| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 426 online users. » 0 Member(s) | 424 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,080
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| 15,000 பேர் சாவு! |
|
Posted by: yarlmohan - 12-28-2004, 01:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
15,000 பேர் சாவு!
கிடந்து அழுகும் சடலங்களால் சுகாதாரப் பாதிப்பு;
போதிய நிவாரண உதவிகள் இன்றி மக்கள்
நாட்டின் கரையோரப் பிரதேசத்தில் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய சுனாமி கடற்கொந்தளிப்பில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு வரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களின் நூற்றுக்கணக்கான சட லங்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக் கிடக் கின்றன. பல்வேறு இடங்களில் அநாதரவான நிலையில் கிடக்கும் சடலங்கள் பல அழுகி வரு கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. அவற்றை மீட்டு அடக்கம் செய்வதற்கான நட வடிக்கைகள் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தும் நடந்தன. மீட்கப்படாது கிடந்து அழுகும் சடலங்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற் பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப் படுகின்றது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் காயம டைந்துள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து தவிக்கிறார் கள். பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் அவர்கள் தஞ்சமடைந்துள்ளார்கள். அவர்க ளுக்கு அவசர நிவாரண உதவிகள் வழங்கப் படுகின்றன.
பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் தாக் கம் இன்னும் அடங்கியபாடாக இல்லை. மீண் டும் ஒருமுறை இந்திய, இலங்கைக் கரையோ ரப் பிரதேசத்தை அது தாக்கும் சாத்தியக்கூறு கள் இருக்கின்றன என்று இந்திய புவியியல் அவதானிகள் அறிவித்துள்ளனர். இதனால் கரையோரப் பிரதேசங்களில் தொடர்ந்தும் பதற் றம் நிலவுகின்றது. மக்கள் இடம்பெயர்ந்து வரு கின்றனர்.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்குக் கரையோரத்தை முதல் பேரலை தாக்கியது. தொடர்ந்து பல அலைகளின் தாக்க மும் உணரப்பட்டது. நேற்றும் சில அதிர்வுகள் கிழக்கில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
"துறைமுக அலை' என்ற அர்த்தம் கொண்ட இந்த சுனாமி கடற்கொந்தளிப்பு கரையோரப் பிரதேசத்தை ஈவுஇரக்கமின்றித் தாக்கியதில் இலங்கையில் வரலாறு காணாத மனிதப் பேர வலம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், மணித்தியாலத் துக்கு மணித்தியாலம் என்ற ரீதியில் அதிகரித்து வருகின்றது.
நேற்றிரவு வரை 13 ஆயிரத்து 390 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. மேலும் பலரைக் காண வில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமற்போனவர்களில் மீட்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டவர்கள் தவிர ஏனையவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பெரியளவில் இல்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகள் நேற்று முழுவீச்சில் இடம் பெற்றன. சடங்குகளோ கிரியைகளோ செய்வ தற்கு நேரமோ வசதியோ இல்லை என்பதால் பல நூற்றுக்கணக்கான சடலங்கள் உறவினர் களின் அஞ்சலிக்குப் பின்னர் அடக்கம் செய் யப்பட்டன. பல இடங்களில் நூற்றுக்கணக்கான சடலங்கள் ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட் டன.
பெருக்கெடுத்த கடல் அலை கரையோரக் கிராமங்களை அள்ளிச் சென்றதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த அனைவருமே உயிரிழந்த பரிதாபங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் வைத்தியசாலைகளில் பல சடலங்கள் அடை யாளம் காணப்படாத நிலையில் கிடக்கின்றன. அவற்றைத் தொண்டு அமைப்புக்களும் மீட்புப் பணியாளர்களும் அடக்கம் செய்துவருகின்ற னர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் போதியளவில் சென்று சேர்வதிலும் சிக்கல்கள் எதிர்கொள்ளப்படுவதாகத் தெரிவிக் கப்படுகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்றுவரை அரச உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அரசசார்பற்ற அமைப் புக்களும் விடுதலைப் புலிகளும் தமிழர் புனர் வாழ்வுக் கழகமும் இந்த நிவாரண உதவி களை வழங்கி வருகின்றன. சில இடங்களில் அரச அலுவலகங்களும் கடற்கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளன.
பெரும் எடுப்பில் மீட்புப் பணி மேற்கொள் ளப்படவேண்டியுள்ளது. துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்படு கின்றது.
உறவுகளையும் உடைமைகளையும் வாழ் விடங்களையும் இழந்து உதவிகளும் இன்றி நிர்க்கதியாகத் தவிக்கும் மக்களுக்கு யார் ஆறு தல் சொல்வது என்று தெரியாத நிலையில் வடக்கு - கிழக்கு எங்கும் சோகமயமாகக் காணப்படுகின்றது. வன்னியில் கறுப்புக் கொடி கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
நேற்றுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,600 பேரும் வடமராட்சி கிழக்கில் 2,000 பேரும் வடமராட்சியில் 100 பேரும் மட்டக் களப் பில் 1,200 பேரும் திருகோணமலையில் 800 பேரும் தெற்குக் கரையோரப் பிரதேசங் களில் 3,000 இற்கும் அதிகமானவர்களும் அம்பாறையில் 1,500 இற்கும் அதிகமானவர் களும் உயிரிழந்துள்ளனர் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 2,000 பேர் வரையிலா னோர் காணாமற்போயுள்ளனர் என்று தெரி விக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் 6,000 பேர் வரையிலானோரைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட் டத்தில் ஐந்து கிராமங்கள் முற்று முழுதாக அழிந்துள்ளன. தெற்கு மாவட்டங்களில் 10,000 பேர் வரையிலானோரைக் காணவில்லை என்றும் கூறப் படுகின்றது.
மட்டக்களப்பு, பொலன்னறுவை, திரு கோணமலை மற்றும் அம்பாந்தோட்டை பிர தான வீதிகள் என்பன சேதமடைந்துள்ளன. இதனால் இந்த மாவட்டங்களுக்கான போக்கு வரத்துக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
உதயன்
|
|
|
| தாயகத்திலிருந்து நேரஞ்சல் |
|
Posted by: ஊமை - 12-28-2004, 11:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இயற்கையின் சீற்றத்தால் அழிந்துபோயுள்ள எமது தாயக கரையோரப்பகுதிகளை ரீரீஎன் தொலைக்காட்சி தமிழீழத்தில் இருந்து இன்று நேரஞ்சல் செய்கிறது.
நேரஞ்சல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக TTn அறிவித்துள்ளது.
|
|
|
| 26 நாடுகள் வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத இந்தியா ! |
|
Posted by: ஊமை - 12-28-2004, 10:30 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
கடல் கொந்தளிப்பை உண்டாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும் சுனாமி அலைகளை சாதாரண கருவி களால் கண்டுபிடிக்க இயலாது. அமெரிக்கா இதை கண்டுபிடிக்க நவீன கருவிகளை வைத்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அந்த கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் சுனாமி அலை கொடூரத்தில் இருந்து அமெரிக்கா தன் மக்களை பாதுகாத்துக் கொள்கிறது.
அமெரிக்கா போன்று ஜப்பான், இந்தோனேசியா, கனடா உள்பட பல நாடுகள் சுனாமி அலை கண்டுபிடிப்பு கருவிகளை வைத்துள்ளன. மேலும் இந்த 26 நாடுகளும் சுனாமி பற்றிய தகவல் எப்போது கிடைத்தாலும் ஒருவருக்கொருவர் தெரிவித்து உஷார் படுத்திக்கொள்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலிலும் சுனாமி அலைகள் தோன்றலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுனாமி ஆபத்தில் உள்ள 26 நாடுகளும் தங்கள் அமைப்பில் சேர்ந்து கொள்ளும்படி தெரிவித்தன.
அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் சுனாமி ஆபத்தை கூறி இந்தியாவை வலியுறுத்தின.
கனடாவில் சுனாமி பற்றிய ஆய்வை இந்தியரான மூர்த்தி என்பவர் செய்து வருகிறார். அவர் இந்திய அரசை தொடர்பு கொண்டு சுனாமி அலைகளை கண்டுபிடிக்கும் கருவிகளை இந்தியா வைத்து இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
பல தடவை அவர் உஷார் படுத்தியும் இந்திய அரசு எதையும் கண்டுகொள்ள வில்லை. நவீன கருவிகளை வாங்கி நிறுவ எங்களிடம் போதுமான பணம் இல்லை என்று கூறி மத்திய அரசு கை விரித்து விட்டது.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல இப்போது சுனாமி எச்சரிக்கை கருவிகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கருவிகள் அமெரிக் காவிடம் இருந்து வாங்கப்படு கின்றன.
இதுதவிர சுனாமி ஆபத்தை அறியும் 26 நாடுகள் குழுவில் இடம் பெறவும் மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய அறிவியல் துறை ராஜாங்க மந்திரி கபில்சிபல் அறிவித்துள்ளார்.
|
|
|
| தமிழகம், புதுவையை கடல் கொந்தளிப்பு மீண்டும் தாக்கலாம் ! |
|
Posted by: ஊமை - 12-28-2004, 10:12 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளை தாக்கி பெரும் நாசத்தை விளைவித்த கடல் கொந்தளிப்பு அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!
தெற்காசியாவில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய கடல் கொந்தளிப்பிற்கு காரணமான சுமத்ரா அருகே ஏற்பட்ட நிலநடுக்கப் பகுதியில் மேலும் 15 முதல் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அதேபோல, அந்தமான், நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை கடற்பகுதிகளில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் சென்று குடியேறவேண்டாம் என்றும், கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6-க்கும் அதிகமாக இருந்தால் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய வானியல் ஆய்வுத்துறையும் இதேபோன்றதொரு எச்சரிக்கையை டெல்லியில் விடுத்துள்ளது. நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மீண்டும் தாக்கும் அபாயம் இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலிற்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
|
|
|
| நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்! |
|
Posted by: ஊமை - 12-28-2004, 10:09 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்!
செவ்வாய், 28 டிசம்பர் 2004
தெற்காசிய நிலநடுக்கத்தாலும், கடல் கொந்தளிப்பாலும் கடுமையான பாதிப்பிற்குள்ளான பெரிய நிக்கோபார் தீவை நேற்று நள்ளிரவு மேலும் ஒரு நிலநடுக்கம் தாக்கியது!
நேற்று இரவு 11.10 மணிக்கு தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமத்திய ரேகையிலிருந்து 6.1 டிகிரி வடக்கும், தீர்க்காம்ச ரேவை 92.2 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் இருந்தது. இவ்விடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் மையப் பகுதிக்கு அருகில் உள்ளது.
அதன் பிறகு நள்ளிரவு 2.6 நிமிடத்திற்கு மற்றொரு நிலநடுக்கம் நிக்கோபர் தீவைத் தாக்கியது. அதன் மையம் 9.3 டிகிரி வடக்கும், 93.3 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில இருந்தது. இத்தகவல்களை இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரைக் கிட்டவில்லை.
நிக்கோபாரில் இதுவரை 4,000 பேர் பலி!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கார் நிக்கோபார், பெரிய நிக்கோபார் ஆகிய தீவுகளைத் தாக்கிய கடல் கொந்தளிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000த்தைக் கடந்துவிட்டது. சற்றேரக்குறைய 5,000 பேர் வரை காணவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
| விசேட அதிரடி செயல் படை |
|
Posted by: ஊமை - 12-28-2004, 09:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் திங்கட்கிழமை கிளிநொச்சியில் திட்டமிடல் அபிவிருத்தி செயலகத்தில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டினார். சுனாமி கடல்கொந்தழிப்பு அனர்த்தங்களை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறுத்தினார். ஒரு செயலாற்று குழுவையும் ஒரு விசேட அதிரடி செயல் படையையும் அமைக்க யோசனை தெரிவித்தார். இவை திட்டமிடல் அபிவிருத்தி செயலகத்தின் கீழ் இயங்கும். மாவட்ட செயலாளர்கள் சர்வதேச அரசுசாரா அமைப்புக்கள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளூர் அரசுசாரா அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் திட்டமிடல் அபிவிருத்தி செயலகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இவற்றில் இடம்பெறுவார்கள்.
நீண்ட ஆலோசனைகளின் பின்னர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளின் சிக்கலான தன்மைகளை கருத்தில் கொண்டு இரண்டு அதிரடி செயல் படை பிரிவுகளை அமைக்க முடிவாகியது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவிற்கு அண்மையில் முள்ளியவலையில் ஒன்றும் மற்றொரு மிக மோசமாக பாதிக்கப்பட்ட கரையோர கிராமமான தாளயடிக்கு அண்மித்ததாக ஏ9 நெடுஞ்சாலையில் புதுக்காடு சந்தியில் மற்றையதுமாக இந்த அதிரடி செயல் படை பிரிவுகள் அமைக்கப்படும்.
இந்த அதிரடி செயல் படை பிரிவுகள் செவ்வாய்க்கிழமை காலை 9மணிக்கு புதுக்காடு சந்தியிலும் பிற்பகல் 2மணிக்கு முள்ளியவளையிலும் கூடி தமது நடவடிக்கைகளை திட்டமிடுவது என்று முடிவாகியது.
இதேபோன்று திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் செயல்முறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் ஆராயப்படும்.
அதிரடி செயல் படையில் விடுதலைப் புலிகளின் திட்ட அபிவிருத்தி செயலக பிரதிநிதி ஒருவர்ää மாவட்ட செயலாளர்ää அந்த மாவட்டத்தின் திணைக்கள தலைவர்கள் மாவட்ட அரசியல் பிரிவின் தலைவர் நிர்வாக தலைவர் விடுதலைப் புலிகளின் சுகாதார சேவையின் தலைவர் சர்வதேச அரசுசாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் மாவட்ட ஒன்றிய பிரதிநிதி ஆகியோர் பங்காற்றுவர்.
ஏற்கனவே நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றி இந்த கூட்டத்தில் யாழ் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட செயலர்கள் தமிழர் புனர்வாழ்வு கழகம்ää சர்வதேச மற்றும் உள்@ர் அரசுசாரா அமைப்புக்கள் என்பவற்றில் பிரதிநிதிகள் எடுத்துறைத்தனர். வவுனியா மாவட்டம் நேரடியாக பாதிக்கப்படாத போதிலும் இந்த மாவட்ட செயலர் அங்கு பிரசன்னமாக இருந்தார். முல்லைத்தீவுக்கு தொலைபேசி இணைப்பு இல்லாத நிலையிலும் கிளிநொச்சியின் தொலைபேசி தொடர்பு இயங்காத நிலையிலும் பல நிர்வாக அமைப்புக்களுக்கும் அரசுசாரா அமைப்புக்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பணிகளை வவுனியாவில் இருந்து அவர் மேற்கொள்கின்றார்.
தற்போது பொது கட்டடங்களில் தற்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி தேவைகளாக குழந்தைகளுக்கான பால்மா ஆடைகள் போர்வைகள் படுக்கை விரிப்புக்கள்ää பாய்கள்ää உலர் உணவுகள் குடிநீர் மலசலகூடம் அவசர மருந்துகள் என்பன அடையாளம் காணப்பட்டன.
இடம்பெயர்ந்தும் காயமுற்றும் உயிரிழந்தும் காணாமல்போயும் உள்ளவர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் இல்லாமை குறித்து சர்வதேச அரசுசாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள் கவலைப்படுகின்றனர். திங்கட்கிழமை மதியம் வரை சேகரிக்கப்பட்ட விவரங்களின் பிரகாரம் முல்லைத்தீவில் 772 சடலங்களும் தாளயடியில் 600 சடலங்களும் மீட்கப்பட்டதாக ஓரளவுக்கு கணிக்கப்பட்டுள்ளன. கட்டடங்களுக்குள் சிக்கியிருக்க கூடிய சடலங்களை உதவி பணியாளர்கள் தேடிவருகின்றனர்.
இடம்பெயர்ந்தும் காயமுற்றும் உயிரிழந்தும் காணாமல்போயும் உள்ளவர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை திரட்டுவதற்கான பிரிவொன்றை விசேட அதிரடி செயல் படை அமைக்கும்.
|
|
|
| த.வி.புலிகளின் தொலைபேசி செய்தி தொகுப்பிலிருந்து...... |
|
Posted by: ஊமை - 12-28-2004, 09:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வரலாற்றுப் போரழிவு என்று சொல்லத்தக்கவகையில் தமிழர் தாயகத்தில் இயற்கை மேற்கொண்ட அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழிப்பு பத்தாயிரத்தை தாண்டிவிட்டிதாக தற்போது கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள உடலங்களை வைத்தே இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுவதும் 13 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று அரசு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக 1600 பேர் உயிர் இழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது இதுவரை கண்டெடுக்கப்பட்ட 800 சடலங்கள் இன்று முள்ளியவளை மயானத்தில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் 25 ஆய்pரம் மக்கள் இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் கடல் கொத்தளிப்பு காரணமாக 15 போராளிகள் சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
இன்று மாலை ஆறு மணிவரை முல்லை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 772 சடலங்களும் வடமராட்சி கிழக்கு பகுதயில் 281 சடலங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 722 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் இன்று மாலையும் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தமிழர் தாயகம் எங்கும் வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இடம்பெற்றிருக்கும் பேரழிவுகளினால் மக்கள் தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர் என்று தமிழ் ஈழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களிடம் இருந்து உதவிகள் எதுவும் இதுவரை கிட்டாத நிலையில்ää அவதியுறும் ஈழத் தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளின் போராளிகள்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர் என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் மற்றும் மன்னாரில் இன்று பெருமழையுடன் புயல் காற்று வீசியுள்ளது. எனினும் பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. தமிழகத்தின் தென் பகுதியில் பெய்த பெருமழைää புயலின் எதிரொலியாகவே தலைமன்னார் கடலோரம் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதியிலும் இன்று முழுவதும் சீரற்ற கால நிலை நீடிக்கிறது
மட்டக்களப்பில் இன்று மாலை வரை 796 சடலங்கள் மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பல சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாவியில் மட்டும் இன்று 15ற்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்து கரை ஒதுங்கியுள்ளன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் 25க்கும் மேற்பட்ட சடலங்கள் அப்பகுதி மக்களினால் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டன.
இதேவேளை அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பில் ஞாயிறு அறநெறி பாடசாலை மாணவர்கள் 70 பேர் வரை ஆசிரியையுடன் கடலில் அடித்துச்; செல்லப்பட்டுள்ளனர்.
திருக்கோணமலை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக பல ஆயிரக்கணக்காண மக்கள் வீடுவாசல்களை இழந்ததோடு பல நூற்றுக்கணக்கானோர்இறந்துள்ளனர். மூதூரில் 6000 குடும்பங்களும். கிண்ணியாவில் 6800 குடும்பங்களும். பட்டணமும் சூழலும் பகுதியில் 12ää000க்கும் அதிகமான குடும்பங்களும்ää குச்சவெளி பிரதேசத்தில ;4500 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 211பேரும்ää கிண்ணியாவில் 229 பேரும்ää திரு;கோணமலையில் 18 பேரும்ää நிலாவெளி பிரதேசத்தில் 35 பேரும்ää உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக பாதிப்புற்ற பகுதிகளை விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை கட்டளைத் தளபதி கேணல் பானு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
அத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கேணல் பானு மேற்கொண்டார். இவருடன் மாவடி முன்மாரிக் கோட்ட இராணுவத் தளபதி ரமணன் உட்பட பலர் சென்றிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவலடிää கல்லடிää காத்தான்குடி ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் சென்றிருந்தனர்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளை சென்று பார்வையிட்டார்.
கரையோர கிராமங்களிலிருந்து வெளியேறியுள்ள மக்களில் 75 ஆயிரம் பேர் வரை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் மாவட்ட தளபதி ராம் தெரிவித்தார்.
50க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்களிலும்ää தனியார் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டு இவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ராம் தெரிவித்தார்.
|
|
|
| சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது |
|
Posted by: ஊமை - 12-28-2004, 08:50 AM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
<img src='http://img135.exs.cx/img135/5531/c1876pyall0lq.jpg' border='0' alt='user posted image'>
நாகை, டிச.28- நாகை-வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக காட்சியளிப்பதால் கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீனவர் குடியிருப்புகள் அடியோடு அழிந்துவிட்டன. மீட்பு பணிகள் மந்தமாக நடப்பதால் மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகிறhர்கள்.
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் பூகம்பத்தின் பாதிப்பினால் தமிழகத்தில் வங்கக் கடலில் நேற்று முன்தினம் காலை கொந்தளிப்பு ஏற்பட்டதல்லவா. இந்த கொந்தளிப்பினால் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து குமாp வரை கடலோர கிராமங்கள் கடும் பாதிப்புக்குள்ளாயின. கடல் அலை ஒரு பனை மரம் உயரத்திற்கு மேல் எழும்பி ஊருக்குள் புகுந்ததால் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்ததாக செய்திகள் வந்த வன்னம் இருக்கின்றன.
இந்த பூகம்பம்-கடல் கொந்தளிப்பினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது நாகை மாவட்டம் தான் நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணியிலிருந்து 9 மணி வரை கடல் கொந்தளித்து ஊருக்குள் புகுந்தது. இதனால் நாகை கடற்கரையோர மீனவர் குடியிருப்புகள் அடியோடு அழிந்து விட்டன என்றே கூறலாம்.
பொதுவாக கொள்ளிடம் கரையிலிருந்து வேதாரண்யம் கரை வரை மீனவர் குடியிருப்புகள் கடலில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்திலேயே அமைந்து இருந்தன. மீனவர்கள் அந்த குடிசை வீடுகளில் தங்கி இருந்து மீன் பிடிக்க செல்வது வழக்கம். நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கீச்சாங்குப்பம், அந்தனப்பேட்டை அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர் உள்பட 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 10 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தனர். இதை தவிர தற்போது மீன் பிடி சீசன் என்பதால் வெளிமாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக தங்கி இருந்து மீன் பிடி தொழில் செய்தவர்களும் இதில் அடங்குவர்.
பிணக்குவியல்கள்
நேற்று முன் தினம் கடல் கொந்தளித்த போது இந்த குடியிருப்புகளுக்குள் கடல் நீர் குபீர் என புகுந்ததால் பெண்கள், குழந்தைகள் உயிர் தப்பிப்பதற்காக அங்கும், இங்குமாக ஓடினர். ஆனால் 10 அடி உயரத்திற்கும் அதிகமாக தண்ணீர் சூழ்ந்ததால் அவர்களால் எங்கும் தப்பி செல்ல முடியவில்லை. குழந்தைகள் மூச்சி தினறி செத்தனர். குடிசைகள் அப்படியே விழுந்து அமுக்கியதாலும் வெளியே வரமுடியாமல் பலர் உயிர் இழந்தனர்.
இதனால் நாகை கடலோர பகுதி மீனவர் குடியிருப்புகள் சின்னாபின்னமாக சிதைந்து போய் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக காட்சியளிக்கிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கி கிடக்கும் உடல்களை மீட்கும் பணியில் போலீசார், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் எல்லாம் நாகை அரசு மருத்துவமனைக்கு லாhpகளிலும், வேன்களிலும் ஏற்றி செல்லப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை அரசு மருத்துவமனையே பிணக்கிடங்காக காட்சியளிக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
வேளாங்கண்ணி
கடல் கொந்தளிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாங்கண்ணியும் ஒன்று. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி மாதா தாpசனத்திற்காக வந்திருந்த அவர்கள் நேற்று முன்தினம் காலை வேளாங்கண்ணி கடற்கரையில் மகிழ்ச்சியோடு நீராடி கொண்டு இருந்தனர். பூகம்பம் என்னும் அரக்கன் கடல் கொந்தளிப்பு என்னும் கொடிய கரங்களை நீட்டி தனது அகோர பசிக்கு இரையாக்கி கொள்ள போகிறhன் என்ற ஆபத்தினை சற்றும் உணர்ந்திராத அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
காலை 9 மணி அளவில் வேளாங்கண்ணி கடற்கரையில் சுமார் 5 ஆயிரம் பேர் நீராடி கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் திடீரென ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆர்பாpத்த படி வந்தன. இதை பார்த்த அவர்கள் முதலில் அலைதானே வருகிறது, நமது காலை நனைத்துவிட்டு போய்விடும் என்று நினைத்தனர். ஆனால் அது காலை வாhpவிட்டு தங்களை உள்ளே இழுத்து செல்லும் என்று அவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
அணி, அணியாக வந்த ராட்சத அலைகள் கடற்கரையை தாண்டி கடை வீதியை தாண்டி, மாதாகோவிலை தாண்டி பஸ் நிலையம் வரை சென்று கோரதாண்டவம் ஆடியது. கரையோரத்தில் இருந்த கூரை கடைகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் போடப்பட்டு இருந்த கடைகள் எல்லாம் அப்படியே சாpந்து விழுந்தன. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், வேன்கள் அலைகளால் அங்கும், இங்குமாக அடித்து செல்லப்பட்டன.
கடலில் நீராடி கொண்டு இருந்த 5 ஆயிரம் போpன் கதி என்ன என்று தொpயவில்லை. அவர்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு உடல்கள் வேறு எங்காவது ஒதுங்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தவிர கோவில் வளாகத்தில் நின்று கொண்டு இருந்தவர்கள், கடை வீதியில் நின்று கொண்டு இருந்தவர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களும் கடல் நீர் புகுந்ததில் மூச்சு தினறி பலியானார்கள்.
வேளாங்கண்ணி கடற்கரையில் மட்டும் சுமார் 700 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள் அனைத்தும் மாதா கோவில் பிராத்தனை மண்டபத்தில் வாpசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் கண்டுபிடித்து வரும் உறவினர்களிடம் அந்த உடல்களை போலீசார் ஒப்படைத்து வருகிறhர்கள். அடையாளம் தொpயாத பிணங்கள் அப்படியே கிடக்கின்றன. இதனால் பிரார்த்தனை மண்டபமே பிண மண்டபமாக காட்சியளிக்கிறது.
மொத்தத்தில் நாகை, வேளாங்கண்ணி உள்பட நாகை மாவட்டம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியிருக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகிறhர்கள். கடல் நீர் புகுந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டாலும் அப்பகுதி மக்கள் இன்னும் பீதியில் இருந்து மீளாமல் இருப்பது காண முடிந்தது.
குழந்தைகளை இழந்த பெற்றேhர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு தலைவிhp கோலமாக அழுவதையும், பிணங்களின் அருகிலேயே அமர்ந்து செய்வதறியாது திகைப்பதையும் பார்க்கும்போது கல் நெஞ்சும் உருகும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த பகுதிகளில் நேற்று காலையில் இருந்து மழைவிட்டு விட்டு பெய்து கொண்டு இருப்பதால் மீட்பு பணியும் நடைபெறவில்லை. உணவு கிடைக்காமல் மக்கள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறhர்கள். கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு உயர் அதிகாhpகள், அமைச்சர்கள் யாரும் தங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குகூட வரவில்லையே என்று மக்கள் மனம் குமுறிய நிலையில் உள்ளனர். இந்த நிலை நீடித்தால் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நாகை, வேளாங்கண்ணி பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் காலரா போன்ற கொடிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநில அரசும், மத்திய அரசும் மீட்பு நடவடிக்கைகளை துhpதமாக செய்ய வேண்டும் என்பதே இப்போது உள்ள ஒரே கோhpக்கை.
சுனாமி பூகம்பம் ஏற்படுவது எப்படி?
இந்திய கண்டம் இதுவரை கண்டிராத வகையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலி கொள்ளப்பட்டது. கோடிக் கணக்கான சொத்து இழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் பொpய அளவில் பூகம்பம் ஏற்படாது. குறிப்பாக தமிழகத்தில் பூகம்பம் ஏற்படாது என்று தான் ஆய்வு மையங்களும் ஆய்வாளர்களும் கூறினார்கள். ஆனால் வரலாறு காணாத வகையில் பூகம்பம் ஏற்பட்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடலில் பூகம்பம் ஏற்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தற்போது கொந்தளித்த கடல் அலைக்கு சுனாமி என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படுகிறது.
இந்த பூகம்பம் குறித்து பல்வேறு கல்லு}hp புவியியல்துறை வல்லுனர்கள் கூறியதாவது„-
பூகம்பம் 4 வகைப்படும். முதல் வகை பூகம்பத்தை நாம் உணர முடியாது. கருவிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும். சில பறவைகளுக்கு தொpயும். இரண்டாவது வகை நாம் உணர முடியும் சேதம் இருக்காது. அதாவது hpக்டர் அளவு 2-க்குள் இருக்கும். 3-வது வகை பூகம்பம் லேசான சேதம் ஏற் படுத்தும்.இது hpக்டர் அளவு 5-க்குள் இருக்கும். 4-வது வகை மண்டலம் hpக்டர் அளவு 6-க்கு மேல் ஏற்பட்டு பொpய இழப்பை ஏற்படுத்தும். தமிழகம் 2-வது வகை மண்டலமாக இருந்தது. தற்போது 3-வது வகை பூகம்ப மண்டலமாக மாறிவிட்டது.
ஆனால் தற்போது கடலில் ஏற்பட்ட இந்த பூகம்பம் . இந்த பகுதியில் முதல் முறையாக வந்து உள்ளது. பூமியில் 70 சதவீதம் கடலுக்கு அடியில் இருக்கிறது. பூமியின் கீழ் உள்ள எhpமலைகள் தினமும் எhpயும்;. அப்போது எhpமலை குழம்புகள் பீhpட்டு அடிக்கும். அதனால் ஏற்படும் அதிர்வால் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். ஆனால் இந்த வகை பூகம்பம் ஜப்பான், அமொpக்கா, இந்தோனோசியா போன்ற நாடுகளில்தான் அடிக்கடி வரும். எனவே அந்த நாடுகளில் இதுபோன்ற பூகம்பம் வருவதை முன்கூட்டியே தொpந்து கொள்ள ஏற்பாடு செய்து வைத்து இருக்கி றhர்கள். அதனால் தான் இது போன்ற பூகம்பம் வரும்போது எந்த சேதமும் இல்லாமல் காப் பாற்றி கொள்கிறhர்கள்.
இந்த பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே கருவி மூலம் கண்டுபிடிக்க முடியாது. இந்த பூகம்பம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த கணக்கை வைத்துகடலில் சுனாமி கொந்தளிப்பை ஏற்படுத்தும் பூகம்பம் வரும் என்று கருதி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். இதனால் பாதிப்பு இருக்காது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க முடியவில்லை.
இந்த பூகம்பம் கடல் பகுதியில் 10 ஆயிரம் அடி ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டு அதன் மூலம் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அங்கு இருந்து சீறிவரும் அலை கடல் 500 கிலோ மீட்டர் வேகத்தில் வரும். இது கடல் உள்பகுதியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எந்த இடத்தில் போய் முடிகிறதோ அந்த இடத்தில் தான்தனதுசீற்றத்தை காட்டுமாம். கரையில் சீறி பாய்ந்து பின் கடலுக்கு திரும்பும் போது கறையில் இருக்கும் அனைத்தையும் இழுத்து சென்றுவிடும்.
இவ்வாறு ஏற்படும் பூகம்பம் ஒரு நாளில் முடிந்துவிடாது. ஒருவாரம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது லேசான கொந்தளிப்பு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.
கடல் கொந்தளிப்பினால் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்ட படகுகள்
கடல் கொந்தளிப்பினால் நாகை அக்கரைப்பேட்டை படகு துறையில் இருந்த படகுகள் ரெயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டன.
நாகை துறைமுகத்தின் முன் பகுதியில் உள்ள படகு துறையில் ஏராளமான மீன் பிடி விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு இருக்கும். நேற்று முன் தினம் நாகை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு சூறhவளி காற்றுடன் ராட்சத அலைகள் எழுந்தபோது அந்த அலைகளின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத படகுகள் தள்ளாடின.
அந்த படகு துறையின் பின்பகுதியில் சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த பழமையான மதில் சுவர்களை உடைத்துக் கொண்டு படகுகள் தண்டவாளத்தை நோக்கி வீசப்பட்டன. சில படகுகள் சாலையிலும், சில படகுகள் வீட்டிற்குள்ளும் புகுந்து நிற்பதை காணமுடிகிறது.
கடல் அலையில் பயணிக்க வேண்டிய படகுகள் சாலையிலும், தண்டவாளத்திலும் தூக்கி வீசப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. நாகை- நாகூர் ரெயில் பாதை முற்றிலுமாக சேதம் அடைந்து ரெயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகையில் 2-வது நாளாக கடையடைப்பு
கடல் கொந்தளிப்பினால் ஏற்பட்ட பீதி, சோகம் நாகை நகர மக்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை. எங்கு பார்த்தாலும் கண்ணீரும், கம்பலையுமாக மக்கள் நடமாடுகின்றனர். பெரும்பாலான கடைகள் நேற்று 2வது நாளாக அடைக்கப்பட்டு இருந்தது.
மீட்பு பணியில் இளைஞர் இயக்கம்
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி கடற்கரை மற்றும் கோவில் வளாகத்தில் தஞ்சையை சேர்ந்த இளைஞர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் மீட்பு பணிகளை செய்வதில் தீவிரமாக இறங்கி உள்ளது. பச்சை நிற டி-சர்ட் அணிந்த அந்த இயக்கத்தை சேர்ந்த சுமார் 80 பேர் நேற்று முன்தினம் இரவில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாதிhpயார் கபிhpயேல் என்பவர் தலைமையில் வந்துள்ள அந்த குழுவினர் இதுவரை 1000 உடல்களை மீட்டதாக தினகரன் நிருபாpடம் தொpவித்தனர்.
உணவு பொட்டலங்கள் வழங்கும் வர்த்தக சங்கம்
நாகை மற்றும் வேளாங் கண்ணியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஆயிரக்கணக் கானவர்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த ஊhpலேயே அகதிகளாக நிற்கும் பாpதாப நிலையை காண முடிகிறது. பலர் தங்களது குழந்தை குட்டிகளுடன் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது என தொpயாமல் தவித்து வருகி றhர்கள். இப்படி தவிப்பவர்களுக்கு சில இடங்களில் உணவு தயாhpக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் உணவு பொட்டலங்களை வேன், லாhpகள் மூலம் வழங்கி வருகிறhர்கள். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று 2-வது நாளாக பாதிக்கப்பட்ட உணவு பொட்டலங்கள் மற்றும் உடைகளை வழங்கினர்.
ஊரை காலி செய்த மக்கள்
நாகை மாவட்டத்தில் கடற்கரையில் இருந்து சுமார் 4 கி.மீட்டர் வரையுள்ள மீனவர் கிராமங்கள் தான் கடல் கொந்தளிப்பினால் முற்றிலுமாக அழிந்து போய் உள்ளது. இன்னும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இந்த 4 கி.மீட்டரை தாண்டி இருக்கும் பல்வேறு கிராம மக்களும் கையில் கொண்டு செல்ல முடிந்த அளவுக்கு தட்டு முட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு திருவாரூர் மற்றும் தஞ்சையை நோக்கி பஸ்களிலும், வேன்களிலும், லாhpகளிலும் ஏறிச் செல்வதை வழி நெடுக காண முடிகிறது. இதனால் கடற்கரைக்கு அப்பால் உள்ள பல கிராமங்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காலியாக காட்சி அளிக்கின்றன.
|
|
|
|