![]() |
|
அறியாமைக்கு ஓர் அறிவுரை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அறியாமைக்கு ஓர் அறிவுரை (/showthread.php?tid=5233) |
அறியாமைக்கு ஓர் அறிவுரை - tamilini - 02-16-2005 வாய் வார்த்தையால் வசமாய் ஜாலம் காட்டும் ஈனப்பிறப்புகள் இன்றி வாழ்வில்லையா...?? தாங்கிட ஒரு உறவென்று.. தடுக்கி விழாது பிடித்திட ஒரு தூண் என்று.. வாழ்வெல்லாம் கூட வர ஒரு துணை என்று நம்பி வாழ்ந்தது போதாதா...?? அன்பினை நெஞ்சினில் அடக்கி அவர்களை கண்களில் சுமந்து.. அன்பிற்காய் வாழும் அற்பப்பிறவிகளாய் அறியமையால் அடைப்பட்டது போதாதா..?? வேசக்காராம் ஏமாற்றுக்காரராம் அராய்ச்சியாம்.. அதற்கு பொருளாம்.. பெரிய அறிஞர்கள் இவர்கள்.. ஆராய்ச்சி செய்கின்றனர் பெண்களை அன்னை என ஒருத்தி.. ஆருயிர் கொடுத்து.. முளையான முதலில் இருந்து... பழமாகிய பின்பும் பி்ள்ளையாய் நெஞ்சில் கொள்வாள் தங்கையாய் அக்கைவாய்.. இன்னும் எத்தனை எத்தனை வடிவங்களாய்.. இவர்களுக்கு பெண்கள்...! கொண்டவனை உயிராய் எண்ணும் பத்தினிகள் வேறு எதற்கு ஆராய்ச்சி பெண்ணை.. அவள் பெருமை அறிந்தா..?? இல்லை சிறுமைப்படுத்தவா...?? மனைவி உயிருடன் இருக்கையில் பிற மனை நாடும் கணவனும் உண்டு.. காதலி கண் முன் இருக்கையில் கண் மேயும் காதலனும் உண்டு தங்கையையே தாயாக்கிய.. தமயனும் உண்டு தமக்கையை விற்றுப்பிழைக்கும் தம்பியும் உண்டு... தேவதாசாய் வாழ்கின்ற.. காதலரும் உண்டு.. தேவதாசை விட வேதனையில் வாழும் பார்வதிகளும் உண்டு அமைதியாய் வாழ்வதால் அவர்கள் போலிகளா..?? காதலித்தேன் தோல்வி என கதறி அழுவது தான் காதலா..?? மனதோடு மெளனமாய் அழுகின்ற பெண்மைகள் எத்தனை...?? சாஜகானைப்போல மாளிகை கட்டினால் தான் உண்மையான காதலா..?? தோல்விகள் என்பது எங்கும் சமனே.. மெளனமாய் இருப்பதனால் பெண்கள் மேல் பழி தான்.. மாற்றுங்கள் பல்லவியை. வெளிச்சத்திற்காய் நெருப்பிள் விழும் விட்டில் பு}ச்சிகள் அல்ல நீங்கள் பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் சிந்தனையில் தான் செயல்திறம் உண்டு. கதைவிடுவதில் காரியம் ஆவதில்லை உண்மையை உணருங்கள். வாழ்க்கை அர்த்தப்படும் பழிகளை வீசாதீர் பெண்கள் மீது. பெண்கள் பழி போட நினைத்தால் தாங்கிட ஏது வலிமை உமக்கு காதலுக்காய் நினைவாலையம் ஆக்கத்தான் முடியும் உம்மால் ஆனால் அழிக்கவும் முடியும் பெண்ணால் மாற்றுங்கள் எண்ணங்களை இல்லையேல் மாற்றப்படும்....! :twisted: - kavithan - 02-16-2005 என்ன கவிதை யாருக்கோ எச்சரிக்கிறது போல் இருக்கே..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 02-16-2005 «È¢Â¡¨ÁìÌ «È¢×¨Ã¡¸ «¨Áó¾ ¸Å¢¨¾ «Õ¨Á. Å¡úòÐì¸û... ¾Á¢Æ¢É¢. - tamilini - 02-16-2005 எச்சரிக்கை எல்லாம் இல்லை எப்பவோ எழுதியது. இன்றைக்கு தான் போட சு}ழ்நிலை வந்திச்சு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 02-16-2005 என்ன தமிழினி யார் உங்களை ஏமாற்றியது? அனுபவித்து எழுதியதுபோல இருக்கிறது? கவிதைவரிகள் நன்றாக உள்ளது ஆனால் கருவில்தான் சற்று மாறுபடுகிறேன். காதல் தோல்விகளுக்கு பெரும்பாலும் பெண்தான் காரணம் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - kavithan - 02-16-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->எச்சரிக்கை எல்லாம் இல்லை எப்பவோ எழுதியது. இன்றைக்கு தான் போட சு}ழ்நிலை வந்திச்சு.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓ அப்படியோ.... சரி சரி எல்லா விதமாயும் இருக்கினம் எல்லாரும்,... இனி தான் ஆணுக்கு கொஞ்சம் வில்லண்டமா எழுதணும் என்று இருக்கிறன்.. சும்மா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லாமல் வித்தியாசமாயும் சொல்லணும் தானே அது தான் அந்த கவிதை.... வாழ்த்துக்கள்.... அந்த கவிதைக்கு கீழே சொலிறேனே அதற்கு கருத்து. - KULAKADDAN - 02-16-2005 ஆமா நல்ல கருத்துகள் அக்கா...... Å¡úòÐì¸û<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Kurumpan - 02-16-2005 ஒன்றை ஒன்று சார்ந்தே வையகம் உள்ளது. இயற்கை முதல் மனிதமும் அதற்குள் அடக்கம். வீசும் காற்றும், விளையும் பயிரும் தான் சார்ந்த நிலைதனை தாழ்த்துவதில்லை மனிதன் மட்டுமே ஏற்றிய ஏணிகளைக்கூட எட்டி மிதிக்க தெரிந்தவன் சற்று உள்ளாய்ந்து பார்த்தால் ஆண்மையும் பெண்மையும் சரீர மாற்றமே அன்றி வேறில்லை ஆண், பெண் பெருமை சிறுமை பேசுவது தன்கண்ணை தானே குற்றவது போலல்லவா? - tamilini - 02-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> என்ன தமிழினி யார் உங்களை ஏமாற்றியது? அனுபவித்து எழுதியதுபோல இருக்கிறது? கவிதைவரிகள் நன்றாக உள்ளது ஆனால் கருவில்தான் சற்று மாறுபடுகிறேன். காதல் தோல்விகளுக்கு பெரும்பாலும் பெண்தான் காரணம் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது அனுபவம் அல்ல பலகாலமாய் களத்தில பெண்கள் பற்றி நடந்த கருத்தாடல்களின் வெளிப்பாடு. ஒரு காதல் தோல்விக்கு இரண்டு பக்கமும் சமனாய் காரணம் இருக்கு. உங்கள் கருத்திற்கு ஆதாரம் என்ன.. காதலில தோல்வி காணுற ஆண்கள் தாடிவைக்கிறார்கள் தண்ணி அடிக்கிறார்கள். இதன் மு}லம் மற்றவர்களது கவனத்தை தன்பக்கம் திருப்பி. அனுதாபம் தேடுகிறார்கள். இது உங்களுக்கு வெளிப்படையாய் தெரிகிறது. ஆனால் தோல்வி கண்ட பெண்கள். அப்படி செய்ய முடியுமா.. தாடி வைக்க முடியுமா தண்ணி தான் அடிக்க முடியுமா.. ஆகா பெண்களிற்கு வருகின்ற தோல்விகள் பெரிதாக மற்றவர்களைச்சென்றடைவது குறைவாக இருப்பதானால் பெண்களது தோல்விகள் தெரிவதில்லை அதற்காய் பெண்கள் தான் பெரும்பாலும் எனபதை ஏற்றுக்கொள்ள முடியாது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 02-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சற்று உள்ளாய்ந்து பார்த்தால் ஆண்மையும் பெண்மையும் சரீர மாற்றமே அன்றி வேறில்லை ஆண், பெண் பெருமை சிறுமை பேசுவது தன்கண்ணை தானே குற்றவது போலல்லவா <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எப்படி குற்றமாகும்.. இதெல்லாம் வாழ்க்கையில் நடந்திட்டு தானே இருக்கிறது... அப்ப உந்த சினிமா படத்தில் வாறதுகள் எல்லாம் எவ்வளவு கற்பனை கலந்த பொய்.. ஆனால் இது கற்பனை கலந்த உண்மை.. அதை சொல்வதில் எந்த குற்றமோ சிறுமையோ இருக்கு என்று எனக்கு படேல்லை
- aswini2005 - 02-16-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->என்ன தமிழினி யார் உங்களை ஏமாற்றியது? அனுபவித்து எழுதியதுபோல இருக்கிறது? கவிதைவரிகள் நன்றாக உள்ளது ஆனால் கருவில்தான் சற்று மாறுபடுகிறேன். காதல் தோல்விகளுக்கு பெரும்பாலும் பெண்தான் காரணம் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எப்படிச் சொல்கிறீர்கள் வியாசன் ? - Kurumpan - 02-16-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> சற்று உள்ளாய்ந்து பார்த்தால் ஆண்மையும் பெண்மையும் சரீர மாற்றமே அன்றி வேறில்லை ஆண், பெண் பெருமை சிறுமை பேசுவது தன்கண்ணை தானே குற்றவது போலல்லவா <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எப்படி குற்றமாகும்.. இதெல்லாம் வாழ்க்கையில் நடந்திட்டு தானே இருக்கிறது... அப்ப உந்த சினிமா படத்தில் வாறதுகள் எல்லாம் எவ்வளவு கற்பனை கலந்த பொய்.. ஆனால் இது கற்பனை கலந்த உண்மை.. அதை சொல்வதில் எந்த குற்றமோ சிறுமையோ இருக்கு என்று எனக்கு படேல்லை <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->நுனிப்புல் மேய்ந்தவன் ஒருபோதும் பசியடங்க மாட்டான் அப்பு. தன் பிரச்சனைக்கு தீர்வு காணமல் சமுகத்திடம் பழி போடுபவன் கோழை. உனது வாழ்க்கை உனக்காகத்தான். உனது ஏமாற்றத்தை திருத்த முயற்சி, அப்போது தானாக ஏமாற்றங்கள் குறையும். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் ஐயா. அவரவர் தனது வாழ்க்கையை திருத்திக்கொண்டால் இந்த பேச்சுக்கே இடமிருக்காது. - aswini2005 - 02-16-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->என்ன கவிதை யாருக்கோ எச்சரிக்கிறது போல் இருக்கே..? :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஒருவருக்குமில்லை அது உங்களது அறியாமைக்கும் உங்கள் ஆதிக்கக்கவிதைக்கும்தான் தமிழினியின் கவிதை பொருத்தம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வியாசன் - 02-16-2005 அவள் நினைவுகளில் மூழ்கும்போது பசுஞ்சோலைக்குள் உலாவும் உணர்வு கவிஞர்களின் கற்பனைகளில்தான் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர் போலிகளை பல்லக்கில் ஏற்றிவிட்டு அசல்களை சிலுவையில் அறைபவர்கள் வெண்ணெய் என்றெண்ணி சுண்ணாம்பை உண்டு வாய் வெந்துபோனவர்கள் ஜனகர்களின் வட்டத்துக்குள் இவர்கள் மனசுக்குள் சுயம்வரம் நடாத்துவர் மாலையிட மணாளர் தேர்ந்தெடுக்கமாட்டார் - tamilini - 02-16-2005 Quote:பசுஞ்சோலைக்குள் உலாவும்இது உண்மை தான்.. :| - KULAKADDAN - 02-16-2005 tamilini Wrote:அப்ப உண்மையில் பெண்கள் ஏமாற்றபடுவதில்லங்கிறீங்க............ :roll:Quote:பசுஞ்சோலைக்குள் உலாவும்இது உண்மை தான்.. :| - வியாசன் - 02-16-2005 இது தாயகத்தில் இருக்கும்போது எழுதிய கவிதை வரிகளை மறந்துவிட்டேன் தமிழினியின் கவிதையை பார்த்ததும் முடிந்தவரை நினைவு படுத்தி எழுதினேன் நன்றாக வரவில்லை - வியாசன் - 02-16-2005 குளக்காட்டான் தமிழினி ஒரு தடவை சொன்னால் நூறுதடவை சொன்னமாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 02-16-2005 viyasan Wrote:குளக்காட்டான் தமிழினி ஒரு தடவை சொன்னால் நூறுதடவை சொன்னமாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அப்பிடீங்கிறீங்க :wink: சரி..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-16-2005 tamilini Wrote:Quote:என்ன தமிழினி யார் உங்களை ஏமாற்றியது? அனுபவித்து எழுதியதுபோல இருக்கிறது? கவிதைவரிகள் நன்றாக உள்ளது ஆனால் கருவில்தான் சற்று மாறுபடுகிறேன். ஆம் ஆண்கள் வைக்கிறார்கள் தண்ணியடிக்கிறார்கள் ... அப்படியே அழிந்தும் போகிறார்கள்.. என்ன ஒருத்தியையே காதலிக்கணும் என்று நினைப்பதால் தானே அப்படி ஆகிறார்கள்.. அவர்கள் நினைத்தால் இவள் போனால் என்ன இன்னொருத்தி இல்லமலா போக போறாள் என்று,.. என்ன ஆகும்.. அவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் கூடுதலாக அப்படி செய்வது கிடையாது ... உண்மையில் காதலிப்பவர்கள் ஏதாவது காரணங்களினால் காதல் தோல்வி ஏற்படும் போது தம் நிலை மறந்து தவறான பாதையில் செல்கிறார்கள் அவர்கள் ஆண்களாக தான் இருப்பார்கள். ஏன் என்றால் கூடுதலான ஆண்கள் தனியான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டோ அல்லது தனித்தோ தான் செயற்பட்டு கொண்டிருப்பார்கள். அவர்கள் தன் குடும்பத்தினருடன் தங்கள் சோகங்களையோ மகிழ்ச்சிகளையோ பகிர்ந்து கொள்வது குறைவு. ஆனால் பெண்கள் அப்படி இல்லை அவர்கள் கூடுதலாக பெற்றோரின் கண்காணிப்பிலேயே வளர்கிறார்கள். எனவே அவர்கள் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டலும் கூட பெற்றோர் சகோதரங்களின் உதவியுடன் தம் புதிய வாழ்க்கையை தொடங்கி நன்றாக வாழ்வார்கள்.. வாழ்கிறார்கள்... சில சமயங்களில் அங்கும் அவர்களின் காதல் தோல்வி கறையான் ஆக அரிக்க தொடங்கலாம். |