| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 619 online users. » 0 Member(s) | 616 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,444
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,646
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,679
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,266
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்புதல் |
|
Posted by: thamilvanan - 03-24-2005, 12:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கடந்த வாரம் வெளியான சண்டேலீடரில் வெளிவந்த நேர்காணலை ஒட்டிய பதிவாக இப்பத்தி அமைகிறது. முன்னர் சந்திரிகா அரசில் மிக முக்கியமானவராக இருந்த எஸ்பி திசாநாயக்காவே சில தகவல்களை வெளியிட்டிருந்தார். வரலாறு பல பாடங்களை தந்து இருக்கிறது. வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் ஞானோபதேசம் பெற்ற முன்னாள் தமிழ்பொலிஸ்மா அதிபரை கடந்த பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். எஸ்பி திசாநாயக்கா, ஜிஎல். பீரிஸ் ஆகியோர் இன்று சந்திரிகா அரசில் இருப்பவர்களை விட உயர்நிலை அந்தஸ்தில் இருந்தவர்கள். சந்திரிகாவின் தீவிர விசுவாசிகளாக இருந்த இவர்கள் ஏன் ஐதேகட்சிக்கு மாறினார்கள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை. ஆனால் சந்திரிகா எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்வதற்கு இது சில வேளை பயன்படக்கூடும்.
அவர் அந்த நேர்காணலின்போது சந்திரிகாவின் அசட்டுத்தனமான போக்குபற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். <b>"சந்திரிகா தனக்காக 03 சார்க் நாட்டுத்தலைவர்களை 27 நிமிடங்கள் காத்திருக்க வைத்திருக்கிறார். சுனாமிக்கு பின்னர் கூட முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ் உம் பில் கிளின்டனும் சந்திரிகாவின் வருகைக்காக 45 நிமிடங்கள் காத்திருந்திருக்கிறார்கள்." </b>
பழைய நினைவுகளை நினைவு கூர்ந்த அவர் ஒரு ஆய்வுப்புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாக குறிப்பிட்டார். <b>" நான் இப்புத்தகத்துக்காக பல விடயங்களை தயார்படுத்திவருகிறேன். நான் குறிப்பிட்ட பலரிடம் சில கேள்விகளை அனுப்பி அவர்களின் பதிலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். இப்புத்தகம் சந்திரிகாவைப்பற்றி மட்டும் சொல்லவில்லை. பண்டாரநாயக்கா குடும்பத்தை அதன் வரலாறை இப்புத்தகம் வெளிக்கொண்டுவரும். எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவந்தார். ஆனால் பண்டாரநாயக்க குடும்பம் உண்மையில் தமிழ்க்குடும்பம். அவர்கள் பலவற்றை செய்து தங்களது பெயர்களை மாற்றினார்கள். "</b>
சந்திரிகாவின் அரசியல் வரவுக்கு தோள் கொடுத்த பலரில் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் கட்சி மாறிப்போனார்கள். இந்தப்பட்டியல் எனது நினைவுக்கு எட்டியவரை வசந்தராஜா வில் தொடங்கி இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்குள்ளும் சிலர் இப்போதும் சந்திரிகாவுடன் தொடர்ந்து இருந்து சாதனை படைக்காதவர்களும் இல்லாமலில்லை. அவர்கள் வேறு யாருமல்ல. டக்ளசும் லக்ஸ்மன் கதிர்காமரும் தான். அவர்கள் தங்கள் வாழ்நாள் மட்டும் சந்திரிகாவுடன் இருப்பார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை.
தற்போது சந்திரிகாவுக்கும் ஜேவிபிக்கும் இடையில் பனிப்போர் தொடங்கிவிட்டது. இதனை மேற்கத்தைய அணுகுமுறையிலோ அல்லது புதுவிதமான முறையிலோ சுமூக நிலைக்கு கொண்டுவருவதென்பது சந்திரிகாவின் கடந்த கால அரசியலையும் ஜேவிபியின் நிகழ்கால அரசியலை நன்கு அறிந்தவரகள் புரிந்து வைத்திருப்பார்கள். ஒன்று மட்டும் உறுதியானது. சந்திரிகா இருக்கும்வரை ஜேவிபியும் நினைத்தபாட்டுக்கு ஆடமுடியாது. ஆனால் இரண்டு இக்கட்சிகளும் இணைந்திருக்காமலும் ஐதேகட்சிக்கு முகம்கொடுக்கமுடியாது. இதற்கு இப்போது ஜேவிபிக்குள்ள ஒரேவழி சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்புவதே.
முடிவு பெரும்பாலும் எடுக்கப்பட்டிருக்கும். அதனை எவ்வாறு கொண்டுசெல்வது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
<b>தமிழ்ச்சங்கமம்</b>
|
|
|
| சாத்தான்கள் ஓதும் வேதம் |
|
Posted by: Mathan - 03-23-2005, 04:35 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (3)
|
 |
சாத்தான்கள் ஓதும் வேதம்
<b>கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுந்தம் போக முயன்ற கதையாய் சொந்த நாடு வெந்து தணிந்திருக்கும் போது இலங்கை இராணுவம் ஹெயிட்டியில் அமைதி காக்கப் போயிருக்கிறது.</b>அந்த வேலையை இலங்கையில் செய்தால் நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் நல்லது.சரி பரவாயில்லை உலக நாடுகளின் இராணுவங்களுடன் சேர்ந்து போர் நிறுத்த வேளையில் அமைதியாயிருப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு வருவார்கள் என நினைத்தேன்.
ஒருவேளை வெளிநாட்டில் அமைதிகாக்கும் பணியிலாவது இன்னொரு இராணுவத்தாலோ போராளிக்குழுவாலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியிலாவது இலங்கை இராணுவம் வலி என்றால் என்னவென்று உணர்ந்து வருமென்று நினைத்தேன்.இப்போது பார்த்தால் அதற்கும் வழியில்லை போலிருக்கிறது.
ஹெயிட்டியில் இடம்பெற்ற மோதலொன்றில் அகப்பட்டு அமைதி காக்கச் சென்ற இலங்கை இராணுவ வீரர் இறந்திருக்கிறார்.அது இங்கேயிருக்கும் ஜே.வி.பி சிங்கங்களை உசுப்பி விட்டிருக்கிறது.எப்படி எங்கள் நாட்டு வீரன் இன்னொரு நாட்டுக்காய் உயிரைக் கொடுக்கலாம் இலங்கைப் படைவீரன் இலங்கையில் சாவதற்கே உரித்துடையவன் என்ற ரீதியில் ஜே.வி.பி ஹெயிட்டியிலிருந்து-ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையிலிருந்து-இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறது.இந்தக் கோரிக்கையை ஜே.வி.பியின் அரசியல் சபை அரசாங்கத்தை நோக்கி விடுத்திருக்கிறது.அரசாங்கம் யார் ஜேவி.பியும் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியும் இணைந்த கூட்டணி.தமக்குத் தாமே வேண்டுகோள் விடுப்பதிலும் தமக்கெதிடாக தாமே அறிக்கைகள் விடுவதிலும் ஜே.வி.பி பாட்டும் நானே பாவமும் நானே நடிகரையும் விஞ்சிவிடும் போலிருக்கிறது.
முல்லைத்தீவில் 1300 படை வீரர்கள் ஒன்றாக உயிரிழந்துள்ளார்கள்.ஆனையிறவில் 3000 பேர் ஓரிருநாள் இடைவெளியில் இறந்திருக்கிறார்கள்.உயிரிழப்புப் போக ஒவ்வொருவரையும் பயிற்றுவிக்கும் உழைப்பு பணம் என்று பலகோடி ரூபா அரசாங்கத்திற்கு இழப்பேற்பட்டிருக்கிறது.அப்போதெல்லாம் ஆடாத ஜே.வி.பி யின் சகோதர பாசம் இப்போது ஆடுகிறது.மக்கள் வரிப்பணத்தில் பயிற்றப்பட்ட படைவீரன் இன்னொருநாட்டிற்காய் உயிரிழப்பதைத் தாங்கள் விரும்பவில்லையாம்.அதே படைவீரன் தங்கள் அரசியல் தலைமைகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வடக்கு கிழக்கில் போராடி மடிந்தால் ஜே.வி.பிக்கு மெத்த மகிழ்ச்சி.அப்போது மக்கள் வரிப்பணம் வீணாய்ப் போகாது அது அவர்களின் சட்டைப் பையிலல்லவா இருக்கும்.
இப்போது இலங்கை இராணுவ வீரர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாயும் பரிதாபமாயும் இருக்கிறது.இன்னொருநாட்டில் அமைதி காக்கும் முயற்சியில் இறந்து போனதால் பெருமை.பாவம் அப்படி இறப்பதற்குக் கூட அவர்கள் ஜே.வி.பியிடம் அனுமதி பெறவேண்டியிருக்கிறதே.அவர்களுக்காக வடக்கு கிழக்கில் உயிர்விடவேண்டியிருக்கிறதே என்பதை எண்ணும் போது பரிதாபம்
நன்றி - ஈழநாதன்
|
|
|
| நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி |
|
Posted by: Mathan - 03-23-2005, 04:11 PM - Forum: சினிமா
- Replies (57)
|
 |
ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி - காதல் கைகூடாததால் விபரீத முடிவு
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/aarthi-tarun-400.jpg' border='0' alt='user posted image'>
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் ஆர்த்தி அகர்வால். தருணுடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்த ஆர்த்தி அதனைத்தொடர்ந்து சில படங்களிலும் தருணுடனேயே இணைந்து நடிக்க நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலந்தது. இவர்களின் காதல் பற்றி பல பத்திரிகைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு கிசுகிசு எழுதி வந்தன.
ஆரம்பத்தில் கிசுகிசுக்களை மறுத்து வந்த தருணும் ஆர்த்தி அகர்வாலும் ஒரு கட்டத்தில் அதுபற்றி மௌனம் சாதித்தது இவர்களின் காதல் உண்மை என்பதை பறைசாற்றுவதாக இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க தருணின் வீட்டில் உள்ளவர்கள் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்று மீண்டும் பத்திரிகைகளில் செய்தி கசிந்தது.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த தருண் எனக்கும் ஆர்த்திக்கும் காதல் இல்லை கல்யாணம் செய்யும் ஐடியாவும் இல்லை என்று திட்டவட்டமாக தனது எண்ணத்தை அறிவித்தார். தருணின் இந்த அறிவிப்பை பத்திரிகை வாயிலாக தெரிந்துகொண்டதிலிருந்து ஆர்த்தி அகர்வால் மனம் ஒடிந்து போனாராம். ஆர்த்தியின் பெற்றோர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் யாரையும் சந்திக்காமல் தனது அறையிலேயே கதவை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்த ஆர்த்தி ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போய் கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயக்கம்போட்டு விழுந்துள்ளார்.
இதனை அறிந்த அவரது வீட்டார் ஆர்த்தியை உடனடியாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி காட்டு தீ போல் பரவ ஐதராபாத்திலுள்ள ரசிகர்கள் பலர் மருத்துவமனையின் முன் திரண்டுள்ளனராம். அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆர்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தருண்-ஆர்த்தி அகர்வால் நடித்த 'சொகடு' படம் ஆந்திராவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த 'வின்னர்' படத்தில் முதன்முதலாக கதநாயகியாக நடிக்க ஆர்த்தி அகர்வாலே தெர்வுசெய்யப்பட்டார். ஆனால் சில பிரச்சனை காரணமாக பின்னர் கிரண் கதாநாயகியாக நடிக்க ஆர்த்தி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
சினிசவுத்
|
|
|
| அந்த நீ யார்...??! |
|
Posted by: kuruvikal - 03-23-2005, 01:16 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (44)
|
 |
<b>காலைச் சூரியனும் நீயே
மாலைச் சந்திரனும் நீயே
சுற்றும் பூமியும் நீயே
காணும் அகிலமும் நீயே
நெருப்பாய் வரும் கோடையும் நீயே
சுகந்தம் தரும் வசந்தமும் நீயே
வருடும் தென்றலும் நீயே
கோபமாய் வரும் புயலும் நீயே
கனவுகள் தரும் நித்திரையும் நீயே
கற்பனை தரும் காட்சியும் நீயே
கணத்தோடு எழும் பொய்யும் நீயே
புளுகுகள் வாங்கும் வங்கியும் நீயே
மொத்தத்தில்...
என் வாழ்வும் நீயே
வீழ்ச்சியும் நீயே
அந்த நீ யார்...??!
உருவமில்லா
மனதோடு பிறக்கும்
எண்ண அலைகளே நீ....!</b>
|
|
|
| மீண்டும் சன்மிக்ஸ் இணையம் |
|
Posted by: Nitharsan - 03-23-2005, 08:14 AM - Forum: இணையம்
- Replies (3)
|
 |
<span style='color:blue'>மீண்டும் சண்மிக்ஸ் இணையம்
முன்பு சண்மிக்ஸ்.கொம் என்று இயங்கிய சண்மிக்ஸ் தற்போது சண்மிக்ஸ்.யுஎஸ் என்ற முகவரியூடாக வெளிவருகின்றது.
கீழ்வரும் இணைப்பை அழுத்தி சண்மிக்ஸ்.யுஎஸ்க்கு செல்ல முடியும்
[size=24]www.sunmix.us</span>
|
|
|
| சைவ சூப் |
|
Posted by: hari - 03-23-2005, 07:29 AM - Forum: சமையல்
- Replies (21)
|
 |
சத்துக்கள் நிறைந்த, செலவு குறைந்த, ஆரோக்கியமான பான வகை சூப் ஆகும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய இந்த சூப்புகள் பெரும்பாலும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு தொடக்க பானமாக அருந்தப்படுகின்றது. இதன் காரணம், இவை நாவின் சுவை மொட்டுகளை சுவையறிய தயார் படுத்துவதுடன் பசியுணர்வை தூண்டவும் செய்கின்றன. சாப்பிடுவதற்கு முன்பு சூப்பினை அதிகம் அருந்துவது மற்றும் மிகவும் சூடாக அருந்துவது என்பது பலரும் செய்யும் தவறு. இதன் விளைவு, அதிகப்படியான சூட்டினால் நாவின் சுவை மொட்டுகள் சுவையறியும் திறனை தற்காலிகமாக இழக்கின்றன. அதிகம் அருந்துவதால் பசி அடங்கி உணவு அதிகம் சாப்பிட இயலாமல் போகின்றது. எனவே, மிதமான சூட்டில் அளவாக அருந்துவது மிகவும் நல்லது.
<b> வெள்ளரி சூப்</b>
வெள்ளரிக்காய் 1
வெண்ணெய் 20 கிராம்
பால் 100 மி.லி
சோளமாவு 2 தேக்கரண்டி
பாலாடைக்கட்டி 25 கிராம்
சர்க்கரை கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் கால் தேக்கரண்டி
பாலாக்கு இலை சிறிது
உப்பு தேவையான அளவு
வெள்ளரிக்காயினை நன்கு கழுவி, தோலுரித்து துருவியில் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை இட்டு, அதனுடன் துருவிய வெள்ளரி மற்றும் பாலாக்கு இலைகளைச் சேர்க்கவும்.
சுமார் 4 நிமிடங்கள் அவற்றை வதக்கியவுடன் அதில் சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கவும்.
தீயைச் சற்று குறைத்து, இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு அதனை நன்கு கலக்கி அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு மற்றும் துருவிய பாலாடைக்கட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
பாலாடைக்கட்டி உருகியவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
தமிழ் பெயர் வெள்ளரிக்காய்
ஆங்கில பெயர் Cucumber
அறிவியல் பெயர் Cucumis sativus
<b>சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது) </b>
சக்தி (Energy) 13 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 96.3 கிராம்
புரதம் (Protein) 0.4 கிராம்
கொழுப்பு (Fat) 0.1 கிராம்
தாதுக்கள் (Minerals) 0.3 கிராம்
நார்ச்சத்து (Fibre) 0.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 2.5 கிராம்
கால்சியம் (Calcium) 10 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 25 மி.கி
இரும்பு (Iron) 0.60 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 14 மி.கி
சோடியம் (Sodium) 10.2 மி.கி
பொட்டாசியம் (Potasium) 50 மி.கி
செம்பு (Copper) 0.09 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.14 மி.கி
மாலிப்டினம் (Molybdenum) 0.070 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.23 மி.கி
குரோமியம் (Chromium) 0.002 மி.கி
கந்தகம் (Sulphur) 17 மி.கி
குளோரின் (Chlorine) 15 மி.கி
தையாமின் (Thiamine) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 0.2 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 14.7 மை.கி
வைட்டமின் சி (Vitamin C) 7 மி.கி
<b>தக்காளி சூப்</b>
தக்காளி அரைக் கிலோ
பெரிய வெங்காயம் 2
காரட் 1
உருளைக்கிழங்கு 1 (சிறியது)
பாலாடைக்கட்டி 25 கிராம்
வெண்ணெய் 30 கிராம்
சோளமாவு 30 கிராம்
பால் 100 மி.லி
மிளகுத்தூள் அரைத் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தக்காளி, காரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி சற்று பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு அதில் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் இவற்றுடன் பால், துருவிய பாலாடைக்கட்டி மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் இட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு இறக்கி ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிதாய் நறுக்கிய பிரட் துண்டங்கள் சேர்த்து சற்று சூட வைத்து அருந்தவும்.
தமிழ் பெயர் தக்காளி
ஆங்கில பெயர் Tomato
அறிவியல் பெயர் Lycopersicon esculentum
சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 20 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 94 கிராம்
புரதம் (Protein) 0.9 கிராம்
கொழுப்பு (Fat) 0.2 கிராம்
தாதுக்கள் (Minerals) 0.5 கிராம்
நார்ச்சத்து (Fibre) 0.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 3.6 கிராம்
கால்சியம் (Calcium) 48 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 20 மி.கி
இரும்பு (Iron) 0.64 மி.கி
சோடியம் (Sodium) 12.9 மி.கி
பொட்டாசியம் (Potasium) 146 மி.கி
செம்பு (Copper) 0.19 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.26 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.41 மி.கி
குரோமியம் (Chromium) 0.015 மி.கி
கந்தகம் (Sulphur) 11 மி.கி
குளோரின் (Chlorine) 6 மி.கி
கரோட்டீன் (Carotene) 351 மை.கி
தையாமின் (Thiamine) 0.02 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.06 மி.கி
நியாசின் (Niacin) 0.4 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 30 மை.கி
வைட்டமின் சி (Vitamin C) 27 மி.கி
|
|
|
| அன்ரன் பாலசிங்கம் மீது பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம்? |
|
Posted by: Mathan - 03-23-2005, 04:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தம் தொடர்பான ஊடகச் செய்திகள்: பாலசிங்கம் மறுப்பு
இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞரும்ää தத்துவாசிரியருமான அன்டன் பாலசிங்கத்தை பிரிட்டிஷ் அரசு நேரில் அழைத்து நிர்பந்தித்ததாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
இது குறித்து தமிழ்நெட் இணையத்தளம் மூலம் அன்டன் பாலசிங்கம் அளித்துள்ள விளக்கம்:
கொழும்பிலிருந்து வெளியாகும் ~சண்டே லீடர்| பத்திரிகையில் ஜெயதேவன் என்பவரை தமிழீழ விடுதலைப்புலிகள் பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டும் என்று என்னை பிரிட்டிஷ் அரசு நிர்பந்தித்தாக கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இது முற்றிலும் தவறான தகவல்.
எந்தச் சூழ்நிலையிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜெயதேவன்ää சிறீலங்கா மற்றும் இங்கிலாந்தில் செயற்பட்டது குறித்து என்னிடம் பேசியது இல்லை.
அமைதிப் பேச்சுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ள வகையில் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டுவருகிறேனே தவிர ஜெயதேவன் விவகாரம் குறித்து ஒருபோதும் கேள்வி எழுப்பப்படவில்லை.
அண்மையில் ~சண்டே லீடர்| ஆசிரியர் என்னைத் தொடர்பு கொண்டு நீண்ட நேர்காணல் குறித்து பேசினார். அப்போதுகூட இப்பிரச்சினை குறித்து என்னிடம் ~சண்டே லீடர்| ஆசிரியர் கேள்வி எழுப்பாதது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
1999 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இங்கிலாந்துக்குப் போனது முதல் அது என் வீடாகவும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் சுமூக உறவையுமே கொண்டு இருக்கிறேன் என்றார் அவர்.
புதினம்
|
|
|
| தாத்தா-பாட்டி ஆசிரியர் மாணவர்களை சுட்டுவிட்டு சிறுவன்தற்கொலை |
|
Posted by: vasisutha - 03-23-2005, 01:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<b>தாத்தா-பாட்டி, ஆசிரியர், மாணவர்களை சுட்டுவிட்டு அமெரிக்க சிறுவன் தற்கொலை</b>
தனது தாத்தா-பாட்டியை வீட்டில் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆசிரியர், மாணவர்கள் என மொத்தம் 7 பேரை பள்ளியில் சுட்டுக் கொன்றான் அமெரிக்க பள்ளி மாணவன்.
பிறகு போலீசாருடன் நடந்த சண்டையைத் தொடர்ந்து, தற்கொலை செய்து கொண்டான் ஜெப் என்ற அந்த மாணவன். மின்னெசோடாவில் உள்ள ரெட் லேக் பள்ளியில் இச் சம்பவம் நடைபெற்றது.
இவ்வளவு வெறித்தனமாக ஜெப் செயல்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
பள்ளிக்குள் நுழைந்தவுடன் பாதுகாவலரைக் கொன்றதுமல்லாமல், வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியர், 5 மாணவர்களைக் கொன்றான். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அமெரிக்காவில் 1999-ம் ஆண்டுக்குப் பிறகு பள்ளி வளாகத்தில் நடைபெறும் மிக மோசமான படுகொலைச் சம்பவம் இது. அப்போது இரு மாணவர்கள் சேர்ந்து சுட்டதில் 12 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்
|
|
|
| தண்ணீர் தண்ணீர் |
|
Posted by: KULAKADDAN - 03-23-2005, 01:07 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (19)
|
 |
தண்ணீர் தண்ணீர்... ... ...
<img src='http://i149.exs.cx/img149/8186/untitled6fs.jpg' border='0' alt='user posted image'>
இப்படி ஒரு தொடர் கவிதை எப்போதோ வசித்த ஞாபகம். நிச்சயமாக இது கவிதயல்ல.
உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பற்றிய ஒரு பார்வை.
தண்ணீருக்கான தேவை அதாவது தரமான குடி நீருக்கான தேவை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நன்னீராதாரங்கள் பரப்பளவில் வேகமாக குறைந்துவருகிறன. அத்துடன் இருப்பவையும் மாசாக்கத்துக்குள்ளாகிவருகிறன.
எம் தாயகத்தில் இருக்கும் நன்னீராதாரங்கள் மாசக்கமடைந்துவருவதும் பரப்பளவில் குறைவடைந்துவருவதும் மிகவும் கவலைக்குரியது. இதைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பத்திரிகைகளில் இடையிடையே கட்டுரை வரும் அத்துடன் அதன் கதை முடிந்துவிடும்.
கேள்விக்குள்ளாகும் நிலத்தடி நீர் வளம்.
1. அதிகரித்த நீர் பாவனையால் வருடாந்தம் பெய்யும் மழை நீர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீரை மீள் நிரப்பமுடியாமை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் சமநிலையை பேணுவதற்காh முன்னோரால் ஆங்காங்கு அடைக்கப்பட்ட சிறிய குளங்கள் [யாழ்பாணத்து குளங்கள்] கைவிடப்படல் தூர்வாரப்படாமை. மழைநீர் தேங்கி நிலத்தின் கீழ் வடிந்து செல்லாமல் கடலை வீணே சென்றடைகிறது. மழை நீர் குளங்களில் தேக்கப்படும் போது அது சிறுக சிறுக வடிந்து சென்று நிலத்தடி நீர்ச்சமநிலையை பேணுகிறது.
வன்னி பெருநில வாழ்பனுபவம் கொண்டவர்களுக்கு இது புரியும் பெருங்குளங்களில் நீர்வற்றி வாய்க்கால் வரண்டால் சில இடங்களில் கிணறு வெறுமையாகிவிடும்.
வவுனியாவில் ஆங்காங்கு காணப்படும் குளங்களை நிரவி வீடமைத்து வருவதால் நீர்த்தட்டுபாடு ஏற்படுவாதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது.
2. உவர் நீர் ஊடுருவல். இதை யாழ்குடாநாட்டை வாழ்விடாக கொண்டவர்களில் யாரேனும் கண்டு அனுபவித்திருக்க முடியும். அதிகரித்த நீர் பாவனை காரணமாக அடித்தளத்திலுள்ள உவர் நீர் மேலெழல். ஆரம்பத்தில் நன்னீராக இருந்த கிணறுகள் பல இன்று உவர் நீராக மாறியுள்ளன.
3. மலசலகூட கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் சாத்தியம். மாரிகாலத்தில் நீர் மட்டம் பலஅடி மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும்.
4. நிலத்தில் கொட்டப்படும் இரசாயன உலோக பொருட்கள் மழை நீருடன் கலந்து நிரத்தடி நீரை மாசாக்கும் சாத்தியம்
5. விவசாயத்தில் பாவிக்கப்படும் உரத்தில் காணப்படும் அமோனியா யுரியா போன்றவை நைத்திரேற்றாக்கத்துக்குட்படும். இவை மண் துணிக்கைகளால் பற்றி வைத்திருக்கப்பட முடியாதவை. மண்ணும் நைத்தரேற்றுக்களும் எதிரேற்றமுடையவை. இதனால் இலகுவில் கழுவிச்செல்லப்பட்டு நிலத்தடி நீரை அடைகிறது. இவ்வாறு மாசாக்கமடைந்த நீரை அருந்துவதால் புற்று நோய் பிறக்கும், குழந்தைகள் நீலக்குழந்தை நோய்க்கு உட்படல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதை தீர்க்க.. ... .. ..
தற்போது மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது.
அத்துடன் சிக்கனமாக நீர்பாசன முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தல்.
குளங்களின் புனருத்தாரணம்
மhசாக்கும் கழிவுகள் பற்றிய கவனம் என்பவை மிகமுக்கியமானது. இதை பற்றி நாமனைவரும் சிந்தித்தால் நம் தாயகத்தை வளப்படுத்தலாம்.
|
|
|
|