Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 452 online users.
» 0 Member(s) | 448 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,121
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,098
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,558
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,264
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,550
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,955
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,339
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,990
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,954
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,221

 
  இது கொழும்பு
Posted by: Guest - 09-13-2003, 03:12 PM - Forum: நகைச்சுவை - Replies (4)

தினக்குரலில் வந்த செய்தி


ஒளிவு மறைவின்றி

ஒரு மண்டபத்தில் நிகழ்ந்த கொண்டாட்டத்தின் போது ஒருவர், இன்னொருவரை நோக்கி, 'தம்பி! இங்கே வாரும். ஆட்கள் நடமாடும் இந்த இடத்தில் இப்பொருட்கள் இருப்பது இடைஞ் சலாக உள்ளது. இவற்றை எடுத்துப்போய் அப்பால் ஒரு மூýலையில் வைத்துவிடும்" என்று வினய மாகக் கேட்டுக்கொண்டார்.

பலரும் பார்த்திருக்க மற்றவர், அங்கு வைக்கப்பட்டிýருந்த பொதிகளை அப்படிýயே லாவகமாக தூக்கிக் கொண்டு போனார்.

கொண்டாட்டத்தின் நடுவில் பலரும் 'ஐயோ! நாங்கள் இங்கு வைத்த பொருட்களைக் காண வில்லையே" என்று அங்கலாய்த்தபடிý தேடுதல் நடத்தினார்கள். பலன் கிடைக்கவில்லை. அவை அங்கு எந்த மூýலையிலும் இல்லை முடுக்கிலும் இல்லை.

அவற்றை எடுத்துச் சென்ற ஆசாமி, வெளியே அப்புறப்படுத்தி விட்டார். பணிப்புரை வழங்கிய பேர் வழியையும் காணோம்.

இருவருமே பக்காத் திருடர்கள்!

கொண்டாட்டங்களின் போது உங்கள் பொருட்களின் மீது கண் வைத்திருங்கள், மிக விழிப்பாக இருங்கள்.

Print this item

  புூக்கள் பேசிக்கொண்டால்
Posted by: Paranee - 09-13-2003, 08:28 AM - Forum: கவிதை/பாடல் - Replies (23)

நளாயினி அக்காவிற்கு
புூக்கள் பேசிக்கொண்டால் கவிதைத்தொகுப்பிற்கு ஒரு வாழ்த்து



வணக்கம், குருவிகளின் தப்பான விமர்சனத்தை இட்டு இங்கு இடப்பட்ட படம் நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் அழகான படத்துடன் உங்களை சந்திக்கின்றேன்.

Print this item

  பாரதிராஜா தமிழக முதலமைச்சராக வேண்டும் ..கனடாவில் வேண்டுகோள்
Posted by: Guest - 09-12-2003, 10:57 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (31)

நன்றி செய்தி புதினம்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா கனடாவுக்கு வருகை தந்துள்ளார்

சங்கீத் வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2003, 18:21 ஈழம்

இவ்வார இறுதியில் ரொறன்ரோவில் இடம்பெறவுள்ள விழாவொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் முகமாக, இயக்குனர் இமயம் பாரதிராஜா கனடாவுக்கு வருகை தந்துள்ளார்.

நேற்று முன்தினம் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தை வந்தடைந்த இயக்குனர், அங்கிருந்து பெருந்திரளான ரசிகர்களிடையே விழா அமைப்பாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று மாலை ரொறன்ரோவில் இயங்கும் வானொலியொன்றுக்குச் சிறப்புப் பேட்டியளித்த பாரதிராஜா, நேயர்களின் அன்பான பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவரோடு விழா அமைப்பாளர்களும், கனடிய இயக்குனர்கள் எஸ். மதிவாசன், கே. சிறீமுருகன் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள்.

இவரது தயாரிப்பில், இவரது மகனைக் கதாநாயகனாகவும் ஈழத்துக் கலைஞர்கள் சிலரை நடிகர்களாகவும் இணைத்து, ஈழப்பிரச்சனை பற்றிய ஒரு யதார்த்தமான திரைப்படத்தைத் தயாரித்து வழங்க வேண்டும் என்று நேயர்கள் கேட்டுக்கொண்டபோது, பாரதிராஜா உணர்ச்சிவயப்பட்ட நிலையில், இதை அவசியம் செய்வதாக ஒத்துக்கொண்டார். ஈழத் தமிழர்களின் இதயங்களில் தனக்கு நிலையான இடம் கிடைத்துள்ளமை கண்டு தான் நெகிழ்ச்சியடைவதாகவும், ஈழத்தமிழர்களின் நேர்மையான அன்புக்கு தான் என்றும் நன்றியுள்ளவன் என்றும் பாரதிராஜா மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ் கலை கலாச்சாரம் பண்பாடு விழுமியங்களை நெறிப்படுத்தி மீண்டும் தமிழ் வாசனை வீசும் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்று நேயர்கள் பாரதிராஜாவிடன் கேட்டுக்கொண்டார்கள். அப்படியான எண்ணமெதுவும் தற்போது தன்னிடம் இல்லை என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் இயக்குனர்.

இன்று மாலை ரொறன்ரோவில் இயங்கும் தமிழ் தொலைக்காட்சிக்குப் பேட்டி வழங்கவுள்ள பாரதிராஜா, நாளை சனிக்கிழமை மாலை ரொறன்ரோவின் நடைபெறவுள்ள சுகந்தமாலை என்னும் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Print this item

  நில்லாமல் வா நிலாவே...!
Posted by: sharish - 09-12-2003, 11:35 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

வணக்கம் அன்புக்குரியவர்களே...

ஒரு புதிய முயற்சியோடு
மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றேன்

கடந்த ஒரு சில நாட்களாக என்னை
உறங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு
சிந்தனைக்கு...
என் கண்ணெதிரே சிறு அரும்பாக
துளிர்விடும் ஒரு காதல் (க)விதைக்கு....
மொழிவடிவம் கொடுக்கத் துடித்தேன்..!
அதுதான் இந்த '''நில்லாமல் வா நிலாவே...!""""
இது ஒன்றும் """கண்மணிக்குள் ஒரு காதல்""" போல்...
என் கிராமத்தின் ஒரு காலகட்ட சுயசரிதையோ...
அல்லது ஒரு காலத்தின் பதிவோ அல்ல
இது ஒரு...
காதல் கல்வெட்டு...!

இந்த உலகத்தை இன்னும் உயிரோடு வைத்திருக்கும்
காரணிகளில் காதலும் ஒன்று
இதோ.....
அந்த உயிர்கொடுக்கும் மிகநீண்ட காதல் நதிக்காக...
என்னால் முடிந்த ஒரு மிகச்சிறிய துளி...!

இந்தத் தொடர்....
வாரா வாரம்தான் வரும் என்ற வரையறைக்கு உட்பட்டதல்ல
இதன் அடுத்தடுத்த பாகங்கள் நினைத்த நேரத்தில் வரும்
அதாவது......
எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கின்றதோ...
அப்போதெல்லாம் இந்த நிலவும் வரும்

அன்பானவர்களே....
இந்தப் படைப்பிற்கான விமர்சனங்களை
உங்களிடமிருந்து எதிர்பாற்கின்றேன்
நீங்கள்...
பிழையேதும் இருப்பின் அலைபோல் எழுந்து வரலாம்
சரியாக திருத்திக்கொள்ளவும் அழகாக செதுக்கிக் கொள்ளவும்
நான் சம்மதம்.


என்றும் அன்புடன்....
த.சரீஷ்

----------------------


<b><span style='font-size:25pt;line-height:100%'>
நில்லாமல் வா
நிலாவே...!</span>

[b]<i>பகுதி-01</i></b>


யார் அவள்...?
யோரோ ஒரு
காந்தக்கண் தேவதை
என் கண்ணெதிரே வந்து
வண்ணமுகம் மலர்த்தி
''வணக்கம்'' என்றுசொல்லி
கண்சிமிட்டிப் பார்த்து
கைகலுக்கிப்பேசுகிறாள்...!!?

அவள் உதடுகளின்
அழகும்... அசைவும்...
என் உயிரை ஒருமுறை
உலுக்கி... உரசியது
விழிகளின் அற்புத நடனம்
மனதை நனைத்து...
ஈரமாக்கியது
வட்டநிலா முகம்
நனைந்த மனதில்
அலைபோல் வந்து
அடிக்கடி மோதிச் சென்றது

யார் அவள்...???
அறிந்துகொள்ளுமுன்னமே
அவசரமாய் கண்முளித்தேன்...!!!

ஓ.....
இது கனவா...?
அவள்...
கனவிலே வந்த
கறுப்பு நிலவா...?

ம்........
இன்றைய இரவு
கனவோடும் நிலவோடும்
முடிந்தது...!
ஏன் இன்றுமட்டும்
விரைவில் விடிந்தது..?
ஏன் என் கனவு
இடையில் கலைந்தது..?

எரிச்சலுடன்...
விடியலைப்பார்க்க
விரும்பாதவனாய்....
கடிகாரம் பார்த்தேன்
அ...ய்....யோ..........
ஏழு மணியாச்சு..!
சொல்லிக்கொண்டே
குளியலறைக்கு ஓடினேன்

இன்று எனக்கு
புதிய வகுப்பு ஆரம்பம்
ஆசிரியர் புதியவர்
சில மாணவர்கள் புதியவர்கள்
புதிய அனுபவம் என்பதனால்...
ஆறுமணிக்கே ""அலாரம்"" வச்சு
ஆசையோடு பள்ளிசெல்ல
திட்டமிட்டிருந்தேன்

ஆனால்...
முன்னறிவித்தலின்றி
திடீரென்று வரும்
மழைபோல்...
திடீரென்று வந்த
கனவு...
தந்த மயக்கத்தால்
நிலவு...
சொன்ன வணக்கத்தால்
காலை
விடிந்ததே தெரியாமலா..?

பதறியடிச்சு
அவசரமாய்த் தயாராகி
தாமதமாக
வகுப்பறைக்குச் சென்று
கதவைத் தட்டிக்கொண்டே
உள்ளே நுளைந்து
முதலில்...
வணக்கம்
என்பதற்குப் பதிலாக
மன்னியுங்கள்
என்று சொல்ல...
ஒரு வினாடி
எல்லோர் முகங்களும்
என்பக்கம் திரும்பியது

அவசரமாய்ப்போய்...
ஆசனத்தில் அமர்ந்தபடி
சக மாணவர்களை
கடைக்கண்ணால்
ஒரு சுற்றுச் சுற்றி வந்தேன்

சிலர் ஏற்கனவே
தெரிந்த முகங்கள்
சிலர் என் நண்பர்கள்
பலர் தெரியாத
புதிய முகங்கள்
ஆவலோடு
சுழன்றுகொண்டிருந்த
என் கண்கள்
அசையாமல்
அப்படியே நின்றது...!
இது என்ன அச்சரியம்...?
ஆனால் உண்மை
புதியவர்கள் பட்டியலில்
அதோ...
கனவில் வந்த
கறுப்பு நிலா...!!!
இதோ....
பகலில் வந்த
புது நிலவாய்
நினைவில்தான்.....
நம்புங்கள்
நிஜமாய் என்...
கண்எதிரே...!!!

(நிலவு வரும்...)

த.சரீஷ்
11.09.2003 (பாரீஸ்)

Print this item

  LONDON
Posted by: sethu - 09-12-2003, 10:51 AM - Forum: புலம் - Replies (98)

இலண்டனில் நடப்பது என்ன?
அனைவரும் இதனை அறியவேண்டும் எண்டதற்காக இதனை இங்கு எளுதுகிறேன்.

இலண்டனில் தமிழ் இழைஞர்கள் பலர் பல வகையான மோசடிகளை செய்து பணம் சம்பாதித்து வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.
கடந்த வெள்ளிக்கிளமை இலண்டன் குறைடன் பகுதியில் மட்டும் சுமார் 25 தமிழ் இழைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மட்டும் ஈஸ்ற்காம் பகுதியில் மட்டும் 16 தமிழ் இழைஞர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் வீட்டு முற்றத்தில் தாட்டுவைத்திருந்த கள்ள கிறடிட் காட் மற்றும் தமது வீட்டு காப்பெற்றுக்குள் தாட்டு வைத்திருந்த கிறடிட் காட் உட்பட 600 க்கு மேற்பட்ட கள்ள கிறடிட் காட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல்................................
வடிவான தமிழ் பெண்களை கடத்துதல் வேலை முடிந்து வீடுதிரும்பும் தமிழ் குடும்பத்தரை கட்டாயப்படுத்தி கடத்திச்செண்று அவர்களின் வங்கி அட்டையில் பணத்தை எடுத்துவிட்டு அவர்களை அனாதரவாக வெட்டைவெளியில் இறக்கிவிடுதல்.
கத்திவெட்டு கொலைகள் போன்றவற்றில் இடுபடுதல் போன்றவற்றையும் செய்துவருகின்றனர் தமிழ் இழைஞர்.



பழைய முத்த தாயக மக்களுக்கு தெரியும் டீ ஜ யி பாஸ்கர லிங்கத்தை இவர் இலங்கையில் சேவையாற்றி பின்னர் இன்ரபோலுக்கு சேவையாற்றி வந்தவர்.
இவரை கனடா அரசு வரவளைத்து குத்தகை அடிப்படையில் கனடாவில் தமிழர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை கொடுத்தது.
கனடாவில் இருந்த பல ஆயுத தமிழ் கும்பலை வேரோடு பிடுங்கி சாதனைபடைத்தவர் இதற்காக கனடா அரசினால் கௌரவிக்கப்பட்டவர்.
இதன்பயனாக கனடாவில் புலிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவும் பல தமிழ் இழைஞர்கள் நாடுகடத்தப்படவும் கரணமாக அமைந்தவர்.
இவர் தற்போது இன்ரப்போல் அதிகாரியாக கடமையாற்றுவதுடன் பிறான்ஸ் பாரீசில் சேவை செய்து வந்தவர். பாரிசில் குற்றச்செயல்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பெருமை இவரைச்சாரும்.

தற்போது பிரத்தானிய அரசு இவரை விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இவரின் சொந்த இடம் தீவகம். இவரின் தலைமையில் பிரித்தானிய அரசு ஒரு விசேட பொலிஸ் குளவையும் பிறாஞ்சில் இவருடன் வேலைசெய்த ஒரு அதிகாரியின் பெயரில் இன்னொரு குளுவையும் தற்போது கொடுத்து தமழர்கள் களைப்படுகின்றனர்.
சுமார் வெற்றிகரமாக இதுவரை 680 தமிழர்கள் வரை கள்ள மட்டை கஞ்சாவியாபர மோசடி மேலும் கொலை குற்'றம் போன்றவற்றிற்காக கைது செய்துள்ளனர்.

இவை அனைத்தும் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களின் உதவியுடன் இன்னும் 1000 இழைஞர்கள் கைது செய்யப்படவும் உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஸ்எகாட்லன் யாட் கவனித்துவருகின்றது.
இந்த தமிழன் பிரித்தானிய அரசிற்கு ணரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் மக்களின் சேட்டைகளுக்கு ஒரு முடிவு கட்டி விடுவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இவற்றில் இருந்து தமிழர் தப்பி வாளும் நாள் எப்போது வரும் என அனைவரும் ஏங்கி நிற்கின்றோம்.

Print this item

  வைரஸ்
Posted by: இனியவன் - 09-12-2003, 08:22 AM - Forum: கணினி - No Replies

Microsoft இல் இருந்து வருவதாக ஒரு மின்னஞ்சல் மூலம் வைரஸ் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பாவிக்கும் வின்டோசில் பிழை இருப்பதாகவும் இத்துடன் வரும் patch.exe என்னும் பெயரினைக் கொண்ட File இனை run பண்ணும்படியும் அம்மின்னஞ்சல் தகவலினைக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மின்னஞ்சலினை உடன் அழித்துவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீழே படம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  வின்டோஸ் NT, 2000, XP பாவிப்பவர்கள் கவனத்திற்கு
Posted by: இனியவன் - 09-12-2003, 08:03 AM - Forum: கணினி - Replies (5)

வின்டோஸ் NT, 2000, XP ஆகிய OS வகைகளில் பாரதூரமான பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிழையினை உடனடியாக பின்வரும் தளத்திற்குச் சென்று Patch file இனைத் தரவிறக்கமு; செய்து நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். இதனை நீங்கள் செய்யாதுவிடின் உங்கள் கணணியில் இன்னொருவர் புகுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டென அறிவிக்கப்பட்டுள்ளது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

http://www.microsoft.com/technet/security/...in/MS03-039.asp

95, 98, ME பாவிப்பவர்கள் இதுபற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Print this item

  World Trade Center
Posted by: Chandravathanaa - 09-11-2003, 11:52 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (5)

<img src='http://www.selvakumaran.de/padam/welt.jpg' border='0' alt='user posted image'>

[b]nantri - NATCA

Print this item

  Japan decides to host Tokyழ...
Posted by: Mathivathanan - 09-10-2003, 08:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

[size=18]Japan decides to host Tokyo follow-up meeting without LTTE
Wednesday, September 10, 2003, 11:19 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
We note with concern, however, activity and decisions by the Tamil Tigers that is undermining confidence in the peace process at this critical juncture."
Sept 10, Colombo: Japan, the biggest single donor for Sri Lanka, yesterday decided to host the Tokyo follow-up meeting in Colombo without the LTTE's participation, the Japanese Embassy here said.

Japan on Tuesday warned the LTTE that it was undermining hopes for peace, with talks on a permanent settlement between the government and rebels still in a deadlock.

We note with concern, however, activity and decisions by the Tamil Tigers that is undermining confidence in the peace process at this critical juncture," a Japanese embassy spokesperson told ColomboPage.

The follow-up meeting of the Tokyo donor conference scheduled for September 12 will go on as planned despite the LTTE's threat to boycott.

We already sent invitation to the LTTE but unfortunately they are not coming, the spokesperson added.

The LTTE boycotted the Tokyo aid conference in early June also, but the government nevertheless managed to get 4.5 billion US dollars from the international donors.

http://www.colombopage.com/archive/Septemb...10111940RA.html

Print this item

  விசித்திரமான படங்கள்!!!
Posted by: இளைஞன் - 09-10-2003, 05:26 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (172)

வணக்கம் நண்பர்களே...

உங்களிடம் உள்ள விசித்திரமான படங்களை, கணணியின் மூலம் அமைக்கப்பட்ட (grafic) படங்களை இங்கே இணையுங்கள். படத்தின் அளவினை இணையத்தளத்திற்கு ஏற்றவகையில் குறையுங்கள்.

எனது இன்றைய இணைப்பு:

<b>HiTec பிள்ளையார் யாழ் இணையம் பார்க்கிறார்</b>
இணையத்திலிருந்து பெறப்பட்டு, நண்பியொருவர் மூலம் கிடைக்கப்பெற்றது. நன்றிகள் அவர்க்கு!!!

Print this item