| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 485 online users. » 0 Member(s) | 482 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,430
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,236
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,531
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| இதுவும் காதல் தான் |
|
Posted by: Malalai - 02-17-2005, 06:37 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (28)
|
 |
என் இதயத்தை ஆட்கொண்ட
என் மனத்தில் ஆழப் பதிந்த
என் இரு கண்கள்
இவ் உலகின்
நடமாடும் தெய்வங்கள்
என் அம்மா அப்பா
உங்களை என்
உயிரினும் மேலாக
நேசிக்கின்றேன்
உங்களின் அயராத
உழைப்பிற்கு
உங்கள் தாள் பணிகிறேன்
|
|
|
| வலியது வாழும் |
|
Posted by: Vaanampaadi - 02-17-2005, 06:34 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
பெயரினில் ஐக்கியம்
செயலினில் அயோக்கியம்
கயவரில் அதியுயர்
கயவனே கவனி!
உங்கள் தேசநலனுக்கு
பங்கந் தரு தேசமென்று
ஆங்கோர் போர் கொண்டீர்
எண்ணெய்யில்
பங்குபெற விரும்பும்
சிலவாலுகள் பங்குபெற.
சற்றலைற் கொண்டு -நீவிர்
'பெற்றெடுத்த' படங்கள்
சிரிப்பென்ற சிரிப்பெல்லோ.
டைனோசர் ஈராக்கில்
ஒட்டகம் ஓட்டுதல் போலவும்
சதாமும் பின்லாடனும்
சதா சந்திச்சு
பேரீச்சம்பழஞ் சாப்பிடல் போலவும்
படமெடுத்துத் தர
சீரிய சேவகர் கொண்டீர்.
உங்கள் அந்தப்புரங்களில்
நீங்கள் அணுகுண்டுகள் செய்து
அடுக்கி வத்திருப்பதும்
இஸ்ரேலும், தாங்களும்
மைனர் மாப்பிள்ளைகளாய்
ஈவ்டீஸிங் செய்வதுவும்
எவர்க்குமே தெரியாதே.
'சீ என்ன என்ன'
சொல்லுறதோ
அதையே தெய்வ வாக்காக்கி
பிறகதையே வாக்காக்கி
மீண்டும் நீவிர் அரசாள...
தோ தோ நாய்க்குட்டிகளும்
தோதாக உங்கள்
பின்னாலே துள்ளிவர...
பாவம்
அவையும் யாது செய்யும்?
ஒட்டுக்கேட்டல்களினால்
சொந்தச் சுதந்திரத்திற்கே
வக்கில்லாத போது
உலகமைதிபற்றி
எதைச்செய்து கிழிக்க.
வலியது வாழும் - ஈர்ந்த
வலியதுவும் வாழும்.
நிலைத்திருப்பது
நிலையாமையன்றி
வேறெதுவுமில்லை.
கோடைகடந்தொருநாள்
குலைநடுங்கக் குளிர்வருதல்
புதிதில்லை
சர்வதேச காவல்துறை ஐயா.
வலையிலிருந்து சுட்டது
|
|
|
| அகராதி |
|
Posted by: Vaanampaadi - 02-17-2005, 06:27 PM - Forum: நகைச்சுவை
- Replies (6)
|
 |
கனவு: சென்ஸாருக்குப் போகாத, செலவே இல்லாத ஒரு குறும்படம்.
புண்ணியம்: நாளைய சொர்க்கத்திற்கு இன்றைய இலஞ்சம்.
காதல்: ஒருவகைக் களவு; என்று பிடிபடுவோம் என்ற பயம் என்றைக்குமே இருக்கும்.
மனசு: ஞாபகங்களைப் போட்டு வைக்கும் ஒருவகைப் பெட்டி.
கண்: காதல் பிறக்கும் இடம்; கண்ணீரின் சொந்த இடம்.
புதுக்கவிதை: ஒருவகைப் புயல்; ஆனால் அழிவு இருக்காது.
மரபுக் கவிதை: ஒருவகைத் தென்றல்; ஆனால் ஒரு அறுப்பும் விளங்காது.
சொர்க்கம்: இல்லாத ஒன்று, நாம் இறக்கின்ற போதே இருக்கும் என்பர்.
நண்பன்/நண்பி: நாம் புழுகுவதையெல்லாம் நம்புகின்ற அல்லது நம்புமாற்போல் நடிக்கும் ஒரு ஜீவன்.
வாழ்க்கை: நாளைய இறப்பிற்கு எம்மைத் தயாராக்குவது.
காசு: கடதாசியினால் உருவாக்கப்பட்ட ஒன்று....மஹாராணி சிரிச்சுக்
கொண்டிருப்பாங்கோ!
கணிதம்: நீங்கள் பாஸாகாத ஒரே ஒரு பாடம் அல்லது அதிக தடவை
கோட்டைவிட்ட பாடம்.
உணவு: நீங்கள் உயிர் வாழ்வதற்கான காரணம்.
கடவுள்: பரீட்சைக்கு முதல் மீதமுள்ள ஒரேயொரு நம்பிக்கை;மனிதனின்
மிகப் புத்திசாலித்தனமானகண்டுபிடிப்பு; அஞ்சு சதத்துக்கும் பிரயோசனம் இல்லாதது.
மனிதன்: வாலில்லாத ஒருவகை குரங்கினம்.
குரங்கு: வாலுள்ள ஒரு மனிதம்.
கண்ணாடி: தளவாடி; நீங்கள் எவ்வளவு அசிங்கம் என்பதற்கான ஒரேயொரு சாட்சி.
காமம்: (பார்க்க உணவு)
அண்ணா: இடைக்கிடை பணம் அனுப்பும் ஒருவகை மனித ஜீவன்.
தமிழ்: உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒருவிடயம்.
கண்ணீர்: overflow of sadness that escapes through your eyes.
வலையிலிருந்து சுட்டது
|
|
|
| கண்காணிப்பில் ஜோதிகா வீடு! |
|
Posted by: Vaanampaadi - 02-17-2005, 06:10 PM - Forum: சினிமா
- Replies (24)
|
 |
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/Jyothika_425.jpg' border='0' alt='user posted image'>நக்மா விவகாரம்: கண்காணிப்பில் ஜோதிகா வீடு!
மும்பை வெடிகுண்டு வழக்கில் முதல் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படும் நடிகை நக்மாவின் தங்கை ஜோதிகாவின் சென்னை வீட்டை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
நக்மாவுக்கும், அனீஸுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், பலமுறை அனீஸுடன் நக்மா வெளிநிõடுகளுக்கு சென்றுள்ளதாகவும், நக்மாவின் வீட்டிற்கு சென்று ஒரு முறை ரூ. 10 லட்சம் பணம் கொடுத்ததாகவும், தாவூத்தின் கூட்டாளியான ராஜேஷ் பஞ்சாரிய பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரை நக்மா மறுத்திருந்தார். அந்த நக்மா நான் இல்லை. நக்மா என்ற பெயரில் சிறிய பாலிவுட் நடிகை இருக்கிறார். அவரைத் தான் என்னுடன் இணைத்து குழப்பி குற்றம் சாட்டுகிறார்கள் என்கிறது நக்மா தரப்பு.
ஆனால் நக்மாவின் வீட்டை மிகச் சரியாகக் குறிப்பிட்டு இந்த தேதியில் இவ்வளவு பணம் கொடுத்தேன் என்று ராஜேஷ் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
நக்மா இப்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். ஆனால், இது மிகப் பரபரப்பான விவகாரம் என்பதால், மத்தியிலும் மகாராஷ்டிரத்திலும் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் நக்மாவை கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் நக்மாவின் அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதில் ஒரு கட்டமாக சென்னையில் உள்ள நக்மாவின் வீட்டையும் போலீஸார் தங்களது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
நக்மாவுக்கு சொந்தமாக சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு இருந்தது (நடிகர் சரத்குமார் இதை வாங்கிப் பரிசளித்ததாக முன்பு கூறப்பட்டது). அந்த வீட்டை அவர் விற்று விட்டார்.
அதேபோல, ஆழ்வார்ப்பேட்டையிலும் ஒரு வீடு இருந்தது. அதில்தான் முன்பு நக்மாவின் தங்கையான நடிகை ஜோதிகா தங்கி வந்தார். ஆனால், அக்காள்தங்கை பிரச்சனை வந்ததால் அந்த வீட்டையும் பின்னர் நக்மா விற்று விட்டார்.
பின்னர் இருவரும் சமரசமாகிவிட்டனர்.
இப்போது நக்மா சென்னை வந்தால், அபிராமபுரத்தில் உள்ள ஜோதிகாவின் வீட்டில்தான் தங்குகிறார். ஜோதிகாவின் இந்த வீட்டை தற்போது போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் நக்மாவோடு சேர்த்து போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் ஜோதிகாவும் விழுந்துள்ளார்.
Thatstamil
|
|
|
| DVD Region Killer |
|
Posted by: Thusi - 02-17-2005, 05:31 PM - Forum: கணினி
- Replies (7)
|
 |
DVD Region Killer - இந்த மென்பொருளை யாராவது பாவித்திருக்கிறீர்களா? இதனை கணனியில் நிறுவுவதால் வேறு ஏதாவது சிக்கல்கள் வருமா? அனுபவம் இருந்தால் அறியத்தாருங்களேன்.
|
|
|
| ஒரே இடம் வேறு வேறு காலத்தில்........... |
|
Posted by: KULAKADDAN - 02-17-2005, 03:41 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (46)
|
 |
<img src='http://img230.exs.cx/img230/6682/season15hy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/1170/season21gw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/968/season49bu.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/1550/season32dh.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
|