Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 387 online users.
» 0 Member(s) | 385 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,540
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஆபாசம் காட்டினால் ரூ.2 கோடி அபராதம்
Posted by: Vaanampaadi - 02-18-2005, 11:01 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

ஜானெட் ஜாக்சன் டான்ஸ் எதிரொலி
மேடைகளில் ஆபாசம் காட்டினால் ரூ.2 கோடி அபராதம்
அமெரிக்காவில் புதிய சட்டம்


வாஷிங்டன், பிப். 18_

அமெரிக்காவில் மேடையில் நடனம் ஆடிய ஜானெட் ஜாக்சன் ஜாக்கெட்டை கிழித்துப்போட்டு விட்டு `டான்ஸ்' ஆடியதன் காரண மாக அந்த நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப் பட்டு உள்ளது. அதன்படி மேடைகளிலோ, டி.வி. சேனல்களிலோ கண்ணியக் குறைவாக நடந்து கொண் டால் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும்.

மைக்கேல் ஜாக்சனின் தங்கை

உலகப்புகழ் பெற்ற `பாப்' பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜானெட் ஜாக்சன். இவர் கடந்த ஆண்டு `சூப்பர் பவுல்' விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின்போது மேடையில் இசை நிகழ்ச்சி நடத் தினார். அப்போது ஜாக் கெட்டை கிழித்துப்போட்டு விட்டு மார்பு தெரியும்படி நட னம் ஆடினார். இது டி.வி. சேனல்களில் நேரடியாக ஒளி பரப்பானது.

இதற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் புதிய சட்டம் கொண்டுவரப் பட்டு உள்ளது.

ரூ.2 கோடி அபராதம்

கண்ணியக் குறைவாக கலை ஞர்கள் நடந்து கொண்டாலோ அல்லது அதை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பினாலோ அவற்றின் மீது 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த சட் டம் கூறுகிறது.

இந்தச் சட்டத்தை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் 389 பேர் ஆத ரித்தனர். 38 பேர் எதிர்த்தனர்.

ஏற்கனவே உள்ள சட்டப்படி அபராதத் தொகை வெறும்

16 லட்சம் ரூபாய்தான். அபராதத் தொகை மிகக் குறைவாக இருந்த தால் இந்தச் சட்டம் பற்றிய பயம் இல்லை. எனவே இந்த அபராதத் தொகை உயர்த்தப்பட்டு உள் ளது.

ரத்து

கண்ணியக் குறைவாக நடந்து கொண்டால் கலைஞர்களுக்கும், டி.வி. சேனல்களுக்கும் அப ராதம் விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தை 3 முறை மீறி னால், டி.வி. சேனலின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். அது தவிர 30 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தினதந்தி

Print this item

  நக்மா விவகாரத்தில் மர்ம முடிச்சுகள்
Posted by: Vaanampaadi - 02-18-2005, 10:59 AM - Forum: சினிமா - No Replies

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/18-2-2005/18nagma.jpg' border='0' alt='user posted image'>
தீவிரவாதிகளுடன் தொடர்பு: நக்மா விவகாரத்தில் மர்ம முடிச்சுகள்

மும்பை, பிப். 18-

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை நக்மா. இவருக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலிக்கும் தொடர்பு, திருப்பதி கோவிலில் ரகசிய திரு மணம் செய்து கொண்டார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நக்மா தீவிர காங்கிரஸ் பிரசா ரத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபட்டு வந்தார். அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மும்பை தொடர்குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமிற்கும் நக்மாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அனீஸ் கொடுத்தனுப்பிய ரூ.10 லட்சம் பணத்தை பாந்திராவில் உள்ள நக்மாவின் வீட்டிற்கு சென்று கொடுத்ததாகவும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான ஜமீருதீன் அன்சாரி சி.பி.ஐ. போலீசாரின் விசாரணையில் தெரிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடிகை நக்மா வின் வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் நடிகை நக்மாவின் தங்கை ஜோதிகா வீட்டிலும் தி.நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் களிலும் போலீசார் ரகசிய மாக கண்காணித்து வருகிறார்கள்.

இதுபற்றி நடிகை நக்மா கூறுகையில் எனது புகழை கெடுக்க சிலர் சதி செய்கிறார் கள். தேவை இல்லாமல் கட்டு கதைகளை உண்மை போல பரப்பி வருகிறார்கள். அன் சாரி வாக்குமூலத்தில் சொல்லி இருக்கும் நக்மா நான் அல்ல பெயர் குழப்பத்தில் என்னை தவறாக சுட்டி காட்டி விட்டதாக அவர் தெரிவித் தார்.

இதன் உண்மை பின்னணி என்ன? நடிகை நக்மா விவகாரத்தில் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன.

போலீசாரின் விசாரணை யில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாணிக்சந்த் குட்கா அதிபர் தாரிவாலுக்கும் கோவாகுட்கா அதிபர் ஜோஷிக்கும் இடையே தொழில் போட்டி நேரடியாக இருந்து வந்துள்ளது. தாரிலால் அரபு நாடுகளில் குட்கா விற்பனைக்காக தாவூத் இப்ராகிம் தயவை நாடியுள்ளார். ஜோஷி யின் மகன் சச்சினுக்கும் நடிகை நக்மாவிற்கும் நெருங்கிய பழக்கம் இருந் துள்ளது. இருவரும் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். சினிமா பிரமுகர்களுக்கும் சச்சின் தனது நண்பர் என்று அறிமு கப்படுத்தி உள்ளார் போன்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கடந்த 4 மாதங்களாக குட்கா அதி பர்கள் பிரச்சினை இருந்ததை போலீசார் கண்டு கொள்ளா மல் இருந்தது ஏன்? கடந்த ஆண்டுடிசம்பர் 3-ந்தேதி அவர்கள் துபாய் தப்பி செல் லும் வரை காத்திருந்து அதன் பின்னர் சம்மன் அனுப்பியது ஏன்? டிசம்பர் 31-ந்தேதி ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை போலீசார் பிறப் பித்துள்ளனர். இதே போல் நக்மா மீது தாவூத் இப்ராகீமின் கூட்டாளி அன்சாரி தெரி வித்த தகவல்களை பெரிது படுத்தாமல் விடுவது ஏன்? என்பது போன்ற மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாம லேயே இருக்கின்றன.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் கேட்டபோது, "ஜமிரூதீன் அன்சாரி வாக்குமூலத்தில் என்ன தெரிவித்தான் என்பது எனக்கு முழுமையாக தெரியாது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லியில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு துபாயில் தலைமறைவாக இருக்கும் ஜோஷி பேட்டி அளித்துள்ளார். அதில் 97-98ம் ஆண்டு எனது குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது மாணிக் சந்த் அதிபர் தாரிலாலை சந்திக்க தாவுத் இப்ராகிமின் தம்பி முஷ்பாகிம் சந்திக்க வந்தார். அப்போது அவர்களுக்குள் கமிஷன் பிரச்சினை இருந்தது. பின்னர் 2000-ம் ஆண்டில்தான் பிரச்சினை தீர்ந்தது. எனக்கு தாவூத்தின் மைத்துனர்கள் ஹமீது, சலீம் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். நிழல் உலக தாதாவுடன் தொடர்பு வைக்காதீர்கள் என்று தாரிலாவை பலமுறை எச்சரித்தேன். ஆனால் அவர் எனது கட்டுப்பாட்டில் இல்லை. இனி நான் நினைத்தாலும் இத்தொடர்பை விடமுடியாது. என்னையாவது விட்டுவிடு என்று கெஞ்சினேன். நான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதால் நிழல் உலக தாதாக்கள் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது பேட்டியைத் தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் தற்போது குட்கா அதிபர்களை பிடிக்க துபாய் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவா குட்கா அதிபர் ஜோஷியின் பேட்டியைத் தொடர்ந்து தாரிலாவின் வக்கீல் ராஜேந்திரஷிரோத்கர் கூறுகையில் தாரிலாலுக்கும் தாதாக்க ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.தாவூத் இப்ராகிம் அரபு நாடுகளில் மாணிக்சந்த் குட்கா இறக்குமதி செய்து விநி யோகிக்கிறார் என்பது தவறான தகவல். தாரிலாலின் புகழை கெடுக்க ஜோஷி திட்டமிட்டு இதுபோன்ற பொய் பிரசாரம் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

Print this item

  புலிகளின் மன்னார் அரசியல்துறை அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது
Posted by: Vaanampaadi - 02-18-2005, 10:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இன்று காலை சுமார் 11 மணியளவில் புலிகளின் மன்னார் அரசியல் துறை அலுவலகத்தை ஒரு குழுவினர் தாக்கிசேதப் படுத்தியுள்ளனர் .......

LTTE political office attacked again

[TamilNet, February 18, 2005 05:43 GMT]
The political office of the Liberation Tigers was attacked by group of persons Friday around 11 a.m. A unit of riot Police that was training in the vicinity arrested some of the attackers but released them soon after, according to neighbours. The group had come from Pallimunai, a coastal suburb of Mannar.
The office was severely damaged, Police said

Print this item

  &quot;ஜெயலலிதாவும்&quot;, &quot;B.F&quot;உம்!
Posted by: cannon - 02-17-2005, 09:52 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (13)

தமிழ்நாட்டில் ஆங்கில மோகத்தில் மெல்ல மெல்ல அழிந்து போகும் தமிழைக் காப்பாற்றும் ஒரு முயற்சியாக தமிழ்த்தேசியத்தின், தமிழ் மொழியில், தமிழ்ப் பண்பாட்டில் பற்றுக்கொண்ட ஒரு சில தலைவர்கள் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கமெனும் பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி, அவ்வியக்கத்தின் முதல் முயற்சியாக தமிழ்நாட்டில் உள்ள நிறுவங்களின் பெயர்கள், விளம்பரங்கள், ... போன்றவற்றிற்கு தமிழ்ப் பெயர்களையோ, தமிழிலேயே , ... வருவதற்கான முயற்சி தொடங்கப்பட்டது.

இதில் இன்றுள்ள நிலையில் சினிமா எனும் பலமான ஊடகமூடாக மக்கள் மத்தியில் விளிப்புனர்ச்சியை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும், திரையிடப்படும் தமிழ்ப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டுமென்று தீர்மாணிக்கப்பட்டும், அதை ஏறக்குறைய அனைத்து திரைப்படத்துறையினரும் ஆதரவளிக்க முன்வந்தநிலையிலும், எமது இனத்தின் தனித்துவமான கோடரிக்காம்புகள்! இம்முயற்சியை எப்படியாவது முறியடிக்கவேணும் என்ற நோக்கில் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இந்தக் கோடாரிக்காம்பகளுக்கு உந்துகொடுக்க பல தமிழ்த்தேசிய விரோத பார்ப்பணிய சக்திகளும் வெளிக்கிட்டுள்ளன.

தமிழ்த்தேசிய வாதிகளின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பார்ப்பண நடிகன் கமலகாஸன் "மும்பை எக்ஸ்பிரஸ்" எனும் படத்தையும், சூர்யா எனும் கோடரிகாம்பு இயக்குனர் "B.F" எனும் படத்தையும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறார்கள். இதில் குறிப்பாக கோடாரிக்காம்பு சூர்யா எடுத்துவரும் "B.F" எனும் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பாதுகாப்பு வழங்கவும், எதிர்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அக்காலத்திலேயே அரைகுறை ஆடைகளுடன் தோன்றி கவர்ச்சி காட்டி, பலருடன் படுக்கைகளையும் பகிர்ந்ததால் வந்த இந்த முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவிற்கு "B.F" என்ற சொல்லின் தார்ப்பரியம் புரியுமா?

இன்னும் செல்வியாகவே இருக்கும் ஜெயலலிதாவிற்கு "B.F" என்ற சொல் பரீட்சயமானதாகவிருக்கும். இதில் யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்காக மற்றவர்களும் தன்னைப் போல் தானென்று நினைக்கிறாரா?

ஒரு 10 வயதிற்குட்பட்ட பிள்ளைக்கு "B.F" என்றால் "Best Friends" என்று சொல்லலாம்! இல்லை எல்லோரும் அறப்படியாத மந்தைகலென நினைக்கிறாரா?

தமிழ் விரோத பார்ப்பணத்தி! படிப்பறிவில்லாத தமிழ்நாட்டு மக்களிடம், அம்மக்களின் என்னென்றும் தலைவரான எம்.ஜி.ஆரின் வைப்பாட்டி என்ற தகமையுடனும், தனது நிறக் கவர்ச்சியாலும் பதவியிலிருக்கும் ஒருவருக்கு நிச்சயமாக தமிழ்ப் பண்பாடு, கலை, கலாச்சாரத்தின் மகிமைகள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இல்லை இந்த தமிழ்நாட்டு மக்கள்தான் என்று, இப்படியான தமிழரல்லாத சமூக சீர்கேட்டாளர்களை தமது தலைவர்களாக தெரிவதை நிறுத்தப் போகிறார்கள்????????

Print this item

  ´Õ ¦¾Õ ¿¡Â¢ý «Ê Áɾ¢Ä¢ÕóÐ
Posted by: Vaanampaadi - 02-17-2005, 09:52 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (3)

´Õ ¦¾Õ ¿¡Â¢ý «Ê Áɾ¢Ä¢ÕóÐ

Žì¸õ. '¦Ä¡û'ǡ¢Õ츣í¸Ç¡, sorry ¿øÄ¡Â¢Õ츣í¸Ç¡? ¿¡ý ¾¡ýí¸ ¯í¸ ¦¾ÕÅ¢Ä Ìô¨Àò ¦¾¡ðÊ Àì¸òÐÄ ÌÊ¢Õì¸¢È ¿¡ö ¿¡¸Ã¡ƒý. ¦Ã¡õÀ ¿¡Ç¡ ±ý ÁÉÍÄ âðÊ ¨Å¾øÄ¡õ þôÀ ¯í¸ ¸¢ð¼ «×òРŢΧÈý.

±ýÉ Å¡úì¨¸í¸ þÐ? ¿¡öô ¦À¡¨ÆôÒ À¢¨ÆîÍ츢ðÎ þÕ째ý. ¿¡ö ¿ýÈ¢ÔûÇ ƒ£Åý, ±ýÚ ¿ýÈ¢ìÌ ±í¸¨Çò¾¡ý ¯¾¡Ã½Á¡ ¦º¡øÅ¡í¸, «ôÒÈÁ¡ ¡¨Ã¡ÅÐ ¾¢ðÎõ §À¡Ð, "¿ýÈ¢ ¦¸ð¼ ¿¡§Â" ýÛ ¾¢ðÎÅ¡í¸. ±ýÉí¸ þÐ ¿¢Â¡Âõ.

"þǨÁ¢ø ¸ø" ýÛ «ù¨Åô À¡ðÊ ¦º¡ýÉ¡í¸. ¬É¡ø ±í¸ÙìÌ þǨÁ¢Öõ ºÃ¢, ÓШÁ¢Öõ ºÃ¢, '¸ø' ¾¡ý ±í¸¨Ç «Êì¸ ¯¾×õ Ô¾õ. ¸ø ±ÉôÀÎÅÐ ±§¾¡ ¿¡ö¸¨Ç «ÊôÀ¾ü¦¸ý§È ¸¼×û ¯Õš츢¾¡¸ þó¾ ÁÉ¢¾÷¸ÙìÌ ¿¢¨ÉôÒí¸. "¸ø¨Äì ¸ñ¼¡ ¿¡¨Âì ¸¡Ïõ; ¿¡¨Âì ¸ñ¼¡ ¸ø¨Äì ¸¡Ïõ" ±ýÚ ÀƦÁ¡Æ¢ §ÅÈ, †¤õ!

±í¸ «ôÀ¡, ¾¡ò¾¡ ¸¡Äò¾¢Ä ±øÄ¡õ, Áì¸û ¯ð¸¡÷óÐ ¿¢¾¡ÉÁ¡ º¡ôÀ¢ÎÅ¡í¸. þôÀ ¾¡ý fast food ¸Ä¡îº¡Ãõ ÅóÐ ±øÄ¡õ ±í¸¨Ç Á¡¾¢Ã¢ ¿¢ýÛ츢𧼠º¡ôÀ¢ÎÈ¡í¸. «¾É¡Ä ±ÉìÌ ±ýÉýÛ §¸ð¸¢È£í¸Ç¡? Å¢„Âõ þÕìÌ. ´Õ ¿¡û Á¨Æì¸¡Ä º¡Âí¸¡Ä §¿Ãõ, Àì¸òРţ¾¢Â¢Ä ÌÊ¢Õì¸¢È ƒ¢õÁ¢¨Â ¨ºð «ÊîÍðÎ §Å¸Á¡ µÊ Åó¾¢ðÊÕó§¾ý. Á¨Æì¸¡Äõ §ÅÈ¡, þÂü¨¸Â¢ý «¨ÆôÒìÌ À¾¢ø ¦º¡øÄÄ¡ÓýÛ, Àì¸òÐÄ þÕó¾ §À¡Šð ¸õÀò¾¢Ä ¸¡Ä à츢 «¼ì¸¢ Åîº «ÅЍ¾Â ¾£÷òÐðÎ ¦ÁÐÅ¡ ¿¼ó§¾ý. «ôÒÈõ ¾¡ý ¦¾Ã¢ïºÐ «Ð §À¡Šð ¸õÀÁ¢ø¨Ä, fast food º¡ôÀ¢ðÎ ¦¸¡ñÊÕó¾ ¯ÂÃÁ¡É ´Õò¾§É¡¼ ¸¡ÖýÛ, ¾ý ¸ÚôÒ §Àñð ®ÃÁ¡ÉÐÄ ¸ÎôÀ¡É «Åý Å¢ð¼¡ý À¡Õí¸ ´Õ ¯¨¾, «¾¢Ä þÕóÐ, ¸ØòÐ ÅĢÖõ ¿¢Á¢÷óÐ À¡÷òÐ «Ð §À¡Šð ¸õÀÁ¡ ±ýÚ ¯Ú¾¢ôÀÎò¾¢ðÎ ¾¡ý ¸¡¨Äò à츢ȧ¾.

±ýɧÁ¡ ¿¡í¸ ¸Ê츢Ⱦ¡Ä ÁðÎõ ¾¡ý, §ÃÀ£Š §¿¡ö ÀÃ×à Á¡¾¢Ã¢ ´Õ À¢Ãõ¨Á ¯Õš츢ð¼¡í¸. ²ý â¨É, ÌÃíÌ, ÅùÅ¡ø ¸Ê ܼ ¾¡ý §ÃÀ£Š ÅÕõ. ´Õ ÁÛ„¨Éì ¸ÊôÀ¾üÌ ÓýÉ¡Ê ¿¡í¸ ±ùÅÇ× ÀÂôÀ¼ §ÅñÊ¢ÕìÌ ¦¾Ã¢ÔÁ¡? ÁÛ„ Ãò¾ò¾¢ý ãÄÁ¡ò ¾¡ý ±ùÅǧš §¿¡ö¸û ÀÃ×§¾. ºÃ¢, ¦¾ÕÅ¢Ä ¾¡ý þôÀÊ ¿¡ö À¼¡¾ À¡Î ÀΧȡõ. ²¾¡ÅÐ §Å¨ÄìÌô §À¡¸Ä¡õÛ §À¡Ä£Š ¿¡ö ஆ¸¢¼Ä¡õýÛ §À¡§Éí¸. ¬É¡ À¡Õí¸ ±í¸¢ð¼ §À¡Ä£ŠÄ §ºÕžüÌ ¾Ì¾¢, «¾¡í¸ ¦¾¡ô¨À þø¨ÄýÛð¼¡í¸.

ÁÛ„í¸ÙìÌûÇ ¾¡ý ƒ¡¾¢, Á¾õ ±ýÚ «ÊîÍ츢ȡí¸ýÉ¡ ±í¸ÙìÌûÇÔõ ƒ¡¾¢¨Â ѨÆîÍð¼¡í¸ôÀ¡. À墨 ¯ÕðÊ Åîº Á¡¾¢Ã¢, ¦Åû¨Ç ¯¼õÀ¢Ä þíì ¦¾Ç¢îº Á¡¾¢Ã¢ þÕì¸¢È ¸¡Åø ¸¡ì¸¡¾ ¯¾Å¡ì¸¨Ã ¿¡ö¸û ±øÄ¡õ ¯Â÷ƒ¡¾¢Â¡õ. «Ðí¸ÙìÌ §Å¨Ä§Â ².º¢. åõÄ, §ÅÇ¡§Å¨ÇìÌ "Pedigree" º¡ôÀ¢ðÎ, ¸¡Ã¢ø ƒýÉø ÅÆ¢Â¡ ¾¨Ä ¿£ðÊ °÷ÍüÈ¢ðÎ, ±ƒÁ¡É÷¸û ¸¢ð¼ §À¡ö ̨ÆÅÐ ¾¡ý. ¿¡í¸ Á¨Æ, ¦Å¢øýÛ À¡÷측Á ¦¾ÕÅ¢Ä «¨ÄïÍ, ¸¡÷ôÀ§Ã„ý ¸¡Ãí¸ ¸ñ½¢Ä À¼¡Á, ¿£í¸ §Å½¡õÛ à츢ô§À¡¼È¨¾¦ÂøÄ¡õ º¡ôÀ¢ðÎ, «ÐìÌ ¿ýȢ¡ ¦¾Õ×ìÌ ¸¡ÅÄ¡ þÕó¾¡, ¿¡í¦¸øÄ¡õ ¸£úƒ¡¾¢ ¿¡ðÎ ¿¡ö¸Ç¡õ.

±ýÉí¸ ÀñÈÐ. ±í¸ Å¡¨Ä ¿¢Á¢÷ò¾¢É¡Öõ ¿¢Á¢÷ò¾Ä¡õ, þó¾ ÁÛ„í¸¨Çò ¾¢Õò¾ ÓÊ¡Ð. þÕó¾¡Öõ þó¾¢Â¡×Ä ¦À¡Èó¾¾üÌ ºó§¾¡„ôÀΧÈí¸. ²ýÛ §¸ìÌÈ£í¸Ç¡? ¾¡öÄ¡óÐħ¡, ¦¸¡Ã¢Â¡×ħ¡ À¢Èó¾¢Õó¾¡, þó§¿Ãõ "¿¡ö ¨¿ñÊ ¨Àù" ஆ¸¢Â¢Õô§Àý þø¨Ä¡.

Print this item

  விடுதலைப்புலிகள் மீது தடைவிதிக்க வேண்டாம்:
Posted by: வியாசன் - 02-17-2005, 07:40 PM - Forum: புலம் - Replies (1)

விடுதலைப்புலிகள் மீது தடைவிதிக்க வேண்டாம்:
69 சதவீத கனடியர் தெரிவிப்பு
ஜ கனடிய நிருபர் ஸ ஜ வியாழக்கிழமைää 17 பெப்ரவரி 2005ää 14:57 ஈழம் ஸ
விடுதலைப்புலிகள் மீது கனடாவில் தடை விதிக்க வேண்டாம் என கனடிய தொலைக்காட்சி ஒன்று நடத்திய மக்கள் கணிப்பில் 69 சதவீத கனடிய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஓம்னி தொலைக்காட்சி ஆங்கிலத்தில் 24 மணித்தியாலங்களாக நடத்திய தொலைபேசி கணிப்பிலேயே இது வெளிப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற சில கூக்குரல்கள் சமீப நாட்களாக கனடாவில் வெளிப்பட்டு வந்த நிலையிலேயே மக்களின் இக்கணிப்பும் வெளிவந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கனடிய எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப்புலிகளை தடைசெய்யுமாறு விடுத்த வேண்டுகோளை கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு அவர்கள் நிராகரித்தார்;.

அமெரிக்காää நோர்வே உட்பட பல நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் கனடாவில் மேற்கொண்டுää நிலைமையை சீர்கெட்டுப் போக அனுமதிக்க வேண்டாம் எனத் தம்மை கேட்டுள்ளதாகவும் அவர் அப்போது மேலும் தெரிவித்தார்.

'விடுதலைப்புலிகளையும் உள்வாங்கிää இயங்குவதன் மூலமே போர் நிறுத்தத்தை மேலும் வலுப்படுத்திää தொடர்ந்து பேணுவதற்கு உதவும் என நாம் திடமான நம்புகின்றோம். இந்த நேரத்தில் அவர்களை தடை செய்வதன் மூலம் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்பதையும் நாம் உண்மையாக உணர்கின்றோம்ää" எனக் கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு தனது அமைச்சக உபகுழு குழுநிலை விவாதத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்;.

2001 செப்டம்பரில் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின் கனடாவிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் இதுவரை 35 அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தாலும்ää விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக கனடாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை 2002 இல் அமுலுக்கு வந்த கனடிய பயங்கரவாதச் சட்டத்தை அதன் அமுல் காலமான 3 வருடங்களுக்கு பின்னரும் அவ்வாறே தொடர்வது குறித்த மீளாய்வுகள் பல மட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.



புதினத்தில் சுடப்பட்டது நன்றி

Print this item

  பிள்ளையாரப்பா
Posted by: sinnappu - 02-17-2005, 07:36 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (22)

<img src='http://img230.exs.cx/img230/6683/ganesh34gr.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/9069/ganesh43pr.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/1231/ganesh54am.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/7140/ganesh62qv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/2815/ganesh70hw.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/1803/ganesh81lt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/8687/ganesh96jl.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/9897/ganesh101fd.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  பழம் நீயப்பா தமிழ் ஞானப்பழம் நீயப்பா
Posted by: sinnappu - 02-17-2005, 07:30 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (26)

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img230.exs.cx/img230/8959/lux20info20207ri.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/4994/lux20info20216xi.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/8769/lux20info20244kv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img230.exs.cx/img230/9605/lux20info20268ai.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  கம்பியுட்டர் பாபா
Posted by: Vaanampaadi - 02-17-2005, 06:56 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்குமே தவிர சாமியார்ப் பஞ்சத்துக்கு சான்ஸே இல்லே. மழித்தவர், நீட்டியவர், சிலிர்த்தவர், ஜில்பா, குட்டித் தொப்பை, செல்லத்தொப்பை, பானைத் தொப்பை என்று பல size and shape களில் சாமியார்கள் நிறைந்த புண்ணிய பூமி நம்முடையது! இவர்களின் கியாதியைப் பற்றி டிவியில் தினந்தோரும் அவர்களின் பக்த கோடிகள் புராணங்களை அடுக்குகிறார்கள். கையை ஆட்டினால் விபூதி, கக்கினால் கிடைப்பது மோதிரம், லிங்கம் முதலிய வஸ்துக்கள். எல்லாம் "ஜாதுகர்" பார்ட்டிகள்! ரிமோட்டிலேயே ஆபரேஷனெல்லாம் கூட செய்து விடுகிறார்கள் இந்த confidence tricksters!

இவர்களெல்லாம் காலத்துக்கேற்றபடி மாறவேண்டும். எவ்வளவு நாட்கள்தான் கக்கிக் கொண்டிருப்பார்கள்! இந்த ஸைபர் யுகத்தில் தோன்றியுள்ள புதுவகைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டாமா?

நார்ட்டன், அவன் முப்பாட்டன் எல்லோருக்கும் பெப்பே என்று நம் கம்ப்யூட்டர்களுக்குத் தண்ணி காட்டும் வைரஸ் மற்றும் அவைகளின் ஒன்று விட்ட சகோதரி(!)களான trojan, worm, spyware, macros போன்ற ஸைபர் கிருமிகளை அழிக்க இந்த "மன்மத ராசா" சாமியார்கள் தங்கள் ஆன்மீக வலிமையைத் திருப்பி விட்டால் ஐ.டி உலகமே செவ்வாடை, பச்சை ஆடை, மஞ்சள் ஆடை பூண்டு (அல்லது ஆடையில்லாமல்) இவர்களுக்கு காவடி எடுக்கத் தயாராயிருப்பார்களே!

இந்த கம்பூட்டர் பாபாக்கள் "பூ.." என்று ஊதியோ, டான்ஸ் ஆடியோ, கொஞ்ச வயசுப் பாப்பாக்களுடன் வந்து கும்மி அடித்தோ, நான்தான் அம்மா, நான்தான் அம்மா பகவான் என்று டிவியில் போஸ் கொடுத்தோ அல்லது எதோனும் ஒரு வகையில் பஜனை(!) செய்தோ இந்த வைரஸ் அழிப்பு யாகம் தொடங்கலாம். வைரஸ்களுடன் சேர்த்து லைனக்ஸ் உட்பட்ட எல்லா திறந்த நிரல் மென்பொருட்களையும் அழிப்பதாக இருந்தால் இந்த வேள்வி அட்டகாசங்களின் முழுச் சிலவையும் தான் ஸ்பான்ஸோர் செய்வதாக "ரோக்கா கதவு"க்கார பெருங்கிழார் முன்வர வாய்ப்புள்ளது!

அனைத்து சாமியார்களுக்கும் இது ஒரு சவால்!

வலையிலிருந்து சுட்டது

Print this item

  தீண்டாமை நிமித்தம்...
Posted by: Vaanampaadi - 02-17-2005, 06:46 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

நீ என் கடவுள் அல்ல
நீ எனக்கு கடவுளும் அல்ல!!
நீ அசிங்கமானவன்
நீ இருட்டறையில் வாழும் ஈனப்பிறவி

உன் மீது சதா
அழுகிய பழங்கள்,
புளித்த பால் வாடை

மனிதன் செய்வானா இப்படி?
நான் நிச்சயம் செய்யமாட்டேன்
உன்னை நான் தீண்டமாட்டேன்
என் நினைவிலும்

உனக்கு இந்தக் கதி எனில்
உன் பேர் சொல்லி உன்னைப்போற்றும்
உன் முன் வணங்கும் கடையர்களை
நான் ஏறெடுத்தும் பார்பதில்லை

புரியவில்லை,
இந்தத் தீண்டாமை என்னிடமிருந்து
அவர்களுக்கு உன் மூலமாய்
எப்படி வந்ததென்று?

(தீண்டாமை நிமித்தம் கோவிலில் மறுக்கபட்டவர்களுக்கு சமர்ப்பணம்)

-----------------------------------------------------------------------

ஆயிரம் குழந்தைகள்?!
அவளுக்கு
இன்னும் மணமாகவில்லை!
எப்படி சாத்தியம்!
ஒரே சலசலப்பு!
அந்த கிராமத்து வீட்டிலே!
பெண் பார்க்க வந்தவன்
கிளம்பத் தயாரானான்!
"1000" ஓவியங்களை அவள் நீட்ட
அவன் நெளிந்தான்.
படைப்புகள் கலைஞனுக்கு குழந்தைகள் அன்றோ?
-------------------------------------------------------------------
"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா?
மனசே என் மனசே
எதை நீ தேடுகிறாய்?
சொல்லிவிட்டுத் தேடு!
கரங்கள் உண்டு சேவை செய்ய!
கண்கள் உண்டு கண்டு சொல்ல!
ஒருவேளை...
உணர்வை நீ தேடினால்?!!
நான் என்ன செய்ய?!
அது உன்னில்லிருந்தே பிறக்கிறது!
"தாய்"க்கு தன் குழந்தையைத் தெரியாதா?
-----------------------------------------------------------------------
Life நட்பு+=வலைப்பூ;
காலை மாலை
ஏன் இரவிலும்
எந்த நேரமும்
சந்திப்போம்
விடியலை தாண்டியும் உரையாடுவோம்
பட்டம் பெற்றோம்
வெவ்வேறு உலகம் ஆனோம்
மின்னஞ்சல் பரிமாற்றம்
எப்போதாவது நடக்கும்.
"How are u?!
I am fine.
How is work going on.
Have a nice day."
இதுவே அதன் சாராம்சம்.
வறண்டு விட்ட உறவானது.
ஜீவனற்ற உயிரானது.
ஆனால் இன்று நட்பு
புத்துயிர் பெற்று
தமிழே ஜீவனாகி
"வலைப்பூ"வாய் பூத்திருக்கிறது!

----------------------------------------------------------------------

விடுதலை வேண்டும்
விடுதலை வேண்டும்
எனக்கு
என்னுள் இருந்துகொண்டு
என்னையே ஆட்டிபடைக்கும்
மனசிடமிருந்து!

Print this item