| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 313 online users. » 0 Member(s) | 310 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,294
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,288
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,621
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,048
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,456
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,471
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,022
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தற்பாதுகாப்புத் தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு மகிந்த உத்தரவ |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 10:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தற்பாதுகாப்புத் தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவு
[வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2006, 04:33 ஈழம்] [ச.விமலராஜா]
சிறிலங்கா இராணுவத்தினர் தற்பாதுகாப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:
விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் போது தற்பாதுகாப்புக்காகத் தாக்குதலை நடத்தவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று நடக்கவும் இராணுவத்துக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் 80-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட நிலையிலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பிலும் பேச்சுக்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலையில் மாற்றமில்லை. நாம் யுத்த நிறுத்தத்தில் ஈடுபாட்டோடு இருக்கிறோம் என்று சர்வதேச சமூகத்துக்கு நிரூபித்து வருகிறோம். இதையே விடுதலைப் புலிகளும் மேற்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் போன்ற கெரில்லா அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு எல்லாம் அரசாங்கம் எதிர்வினையாற்றாது. நாங்கள் பொறுமையாக இருந்ததன் விலையாக அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் விடுதலைப் புலிகளை எச்சரித்துள்ளன. அண்மையில் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான மகிந்த ராஜபக்சவின் சந்திப்பின் போதுகூட அரசாங்கத்தின் பொறுமையை அவர்கள் பாராட்டினார்கள்.
நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் எதிர்த்த போதும் நாம் வரவேற்கிறோம். கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவருடனான அவரது சந்திப்புக்குப் பின்னர் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கக் கூடும் என்று நம்புகிறோம்.
தென்னிலங்கை கட்சிகளின் இணக்கப்பாடு என்பதில் அனைத்துக் கட்சிகளும் போரை விரும்பவில்லை என்பதுதான் தற்போதைய முன்னேற்றக்கரமான நிலைமை என்றார் நிமல் சிறிபால டி சில்வா.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாகவும் வவுனியாத் தாக்குதலைக் கண்டித்து உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
puthinam
|
|
|
| ஒளிப்பதிவு செய்த பி.பி.சி. செய்தியாளருக்கு காடையர் மிரட்டல் |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 10:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>திருமலை நிலவரத்தை ஒளிப்பதிவு செய்த பி.பி.சி. செய்தியாளருக்கு காடையர் மிரட்டல்</b>
திருகோணமலையின் தற்போதைய நிலவரத்தை வீடியோ படமெடுத்த பி.பி.சி. செய்தியாளர்கள் காடையர்களினால் நேற்று வியாழக்கிழமை கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
உப்புவெளி சந்தியில் வைத்தே நேற்றுக் காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான விவரணச் சித்திரமொன்றை தயாரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக திருகோணமலையில் தகவல் சேகரிக்க சென்றிருக்கும் பி.பி.சி. செய்தியாளர்கள் அப்பகுதி ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்திருக்கும் நிலையில், சிங்கள அமைப்பொன்றும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதால் திருகோணமலை பகுதிகளில் நடைமுறை சூழ்நிலைகளை வீடியோ படமெடுக்க சென்றுள்ளனர்.
இவர்கள் முதலில் உப்புவெளியில் இருந்து திருகோணலை - கொழும்பு பிரதான வீதியில் வானில் இருந்தவாறே படமெடுத்து சென்று கொண்டிருக்கையில், பின்னாலேயே மோட்டார் சைக்கிளொன்றில் துரத்தி வந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவர் அநுராதபுர சந்தியில் வைத்து இவர்களை யாரென்று கேட்டுள்ளார்.
இதன் போது தாங்கள் ஊடகவியலாளர்களென பலமுறை எடுத்துக் கூறியும் குறித்த நபர் மீண்டும் மீண்டும் யாரென்று வற்புறுத்தியுள்ளதுடன் அடையாள அட்டையை தருமாறு கேட்டுள்ளார். எனினும் வானில் இருந்த ஒருவர் அவரிடம் கொடுக்காது அடையாள அட்டையை கண்ணாடி வழியாக காண்பித்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சரியென கூறிவிட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் பி.பி.சி. ஊடகவியலாளர்கள் மீண்டும் உப்புவெளியை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் உப்புவெளி சந்தியில் வைத்து சுமார் 50 பேர் கொண்ட காடையர் குழுவொன்று இவர்கள் சென்ற வானை மறித்துள்ளது.
வானைச் சுற்றி வளைத்த காடையர்கள் உள்ளிருந்த ஊடகவியலாளர்களை கீழிறங்கும் படி வற்புறுத்தியுள்ளதுடன், படமெடுத்ததை தங்களுக்கு காண்பிக்குமாறும் இல்லாவிட்டால் வானை செல்ல அனுமதிக்க முடியாதெனவும் மிரட்டியுள்ளனர்.
எனினும், வானில் இருந்து இறங்க மறுத்த ஊடகவியலாளர்கள் வான் கதவையும் தாழ்ப்பாள் இட்டுள்ளனர்.
இதனையடுத்து, அடிப்போமென மிரட்டியிருக்கும் காடையர்கள், வானின் சாவியையும் பறித்தெடுத்ததோடு, பிடித்த வீடியோ படத்தை தங்களுக்கு போட்டு காண்பிக்குமாறு தொடர்ந்து பலவந்தப்படுத்தியுள்ளனர்.
இச் சந்தர்ப்பத்தில் மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களும், அதே நிறுவனத்தின் உள்நாட்டு பெண் ஊடகவியலாளர் ஒருவரும், வான் சாரதியும் மட்டுமே வானில் இருந்துள்ளனர். இதில் வான் சாரதி சிங்களவர் என்பதோடு, குறித்த பெண் ஊடகவியலாளர் சிங்களம் பேசக் கூடிய தமிழராவார்.
இந்த சூழ்நிலையில், மொத்தமாக ஐவர் மட்டுமே வானில் இருந்ததால் எதுவும் செய்ய முடியாமல், வீடியோ படத்தை போட்டுக் காண்பிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்த ஆங்கிலம் தெரிந்த ஒருவரை மட்டும் வானிற்குள் அழைத்து தாங்கள் எடுத்த வீடியோ படங்களை பி.பி.சி. ஊடகவியலாளர்கள் போட்டுக் காண்பித்துள்ளனர்.
இதன் போது, தங்கள் வானை மறித்ததை படம்பிடிக்கப் பட்டிருக்கும் பகுதியை அழித்து விடுமாறு காடையர்கள் மிரட்டியுள்ளனர். அதற்கும் ஊடகவியலாளர்கள் சம்மதம் தெரிவித்து செயற்பட்டுள்ளனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இடம் பெற்ற இந்த மிரட்டல் நாடகத்தை பொலிஸாரும் படையினரும் அவதானித்துக் கொண்டிருந்த போதும் அவர்கள் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஊடகவியலாளர் தாங்கள் வெளிநாட்டு ஊடகத்தைச் சேர்ந்தவர்களென சிங்களத்தில் எடுத்துக் கூறியும் ஏனைய பல வழிகளிலும் தங்களை அடையாளம் காண்பித்த போதும் காடையர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு இறுதியில் மன்னிப்புக் கோரி செல்ல அனுமதித்துள்ளனர்.
இதேவேளை, அங்கிருந்த அனைத்து நபர்களின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இருந்ததெனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, திருகோணமலை நகரில் இருக்கும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலைக்கருகிலுள்ள பிரதேசங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அதே பி.பி.சி. ஊடகவியலாளர்களை அங்கிருந்த சில சிங்களவர்கள் படமெடுக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர்.
தாங்கள் புத்தர் சிலையை படமெடுக்கவில்லையென ஊடகவியலாளர்கள் எடுத்துக் கூறிய போது, உடனடியாக இங்கிருந்து அகன்று செல்ல வில்லையெனின் என்ன நடக்குமென தெரியாதெனவும் கடுமையாக மிரட்டியுள்ளனர்.
http://www.thinakural.com/New%20web%20site...Important-8.htm
|
|
|
| ஈழத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அமெரிக்க இராணுவ உதவியையும் |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 10:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ஈழத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அமெரிக்க இராணுவ உதவியையும் எதிர்க்க வேண்டும்
சோஷலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ்
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
ஈழத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அமெரிக்காவின் இராணுவ ரீதியான உதவியினையும் எதிர்க்க முன்வர வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள வர்த்தக சமூகத்தினர் மத்தியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்ரட் ஆற்றிய உரை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அமெரிக்கத் தூதுவரின் கருத்தானது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களையும் புண்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்று திரும்பியதையடுத்தே இக் கருத்து அமெரிக்கத் தூதுவரினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சரான கொண்டலீஸா ரைஸ் கூட இவ்வாறான ஒரு கருத்தினை தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரின் கருத்து அச்சுறுத்தல் மிக்கதொன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
அமெரிக்காவினைப பற்றிய எதிர்ப்பு உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படுகிறது. இலங்கையர்களும் பகைமை உணர்வுடனே அமெரிக்காவை நோக்குகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் இராணுவ ரீதியான உதவிகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
ஈராக்கில் உயிரியல் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி படையெடுத்த அமெரிக்கா இன்று பயங்கரவாதிகளென்ற போர்வையில் அப்பாவி ஈராக்கியர்களை கொன்று குவித்து வருவதுடன், அதன் பார்வை தற்போது ஈரான் மீதும் திரும்பியுள்ளது.
இலங்கையிலும் பயங்கரவாதப் பிரச்சினையெனக் கூறி இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முயல்கிறது. இவ்வாயுதங்கள் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கவே உதவும்.
உலகம் பூராகவும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கருதும் அமெரிக்காவின் நவீன காலனித்துவ சிந்தனையானது இலங்கைக்கு நீண்டகால மற்றும் குறுகியகால பாதகங்களையே ஏற்படுத்தப் போகிறது.
எனவே, அமெரிக்காவின் இராணுவ உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சிந்திக்க வேண்டிய கட்டாயமுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க உறவு குறித்து அன்று வினாவெழுப்பிய இன்றைய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து எவ்வாறு இராணுவ ரீதியான உதவிகளைப் பெறமுடியும்?
தமிழர்கள் இந்நாட்டில் சலக உரிமைகளும் பெற்று வாழ உரித்துடையவர்கள். இவர்களின் உரிமையினை இராணுவ ரீதியாக அடக்க முயலுவது கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் என்றார்.
http://www.thinakural.com/New%20web%20site...3/Article-4.htm
|
|
|
| எல்லாளன் படை எச்சரிக்கை |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 10:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு எல்லாளன் படை எச்சரிக்கை
யாழ் குடாநாட்டில் படையினருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை எல்லாளன் படை வெளியிட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் படையினரின் கைக்கூலிகளாகவும் அடிவருடிகளாகவும் இருந்து தொடர்ந்து செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களே எல்லாளன் படை என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
படையினருடன் உறவைப் பேணுவோர், உளவு சொல்வோர், படையினர் வழங்கும் ஆபாச இறுவெட்டுகளை இளைஞர்களுக்கு விநியோகிப்போர். இராணுவத்தின் அப்பக் கடைகளில் காலம் கழிப்போர், பெண்களை படையினருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போர் மற்றும் படையினரின் துணையுடன் களவு, வீடுகள் உடைப்பு, கால்நடைகள், மண்கடத்தலில் ஈடுபடுவோர், கசிப்பு காய்ச்சுவோர் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகள் இனங்காணப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களிலேயே தம்மால் தண்டனை வழங்கப்படுமென்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thinakural
|
|
|
| மூவரின் மரணங்களுக்கு மக்கள் படை உரிமை கோரியது |
|
Posted by: Vaanampaadi - 01-13-2006, 10:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>பெண் உட்பட மூவரின் மரணங்களுக்கு
மக்கள் படை உரிமை கோரியது </b>
குடாநாட்டில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேரின் மரணங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது.
பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் <b>சின்னராசா இராசையா,</b> திரு நெல்வேலியில் <b>பஞ்சரத்தினம் பிரணவன்,</b> மட்டுவில் சமுர்த்தி உத்தியோகத்தர் <b>கணபதிப்பிள்ளை பவளராணி</b> ஆகியோரின் கொலைகளுக்குத் தாமே பொறுப்பு என்று பொங்கி எழும் மக்கள் படையின் பெயரில் தெரிவிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட மூவரும் இராணுவப் புலனாய்வாளர் மற்றும் ஒட்டுக் குழுக் களின் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும் அதற்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
http://www.uthayan.com/pages/news/today/20.htm
|
|
|
| கோப்பாயில் இராணுவம் மீது தாக்குதல் |
|
Posted by: mayooran - 01-13-2006, 08:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கோப்பாய்ப் பகுதியில் சற்று முன் இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் அதில் இராணுவத்திற்கு இழப்புகள் ஏற்பட்டதாகவும் இத்தாக்குதலை அடுத்து பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை பருத்தித்துறையிலும் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றதாக உர்ஜிதப்படுத்ததப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
| வெங்காய வேதனை |
|
Posted by: vengaayam - 01-13-2006, 08:32 AM - Forum: அறிமுகம்
- Replies (64)
|
 |
<b>±ýÉ¡÷ ±ý ¯ÄÌ ±ý ¿¡ð¼¡÷ þÄÌ
±í§¸¡÷ «Èõ ¯ñÎ ±ýÀ¡Î ¾¢ñ¼¡Î
þýÉ¡÷ þÅ÷ ¡§Ã¡ ±ýÈ¡÷ ¸ÄíÌ
þøÓý ¡Ûõ þ¨¼Â¢ø '¾¨¼' þÊÀ¡Î</b>
|
|
|
| மாங்காய் சம்பல் |
|
Posted by: தூயா - 01-13-2006, 07:58 AM - Forum: சமையல்
- Replies (45)
|
 |
[size=14]மாங்காய் சம்பல்
எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்...
தேவையானது:
மாங்காய்
மிளகாய் தூள்
உப்பு
வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை)
மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்)
1. மாங்காயை சின்னனா வெட்டுங்க.
2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க
3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும்.
பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம்.
நன்றி
சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..
|
|
|
| சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு |
|
Posted by: Snegethy - 01-13-2006, 07:29 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (26)
|
 |
<span style='color:brown'>சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு
[size=14]
Hi Sumi
Hi Miss
How are you today?
…
Did you do your homework?
…
Sumi are you okay?
my mom said that she wont pick me up today.
Y did she say that?
Because I forgot to do my piano homework so my piano teacher complained about me.
Oh why didn't you do your home work?
Because I forgot it.
And my mom said that I have to sleep in the garage today.
Hmm ok sumi don't cry I'll let you play flipwords today okay.
Can I go on the internet...can you open www.whatsherface.com for me?
என்னட்ட படிக்க வாறவா சுமி.அந்தப்பிள்ளை பியானோ, Swimming, Computer Math , Dance எண்டு ஆயிரத்தெட்டு வகுப்புக்கு போறது.நான் நினைக்கிறன் அதுக்கு விளையாடவே நேரம் கிடைக்காதெண்டு.சின்ன பிள்ளையளால எவ்வளவு நேரம்தான் இப்பிடி தொடர்ந்து படிக்க முடியும்.சின்ன வயசிலேயே வெறுப்புத்தான் வளரும்.சின்ன வயசில படிச்சா நல்லம்தான் அதுக்காக அதுகளைப்போட்டு பிச்சு எடுக்கக்கூடாது. இப்பிடி நிறைய வகுப்புக்களுக்குப் போற பிள்ளையளிடம் நான் அடிக்கடி கோபத்தைப் பார்த்திருக்கிறன்.
என்னையெல்லாம் எங்கட வீட்டில ஒருநாளும் புத்தகத்தை எடுத்துப்படி என்று சொன்னது கிடையாது அதுக்காக நான் படிக்காம இருந்ததில்லை.அவர்களாக ஊக்கம் எடுத்து ஆர்வத்தோட எதையும் செய்தால்தான் அவர்களின் திறமை வெளிப்படும் அதைவிட்டிட்டு அகப்பக்காம்பு வச்சு இடிச்சு சாப்பாடு தீத்தினா சத்திதான் வரும் புத்தி வளராது.
.</span>
|
|
|
|