Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 118 online users.
» 0 Member(s) | 115 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  hi
Posted by: sethu - 01-23-2005, 05:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

உதவி பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் - புனர்வாழ்வுக்கான நிதியம.;

சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் பெறப்படும் நிதி பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் புனர்வாழ்வுக்காக வழங்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்பகுதியிலும் சுனாமியின் தாக்குதலால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களைத் தொடர்ந்தே அவர்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த 2004 டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதிகளைத் தாக்கிய 'சுனாமி'யால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு தமது ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள். இவ்விதம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்காக பிராந்திய நிருபர்களாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடமையாற்றியவர்களாகும்.

இவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவது என்பதற்கு அப்பால் இவர்கள் தமது பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்குள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அவசியமான பக்ஸ் இயந்திரங்கள் தொலைபேசி கணிணி இயந்திரங்கள் கமரா சாதனங்கள் மோட்டார் சைக்கிகள் போன்றவற்றையும் இழந்து நிர்க்கதியான ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள்.

இவற்ளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமாகவே அவர்கள் தமது பணிகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. இதற்காக 'பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் புனர்வாழ்வுக்கான நிதியம்' ஒன்றை அமைப்பதென இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தீர்மானித்திருக்கின்றது. இதற்கு உங்களுடைய மேலான பங்களிப்பையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதற்கான உங்களுடைய பங்களிப்பை பின்வரும் எமது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கலாம்.

ளுசi டுயமெய வுயஅடை ஆநனயை யுடடயயைnஉந யுஃஊ ழே: 1001801-6

ர்யவவழn யேவழையெட டீயமெஇ முழவயாநயெ டீசயnஉhஇ 280 புநழசபந சு. னுந ளுடைஎய ஆயறயவாய ஊழடழஅடிழ -13.

மேலதிக விபரங்களுக்கு: செயலாளர் ஆர்.பாரதி: 0777 304010 பொருளாளர் எஸ்.ஸ்ரீகஜன்: 0777 349655 செயற்குழு உறுப்பினர் ஏ.நிக்சன்: 0777 394416

இணைய முகவரி : றறற.ளடவஅய.உழஅ

அல்லது மின்னஞ்சல் முகவரி: வயஅடைஅநனயை@hழவஅயடை.உழஅ

Print this item

  சுனாமி எச்சரிக்கை கருவி 1 வருடத்தில் நிறுவப்படும்
Posted by: vasisutha - 01-23-2005, 04:54 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை கருவி 1 வருடத்தில் நிறுவப்படும்: ஐ.நா. அதிகாரிகள் அறிவிப்பு



ஜப்பான் நாட்டின் கோப் நகரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 6,433 பேர் பலியானார்கள். பூமி அதிர்ச்சி, புயல், வெள்ளம் போன்ற பேரழிவுகளால் ஏற்படும் உயிர் பலிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி உலக அளவிலான கருத்தரங்கு 5 நாட்கள் அந்த நகரத்தில் நடைபெற்றது.

ஐ.நா. சபை ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் 168 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள், விஞ்ஞானிகள், வளர்ச்சித்துறை வல்லுனர்கள், பொருளாதார மேதைகள், உதவி அமைப்பை சேர்ந்தவர்கள் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

நேற்று நிறைவடைந்த இந்த கருத்தரங்கில், சமீபத்தில் இந்தியா உள்பட 11 நாடுகளில் ஏற்பட்ட `சுனாமி' பேரழிவால் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியான சம்பவம் தான் அதிகம் ஆக்கிரமித்து இருந்தது. சுனாமி உள்பட இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் உயிர் பலியை குறைக்க துரிதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதை நிபுணர்கள் ஒத்துக் கொண்டனர். `சுனாமி' எச்சரிக்கை கருவிகள் நிறுவ வேண்டிய அவசியம் மற்றும் இன்னும் 10 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் உயிர் சேதத்தை குறைக்க அவர்கள் உறுதி பூண்டனர்.

`இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு, அதற்கான எச்சரிக்கை கருவிகள் நிறுவ வேண்டியது அவசியம்' என்று ஐ.நா. சபையின் அவசர நிவாரண உதவி பிரிவு இயக்குனர் ஜேன் ஈகிலேண்ட் நிருபர்களிடம் தெரிவித்தார். `சுனாமி' நமக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய ஒரு எச்சரிக்கை கருவி என்றும் அவர் கூறினார்.

`இந்தியப் பெருங்கடலில் இன்னும் 12 முதல் 18 மாதங்களில் `சுனாமி' எச்சரிக்கை கருவிகளை நிறுவ ஐ.நா. அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதற்காக சுமார் 40 கோடி ரூபாய் பயன்படுத்தப் படும்' என்று ஐ.நா. சபையின் பேரழிவு குறைப்புத் துறையின் தலைவர் சல்வானோ பிரிசினோ தெரிவித்தார்.

இந்த தொகையில் பாதியை ஜப்பான் வழங்கும். இந்த `சுனாமி' எச்சரிக்கை கருவிகள், `சுனாமி' ஏற்பட்ட 3 நிமிடத்தில் எச்சரிக்கை செய்யும்.

malaimalar.com

Print this item

  `காதல்' சினிமா பட இசை அமைப்பாளர் காதலியுடன் ஓட்டம்
Posted by: vasisutha - 01-23-2005, 04:50 PM - Forum: சினிமா - Replies (2)

`காதல்' சினிமா பட இசை அமைப்பாளர் காதலியுடன் ஓட்டம்: புது பட பூஜையில் போலீசார் கண்காணிப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் "காதல்" சினிமா படத் தின் மூலம் இசை அமைப் பாளராக அறிமுகம் ஆனவர் ஜோஸ்வா ஸ்ரீதர் (வயது28 ). இவரது மனைவி உகாலி (25 ). நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந் தவர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சென்னை அண்ணா நகர் அனபோயா குடியிருப்பில் ஜோஸ்வா மனைவி, குழந்தை களுடன் வசித்து வருகிறார்.

சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் இவர் கிறிஸ்தவ கூட்டங்களிலும், ஆலயங்களிலும் இசை அமைத்து வந்தார். பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி நடாஷா (24). இவரது இசை குழுவில் `கீ போர்டு' வாசிப்பார்.

இசை நிகழ்ச்சிகள் தொடர்பாக ஜோஸ்வாவும் நடாஷாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இதில் 2 பேருக் கும் நெருக்கம் ஏற்பட்டது. இதனால் காதல் மனைவி உகாலியை மறந்து புதிய காதலி நடாஷாவுடன் ஜோஸ்வா தங்கி இருந்தார்.

2 முறை சென்னையில் தங்கிய நடாஷாவை அவரது குடும்பத்தினர் வந்து பெங்க ளூருக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜோஸ்வாவை சந்திக்க சென்னை வந்த நடாஷா அதன் பிறகு பெங்க ளூர் திரும்பவில்லை.

சென்னையில் பல இடங்களில் தேடியும் ஜோஸ்வாவை யும்-நடாஷாவையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் நடாஷாவின் தாயார் பெங்களூர் போலீசில் புகார் செய்தார்.

ஜோஸ்வா-நடாஷா காதல் ஜோடி திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பெங்களூர் பே ர் சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், அண்ணா நகர் உதவி கமிஷனர் ஆகியோர் சென்னையில் விசாரணை நடத்தினார்கள்.ஜோஸ்வாவின் தாயார், மனைவி உகாலி ஆகியோரி டம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே `காதல் வளர்த்தேன்' என்ற புதிய படத்தின் இசை அமைப்பாளராக ஜோஸ்வா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த படத்தின் தொடக்க விழா இன்று காலை 10.30 மணிக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.

இதில் கலந்து கொள்ள வருவார் என்று எதிர்பார்த்து போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். ஆனால் ஜோஸ்வா வரவில்லை. படத்தின் கதாநாயகன் மனோஜ், கதாநாயகி `அழகி' புகழ் மோனிகா, இயக்குனர் கலா புதியவன், தயாரிப்பாளர் ஹயாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இயக்குனர் தயாரிப்பாளர் கூறுகையில், "ஜோஸ்வாவை நாங்கள் பார்த்து 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்று பட பூஜைக்கு வரு வார் என்று எதிர்பார்த்தோம். அவர் வரவில்லை. அவர் எங்கு போனார் என்றும் தெரியவில்லை" என்றனர்.

ஜோஸ்வாவின் இயற்பெயர் ஸ்ரீதர் தந்தை சரவணன். இவர் அண்ணா நகர் துவரகா அபார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வருகிறார்.

ஜோஸ்வா, நடாஷாவை காதலித்த பிறகு காதலிக்காக மதம் மாறி ஸ்ரீதர் என்ற பெயரை ஜோஸ்வா ஸ்ரீதர் என மாற்றிக் கொண்டார். பல இசை அமைப்பாளர்களிடம் கீ போர்டு வாசித்தார். காதல் படத்தில் அவருக்கு இசை அமைப்பாளர் அந்தஸ்து கிடைத்தது.

இந்த படத்துக்கு இசை அமைக்கும் போது கூட அடிக்கடி ஜோஸ்வா-நடாஷா காதல் பிரச்சினை ஏற்பட்டது. அப்போதும் போலீசார் அவரை தேடினார்கள்.

இதனாÖல் ஜோஸ்வா தனது தங்குமிடத்தை யாருக்கும் தெரிவிப்பது கிடையாது. நண்பர்கள் வீட்டில் தங்கி யிருந்து இசை அமைத்து வந்துள்ளார். வெளிïருக்கு காதலியை வரச்சொல்லி அங்கு தங்கி விட்டுச் சென்று விடுவார்.

இப்போது கூட அவர் சென்னையில்தான் காதலியுடன் தங்கியிருக்கலாம் என்று கருதி போலீசார் தேடி வருகிறார்கள்.

காதல் படம் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் ஜோஸ்வாஸ்ரீதர் காதல் பிரச்சினையில் சிக்கி இருப்பது தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல் ஜோடியை தேடும் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

Print this item

  கணணியில் பூஜை செய்ய விருப்பமா ??
Posted by: Vaanampaadi - 01-23-2005, 04:02 PM - Forum: கணினி - Replies (33)

உங்களில் யாருக்காவது கோவில்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு அதுவும் உங்களின் கணணியில் நீங்கள் வணங்கும் கடவுள்களுக்கு பூஜை செய்து வழிபட
விரும்புகிறீர்களா?????? பின் வரும் லிங்குகளை கிளிக்செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். இவற்றில் ஒன்றும் உங்கள் கணணியில் install பண்ணவேண்டிய அவசியம் இல்லை. டவுன்லோட் பண்ணியதும் அந்த Exe ஐ கிளிக்செய்ததும் கோவில் திறக்கப்பட்டுவிடும்...நீங்கள் விரும்பியவற்றை உங்களின் Mouse மூலம் செய்துகொள்ளவும்.

[b](அநேகமாக இந்த விடயம் சகலருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்....காரணம், நான் அறிந்தவரையில் 1998ம் ஆண்டு தொடக்கம் இந்த லிங் இயங்குகிறது.இதனை தெரியாதவர்கள் இதனை பாவித்து பார்க்கவும்.......அதற்காக என்னை கடிக்க வராதீர்கள்)

அம்மன்

பாலாஜி

ஹனுமான்

லக்ஷ்மி

ராமா

சிவா

ஐயப்பன்

கணேஷ்

கிரிஷ்ணா

முருகன்

தலைவர்

Print this item

  இந்துநேசியாவில் இறந்தோரின் எண்ணிக்கை 173.981
Posted by: KaviPriyan - 01-23-2005, 11:42 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

இந்துநேசியாவில் இறந்தோரின் எண்ணிக்கை 173.981

மேலதிக செய்திகளுக்கு
www.tsunamiineelam.com

Print this item

  lottery
Posted by: glad - 01-23-2005, 11:23 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (7)

வணக்கம். எனது அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டிலுள்ள லொத்தர் நடத்தும் கம்பனி ஒன்று எனக்கு கணணி மூல சீட்டிழுப்பில் பெருந் தொகை கிடைத்திருபதாக கடித மூலம் அறிவித்து எனது விபரங்களை கோரி இருந்தது. அதில் குறிப்பிட்ட தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அங்கிருந்து ஒருவர் அதனை உறுதிப்படுத்தினார். அதன் பின் அந்த கம்பனியின் விபரத்தினை கூகிளில் தேடியபோது அப்படி அது பலரிடம் மோசடி செய்ய முயற்சித்ததாக பலரது செய்திகளையும் பார்த்ததால் நான் தப்பித்தேன். அந்த கொம்பனியின் பெயர் லொடேரியா பிரிமரிவா. அது பற்றிய எச்சரிக்கையில் தமிழ் உறவு ஒன்றின் பெயரும் இருந்தது. ஆதலால் இத்தகைய சர்வதேச ஏமாற்று நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
glad

Print this item

  ஹிந்தி கனவு கன்னி நடிகை பர்வீன்பாபி `மர்ம' சாவு
Posted by: Vaanampaadi - 01-23-2005, 09:40 AM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.dailythanthi.com/images/news/20050123/babi.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40750000/jpg/_40750157_babi203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40750000/jpg/_40750159_babi66.jpg' border='0' alt='user posted image'>

இந்தி பட உலகின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்த
நடிகை பர்வீன்பாபி `மர்ம' சாவு
வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்


மும்பை, ஜன.23-

இந்தி பட உலகில் கனவு கன்னியாக இருந்த நடிகை பர்வீன்பாபி மர்மமான முறையில் வீட்டுக்குள் பிண மாக கிடந்தார்.

நடிகை பர்வீன்பாபி

இந்தி சினிமா பட உலகில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர் களின் கனவு கன்னியாக திகழ்ந் தவர் நடிகை பர்வீன்பாபி, தீவர், நமகாலால் மற்றும் அமர்அக்பர் அந்தோணி ஆகிய சினிமா படங் களின் மூலம் இந்தி சினிமா உலகில் புகழின் உச்சியில் இருந்த வர் அவர்.

மும்பையில் ஜுகு என்ற இடத் தில் இவரது வீடு இருக்கிறது. கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவு அருகே பால்பாக்கெட், பத்திரிகைகள் எடுக்கப்படாமல் கிடந்தன. பக் கத்து வீடுகளில் இருந்தவர்கள் இதைப்பார்த்து போலீசுக்கு தக வல் கொடுத்தார்கள்.

`மர்ம' சாவு

உடனே போலீசார் விரைந்து சென்று, நடிகை பர்வீன்பாபி வீட்டு கதவை மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே போனார்கள். உள்ளே அவர் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் எப்படி செத்தார் என்பது மர்மமாக இருக்கிறது. அவருக்கு வயது 50. மன நோயால் பாதிக்கப்பட்ட நடிகை பர்வீன் பாபி, வெளிநாடு சென்றார். அங்கு 10 ஆண்டுகள் இருந்த பின்னர், 3 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை திரும்பி வந்தார். அரச பரம்பரையை சேர்ந்த ஜுனாகட் நவாப் குடும்பத்தை சேர்ந்தவர் அவர். முக்கியமான வேடங் களில் நடிப்பதை விட, கவர்ச்சி கதாநாயகியாக அவர் அனைவ ராலும் பெரிதும் கவரப்பட்டவர்.

அமிர்தாப்பச்சனுடன் நடித்தார்

கடந்த 1973-ம் ஆண்டு இந்தி சினிமாவில் நடிக்கத் தொடங் கினார். சமுத்ராஹீன் அவரது முதல் படம் அந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துர்ரானியுடன் முக்கிய வேடத் தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சஞ் சய் கானின், `சண்டி சோனா' என்ற படத்தில் நடித்தார்.

பின்னர் தீவார் படத்தில் கவர்ச்சியாக அமிர்தாப்பச்சன், சசிகபூர் ஆகியோருடன் நடித் தார். இந்தி சினிமா உலகில் டைரக்டர் மகேஷ் பட், நடிகர்கள் டன்னிடென் ஜோங்பா, கபிர் பேடி ஆகியோர்களுடன் தொடர்பு படுத்தி நடிகை பர்வீன்பாபி பேசப்பட்டார். 1990-ம் ஆண்டு திடீரென்று வெளிநாடுசென்ற அவர் 10 ஆண்டுகளாக அங்கேயே தங்கி விட்டார்.

அமிர்தாப்பச்சன் மீது புகார்

தன்னை நடிகர் அமிர்தாப்பச் சன் மற்றும் வெளிநாட்டில் உள்ள சிலர் கொலை செய்ய முயன்றதாக மும்பை கோர்ட்டில் அவர் புகார் செய்திருந்தார். ஆனால் அதற்கு சாட்சிகள் இல்லை என்று கூறி அவரது மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவரது ஜுகு வீட்டில் தனி யாக வசித்து வந்தார். படங்கள் வரைவது, வீடுகளில் உள் அலங் காரம் செய்வது அவரது பொழுது போக்கு அம்சங்கள். இந்தநிலை யில் நடிகை பர்வீன்பாபி மர்ம மான முறையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

அவர் நடித்த ஒரு சிறிய காட்சியும் BBCயின் செய்தியும். பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்

http://news.bbc.co.uk/media/news_web/video...689_nb_16x9.asx
[url][/url]

Print this item

  போரழிவையும் இயற்கைப் பேரழிவையும் ஒன்றாக..................
Posted by: Vaanampaadi - 01-23-2005, 09:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

போரழிவையும் இயற்கைப் பேரழிவையும் ஒன்றாக
கவனத்தில் எடுக்கக் கோருகிறார் தலைவர் பிரபா
நோர்வேத் தரப்பிடம் இதனையே அவர் வலியுறுத்தினார் என்று பாலசிங்கம் தகவல்
மூன்று தசாப்த கால யுத்தத்தினாலும் ஆழிப்பேரலை அனர்த் தத்தினாலும் தமிழ்மக் களுக்கு ஏற்பட்டிருக்கும் அழிவுகளை சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனத்தில் எடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இது என்று நோர்வே அமைச்சர்களிடம் வலியுறுத்தியிருக் கின்றார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபா கரன்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றர்ஸன், அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ஹில்டி எவ்.ஜோன்ஸன் அம்மையார் ஆகியோர் அடங்கிய நோர்வே உயர் மட்டக் குழுவினர் நேற்று தலைவர் பிரபாகரனை வன்னியில் அரசியல்துறை நடுவப் பணிமனை யில் சந்தித்து விரிவாகப் பேச்சு நடத்தினார்.
சுனாமி இயற்கை அனர்த்தம் தமிழர் பிர தேசத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான நிவாரணப் பணிகள் ஆகிய விடயங்கள் குறித்து தேசியத் தலைவருடன் நோர்வே அமைச்சர்கள் விரிவாகப் பேசினர்.
நோர்வே அமைச்சர்கள் தேசியத் தலைவ ருடன் நடத்திய பேச்சுக்களின் விவரங்களை மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வெளி நாட்டு, உள்நாட்டு ஊடகவியலாளர்கள், படப் பிடிப்பாளர்கள் உட்படப் பெரும் எண்ணிக்கை யான செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பால சிங்கம் பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
இந்தச் சந்திப்பு முக்கியமான தொன்று. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் எமது தேசியத் தலைவர் வெளிநாட்டுத் தலைவர் களை - குறிப்பாக சமாதான முயற்சியில் அனுசரணையாளர்களாக கடந்த 5 ஆண்டு களாகப் பணியாற்றிவரும் நோர்வே நாட்டின் அமைச்சர்கள் இருவரைச் சந்தித்து எமது மக்களின் நிலைபற்றியும் அரசியல் நிலை வரம் பற்றியும், சமாதான முயற்சிகள் குறித் தும் விரிவாகப் பேசியுள்ளார். இந்தப் பேச்சு இருமணி நேரம் நீடித்தது.
ஆமியால் ஏற்பட்ட சுனாமி
எமது மக்களுக்கு ஆழிப்பேரலை அனர்த் தத்தால் ஏற்பட்ட அழிவு வித்தியாசமானது. ஏற் கனவே மூன்று தசாப்தகால யுத்தத்தினால் வடக்கு - கிழக்கில் உள்ள எமது வளங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. மாதகலி லிருந்து அம்பாறை வரை பல தமிழ்க் கிராமங் கள் - குறிப்பாக மீனவக் கிராமங்கள் - அழிக் கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் இன்னும் இரா ணுவ ஆக்கிரமிப்பில் உள்ளன. எழுபதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உடைமை கள் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. அதனை ஆமியால் ஏற்பட்ட சுனாமி என்று தலைவர் விவரிக்கின்றார்.
அதன்பின்னர்தான் ஆழிப்பேரலை அழிவு அதுவும் எமக்குப் பெரும் நாசத்தைத் தந்துள் ளது. வடக்கு - கிழக்கில்தான் அதிகளவு சேதம். வடக்கு - கிழக்குக் கரையோரங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என இருபதாயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
அதனால்தான் போரழிவையும், ஆழிப் பேரலைப் பேரழிவையும் ஒன்றாகக் கவனத் தில் எடுக்கும்படி தலைவர் பிரபா வேண்டுகி றார்
எனவேதான் யுத்தத்தையும் மறந்து இனப் பிரச்சினையையும் மறந்து சுனாமியுடன் நிற் காதீர்கள். கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக எமது மக்கள் அனுபவித்த இன ஒடுக்கல் வரலாற் றையும் கவனத்தில் கொள்ளுங்கள் என்கின் றோம்.
இவ்வளவு பேரழிவை எமது மக்கள் சந்தித் துள்ளபோதிலும் இப்போது சுனாமிப் பேரழி வின் பின்னர்தான் சர்வதேசத்தின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆகவே, எங் கள் மக்களின் ஒட்டுமொத்த அழிவைக் கவ னத்தில் எடுத்துகொள்ளுங்கள் என்று கோருகின் றோம்.
எமக்கு இந்த அரசில் நம்பிக்கையில்லை. காலங்காலமாக இருந்துவந்த அரசுகள் இத் தகைய பேரழிவுகளைத் தங்களது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தியதே எமது அனுப வப் பாடம்.
எனவேதான் சர்வதேச உதவிகளை பாதிக் கப்பட்ட மக்களுக்கு - அவர்கள் தமிழர்களாக வோ, சிங்களவர்களாகவோ, முஸ்லிம்களா கவோ இருக்கலாம். சரிசமமாக - சமத்துவமாக - பங்கிட்டு அவர்களுக்கு நேரடியாகக் கிடைக் கச் செய்யுங்கள் எனக் கோருகின்றோம்.
கடந்த ஐந்து வருடங்களாக சமாதான முயற்சியில் நோர்வே ஈடுபட்டுள்ளதால் அவர் களுக்கு இந்த விடயங்கள் நன்கு தெரியும். எனவேதான் அவர்களிடம் இதனை கவனத் தில் எடுக்கும்படி கோரினோம்.
இந்த விடயத்தில் தாங்கள் தெளிவான ஒரு கொள்கைத் திட்டத்திற்கு வர விரும்புகிறார்கள் என நோர்வே தரப்பினர் தெரிவித்தனர்.
அரச கட்டமைப்பு மூலம் இல்லாமல் - அரசமயப்படுத்தப்பட்ட நிர்வாகங்கள் மூலம் இல்லாமல் - பொதுமக்கள், பொதுநிறுவனங் கள், சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள், உள்ளூர் தொண்டர் அமைப் புக்கள் எனப் பலதரப்பினரும் கூடுதலாகப் பங்குபற்றக் கூடியதாக நிவாரண ஒதுக்கீட்டுத் திட்டமொன்றைக் கொண்டுவந்து சர்வதேச சமூகத்திற்கு முன் சமர்ப்பிப்பதே அவர்களின் யோசனை. சர்வதேச சமூகம் அந்தக் கட்ட மைப்பு மூலம் நடவடிக்கைகளை எடுத்துப் பணிகளை மேற்கொள்வதே அத்திட்டமாகும்.
அரசும் நாங்களும் எங்களுக்குள் இழு பறிப்படாமல் இதுவிடயத்தில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்குரிய நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக பிணக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் - நாங்களும் அரசும்- ஒரு இணக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதுவே நோர்வேயின் எதிர்பார்ப்பு.
இது தொடர்பான பேச்சுக்கள் பூர்வாங்க மட்டத்தில் நடைபெறுகின்றன. கொழும்பிலும் கிளிநொச்சியிலும் உள்ள இருதரப்பு சமாதா னச் செயலகங்கள் மூலம் பேச்சுக்கள் நடக் கின்றன.
இரண்டு பேருக்கும் இணக்கமான ஒரு கட்டமைப்பை - பொறிமுறையை - காண்பதற் கான பேச்சுக்கள் நடந்தாலும் அதிலும் சிக்கல் கள் உள்ளன.
அந்த விவகாரம் வேறு. இனப்பிரச்சினை, உரிமைப் பிரச்சினை வேறு. எமது மக்களின் உரிமைப் பிரச்சினை சுனாமி விவகாரத்தால் தீரப்போவதில்லை இன்னும் தீவிரமடையுமே தவிர தீரப்போவதில்லை.
எங்களுடைய அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சுமுகமான நிலையை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை அரசு எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அத்திபாரத் தைப் போடமுடியும்.


<b>நிவாரண உதவிகள் சமச்சீரான பங்கீடு
உறுதி செய்யப்படும் என்கிறது நோர்வே
அந்நாட்டு அமைச்சர் ஜோன்ஸன் அம்மையார் தெரிவிப்பு </b>

மீட்பு, நிவாரணம் மற்றும் மீள் கட்டமைப் புப் பணிகளைப் பரவலாக்கம் செய்வது தொடர் பான முக்கிய கொள்கைகள் அடங்கிய பேச்சுக் கள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இத்திட் டத்தின் கீழ் பாதிப்புற்ற சகலருக்கும் சமச்சீராக வும், சமபங்கிலும் நிவா ரணம் மற்றும் உதவி கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக் கப்படும்.
- இவ்வாறு தெரிவித் திருக்கின்றார் நோர்வே நாட்டின் சர்வதேச அபி விருத்தி அமைச்சர் ஹில்டி எவ்.ஜோன்ஸன் அம்மையார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிர பாகரனுடன் கிளிநொச்சியில் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
க்ஷி கேள்வி: சுனாமியால் பாதிக்கப்பட்டோ ருக்கு என சர்வதேச சமூகம் வழங்கும் உதவி கள் நேரடியாகப் புலிகளிடம் கையளிக்கப்படுமா?
ஐ பதில்: ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் தொண்டர் அமைப்புக்கள் மூலம் கணிசமான உதவிகளை நோர்வே ஏற்கனவே வழங்கி யுள்ளது. அதை நாம் தொடர்வோம்.
ஏற்கனவே எங்களிடம் பல தரப்பு நம்பிக்கை நிதியம் உள்ளது. உலக வங்கி அனுசரணையு டன் புலிகளின் ஒத்துழைப்போடு அது செலவிடப் படுகிறது. அந்த நிதியத்துக்கு நோர்வே உதவுகின் றது. இப்போதைய மீள்கட்டுமானத்துக்கும் அந்த நிதியைப் பயன்படுத்தலாம். இது குறித்து உதவும் நாடுகளும் உலக வங்கியும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் கொழும்பில் பேச்சு நடத் தியுள்ளன.
க்ஷி கேள்வி: வடக்கு - கிழக்கில் ஏற்பட்ட பாதிப் புகள் தொடர்பாக அரசு உரிய கவனிப்புச் செலுத்த வில்லை என்று கூறப்படுகின்றதே. இந்நிலையை எப்படி சீர்செய்யப்போகின்றீர்கள்?
ஐ பதில்: இது குறித்து நேற்று அரசுடன் விரி வாகப் பேசியுள்ளோம். மீட்பு, நிவாரண மற்றும் மீள் கட்டமைப்புப் பணிகளைப் பரவலாக்கம் செய்வது தொடர்பான முக்கிய கொள்கைகள் அடங்கிய பேச்சுக்கள் இப்போது பூர்த்தியடைந் துள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பாதிப்புற்ற சகலருக்கும் சமச்சீராகவும் சமபங்கிலும் நிவாரணம் மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் உதவி கள் கிடைக்க வேண்டும் என்பதை அரசு உணர்ந்தே உள்ளது.
மீள்கட்டுமானப் பணியில் அரசுக்கும் புலிக ளுக்கும் இடையில் கூட்டிணைப்பும் பங்கிணை வும் இருக்கவேண்டும் என நாம் விரும்புகின் றோம். அதற்கான நிலைமையை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் - என்றார்.

<b>சமாதான முயற்சி பற்றி
இன்று எதுவும் பேசவில்லை </b>

இப்பேரழிவு விடயத்தில் நல்ல முன்மாதிரி யான நல்லெண்ண நடவடிக்கைகளை எடுப் பதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஆக்கபூர்வமான அத்திபாரங்களை அரசால் போடமுடியும்.
இருதரப்பும் சேர்ந்து ஆழிப்பேரலை அழி வுக்கான நிவாரண விவகாரத்தில் பொதுவான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் இணக் கம் காணுமானால் அது சமாதான முயற்சி விடயத்தில் ஆக்கபூர்வமான அடியாக இருக்கு மென்று நோர்வே கருதுகின்றது. இதைத் தவிர சமாதான முயற்சிகள் குறித்து நாம் இன்று பேசவில்லை.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான அவசர, மனிதாபிமான நிவாரணப் பொருள்கள் பெருமளவில் கிடைத்துள்ளன. சர்வதேச அமைப்புக்களும் ஒத்துழைக்கின் றன. இதில் நாம் குறைகூறவில்லை.
இனி அடுத்த கட்டமாக அந்த மக்களுக்கு இருப்பிடம், தொழில்வாய்ப்பு என்பன ஏற்படுத் திக் கொடுக்கப்படவேண்டும். மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அடுத்த கட்டமாக அவர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வீடுகள் கட்டப்பட வேண் டும். படகுகள் வழங்கப்படவேண்டும். தொழில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
பிரமாண்டமான அளவில் நிவாரண, புனர் நிர்மான, அபிவிருத்தி வேலைகள் செய்யப்பட வேண்டும். இது தனிப்பட்ட புலிகள் அமைப் பால் செய்யக்கூடிய விவகாரம் அல்ல. இதற்கு சர்வதேச உதவிகள் தேவை.
இதற்காக வரும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாகப் பகிர்ந்தளித்து நியாயம் செய்வதற்கு ஒரு கட்டமைப்புத் தேவை என்று நோர்வேயும் விரும்புகின்றது. நாமும் விரும்பு கின்றோம். அத்தகைய கட்டமைப்பை ஏற்படுத் தும் விடயத்தில் முழு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம். இது தொடர்பான பேச்சுக்களில் உள்ள சிக்கல்கள், இழுபறிகளை நாம் இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை.

<b>ஈரானிலிருந்து ஆயுதம் கொள்வனவு
</b>
பரஸ்பர நம்பிக்கையையும் நல்லெண்ணத் தையும் கட்டியயழுப்பும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாததை நோர்வே தரப்புக்குத் தலைவர் பிரபாகரன் கவலையோடும் அதிருப்தியோடும் சுட்டிக்காட்டினார்.
அரசுடன் இணங்கிப்போவதில் உள்ள முக் கிய குறைபாடு இதுதான்.
நிவாரணப் பொருள்களை அனுப்புவதில் உள்ள தாமதம் ஒருபுறம் இருக்க,இந்த மனி தப் பேரழிவுக்கு மத்தியில் அதனைத் தனது இராணுவக் கூட்டமைப்பை வலிமைப்படுத்தும் சந்தர்ப்பமாக அரசு பயன்படுத்துவது எமக்குக் கவலையளிக்கிறது. அரசு இந்த பேரழிவுக்கு மத்தியில் தனது இராணுவத்தை வலிமைப் படுத்த மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கை களில் ஒன்றாக ஈரானில் இருந்து 15 கோடி அமெரிக்க டொலர் (ஆயிரத்து ஐநூறு கோடி ரூபா) பெறுமதிக்கு ஆயுதங்களைக் கொள்வ னவு செய்வதை பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.
மனிதப் பேரழிவுக்காக சர்வதேச சமூகம் நிதியுதவியை வாரி வழங்கும்போது அரசு ஆயுதத் தளபாடங்களை வாங்கிக் குவித்து இவ்வாறு நடந்து கொள்வது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. - என்று தெரிவித்தார்.

Source : Uthayan

Print this item

  அமெரிக்க மருத்துவக்குழுவினருடன் புலனாய்வுத்துறை அடிக்கடி....
Posted by: Vaanampaadi - 01-23-2005, 08:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

மந்திகை மருத்துவமனையில் பணியாற்றும் அமெரிக்க மருத்துவக் குழுவினருடன் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி சந்திப்பு
(த.தனுஷன்)

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவென யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றவென மேலும் ஒரு தொகுதி அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினர் குடாநாட்டிற்கு வருகை தர உள்ளனர்.

குடாநாட்டிற்கு வருகை தரும் இந்த அமெரிக்கக் கடற்படை மருத்துவக் குழுவினர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கின்ற இடங்களிற்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்க உள்ளனர். இதேவேளை, மந்திகை மருத்துவமனையில் பணியாற்றி வரும் <b>அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவினரை படையினரின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.</b>

Source : Virakesari

Print this item

  ஈழ போராட்டம் ஒத்திவைப்பு: விடுதலை புலிகள்
Posted by: Vaanampaadi - 01-23-2005, 08:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஜனவரி 23, 2005

ஈழ போராட்டம் ஒத்திவைப்பு: விடுதலை புலிகள்

கிளிநொச்சி:



தமிழீழ போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. அங்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் மற்ற பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

இந் நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், நார்வே நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜான் பீட்டர்சனுக்கும் இடையே கிளிநொச்சியில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்டன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் சுனாமி பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. இங்கு சுனாமி பேரலைக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.



சுனாமி நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக எங்களது பிரதானக் கோரிக்கையான தமிழீழ போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஆனால் கைவிட்டுவிடவில்லை.

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து சுனாமி நிவாரணத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதையேதான் நார்வே குழுவினரும் வலியுறுத்தியுள்ளனர். புலிகளும், இலங்கை அரசும் கூட்டாக திட்டங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான் நிவாரண உதவிகள் மக்களை நேரடியாக சென்றடைய முடியும் என்றார் பாலசிங்கம்.

Source: Thatstamil

Print this item