Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 604 online users.
» 0 Member(s) | 602 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,661
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,268
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,765
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  விஸாவுக்கு என்ன வழியடா?
Posted by: Mathan - 04-17-2005, 03:46 PM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

விஸாவுக்கு என்ன வழியடா?

[size=14]வாடா மச்சான் லண்டன் வந்திட்ட சிடியில் இருந்து இன்னொரு பாடலை தருகின்றேன். முதல் பாடலை போல் இது சிரிப்பை வரவழைக்கவில்லை, பல புலம் பெயர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள வலிகளை கண்கூடாக பார்த்திருக்கின்றேன் அவற்றில் சிலதை சொல்கின்றது இந்த பாடல்


[i]சொலிசிற்றர பார்க்கணும் அவனுக்கு ஊத்தணும் அப்ப நான் கேள்வி கேக்கணும்
சொலிசிற்றர் விஸாவுக்கு என்ன வழியடா? ஓ இங்கிருக்க என்ன வழியடா?

ஊரில அகதி நான் ஆறு வயசுல வெளிநாட்டுல் அகதி பதினாறு வயசுல
அன்னியனுக்கு அடிமை நான் சின்ன வயசுல கஷ்டத்துக்கு அடிமை நான் இந்த வயசுல
தமிழினமாய் பிறந்துவிட்டால் தாய் தந்தையை பிரிந்துவிட்டால்
அந்த பாசம் அன்பு கூட சில யாசகமானதா

தாய் தந்தையை பார்க்க ஒரு யோகம் இல்லையே
வீடு வாசல் இருந்தும் அட நேரம் இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு பிரீடம் இல்லையே
சொல்லியழ எனக்கு இங்கு யாரும் இல்லையே

சொல்லினவலி எனக்கு இல்ல சொல்லி முடிக்க நேரம் இல்ல
அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்க்வில்லையே

Print this item

  சீர்திருத்தக் குப்பைகள்..!
Posted by: kuruvikal - 04-17-2005, 02:11 PM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

<img src='http://img182.echo.cx/img182/5415/face4wt.jpg' border='0' alt='user posted image'>

<b>சீர்திருத்தக் குப்பைகள்..!

சமுதாய
குப்பைக்குள்
பூதக் கண்ணாடி
குண்டுமணி தேட...
கண்(மணி)
தேடும் குப்பைகள்..!</b>

Print this item

  கருணாவின் பெயரால் வன்னியில் தாக்குதலுக்கு இராணுவம்
Posted by: Nada - 04-17-2005, 10:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (10)

கருணாவின் பெயரைப் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் புலனாய்வு ஊடுருவல் தாக்குதல்களை நடாத்த இலங்கை அரசின் (அஐ) இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டு வருகின்றது.

~கருணா குழு| என்பதில் எல்லோருக்கும் பெரிய குழப்பம் உண்டு. சிறீலங்காப் புலனாய்வு இயந்திரத்தையே கருணா குழு வென்று பெயர் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறாக கருணாவின் ஆட்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விட்டன.

கருணா குழு என்றால் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுää சிறீலங்கா இராணுவப் புலனாய்வு என்றால் ~கருணா குழு| என்றாகி விட்டது போல் உள்ளது. இதிலிருந்து அதைப் பிரிக்க முடியாது. அதிலிருந்து இதைப் பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டும் ஈருயிரும் ஓருடலுமாகிவிட்டது.

கடந்த காலத்தில் முதலில் கருணாவின் பெயரால் மட்டு. அம்பாறையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டும் புலிகள் மீது தாக்குதல் இடம்பெற்றது.

பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் ஊடுருவல் தாக்குதல்கள் இடம்பெற்றன. இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப் பிரதேசத்துக்குள்ளும் தாக்குதல்கள் இடம்பெறப் போகின்றது.

அதற்காக ~கருணா குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களை அரச இராணுவப் புலனாய்வுப் பிரிவு வவுனியாவுக்கு அழைத்து வந்திருப்பதாகவும் அவர்கள் Nஐhசப் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.

கருணாவைக் கொண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது புதிய புலனாய்வுக் கட்டமைப்பினை உருவாக்க முகவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் ஒரு புதிய அணியை வவுனியாவில் நிரந்தரமாக நிலை நிறுத்தப் போகிறது.

சிறிலங்காப் புலனாய்வு நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும்; முகவராக தற்போது கருணா செயற்படுகின்றார்.

சிறிலங்காவின் புலனாய்வு இயந்திரத்தின் பசிக்கு போதியளவு தீனி போடக்கூடியளவு ஆட்கள் கருணாவிடம் இல்லை. அதாவது தற்போது கருணாவிடம் வலுவுள்ள 15 பேரிலும் குறைந்தவர்களே இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவர்களும் நாளுக்கு நாள் தலைமறைவாகி வெளிநாடு தப்பியோடுவதால் கருணாவின் பாசறையில் ~கருணா குழு| என்ற பெயரில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடர்த்தியே பெருகி வருகின்றது.

தற்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வு வலையமைப்புக்கு பொலநறுவைää மட்டக்களப்புää அம்பாறைää வவுனியா மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதைவிட பொலநறுவை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களிலிருந்து அதிக கூலி கொடுத்து கருணாவின் பெயரால் அரச புலனாய்வு இயந்திரத்திற்கு ஆட்சேட்புச் செய்யப்படுகின்றது. இதற்கு பல சிறுவர்கள் சிலரும் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பில் அரச இராணுவப் புலனாய்வு இயந்திரம் மேற்கொள்ள முயன்ற பல தாக்குதல் முயற்சியில் மாற்றியக்க உறுப்பினர்களைப் பயன்படுத்தியதை விட பணத்தைக் கொடுத்து கூலிக்கு புலிகளின் பகுதியில் குண்டு வெடிப்புச் செய்ய மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளை புலிகளின் உளவுத்துறை அன்று கண்டு பிடித்ததாக மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருடன் நான் உரையாடும் போது அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

கூலிக்கு இவ்வாறான ஆட்களைத் தேடிக் கண்டு பிடிக்க சிறிலங்காவின் புலனாய்வு நிறுவனங்களான ஊஐனுஇ Nஐடீஇ னுஆஐ என்பன தீவிர முயட்சியிலீடுபடுகின்றன.

புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவித் தாக்க முன்னர் இயங்கிவந்த டுசுசுPயின் புதிய வடிவத்தை கருணாவைக் கொண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளது.

இனிவரும் காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் ஆழ ஊடுருவி தாக்கத் தேவையான ஒற்றர்களை ~கருணா குழு| விடமிருந்தே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பெறப்போகின்றது.

கருணாவின் பெயரைப் பயன்படுத்தி புலனாய்வு வெற்றிகள் சிலவற்றை பெற்ற இராணுவப் புலனாய்வுப் பணியகம்ää ஆடி அடங்கி வதங்கிப் போயிருக்கும் புலிகள் இயக்கத்திற்கு எதிரான மாற்றியக்கங்களையும் தற்போது தடவி தட்டி எழுப்பி கருணாவால் முடிந்தால் ஏன் உங்களால் முடியவில்லை என கேள்வியும் கேட்டு ஊக்க மருந்து ஊசியும் ஏற்றி வருகிறதாம்.

அதன் மறுவடிவமாக கடந்த காலத்தில் துணைப்படையாக இயங்கி வந்த ராசிக்குழு மோகன் குழு புளொட் நுPனுPஇ நுPசுடுகு வரதர் அணிää நுNனுடுகு போன்றவற்றையும் கருணா கும்பலுடன் இணைக்கும் நடவடிக்கையில் இலங்கை தேசியப் புலனாய்வுப் பணியகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் அரச புலனாய்வு இயந்திர அதிகாரிகளும் இணைக்கப்பட்டு இவற்றை எல்லாம் ஒன்றாய் சேர்த்து இவற்றுக்கு ~கருணா குழு| என தற்போது பெயர் சூட்டப்பட்டு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவர் தான் கருணா. அனைத்து தமிழ் தேச விரோதிகளுக்கும் தலைமை தாங்கும் ஓர் மனிதராக மாறியுள்ளார்.

கருணா புலிகள் இயக்கத்திலிருந்த போது ஒரு இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் அரசியல்வாதியாகவும் விளங்கினார். ஆனால் இன்று றிமோல் கொண்றோலில் இயங்கும் மனிதராகி விட்டார். சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஹாபில கெந்தவிதாரனாவின் தாளங்களுக்கு ஆடும் ஒரு பொம்மையாக உருமாறியுள்ளார்.

கருணா கட்டளைகளைப் பிறப்பித்தே வாழப்பழகிக் கொண்டவர். கட்டளைகளுக்கு கட்டுப்பட்டுக் கிடந்த மனிதர் அல்லர். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகள் ஏற்படவே கருணா விரக்தியடைந்தார். ஆகவே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டிலும் கருணாவால் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது என்பது வேறு விடயம் தான். புது மாப்பிள்ளைக்குத் தற்போது புது வீட்டில் நல்ல வரவேற்பாகத்தான் இருக்கும் போகப் போகத்தான் எல்லாம் ~அம்மானு|க்குப் புரியும்.

மட்டு. அம்பாறையிலிருந்து வவுனியா மன்னார் வரை தற்போது ~கருணா குழுவின்| செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றிருக்கின்றன. அண்மையில் வவுனியா விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் இதன் ஒரு அங்கமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவ்வாறாக விரிவாக்கம் பெற்று வரும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடான கருணா குழுவின் தாக்குதல் தொடர்பாக புலிகளின் உளவுத் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பொறுப்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:-

~கருணா குழு? என்ற பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு வன்னிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடாத்த திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக தமது உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனை முறியடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அவரின் கருத்தைக் கொண்டு ஆராயும் போது இக்குழு வன்னிக்குள் ஊடுருவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. தேசத்துக்கு விசுவாசமாக நடித்துக் கொண்டு சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படலாம் என பாடசாலை அதிபர் ஒருவருடன் உரையாடிய போது அவரும் கருத்துத் தெரிவித்தார்.

இப்போது கருணாவின் பெயரிலான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல் தாக்குதல்களை முறியடிக்க வேண்டிய நிலையில் வன்னியில்; புலிகள் உள்ளனர். அவ்வாறான ஊடுருவல்களை முறியடிப்பதற்கு புலிகளின் உளவுத்துறை தயாராகிவிட்டதை அறிய முடிகின்றது.
~கருணா குழு|வின் தாக்குதலை முறியடிப்பதற்காக அல்லது கண்டு பிடித்து தடுப்பதற்காக வன்னிப் பிரதேசங்களுக்கு புதிதாக வருவோரை புலிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் சில தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சிக்கலின் மத்தியில் தான் முறியயடிப்பு உளவாளிகள் ~கருணா குழு|வின் ஊடுருவல் தாக்குதலைத் தடுப்பதற்கு புலனாய்வு வலயத்தை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இதில் புலிகளின் உளவுத்துறைக்கு இரு பணியுண்டு. ஒன்று கருணாவின் ஊடுருவல் தாக்குதலைத் தடுக்க வேண்டும். மற்றது அப்பாவி மக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும்

இவ்வாறான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்களால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் புலனாய்வு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கருணா குழுவின் வன்னிப் பகுதி மீதான தாக்குதல்களை முறியடிப்பதற்கு விடுதலைப் புலிகளின் உள்ளகப் பாதுகாப்புப் பிரிவு உளவாளிகள் தயார் நிலையில் உள்ளனர். அதேவேளை பொது மக்களின் புலனாய்வு முகவர் கட்டமைப்பினையும் விழிப்பு நிலையில் இருக்கும்படி வேண்டியிருப்பதாக அறிய முடிகின்றது.


நன்றி தமி;ழ்நாதம்

Print this item

  கனடாவுக்கு ஒரு ஓ
Posted by: eelapirean - 04-17-2005, 04:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<b>சிறீலங்கா அரசிற்கு ஏற்பட்ட புதிய தலைகுனிவு! </b>

ஞாயிற்றுக்கிழமை 17 ஏப்பிரல் 2005 6:30 ஈழம்

சிறீலங்கா அரசாங்கத்தால் புதிய தூதுவராக கனடா நாட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சந்திரானந்தா டி சில்வாவின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்திடீர் முடிவை இவ் வாரப்பகுதியில் கனடிய அரசாங்கம் சிறீலங்கா அரசிற்குத் தெரிவித்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளராக சந்திரானந்த டி சில்வா பணியாற்றிய காரணத்தால் அக்கால கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது விட்டாலும் கூட கனடிய குடிவரவு குடியகல்வுச் சட்டம் 2002 இன் பிரகாரம் கனடாவிற்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர் என கனடிய அரசாங்கம் சிறீலங்கா அரசிற்கு அறிவித்துள்ளது.

இலங்கையில் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு விடுதலைப்புலிகளே காரணம் என வெளி உலகத்திற்கு காட்ட முயன்று வரும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நல்ல பாடம் ஒன்றை கனடிய அரசாங்கம் புகட்டியுள்ளது.

சந்திரானந்தா டி சில்வா பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்கும் முன்னர் தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய அரசியல் மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் ரொறொன்ரோ வாழ் தமிழர்கள்தான் கனடிய அரசின் இம் முடிவிற்குக் காரணம் என கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் விசனம் வெளியிட்டுள்ளன.


சுட்டது புதினம்

Print this item

  ஊர்முற்றம் [ ஒலிப்பதிவு ]
Posted by: kavithan - 04-17-2005, 01:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<span style='font-size:25pt;line-height:100%'>யாழிசையில் ஒலிக்கும் அடுத்தகவிதை <i><b>ஊர்முற்றம்</b></i> ஈழத்துக்கவி <i><b>புதுவை இரத்தினதுரையினது </b></i> <i><b>சாந்தி ரமேஸ் வவுனியனுடைய</b></i> குரலில். </span>


<b>யாழிசையில் ஊர்முற்றம்</b>

Print this item

  மீண்டும் எம் மண்ணில் நீங்கள் [ சாந்தி ரமேஸ் வவுனியன் ]
Posted by: kavithan - 04-17-2005, 01:02 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<span style='font-size:25pt;line-height:100%'><i><b>மீண்டும் எம் மண்ணில் நீங்கள் </b></i>என்ற கவிதை <i><b>சாந்திரமேஸ் வவுனியனுடையது </b></i>யாழிசையில் ஒலிக்கிறது

இதோ இணைப்பு</span>

<b>யாழிசை</b>

Print this item

  செம்மண் சாலை
Posted by: AJeevan - 04-17-2005, 12:38 AM - Forum: குறும்படங்கள் - Replies (1)

மலேசியாவிலிருந்து
<span style='color:brown'>செம்மண் சாலை
<img src='http://www.sffs.org/fest05/images/films/gravel_road.jpg' border='0' alt='user posted image'>
48th S.F. International Film Festival லில் தேர்வாகி திரையிடப்படுகிறது.

<img src='http://www.sffs.org/fest05/images/directors/dir_menon.jpg' border='0' alt='user posted image'>
இயக்குனர் தீபக் குமரன் மேனன்

மேலதிக விபரங்கள்:-
http://www.sffs.org/fest05/titleDetail.asp?title_id=34 </span>

வாழ்த்துக்கள்

Print this item

  உறுதி உரமானது...!
Posted by: kuruvikal - 04-17-2005, 12:34 AM - Forum: கவிதை/பாடல் - Replies (29)

<img src='http://img232.echo.cx/img232/3496/flower94ok.jpg' border='0' alt='user posted image'>

<b>மலரே...
மனதோடு மலர்ந்தவளே
கண்ணோடும் மலர்ந்திட்டாய்
ஒளி வீசும் ஓவியமாய்
நினைவோடு கலந்து
அகத்தோடும் பொருதி விட்டாய்
அகற்ற ஒரு வழியில்லை...!

அகத்துள் ஒரு கருவறை
அங்கு உனக்காய்
ஒரு கரு வளர்த்தேன்
இன்று குஞ்சாய் நீ
என் மன மடி தவழ்கிறாய்...!
உன் பிஞ்சாய்....
நானும் ஒரு உறவாய்
பிரிவுக்கும் அங்கு இடமில்லை...!

சத்தியம் செய்து தரவில்லை
சான்றுகள் விட்டும் வைக்கவில்லை
முகவரியும் அறியவில்லை
முன்னதாய் அறிந்ததுமில்லை..!
மின்னலாய் வந்த
முகம் மட்டும் போதும்
என் நினைவது
ஜென்மங்கள் தாங்கும்
உன் உருவம்...!

வேண்டாத உறவாய்
நாளை நீ உதறிவிட்டால்...
மலர் நாடும்
வண்டாட்டம் ஒதுங்கும்
திண்டாட்டம் எனக்கு வேண்டாம்..!
சுதந்திரச் சிட்டு நான்
உன் நினைவுச் சுமை தாங்கியும்
பறக்க வேண்டும் இலட்சியப் பயணம்
உறுதி... உரமானது...!</b>

Print this item

  வாடா மச்சான் லண்டன் வந்துட்ட
Posted by: Mathan - 04-16-2005, 02:23 PM - Forum: கவிதை/பாடல் - Replies (31)

வாடா மச்சான் லண்டன் வந்துட்ட

[size=14]நேற்று சச்சின் படம் பார்க்க நண்பர்களுடன் போயிருந்தேன். காரில் ஏறியவுடன் நண்பர் ஒரு ரீமிக்ஸ் சிடியை தந்து இதை போடுங்க சுப்பரா செய்திருக்காங்க என்றார். சரி என்று போட்டு கேட்டு கொண்டே போனோம். பிரபல்யமான சினிமா பாடல்களின் இசையில் லண்டன் பின்ணணியிலான பாடல்களை தந்திருந்தார்கள். சிடியின் தலைப்பு <b>வாடா மச்சான் லண்டன் வந்திட்ட</b> அது தவிர பாடியவர் பெயரோ வேறு எதுவுமோ சிடி கவரில் இல்லை. முதல் பாடலே எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதன் வரிகளை தருகின்றேன் படித்து பாருங்கள்.

<b>ரன்</b> படத்தில் வரும் <b>தேரடி வீதியில தேவதை வந்தா</b> மெட்டில் பாடவும்

நம்மூரு பொண்ணு லண்டனு வந்து தமிழ மறந்தாங்க தெரிஞ்சுக்கோ
ஸ்டேசன் வாசலில் வெயிட்பண்ணி நின்னா போய்பிரண்ட் வர்றாரு தெரிஞ்சுக்கோ
அவங்க அப்பனும் பீரீன்னு விட்டா கிளப்புக்கு போறான்னு தெரிஞ்சுக்கோ
எந்த நேரமும் போன்ல இருந்தா லவ்வு பண்றான்னு தெரிஞ்சுக்கோ
இன்னுமும் சொல்வேன் தெரிஞ்சுக்கோ வாயை மூடிட்டு கேட்டுக்கோ

வாடா மச்சான் லண்டன் வந்துட்ட
மட்டை போட்டு முன்னுக்கு வந்திட்ட

காலேஜ் விட்டு லேட்டா வந்தா லவ்விட்டு வர்ரான்னு தெரிஞ்சுக்கோ
நல்ல பொண்ண லவ்வு பண்ணினா செலவிருக்காது தெரிஞ்சுக்கோ
பொண்ணுங்க கூட வெதர போல அடிக்கடி சேஞ்சிங் தெரிஞ்சுக்கோ
எந்த நேரமும் போனில இருந்தா லவ்வு பண்றான்னு தெரிஞ்சுக்கோ
இன்னுமும் சொல்வேன் தெரிஞ்சுக்கோ வாயை மூடிட்டு கேட்டுக்கோ

வாடா மச்சான் லண்டன் வந்துட்ட
மட்டை போட்டு முன்னுக்கு வந்திட்ட

[size=14]அந்த பாடலை இங்கே கீழே உள்ள இணைப்பில் கேட்கலாம்

<b>வாடா மச்சான் லண்டன் வந்துட்ட</b>

Print this item

  மேஜர் உட்பட மூன்று ராணுவத்தினர் பலி
Posted by: AJeevan - 04-16-2005, 02:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

சிறீலங்கா ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மேஜர் தர அதிகாரி உட்பட மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்


யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் இன்று முற்பகல் 11 மணியளவில் ராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மேஜர்; தர அதிகாரி உட்பட மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே குறிப்பிட்ட ராணுவ வீரர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் எனவும் தற்சமயம் அவர் ராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்க தெரிவித்தள்ளார்.

Print this item