| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 302 online users. » 0 Member(s) | 299 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,066
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| 2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு |
|
Posted by: வினித் - 12-07-2005, 03:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (13)
|
 |
<b>நோர்வேக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு </b>[புதன்கிழமை, 7 டிசெம்பர் 2005, 18:21 ஈழம்] [கொழும்பு நிருபர்]
இலங்கை அமைதி முயற்சிகளில் அனுசரணையாளராக செயற்படுமாறு நோர்வே நாட்டுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கை:
இலங்கை அமைதி முயற்சிகளில் றோயல் நோர்வே அரசாங்கம் தமது அனுசரணையாளர் பணியில் தொடர்ந்து ஈடுபட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே நாட்டினது சிறிலங்கா தூதுவர்களையும் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துப் பேசினார்.
அமைதி முயற்சிகளைத் தொடருவதற்காக தாம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை இணைத் தலைமை நாடுகளினது தூதுவர்களிடம் மகிந்த ராஜபக்ச விளக்கினார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
<b>www.puthinam.com</b>
|
|
|
| இவற்றை படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? |
|
Posted by: தூயவன் - 12-07-2005, 03:15 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம்இ கிருஸ்துமஸ்இ தீபாவளிஇ பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா? (மன்சூர்இ யாகூ மெயில் மூலமாக)
மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது 'அஹ்காமு அஹ்லித்திம்மா' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் 'குப்ர்' என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்'
இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம்இ வாழ்த்துபவர் வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.
வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோஇ கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!
மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.
அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.
மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறதுஇ அதுவும் ஹராமாகும்.
'எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)
அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 'மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வதுஇ அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
http://www.islamiyadawa.com/qa/qa23.htm
|
|
|
| இன்று தமிழிழத்தில் |
|
Posted by: sri - 12-07-2005, 12:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டுள்ளார். ஒரு சிப்பாய் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைத் தெருப்பக்கமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர் மாங்குளம் ஓமடுவைச் சேர்ந்த சுப்ரமணியம் யோகபுத்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களான பாஸ்கரன் கமலேஸ்வரி (வயது 36), மகேஸ்வரன் கமலரூபன் (வயது 21), தம்பிராஜா சந்திரபோஸ் (வயது 30), ஜெரால்ட் நீலமேகம் (வயது 25), இராணுவ வீரரான பிரசன்னா ஜயதிலக்க (வயது 22) ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதினம்
|
|
|
| வைகோ, நெடுமாறன் விடுத்துள்ள எச்சரிக்கையை நினைவில் |
|
Posted by: Vaanampaadi - 12-07-2005, 11:57 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>வைகோ, நெடுமாறன் விடுத்துள்ள எச்சரிக்கையை நினைவில் கொண்டு விழிப்புடன் செயற்படுவோம்</b>
கூட்டமைப்பு எம்.ப.ஈழவேந்தன்
"கொழும்பின் பொறிக்குள் மீண்டும் இந்திய அரசு வீழ்ந்துவிடக்கூடாது" என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தொடர்ச்சியாக விடுத்துவரும் எச்சரிக்கையை நாம் எளிதில் புறக்கணிக்க முடியாது. 1987 இல் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம். இது காலப்போக்கில் தீப்பந்தமாகப் பற்றி எரியும் என்று நாம் எச்சரித்தோம். நாம் எச்சரித்ததற்கு அமைய இவ்ஒப்பந்தம் தீப்பந்தமாகப் பற்றி எரிந்தது மட்டுமல்ல நாம் மிகமிக வருந்தத்தக்க முறையில் இந்தியத் துணைக்கண்டத்தின் தலைமை அமைச்சராக விளங்கிய ராஜீவ்காந்தியையும் சேர்த்து எரித்ததை நாம் இங்கு நினைவு கொள்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பனர் ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
பழ.நெடுமாறன் இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அவசரத்தில் தெளிக்கப்பட்ட அலங்கோலம் என எச்சரித்தார்.
தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற முறையில் இந்த ஒப்பந்தம் அமைந்ததனால் உயிர்களை ஆயிரக்கணக்கில் நாம் இழந்தோம். இந்திய இராணுவத்திற்கும் தேவையற்ற இழப்பு ஆயிரக்கணக்கில் ஏற்பட்டது. ஈழத்தமிழ் மக்களும் இந்திய மக்களும் தொடர்ந்து இணைந்து வாழவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனைக் கெடுக்கின்ற - சின்னாபன்னம் ஆக்குகின்ற முறையில்தான் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா தலையிட்டுத்தான் ஈழத் தமிழ் மக்களுடைய இனச்சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றார்.
மகிந்த ராஜபக்ஷ இந்தியத் தலைவர்களை சந்திக்க இருப்பதாக வெளிவரும் செய்திகள், உறுதியாக ஈழத்தமிழ் மக்களுக்கு இடையூறினையும், இன்னலையும் தரும் முயற்சியாக இருக்கப்போவது உறுதி.
தமிழீழத்தேசியதலைவர் மாவீரர் நாளில் விடுத்துள்ள உரையை செவிமடுத்து ஆவன செய்யத்தவறின், நாட்டில் இரத்தக்களரி ஏற்படும், இதற்கு மகிந்த ராஜபக்ஷவும் சிங்களத்தலைமை பேரினவாதமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மிக அண்மையில் நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையை நாம் மனதில் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும்.
தமிழீழம் எங்கும் போர் மோகம் சூழ்ந்துள்ளது. திருமலை மாவட்டத்தில் மூதூரை சூழ்ந்துள்ள பகுதிகளில் கொலைகள் நடைபெற்றுள்ளன. அத்தோடு பதற்றநிலை நிலவுகிறது.
யாழ். மாவட்டச் சூழல் பயங்கர வடிவத்தைப் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடுகளும், வெடிகுண்டு வீச்சுகளும் மாறிமாறி நடக்கின்றன. நாம் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைமைப்பீடத்துடன் நீண்ட நேரம் உரையாடியும் உரிய பயன் கிடைக்கவில்லை. யாழ். அரசியற்றுறைத் தலைவர் இளம்பரிதிக்கும் யாழ். படைத்தளபதி சுனில் தென்னக்கோனுக்கும் இடையில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை சடுதியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் நாம் நினைவில்கொண்டு வைகோ வழங்கிய எச்சரிக்கையையும் நெடுமாறன் வழங்கிய எச்சரிக்கையும் நினைவிற்கொண்டு நாம் விழிப்போடு இருப்போம்.
Thinakural
|
|
|
| இலங்கை கேட்டதாலேயே புலிகளுக்கு நோர்வே நிதி |
|
Posted by: Vaanampaadi - 12-07-2005, 11:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>இலங்கை கேட்டதாலேயே புலிகளுக்கு நோர்வே நிதி</b>
நோர்வே வெளிவிவகார அமைச்சு விடுதலைப் புலிகளுக்கு இலங்கையரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே நிதியுதவி வழங்கியதாக அந்த அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி நோர்வே நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டிற்கும் 2004 ஆம் ஆண்டிற்கும் இடையில் விடுதலைப்புலிகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சு 12.5 மில்லியன் நோர்வேஜியன் குரோனரை வழங்கியதாக நவம்பர் 26 அன்று `நியூரைம்ஸ்' என்ற நோர்வே நாளிதழ் செய்தி வெளியிட்டது. இவ்வருட இறுதிக்குள் இவ்வுதவியானது 25 மில்லியன் குரோனர் (37,5000 அமெரிக்க டொலர்) என்ற அளவை அடையும் என்பது அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வுதவி மேற்கொள்ளப்பட்டதாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
யுத்தநிறுத்த உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்திற்கு நிதிவழங்குமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்விடுத்தது. அதனடிப்படையிலேயே நிதிவழங்கப்பட்டது என்று மின் அஞ்சல் மூலம் அப்பேச்சாளர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
Thinakural
|
|
|
| தமிழீழக்காதல் |
|
Posted by: spyder12uk - 12-07-2005, 11:09 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (138)
|
 |
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?"
"கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்."
சில காலமாகவே இது எனக்கு வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது. வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, முரளீதரனையோ, கருணாவையோ பற்றி பேச நான் ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பான் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.
அவன் தங்கை வந்து அவனை ஏதாவது சொல்லி அழைத்து சென்றுவிடுவாள். அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது நான் அவள் அண்ணனை பேசவிட்டு வம்பிழுத்துக்கொண்டிருப்பது. இல்லாவிட்டால் எங்கக்கா வந்து தலையில் கொட்டி இழுத்துச்சென்றுவிடுவாள்.
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்த என்னுடைய பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு சொரூபன்,
"அண்ணா நீங்கள் அப்படியே பொட்டு அம்மானைப் போலவே இருக்கிறியள்." என்று சொல்லிவைக்க ஏற்கனவே ஈழ ஆட்களுக்கு மாடிவீட்டை வாடகைக்குவிட்ட கோபத்தில் இருந்த மாமா அதன்பிறகு வீட்டிற்கு வருவதே நின்றுவிட்டது.
சொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க பெட்டைன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் என்னிடம் வந்து காசு கேட்பதும்.
"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்."
முதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒருஇடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்கள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.
இப்பல்லாம் நேரம் போகலைன்னா அவனை கூப்பிட்டு பேச ஆரம்பிச்சிடுவேன். அதுவும் பிரபாகரனைப்பற்றியோ, புலிகளைப்பற்றியோ பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிறுத்தாமல் பேசுவான். இடையில் நிறைய கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவான் எதற்கெடுத்தாலும் கள்ளப்பயதான், கருணாவைப்பற்றி கேட்டால் கள்ளன், முரளீதரனைப்பற்றி கேட்டால் கள்ளன் அப்பிடின்னு பெரிய கதையே ஆரம்பிச்சிடுவான். அந்தச் சமயங்களில் எல்லாம் அவன் கண்கள் பிரகாசமாவதைப் பார்த்திருக்கிறேன்.
"அண்ணே, பாருங்கண்ணே இன்னொரு வார் வந்தா ஆமியை அடிச்சு நொறுக்கிடுவாங்க, இப்போ நம்மக்கிட்ட கெலியெல்லாம் இருக்கு." அவன் ஒவ்வொரு விவரமாய்ச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வேலைவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் நான் சொரூபனிடம் பேச்சுக்கொடுக்க மாடிக்கு போய்விடுவேன் அதற்கு சொரூபன் மட்டும் காரணம் கிடையாது. அவன் தங்கிச்சியை வந்ததிலிருந்து நான் சைட் அடித்துக் கொண்டிருந்தேன் அதுவும் ஒரு காரணம். அவ பேரு சந்திரா, நம்ம பக்கத்து பெண்களைவிட கொஞ்சம் அடிக்கிற நிறத்தில் தான் இருப்பாள். ஆனாலும் நல்ல களையான முகம் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
சொரூபனிடம் மட்டும் தான் விளையாட்டாய் பேசுவது, சந்திராவிடம் சீரியஸான மேட்டர் மட்டுமே பேசுவேன். பெரும்பாலும் விளையாட்டாய் பேச ஆரம்பித்தால் விலகிச்சென்றுவிடுவாள் என்பதால்தான் சீரியஸான மேட்டர். அவர்கள் இருவரும் சில லட்சங்கள் செலவழித்து பெங்களூரில், நான் சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து படித்த டிகிரியை படித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி, படித்துமுடித்ததும் அவர்கள் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புக்களைப்பற்றி, வெளிநாட்டில் பல சங்கடங்களுடன் வாழும் அவர்களுடைய உறவினர்களைப்பற்றி இப்படி நிறைய. கொஞ்சமும் விகல்பமில்லாமல் பேசிக்கொண்டிருப்பாள். அண்ணனைப்போல் வாயைத்திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருக்கமாட்டாள், ரொம்பவே அளவாய்த்தான் பேசுவாள். ஆனால் சொரூபனாகட்டும், சந்திராவாகட்டும் ராஜீவ்காந்தியைப்பற்றியோ, ஐபிகேஎப் பற்றியோ என்னிடம் பேசவேமாட்டார்கள். நானும் அவ்வளவாக சென்ஸிடிவ் விஷயங்களில் தலையிடமாட்டேன்.
அக்கா பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள் அதனால் பெரும்பாலும் சந்திரா தான் அம்மாவிற்கு உதவிவந்தாள், அம்மா மற்றவர்களை சமையல் அறைக்குள் விடமாட்டார்கள். என் அத்தையை கூட விடமறுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திரா சமையல் கட்டிற்குள் போய் வேலைசெய்வாள். அம்மாவிற்கும் ஒருவாறு விஷயம் தெரிந்துதான் இருந்தது நேரில் காண்பிக்கவில்லை, ஆனால் அக்கா நேரிலேயே சொல்லிவிட்டாள்,
"மகனே சயனைட் குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை. வேணும்னா சொல்லு நைனாக்கிட்ட பேசி எனக்கு முன்னாடி உனக்கு வேறவொரு பொண்ணுகூட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன். இந்த விளையாட்டையெல்லாம் விட்டுறு. சொல்லிட்டேன்"
விளையாட்டாய் பேசுவதைப்போல் இருந்தாலும் ரொம்ப சீரியஸாய் சொல்லிக்கொண்டிருந்தாள்.
சொரூபனுக்கும் சந்திராவிற்கும் மற்ற பாடங்களில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் ஆங்கிலம் தான் உதைக்கும். அதுவும் சொரூபன் பிரச்சனை, பெரிய பிரச்சனை. ஆங்கில பாடலாசிரியர்களையெல்லாம் ஏகவசனத்தில் பேசுவான், இவனெல்லாம் என்ன புஸ்தகம் எழுதுறான்னு. அதாவது அவனுக்கு சி, லாங்குவேஜையெல்லாம் தமிழில் சொல்லித்தரணும், யாராவது இதுபோன்ற தமிழ் புத்தகங்கள் இந்தக் கடையில் கிடைக்குதுன்னு சொன்னா அவ்வளவுதான் போய் வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதனால் பலசமயங்களில் சந்திராவை தனியாய் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வண்டியேறிவிடுவான்.
சொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள். புஸ்தகம் வாங்கிவந்தவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகும். தமிழ் விளக்கத்தையும் ஆங்கில விளக்கத்தையும் வைத்து என்னை சொல்லித்தரச்சொல்லி உயிரை வாங்குவான். இந்த விஷயத்தில் எனக்கு சந்திராவின் மீதுகூட கோபம் உண்டு. அவளும் இப்படித்தான் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரை முதற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து படிப்பாள்.
இப்படியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில் தான் டிவியில் நந்தா படம் போட்டான், ஈழ மக்களைப்பற்றிய படமென்பதால் சந்திராவும் பார்க்க வந்திருந்தாள். அதில் வந்திருந்த லைலா கதாப்பாத்திரத்தை சந்திராவாகவும் சூர்யா கதாப்பாத்திரத்தை நானாகவும் கற்பனை செய்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் அவளை வேறு திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவளும் என்னையே பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை ஏற்ப்பட்டது.
படம் முடிந்த அன்றிரவு மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன். அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,
"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளையவர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க." சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.
"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா?"
"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது. எங்கள் வீட்டிற்கும் இது ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை. ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவளிடம் ஒரு முறை வைரமுத்து எழுதி தேசியவிருது வாங்கிய 'விடைகொடு எங்கள் நாடே' பாட்டைப்பற்றி பெருமையாக சொல்ல அவள் அதைப்பற்றி பெருமைப்பட எதுவுமில்லையென்றும்,
"எங்கட வலிகளை உங்களிண்ட கவிஞரின் வரிகளால் நிரப்பிவிட முயல்வது முட்டாள்தனம், அது அத்துனை இயல்பாய் வராது."
என்றும் கூறியது ஆச்சர்யமளித்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஈழப்பிரச்சனையை வைத்து தமிழர்கள் படமெடுத்தும் பாட்டெழுதியும் சம்பாதிப்பதைப்பற்றிய அபிப்ராயமும் வேறாய்இருந்தது. அவர்களுடைய பிரச்சனையைப் பற்றிய தமிழர்களின் அறிவு குறைவாய் இருப்பதாகவும் அதன் பாதிப்பே இவையெல்லாம் என்றும் கூறினாள். பின்நாட்களில் அவள் ராஜீவைப்பற்றியும் ஐபிகேஎப் பற்றிய அவளுடைய மனப்பக்கங்களையும் எனக்குக்காட்டினாள். அது இதுவரை நான் படித்து கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்ததென்னவோ உண்மை.
அதன் பிறகு அவள் எங்கள் வீட்டில் இருந்த ஒருவருடம் சொர்க்கமாய்க் கழிந்தது, இடைவெளிகள் முற்றிலுமாய் இல்லாமல் போயிருந்தாலும் கடைசிவரை அவள் காதலை சொல்லவில்லை, என் காதலை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு. பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என் காதலுக்கான பதிலை
http://imohandoss.blogspot.com/2005/12/blo...og-post_05.html
|
|
|
| அறிமுகம் |
|
Posted by: நர்மதா - 12-07-2005, 10:05 AM - Forum: அறிமுகம்
- Replies (21)
|
 |
வணக்ககம் அன்பு நண்பர்களோ
நான் நர்மதா எனது சொந்த இடம் தமிழழிழம் தற்சமயம் லண்டணில் இருக்கிறேன்
|
|
|
| இணைந்து கொள்கிறேன் |
|
Posted by: saya - 12-07-2005, 08:46 AM - Forum: அறிமுகம்
- Replies (52)
|
 |
உங்களுடன் இணைத்து கொண்டமைக்கு நன்றி. தமிழில் எழுதுவது எப்படி. உதவி செய்யவும், புதிதாக வலைப்பூ செய்வதற்கு என்ன செய்யவேண்டும். நன்றி
ungaludan inainthu kondamaikku nanri[/url] enakku tamilil ezhutha uthavi seiyavum. bamini ezhuthu enge edukkalam .puthithaga blog il servathaitku enne seiya veendum danke.
|
|
|
| அந்த பிஞ்சு முகம் |
|
Posted by: AJeevan - 12-07-2005, 02:09 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (16)
|
 |
<b>அந்த பிஞ்சு முகம்</b>
<img src='http://www.sla.purdue.edu/WAAW/Whitaker/images/onesadlostsm-m.jpg' border='0' alt='user posted image'>
மன சோர்வோடு வைத்தயசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வெளிப்பகுதியில் அமர்ந்து
அவசர சிகிச்சைப் பிரிவு வாயிலை நோக்கியவாறு அமர்ந்து இருக்கிறேன்
உள்ளேயும் வெளியேயுமிருந்து டாக்டர்களும், தாதிகளும் ,பணியாளார்களும், நோயாளிகளை பார்க்க வருவோரும் என் முன்னால் நடந்து போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.
என் பார்வை மட்டும் வாயிலை நோக்கியதாக இருக்கிறது.
இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் என் அருகால் நடந்து செல்கின்றனர்.
முன்னே போனவர்கள் அவசர சிகிச்சை பிரிவு விசாரிப்பு பகுதியில் ஒரு கணம் நிற்கிறார்கள்.
சொற்ப நேரம்தான் அது
அவர்களை ஓரு டாக்டர் அழைத்துக் கொண்டு முன்னே போகிறார்.
முன்னே போய்க் கொண்டிருந்தவர்களில் சுமார் 5-6 வயது மதிக்கத் தக்க மூத்த பெண் குழந்தை திடீரென அவர்களை விட்டுப் பிரிந்து நிற்கிறாள்.
தாயும் 4 வயது மதிக்கத் தக்க ஆண் குழந்தையும் மட்டும் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு நடப்பது தெரிகிறது.
அவர்களிலிருந்து பிரிந்த பெண் குழந்தை நான் இருக்கும் திசை நோக்கி வருகிறாள்.
அவள் முதுகில் ஒரு பை இருக்கிறது.
அதை மெதுவாக இறக்கிக் கொண்டே " வணக்கம். இங்கே உட்காரலாமா?" என்று ஜெர்மன் மொழியில் என்னிடம் கேட்கிறாள்.
"வணக்கம். உட்கார்" என்கிறேன்.
உட்கார்ந்தவள் பையிலிருந்து 'சினெல்கோ' குளிர்பான போத்தலை வெளியே எடுத்து பார்த்து விட்டு மீண்டும் பைக்குள் திணிக்கிறாள்.
பக்கத்து தானியங்கி மெசினில் எடுத்த காப்பியை கையில் வைத்து உறிஞ்சிய வண்ணம் அவளைப் பார்க்கிறேன்.
அவள் தாயும் தம்பியும் சென்ற திக்கை நோக்கிப் பார்க்கிறாள்.
ஏதாவது அருந்துகிறாயா? என்கிறேன்.
வேண்டாம் இது என் தம்பியுடையது என்று பையிலிருந்து சினெல்கோ குளிர்பான போத்தலை வெளியே எடுத்து என்னிடம் காட்டுகிறாள்.
உனக்கு வேண்டுமானால் இந்த மெசினில் எடு என்கிறேன்.
என்னிடம் காசில்லை. அம்மா வரட்டும் என்கிறாள்.
பரவாயில்லை. நீ எடு என்கிறேன்.
இங்கே இலவசமா எனக் கேள்வி எழுப்புகிறாள்.
இல்லை. நான் வாங்கித் தருகிறேன் என்கிறேன்.
அம்மா வரட்டும் என்கிறாள்.
அம்மா எங்கே போகிறாள் எனக் கேட்கிறேன்.
அப்பா செத்துட்டார். பார்க்கப் போறாங்க.
என் இதயம் நின்று துடிக்கிறது.
அந்தக் குழந்தையின் முகத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்பது என்னை சாகடிக்கிறது.
சாவு என்பதைக் எப்படியோ, எங்கேயோ கேட்டு அச்சமடைந்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்குள் உறுதியாகிறது.
அதனால்தான் தாயோடு போகாமல் நின்று விட்டாள் .
அதை உணர்கிறேன்...........
அதற்கு மேல் அந்த பச்சிளம் பாலகனிடம் என்ன கேட்பது?
உனக்கு என்ன அருந்த வேண்டும்?
கோலா என்கிறாள்.
அதில் எடு என்கிறேன்.
தானியங்கி மெசினிடம் போனவள் மனதை மாற்றிக் கொண்டவளாக ஐஸ்டீ என்கிறாள்.
எடு என்று 5 பிராங் சில்லறையை அவளிடம் நீட்டுகிறேன்.
அவள் வாங்கி மெசினுக்குள் போட்டு விட்டு ஐஸ்டீயை எடுக்கிறாள்.
மிகுதி பணம் திரும்பி வருகிறது.
அதை எடுத்து என்னிடம் தந்து விட்டு நன்றி என்று கூறி ஐஸ்டீயை பருகுகிறாள்.
என் மனம் வார்த்தைகளின்றித் தவிக்கிறது.
தாயும் தம்பியும் டாக்டரும் எங்களை நோக்கி வருகிறார்கள்.
இவள் ஓடிச் சென்று என்னைக் காட்டி ஐஸ்டீ வாங்கித் தந்ததாக சொல்கிறாள்.
அந்த வேதனையிலும்
நன்றி சொன்னாயா என்று குழந்தையிடம் தாய் கேட்கிறாள்.
ஓ......சொல்லிட்டேனே என்று என்னைப் பார்க்கிறாள்.
டாக்டர் குழந்தை முன் மண்டியிட்டு அமர்ந்து
"வந்து அப்பாவை ஒரு முறை பார்" என்று சொல்கிறார்.
சிறியவன் அப்பா செத்துட்டார். நான் பாத்துட்டேன் நீயும் வந்து பார் என்கிறான்.
இரு குழந்தைகளையும் அணைத்து அழைத்துக் கொண்டு டாக்டர் செல்கிறார்.
தாய் மட்டும் தூரத்தே நிலத்தில் அமர்ந்து மெளனமாக கண்ணீர் வடிக்கிறாள்.
நான் எழுந்து சென்று " நான் இருக்கும் இடத்தில் உட்காருங்களேன்." என்கிறேன்.
இல்லை தனியாக அழ வேண்டும் என்கிறாள்.
அதற்கு மேல் நான் என்ன சொல்வது?
நான் திரும்பி வந்து அமர்கிறேன்.
அவள் உட்கார்ந்து கொண்டு அழுத வண்ணம் தனியே ஏதோ புலம்புவது தெரிகிறது.
இறந்து போன தந்தையை பார்த்து விட்டு குழந்தைகள் திரும்பி அம்மாவிடம் ஓடி வருகின்றன.
டாக்டர் தூரத்தே நின்று பார்த்து விட்டு நடக்கிறார்.
நான் திரும்பி வீடு வர நினைத்து எழுந்து போய் அவள் கைகளை பற்றி "என் அனுதாபங்கள்" என்கிறேன்.
அவள் நன்றி என்கிறாள்.
ஏதாவது தேவையா? என்கிறேன்.
இல்லை.
உறவினர்கள் வரும் வரை நிற்கிறேன் என்கிறாள்.
நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு குழந்தைகளின் கைகளை பற்றி விடை பெற்று நடக்கிறேன்.
பெண் குழந்தை என்னை நோக்கி பின்னால் ஓடி வருகிறாள்.
நான் நின்று திரும்புகிறேன்.
கோலாவுக்கு நன்றி என்று சொல்லி
நின்று என்னை நோக்குகிறாள்.
வார்த்தைகள் வர மறுக்கின்றன.
"சுயிஸ்" (மீண்டும் சந்திப்போம்) என்று சுவிஸ் மொழியில் சொல்லி விட்டு தாயை நோக்கி நடக்கிறாள்.
பனி கொட்டும் இரவின் தாக்கமே புரியாமல் என் காரை நோக்கி நடந்து வந்து அமர்கிறேன்.
வீடு வரை மட்டுமென்ன
இப்போதும் கூட தந்தையின் பிரிவையோ அதன் தாக்கத்தையோ உணர முடியாத அந்த பிஞ்சு முகம் என்னை வாட்டி வதைக்கிறது...................
|
|
|
|