன் எதற்காக இப்போ பதற்றப்படுகிறான்? இராணுவத்தினுடைய உடல்கள் என்கிறான், ஏன் தோண்டுகிறார்கள் என்கிறான். இராணுவத்தினருடைய உடல்கள் என்றால்; அவர்களின் உறவினர் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லையே? ஒரு இனத்தையே கொன்று புதைத்துவிட்டு, யாசகனின் காயமாம். மக்களுக்கு காருண்யத்தையும் அன்பையும் போதித்து வழிகாட்ட வேண்டிய மதகுரு, அழிவை போதித்து அதை நிஞாயப்படுத்துகிறார். இது என்ன இனமோ? இவற்றைப்பார்க்கும் போது வாழ்க்கையே வெறுத்துப்போகிறது நமக்கு. உலக ஆசையை துறந்து வந்த துறவி பேசுகிற பேச்சா இது? ?

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

6 days 22 hours ago

New-Project-7.jpg?resize=750%2C375&ssl=1

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது.

விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர்.

https://athavannews.com/2025/1437696

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு!

6 days 22 hours ago
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து; 05 பேர் உயிரிழப்பு! தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழுவதையும், உள்ளே தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதையும் காண முடிந்தது. விபத்தினை அடுத்து பலத்த காயமடைந்த பலர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர். https://athavannews.com/2025/1437696

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

6 days 22 hours ago
RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு! ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன். ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தந்து பிரச்சினையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது ”இவ்வாறு அப் பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் குறித்த விவகாரம், இந்திய கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437699

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

6 days 22 hours ago

25-6860cd8f18194.png?resize=600%2C375&ss

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன்.

ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தந்து பிரச்சினையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது ”இவ்வாறு அப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்  கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விவகாரம், இந்திய  கிரிக்கெட் அரங்கில்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437699

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் செலவிடும் டொலர்கள் குறித்து கண்காணிக்க திட்டம்!

6 days 22 hours ago
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் செலவிடும் டொலர்கள் குறித்து கண்காணிக்க திட்டம்! நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திலித் ஜயவீர, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்தாலும், அவர்கள் நாட்டில் செலவிடும் டொலர்களைக் கண்காணிக்க எந்த முறைமையும் இல்லை என்று குறிப்பிட்டார். குறைந்தளவில் செலவிடும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக இலங்கை மக்கள் மீது பெரும் சுமை சுமத்தப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இதன்போது சுட்டிக்காட்டினார். அதன்படி, இதற்கு தீர்வாக உடனடியாக டிஜிட்டல் அடையாள எண் வழங்கப்பட வேண்டும், மேலும் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் செலவினங்களை கண்காணிக்க விரைவில் திட்டமொன்றை வகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1437650

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் செலவிடும் டொலர்கள் குறித்து கண்காணிக்க திட்டம்!

6 days 22 hours ago

Tourists.jpg?resize=700%2C366&ssl=1

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் செலவிடும் டொலர்கள் குறித்து கண்காணிக்க திட்டம்!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திலித் ஜயவீர, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்தாலும், அவர்கள் நாட்டில் செலவிடும் டொலர்களைக் கண்காணிக்க எந்த முறைமையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

குறைந்தளவில் செலவிடும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக இலங்கை மக்கள் மீது பெரும் சுமை சுமத்தப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இதற்கு தீர்வாக உடனடியாக டிஜிட்டல் அடையாள எண் வழங்கப்பட வேண்டும், மேலும் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் செலவினங்களை கண்காணிக்க விரைவில் திட்டமொன்றை வகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1437650

பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

6 days 22 hours ago
சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்! எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோது இந்த விடயத்தைக் கூறினார். வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில், 2011 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு அமல்படுத்தப்பட்டாலும், லொறிகள் மற்றும் பேருந்துகள் சட்டத்தை மீறி வருகின்றன. எனவே, இன்று முதல் பேருந்துகள் மற்றும் லொறிகளுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1437682

பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

6 days 22 hours ago

New-Project-5.jpg?resize=750%2C375&ssl=1

சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்றபோது இந்த விடயத்தைக் கூறினார்.

வீதி விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், அந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2011 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு இந்தச் சட்டம் ஓரளவு அமல்படுத்தப்பட்டாலும், லொறிகள் மற்றும் பேருந்துகள் சட்டத்தை மீறி வருகின்றன.

எனவே, இன்று முதல் பேருந்துகள் மற்றும் லொறிகளுக்கும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1437682

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

6 days 22 hours ago
செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்! “செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் போலியான புகைப்படங்கள் பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்”என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ”செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதுவரையான அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் நேற்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்கு நேரம் எடுக்கும் என்பதால் நேற்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை. சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437671

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

6 days 22 hours ago

ddd.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனித புதைகுழி: போலியான படங்கள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்!

“செம்மணி மனித புதைகுழி தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும்  போலியான புகைப்படங்கள் பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்”என  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ள  சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும்  சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி  அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  போதே அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் ஐந்தாம் நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதுவரையான அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள் தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் நேற்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில் ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்கு நேரம்  எடுக்கும் என்பதால் நேற்று புதிதாக எதுவுமே அடையாளப்படுத்தப்படவில்லை.

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1437671

தெலுங்கானா இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து; 10 பேர் உயிரிழப்பு!

6 days 23 hours ago
தெலுங்கானா இரசாயன தொழிற்சாலை வெடி விபத்து; 10 பேர் உயிரிழப்பு! தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இன்று (30) ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொலிஸாரின் கூற்றுப்படி பாஷமிலராமில் அமைந்துள்ள சிகாச்சி இரசாயன தொழிற்சாலையில் அணு உலை வெடித்ததைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 100 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாகவும், தீப் பரவலை தொடர்ந்து அருகிலுள்ள கூடாரங்களில் பலர் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த பல தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. வெடிப்புக்கான உறுதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. https://athavannews.com/2025/1437612

இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?

6 days 23 hours ago
"ஆதவன்" செய்தித் தளத்தின்.... மில்லியனையும், பில்லியனையும் நாங்கள் முழுதாக நம்பி விட முடியாது. என்றாலும்... மேலுள்ள இடம் கொழும்பு நகரின் மிக முக்கிய பகுதியில் உள்ளதுடன் பிரமாண்டமான கட்டிடத் தொகுதியை பார்க்க பெரும் பொருட் செலவில் கட்டியிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

6 days 23 hours ago
1979 இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னரே ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா கொண்டுவந்தது. ஒருவருடமாக தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பணயக் கைதிகளை ஈரான் விடுதலை செய்தபின்னர் இத்தடைகள் மீளப்பெறப்பட்டபோதிலும், 1980 களின் போது அமெரிக்க மற்றும் பன்னாட்டு கப்பற்போக்குவரத்து மீது ஈரான், வளைகுடா கடற்பரப்பில் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான ஈரானின் உதவிகள் என்பவற்றால் மீளவும் கொண்டுவரப்பட்டன. இத்தடைகள் ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் தனது நடவடிக்கைகளைக் கைவிட மறுத்தமையினால் மேலும் இறுக்கப்பட்டன. இடையிடையே அமெரிக்க அரசுகள் இத்தடைகளைத் தளர்த்திப் பேச்சுக்களில் ஈடுபட்டபோதிலும், ஈரானின் அணுவாயுதக் கனவுத் திட்டத்தை அது முழுமையாக நிறுத்த விரும்பாததனால் தடைகள் தற்போது அமுலில் உள்ளன. அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடாமை, மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கி வருகின்றமை என்பனவே ஈரான் மீதான் பொருளாதாரத் தடைகளுக்கு முக்கியமான காரணங்கள் என்று நினைக்கிறேன். கியூபா மீதான‌ தடைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1950 களின் இறுதிப்பகுதியில் கியூபாவில் ஆட்சியில் இருந்த பட்டிஸ்ட்டா அரசின் சோவியத் மீதான நட்பு, நாட்டினைச் சோசலிசப் பாதையில் வழிநடத்தியமை, கியூபாவில் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றியமை, அமெரிக்க இறக்குமதிகள் மீதான பாரிய வரி, மனிதவுரிமை மீறள்களில் ஈடுபட்டமை, ரஸ்ஸியாவின் அணுவாயுத ஏவுகணைகளை இரகசியமாகக் கொண்டுவந்து அமெரிக்காவை அச்சுருத்தியமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

6 days 23 hours ago
நீங்கள் குறுக்கிடவில்லை அண்ணை. கேட்டதற்காகச் சுருக்கமாக சில பதில்கள். 1950 இல் இடம்பெற்ற கொரிய யுத்தத்துடன் அமெரிக்கா வடகொரியா மீது முதலாவது முறையாக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்திருந்தது. இத்தடைகள் 1980 களின் இறுதிக்காலப் பகுதியில் மேலும் இறுகின. இதற்கு தென்கொரிய தூதரகங்கள், அதிகாரிகள், தென்கொரிய விமானங்கள் மீது வடகொரிய அரசாங்கத்தின் முகவர்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இறுக்கமடைந்தன. ஆனாலும் 1990 களுக்குப் பின்னர் தென்கொரிய அரசுகள் வடகொரியாமீதான தடைகளைத் தளர்த்தி சுமூகமான உறவைப் பேண முனைந்தன. 1994 இல் அமெரிக்க அரசாங்கம் முதல்த் தடவையாக வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்தி அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்போதே வடகொரியா அடுத்தடுத்து நான்கு அணுவாயுதப் பரீட்சிப்புக்களை நடத்தியதுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரீட்சிக்கத் தொடங்கியது. இதனாலேயே அமெரிக்கா மட்டுமே விதித்திருந்த தடைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் மேலும் விரிவாக்கப்பட்டு பன்னாட்டுத் தடைகளாக மாறின. வடகொரியாவுக்கு தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தென்கொரியா போன்று மக்களாட்சியை நடத்தும் சந்தர்ப்பங்கள் பலமுறை வழங்கப்பட்டும், கிம்மின் சர்வாதிகார குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் பகடைகளாகப் பாவித்தும், வடகொரியாவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவே அணுவாயுதம் தயாரிக்கிறோம் என்றும் கிம்மின் குடும்பம் கூறி வருகிறது.

செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்

6 days 23 hours ago
அதற்காகத்தான் இவ்வளவு உறுமலும். அவருக்கு பாராளுமன்ற கதிரை இல்லாமல் இருக்க முடியாது.