| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 263 online users. » 0 Member(s) | 261 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,415
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,213
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,524
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..! |
|
Posted by: kuruvikal - 09-01-2005, 06:42 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (9)
|
 |
<img src='http://img152.imageshack.us/img152/7030/kilinochchi095ar.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழீழமே
தமிழர் தாகம்
தமிழீழமே
தமிழர் தாயகம்
தமிழீழமே
புலிகளின் தாகம்
தமிழீழமே
தலைவன் இலட்சியம்
தமிழீழமே
மாவீரர் மூச்சு
தமிழீழமே
வீழ்ந்த எம் மக்கள் கனவு
தமிழீழமே
எங்கள் தாய் மடி
தமிழீழமே
எங்கள் விளை நிலம்
தமிழீழமே
எங்கள் எதிர்காலம்
தமிழீழமே
எங்கள் வாழ்வு
தமிழீழமே
தமிழர் எங்கள் ஒளி..!
தலைவன் வழியில்
தங்கத் தமிழீழம் விடிந்திட
பொங்குவோம் எழுவோம்
தகர்ப்போம் தடைகள்...!
தாங்குவோம் புலிக்கொடி
வாங்குவோம் சர்வதேச அங்கீகாரம்..!
அதுவரை...
சீறுவோம் பாய்வோம்
வீறு கொண்ட புலிகளாய்
வாருங்கள் மக்களே
கோருங்கள் கைகளே...!</b>
|
|
|
| முறிவடையும் யுத்த நிறுத்தம்:வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர |
|
Posted by: வினித் - 09-01-2005, 06:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
முறிவடையும் யுத்த நிறுத்தம்: இலங்கை வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர்!
[வியாழக்கிழமை, 1 செப்ரெம்பர் 2005, 21:27 ஈழம்] [ம.சேரமான்]
மூன்றரை ஆண்டுகாலம் நீடித்திருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையில் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அவையத்தின் சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி ஐந்து நாள் பயணமாக நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் கோபி அனானின் தூதுவராக அவர் இலங்கைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணம் குறித்த செய்தியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஹிமாலி அருணாதிலக்க உறுதிப்படுத்தினார்.
ஐ.நா. சிறப்புத் தூதுவரின் பயண ஒழுங்குகளை சிறிலங்கா வெளிவிகார அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சிறிலங்கா தலைவர்களுடன் அவர் பேச்சுக்களை நடாத்த உள்ளார்.
www.puthinam.com
|
|
|
| அரச தேர்தல் முடிவு எதுவாயினும் தமிழர் பிரச்சனைக்கு முடிவில |
|
Posted by: வினித் - 09-01-2005, 05:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
சிறிலங்கா அரச தேர்தல் முடிவு எதுவாயினும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு முடிவில்லை:'தினமணி' தலையங்கம்
[வியாழக்கிழமை, 1 செப்ரெம்பர் 2005, 22:15 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் முடிவு எப்படி இருந்தபோதிலும் ஈழப்பிரச்சினையின் முடிவுக்கான அடையாளங்கள் தென்படவில்லை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது.
தினமணி நாளேட்டில் 'திடீர் திருப்பம்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இன்றைய (01.09.05) தலையங்கம்:
கடந்த ஒரு வார காலத்துக்குள் இலங்கையில் அரசியல் நிலவரம் அடியோடு மாறிவிட்டது.
இதற்கு முதன்மையான காரணம் - அதிபர் சந்திரிகாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதியுடன் முடிந்துவிடுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே ஆகும்.
அதோடு, அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தேர்தல் ஆணையருக்கு நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது. 1999 இறுதியில் நடந்த தேர்தலில் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டபோதிலும், 2000 டிசம்பரிலேயே இப்பதவிக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டதாகவும், அதனால் இப் பதவிக்குரிய ஆறாண்டுக்காலம் 2006 டிசம்பரிலேயே முடிவதாகவும் சந்திரிகா எழுப்பிய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் தீர்ப்பு வெளியான நாளிலிருந்தே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சந்திரிகாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகத் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவும்- எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வந்த லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் வருகிற அதிபர் தேர்தலில் - அச்சம்பவத்தின் பாதிப்பு எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை இப்போதைக்குத் திட்டவட்டமாகக் கணிப்பதற்கில்லை.
இது ஒருபுறமிருக்க திடீரென வரவிருக்கும் இத் தேர்தல் - இலங்கை இனப்பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமர் படுகொலைச் சம்பவத்திற்குப் பிறகும் - தற்பொழுது நடைமுறையில் இருந்து வரும் போர் நிறுத்த உடன்படிக்கை நீடிக்கும் என்று சந்திரிகா அரசு அறிவித்துள்ளது.
ஆனால்
தேர்தல் ஆதாயத்துக்காகப்
பேரினவாதக் கட்சியான, சிங்கள வெறி அரசியல் சக்தியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் சந்திரிகாவின் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
"சில நிபந்தனைகளுடன்'' பக்சவுக்கு ஆதரவு அளிக்க ஜேவிபி முன்வந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரிகாவின் கட்சி போட்டியிட்டு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி, கூட்டாட்சியை அமைத்தது. ஆயினும் ஈழப் பிரச்சினையில் ஜே.வி.பி. விதித்த பல்வேறு "முட்டுக்கட்டைகளை' சந்திரிகா ஏற்க மறுத்ததால் - கூட்டணியிலிருந்து ஜேவிபி வெளியேறியதையொட்டி - அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.
இத்தகைய இக்கட்டான சூழலில் - திடீரென வருகிற அதிபர் தேர்தலில் ஜேவிபியின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் சந்திரிகாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ரணில் விக்கிரம சிங்க பலமான முதிர்ந்த அரசியல்வாதி. இத் தேர்தலில் யாருக்கு வெற்றி பெற வாய்ப்புண்டு என்பதைக் கணிப்பது சிரமமே.
தேர்தலில் போட்டியிடும் இருவரில் யார் வெற்றி பெற்ற போதிலும் ஈழப் பிரச்சினை தீர்வுக்கான வழிவகைக்கு சாத்தியக்கூறுகள் சொற்பமே.
சந்திரிகாவின் வேட்பாளரான ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானால் - ஜே.வி.பி.யை மீறி இப் பிரச்சினையில் சுதந்திரமாக நடந்து கொள்ளத் துணிவாரா என்பது சந்தேகத்துக்குரியதே.
கூட்டாட்சி முறை அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே எதிர்ப்பது ஜேவிபி.
இலங்கையை - இரு இனங்களும் இரு கலாசாரங்களும் கொண்ட நாடாகவே ஏற்க மறுப்பது அக் கட்சி.
அதோடு பேரினவாத ஆட்சிக்கு உட்பட்டுத்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்ற மூர்க்கம் கொண்ட கட்சியும்கூட. அப்படியிருக்க அதன் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு வருபவரால் எப்படி சுயேச்சையாக நடந்து கொள்ள முடியும்?
ரணில் விக்கிரம சிங்க வெற்றி பெற்றபோதிலும் - சந்திரிகா கட்சியினுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஈழப் பிரச்சினையில் அரசியல் சட்டபூர்வமான தீர்வைக் காண்பது கடினமே.
எனவே இத் தேர்தல் முடிவு எப்படி இருந்தபோதிலும் ஈழப்பிரச்சினையின் முடிவுக்கான அடையாளங்கள் தென்படவில்லை.
|
|
|
| தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? ஸ்மைல் ப்ளீஸ் |
|
Posted by: SUNDHAL - 09-01-2005, 04:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (23)
|
 |
மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிhpப்பு தான்.
சிhpப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம்.
கள்ள கபடமற்ற குழந்தைகள் சிhpப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிhpத்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிhpத்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது.
சிhpப்பை பொறுத்தவரை பல வகைகள் உண்டு. இருப்பினும் வாய் விட்டு, பல் ஈறுகள் தொpய சிhpப்பது உடம்புக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் தொpவிக்கின்றனர். இதுபோல வாய் விட்டு சிhpக்க வேண்டுமென்றhல் பற்கள் முத்துப் போல இருக்க வேண்டும். பல் ஈறுகள் தௌpவாக இருக்க வேண்டும். ஆனால் காரை படிந்த மஞ்சள் நிறம், ஒன்றிரண்டு பற்கள் காணாமல் போதல், பற்கள் அhpத்து காணப்படுவது, பற்குழி, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களால் இதுபோல சிhpக்க முடியுமா? அவர்கள் உண்மையிலேயே சிhpக்க வேண்டும் என்றும் நினைத்தாலும், பல் பிரச்சினைகள் நினைத்து வாயை மூடிக் கொள்வார்கள். அல்லது நமுட்டு சிhpப்பு சிhpப்பார்கள். இதுபோன்ற நமுட்டு சிhpப்பால் ஒரு பயனும் இல்லை.
வாய் விட்டு சிhpக்கும் போது முகத்தில் உள்ள தசைகள் நன்றhக இயக்கப் படுவதால் முகம் பொலிவடைகிறது. தோற்றத்தில் நன்றhக இருப்பவர்கள், தங்களைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறhர்கள். இதனால் சமுதாயத்தில் உள்ளவர் களிடம சகஜமாக பழக முடிகிறது. தன்னம்பிக்கையுடன் இருப்பதால் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைகிறhர்கள். ஆனால் வாய் விட்டு சிhpக்காதவர்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால், சமுதாயத்துடன் இணைந்து பழகுவதில் பின்தங்கி இருப்பார்கள். ஒருவேளை அவர்களுடைய பல் பிரச்சினைகள் சாp செய்யப்பட்டால், எல்லாம் நார்மலாகி விடும். தன்னம்பிக்கை அதிகாpத்து, நிலையும் உயரும்.
பற் குறைபாடுகளை சீர் செய்வதால் 2 லாபம் கிடைக்கிறது. ஒன்று, ஒவ்வொரு வரும் தங்களைப் பற்றி நல்ல விதமாக உணர்வதால், தன்னம்பிக்கையுடன் இருக்கிறhர்கள். இன்னொன்று ஆபத்தான பல் நோய்களும் அகற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒருவருக்கு பற்கள் அதிகமான இடைவெளி விட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்நிலையில் உணவு உண்ட பிறகு, உணவு துணுக்குகள் இந்த இடைவெளிகளில் போய் தங்கும். அப்போது என்னதான் பிரஷ்ஷை வைத்து தேய்த்தாலும் உணவுத் துகள் வெளி வராது. இந்நிலையில் என்ன ஆகும்? நாள் போக்கில் பாக்டீhpய கிருமிகள் குடிபுகுந்து பற்களை அழித்து விடும். இதுதவிர வாயில் துர்நாற்றம் உண்டாவதால், அடுத்தவருடன் பேச தயங்குவர்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகாpக்க முதலில் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய் விட்டு சிhpயுங்கள்.
|
|
|
| நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்.. |
|
Posted by: SUNDHAL - 09-01-2005, 04:34 PM - Forum: மருத்துவம்
- Replies (35)
|
 |
அடுத்த முறை பிசா ஆர்டர் செய்யும் போது காளானில் தயாhpக்கப்பட்ட பிசா வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீ- காபி ஆகியவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப் படுகிறது.
ஆன்டிஆக்ஸிடென்டுகளை பொறுத்தமட்டில் பல வகை உண்டு. ஆனால் விஞ்ஞானிகள் அவை அனைத்தையும் அடையாளம் காட்டவில்லை. எனினும் சுற்றுப்புற மாசுபாடுகள் மற்றும் நோய் ஆகியவற்றhல் உடம்பு பாதிக்கப்படாமல் காக்கும் ஆற்றல் இந்த ஆன்டிஆக்ஸிடென்டுகளுக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நல்ல திக்கான நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ஆர்த்ரைட்டிஸ் (யசவாசவைளை) எனப்படும் மூட்டு வீக்க நோயை குறைப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக, பழங்கள் மற்றும் காய்கறி ஜூஸ்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சீமர் ஆபத்தை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இதுதவிர இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுமா? என்ற ஒரு கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.
கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான நசபடிவாiடிநேiநே (ஆன்டிஆக்ஸிடென்டுகள்) காணப்படுகின்றன. கோழிக் கறியை எடுத்துக் கொண்டால், அதை விட 4 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்ஸிடென்டுகள் காளான்களில் உள்ளது. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.
|
|
|
| நிலவுக்கு செல்லும் `பென்குயின்' ரோபாட் |
|
Posted by: SUNDHAL - 09-01-2005, 04:28 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (14)
|
 |
நிலவுக்கு அனுப்பு வதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் ஒரு ரோபாட்டை தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த ரோபாட் பென்குயின் வடிவில் உள்ளது. 2 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப்பிறகு இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த `பென்குயின்' ரோபாட் 3 அடி உயரம் உள்ளது. 230 பவுண்டு எடை கொண்டது. ஒரு சிறிய புரப்பல்சன் என்ஜினும் இதில் உள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு பயிற்சி மையத்தில் இந்த பென்குயின் ரோபாட் அறி முகப்படுத் தப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த பென் குயின் ரோபாட் ராக்கெட்டில் வைத்து நிலவுக்கு அனுப்பப்படும்.
நிலவில் இறங்கி இந்த பென்குயின் ரோபாட் தத்தி தத்தி சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.
ஒரு மைலில் 6-ல் ஒரு பங்கு தூரம் வரை இந்த பென்குயின் ரோபாட் தாவிச் செல்லும் ஆற்றல் உள்ளது. இந்த சோதனைக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
|
|
|
| விஜய்க்கு அரசியல் தெரியாதுƒ தந்தை சொல்கிறhர |
|
Posted by: SUNDHAL - 09-01-2005, 04:26 PM - Forum: சினிமா
- Replies (10)
|
 |
விஜய்க்கு அரசியல் தெரியாது, அவருக்கு அரசியல் தேவை இல்லை என தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறினார்.
திருமணம்„ மதுரை மேற்கு தொகுதி இளைய தளபதி விஜய் நற்பணி மன்றம் சார்பில் மருத்துவக் கல்லு}ரி அரங்கில் 5 ஏழை nஜhடிகளுக்கு நேற்று காலை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது„-
விசில் அடிக்க இது என்ன சினிமா தியேட்டரா? திருமண விழாவிற்கு வந்திருக்கிறீர்கள். விஜய்யை நேசிப்பவர்கள் அன்பாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லாம் விஜய் நெஞ்சில் குடியிருக்கும் அருமையான பிள்ளைகள். ஏனென்றhல் விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் என்னை அப்பா என்றே கூப்பிடுகிறhர்கள். இதை விட எனக்கு வேறு பாக்கியம் இல்லை. வீட்டில் விஜய் எனக்கு ஒரே பிள்ளை. ஆனால் இன்று தமிழகம் முழு வதும் பிள்ளைகள் இருக்கிறhர்கள்.
கல்விப் பணி„ நடித்தார், பணம் சேர்த்தார் என்பது ஒரு வாழ்க் கையே அல்ல. இன்று விஜய் 144 ஏழை குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தி உடை எடுத்து கொடுத்து படிக்க வைக்கிறhர். கல்வி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை ஒரு பெரிய பணியாக விஜய் செய்து வருகிறhர். இன்று 5 ஏழை nஜhடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அவர்கள் வாழ்த்து கிறhர்கள். அந்த வாழ்த்து விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும். திருமணம் ஆனதும் மனைவியை நன்றhக வைத்திருங்கள். அதே நேரத்தில் தாய் - தந்தையை மறந்து விடாதீர்கள். தாயை தவிர உலகத்தில் வேறு எந்த கடவுளும் இல்லை.
அரசியல் தெரியாது„ எனக்கும், விஜய்க்கும் அரசியல் தெரியாது. அதனால் அரசியல் எங்களுக்கு தேவை இல்லை. வருங்கால முதல் வரை தந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களே வருக என பேனர் வைத்திருந்ததை பார்த்தேன். அது தேவையற்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
மணமக்களுக்கு பட்டுப் புடவை, பட்டு வேட்டி, தாலி உள்பட 51 வகையான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றை ஷேhபா சந்திரசேகரன் வழங்கினார்.
|
|
|
| போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் |
|
Posted by: ஊமை - 09-01-2005, 03:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் கிளிநொச்சி தமிழ்த் தேசிய எழுச்சிப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசிற்கு அறைகூவல்
தமிழ்த் தேசிய எழுச்சிக்கான வவுனியா பிரகடனத்தை வலியுறுத்தும் எழுச்சிப் பிரகடனம் இன்று கிளிநொச்சி தேசிய விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி மிகவும் எழுச்சி பூர்வமாக தமது உள் உணர்வுகளை வலியுத்தினர் இதன் போது சிறிலங்கா இனவாத அரசியல் வாதியான ஜே.ஆர்.ஜயவர்த்தனாவால் 1989இல் கூறப்பட்ட போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற வாசகத்தை இன்று நாம் சிறிலங்கா அரசிற்கு கூறிவைக்க விரும்புகின்றோம் என
திருகோணமலை மாவட்ட தமிழ் பேரவை மக்கள் தலைவர் திரு.வ.விக்கினேஸ்வரன் மக்கள் சார்பில் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை மாலை 4.00மணியளவில் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்த இந்நிகழ்வில் மாவீரர் மேஜர் விமல் அவர்களின் துணைவியார் திருமதி தமிழ்செல்வி சண்முகநாதன் அவர்களும் மாவீரர் மேஜர் கமல் அவர்களின் தந்தை முத்துச்;சாமி அருணாசலம் அவர்களும் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக் கொடியினை மாவீரர் கப்டன் வண்ணன் அவர்களின் தந்தை முத்துவேல் சீவரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை கிளிநொச்சி மாவட்ட தமிழ்த்தேசிய எழுச்சிச் செயலணிக் குழுத்தலைவர் திரு. தி.பிரபாகரன் அவர்கள் நிகழ்த்த நிகழ்வின் ஆசியுரையினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் தி.இராசநாயகம் அடங்கலாக இந்து, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதப்பெரியார்கள் வழங்கினர்.
திருகோணமலை மாவட்ட மாவட்ட மக்கள் பேரவைத்தலைவர் திரு.வ.விக்கிணேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு.மோகனதாஸ், கிளிநொச்சி மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர் திரு.கணேசலிங்கம் அவர்களும் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செலயகப் பணிப்பாளர் திரு.கருணாரட்ணம் அடிகளார் அவர்களும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.ச.கனகரட்ணம் அவர்களும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கி.சிவனேசன் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளர் திருமதி.பி.மதுரநாயகம் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.ஜெயானந்தமூர்த்தி அவர்களும் தமிழீழ அரசியல் துறைத்துணைப்பொறுப்பாளர் திரு.சோ.தங்கன் அவர்களும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.பத்மநாதன் அவர்களும் சிறப்புரைகளை ஆற்றினர்.
தொடர்ந்து எழுச்சிப் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ்வெழுச்சிப் பிரகடனத்தை தமிழ்த்தேசிய எழுச்சி செயலாளர் திரு.வேழமாலிகிதன் நிகழ்த்தினார்.
இறுதியாக தேசிய எழுச்சிப் பேரவை கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை நன்றியுரையினை நிகழ்த்தினார்.
சங்கதி
|
|
|
|