| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 600 online users. » 0 Member(s) | 598 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,661
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,268
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,765
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| கோட்டைக்குள் ஒரு வாசம்...! |
|
Posted by: kuruvikal - 04-18-2005, 11:48 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (53)
|
 |
<img src='http://img225.echo.cx/img225/2418/kagayaambiente4na.jpg' border='0' alt='user posted image'>
<b>என் மனக் கோட்டைக்குள்
ஒரு வாசம்
என்னவள் வாசம்...!
உடலாளும் அவள் நேசம்
மலர்ந்திட்ட மங்கல நேரம்
மனதெங்கும் வசந்தம்
மலர்க்கொடி நாட்டி
புரியுது அன்பாட்சி....!
அன்புக்கரசி கலைக்குவாணி
நினைவுப் புயலாய்
என்னைத் துரத்துறாள்
படை கொண்ட அவள் வதனம்
காட்டியது முதலாய்...!
பக்குவமாய் இருந்த உள்ளம்
பள்ளி கொள்ள மறக்குது
பள்ளி செல்லவும் மறுக்குது
பறவை நானும்
கடமை நாடி பறக்க முயல
சிறகும் அவள் பெயர்
சொல்லித் துடிக்குது...!
அவள் வருந்திசை
நாடிப் பறக்குது...!
சிந்தை கலங்கா
சிட்டு இது
சின்னவள்
சிங்கார மொழி தேடி
சிறகடிக்குது
சின்னதாய் ஓர் வார்த்தை
தினமும் உதிரடி
தின்ன எனக்கு
அதுதான் தீனி...!
காலமும் உன்
பாசம் வீசி
சுவாசம் தந்து
என் மூச்சுக் காத்திடு...!
நிஜக் கண்கள் திருடி
கண்ணாகியவள் காட்டுவது - தன்
கனவுக் காட்சியாக
நிஜம் மறக்குது
காலமும் வீணாகுது...!
மலரே மனமி(ர)றங்கி
என் கரம் சேராயோ
உண்மையாய் நித்தியமாய்
உள்ளத்தில் பொங்கும்
என் அன்பில் மூழ்காயோ...!
காற்றோடு போகும்
கப்பலாய் அன்றி
என் உயிரோடு கலந்திட்ட
உறவாக....!</b>
|
|
|
| மீனாட்சி கோவில் |
|
Posted by: hari - 04-18-2005, 10:11 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
மீனாட்சி கோவில் உலக அதிசயமானதாக வதந்தி!
ஏப்ரல் 18, 2005
மதுரை:
உலக அதியசங்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக செல்போன்கள் மூலம் மதுரையில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய 7 உலக அதிசயங்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு இணைய தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலுள்ள தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், கோவில்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் மதுரையில் செல்போன் வைத்திருந்தவர்களுக்கு நேற்று எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு செய்தி வந்தது. அதில், மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், மதுரையில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த எஸ்.எம்.எஸ். தகவல் வதந்தி எனப் பின்னர் தெரியவந்ததால் பரபரப்பு அடங்கியது.
நன்றி தட்ஸ்தமிழ்
<b>
7 உலக அதிசய தேர்வு நடக்கும் இணையத்தளம், நீங்களும் வாக்களிக்கலாம்!</b>
|
|
|
| துணையாக நீ வருவாய்...! |
|
Posted by: Malalai - 04-18-2005, 04:04 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (51)
|
 |
<img src='http://img23.echo.cx/img23/6591/trisha2531vn15pd.jpg' border='0' alt='user posted image'>
உன் குரல் வழி
வார்த்தைகள் வழியும்....!
எந்தன் செவியினில்
அமுதம் ஊறும்....!
இதை உன் உள்ளமும் அறியும்
என்பது எனக்கும் தெரியும்....!
மனதினுள் மனக்கோட்டை
மண் வீடாக
கடல் கரையோரம்
வீற்றிருக்கிறதே
அலைகளின் கரங்கள்
தீண்டும் வரைக்கும்,....!
அமுதாகி வந்த உன்னில்
அமிலமும் காண்கிறேன்....!
இரண்டும் சேர்ந்து
செய்யும் இன்பவதை
என்னில் உறையும்
உனக்கும் புரியும் - என்பதை
என் மனம் அறியும்....!
காற்றிலே கலந்து நீ
காதோரம் காதல் சேதி
கவியாக புனைந்திட
பாவியாக நான்
காலத்தைக் கரைக்கிறேன்
கண்ணீரின் துணையுடன் - என்
துணையாக நீ வருவாய்
என்ற துணிவில்....!
|
|
|
| ஒரே சாதிதான்! |
|
Posted by: AJeevan - 04-18-2005, 04:02 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (13)
|
 |
[size=15]நிலத்தால் தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு சில கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இப்படி இருக்கையில், தமிழகத்தில் எப்படி சிவப்புத் தோல் உடையவர்கள் வந்தார்கள்? மதன் உள்பட எல்லாரும் வாஸ்கோடகாமா வாரிசுகளா?
தமிழகம் மட்டும் இல்லை... லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியாவே ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியாகத்தான் இருந்தது. பிறகு, அங்கேயிருந்து பிய்த்துக்கொண்டு ஒரு ராட்சச பஜ்ஜி மாதிரி மிதந்து சென்று, ஆசியாவோடு ஒட்டிக்கொண்டது. உலகில் மக்களே இல்லாத காலம் அது! பிறகு, ஆப்பிரிக்கர்கள் நெடும் பயணம் மேற்கொண்டனர். குழுக் குழுவாகப் பிரிந்து அவர்கள் போய்ச் சேர்ந்த இடத்தின் பருவ நிலையைப் பொறுத்து, அவர்களுடைய தோல் நிறம் மாறியது.
அப்போது சாதிகளே கிடையாது என்றாலும், தோல் நிறத்தைப் பொறுத்து சரமாரியாகக் கலப்புத் திருமணங்களும் நிகழ்ந்தன. ஆகவே, அடிப்படையில் நாமெல்லாருமே ஒரே சாதிதான்! நம்மைப் பிரித்துவைத்தது இடைத் தரகர்களே! (வாஸ்கோடகாமா என்னைப் பார்த்தால், Ôகறுப்பர்Õ என்றுதான் அழைப்பார்!)
நன்றி: விகடன் மதன்
உங்கள் கருத்தைச சொல்லுங்கள்?
|
|
|
| எங்கையோ தொலைத்து எங்கையோ தேடுகிறார்கள் |
|
Posted by: stalin - 04-18-2005, 02:23 AM - Forum: புலம்
- Replies (4)
|
 |
இவர்கள் எங்கையோ தொலைத்து எங்கையோ தேடுகிறர்கள் புலத்தில் இங்கு பிறந்தோர் அல்லது சிறு வயதில்வந்தவர்கள் இந்த நாட்டுக்கு பழக்கபட்டிருப்பார்கள் வயதானோர் நாட்டுக்கு செல்வோம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் ஒரு இடைப்பட்ட வயதுள்ளவர்கள் நாட்டுக்கு போக தைரியமில்லாமலும் புலத்தில் திருப்தி படாமலும் இருந்துகொண்டு தொலைத்து எது என்று தெரியாமல் தேடி கொண்டிருக்கிறார்கள்.பில்லை கட்டுவதற்கும் வட்டிக்கும் அதன் குட்டிக்கும் சேர்த்து வட்டி கட்டுவதற்கும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஒரு தேவையின் திருப்தி வர இன்னொரு தேவையை உருவாக்கி கொண்டும சரியோ பிழையோ என்று யோசிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து நடந்து கொண்டு எலி ஓட்டம் ஓடி பின் எதுக்குள்ளையோ போய் எதுக்களாலோயோ திரும்பி வந்து திருப்தியற்றவராய் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்
|
|
|
| புத்தர் சிலைகளும் பேரினவாதிகளும் |
|
Posted by: Vaanampaadi - 04-18-2005, 02:10 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
புத்தர் சிலைகளும் பேரினவாதிகளும்
கடல்கோள் அனர்த்தத்திலிருந்து கிழக்கு மாகாண மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே, திட்டமிட்ட பேரினவாத நடவடிக்கைகளால் அவர்களுடைய இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது. மீள் கட்டமைப்பு என்ற பெயரில் சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைப்பதன் மூலம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு அத்திவாரம் இடப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு அவர்களுடைய இருப்புக்குத் தீவிரமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் செயற்பாடுகளின் பின்னணியில் - பேரினவாதிகள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டுள்ள இரண்டு அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்பது வெளிப்படை.
இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலைகளை அமைப்பதற்குத் தமக்குள்ள உரிமையை யாரும் தடுத்துவிட முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் ஒருவர் சூளுரைத்திருக்கின்றார். அதனைத் தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் அவர் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.
உண்மை தான்! புத்தர் சிலைகள் இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் அமைக்கப்படுவதை எதிர்க்க வேண்டிய தேவையில்லை என்பது உண்மைதான். அன்பையும் அஹிம்சையையும் போதித்த புத்தரின் சிலைகள் அவருடைய போதனைகளைப் பரப்புவதற்காக அமைக்கப்பட்டால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், இந்த நாட்டில் பேரினவாத ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதற்கும் இனங்களுக்கிடையே குரோதத்தையும் வன்மத்தையும் வளர்ப்பதற்காகத் தானே புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றன.
"இந்தப் பகுதி சிங்களவர்களுக்குரியது" என்பதைக் காட்டுவதற்காகத் தான் சிறுபான்மையினத்தவர்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் புத்தர் சிலைகள் முதலில் அமைக்கப்படுகின்றன. அதன் பின்னர் என்ன நடைபெறும் என்பது இந் நாட்டின் இனவாத வரலாற்றை அறிந்துள்ள எவருக்கும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
பௌத்த - சிங்கள பேரினவாதத்தை தமது அடிநாதமாகக் கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவோ அல்லது ஜே.வி.பி. யினரோ கடல்கோளினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தான், தம்முடைய மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?
கடல்கோள் அனர்த்தத்தின் பின்னரான மீள் கட்டுமானப் பணிகளைப் பயன்படுத்திக் கொண்டு - பேரினவாதிகள் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுடன் கிழக்கு மாகாணத்தில் களமிறங்கியிருக்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவங்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
சுதந்திரம் வழங்கப்பட்ட காலம் முதல் சிறுபான்மையினருடைய பாரம்பரிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் ஏற்பட்ட அரசியல் விளைவுகள் அனைவருக்கும் தெரிந்ததுதான். வடக்கு - கிழக்கின் இன விகிதாசாரம் திட்டமிட்ட முறையில் சிதைக்கப்பட்டது. தமிழ் மக்களுடைய பாரம்பரிய தாயகத்தை இரண்டாகப் பிளப்பதும், அப் பகுதிகளிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மையினத்தவர்களாக்குவதும் தான் பேரினவாதிகளின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பின் அடுத்த கட்டமாக தமிழர்களுடைய பாரம்பரிய பிரதேசங்களின் பெயர்களும் சிங்களத்துக்கு மாற்றப்பட்டன. அம்பாறை மாவட்டம் திகாமடுல்லை மாவட்டமாக பெயர் மாற்றத்தைப் பெற்றது. இங்கிருந்த முஸ்லிம் கிராமங்கள் பலவும் சிங்களக் கிராமங்களாகியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் தான் புத்தர் சிலைகள் தமது பிரதேசங்களில் அமைக்கப்படுவது முஸ்லிம் மக்களுக்கு பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக ஹெல உறுமயவின் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் நாகரிக சமுதாயத்தையே வெட்கித் தலைகுனிய வைப்பதாக அமைந்திருக்கின்றது.
`கிழக்கு மாகாணமும் சிங்கள மக்களுடைய பாரம்பரியமான ஒரு பிரதேசம். அந்நிய ஆக்கிரமிப்புக்களிலிருந்து தேசத்தைப் பாதுகாப்பதற்காக நாம் தான் முஸ்லிம்களை கரையோரங்களில் குடியேற்றினோம்' என்ற கருத்தில் ஹெல உறுமயவைச் சேர்ந்த பிக்கு ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து முஸ்லிம் மக்களின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பின்னணியில் தான் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் தமது இருப்புகளைப் பாதுகாப்பதற்காக புத்தர் சிலைகளை அகற்றும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றனர்.
பேரினவாத நடவடிக்கைகளுக்கு எதிராக சிறுபான்மையினர் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளை - அவை அஹிம்சை ரீதியானதாக இருந்தாலென்ன, வன்முறைகளைப் பின்பற்றியதாக இருந்தாலென்ன - அவற்றை `பயங்கரவாதம்' என முத்திரை குத்துவதுதான் பேரினவாதிகளின் வழமை. முஸ்லிம்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை இஸ்லாமிய அடிப்படைவாதம் எனவும், இஸ்லாமியப் பயங்கரவாதம் எனவும் ஹெல உறுமயவினர் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள். இவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் மக்களுடைய எதிர்ப்பை இலகுவான முறையில் அடக்கி ஒடுக்கிவிட முடியும் என பேரினவாதிகள் கணக்குப்போடுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
இன நல்லுறவைச் சீர்குலைத்து புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய பேரினவாதிகளின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக படைத்தரப்பும் அரசாங்கமும் கொண்டுள்ள நிலைப்பாடுதான் என்ன? மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பேரினவாதிகளுக்கு உதவுவதாகவே இவர்களது நிலைப்பாடுள்ளது.
திருகோணமலையில் அரச காணிகளின் விபரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஜே.வி.பி.யினர், அவற்றில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களையும் வகுத்து வருகின்றார்கள். இது பல குழப்பங்களை அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கின்றது.
கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு அரச உதவிகள் எதுவுமின்றியுள்ள கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு அடிமேல் அடியாக இந்த பேரினவாத நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
புத்தர் சிலைகளை வைத்து - புத்தரின் கோட்பாடுகளுக்கு எதிரான அரசியலே இங்கு நடத்தப்படுகின்றது. கொழும்பில் ஹெல உறுமயவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் இவற்றைத் தடுத்து நிறுத்த முற்படும் சிறுபான்மையினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே உள்ளது.
இந்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு அரசு தொடர்ந்தும் அனுமதிக்கத்தான் போகின்றதா? அல்லது, சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள ஆக்கபூர்வமாக நடவடிக்கைகள் எதனையாவது மேற்கொள்ளப் போகின்றதா?
தினக்குரல்
|
|
|
| மாரியம்மன் சிலைஅழுவதாக பரபரப்பு |
|
Posted by: Vaanampaadi - 04-17-2005, 11:24 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (31)
|
 |
பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்து 7 பேர் பலி மாரியம்மன் சிலைஅழுவதாக பரபரப்பு இனி ஒரு குறையும் வராமல் காப்பேன் சாமியாடிய பெண் அருள்வாக்கு
பள்ளிபாளையம், ஏப்.16- பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்து 7 பேர் பலியானதில், மாரியம்மன் சிலை அழுவதாக பரபரப்பு எழுந்ததால், இனி ஒரு குறையும் வராமல் காப்பேன் என்று சாமியாடிய பெண் அருள்வாக்கு கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் ஊராட்சியில் கடந்த 6-ந்தேதி இரவு பெய்த கனமழையால் ஆனங்கூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் புகுந்தது. இதில் 7 பேர் பலியானார்கள். 500 வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தரைமட்டமானது. இந்த வெள்ளத்தால் சத்யாநகர் பகுதி பெரும் பாதிப்புக்குள்ளானது. இங்கு மட்டும் 3 பேர் உயிரிழந்தனர். எண்ணற்றோர் உயிர் பிழைத்த போதிலும் வீட்டையும், உடமைகளையும் இழந்து பள்ளிகளிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர்.
கிராமத்தில் பெரும் சோகம் சூழ்ந்துள்ள தற்போதைய சூழல் காரணமாக சித்திரை மாதத்தில் விழா நடக்கும் சத்யா நகர் மாரியம்மனுக்கு விழா வினை தள்ளிவைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவில் பூசாரியின் மருமகளை வெள்ளம் இழுத்து சென்றுவிட்டதால் கோவில் விழாவை சித்திரை மாதத்தில் நடத்துவதுகூடாது எனவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சத்யாநகர் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற சிலர் சாமி சிலையை உற்று கவனித்தனர். சாமியின் முகம் சோகம் சூழ்ந்து அழுவதைபோன்று காணப்பட்டதாம். இதைக்கண்ட அவர்கள் மாரியம்மன் அழுவதாக மற்றவர்களிடம் கூற பரபரப்பு ஏற்பட்டது. கிராமமக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அம்மன் சிலையை உற்று பார்த்தனர்.
அவர்களுக்கும் மாரியம்மன் உதட்டை கோனி அழுவதாக தோன்றுவதாக தெரிவித்தனர்.
இத்தகவல் காட்டுத்தீ போல பக்கத்து ஊர்களுக்கும் பரவவே ஏராளமானோர் வந்து மாரியம்மன் சிலையை பார்த்து சென்றனர். கிராமமக்களின் துயரநிலை கண்டே அம்மன் அழுவதாக கருதிய பலர் …நீயே அழுதால் நாங்கள் என்ன செய்வது தாயேஎன அம்மனை வணங்கினார்கள். அங்கிருந்த ஆசாரி தெருவை சேர்ந்த ஆடு மேய்க்கும் மாரியம்மாளுக்கு திடீர் அருள் வந்து ஆடினார். …15 நாளாக சொல்ல முடியாத மன துயரத்தில் இருப்பதாகவும், வந்த வெள்ளத்தை கட்டுப்படுத்த இயலாத வகையில் தன்னை சிலர் கட்டிப்போட்டு விட்டதாகவும், இந்த ஊரை விட்டு ஒருவரும் போகாதீர்கள், இனி ஒரு குறையும் வராமல் காப்பாத்துவேன், உடனடியாக விழா எடுங்கள் என்றும் அருள்வாக்கு கூறினார். அவருக்கு சுற்றி நின்றவர்கள் ஒரு குடம் நீரூற்றி வணங்கினார்கள்.
மாரியம்மன் அழுவதாக கிளம்பிய செய்தியால் சத்யா நகர் பகுதி நேற்று பரபரப் போடு காணப்பட்டது. செய்தியாளர்களும், புகைப்பட கலைஞர்களும் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதி மேலும் பரபரப்பு அடைந்தது.
தினகரன்
|
|
|
| விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மூலிகை சிகரெட்டுகள் |
|
Posted by: Vaanampaadi - 04-17-2005, 11:14 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மூலிகை சிகரெட்டுகள்
லக்னௌ, ஏப் 16: உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத மூலிகை சிகரெட்டுகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன.
மூலிகை சிகரெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் லக்னௌவில் உள்ள தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சிகரெட் பிரியர்கள் புகைப் பிடிப்பதை மூன்று மாதத்தில் படிப்படியாக குறைப்பதற்காக ""ஆன்டி-சிக்'' எனப்படும் சுவைத்து சாப்பிடும் மாத்திரைகளை ஏற்கெனவே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இந்நிறுவனம்.
மூலிகை சிகரெட் தயாரிப்பு குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது:
மூலிகை சிகரெட்டால், ஏற்கெனவே அதிகம் புகைப் பிடிப்பவர்கள் சிகரெட்டிலிருந்து விடுபடுவர். இந்த சிகரெட்டை புகைப்பவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும்.
மன அழுத்தம், சோர்வு மற்றும், உடல் எடை ஆகியவற்றை இது குறைக்கும். சிந்தனையை தூண்டும்.
புகையிலை கலப்பில்லை
இந்த வகை சிகரெட்டில் புகையிலைப் பொருட்களோ, நிகோடினோ இல்லை.
மூலிகை சிகரெட் தயாரிப்புக்காக காட்பிரை பிலிப்ஸ் சிகரெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 65 லட்சத்திற்கான இந்த ஒப்பந்தத்தில் ரூ. 16 லட்சம் முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்த சிகரெட் என்னென்ன பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்பதை தெரிவிக்க இயலாது. அவ்வாறு இதன் தகவல்களை வெளிப்படுத்தினால் உலகளவில் போட்டி ஏற்படும்.
மூலிகை சிகரெட் தயாரிப்பு திட்ட அறிக்கைகள் ஏற்கெனவே வெளியாகி விட்டதாக கூறும் தகவல்களை காட்பிரை பிலிப்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஆரம்பத்திலேயே இதுபோன்ற வதந்திகள் பரவுவதால் தொழில் ரீதியான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். விரைவில் காப்புரிமை கிடைத்து விடும்.
தினமணி
|
|
|
| மறதி மருத்துவர்கள் |
|
Posted by: Vaanampaadi - 04-17-2005, 11:12 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
மறதி மருத்துவர்கள்
வெலிங்டன்: அறுவை சிகிச்சையின்போது 5-வயது சிறுவனின் தொண்டையில் மருத்துவர்கள் வைத்த 12 சென்டிமீட்டர் பிளாஸ்டிக் குழாயை அகற்றாமல் விட்டது 2 நாள்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது.
பல் அறுவை சிகிச்சைக்காக நியூஸிலாந்தைச் சேர்ந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். வீட்டுக்குத் திரும்பிய அவனால் சாப்பிடவோ, பேசவோ முடியவில்லை. தண்ணீர் குடித்தால் கூட மூக்கு வழியாக வெளியே வந்தது. தொடர்ந்து இருமல் ஏற்பட்டது.
அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டதன் பின்விளைவு என்று கருதிய சிறுவனின் தாயார் 2 நாள்களாக அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
2 நாள்களுக்குப் பிறகு உள்ளூர் சுகாதார மைய மருத்துவர் சிறுவனை பரிசோதித்தபோது தொண்டையில் பிளாஸ்டிக் குழாயின் முனையைப் பார்த்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். பிளாஸ்டிக் குழாய் அகற்றப்பட்டது.
Dinamani
|
|
|
|