| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 598 online users. » 0 Member(s) | 596 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,443
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| முரளிதரனின் திருமணம் |
|
Posted by: hari - 03-21-2005, 08:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
சென்னையில் இன்று நடக்கும் முரளீதரன், யுவன்சங்கர் ராஜா திருமணங்கள்
சென்னை:
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) இரண்டு நட்சத்திர ஜோடிகளின் திருமணங்கள் நடைபெறவுள்ளன.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையின் பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் இளையமகள் மதிமலர் ஜோடிக்கும், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா சுஜயா சந்திரன் ஜோடிக்கும்இன்று திருமணங்கள் நடைபெறுகின்றன.
முரளிதரன், மதிமலர் திருமணம் முற்றிலும் தமிழ்முறைப்படி, எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெறவுள்ளது.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/muralidharan-250.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/mathimalar-250.jpg' border='0' alt='user posted image'>
செவ்வாய்க்கிழமை திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அதில் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
முரளி மதிமலர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர் நடிகர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜா சுஜயா சந்திரன் திருமணம் ராஜா அண்ணாமலைபுரம் ராமநாதன் மண்டபத்தில் நடைபெறுகிறது. இது காதல் திருமணமாகும்.
சுஜயா சந்திரனின் பெற்றோர்கள் லண்டனில் வசிக்கிறார்கள். அவரது தந்தை இலங்கையைச் சேர்ந்தவர், தாயார் மலையாளி. யுவன் சுஜயா காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.
யுவன்ஷங்கர் ராஜாவின் திருமணத்தையொட்டி இன்று காலை மாண்டலின் சீனிவாஸின் இசைக் கச்சேரியும், மாலையில் ஹரிஹரனின் கஜல் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தட்ஸ்தமிழ்
|
|
|
| நேற்றைத் துயர் தொலைய |
|
Posted by: hari - 03-21-2005, 05:27 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
நேற்றைத் துயர் தொலைய
நிகழ்காலம் எம்பக்கம்.
கண்ணெதிரே கரைந்துபோகிறது கனவு
மண்ணெனவே உதிர்ந்து போகிறது மனம்.
நெஞ்சுக்குள்ளே கோடுகளால் வரைந்த உருவம் கூட
ஒப்பேற முன்னரே உருகிப் போகிறது.
நடைவழித் துணையாக நம்பிக்கை மட்டுமே
நம்பிக்கை மட்டுமே நமக்கற்றுப் போயிருந்தால்
வெம்பிப்போய் என்றோ விழுந்திருப்போம்.
நாளை நமக்கெனும் நம்பிக்கையிற்தானே
வாழ்வு வசப்படுமென வரலாறு நகர்கிறது.
ஒருநாள் மட்டுமே உயிர்வாழுகின்ற
ஈசல்களுக்கேன் இறக்கை முளைக்கின்றது?
நீண்டநாள் பறப்பேனென அதற்கு நினைப்பு
அதனால் முளைக்கிறது.
மாலையில் கருகும் மலர்களெல்லாம்
காலையில் என்னவாய் கண்சிமிட்டுகின்றது
நாட்கள் பலவாக வாழ்வோமெனும் நம்பிக்கை
பூக்களுக்குக்கிருப்பதாற் தானே அவை புன்னகைக்கின்றன.
எவரெஸ்ட் சிகரத்தை டென்சிங் தொட்டான்.
அதற்குமுன்
எத்தனை முறை ஏறியிறங்கினான்.
என்றோ ஒருநாள் தொடுவேனென்ற நம்பிக்கை
அவனுக்கிருந்தது அதனாலே வென்றான்.
நடக்கவேண்டுமா எழுந்துபார்.
கடக்க வேண்டுமா பாய்ந்துபார்.
எப்படிச் சாத்தியமாகுமென இடிந்து போனால்
இப்படியே கிடக்க வேண்டியதுதான்.
துரையப்பாவை தலைவன் சுட்டபோது
ஏன் சுட்டதென்று எவரும் கேட்கவில்லை
எவர் சுட்டதென்று தானே கேட்டார்கள்.
பின்னர் பிரபாகரனென்ற பெயரை
பிரமிப்புடன் உச்சரித்துக் கொண்டனர்
பொன்னாலைப் பாலத்தில் புதைத்தகுண்டு வெடிக்காதபோது
என்னாலினி முடியாதென தலைவர் நினைத்திருந்தால்
ஆனையிறவை வெல்ல அவரால் முடிந்திருக்குமா ?
எத்தனைபேர் அவருடன் நின்றார்கள்.
பின்னர் சென்றார்கள்.
எத்தனைபேர் அவருடன் வந்தார்கள்
பின்னர் போனார்கள்.
கூட இருந்தவர்கள் அகன்ற போதும்
ஆடவில்லையே அந்த ஆலமரம்.
வெல்வேனென்ற வீரியமும்
செல்வேனென்ற நம்பிக்கையும்
வல்வை மைந்தனுக்கு வாய்த்திருக்காவிடில்
ஈழத் தமிழருக்கு எப்போதோ
ஆண்டுத்திவசம் முடிந்திருக்கும்.
நம்பிக்கையே பலம் பொருந்திய தும்பிக்கை.
தளராதிருக்க வேண்டும் தமிழரே.
வன்னிக்கு வரும்போது வாழ்வே முடிந்ததென
எண்ணி இருந்தோமானால்
இதுவரைக்குள் எல்லாமும் தொலைத்திருப்போம்.
உன்னியெழுந்தோம்.
ஊர்புகுவோம் என்றுரைத்தோம்.
இன்று செம்மணியில் நின்று சிரிக்கின்றோம்.
நம்பிக்கைதானே நாற்றங்கால்.
ஒருநாளும் தளராதிருப்பவனே பெருவாழ்வு பெருவான்.
முடியுமாயிது என மலைத்துப் போறவன்.
பிடிமானமேதுமின்றிப் பொசுங்கிப் போய்விடுவான்.
ஊர்போக வேண்டுமா?
போவேனென நம்பு
உயிர்வாழ வேண்டுமா?
சாகேனென நம்பு.
நம்பிக்கைதானே நாட்களை நகர்த்துகின்றது.
பிரபாகரனென்ற பெயர்
ஒரு மனிதனின் பெயர் மட்டுமல்ல
நம்பிக்கைக்கு இன்னொரு நாமம்.
வாழ்வு வசப்படுமென யார் நம்பினாலும்
அவனுக்கு வாசல் திறந்து கொள்ளும்.
ஈழத்தமிழரின் சோதனைக்காலம் முடிந்துவிட்டது.
இனிச் சாதனைக்காலம்.
இருள்வாழ்வு எமக்கினி எப்போதுமில்லை.
வெற்றியின் முகமே எமக்கினி விளங்கும்.
எங்கள் மூச்சுக்கலந்த காற்றுக்கு முன்பாக
நிற்கும் பலம் உலகத்தில் எவருக்கும் இல்லை.
நாங்கள் வேர்படர்ந்த அறுகம்புல்.
கொத்திப் புரட்டினாலும் முளைப்போம்.
கொழுத்தியெரித்தாலும் துளிர்ப்போம்.
நிமிர்ந்த வாழ்வு வருமென நினை.
வருந்தி உழை.
தமிழீழம் வருமென நம்பு
தளராது போரிடு.
உன்னை யாரழித்தல் கூடும் ?
உமித் துகளல்ல உன்னை யாரும் ஊதித்தள்ள
கைவிலங்கற்று வீசும்காற்றை அவாவுவோம்.
சிறகடித்துப் பறக்கிறதே பறவை
அதன் சங்கீதத்துக்குத் தாளமிடுவோம்.
விட்டு விடுதலையாகும் விடுதலை வேண்டும்
கட்டுக்களற்று
எந்தக் காயங்களுமற்று
தொட்டுமகிழ எமக்குச் சுதந்திரம் வேண்டும்
முன்னர் எமக்கொரு நிலமிருந்தது
அந்த நிலத்திலொரு வாழ்விருந்தது
அந்த வாழ்வில் ஒரு வாசமிருந்து.
வாழ்வைத் தொலைத்து எத்தனை வருடங்கள் ?
போரிடுவோம்.
தொடர்ந்து போராடுவோம்.
பிரபாகரனென்ற நம்பிக்கையுடனும்
புலிகளென்ற தும்பிக்கையுடனும்,
போராடுவதுதான் பெருமைதரும்
காடுகளையும், மலைகளையும் கடப்போம்.
மேடுகளிலும் பள்ளங்களிலும் நடப்போம்.
கால்கள் வலிக்குதெனக் களைப்பாறும் போதுதான்
பகைவனின் குதிரைகள் பக்கத்தில் வந்து விடுகின்றன.
அதனால்,
நடக்கத்தொடங்கினால் இளைப்பாறல் கூடாது
தொடர்ந்து நடப்போம்.
சூரியன் கைக்கெட்டும் தூரத்தில் சுடர்கிறது
தமிழீழம்
அது எங்கள் உயிர்க்கோளம்
உருவாகிவிட்டது சிசு
கருவாய் திறப்பதற்காகவே காத்திருக்கின்றோம்.
நடுகல் வரிசையை நாளும் தரிசித்து
விடுதலைக்கான வேகத்தை விரைவுபடுத்துவோம்
ஆவிநிகர்த்த எம் "அன்னை நிலத்தேவி"
தன் அளகபாரம் நீவிமுடிந்தாள்.
முத்துப் பரல்களைக் கொட்டிச் சிரித்தாள்.
பகைமுழுதும் தீயும் திசையுரைத்தாள்.
வரமளித்து வல்லமை நல்கினாள்.
உரம் கொண்டெழுந்தது ஓயாத அலை.
இனி ஊர் முழுதும் எமதாக்கியே ஓயும்.
தாயின் துயரழித்தே தணியும்
பகைவரை மட்டுமல்ல
துரோகிகளையும் அள்ளிவந்து
எம் காலடி ஏற்றும்
காற்று எம்பக்கம்
கடலும் எம்பக்கம்
நேற்றைத் துயர் தொலைய
நிகழ்காலம் எம்பக்கம்.
தாழ்வுற்று எம் தலை குனிந்தது போதும்.
வாழ்வு சமைப்போம் வாருங்கள்.
புதுவை இரத்தினதுரை
ஐப்பசி, கார்த்திகை 2000
இக்கவிதை பற்றிய உங்கள் மதிப்பீட்டுக்கு இங்கு சொடுக்குங்கள்!
|
|
|
| மலரும் நினைவுகள்.... |
|
Posted by: Kurumpan - 03-21-2005, 04:36 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
<img src='http://www.eelavision.com/gallery/5002-8232.jpg' border='0' alt='user posted image'>
[size=18]கண்டங்கள் கடந்து வந்து
கண் மூடி உறங்கினாலும்
உறங்காமல் மனசோடு மட்டும்
மலர்ந்த என் மண் நினைவுகள்...
பிஞ்சு விரல்களால்
பற்றி எடுத்த மண்
அன்று விரல்களில் ஒட்டியவை
இன்றும் உயிர் இழைகளிலே...
ஆத்தோர ஆலை
அந்தி சாயும் வேளை
புழுதி மணல்
உச்சி வெயில்
வாத்தியார் பிரம்பு
வயல் வரம்பு
உள்ளம் குளிர்ந்த மழைத்துளிகள்
வெள்ளம் நனைத்த கால்கள்
ஓரப் பார்வை பார்த்த
பக்கத்து வீட்டுப் பெண்ணின்
ஓடி ஒழிந்த சிரிப்பு
களவாடிச் சுவைத்த மாங்காய்
கணப்பொழுதும் யோசிக்கா பொய்கள்
இன்னும்...
எத்தனை எத்தனையோ...
இளமைக்கால நினைவுகள்
இன்றும் பசுமையாக...
|
|
|
| ஒரே குரல்... |
|
Posted by: yalie - 03-21-2005, 03:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
ஒரே குரல்...
இடிந்து கிடக்கின்றன
மசூதிகள்...
இடிபாடுகளின்
உள்ளிருந்து
எட்டிப்பார்க்கிறான்
இறைவன்!
எரிந்து கிடக்கின்றன
தேவாலயங்கள்...
சாம்பல் குவியலில்
மெல்ல அசைகிறது
கர்த்தரின் தலை!
காயம்பட்டு கிடக்கின்றன
கோவில்கள்...
காதுகளைப் பொத்தியபடி
கண்திறந்து பார்க்கிறான்
கடவுள்!
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கும்
கூட்டத்தை நோக்கி
மூவரும் கேட்கிறார்கள்
ஒரு கேள்வி...
"உங்களில் யாராவது
ஒரு மனிதன் இருந்தால்
வரச் சொல்லுங்கள் -
ஒன்றாக நாங்கள்
உயிர்த்தெழுகிறோம்!"
- மு. மேத்தா
|
|
|
| புரியாத புதிர்கள்... ??!! |
|
Posted by: anpagam - 03-20-2005, 11:46 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (72)
|
 |
..... புலி பதுங்கிப் பாயுமா? அம்மா வீட்டிற்குப் போவரா? ஜே.வி.பி எல்லாவற்றையும் குழப்புமா? என எங்கு பார்த்தாலும் கேள்விகள் எழுப்பபடுகின்றது. யுத்தத்தைத் தான் புலிகள் ஆரம்பிக்க வேண்டுமென்றால் சுனாமி அனர்த்தத்தையடுத்து அதனை ஆரம்பித்திருக்கலாம். சுனாமியினால் திருகோணமலை கடற்கரை அள்ளுண்டது. கடற்படையின் பிரதான தளம் முற்றாக அழிந்து போய்விட்டது. இந்தியா பாதிக்கப்பட் மாலைதீவைக் கூட கைவிட்டு விட்டு இங்கு தளத்தை தற்போது மீளக கட்டியெழுப்பி வழங்கியிருக்கின்றது என்றார்..
தெளிவற்ற அரசியற் சூழ்நிலை தமிழ் மக்களை மோசமாகப் பாதித்து வருகிறது!: 'போரும் சமாதானமும்" நூல் வெளியீட்டு நிகழ்வில் வே. பாலகுமாரன்
.......சமூகத்தின் அறிவுசார் தொகுதியிரான புத்திஜீவிகள் சமூகத்திலிருந்து பிரிந்து சென்று சமூகத்தை மிரட்டக்கூடாது. சுமூகத்துடன் அவர்களும் இணைந்து ஒர் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பாடுபடவேண்டும் இதுவே எமது பகிரங்க கோரிக்கையாகும்.
|
|
|
| தவத்தார் வந்தேனே |
|
Posted by: THAVAM - 03-20-2005, 09:47 PM - Forum: அறிமுகம்
- Replies (20)
|
 |
வந்தேனே நானும் வந்தேனே.... தவத்தார் நானும் வந்தேனே.....
என் அன்பான யாழ் கள நிர்வாகத்திற்கும் களத்தின் கோடானகோடி வாசகர்களுக்கும் இந்த தவத்தானின் கரம் கூப்பிய தாழ்மையான வணக்கங்கள்.
|
|
|
| கிழக்கில் கருணா குழு |
|
Posted by: selvanNL - 03-20-2005, 03:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (17)
|
 |
<b>உயிர் தப்ப வெளிநாடுகளுக்குச் சென்ற புலனாய்வாளர்களுக்கு அவசர அழைப்பு</b>
கிழக்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொல்லப்படுபவர்கள் யார் எனத் தெரியாதளவிற்கு கொலைகள் இடம்பெறுகின்றன. புலிகள் மீதான தாக்குதல்கள் நடைபெறும் அதேநேரம் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி கிழக்கில் புலிகளைப் பலவீனப்படுத்தி விட இராணுவ புலனாய்வுப் பிரிவு முயல்கிறது. அதேநேரம் இராணுவ புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத்தினரின் இந்த நோக்கத்திற்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு புறம் புலிகளுக்கெதிராக அரசு அரசியல் ரீதியில் எதிர்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகையில் மறு புறம் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கிழக்கில் குழப்பங்களை உருவாக்கி அதன் ஸ்திர நிலைமையை சீர்குலைக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கருணாவின் கிளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்கள் அவரது கட்டுப்பாட்டிலிருந்தன. மட்டக்களப்பிலிருந்து கருணாவின் வெளியேற்றத்தையடுத்து மட்டக்களப்பு நகர்ப்புறப் பகுதியில் கருணா குழுவினரின் நடவடிக்கைகள் சில காலங்களிருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் கருணா குழுவினரின் செயற்பாடு மிகவும் பலவீனமடைந்தது.
போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு போர்நிறுத்தம் அமுலிலிருக்கையில் சமாதான முயற்சிகளை முன்னகர்த்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த போதிலும், பலவீனமடைந்த கருணா குழுவை பயன்படுத்தி, அதாவது கருணா குழுவென்ற பெயரில் புலிகள் மீதான நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், புலிகளுக்கெதிரான இந்த நிழல் யுத்தத்தில் கருணா குழுவென்ற பெயரில் வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையே இராணுவ புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தியது. புலிகளும் இதனை நன்கறிந்திருந்தனர். இதனால் கருணா குழுவினருடன் ஏனைய தமிழ்க் குழுக்கள் மீதும் புலிகள் இலக்கு வைத்தனர். இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் தப்பியோடி விட்டனர். ஆனாலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது செயற்பாட்டை கைவிடவில்லை.
கருணா குழுவுக்கு எதிரான புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் பல வெற்றியளித்தன. மட்டக்களப்பிலும் கொழும்பிலும் கொழும்பின் புறநகர்ப் பகுதியிலும் வைத்து கருணா குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்படவே, கருணா குழுவென்ற பெயரில் தொடர்ந்தும் அதனை இயங்க வைக்கவும் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தவும் வேண்டிய தேவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்பட்டது.
இதனால், இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையும் கருணா குழுவென்ற பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு களமிறக்கியது. ஆனால், அது, எதிர்பார்த்த பலனை விட மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியது.
கருணா குழுவில் எஞ்சியிருந்தவர்களுக்குள்ளும் புலிகள் ஊடுருவியிருந்ததால் தமிழ்க் குழுக்களதும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரதும் நடவடிக்கைகளை புலிகள் நன்கறிந்து அதற்கேற்ப செயற்பட்டனர். இது இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், கிழக்கில் மீண்டும் புலிகள் ஸ்திர நிலையை உருவாக்குவதை தடுக்கும் நோக்கில் அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டனர்.
அத்துருகிரிய மிலேனியம் சிற்றி பாதுகாப்பு இல்லம் வெளியுலகிற்கு அம்பலமானதையடுத்து இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களது முழு விபரமும் எப்படியோ வெளிவந்தது. இந்தப் பட்டியல் புலிகளுக்கு கிடைத்து விடவே, இராணுவ புலனாய்வுப் பிரிவின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவில் தமிழ் உளவாளிகளே இல்லாது போய்விடுவார்களோ என அஞ்சுமளவிற்கு தமிழ்க் குழு உறுப்பினர்கள் தாக்குதல்களுக்கிலக்காகவே, இவர்களைப் பாதுகாப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு இரகசிய திட்டமொன்றை வகுத்தது. அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசுக்குத் தெரியாமல் தங்கள் இரகசியத் திட்டத்தை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நிறைவேற்றினர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்தியங்கும் தமிழ் உளவாளிகளுக்கு வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்து விமானத்திற்கான பயணச் சீட்டையும் வழங்கி அவர்களில் பலரை, பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இவ் வேளையில் தான் படையினருக்கு கருணா கைகொடுத்தார். அவரைப் பயன்படுத்தி கிழக்கை முற்றாகவே குழப்பி விட புலனாய்வுப் பிரிவு பெரும் திட்டங்களை தயாரித்திருந்த போதிலும், பின்னர் அவையெல்லாம் பகற்கனவாயின.
கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் அடுத்தடுத்து கொலையுண்டனர். எஞ்சியவர்களை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் இல்லாது போகவே இவர்களை வழிநடத்துவதற்காக, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு புலனாய்வுப் பிரிவினரால் அனுப்பி வைக்கப்பட்ட சில முக்கிய தமிழ் உளவாளிகள் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.
இதில் புளொட் மோகன் மிக முக்கியமானவர். இவரைப் பயன்படுத்தி கருணா குழுவை வழிநடத்தி கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களைத் தொடுக்க திட்டங்கள் தீட்டப்பட்ட போது புளொட் மோகன் கொல்லப்பட்டதுடன், இவரைப் போன்று மீண்டும் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்ட வேறு சிலரும் கொல்லப்படவே இராணுவ புலனாய்வுப் பிரிவு தடுமாறிப் போனது.
தமிழ் உளவாளிகளை இழக்காது கருணா குழுவின் பெயரில் கிழக்கில் தொடர்ந்தும் எவ்வாறு தாக்குதல்களை நடத்துவதெனவும் படைத்தரப்பு சிந்தித்தது. புலிகளின் சாதாரண போராளிகள் சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட போது, அது மக்களை குழப்பமடையச் செய்யும் வெற்றிமிகு தாக்குதல்களாக உணரப்படாததால் புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசியல் பணிகளில் ஈடுபடும் புலிகள் நிராயுதபாணிகளாகவே நடமாடுவர். அதேநேரம் இராணுவ சோதனைச் சாவடிகளூடாக பயணம் செய்யும் போது புலிகளின் விபரங்கள் பதிவு செய்யப்படுவதால் புலிகளின் நடமாட்டங்கள் குறித்த பூரண விபரங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிய வந்தன.
இந்த நிலையிலேயே புலிகளின் மட்டு.-அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கொல்லப்பட்டார். கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக படைத் தரப்பு கூறியதுடன், புலிகளின் முக்கிய தலைவர்களைக் கூட தாக்கும் வல்லமை கருணா குழுவிடமிருப்பதாகவும் தொடர்ந்தும் பிரசாரம் செய்தது.
கருணா குழுவென்ற பெயரில் தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தியே இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் கடுமையாகக் குற்றஞ் சாட்டினர். கருணா குழுவில் எஞ்சியிருப்பவர்களை புலிகளுக்கு நன்கு தெரியுமென்பதால் எஞ்சியிருக்கும் அவர்களது செயற்பாடுகள் குறித்த பூரண புலனாய்வுத் தகவல்களை புலிகள் பெற்றும் வருகின்றனர்.
தங்கள் மீதான தாக்குதல்களை தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவினரே மேற்கொண்டு வருவதாக புலிகள் நோர்வே தரப்பிடமும் கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளதுடன் இராணுவ துணைப்படையாக செயற்படும் இவர்களது நடவடிக்கை, போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது எனவும் கூறியுள்ளனர்.
தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் கிழக்கில் குழப்பங்களை தோற்றுவித்து ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவே முக்கிய காரணமென்பதை புலிகள் நன்குணர்ந்திருந்தாலும் இதுவரை படைத்தரப்புக்கெதிராக புலிகள் எவ்வித தாக்குதலையும் தொடுக்கவில்லை. பொறுமை காத்தே வருகின்றனர்.
கௌசல்யனின் கொலையை அடுத்து அரச தரப்பு கூட நோர்வே அனுசரணையாளர்களூடாக <b>புலிகளின் கோபத்தை தணிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. படை அதிகாரிகள் மீதோ அல்லது அரசுத் தலைவர்கள் மீதோ பதில் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாமென நோர்வேயூடாக அரசுத் தலைவர்கள் கேட்டது யாவருமறிந்த உண்மை.
[b]இதன் மூலம் கௌசல்யன் மீதான தாக்குதலில் படைத்தரப்பின் பங்களிப்பு எவ்வளவென்பதை அரச தரப்பு நன்கறிந்துள்ளது தெளிவாகியது. அரசின் இந்த வேண்டுகோள் மூலம், படைத்தரப்பிற்கும் இதில் தொடர்பிருப்பதை நோர்வே அனுசரணையாளர்களும் புரிந்து கொண்டதுடன் புலிகளைச் சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தியதுடன் படை அதிகாரிகள் மீதோ அரசுத் தலைவர்கள் மீதோ பதில் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாமெனவும் கேட்டிருந்தனர்.</b>
ஆனாலும் இந்தத் தாக்குதலையடுத்து இராணுவ புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. தமிழ் குழுக்களைச் சேர்ந்தவர்களும், இராணுவ உளவாளிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். படைத்தரப்பை விட படையினருடன் சேர்ந்து செயற்படும் உளவாளிகளே தற்போது அடுத்தடுத்து இலக்கு வைக்கப்படுகின்றனர்.
அதேநேரம் கருணா குழுவின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டு, இன்று பொலனறுவை வெலிக்கந்தையிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தின் அருகிலுள்ள பகுதிகளிலேயே இவை நடைபெறுகின்றன. இதனால் தற்போது, மட்டக்களப்பு மாவட்ட எல்லையிலுள்ள வெலிக்கந்தைப் பகுதி கொந்தளித்துப் போயுள்ளது.
கருணா குழுவின் பெயரால் புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதே புலனாய்வுப் பிரிவினரின் நோக்கமாகும். அதே நேரம் மட்டக்களப்பிற்கும் வன்னிக்குமிடையிலான புலிகளின் முக்கியஸ்தர்களது தரைவழிப் போக்குவரத்தும் வெலிக்கந்தை ஊடாகவே நடைபெறுகின்றது.
மட்டக்களப்பில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அல்லது ஓமந்தைக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் வந்துவிட்டால் அது படைத்தரப்பிற்கு தெரிந்து விடும்.
இது புலிகளின் நடமாட்டம் குறித்த விபரங்களை எவருக்கும் வழங்கப் போதுமானது. அத்துடன் புலிகளின் சாதாரண உறுப்பினர்களை தாக்க மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் தமிழ்க் குழுக்களை புலிகள் சுலபமாக இலக்கு வைத்துவிடுவதால் ,மட்டக்களப்பில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் இந்த தமிழ்க் குழுக்கள் வெலிக்கந்தை பகுதியில் வைத்தே புலிகளை இலக்கு வைக்க முயல்கின்றன.
இதனால் அண்மைக் காலங்களில் வெலிக்கந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அடுத்தடுத்து பல கொலைகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் அப்பகுதியில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டமும் அதிகரித்து, முன்னர் அமைதியாக இருந்த வெலிக்கந்தை இன்று இரத்தக்களரியாகி விட்டது.
இந்தப் பகுதியிலுள்ள ஆயுதக் குழுக்களை வெளியேற்றக் கோரி கடந்த வாரம் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கருணா குழுவினருக்கும் தமிழ் குழுக்களுக்கெதிராகவும் சுலோக அட்டைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் இக் குழுக்களால் தாங்கள்படும் இன்னல்கள் குறித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
வெலிக்கந்தையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இந்த ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதால் இவர்கள் படையினரின் ஆதரவுடனேயே இங்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அந்த மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வெலிக்கந்தை இன்று செய்திகளில் அடிபடும் பகுதியாகி விட்ட நிலையில், பாதுகாப்பிற்காக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு அண்மையில் அவசர அவசரமாக திருப்பியழைக்கப்பட்டிருந்த இரு உளவாளிகள் அண்மைக் கால தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்களுக்கெதிரான நிழல் யுத்தத்தை புலிகள் வெற்றிகரமாகவே எதிர்கொண்டு வருகின்றனர். நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்களும் திருப்பியழைக்கப்பட்டு அந்த நிழல் போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனாலும், அவர்கள் சுலபமாக இலக்கு வைக்கப்பட்டு விடுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் கருணா குழுவினரை இழந்தது போல் இராணுவ புலனாய்வுப் பிரிவு தமிழ்க் குழு உறுப்பினர்களையும் இழக்கத் தொடங்கியுள்ளது. புலிகளின் நடவடிக்கைகள் கிழக்கில் தீவிரமடையத் தொடங்கியுள்ளதால் சில வேளைகளில் நிழல் யுத்தமும் விரைவில் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படலாம்...
¿ýÈ¢ Å¢ÐÃý.. ¾¢ÉìÌÃø..
----------------------------------------------------------------------
®À¢ÊÀ¢ ¬Éó¾ ºí¸Ã¢ ®À¢¬÷ ±ø ±ù Åþ÷ «½¢ §ÁÖõ ÀÄ Ð§Ã¡¸ ÌõÀø¸û ¯Ä¸ ¿¡Î¸Ç¢¼õ Ţξ¨ÄÒÄ¢¸û Á¡üÚ ¸ÕòЦ¸¡ñ¼ ¾õ þÉò¾Å¨Ã§Â À¡Ã Àðºõ þøÄ¡Áø ¦¸¡¨Ä ¦ºöÐÅÕ¸¢È÷¸û «Å÷¸Ç¢ý þó¾ ¦ºÂ¨Ä ¸ñÊì¸ §ÅñÎõ ±ýÚ °¨Ç þðÎ ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸û..
¬É¡ø ¾Á¢ú Áì¸Ç¢ý ;ó¾¢ÃÁ¡É ´Õ ÅÇÁ¡É ´Õ ¿¡ð¨¼ ¯ÕÅ¡ì¸ ¾Á¢ú þ¨Çï»÷¸û Ôž¢¸û ¾í¸Ç¢ý ¯Â¢¨Ã ÐîºÁÉ Á¾¢òÐ ¸Çò¾¢Ä §À¡Ã¡Ê¸¢ýÈÉ÷. ¬É¡ø º¢Ä ЧḢ¸û «ýÉ¢Âý Å£Íõ ±ÖõÒ ÐñÎìÌ ¬¨ºôÀðÎ ¾Á¢Æ÷¸Ç¢ý §À¡Ã¡ð¼ò¨¾ À¢ý §¿¡ì¸¢ ¿¸÷ò¾À¡÷츢ýÈ¡÷¸û.. «ôÀÊ Àð¼Å÷¸û ±ÁÐ ¾Á¢Æ¢Æ §¾ºò¾¢üìÌ §¾¨Å¡?? «Å÷¸û ÓüÈ¡ì ¸¨ÇÂôÀ¼§ÅñÎõ. «Å÷¸ÙìÌ «¾¢¸ À𺠾ñ¼¨É¸û ÅÆí¸ôÀ¼ §ÅñÎõ.. :evil: :oops:
|
|
|
| தோல்வியே வெற்றியின் முதற்படி |
|
Posted by: Malalai - 03-20-2005, 09:41 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (18)
|
 |
வெற்றியை நோக்கி
வீறுநடை போட ஆரம்பிக்க
தடைக்கற்கள் முன்னிருந்து
தடுக்கி விழுத்தும் போதும் கூட
துவண்டிடாமல் துள்ளி எழுந்து
தொடர்கிறேன் பயணத்தை
காலம் கனியட்டும் என
காத்திருக்கவில்லை நான் - காரணம்
காத்திருக்காது காலம்
எனக்காக - அதனால்
முயற்சி செய்கிறேன்
மீண்டும் மீண்டும்
விழுந்தது எத்தனை தரமென
எண்ணிக்கை தெரியவில்லை
வெற்றியை விட
வீழ்ச்சியே அதிகம்
என தெரியும்
இருந்தாலும் விடா முயற்சியுடன்
தொடர்கிறேன் பயணத்தை
எத்தனை முறை வீழ்ந்தாலும்
அத்தனை முறையும் எழுவேன்
சிந்தை கலங்காது...
சந்தர்ப்பம் தந்த தோல்விகளால்
சலிக்காது போராடுகிறேன்
தோல்விகளுக்கே தோல்விகள்
தருவதற்காக...
|
|
|
|