ஊர்ப்புதினம்

இலங்கை பொறுப்புக்கூறுவதற்காக ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

3 months ago

அனுரகுமார அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை - பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Published By: RAJEEBAN

12 JUN, 2025 | 11:52 AM

image

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டுழியங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கை குறித்த நீண்டகால கரிசனைகளை புறக்கணிக்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜேர்மனிக்கான இயக்குநர் பிலிப்ப்ரிஷ் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் ஜேர்மனியிலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் அதிகாரத்தில் உள்ளனர், ஆனால் இலங்கை ஜனாதிபதியை ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மேர்ஸ் சந்திக்கும்போது எழுப்பவேண்டிய கரிசனைகள் நீண்டகாலத்தவை என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

hrw_german.jpg

இலங்கை அரசாங்கமும் தமிழீழ பிரிவினைவாத விடுதலைப்புலிகளும் 1983 முதல் 2009 வரை இலங்கையில் ஒரு கொடுரமான உள்நாட்டு போரில் ஈடுபட்டனர், அதில் இருதரப்பினரும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட பரவலான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக யுத்தத்தின் இறுதிமாதங்களில் அரசபடையினர் பொதுமக்கள் மீதுதாக்குதலை மேற்கொண்டனர், போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை பலவந்தமாக காணாமலாக்கினர்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்,

பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிறுவியுள்ளது.

ஆனால் திசநாயக்க அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை, முன்னைய அரசாங்கங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பாதுகாத்தன, பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தன.

இலங்கையர்களை ஒன்றிணைத்து பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும்நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள போதிலும் தொடரும் மனித உரிமை மீறல்களிற்கு அவரது அரசாங்கம் தீர்வை காணவில்லை, கடந்த கால அநீதிகளிற்கு நீதி வழங்குவதை நோக்கி முன்னேறவில்லை.

இலங்கை அரசாங்க நிறுவனங்கள் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடுகளை காட்டிவருகின்றன, பலகாரணங்களை முன்வைத்து நிலங்களை அபகரிக்கின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் போக்கு பௌத்தமதகுருமாரும் பாதுகாப்பு படையினரும் பல இந்து ஆலயங்களை கைப்பற்றி அவற்றை பௌத்த ஆலயங்களாக மாற்றியுள்ளனர்.

2017 முதல் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடைந்துள்ளது. 27 மனித உரிமை தொழிலாளர் உரிமை சூழல் பாதுகாப்பு பிரகடனங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வரிச்சலுகை வழங்கப்படுகின்றது.

இலங்கை இந்த விடயத்தில் இன்னமும் பேரம் பேசுவதில் தோல்வியடைந்து வருகின்றது.

ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டம், இது ஒரு மோசமான துஸ்பிரயோக சட்டமாகும், இது நீண்டகாலமாக சித்திரவதை மற்றும் தடுப்புக்காவலிற்கு காரணமாக விளங்குகின்றது. இது பெரும்பாலும் தமிழர்கள், முஸ்லீம்களை இலக்குவைக்கின்றது..

தேர்தலிற்கு முன்னர் அனுரகுமாரதிசநாயக்க இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தார். 2017 முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இவ்வாறான வாக்குறுதியை வழங்கிவந்துள்ளனர்.

இதேவேளை எந்த வித ஆதாரமும் இன்றி பொதுமக்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கு திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துகின்றது.

ஐக்கியநாடுகளில் இலங்கை குறித்த தீர்மான விடயத்தில் ஜேர்மனி முன்னர் தலைமை வகித்தது எனினும் 2020 ஆண்டிற்கு பின்னர் இதிலிருந்து பின்வாங்கியுள்ளது.

பொறுப்புக்கூறலிற்கான அழுத்தத்தை பேணவும், ஆதாரங்களை சேகரிப்பதை உறுதி செய்யவும், இலங்கை குறித்த தீர்மானம் இந்த ஆண்டின் இறுதியில் புதுப்பிக்கப்படுவது அவசியம்.

ஐநா முயற்சிகள் மற்றும் ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திசநாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை சீர்திருத்தங்களிற்கான தனது உறுதிமொழிகள் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜேர்மன் சான்சிலர் வலியுத்த வேண்டும், இதுபோன்ற வாய்ப்புகளை தவறவிடக்கூடாது.

https://www.virakesari.lk/article/217245

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

3 months ago

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

June 12, 2025 10:49 am

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நேற்று புதன் கிழமை (11.06.2025) இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதை கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3-2.jpg4.jpg

https://oruvan.com/a-buddhist-temple-shaped-structure-suddenly-created-in-the-mulliyawalai-area/

கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு

3 months ago

படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் இடம்பெற்றது.

1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ்  உயரதிகாரிகள், பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmbswlflj01qzqpbsxxezh4a0

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல்

3 months ago

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல்

வடக்கு

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த இரு மனுக்களும் இன்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விபரத்தை எடுத்துரைப்பார். 

சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உற...
No image previewஅகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மன...
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்க...

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்!

3 months ago

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்!

301639556.jpeg

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்தும், புற்றுநோய்ப் பிரிவை வினைத்திறனாக இயங்குவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு கோரியும் நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித் துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:-
தெல்லிப்பழை மண்ணின் புகழ்பூத்த தெல்லிப்பழை மருத்துவமனை போர் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்டபோதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையாகக் காணப்படுகின்றது. அத்துடன், விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றிவருகின்றது. 

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற மருத்துவமனை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மருத்துவமனையில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன், மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவு இயங்குவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டுவருகின்றன.

எனவே, இந்த நிர்வாகப் பிறழ்வுகளுக்கு எதிராகக்காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மருத்துவமனையின் வினைத் திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட் வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்வரும் நாளை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம் - என்றுள்ளது. 

https://newuthayan.com/article/தெல்லிப்பழை_ஆதார_மருத்துவமனையில்__நிர்வாக_முறைகேட்டைக்_கண்டித்து_மருத்துவர்கள்_நாளை_போராட்டம்!#google_vignette

இரு கொவிட் மரணங்கள் பதிவு : சுகாதாரப் பிரிவு வெளியிட்ட தகவல்!

3 months ago

12 JUN, 2025 | 09:58 AM

image

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில்,

“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.

இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன. அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/217225

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் : கைதான இராணுவப் புலனாய்வாளர் ஷம்மிக்கு விளக்கமறியல்

3 months ago

12 JUN, 2025 | 09:26 AM

image

(நமது நிருபர்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வழக்குடன் தொடர்புபட்டதாக ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளடங்கலாக 10 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்ற ட்ரயல் அட்பாரில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பலர் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ புலனாய்வுப்பிரிவில் பணியாற்றியவர்களாவர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பிரதான சாட்சியாளரான சுரேஷ்குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன அச்சுறுத்தியதாக சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் விசாரணைப்பிரிவின் தலைவர் நேற்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

ஷம்மி குமாரரத்னவின் தனிப்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பலமுறை சுரேஷ்குமார் அச்சுறுத்தப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் விடயங்களைப் பரிசீலித்த திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஷம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/217221

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை!

3 months ago

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை!

adminJune 12, 2025

65-1.jpg?fit=1170%2C940&ssl=1

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான  உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை (11.06.25) மாவட்ட செயலகத்தில்  வைத்து  வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா 90 ஆயிரம் ரூபாய்
வீதம் வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய ஆறு பேருக்கு கொடுப்பனவு  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/216677/

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு!

3 months ago

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு!

adminJune 12, 2025

3-scaled.jpg?fit=1170%2C557&ssl=1

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே இவ்நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

https://globaltamilnews.net/2025/216681/

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்!

3 months ago

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்!

இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது!

adminJune 12, 2025

0-1-1.jpg?fit=1170%2C786&ssl=1

மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உங்களுக்கு சிறிய வீடு அமைக்க நாம் உதவுகின்றோம். அதைப் பெரிய வீடாக மாற்றுவது உங்களின் திறமையில்தான் தங்கியிருக்கின்றது.

அதைப்போல எதிர்வரும் மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலாளர்,

எவ்வளவோ பேர் வீடுகள் தேவையுடையதாக இருக்கத்தக்கதாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விரைவாக வீடுகளைக்கட்டி குடியமரவேண்டும் என்றார்.வீடுகளைக் கட்டுவதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதுடன், வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை காலநேரத்துடன் கொள்வனவு செய்யுமாறும்  பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார்.

இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது

  இலங்கையில், வடமாகாணத்திலையே வீட்டு திட்டத்திற்காக அதிக தொகையாக 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளமையால் வீட்டுத் திருத்தத்துக்காக 238 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.

வடக்கில் உள்ள உங்களுக்கு தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இந்தளவு நிதி வழங்கப்படுவதில்லை. நாம் முதல் முறையாக அதிகளவு நிதியை வீட்டுத் திட்டத்துக்கு வழங்கியுள்ளோம்.

 இதை நடைமுறைப்படுத்த உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். அதைப்போல வீடுகளை கட்டி முடித்த பின்னர் நீங்கள் அதில் வாழவேண்டும் என தெரிவித்தார்

https://globaltamilnews.net/2025/216689/

சிங்கள பௌத்த நாடு என்ற நம்பிக்கையே மத ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியுள்ளன - தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணையின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு

3 months ago

11 JUN, 2025 | 07:40 PM

image

(நா.தனுஜா)

'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அது மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'அச்சத்திலிருந்து வன்முறைக்கு: இலங்கையில் இடம்பெற்ற மத அடிப்படையிலான தாக்குதல்கள்' எனும் தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நாட்டில் பதிவான மத அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் இன மற்றும் மத ரீதியிலான வன்முறைகள் தொடர்வதற்கு தனியுரிமை மனநிலை (சகல வசதிகள், சலுகைகள், உரிமைகளை அனுபவிப்பதற்கான உரித்து தனக்கே உண்டு எனும் பக்கச்சார்பான மனநிலை) மற்றும் மக்கள் மத்தியில் தொடரும் அச்சம் ஆகிய இரண்டுமே பிரதான காரணமாக இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது 'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அதுவே பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இதுபோன்ற தனியுரிமை மனநிலை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்கர்கள் மத்தியிலும் நிலவக்கூடும் எனவும், வட, கிழக்கு மாகாணங்களில் இந்துக்களை முன்னிலைப்படுத்தும் சிவசேனை போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இத்தகைய தனியுரிமை மனநிலை ஆழமான அச்சத்தை விதைப்பதுடன், அது மதரீதியிலான ஒடுக்குமுறைகள் மற்றும் கலவரங்களுக்கு வழிகோலுகின்றது. குறிப்பாக ஏனைய இன, மத சமூகங்களின் செயற்பாடுகளின் விளைவாக தமது இன, மத அடையாளர்கள் தேசிய ரீதியில் அழிவடைந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் சில சமூகங்கள் மத்தியில் உண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை உயர்வு மற்றும் பொருளாதாரத்தில் மேலோங்கிவரும் அவர்களது ஆதிக்கம், கிறிஸ்தவ மதமாற்றம் மற்றும் தமிழர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியைக் கோரல் என்பன மேற்குறிப்பிட்டவாறு மாற்று இன, மத சமூகங்கள் மத்தியில் தத்தமது அடையாளம் தொடர்பிலான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன' என மத அடிப்படையிலான தாக்குதல்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்தவொரு நபரினதோ அல்லது குழுவினதோ மத அடையாளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவகையிலோ அல்லது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளக்கூடியவாறோ 2023 நவம்பர் தொடக்கம் 2024 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் என்பன இவ்வறிக்கையில் ஆழமான சட்டப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி இக்காலப்பகுதியில் அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவுக்குப் புறம்பாக மத அடையாளத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்களும், அரசியலமைப்பின் 10 மற்றும் 14(1)(ஏ) பிரிவுகளுக்குப் புறம்பாக விரும்பிய மதம் அல்லது நம்பிக்கையைப் பிற்பற்றும் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் சம்பவங்களும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

அவற்றில் அநேகமானவை கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலங்களைப் பதிவுசெய்தல் தொடர்பானவையும், முஸ்லிம்களின் ஆடைகள் சார்ந்தவையும், இந்துக்களின் மத நிகழ்வுகளின்போது அவற்றுக்கு இடையூறு விளைவித்தல், அச்சுறுத்தல் விடுத்தல் என்பனவுமாகும்.

மேலும் பெரும்பாலான மத ரீதியிலான அடக்குமுறைச் சம்பவங்களின்போது அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தவறியுள்ளமை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை குறித்தும் இவ்வறிக்கையில் அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் அரச கட்டமைப்புக்களுக்குள் வேரூன்றியிருக்கும் பேரினவாதம் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/217210

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர் டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ; நான்கு முக்கிய நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்ப உதவிகள்

3 months ago

11 JUN, 2025 | 07:24 PM

image

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலகளாவிய மாற்றத்துக்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய அரசாங்கத்தினது திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயற்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மாற்றத்துக்கான இந்த களப் பயணத்தின்போது, ஒவ்வோர் அமைச்சுக்கும் சென்று திட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், செயற்றிட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, டோனி பிளேயர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் ஆலோசனைப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜலீல் ரஷீத், ஆசிய பசுபிக் பணிக்குழாமின் அரசதுறை இணைப்புத் தலைவர் எனா ஏடின், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் (கமத்தொழில் தொழில்நுட்பம் ) பீ.எம்.வீ.எஸ் பஸ்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக கீகியனகே, இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் / பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.08_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.08_PM_

WhatsApp_Image_2025-06-11_at_6.14.07_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.06_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.06_PM_

WhatsApp_Image_2025-06-11_at_6.14.05_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.05_PM_

WhatsApp_Image_2025-06-11_at_6.14.04_PM_

https://www.virakesari.lk/article/217206

சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

3 months ago

தற்போதைய சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்; பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

11 JUN, 2025 | 06:07 PM

image

தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சிறுவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்துக்காக இன்று (11) காலை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது.

ஊட்டச்சத்து விடயத்தில் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல. மாறாக பல அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம்.

இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் 'காய்கறிகள் மற்றும் பழங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ் நான்கு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டு சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமும் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், ஒரு வகை கீரை மற்றும் இரண்டு வகையான பழங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கிய விடயமாகும்.

முடிந்தவரையில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தெரிவு செய்தல் என்பன முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன என்றார்.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, யுனிசெஃப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு, அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/217204

கல்மடுக்குளத்தையும் அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவியுங்கள் - வனவளத் திணைக்களத்திடம் ரவிகரன் வலியுறுத்து

3 months ago

11 JUN, 2025 | 06:23 PM

image

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கல்மடுக்குளத்தையும், அதன் கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தமிழ் மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்த இடங்களை வனப்பகுதியாகக் கருதி, வனவளத் திணைக்களம் ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கும் ரவிகரன் வன்மையாக கண்டனம் தெரிவித்தார்.

இவ்வருடத்திற்கான இரண்டாவது வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ரவிகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்மடுக்குளம் என்றொரு குளம் இருப்பின், அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல்காணிகள் கட்டாயம் இருந்திருக்கும். எனவே, அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இவ்வாறிருக்கும்போது வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய வயல்காணிகளை பகிர்ந்தளிக்க முடியாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென ரவிகரன் கூறினார்.

அதற்கு வனவளத் திணைக்கள அதிகாரி பதிலளிக்கையில்,

கல்மடுக்குளம் என வனவளத் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசம் நடுக்காட்டுக்குள், ஐந்து கிலோமீற்றர் தூரத்திலேயே காணப்படுகிறது. அந்த வகையில் அக்குளம் நடுக்காட்டுக்குள் காணப்படுவதால், அது வனமாக பாதுகாக்கப்படும் காரணத்தினால், அதனை விடுவித்துக் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்தார்.

download__5_.jpg

வனவளத் திணைக்கள அதிகாரியின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த ரவிகரன், கடந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த பகுதியில் குடியிருந்த, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இவ்வாறு இடம்பெயர்வைச் சந்தித்த மக்கள், அவர்களுடைய பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்படாத நிலை காணப்படுகிறது. அத்தோடு, அவர்கள் விவசாய நடவடிக்கைக்காகப் பயன்படுத்திய குளங்களும், குளங்களுக்குக் கீழான வயல்நிலங்களும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளன.

இந்நிலையில், மக்கள் குடியிருந்த மற்றும் விவசாய நடவடிக்கைக்குப் பயன்படுத்திய நிலங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன.

மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்திய குளமும் வயற்காணிகளும் நீண்டகாலமாக பயன்படுத்தாத நிலையில் பற்றைக்காடுகளாக காணப்படும்போது, அப்பகுதியை வனப்பகுதி எனக் கூறிக்கொண்டு வனவளத் திணைக்களம், அப்பகுதியை விடுவிக்காமல் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வைத்திருப்பது நியாயமற்ற செயற்பாடு.

கல்மடுக்குளம் என்ற பகுதியில் மக்களால் முன்பு விவசாயம் செய்யப்பட்டமையினால்தான் தற்போதும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இக்குளம் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன.

எனவே, அந்த காணிகளை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைவிடுத்து இவ்வாறாக திணைக்களங்கள் மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரித்து வைத்திருந்தால் மக்கள் எங்கே செல்வார்கள்?

கடந்த காலங்களில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி என பாரியளவில் மக்களால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, நெல் வடக்கிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த வரலாறுகளே காணப்படுகின்றன.

இவ்வாறு மக்களால் நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான காணிகளை அரச திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையே தற்போதுள்ளது.

இந்த விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும்.

அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை கல்மடுக்குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களின் தரவுகளையும், அங்கு ஏற்கனவே மக்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் சமர்ப்பிக்குமாறு கமநல அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தரிடம் ரவிகரன் இதன்போது அறிவுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/217198

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை - பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி!

3 months ago

11 JUN, 2025 | 04:01 PM

image

பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு, நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

download__2_.jpg

மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று காலை உடையார் கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
download.jpg

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.

அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில், சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.

அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது, மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

download__3_.jpg

https://www.virakesari.lk/article/217176

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months ago

ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார்

11 JUN, 2025 | 03:06 PM

image

ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/217167

தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்!

3 months ago

11 Jun, 2025 | 11:54 AM

image

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொனண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். 

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையில் பொசன் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றுள்ளது.

இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞன் ஒருவன், கடந்த திங்கட்கிழமை (09) தென்னிலங்கையில் இருந்து தையிட்டி விகாரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது இந்த இளைஞன்விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். 

அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால் இளைஞனை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இளைஞனின் உடைமையில் இருந்து கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரைக்குள் வழிபட சென்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 

தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்! | Virakesari.lk

தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை

3 months ago

11 Jun, 2025 | 03:29 PM

image

நாட்டுக்கு தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 21,293 என  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில்,

இந்தியாவிலிருந்து 6,014 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.  இது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.2 சதவீதம் ஆகும். 

அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 1,884 பேரும், சீனாவிலிருந்து 1,277 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,173 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,051,096 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 210,074 பேர் இந்தியாவிலிருந்தும், 110,818 பேர் ரஷ்யாவிலிருந்தும், 98,158 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை  தந்துள்ளனர். 

அத்துடன்,  மே மாதத்தில் மாத்திரம் 132,919  பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.5 சதவீதமாகும். 

தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை | Virakesari.lk

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து

3 months ago

11 Jun, 2025 | 05:11 PM

image

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர்.

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk

யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் !

3 months ago

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன் எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். 

54__3_.jpg

இதேவேளை, இலங்கை தலைநகர் கொழும்பிலில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த  போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

54__1_.jpg

54__2_.jpg


யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் ! | Virakesari.lk

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr