| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 648 online users. » 0 Member(s) | 645 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,456
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,661
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,271
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,766
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| புதிய பாப்பரசர் |
|
Posted by: Mathan - 04-19-2005, 02:38 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (10)
|
 |
புதிய பாப்பரசர்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41050000/jpg/_41050377_smoke203iap2.jpg' border='0' alt='user posted image'>
புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் தொடந்து நடைபெற்று வரும் போதிலும் இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதை குறிக்கும் வகையில் கூட்டம் நடக்கும் கட்டிடத்தில் உள்ள புகைக்கூண்டு ஊடாக கறுப்பு புகை வெளிவந்தது.
நன்றி. பிபிசி இணையத்தளம்
|
|
|
| சில இலக்கிய பாடல்கள் புது வடிவில் |
|
Posted by: KULAKADDAN - 04-19-2005, 11:38 AM - Forum: தமிழும் நயமும்
- No Replies
|
 |
நாய்மணிக்கடி(கை)
97 இன் பழங்கடி
முற்குறிப்பு:
கற்றோரெல்லோரும் கருத்துய்த்துணர்க - அதுவிட்ட
மற்றோரெல்லாம் திறக்க மற்றஞ்சல்.
தொகுப்பாசிரியர் குறிப்பு:
நாய்மணிக்கடி(கை) தொகுத்தவர், நாலாம் நூற்றாண்டே (நாய்க்கேதையா, கி.பி.யும் காபியும்?) வாழ்ந்த உடற்புழுதி ஞமலியார். இங்கே தெரு நாய்ப்பாடல்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வாகனம் ஏற்றப்படுகிறது. மிகுதி பின்னே கடிக்கப்படும்.
பொறுக்கிநானூற்றிலும் சறுக்கிப்போனவை
----------------------------------
1.மெய்யின்பம் இணையப் பெற்றார் நிலை எடுத்துரைத்தல்
-----------------------------------------------
மெய்வருத்தம் பாரார்,
கண்துஞ்சார், பசி காணார்,
கணணிகண் internet
இணையப்பெற்றார்.
2. கோடரிதாசனின் விடுதலைக்கவி
------------------------------
அச்சமும் நாணமும் நாய்கட்கு வேணுமாம்
வால்மட்டும் போதும் எம் வக்கிற்கு...
...(மிகுதி கவிஞர் கடிதாங்கா(து) வெறிகொண்ட நாய் கொண்டுபோனதாய்ப் பின்வந்த கள்ளதாசன் ஓரிடத்தே 'நாய்நகர்ப்பள்ளு'வில் எடுத்துக் குரைக்கிறார்).
3. மூக்குப்பொடிப்புலவரின் நாய்விடுதூது
---------------------------------
நாயாய்! நாயாய்!
கம்பம்கால்தூக்கு நாயே!
நீ (விளக்குக்கம்பம்)
போகும் வழியில் என்
பொண்டாட்டி கண்டால்,
பெற்ற சம்பளமும் பொடிக்காரன்
பற்றியதைச் சொல்வாயா?*
*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).
எலியரித்ததீறாக,
எஞ்சிக்கிடக்கும் தமிழ் கல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள்
மின்வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.?*
*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் (அதாவது, மிகுதியைக் குலைக்கமுன்) வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).
பிற்குறிப்பு:
^* எஞ்சிக்கிடக்கும் தமிழ்நாட்டு நல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள் மின்வலையேற்றியே, பின், பிறநாட்டுநல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற்பெயர்ப்போம் என்ற உறுதியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சியிது. எமனை அஞ்சோம் (ஆனால், அதுபற்றி அவனுக்கென்ன கவலை?), எது வரினும் எமது இலட்சியம் நிறைவேற்றலே திண்ணமாய் உழைப்போம் என்ற எண்ணத்தே செயலுறும் முயற்சியிது. பொருள் நிறைந்தவர் பேசாமற் போவீர், தமிழ் நிறைந்தவர் தோள் துணை தாரீர்.
எலியரித்ததீறாக,
வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.
நறுக் கடி II
முற்குறிப்பு:
புலவர்கள் பிழைபொறுக்க-பொறுக்காப்
பொறுக்கியர் தம் தர்ம அடி தவிர்க்க.
பொறுக்கிநானூறில் பிழைத்துப் பொறுக்கியெடுத்தவை
___________________________________________
1.பொருளீட்டிவந்த தலைவன் பொருமியது
----------------------------------
மோப்பக்குழையுமாம் அனிச்சம்பூ
மோக்காமலே குழைந்தது, அவள்வைத்த
அடுப்புச் சோறு.
2.தலைவி தலைவனுக்குத் தலை(யில்) விதித்தது
-----------------------------------------
நீயும் நாயும் எத்துணைக் கேளிர்?
எந்தையும் நிந்தையும் எக்கணம் பிரிவில்லை.
செம்புலப்புயநீரெனத் தரை புணர்ந்திடும்-உன்
செந்நீர்.
கவனம்!
3.தலைவன் பற்றித் தலைவி தோழிக்குச் செப்பியவை
--------------------------------------------
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
கண்டனர் என்bank balance காதலவரவர்.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
பெற்றோரிடம் பெற்று வரல்.
4.பாணன் புலவருக்குச் செப்பியது
----------------------------
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
திரையறிந்து நாள் நூறு ஓடும் படம்.
5.(புலவர் போன வண்டி) சிதறிய நாற்பத்தில் சேர்த்தெடுத்த சில
------------------------------------------------------
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தவர் அனுபவிக்குங்கால்.
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
வெள்ளநிவாரணம் போடுவானெனில்.
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்மனக்
கள்ளத் தனையது உயர்வு.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
ஏராளம் கடன்கண்டார் கண்ணே உள.
நறுக் III
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூத்தகுடி,
கண்டது கல்லும் மண்ணும்
கடல் கடந்து.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
படித்துப் பள்ளி சென்ற பாலகன்,
படையினால் பற்றப்படான் துப்பாக்கிமுன்,
துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று
துப்பாம்.
தூ!
குஞ்சியழகும் கொடுந்தானைக்கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல- மனித நேயப்
பஞ்சத்தால், பிறநாட்டகதித் தஞ்சம்
அடைதலே அழகு.
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்,
பின் வந்த, அவள்
அண்ணனும் நோக்கினான்.
உடைந்தது கோ தன்
(உ)டல் முதுகென்பு வில்.
முற்குறிப்பு: அன்றைய சங்க காலம், இன்றைய பஞ்ச காலம் இரண்டும் கருதி, புலவர் பெருங்கடியூர் உடற்புழுதி ஞமலியார் (இ)யாசிப்பதற்காக (இ)யாத்தது; சங்ககாலச் சந்தர்ப்பம் தந்துள்ளார்; இக்காலத்திற்கானதை பொருள் (இல்லா) ஆசிரியரே போட்டுக்கொள்(ல்)க. (மூலப்பிரதி, பசியால் பாதி தின்னுற்ற பனையோலையிலிருந்ததால், சில இடங்களிற் தமிழ் குதறுண்டுள்ளது; மன்னிக்குக)
____________________________________________________________________
கலி(டி)யும் இன்ன(‘) பிற(ழ்)வும்
----------------------------
1. புலவர் புறநானூறு புத்திரருக்குப் புகட்டும்போது, அகமிருந்தெழுந்த பத்தினி நான்கு
-----------------------------------------------------------------------
i
"மலையும் மலை சார்ந்தவிடமும் குறிஞ்சி,
வனமும் வனஞ் சார்ந்தவிடமும் முல்லை,
வயலும் வயல் சார்ந்தவிடமும் மருதம்,
....ம் கடல் சார்ந்தவிடமும் நெய்தல்,
..................டமும் பாலை"
புதல்வனுக்குப் போதித்த புலவர் மனைப்
பத்தினி பட்டினி பொறுக்காமற் பொரிந்தாள்,
"தமிழும் தமிழ் சார்ந்தவிடமும் தரித்திரம்",
அடுக்களை அயர் பூனை துரத்தி.
ii வேறு
'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" கவியாத்த
கவிஞர்தம் காமக்கிளத்தி, கலி நொந்து கடித்தாள்,
"மனைப்பொருள் விற்று மாத மளிகை பெற்றாரை..
.......யார், மரத்தடி மடம் தூங்கு ஆண்டியோ?"
iii வேறேவேறு
கோனிடம் மானிய நெல் பெற்று வாழ்வாரே வாழ்வார் மற்றோர்
தமிழ்ப்புல்லுக்கு உரம்போட உடல்வெந்து சாவார்.
iv மிக வேறு
முதல்இலார்க்கும் ஊதியம் ஊதிவரும் மழைபோற்
கவிஉள்ளார்க்கோ கடனே நிலை.
2. தேரோடும் வீதியிலே (நீல. பத்மநாபன் மன்னிக்குக) மாதமான்யம்பெற்ற பை பலமுறை பறிகொடுத்த புலவர் புதுப்புலவருக்குப்(பு.பு.) புத்திபோதித்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் (பின்)பணப்
பொதி தூக்கி மெல்ல நழுவும்.
3. தீர்த்தயாத்திரை போகையிற் கள்வராற் கானகத்தே கொலையுண்ட முனிபுங்கவர்தம் முடிபங்கம் பு.பு. இற்கு எடுத்துரைத்தது
---------------------------------------------------------------------------------------------------------
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைதூக்கி
எல்லாவுயிரும் கொல்லும்.
4. கொற்றனிடம் கவியுடன் போன கவியிடம் அரசவைவாயிற்காப்போன் காணிக்கை கேட்டபோது முறையிட்டழுதது
---------------------------------------------------------------------------------------------
கற்க கசடறக் கற்க கற்றபின் நேர்முகங்
காணவே பொருள்கொடுத்து நிற்க.
5. முதலமைச்சர் பின் பதவிக்காய்க் காத்திருந்த கல்வியமைச்சர் முதல்வர் புத்திரர் பற்றிக் காதற்கிழத்தியிடம் கவலையுடன் கருவியது
--------------------------------------------------------------------------------------------------------------
தோன்றிற் புகழுடன் தோன்றுக அன்றில்
அரசு அமை(ச்சு)வது அசாத்தியம்.
6. நகரமாந்தர் அங்காடியில் குரங்காட்டியின் வித்தையிற் களித்தது கண்ட நற்பாணன், பாடினியிடமும் இன்னோர் விறலியிடமும் விரக்தியிற் சொன்னது
---------------------------------------------------------------------------------------------------------------------------
பைந்தமிழ்ப்பண்ணோடமைந்ததெல்லாம் குயிற்பாட்டல்ல கழுதைக்
குரலுக்குக் குரங்கா(ட்)டுவதே தமிழிசைக்கவி.
(நீதி : கவிவீட்டுக் கலியும் கவிபாடும்)
நன்றி பெயரிலி
|
|
|
| ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? |
|
Posted by: vasisutha - 04-19-2005, 03:08 AM - Forum: கணினி
- Replies (2)
|
 |
வெள்ளிக்கிழமை (15 ஏப்ரல் 2005) அன்று சென்னையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பல தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டனர்.
அதில் தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியும் உள்ளது. இன்று மாலை எனக்கு அந்தக் குறுந்தகட்டின் நகல் கிடைத்தது.
இன்று காலையே நாராயண் அந்தக் குறுந்தகட்டில் உள்ள ஃபயர்ஃபாக்ஸ் பற்றிக் கேட்டிருந்தார். அது முகுந்த் (தமிழா குழு) செய்ததாக இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாகச் சொன்னார். எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. எனவே மென்பொருள் சிடி கையில் கிடைத்ததுமே முதலில் நான் பார்வையிட்டது அதைத்தான்.
ஈயடிச்சான் காப்பி என்று சொல்வார்களே, அதைப்போல இருந்தது. இது முழுக்க முழுக்க முகுந்த் மற்றும் அவரைப்போன்ற தன்னார்வலர்களின் வேலை. ஆனால் CDAC செய்தது என்று சொல்லியிருக்கிறார்கள். முகுந்த் கொடுத்த பொதியில் உள்ள தவறுகள் கூட இதில் அப்படியே வந்துள்ளது. உதாரணம் "மாலுமி கருவிப்சட்டம்" - அதாவது 'ச்' வருவதற்கு பதில் 'ப்' தவறாக உள்ளது. ஒரே இடத்தில்தான் முகுந்த் செய்யாத ஒரு மொழிமாற்றம் (Close = மூடு) வந்துள்ளது என்பது மேலோட்டமாகப் பார்த்ததில் தெரிய வந்தது.
ஆனால் இந்தக் குறுந்தகட்டில் முகுந்த், மற்றும் தமிழா குழுவினர் பெயர்கள் இல்லை. அவர்கள் செய்த வேலை அங்கீகரிக்கப்படவில்லை. இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதுபற்றி மேலே விசாரிக்க முகுந்திடம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவர் இதுபற்றிய மேலதிக விவரங்களை அறிவாரா என்று தெரியவில்லை. அவரிடமிருந்து இதுவரையில் பதிலில்லை.
அதைப்போலவே ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்ப்படுத்துதலிலும் அதிகாரபூர்வமாக முகுந்த்தான் ஈடுபட்டுள்ளார். ஆனால் CDAC தானாக ஓர் ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்க் கோப்பை வெளியிட்டுள்ளது. இந்த forking தேவையா என்று தெரியவில்லை. நான் இன்னமும் ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளைச் சோதனை செய்யவில்லை. ழ கணினி குழுவினர் ஓப்பன் ஆஃபீஸைத் தமிழ்ப்படுத்துவதில் முனைந்தபோது ஏன் அவர்களும் முகுந்த்/தமிழா குழுவினருடன் இணைந்து செயல்படக் கூடாது என்றொரு பிரச்னை எழுந்தது.
இந்திய அரசு நிறுவனம் தன்னார்வலர்களின் செயல்களைக் கேவலமாக நினைக்கக் கூடாது. தன்னார்வலர்களைத் தூண்டிவிடுதலே இந்தியாவுக்கு நல்லது.
பிற மென்பொருள்களைப் பார்வையிட்டபின் நாளை எழுதுகிறேன்.
நன்றி
பத்ரி
http://thoughtsintamil.blogspot.com
:roll: :roll:
|
|
|
| பூபதி....... |
|
Posted by: Nitharsan - 04-18-2005, 08:38 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
இந்தியம் வந்திங்கு
இம்சைகள் செய்ததன்று
செங்களம் சென்ற எம்
சொந்தங்கள் நாளும்
செருக்கு பிடித்த - இந்தி
இராணுவ இரணியர்க்கு
இரையாகினரே!
காந்தியின் மண்ணது
ஆணவத்தில் அகிம்சையை மறந்ததன்று
வல்லரசாய் வருவதற்க்கு
வதங்கள் பல புரிந்தது
சொந்த சோதரர்களை கொன்று
கொடி ஏற்ற கங்கனம் கட்டியது
கொள்கை மாறப் புலி கூட
கொடுத்தது ஆயுதத்தை
ஆயுத அகழ்வின் பின்
ஆரம்பித்தான் அவன் ஆட்டத்தை
இருந்தது மின்றி அழிகையில்
ஆரம்பித்தாள் அன்னையவள்
அகிம்சை போரினை
புல் கூட போராடும் எம் மண்ணில்
புதுமைப் பெண்ணாய் பிறந்தவளே!
அன்னை பூபதியே!
காந்தியத்துக்கு அகிம்சையின்
அர்த்தம் சொல்லி கொடுத்தவளே!
நீ மூட்டிய தீயிங்கு
தீவெங்கும் திரிவுற்றதம்மா!-இன்று
திசை எங்கும் தமிழர் பேச்சு -உலகெங்கும்
உரிமை கேட்கும் தமிழன் குரல்
உலகம் உணர்ந்தது உண்மையை
புலரும் காலையில் பதிதாய்- நாளை
புதிதாய் ஈழம் மலரும் - அன்று
பூபதி நீயும் பூவான எங்கள் - மா
வீரர்களும் புவி மீது மலராய்
பொழிவீர்கள்....
|
|
|
| இவள் மாற்றத்தால் மறைந்திடுவாள்...! |
|
Posted by: tamilini - 04-18-2005, 03:00 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (40)
|
 |
<img src='http://p.webshots.com/ProThumbs/18/3218_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
வசந்தம் என்
வாசல் வந்து
நெடுநாள்
நேசம் தரும்
நெருடல்கள்
நெஞ்சத்துள்
நோவாய்.
அழிந்து தான்
போகிறது வாழ்க்கை
அழுகை எனக்கு
சொந்தம்..??
அழ வைப்பதில்
என்ன இன்பம்
உன்னை
வெறுமை எனக்கு
சொந்தம்
வெறுப்பதில் தானோ
இன்பம் நீ என்னை..
தனிமை எனக்கு
தஞ்சம்
தணலான வாழ்வில்
தனிமைக்கேது பஞ்சம்.
பனிப்படிவு தான்
என் நினைவு
உன் நெஞ்சில்.
உன் வாழ்வில்
ஒளியேற்ற
கையில் அகழ்
ஏந்திவரும்
அழகுடையாளின்
அனபு வெளிச்சம்
உன்மேல் பட
தன்னால் உருகிடும்.
தேனாய் அவள்
வாய் சொரியும்
வார்த்தைகள்
தெம்மாங்காய் காதில்
விழ
புதியதாய் ஓர்
உண்மையான பாசம்
நிறை உலகம்
உனக்காய்
உதயமாகும்
பருவமாய் வந்த இவள்
மாற்றத்தால் மறைந்திடுவாள்.
மனதில் இருந்தும்
மறைந்திடுவாள்.
என்றும் உனக்கு
துரோகியாகலாம் இவள்
துணைவி வந்தபின்னர்
தூரச்சென்றபின்னும்....
வருவதை எதிர்கொள்ள
காத்திரு....!
|
|
|
| பாதிப்பு தரும் குறும்பட விழாத் தேர்வுகள் |
|
Posted by: AJeevan - 04-18-2005, 02:23 PM - Forum: குறும்படங்கள்
- Replies (4)
|
 |
<span style='color:blue'>
<img src='http://www.yarl.com/forum/files/mediaback.jpeg' border='0' alt='user posted image'>
நம்மவர்
குறும்பட விழாக்கள் நடை பெறுகின்றன.
பாராட்டுதலுக்குரியது.
தேர்வுகளை
சினிமா தெரிந்தவர்களையோ
ஆர்வலர்களையோ
வைத்து நடத்துகிறார்கள்.
நல்லது..............................
ஆனால் பலரது புலனுக்குப் புரியாத
புதிரான ஒரு குறைபாடு
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
அதை
குறும்படப் போட்டிகளை
நடுத்துவோரோ அல்லது நடுவர்களோ
பெரிதுபடுத்துவதில்லை என்பதை விட
அலட்சியமாக
மக்களை மண்டபத்துக்குள் கொண்டு வர வேண்டும்
என்றே நினைக்கிறார்கள் என்ற தோற்றத்தை
குறும்பட விழாக்கள்
உருவாக்கி வருகிறது.
மனம் நொந்து வேதனைப்படுவோர்
படைப்புகளை உருவாக்கிய
படைப்பாளிகளும்
கலைஞர்களுமேயாகும்.
இதற்கான காரணங்களை - கருத்துகளை
புலம் பெயர் தமிழ் சினிமா வளர்ச்சிக்கான
ஆர்வலர்கள் முன் வைக்க வேண்டும்.
என் கண்களுக்கு பட்டவற்றை
அல்லது எனக்குத் தோன்றியதை இங்கேயாவது எழுதினால்
அதை யாராவது கருத்தில் எடுத்து செயல் பட்டால்
அது நமது எதிர்காலப் படைப்பாளிகளுக்கு நன்மை தரும்
என்று கருதுகிறேன்.
<b>1.</b>
குறும்படங்களை இறுதி நேரம் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு விழாக்களை ஏற்பாடு செய்யாதீர்கள்.
காலம் தாமதித்து வரும் குறும்படங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
இதுவே
விவாதிக்கவோ நீதி கேட்கவோ முடியாதவர்களாக படைப்பாளிகள்
மற்றும் விழா நடத்துனர்கள் ஆவதற்கு காரணமாகிறது.
படங்கள் கடைசியில்தான் கையில் கிடைத்தது என்று ஒரு சாராரும்
இறுதி நேரம் வரை சில பிரச்சனைகளால்
நேரத்துக்கு அனுப்ப முடியவில்லை என்று ஒரு சாராரும்
காரணங்கள் சொல்லித் தப்பிக்க முடிகிறது.
<b>2. </b>
குறும்பட தேர்வுகள்
திரையிடப்படும் நாளில் நடைபெறுவதை நான் கண்டது
எமது தமிழ் புலம் பெயர் குறும்படப் போட்டிகளில்தான்.
இது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.
இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
தேர்ந்தெடுக்கும் நடுவர்கள்,
ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னமேயாவது
பார்வைளர்கள் இல்லாமல்
ஒன்றாக இருந்து
ஒவ்வொரு படமாகப் பார்த்து ,
விவாதித்து
புள்ளிகள் இட்டுத் தேர்வு செய்ய வேண்டும்.
அது தலைமை நடுவராலும்
ஏனைய நடுவர்களாலும்
பக்க சார்பற்ற நிலையில்
புள்ளிகள் இடப்பட்டுள்ளளன என ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்.
அது இல்லாத விடத்து
யாராவது ஒரு நடுவர்
கருத்து முரண்பட்டாலும்
மீண்டும் அதே படத்தை திரையிட்டு
ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும்.
( சிறிது நேரம் அதாவது 5 முதல் 15 நிமிட ஓய்வுக்குப் பின்னர்,
அதாவது முதல் படத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே இந்த இடைவேளை)
அந்த முடிவுகள் சரியாகி ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர்தான்
அடுத்த படத்தை திரையிட்டுப் பார்த்து புள்ளி வளங்கப்பட வேண்டும்.
இப்படியல்லாது
ஒரேயடியாகவோ
அல்லது
5-6 நிமிட இடைவெளிக்குப் பின்
அடுத்தடுத்துப் படங்களை ஓட விடுவது
மிக மிகத் தவறான ஒரு செயலாகும்.
<b>எங்களால் முடியும் என்பார்களும் இருக்கிறார்கள்.</b>
அவர்களிடம் 5 சிறு கதைகளைக் கொடுத்து
தொடர்ந்து படித்து விட்டு
இதன் நன்மை தீமைகளை விளக்கச் சொல்லுங்கள்.
அத்தோடு அதன் சில பகுதிகளைப் பார்க்காது
குறிப்பிட்டு சொல்லச் சொல்லுங்கள்.
அது 100க்கு 100 சதவீதம் இயலாத காரணமாகும்.
அதற்கு மேலான ஒன்று,
பெண்கள் சாறிகளை தேர்ந்தெடுக்கும் போது
ஏற்படும் பிரச்சனையை ஒரு கணம் மனக் கண் முன் கொண்டு வாருங்கள். ( கோபப் படக் கூடாது பெண்கள்)
விபரீதம் புரியும்....................
இப்படி நேரம் ஒதுக்க முடியாத நடுவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்
அல்லது
தேர்வு செய்யும் போட்டி விழாக்களாக அறிவிக்காதீர்கள்.
<b>பார்வையாளர் தேர்வாக மட்டுமே நடத்துங்கள்.</b>
குமுதம், தினகரன்,...................... போன்ற பத்திரிகைகள்
வாசகர்கள் தேர்விலேதான் தேர்வுகளை நடத்துகின்றன.
இவை பொழுது போக்கு படங்களுக்கோ, கலைஞருக்கோ எதுவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
இவர்கள் கூட பக்க சார்பாகவே செயல்படுவதாக
அவர்களே சொல்லுகிறார்கள்.
அது அவர்களுக்குள் இருந்து விட்டுப் போகட்டும்.
எமக்குள் வேண்டாம்.
இது
எம்மவரால்
எமக்காக
வளர்க்க வேண்டியதற்காக செய்வதாயிருந்தால்
அது கொடுமையானது மட்டுமல்ல
அநியாயமும் கூட..................
யாருக்குள்ளும், ஒரு சார்புத் தன்மை இருக்கும்.
இது பொது மனித இயல்பு.
எனக்கு
என் குடும்பம் மீது பற்று இருக்கும்.
ஆனால் நாலுபேருடன் அது விவாதத்துக்கு வந்தால்
சமூக நீதியொன்று இருக்கிறதே என்று
கொஞ்சமாவது அனுசரித்துப் போக வேண்டி வருகிறது.
அதுபோலவே
இக் குறும்படத் தேர்வுகள் பார்வையாளர்கள்
அற்ற நிலையில் பார்க்கும் போது
ஒரு சமூக விவாதத்துக்கு
நடுவர்கள் தம்மை உட்படுத்திக் கொண்டு
ஒரு பாதிப்பற்ற முடிவுக்காவது வரலாம்.
அப்படியில்லாத நிலையில்
நடுவர்கள்,
பார்வையாளர் மற்றும் படைப்பாளிகள் முன்
விவாதிக்க முற்றபட்டால்
நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இவை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
அதுவே புதிய படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல,
இருக்கும் படைப்பாளிகளுக்கும்
படைப்புகளை உருவாக்க
வழி செய்யும்...........................
உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். </span>
|
|
|
|