![]() |
|
நான்............. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நான்............. (/showthread.php?tid=5228) |
நான்............. - shiyam - 02-16-2005 எனக்கு பசி தாகம் மோகம் உடனே உடனே ஒரேயடியாய் தீர்க்க ஓரிடம் வேண்டும் இரத்தம் சதை இன்னும்பிற என்பற்கள் நற நறக்க கண்கள் சிவசிக்க உடல்கொதி கொதிக்க வீதியில் இறங்கி விறு விறுவென நுழைந்தேன் யாழ் வைத்தியசாலை நாசிகள் கூட நாசம்பண்ணியதில்லையாமே நான்செய்துபார்த்தாலென்ன நுழைந்தேன் நேயாளிகள்வரிசையாய் நொய்ந்துபோய் சே நோய்தான் வந்துவிட்டதே இனி இருந்தென்ன இறந்தென்ன -என் இயந்திர துப்பாக்கி இயங்கியது ஓ....வென ஒரு ஓலம் ஓடிவந்தனர் தாதியர் வெள்ளையுடையில் என்மனதோ கறுப்பானது என்ன கவிஞர் எழுதி குவிக்கின்றனர் பெண்கள் முகத்தையும் மார்பகத்தையும் என்னைபோல் மெதுவாய் கத்திகொண்டு சிறிது சிறிதாய் மெல்ல மெல்ல கீறி குத்தி வழியும் குருதியை வாஞ்சையுடன் ரசித்து ருசித்து கையை உடைத்து காலை முறித்து கழுத்தையறுத்து- என் வீரத்தையும் மயங்கிகிடந்த மங்கையர்மீது-என் வீரியத்தையும் மீண்டும் மீண்டும் மீழ்பரிசீலனை செய்துகொண்டெழுந்தபோது எங்கேயோ ஓரு குழந்தையின் குவா குவா கூக்குரல்.... குழந்தையொன்று குறைகூறுவதா-என்வீரத்தை செல்லமாய்தூக்கி சுற்றி சுவரில்ஓரடி சுவரெங்கும்சித்திரமாய் இரத்தம் எதிரே இன்னும்சிலர் இறைவனுக்கடுத்ததாய் எல்லோரும் இவர்களைத்தான் வணங்குவார்களாமே?? பாவம் பைத்தியகார வைத்தியர்கள் எல்லேரும் என்னை வணங்கியபடி வெடிகுண்டொன்றை வீசி ஆசீர்வதித்துவிட்டு வெளியேவந்து ஆசுவாசமாய் பீடி ஒன்றை உருவி பற்றவைத்து புகையை இழுத்துவிட்டேன் இந்த தேசத்துமக்களின் ஓலங்களைபோலவே பீடி புகையும் காற்றில் கரைந்து காணாமல்போனது இப்போ புரிந்திருக்கும்உங்களிற்கு நான் யாரென்று காந்தி தேசத்தின் காவலன் ஜெய் கிந்................... 22.ஐப்பசி 1987 இந்திய இராணுவத்தின் யாழ் வைத்திய சாலையில் படுகொலை செய்யபட்ட 70 பேரின் நினைவாக - shanmuhi - 02-16-2005 22.ஐப்பசி 1987 ø ¿¼ó¾ ¿¢¸úÅ¢¨É ¸ñÓý ¿¢ÆÄ¡¼ ¨Åò¾¨ÁìÌ ¿ýÈ¢¸û. Å¡úòÐì¸û ܼ... - வியாசன் - 02-16-2005 சியாம் இந்திய அரசு நடந்த சம்பவத்திற்கு தலைகுனிந்தததோ இல்லையோ தெரியாது இந்த கவிதையை கண்டால் தலைகுனிவர் வாழ்த்துக்கள் சியாம் - tamilini - 02-16-2005 நானும் என்ன சியாம் அண்ணா இப்படிச்சொல்லுறார் என்று பாத்தன். அந்த சம்பங்கள் நமக்கு தெரியவிடினும் அண்மையில் அக்கினிப்பறவைகள் நிகழ்ச்சியின் மு}லம் கொஞ்சம் அறிந்து கொண்டேன்.. சியாம் அண்ணாவின் வரிகள் அவற்றை மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்திச்சு..
- shiyam - 02-16-2005 tamilini Wrote:இது அவர்கள் செய்தவற்றில் சிறு உதாரணம்தான் ரி.ரி.என். தொலைகாட்சியில்அவர்களின் அட்டூளியங்கள் ஒரு நிகழ்சியாக போகின்றதென்று அறிந்தேன் ஒவ்வொரு தமிழனும் உயிருள்ளவரை மறக்க முடியாதவைகள் அவை :twisted: :twisted: - tamilini - 02-16-2005 ம் அதில தான் நானும் கேட்டன்.. பலர் கண்ணீருடன் கண்களால் கண்ட கொடுமைகளை.. சொன்னார்கள்.. :? - Kurumpan - 02-16-2005 ஆமாம்.. அந்த காலத்தால் கரைந்து போகாத கறைபடித்த நாட்களை நேரிடையாகவே அனுபவித்தவர்களில் நானும் ஒருவன். துரோகிகளுக்கு மலர்துாவி வரவேற்ற அப்பாவிகளே மலர் வளையங்களுக்கு ஆளான சோகம் அது. நன்றி சியாம். அசைபோட்டதற்கு! - KULAKADDAN - 02-16-2005 நன்றி அண்ணா...கறைபடிந்தவர்களின் வாரலாற்றை நினைவுட்டியதற்கு........... - shiyam - 02-16-2005 <!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->ஆமாம்.. அந்த காலத்தால் கரைந்து போகாத கறைபடித்த நாட்களை நேரிடையாகவே அனுபவித்தவர்களில் நானும் ஒருவன். துரோகிகளுக்கு மலர்துாவி வரவேற்ற அப்பாவிகளே மலர் வளையங்களுக்கு ஆளான சோகம் அது. நன்றி சியாம். அசைபோட்டதற்கு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே??ஏனெனில் களத்தில் கன சிறியவர்கள் இருப்பதால் அவர்களிற்கு நடந்தவைகள் தெரிய வாய்ப்பில்லை அவர்களும் அறிந்து கொள்ளட்டும் - Kurumpan - 02-16-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Kurumpan+--><div class='quotetop'>QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->ஆமாம்.. அந்த காலத்தால் கரைந்து போகாத கறைபடித்த நாட்களை நேரிடையாகவே அனுபவித்தவர்களில் நானும் ஒருவன். துரோகிகளுக்கு மலர்துாவி வரவேற்ற அப்பாவிகளே மலர் வளையங்களுக்கு ஆளான சோகம் அது. நன்றி சியாம். அசைபோட்டதற்கு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே??ஏனெனில் களத்தில் கன சிறியவர்கள் இருப்பதால் அவர்களிற்கு நடந்தவைகள் தெரிய வாய்ப்பில்லை அவர்களும் அறிந்து கொள்ளட்டும்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> காலம் கனியும் போது கண்டிப்பாக அந்த கனந்த மனத்தினை அனைவரோடும் பகிர்ந்து கொள்வேன். - Danklas - 02-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->காலம் கனியும் போது கண்டிப்பாக அந்த கனந்த மனத்தினை அனைவரோடும் பகிர்ந்து கொள்வேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ±ýÉ ÌêõÀ¡ ¿£í¸û ºÃ¢Â¡É §Á¡ºõ §À¡í¸... À¢ýÉ ±ýÉ ¸¡Äõ¸É¢Ôõ ±ñÎ ¦º¡øÖÈ£í¸.. ¯í¸ÙìÌ ¸¡Äõ ¸É¢ÔÁðÎõ º¢ýÉôÒ º¢ýɡ ¾Á¢Æ¢É¢(75) ¿¡ý ¸ÕÉ¡ ±øÄ¡õ þÕôÀ§Á¡ ¦¾Ã¢Â¡Ð «Ð츢¨¼Â¢Ä ¦º¡øÖí¸ Á¡Á¡... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (§ƒ¡ù ¾ôÀ ¿¢¨ÉîͧÀ¡¼§¾í¸ôÀ¡ ¿¡ý ¦º¡ýÉÐ ¸Çò¾¢Ä þÕôÀ§Á¡ ±ñÎ)(¸ÕÉ¡×õ ¿¡Ûõ «Ð ¦¾Ã¢Â¡)
- aswini2005 - 02-17-2005 டன்கிளாஸ் ஐயா உங்களுக்கு கவிதைத்தோட்டத்தில் என்ன வேலை ? உங்கள் வேலையெல்லாம் கட்சி தாவலும் ää கடதாசியில் அறிக்கை விடுதலும் அல்லவா ? இந்திய இராணுவகாலத்தில் உங்கள் முந்தைய கட்சியால் நமது மக்கள் பட்ட துயர் எவ்வளவு யாரால்தான் அதை மறக்க முடியும் ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 02-17-2005 நன்றி சியாம் அண்ணா - Niththila - 02-17-2005 இப்படி செய்தவர்களை எல்லாம் கொபி அன்னானுக்கு கண்ணில தெரியாது போல :evil: :evil: :evil: - aswini2005 - 02-17-2005 <!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->இப்படி செய்தவர்களை எல்லாம் கொபி அன்னானுக்கு கண்ணில தெரியாது போல :evil: :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அவருக்கு இப்ப வயசு போயிட்டுது நித்திலா மாறாட்டம் தொடங்கியிருக்கிற நேரம் இதெல்லாம் அனானுக்கு அங்காலை ஐயா புஸ்சுக்கு இதெல்லாம் விளங்காது. :oops: - shiyam - 02-17-2005 Niththila Wrote:இப்படி செய்தவர்களை எல்லாம் கொபி அன்னானுக்கு கண்ணில தெரியாது போல :evil: :evil: :evil:இதெல்லாம் மனித உரிமைக்குள்ள அடங்கிது அன்று மானிப்பாய் வீதி மதில்களில்எம்மவரின் வெட்டியெடுத்த தலைகள் மட்டும் பொருட்காட்சிக்கு வைப்பது போல் வைத்திருந்தார்கள் அதை பற்றியெல்லாம் பேச மாட்டார்கள் ஆனால் இன்று தாய்தந்தையை இழந்த குழந்தையை கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து பராமரித்தால் சிறுவரை படையில் சேர்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுவார்:கள் |