| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 371 online users. » 0 Member(s) | 368 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,428
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,530
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| மீண்டும் ஐரோப்பாவுக்கு புலிகளின் அரசியல் குழு! |
|
Posted by: Vaanampaadi - 02-16-2005, 10:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மீண்டும் ஐரோப்பாவுக்கு
புலிகளின் அரசியல் குழு!
அரசின் பொறுப்பற்ற போக்கை
சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தும்
விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் குழு ஒன்று மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு விரை வில் விஜயம் செய்யவிருக்கின்றது.
ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டுமானப் பணிகளில் தமிழரை ஒதுக்கி அமைதி முயற்சிகளை உதாசினம் செய்து, போர்முனைப்புடன் செயற்படும் இலங்கை அரசின் பொறுப்பற்ற போக்கை சர்வதேச சமூகத்துக்கு அம்பலப்படுத்தப்படுவது உட்பட பல்வேறு முக்கிய பணிகளில் இக்குழு தனது மேற்குலக விஜயத்தின் போது ஈடுபடும் எனத் தெரிகின்றது.
விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் குழு நோர்வே, டென்மார்க், சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யவிருப் பது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் நடை பெறுகின்றன என்ற தகவலை அனுசரணைப் பணியில் ஈடுபட்டிருக்கும் நோர்வேத் தரப்பு வட்டாரங்கள் வெளியிட்டன.
பெரும்பாலும் இந்த மாத இறுதியில் இவ் விஜயம் இடம்பெறும் என்றும் அந்த வட்டா ரங்கள் தெரிவித்தன.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் காவல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், நீதி, நிர் வாகத்துறைப் பொறுப்பாளர் இ.பரராஜசிங்கம் (பரா) உட்பட ஏழுபேர் கொண்ட உயர்மட்ட அரசியல் குழுவே ஐரோப்பிய நாடுகளில் சுற் றுப்பயணம் செய்து அந்த நாடுகளின் தலை வர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவிருக் கின்றது.
வெளிநாடுகளில் வதியும் சட்ட அறிஞர்கள், மூத்த தமிழ்ப் பிரஜைகள், பிரமுகர்கள் போன் றோருடனும் இக்குழு கலந்துரையாடி பல திட்டங் களை வகுக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளைக் கையாள் வதற்கான உத்தேச பொதுக்கட்டமைப்பு பற்றி யும் அதன்சட்ட அதிகாரங்கள், செயற்பாடுகள், பங்கு - பணிகள் ஆகியவை பற்றியும் வெளி நாட்டில் வதியும் தமிழர்களான மூத்த சட்ட அறிஞர்களோடு இக்குழுவினர் விரிவாக ஆலோ சனை நடத்துவர் என்றும் கூறப்பட்டது.
Uthayan
|
|
|
| நான்............. |
|
Posted by: shiyam - 02-16-2005, 04:12 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (15)
|
 |
எனக்கு பசி தாகம் மோகம்
உடனே உடனே
ஒரேயடியாய் தீர்க்க
ஓரிடம் வேண்டும்
இரத்தம் சதை
இன்னும்பிற
என்பற்கள் நற நறக்க
கண்கள் சிவசிக்க
உடல்கொதி கொதிக்க
வீதியில் இறங்கி
விறு விறுவென
நுழைந்தேன்
யாழ் வைத்தியசாலை
நாசிகள் கூட
நாசம்பண்ணியதில்லையாமே
நான்செய்துபார்த்தாலென்ன
நுழைந்தேன்
நேயாளிகள்வரிசையாய்
நொய்ந்துபோய் சே
நோய்தான் வந்துவிட்டதே
இனி இருந்தென்ன
இறந்தென்ன -என்
இயந்திர துப்பாக்கி
இயங்கியது
ஓ....வென ஒரு ஓலம்
ஓடிவந்தனர் தாதியர்
வெள்ளையுடையில்
என்மனதோ கறுப்பானது
என்ன கவிஞர்
எழுதி குவிக்கின்றனர்
பெண்கள் முகத்தையும்
மார்பகத்தையும்
என்னைபோல் மெதுவாய்
கத்திகொண்டு
சிறிது சிறிதாய்
மெல்ல மெல்ல
கீறி குத்தி
வழியும் குருதியை
வாஞ்சையுடன்
ரசித்து ருசித்து
கையை உடைத்து
காலை முறித்து
கழுத்தையறுத்து- என்
வீரத்தையும்
மயங்கிகிடந்த
மங்கையர்மீது-என்
வீரியத்தையும்
மீண்டும் மீண்டும்
மீழ்பரிசீலனை
செய்துகொண்டெழுந்தபோது
எங்கேயோ ஓரு
குழந்தையின்
குவா குவா
கூக்குரல்....
குழந்தையொன்று
குறைகூறுவதா-என்வீரத்தை
செல்லமாய்தூக்கி
சுற்றி
சுவரில்ஓரடி
சுவரெங்கும்சித்திரமாய்
இரத்தம்
எதிரே இன்னும்சிலர்
இறைவனுக்கடுத்ததாய்
எல்லோரும்
இவர்களைத்தான்
வணங்குவார்களாமே??
பாவம்
பைத்தியகார வைத்தியர்கள்
எல்லேரும் என்னை வணங்கியபடி
வெடிகுண்டொன்றை வீசி
ஆசீர்வதித்துவிட்டு
வெளியேவந்து
ஆசுவாசமாய்
பீடி ஒன்றை உருவி
பற்றவைத்து
புகையை
இழுத்துவிட்டேன்
இந்த தேசத்துமக்களின்
ஓலங்களைபோலவே
பீடி புகையும்
காற்றில் கரைந்து
காணாமல்போனது
இப்போ
புரிந்திருக்கும்உங்களிற்கு
நான் யாரென்று
காந்தி தேசத்தின்
காவலன்
ஜெய் கிந்...................
22.ஐப்பசி 1987 இந்திய இராணுவத்தின் யாழ் வைத்திய சாலையில் படுகொலை செய்யபட்ட 70 பேரின் நினைவாக
|
|
|
| Help me with... |
|
Posted by: Velu - 02-16-2005, 01:33 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (1)
|
 |
[u[/u] Hello Yaravathu enakku Help pannavum.
Ithu enathu Keyboard. Keyboard il ulla tamil eluththu onrinai aluththinaal
veru tamil eluththu varukinrathu. Enna pirachchanai enru Unghalukku theriyuma? Enakku help pannavum. Neenghal koduththa link il enathu
kealvikku pathil Illai.
Gr, Velunayak
Intha keelulla linki amaththavum:
http://www.tamilvu.org/Tamilnet99/phonetic.htm
|
|
|
| சுரணை உள்ளவராயின்... |
|
Posted by: Kurumpan - 02-16-2005, 12:48 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
ஆண்டாண்டு காலமாய்
பழமையில் வாழும்
மானிடர் இவர்
மாற்றிட நினைத்து
மாண்டு போனவர் பலர்
உருக்குலைந்து போகும்
உணர்வற்றவர்களை எண்ணி
உயிர் உள்ள உன் காலத்தை
உதாசினம் செய்யாதே!
மாற்றானை மாற்றுவதை விட
அவன் நாணும் வண்ணம்
நீ என் செய்தாய் என கொள்
சுரணை உள்ளவராயின்
சுட்டுத்தானே ஆகவேண்டும்...
தலைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. ---------- யாழினி
|
|
|
| இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் |
|
Posted by: kasthori - 02-16-2005, 12:13 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (8)
|
 |
ஒரு தந்தை, மாணவனான தனது மகனைப் பார்க்கப் பாடசாலைக்குச் சென்றிருந்தார். அந்தக் கல்விக் கூடத்தில் அவர் கண்ட காட்சியை மிக வேதனையுடன் தெரிவித்தார்.
இவர் பாடசாலைக்குள் பிரவேசித்தபோது ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்துக்கொண்டிருந்தனர். வகுப்பறையில் அவர்கள் ஆஹா ஓஹோ என்ற சிரிப்பொலிகளுடன் கையடக்கத் தொலைபேசிகளில் உரையாடிக்கொண்டிருந்தனர். இதனை மாணவர்கள் வேடிக்கையாக அவதானித்துக்கொண்டிருந்தனர்.
ஆசிரியர்கள் இந்த இலட்சணத்தில் நடந்துகொண்டால் மாணவர்கள் கல்வியில் முன்னேறுவது எப்படி? வகுப்பு நேரத்தை இப்படிக் கையடக்கத் தொலைபேசி உரையாடல்களில் செலவிட்டால் மாணவர்கள் உருப்பட முடியுமா? என்று அந்தத் தந்தை அங்கலாய்த்தார்.
பாடசாலை அதிபர் இதில் கண்டிப்பை காட்ட வேண்டாமா?
அந்தத் தந்தை அதிபரைக் கண்டிருந்தால் இதை எழுதியிருக்கமாட்டார். ஏனெண்டால் ஆசிரியர்கள் சாதாரண கைத்தொலைபேசி பயன்படுத்தினால் அதிபர் camera phone பயன்படுத்தியிருப்பார். அவ்வளவுதான் வித்தியாசம். இவர்கள் எமது இளைய தலைமுறையை அழிக்கவென்றே பிறப்பெடுத்து வந்த ஆசிரியமணிகள். இந்தப்போக்கில் போனால் இலங்கை எப்போ முன்னேறுவது. முன்னேறின மாதிரித்தான்.
|
|
|
| அறியாமைக்கு ஓர் அறிவுரை |
|
Posted by: tamilini - 02-16-2005, 12:04 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (174)
|
 |
வாய் வார்த்தையால்
வசமாய் ஜாலம் காட்டும்
ஈனப்பிறப்புகள் இன்றி
வாழ்வில்லையா...??
தாங்கிட ஒரு உறவென்று..
தடுக்கி விழாது பிடித்திட
ஒரு தூண் என்று..
வாழ்வெல்லாம் கூட வர
ஒரு துணை என்று
நம்பி வாழ்ந்தது போதாதா...??
அன்பினை நெஞ்சினில் அடக்கி
அவர்களை கண்களில் சுமந்து..
அன்பிற்காய் வாழும்
அற்பப்பிறவிகளாய்
அறியமையால்
அடைப்பட்டது போதாதா..??
வேசக்காராம் ஏமாற்றுக்காரராம்
அராய்ச்சியாம்.. அதற்கு பொருளாம்..
பெரிய அறிஞர்கள் இவர்கள்..
ஆராய்ச்சி செய்கின்றனர் பெண்களை
அன்னை என ஒருத்தி..
ஆருயிர் கொடுத்து..
முளையான முதலில் இருந்து...
பழமாகிய பின்பும்
பி்ள்ளையாய் நெஞ்சில் கொள்வாள்
தங்கையாய் அக்கைவாய்..
இன்னும் எத்தனை
எத்தனை வடிவங்களாய்..
இவர்களுக்கு பெண்கள்...!
கொண்டவனை உயிராய்
எண்ணும் பத்தினிகள் வேறு
எதற்கு ஆராய்ச்சி பெண்ணை..
அவள் பெருமை அறிந்தா..??
இல்லை சிறுமைப்படுத்தவா...??
மனைவி உயிருடன் இருக்கையில்
பிற மனை நாடும் கணவனும் உண்டு..
காதலி கண் முன் இருக்கையில்
கண் மேயும் காதலனும் உண்டு
தங்கையையே தாயாக்கிய..
தமயனும் உண்டு
தமக்கையை விற்றுப்பிழைக்கும்
தம்பியும் உண்டு...
தேவதாசாய் வாழ்கின்ற..
காதலரும் உண்டு..
தேவதாசை விட
வேதனையில் வாழும்
பார்வதிகளும் உண்டு
அமைதியாய் வாழ்வதால்
அவர்கள் போலிகளா..??
காதலித்தேன் தோல்வி என
கதறி அழுவது தான் காதலா..??
மனதோடு மெளனமாய் அழுகின்ற
பெண்மைகள் எத்தனை...??
சாஜகானைப்போல மாளிகை
கட்டினால் தான்
உண்மையான காதலா..??
தோல்விகள் என்பது எங்கும் சமனே..
மெளனமாய் இருப்பதனால்
பெண்கள் மேல் பழி தான்..
மாற்றுங்கள் பல்லவியை.
வெளிச்சத்திற்காய் நெருப்பிள்
விழும் விட்டில் பு}ச்சிகள் அல்ல நீங்கள்
பகுத்தறிவு கொண்ட மனிதர்கள்
சிந்தனையில் தான் செயல்திறம் உண்டு.
கதைவிடுவதில் காரியம் ஆவதில்லை
உண்மையை உணருங்கள்.
வாழ்க்கை அர்த்தப்படும்
பழிகளை வீசாதீர்
பெண்கள் மீது.
பெண்கள் பழி போட நினைத்தால்
தாங்கிட ஏது வலிமை உமக்கு
காதலுக்காய் நினைவாலையம்
ஆக்கத்தான் முடியும் உம்மால்
ஆனால்
அழிக்கவும் முடியும் பெண்ணால்
மாற்றுங்கள் எண்ணங்களை
இல்லையேல் மாற்றப்படும்....!
:twisted:
|
|
|
| மௌனங்கள்... |
|
Posted by: shanmuhi - 02-15-2005, 11:39 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>மௌனங்கள்... </span>
விலகிப்போக நினைக்கின்ற போதும்
விலகிப்போக முடியாமல் ஒன்றிப் போன
நினைவுகளை நெஞ்சினில் சுமந்து சுமந்து
நினைவுகளோடு வாழ்வதும் ஒரு காதல்தான்
நெருஞ்சி முள் படுக்கையின் மீதே
நினைவுகள் வருட நினைத்திடும் வேளையிலும்
நெஞ்சின் நிஜத்தினை நிழலாய் சுமக்கையில்
நிறைந்திடும் வெப்பமான பெருமூச்சுக்கள்
வீண்மீன்கள் இல்லாத வானம் போல
மணக்கும் ரோஜாக்கள் இல்லாத செடிகளுக்குள்
இணைந்திருக்கும் மௌனமான சோகத்துக்குள்ளும்
கண்ணீராய் துளிர்த்திடும் கோலங்கள்
ரோஜாக்கள் காதலை வாழ்த்திக் கொண்டிருக்க
ரோஜா மொட்டுக்களோ அடுத்த மலர்விற்கான காத்திருப்பில்
ரோஜாச்செடிகளோ சோபையிழந்த சோகத்தின் பிடியில்
முகாரி ராகமாய் இசைத்திடும் மௌனங்கள்
|
|
|
| Naan Puthusu Ennai Varavetkavum |
|
Posted by: Velu - 02-15-2005, 11:29 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (4)
|
 |
Ennidam tamil keyboard Ullathu. Aanal pavippathu kastram. Enenral
tamil elutthai taddum poothu varuvathu veru tamil eluththu. Utharanamaaha
Keyboard il aana y aluththinaal veru tamil eluthu varukirathu.
Enna pirachchanai enru sollungkal Help pannungkal. Unkaludan tamilil uraiaada aasaipadukiren. Ungkalin Kuluvil naanum iniya aasippadukiren.
Muthalil tamilil elutha aasai enakku.
Ungkalil naanum oruvanaka ninaikkum
velunayak
|
|
|
|