Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 401 online users.
» 0 Member(s) | 399 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,428
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,530
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  புலிகளை தடை செய்ய கனடா மறுப்பு
Posted by: Mathan - 02-17-2005, 02:10 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

விடுதலைப்புலிகளை கனடாவில் தடை செய்ய கனடிய அரசு மறுப்பு

விடுதலைப்புலிகளை கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினரின் வேண்டுகோளை கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு அவர்கள் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காää நோர்வே உட்பட பல நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் கனடாவில் மேற்கொண்டுää நிலைமையை சீர்கேட்டை அனுமதிக்க வேண்டாம் எனத் தம்மை கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'விடுதலைப்புலிகளையும் உள்வாங்கி இயங்குவதன் மூலமே போர் நிறுத்தத்தை மேலும் வலுப்படுத்திää தொடர்ந்து பேணுவதற்கு உதவும் என நாம் திடமான நம்புகின்றோம். இந்த நேரத்தில் அவர்களை தடை செய்வதன் மூலம் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்பதையும் நாம் உண்மையாக உணர்கின்றோம்ää" எனக் கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு தனது அமைச்சக உபகுழு குழுநிலை விவாதத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்;.

2001 செப்டம்பரில் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின் கனடாவிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் இதுவரை 35 அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக கனடாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம்ää விடுதலைப்புலிகளையும் உள்ளடங்கி 6 தென்னாசிய அமைப்புக்களை தடை செய்யுமாறு கனடிய உளவுத்துறை வேண்டுகோள் விடுக்க கனடிய மந்திரிசபை விடுதலைப்புலிகளை தவிர்த்து ஏனைய அமைப்புக்களையே அப்போது தடை செய்யது.

எனினும் வலதுசாரி போக்குடைய கனடிய எதிர்கட்சியான கன்சவேட்டிக் கட்சியும் வலதுசாரி மற்றும் புதிய குடிவரவாளர் எதிர்ப்பு பத்திரிகைகளும் அவ்வவ்போது விடுதலைப்புலிகள் தடை விடயத்தை கடினய பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் தொடர்ந்தும் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Puthinam

Print this item

  பகோடா
Posted by: thamizh.nila - 02-17-2005, 02:10 AM - Forum: சமையல் - Replies (20)

பகோடா

கடலைமா - 1 கப்
அரிசி மா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 தே.க
அப்ப சோடா - கொஞ்சமா கிள்ளி போடுங்கோ...அதிகம் போட்டு அவதி பட வேண்டாம்
கறி வேப்பிலை - கொஞ்சம்
மல்லி இலை - கொஞ்சம் [போடாமலும் விடலாம்]
நெய் /எண்ணை - 2 மே.க
எண்ணை [பொரிப்பதற்கு]

1. மிளகாயையும், வெங்காயத்தையும் குறூனலாக அரியுங்கோ.விரலை அரிய வேண்டாம். :twisted:

2.மேலே கூறிய மா வகைகளையும், தூளையும், உப்பையும் ஒன்றாக கலந்து அரி தட்டில் இட்டு அரிக்கவும். Arrow

3.ஒரு சட்டியில் நெய்யையும், அப்ப சேடாவையும் இட்டு நன்றாக நுரை வரும் வரை கலக்கவும். :?:

4.மா வகையாறுகளை இத்துடன் நன்றாக கலக்கவும்.

5.சிறிதளவு நீர் இட்டு ந்ன்றாக கலக்கவும்.

6. எண்ணையை கொதிக்க வைத்து, மா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து..பொன்னிறமாகும் வரை நன்றாக பொரித்து எடுக்கவும்.

7. ஆறிய பின் சாப்பிடலாம்....இல்லா விடில் உடனடியாக மருத்துவரை நாட வேண்டி இருக்கும்..
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  அரசாங்கத்தின் ஊதுகுளலாக மாறியுள்ள வானொலி.
Posted by: Nanthaa - 02-17-2005, 01:10 AM - Forum: புலம் - Replies (3)

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Print this item

  50ˆ ¦ÅøÖÁ¡ 20Ð???
Posted by: Danklas - 02-17-2005, 12:14 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (10)

<b>ருவென்ரி-ருவென்ரி கிரிக்கெட்டின் மவுசு அதிகரித்து வருகிறது</b>

சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் அண்மைக் காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை எது தெரியுமா? ஹருவென்ரி- ருவென்ரி 'ஐம்பதுìÌ - ஐம்பது' பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

கிரிக்கெட் விளையாட்டுக்கு பொதுவாகவே சோம்பேறிகளின் ஆட்டம் என்ற பட்டப்பெயருண்டு கால்பந்து ஹொக்கி கைப்பந்தாட்டத்தைப் போல் ஒரு சில மணி நேரங்களிலேயே கிரிக்கெட் முடிந்துவிடுவதில்லை.
கிரிக்கெட் போட்டியின் முடிவை அறிந்து கொள்ள குறைந்தது ஒரு நாளில் (ஒரு நாள் போட்டி) இருந்து 5 நாட்கள் (டெஸ்ட் போட்டி) வரை செல்லும். இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் இதற்கெல்லாம் பெரும்பாலானோரால் நேரம் ஒதுக்கமுடிவதில்லை. உலகளவில் பரவலாக கிரிக்கெட் பிரபலமாகாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இதைக் கருத்தில் கொண்டே கடந்த 70 களில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒரு நாள் போட்டிகள் உருவாக்கப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியே ஹருவென்டி - ருவென்டி' கிரிக்கெட் போட்டி.

அலுவலகத்துக்குச் சென்று வருவோரால் பகலில் நடைபெறும் ஒரு நாள் போட்டியையே முழுமையாகப் பார்த்து ரசிக்கமுடியாது. பகலிரவாக நடைபெற்றாலும் பாதி ஆட்டத்தை மட்டும்தான் பார்க்கமுடியும். இது போன்ற குறைகளைப் போக்கவும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கவுமே இந்த ஹருவென்ரி - ருவென்ரி' கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சரி ஹருவென்ரி - ருவென்ரி'யின் விதிமுறைகள்தான் என்ன? வழக்கமாக ஒரு நாள் போட்டியில் முதல்பாதியில் ஒரு அணி விளையாடுவதற்கு 3 மணி நேரம் தேவை. ஆனால் ருவென்ரி - ருவென்ரியிலோ ஒரு அணி தனது முதல்பாதி ஆட்டத்தை ஒரு மணி நேரம் இருபது நிமிடங்களில் முடித்துவிடலாம்.

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா. ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 50 ஓவர்கள் விளையாட வேண்டும் என்பது தெரிந்த ஒன்று. ருவென்ரி - ருவென்ரி மாறுபடுவதே இங்குதான்.

அதாவது இப்போட்டியில் பங்குபெறும் அணிகள் தலா இருபது ஓவர்கள் மட்டுமே ஆடவேண்டும். அதுதான் இப்போட்டியின் முக்கிய விதி.

வழக்கமாக ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 10 ஓவர்களினை வீசலாம். ஆனால் இப்போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் நான்கு ஓவர்களுக்கு மேல் பந்துவீச முடியாது. மேலும் நோபோல்' வீசப்பட்டால் துடுப்பெடுத்தாடும் அணிக்கு வழக்கமாக ஒரு உதிரி ஓட்டம் வழங்கப்படும். அதற்குப்பதிலாக இந்தப் போட்டியில் துடுப்பாட்ட அணிக்கு 2 உதிரி ஓட்டங்கள் வழங்கப்படும்.

மேலும் ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களில் (80 நிமிடங்கள்) ஒரு இனிங்ஸ் முடிந்துவிடுவதால் இரு அணிகள் ஆடும் முழு ஆட்டத்தையும் மூன்று மணிநேரத்திலேயே ஒருவர் பார்த்துவிடமுடியும். ஒரு கிரிக்கெட் போட்டியை பார்க்க ஒரு நாள் முழுவதும் காத்திருக்கவேண்டிய பிரச்சினையெல்லாம் இதில் கிடையாது. மாலை 6 மணிக்கு ஒளிவெள்ளத்தில் தொடங்கினால் இரவு 9 மணிக்குள் ஆட்டத்தை முடித்துவிடலாம்.

நீண்ட நேரம் மைதானத்திலேயே அமர்ந்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது.இப்போட்டிகளில் ஒரு அணி 150 ஓட்டங்கள் எடுத்தாலே அது எதிரணிக்கு மிகக் கடினமான வெற்றி இலக்காக இருக்கும் எனக் கருதப்படுகிறது இங்கிலாந்தில் உருவான இந்த ஆட்டம் அங்கு வேகமாகப் பிரபலமாகி விட்டது.

தென்னாபிரிக்காவிலும் பரவலாக ஆடப்படுகிறது. இதனால் அந்நாடுகளில் கிரிக்கெட் ஆட்டத்தைக் கண்டுகளிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஒரு கணக்கெடுப்பின் போது இங்கிலாந்தில்இ ருவென்ரி- ருவென்ரி போட்டியைப் பார்க்க வந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்க்கையில் முதல்முதலாக மைதானத்துக்கு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தற்போது இப்போட்டி அவுஸ்திரேலியாவிலும் பிரபலமடைந்துள்ளது. கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அடிலெய்டில் நடைபெற்ற ருவென்ரி- ருவென்ரி போட்டியில் பாகிஸ்தானும் அவுஸ்திரேலிய ஏ' அணியும் மோதின. இதில் 56 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்ற போதிலும் இப்போட்டியை பெரிதும் வரவேற்றார் பாகிஸ்தான் கப்டன் இன்சமாம் உல் ஹக்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இப்போட்டியை தனது மாநிலங்களுக்கிடையிலான போட்டிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வாரம் தொடங்கவுள்ள நியூஸிலாந்துடனான தொடலிலும் ருவென்ரி- ருவென்ரி போட்டியில் ஆஸி. ஆடவுள்ளது.
தனது பரம எதிரி (கிரிக்கெட்டில்) இங்கிலாந்துடன் ஆண்டுதோறும் நடைபெறும் ஆஷஸ்' (சாம்பல்) தொடரிலும் ருவென்ரி- ருவென்ரி போட்டியில் ஆஸி. ஆடவுள்ளது.
மெல்போர்னில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் ருவென்ரி- ருவென்ரி தொடர்பாக டெஸ்ட் போட்டியில் ஆடும் 10 நாடுகளின் உறுப்பினர்கள் விவாதித்து நல்ல முடிவை எடுத்துள்ளனர்.
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அபய் குருவில்லாவின் முயற்சியால் இந்தியாவின் மும்பையிலும் இப்போட்டி நடைபெறவுள்ளது. ஆனாலும்இ இது பற்றி இலங்கை இன்னும் யோசிக்கவில்லை.இனி ஒரு சினிமாவுக்குச் சென்று வருவது போல் ருவென்ரி- ருவென்ரி கிரிக்கெட் போட்டிக்குச் சென்று வரலாம்.

Print this item

  ±ôÀÊ º£É¢îºõÀø ¦ºö¢ÈÐ??
Posted by: KULAKADDAN - 02-16-2005, 11:41 PM - Forum: சமையல் - Replies (2)

பெரிய வெங்காயம் 1/4 kg
எண்ணெய்/ நல்லெண்ணெய்
பழபுளி 50g
சீனி 50g
கறுவா கராம்பு எலம் மிளகாய் தூள்.. சிறிதளவு...


வெங்காயாத்தை நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்
தாச்சியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிதமான சுட்டுக்கு மின் அடுப்பை திருகி எண்ணைய் சுடானதுடம் வெங்காயத்தை இட்டு வதக்கவும்...
வெங்காயம் வாடியதும் வாசனை பொருட்களை இட்டு வதக்கி சிறிதளவு நீரில் கரைத்தெடுத்த பழ புளியை விட்டு சீனி சேர்த்து
நீர் வற்றும் மட்டும் சு10டாக்கினால் சீனிசம்பல் ரெடி

வாசனைக்கு சிலர் இறைச்சி கூட்டு அல்லது தூள் சேர்ப்பர்

Print this item

  அவிசு வைப்பது எப்படி........
Posted by: KULAKADDAN - 02-16-2005, 08:22 PM - Forum: சமையல் - Replies (11)

உங்களுக்கு தேவையான அளவு அரிசியை கழுவி பாத்திரத்திலிட்டு பச்சை அரிசியாயின் மேல் 1/2 அங்குலம் நீரும்... புழுங்கல் அரிசியாயின் 1அங்குலம் நீரும் விட்டு கொதிக்க வைக்கவும்.. அ
கொதிவந்ததும் பருப்பு உங்களுக்கு பிடித்த பொடியாக்கிய மரக்கறிகளையுமிட்டு அவியவிடவும். நீர்; வற்றி அரிசி அவிந்து வரும் போது சிறிதளவு பால் விட்டு..அளவுக்க உப்பு தூள் இட்டு நீர் தன்மை வற்றியதும் இறக்கி சிறிது வெங்காயம் கடுகு தாளித்து சேர்த்தீர்களானால் அவிசு ரெடி
கொஞ்சம் அதிகமாக செய்து...குளிர் சாதன பெடடியில் வைத்து தேவையான அளவை நாளாந்தம் சுடாக்கி சப்பிடலாம்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  ¼ì¸¢ÇŠ Á£Ð ÌüÈðÎ..
Posted by: ¸ÅâÁ¡ý - 02-16-2005, 06:57 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (9)

<b>அமைச்சில் பணியாற்றும் ஊழியரைத் தாக்கியதாக டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டு</b>

விவசாய விற்பனை துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அமைச்சிø பணியாற்றும் செயலரின் காரியாலய உதவியாளரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதற்கு எதிராக அமைச்சின் ஊழியர்கள் ஆட்சேபம் ஒன்றை அமைச்சின் செயலாளரிடம் நாளைய தினம் கையளிக்கவுள்ளனர்.
இதில் அமைச்சில் பணியாற்றும் நூறுபேரின் கையொப்பங்களை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சில் பணியாற்றும் யு ஜி பந்துல எனப்படும் ஊழியரை அவருக்கே தெரியாத காரணம் கூறப்பட்டு அமைச்சர் தாக்கியதாக இந்த முறைப்பாட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஊழியர்கள் கருத்துக் கூறுகையில்:
இதுவரை காலமும் அமைச்சு ஒன்றின் ஊழியர் அமைச்சராலோ அல்லது அரசியல்வாதி ஒருவராலோ தாக்கப்பட்டதை தாம் அறிந்திருக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையானது ஜனநாயக வரம்புகளை மீறுவது மாத்திரமல்லாமல்ää மனித உரிமை மீறலுமாகும்.
சாதாரணமாக அரச ஊழியர் ஒருவர் தவறு செய்வாராக இருந்தால் அதற்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொள்வதே நடைமுறையாகும்.
எனினும் இதனை மறுக்கும் வகையில் அமைச்சர் நடந்து கொண்டமையால் தமக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது உரிய இடமாற்றங்களை வழங்கவேண்டும் என அமைச்சின் செயலரிடம் கோரியுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதிää பிரதமர்ää எதிர்க்கட்சித் தலைவர் பொது நிர்வாக அமைச்சர் உட்பட்டோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print this item

  மதமாற்றம்
Posted by: shiyam - 02-16-2005, 05:24 PM - Forum: புலம் - Replies (8)

மதமாற்றம் 90களில் நான் பிரான்ஸ் வந்த புதிதில் இந்த மாற்றவாதிகள் அனேகம்பேரை சந்தித்திருக்கிறேன் உரையாடி வாதங்கள் செய்துமிருக்கிறேன் .குறிப்பாக அவர்கள் எமது பலவீனங்களையறிந்து அதாவது வதிவிட பிரச்சனை வேலையின்மை மொழி பிரச்சனை இப்படியான பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட மனஉளைச்சலில் உள்ளவர்களை இலகுவில் பேசி பேசியே தங்கள் பக்கம் இழுப்பதில் வல்லவர்கள் குறிப்பாக இவர்களது அணுகுமுறை குடியேற்றவாசிகளை நோக்கியதாகவே இருக்கும்.ஆனாலும் மற்றைய சமூகங்களைவிட ஈழத்தமிழர் சமூகத்தில் இவர்களின் போதனைகள் அதிகளவு வெற்றியை கொடுக்கவில்லையென்பதே உண்மை.அதற்கு எமது பழகிப்போன கலாச்சார சமூக கட்டமைப்பும் ஒரு காரணமாகும்.2000ம் ஆண்டுகளளவில்எம்மிடையே இவர்களின் போதனைகள் மிகவும் குறைந்துபோயிருந்தது. காரணம் இவர்கள் இந்த 2000ம் ஆண்டு உலகம் அழிக்கப்படும்.அப்போது கர்த்தரை நம்பியவர்களே காப்பாற்றபடுவார்கள் என்றுமிரட்டியே அதிகளவு போதனைகளில் ஈடுபட்டனர்.ஆனால் 2000த்தில் பெரிதாக எதுவும் நடைபெறாததால்.இவர்களின் போதனையும் சோர்ந்து போயிருந்தது..ஆனால் அண்மையில் நடந்த சுனாமி அனர்த்தத்தின் பின் இவர்களின் பிரச்சாரம் மீண்டும் எம்மவர்மத்தியில சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது கைகளில் புத்தகங்களுடன் வலம்வர ஆரம்பித்து விட்டார்கள்.எனவே இவர்களைபற்றியதும் இவர்களின் மதங்களை பற்றியதுமான ஆரோக்கியமான விமரிசனங்களை முன் வையுங்கள்...

Print this item

  இணைய வல்லுனர்களின் உதவியை..
Posted by: VERNON - 02-16-2005, 02:15 PM - Forum: கணினி - Replies (4)

இணைய வல்லுனர்களிடம் ஒரு வினாவுடன் வருகின்றேன்

திட்டம்
என்னிடம் PPS மற்றும் MPEG வகை கோவைகள் முறையே C:\PPS , c:\mpeg எனும் ஆவணத்தில் பதிவு செய்துள்ளேன். தொடர்ந்தும் இணைத்து வருகின்றேன். இக் கோவைகளை html அல்லது asp வகை இணையப்பக்கம் index.html அல்லது index.asp வடிவமைத்து
அப்பக்கத்தில் இருந்தவாறே என்னிடம் உள்ள pps மற்றும் mpeg கோவைகளை இயக்க வேண்டும். நான் புதிதாக இணைக்கும் கோவைகளும் உடனடியாக இணையப்பக்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும். அத்துடன் கோவைகளின் இயக்கம் முடிந்ததும்
(Powerpoint or Mediaplayer மூடப்பட்டு) மீண்டும் index.htm அல்லது index.asp தொழிற்பட வேண்டும். index முழுத்திரையிலும் செயற்படுவது (Full Screen PopUp) ஆக இருக்க வேண்டும்..

நோக்கம்

கல்வித்தேவைக்கான கணனியில் மாணவர்கள் தமக்கு தேவைப்படும் விபரணப்படங்களை பார்ப்பதற்கு. 1 கணனியில் அல்லது IONTRANET இல் தொழிற்படும்

வினா?

இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு இணைய வல்லுனர்களின் உதவியை நன்றியுடன்
எதிர்பார்க்கின்றேன்

நன்றி
VERNON

Print this item

  டயானா சாவு பற்றி மீண்டும் விசாரணை
Posted by: Vaanampaadi - 02-16-2005, 01:57 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40349000/jpg/_40349939_divorce203.jpg' border='0' alt='user posted image'>

8 ஆண்டுகளுக்குப்பிறகு டயானா சாவு பற்றி மீண்டும் விசாரணை

பாரீஸ், பிப். 16_

இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பு பாரீசில் நடந்த கார் விபத்தில் தனது காதலன் டோடியுடன் மரணம் அடைந்தார். இது சதியா அல்லது விபத்தா என்று இப்போது மீண்டும் புதிய கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் நவீன தொழில் நுட்பத்துடனும், கேமராக்களுடனும் போலீசார் 8 மணி நேரம் ஆய்வு நடத்தினார்கள். விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்ன? சதி திட்டம் காரணமாக விபத்து நடந்ததா என்றும் இதில் தெரிய வரும்.

Maalaimalar

Print this item