Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 260 online users.
» 0 Member(s) | 257 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  கணவரும் மனைவியும் பணமும்
Posted by: SUNDHAL - 12-06-2005, 04:35 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

கணவரும் மனைவியும் பணமும்

பல்வேறு குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சினைகள் தோன்று வதற்கு பணம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. பணம் சம்பாதிப்பதில் பிரச்சினை ஏற்படாத குடும்பங்களில் கூட சம்பாதித்த பணத்தை எப்படி எதுஎதற்கு,எவ்வளவு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் தோன்றிவிடுகிறது. கணவனும் மனைவியும் பணவிஷயத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.

கணவனும் மனைவியும் ஏதாவது மனநெருக்கடிகளிலோ, பிரச்சினைகளிலோ சிக்கி இருக்கும் போது பணவிஷயங்கள் பற்றி பேசுவதைத் தவிர்க்கவேண்டும். மனஅமைதி யுடன் நடந்து செல்லும்போதோ, மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்திலோ பணவிஷயங்கள் பற்றிப் பேசி, தேவைப்படும் செலவுகளுக்கு பட்ஜெட் போட்டுக்கொள்ளவேண்டும். கண வர் அவசர அவசரமாக எங்கேயாவது கிளம் பிக்கொண்டிருக்கும் நேரத்தில் முடிந்த அளவு பணவிஷயங்கள் பற்றி பேசுவதையோ- பணம் கேட் பதையோ தவிர்க்கவேண்டும். ஆண் களது பாக்கெட்டிலும், வீட்டில் பெண் களின் கைகளிலும் எப்போதும் பணம் இருக்கவேண்டும். எந்தநேரத் தில் பணம் எப்படி தேவைப்படும் என்று யாருக்கும் தெரியாது. அத் தகைய தேவைகளை ஈடுசெய்யும் விதத்தில் இருவரது கைகளிலும் பணம் இருப்பது நல்லது.

திருமணமாகி கணவர் வீட்டிற்கு வாழவரும் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் அதை எல்லாம் புகுந்த வீட்டில் உள்ள அனைவரி டமும் பறைசாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படி பறைசாற்றுவது பல நேரங்களிலும் பிரச்சினைகளுக்கு காரணமாகி விடும். அதுபோல் கணவர் வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகைகள் பற்றி பிறந்த வீட்டிலும் பெண்கள் குறிப்பிடவேண்டியதில்லை. பொதுவாகவே எல்லா நடுத்தர குடும்பங்களிலும், ஏழை குடும்பங்களிலும் பணப்பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கும். இதில் கணவரிடம் ஏற்படும் விவாதத்தை அக்கம் பக்கத்து வீட்டினரிடமோ, பிறந்த வீட்டிலோ மனைவியானவள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கணவரோ,மனைவியோ தான் பணத்தை செலவு செய்யும் முறைதான் சிறந்தது என்று வாதிடக்கூடாது. கணவர் பணத்தை செலவு செய்யும் முறை மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும். பெரிய அளவில் குழந்தை களுக்காகவோ, கணவர் அல்லது மனைவியின் குடும்பத் திற்காகவோ பணத்தை செலவு செய்யும்போது கணவர் மனைவி இருவருமே அதைப்பற்றி நன்றாக பேசி, சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். `எனக்குத் தெரியாமல் நீங்களே செலவு செய்து தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டீர்களே' என்பது போல் பேசும் நிலை ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது.

பெற்றோர் பணவிஷயங்கள் பற்றி பேசும் போது ஒரளவு பக்குவப் பட்ட குழந்தைகளை அருகில் வைத்துக்கொள்வதில் தவறில்லை. அவர்களுக்கும் குடும்பத்து பொருளாதார நிலை தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குடும்பத்தில் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தால், அதை குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. குழந்தைகளுக்கு எல்லா பொருட்கள் மீதும் ஆசை ஏற்படும்.

தேவைப்படும் பொருட்களையும் அவர் கள் கேட்பார்கள். தேவைப்படாத பொருட்களையும் அவர்கள் கேட் பார்கள். பணம் பெற்றோரிடம் அதிகம் இருக்கிறதே அவர்கள் எல்லா பொருட்களையும் வாங்கித் தந்தால் என்ன என்ற கோணத் தில் சிந்திக்கத் தொடங்கிவிடு வார்கள். அப்போது அவர்கள் கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுக்காவிட்டால், பெற்றோரிடம் சண்டை போடுவார்கள். அதனால் குழந்தைகளின் பக்குவத்திற்கு தக்கபடியே அவர்களிடம் பணவிஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

குடும்பத்தில் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் அதை தங்கள் உறவினர்களிடம் கூறவேண்டும் என்பதில்லை. மனைவி அந்த பணத்தை தன் வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து வைக்கலாம் என்று ஆலோசனை சொல்வது சரியல்ல.

கணவரும் அதை தனது குடும்பத்தில் உள்ள உறவினர்களிடம் கொடுத்து வைக்கவேண்டும் என்று கூறுவதைத் தவிர்த்து, அந்த பணத்தை பாதுகாப்பாக பேங்கில் போட்டு வைப்பதே சிறந்தது. கணவருக்குத் தெரியாமல் மனைவியும் மனைவிக்குத் தெரியாமல் கணவரும் பணத்தை சேமிப்பதும் செலவழிப்பதும் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

Thanks:Thanthi........

Print this item

  இலங்கை படையின் சித்திரவதையாளர்கள் அவுஸ்த்திரேலியாவில்
Posted by: kurukaalapoovan - 12-06-2005, 02:55 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

உல்லாசப்பயணிகள் அனுமதியில் உள்வந்து பின்னர் அகதிகள் அந்தஸ்த்து கோரிய இலங்கை படையின் முன்நாள் அதிகாரி கூறியது
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3642&SID=266

Print this item

  சவூதி நீதிமன்றம் கொடூர தண்டனை
Posted by: Vaanampaadi - 12-06-2005, 12:26 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மோதலில் அரபு இளைஞர் கண்ணில் காயம்: கேரள வாலிபரின் கண்ணை குத்தி குருடாக்க உத்தரவு; சவூதி நீதிமன்றம் கொடூர தண்டனை

திருவனந்தபுரம், டிச. 6-

சவூதி அரேபியாவில் கேரளாவைச் சேர்ந்த இளை ஞர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். நவுசாத் என்ற வாலிபர் தமாம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்தார்.

இங்கு சவூதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து பேட்டரி சார்ஜர் வாங்கிச் சென்றார். அதை அவர் வீட்டில் போய் போட்டுப் பார்த்தார். அது சரியாக இயங்கவில்லை. இதனால் பெட்ரோல் பங்க்குக்கு திரும்ப வந்து பேட்டரி சார்ஜரை கொடுத்து புகார் கூறினார்.

கொடுக்கும் போது சரி யாகத்தான் இருந்தது. பரி சோதித்து பார்த்த பின்புதானே வாங்கிச் சென்றீர்கள் என்று நவுசாத் அந்த இளைஞரிடம் கூறினார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர். இதில் அரபு இளைஞரின் கண்ணில் காயம்பட்டது. அவரை சிகிச் சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கண்ணில் ஆழமான காயம் ஏற்பட்டதால் அவரது ஒரு கண் பார்வை குருடானது.

சவூதி அரேபியா போலீசார் நவுசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 3 வருடமாக சிறையில் வாடிய நவுசாத் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந் தார்.

ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி கண் ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற ரீதியில் கொடூர தீர்ப்பு வழங்கினார். அரபு இளைஞரின் கண்ணை குருடாக்கியதற்காக கேரள இளைஞரின் ஒரு கண்ணையும் குத்தி குருடாக்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தீர்ப்பை கேட்ட நவுசாத் அதிர்ச்சி அடைந்தார்.

Maalaimalar

Print this item

  சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை
Posted by: Vaanampaadi - 12-06-2005, 12:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமாயுள்ளது புலிகளின் அவகாசத்தை அரசு பயன்படுத்த வேண்டும்

சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கையில் ஒட்டுமொத்த சூழ்நிலை மிகவும் மோசமானதாகவும் பலவீனமானதாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, விடுதலைப் புலிகள் அளித்துள்ள கால அவகாசத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயன்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச தரப்பினையும் விடுதலைப் புலிகளையும் சந்திந்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஜரின் கான் நேற்று திங்கட்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இது குறித்து தெரிவித்துள்ளார்.

மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைவரத்தை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்துவது எமது நோக்கம்.

படுகொலைகள் குறித்து விசாரிக்க சுயாதீன குழுக்களை அமைக்க வேண்டும். அரச கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெறும் கொலைகள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

புதிய அரசாங்கத்தை சந்தித்து கருத்து பரிமாறுவதே எமது இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம்.

யுத்தத்தினாலும் கடல்கோளினாலும் இடம்பெயர்ந்தவர்கள் குறித்து ஆராய்வதும் அவர்களது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதும் எமது நோக்கமாகும்.

எனினும், எமது விஜயத்தின் மிக முக்கிய நோக்கம் புதிய அரசாங்கத்தை சந்தித்து, மிக மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரம் குறித்த எமது கவலையை தெரிவிப்பிதே.

இதுதவிர விடுதலைப் புலிகளையும் சிவில் உரிமை அமைப்புகளையும் சந்தித்தோம்.

மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைவரத்தை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்துவதும் எமது நோக்கம்.

வட, கிழக்கில் கொலைகள் மிக அச்சம் தரும் வகையில் அதிகரித்துள்ளன. கொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

இவற்றால் சமூகங்களின் மத்தியில் பதற்றமும் காணப்படுகின்றது.

அச்ச சூழ்நிலை காரணமாக பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்க அஞ்சுகின்றனர்.

விடுதலைப் புலிகளுடனான சந்திப்பின் போது அவர்களுடைய சர்வதேச கடப்பாட்டை வலியுறுத்தினோம்.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன் இரண்டரை மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்.

அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்படும் விதமே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என தெரிவித்தார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒழுங்கான விதத்தில் அமுல்படுத்தப்படாமையே மனித உரிமை நிலைவரம் மோசமடைய காரணம் என தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் புதிய யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு தயாராயில்லை.

மனித உரிமைகள் நிலைவரம் குறித்து விடுதலைப் புலிகள் விரக்தியடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகள், புதிய ஜனாதிபதிக்கு கால அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

காலம் செல்கிறது. எனினும், சிறிது வாய்ப்புள்ளது.

இந்த அவகாசத்தை பயன்படுத்துமாறு நாம் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளோம்.

மனித உரிமை நிலைவரத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளோம். மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தால், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பு இல்லாமல் போகலாம். உடனடி முன்னேற்றம் ஏற்படுவது அவசியம்.

கொலைகள் குறித்து எமது கவலையை வலியுறுத்தினோம். படுகொலைகள் குறித்து விசாரிக்க சுயாதீன குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடக்கும் கொலைகள் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை.

யாழ்ப்பாண கொலைகள் குறித்து ஆராய இருவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். கிழக்கு குறித்து ஆராயவும் இவ்வாறான குழுவை அமைக்கப் போவதாக தெரிவித்தார்.

இந்தக் குழுக்கள் மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம்.

சகல தரப்பினரும் சகலரையும் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும்.

சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக தமது பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு புலிகள் அழைப்பு விடுத்தனர்.

ஒட்டுமொத்த சூழ்நிலை மிக மோசமானதாக மிகவும் பலவீனமானதாக உள்ளது. இது குறித்து எமது கவலையை வெளியிட்டோம்.

அவசரமாக செயற்பட வேண்டியவை பற்றி மிக முக்கியமாக வலியுறுத்தினோம்.

அரசாங்கம் மிக தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

புதிய அரசாங்கங்களுக்கு எப்போதும் புதிய வாய்ப்பு கிடைப்பது வழமை.

மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு ஜனாதிபதியை கேட்டோம். வன்முறையை கட்டுப்படுத்துமாறு கேட்டோம். ஜனாதிபதி இதுவரை சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை.

படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது கடினமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மனித உரிமை அரசியல் விடயமாகிவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கு அவர்களுடைய கடப்பாட்டினை நினைவூட்டினோம். ஆயுத குழுக்கள் என்ற ரீதியில் அவர்களுக்கும் சர்வதேச கடப்பாடுகள் உள்ளன.

இருதரப்பிற்கும் தெளிவான கடப்பாடுகள் உள்ளன.

நோர்வேயின் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தமது அதிகாரங்கள் போதாது என தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி யுத்த நிறுத்த உடன்பாட்டை தொடர விரும்பும் அதேவேளை, மாற்றங்களையும் விரும்புகின்றார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் வரையறைக்குள் அதனை எவ்வாறு பலப்படுத்துவது என்பதே முக்கியமானது.

யுத்த நிறுத்த உடன்படிக்கை வலுவானது இல்லை என்கிறார் ஜனாதிபதி. விடுதலைப் புலிகள் அமுல்படுத்தும் விதமே முக்கியம் என்கின்றனர்.

மனித உரிமை துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த சகல தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொலைகளுக்கு யார் காரணம் என்பதில் மக்கள் மத்தியில் குழப்பம் காணப்படுகின்றது.

ஆயுதக் குழுக்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டு பகுதியில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலைகள் குறித்து விசாரிக்க சுயாதீன குழுக்களை அமைக்குமாறு ஜனாதிபதியை கேட்டுள்ளோம்.

கிழக்கில் இதுவரை 200 கொலைகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து விசாரணைகள் இடம்பெறவில்லை.

அரசாங்க அமைப்புகள் இந்த விடயத்தில் சிறப்பாக செயற்படவில்லை என்றார்.

தினகுரல்

Print this item

  .... இலங்கையிடம் இந்திய அரசு வலியுறுத்து
Posted by: Vaanampaadi - 12-06-2005, 12:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நோர்வேயிடம் அனுசரணையை தொடருமாறு இலங்கையிடம் இந்திய அரசு வலியுறுத்து

இனப்பிரச்சினைக்கான சமாதான நடவடிக்கைகளுக்கு நோர்வேயை தொடர்ந்து அனுசரணையாளராகப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நோர்வேயைத் தொடர்ந்தும் அனுசரணையாளராகப் பயன்படுத்துமாறு இந்திய அரசாங்கம் முறைப்படியாக விடுத்த வேண்டுகோளைத் தொடந்து இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் இறுதி முடி வெடுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் கடந்த வாரம் இந்தியாவிற்குச் சென்று நிலைமைகளை இந்திய அதிகாரிகளுக்கு விளக்கினார்.

சொல்ஹெய்மின் வருகையைத் தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு வேண்டுகோளை விடுத்ததாக அமைச்சரக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பில், எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ள பயணத்தின் பொழுது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

தினகுரல்

Print this item

  உடுக்கடித்து சாம்பராணி போட்டே
Posted by: Vaanampaadi - 12-06-2005, 12:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

உடுக்கடித்து சாம்பராணி போட்டே சந்திரிகாவை வெளியேற்ற வேண்டியிருந்ததாக கூறுகிறார் மேதானந்த தேரர்

ரணிலுக்கு பற்பாட்டு பாடியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்கிறார்

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பன்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து உடனடியாக வெளியேறுவேனென்று உறுதியளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவை ்உடுக்கடித்து சாம்பராணி புகைீீ போட்டுத்தான் வெளியேற்ற வேண்டிய நிலை உருவாகியது என்கிறார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான எல்லாவெல மேதானந்த தேரர்.

கொழும்பல் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

்இதனைத்தான் சொல்வது பதவி ஆசையென்றுீ, பதவி துறந்தவுடன் வெளியேறவில்லை சந்திரிகா, புகை போட்ட பன்னர் தான் சந்திரிகா வெளியேறினார்.

பதினொரு வருட காலங்கள் ஜனாதிபதி பதவி வகித்த சந்திரிகா என்ன செய்தார்? ரணிலின் சமாதான நாடகத்திற்குப் பன்னால் இருந்து கொண்டு பற்பாட்டுப் பாடினார். அதைவிடுத்து, எந்த நன்மையும் செய்யவில்லை. இங்கிலாந்தில் மாளிகைகள் வாங்கி சுகபோகம் அனுபவிப்பதற்கான செயற்பாடுகளையே மேற்கொண்டார்.

சட்டரீதியாக ஓய்வுபெறும் ஜனாதிபதிக்கு என்னென்ன சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டுமோ அதனை சந்திரிகாவுக்கு வழங்குவதை ஹெல உறுமய எதிர்க்கவில்லை. அதனையும் மீறி சலுகைகளை வழங்கினால் எதிர்ப்போம்.

குண்டு துளைக்காத 4 கார்கள் உட்பட 36 வாகனங்கள், 280 பாதுகாப்பு அதிகாரிகளென சுகபோக வாழ்க்கைக்கும் தான் அனுபவித்த வசதிகளை விட்டுக் கொடுக்க விருப்பம் இல்லாமல் சந்திரிகா அனைத்தையும் கேட்டுள்ளார்.

இதற்கான செலவை யார் ஏற்பது? பொது மக்களின் வரிப்பணத்திலேயே இது வழங்கப்படுகிறது. சட்டத்திற்கு மீறிய வசதிகள் வழங்குவதை நாம் எதிர்க்கின்றோமென்றும் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

தினகுரல்

Print this item

  இருபாலையில் கிளைமோர் தாக்குதல்
Posted by: sri - 12-06-2005, 12:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

¡ú þÕÀ¡¨Ä ¸ð¨¼ôÀ¢Ã¡Â¢ø ¸üÀ¸ Å¢¿¡Â¸¡; ¬ÄÂò¾¢üÌ «Õ¸¢ø þýÚ ¸¡¨Ä 10 Á½¢ÂÇÅ¢ø ‚Äí¸¡ þáÏÅò¾¢ý ¯Æç÷¾¢ Á£Ð §Áü¦¸¡ûÇôÀð¼ ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾Ģø ²Ø ‚Äí¸¡ À¨¼Â¢É÷ ¦¸¡øÄôÀðÎûǾ¡¸ «í¸¢ÕóÐ ¸¢¨¼ìÌõ ¦ºö¾¢¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.
¾¡ì̾Ģø º¢ì¸¢Â ¯Æç÷¾¢ à츢 Å£ºôÀðÎ ÓüÈ¡¸ ±Ã¢óÐûÇÐ. þ¾ý§À¡Ð ²Ø À¨¼Â¢É÷ ¦¸¡øÄôÀðÎûǾ¡¸ ¦¾Ã¢Å¢ì¸ôÀθ¢ÈÐ.

þ§¾§Å¨Ç ÌÈ¢ò¾ À̾¢Â¢ø ¨ÅòÐ ºÁ §¿Ãò¾¢ø Áü¦È¡Õ þáÏÅ Å¡¸Éò¾¢ý Á£Ðõ ¸¢¨Ç§Á¡÷ ¾¡ì̾ø ¿¼¡ò¾ôÀðÎûÇ §À¡Ðõ, Á¢â¨ÆÂ¢ø «Ð ¾ôÀ¢ Å¢ð¼Ð.

¾¡ì̾ø þ¼õ¦ÀüȨ¾ò ¦¾¡¼÷óÐ þáÏÅò¾¢Éáø ¸ñãÊò¾ÉÁ¡É ÐôÀ¡ì¸¢ô À¢Ã§Â¡¸õ ¦¾¡¼÷óÐ ¿£ñ¼ §¿Ãò¾¢üÌ §Áü¦¸¡ûÇôÀðÎûÇÐ. þ¾É¡ø Áì¸û «ÄÈ¢ÂÊòÐ µÊ À¡Ð¸¡ôÒ §¾Êì ¦¸¡ñ¼§À¡Ðõ, þáÏÅò¾¢Éáø À¢Êì¸ôÀðÎ ¸ÎÁ¡Â¸ò ¾¡ì¸ôÀðÎûÇÉ÷. þáÏÅò¾¢Éâý ¦À¡ÐÁì¸û Á£¾¡É ¾¡ì̾ø¸û ¾ü§À¡ÐŨà ¦¾¡¼÷ó¾ ¦¸¡ñÊÕ츢ÈÐ.

¾¡ì̾ø ¿¨¼¦ÀüÈ À̾¢Â¢ø ¾ü§À¡Ð §À¡÷ ¿¢Úò¾ ¸ñ¸¡½¢ôÒì ÌØÅ¢É÷ ¿¢¨Ä¨Á¸¨Ç ¸ñ¸¡½¢òÐ ÅÕ¸¢ýÈÉ.

¾¡ì̾ø ¦¾¡¼÷À¡É ¦ºö¾¢¸¨Çî §º¸Ã¢ì¸î ¦ºýÈ °¼¸Å¢ÂÄ¡Ç÷¸û Á£Ð þáÏÅ ÅýӨȸû ²Å¢ Å¢¼ôÀð¼Ð¼ý, ÌÈ¢ò¾ À̾¢ìÌû ±ó¾ °¼¸Å¢ÂÄ¡ÇÕõ «ÛÁ¾¢ì¸ôÀ¼Å¢ø¨Ä.

þ§¾§Å¨Ç ¾¡ì̾ø ¿¨¼¦ÀüÈ þ¼ò¾¢üÌ ¦ÅÌ ¦¾¡¨ÄÅ¢ø ¯ûÇ §¸¡ôÀ¡ö ºó¾¢Â¢ø ¨ÅòÐõ ¦À¡Ð Áì¸û ¾¡ì¸ôÀð¼Ð¼ý Ž¢¸ ¿¢¨ÄÂí¸û «¨Éò¨¾Ôõ ¾ÁÐ «Ã¡ƒ¸õ ãÄõ þáÏÅò¾¢É÷ ãÊÔûÇÉ÷.

சங்கதி

Print this item

  தயவுசெய்து தலயிடுங்கள்
Posted by: Vaanampaadi - 12-06-2005, 11:11 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

<b>Please Intervene</b>
http://www.lankabusinessonline.com/new_ful...scode=596487848

Print this item

  இலங்கை படைகள் தயாராம்
Posted by: Vaanampaadi - 12-06-2005, 11:06 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (27)

<b>Sri Lankan forces 'ready to meet rebel threats'</b>
http://www.breakingnews.ie/2005/12/06/story233646.html

Print this item

  யாழ்ப்பாண தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்
Posted by: Vaanampaadi - 12-06-2005, 08:03 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (6)

US condemns Jaffna attacks, urges parties to uphold CFA

[TamilNet, December 06, 2005 04:15 GMT]
US State Department Deputy Spokesman Adam Ereli in a statement issued on Monday called on the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam to take immediate action to prevent violence and to uphold the terms of the Ceasefire Agreement.
The following statement was issued by the United States Department of State in Washington, D.C. on December 5, 2005:

Sri Lanka - Violations of the Ceasefire Agreement


Statement by Adam Ereli, Deputy Spokesman

The United States remains gravely concerned about persistent violations of the Ceasefire Agreement, particularly over the past few weeks.

We condemn the December 4 Liberation Tigers of Tamil Eelam (LTTE) attack in Jaffna on a Sri Lanka Army vehicle that caused the deaths of seven soldiers. Such violence is inconsistent with LTTE claims to be committed to the peace process.

We call on both the Government of Sri Lanka and the LTTE to take immediate action to prevent violence and to uphold the terms of the Ceasefire Agreement.

Source: Tamilnet


<b>State Department condemns violence in Sri Lanka</b>
http://aolsvc.news.aol.com/news/article.ad...205182509990001

Print this item