ஊர்ப்புதினம்

இலங்கையில் 10 சத வீதமான ஆண்களும் குடும்ப வன்முறையால் பாதிப்பு : முறைப்பாடு வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   14 DEC, 2023 | 11:10 AM

image

குடும்ப வன்முறைகளை முறைப்பாடு செய்வதற்கு   'மிது பியச' பிரிவில்  24 மணி நேரமும் செயற்படக் கூடியதான  தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு  அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நாட்டில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மாப்பிட்டிகம தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/171683

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

3 months 2 weeks ago
ramba-4.jpg?resize=750,375&ssl=1 யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும்  ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியினால்  யாழில்  நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நொதேர்ன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் பிரபல  தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ramba-4.jpg?resize=600,338&ssl=1

ramba-2.jpg?resize=600,338&ssl=1#

ramba-1.jpg?resize=600,338&ssl=1

https://athavannews.com/2023/1363112

யாழில் விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா

3 months 2 weeks ago
யாழில் விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா
adminDecember 13, 2023
IMG-20231213-WA0058.jpg?fit=1170%2C685&s

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் ஆளுநரை இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் நிரான் மல்லவராச்சி, வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், தொல்பொருளியல் திணைக்களத்தின் யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பிராந்திய அலுவலகத்தின் அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்குரிய திட்டங்கள், அதற்கு தேவையான வளப்பகிர்வு, இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள், இசைநிகழ்ச்சி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்காக எரிவாயு விசையாழி விமான இயந்திரங்களை வழங்கவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் உதவிகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள 73 பாடசாலைகளை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 73,000 தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படையின் படைத்தளபதி, ஆளுநரிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மருத்துவ முகாம், பற்சிகிச்சை முகாம், கண் சிகிச்சை முகாம், இலவச கண்ணாடிகளை வழங்குதல், இரத்ததான முகாம் நடத்துதல், 73 ஆயிரம் மரக்கன்றுகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ கூறினார்.

அத்துடன், சைக்கிள் ஓட்டப்போட்டி, கல்விக் கண்காட்சி, மாலை நேர இசைநிகழ்ச்சி என்பவற்றை நடாத்தவும் எதிர்பார்ப்பதாக விமானப்படையின் படைத்தளபதி ஆளுநரிடம் தெரிவித்தார்.

விடயங்களை கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர், இன நல்லிணக்கத்திற்கும். ஒற்றுமைக்கும் இந்த செயற்பாடுகள் வழிவகுக்கும் என கூறினார். பாடசாலைகளின் புனரமைப்பின் போது கழிவறை மற்றும் குடிநீர் வசதி தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழிற்துறைசார் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன் முப்படைகளின் செயற்பாடுகள், படைத்தளங்கள் குறித்து கல்வி சுற்றுலாக்கள் ஊடாக மாணவர்களை தெளிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை இம்முறை வடக்கு மாகாணத்தில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

IMG-20231213-WA0059.jpg?resize=800%2C415IMG-20231213-WA0062.jpg?resize=800%2C480
 

https://globaltamilnews.net/2023/198530/

ஜனாதிபதியை சந்தித்த சுமந்திரன், சாணக்கியன்

3 months 2 weeks ago
ஜனாதிபதியை சந்தித்த சுமந்திரன், சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில், திடீரென குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

என்றாலும், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியதாவது,

“பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறினாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்றுவரை மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்படுகின்றனர். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், கைதானவர்களை உடன் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

90 ஆவது நாளாகவும் தொடரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு நீதி கிட்ட வேண்டும்.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்பவில்லை. எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொணடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படாதவிடத்தும் எதற்காக ஜனாதிபதியை சந்திக்கின்றீர்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எமது விருப்பு வெறுப்பிற்கு அப்பால் ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரை சந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் மக்களுக்கான தீர்வினை பெறுவதற்கான எமது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

மக்களுக்கு சேவையாற்றவே மக்கள் எம்மை தெரிவுசெய்துள்ளனர். மக்களின் பணத்தை கொள்ளையடித்து வாழ்வததற்கு அல்ல” எனவும் தெரிவித்தார்.
 

http://www.samakalam.com/ஜனாதிபதியை-சந்தித்த-சுமந/

சீனாவுக்காக இந்தியாவின் வரலாற்று உறவை முறித்துக்கொள்ள போகின்றீர்களா? - கோவிந்தன் கருணாகரன்

3 months 2 weeks ago

Published By: VISHNU    13 DEC, 2023 | 09:24 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இந்திய, சீன உறவில் உண்மையான நண்பன் யார் என்பதை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை தவிர்க்க வேண்டும்.

இங்கு பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழியும், பௌத்த இலக்கியங்களும் இந்தியாவிலே தோற்றம் பெற்றன. இத்தகைய வரலாற்று தொடர்புகளை  சீனாவுக்காக அறுக்கப் போகின்றீர்களா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீன எக்சிம் வங்கி எமக்கு உதவுகின்றது. சர்வதேச கடன் மறுசீரமைப்பில் கை  கொடுக்கின்றது என்று குறிப்பிடப்படுகிறது.

சீன கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின்  வரையறைகள் என்னவென்பதை  இந்த சபையில் சமர்ப்பிக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமை.

அது மாத்திரமன்றி கடன் மறுசீரமைப்பு, சீனாவின் கொள்கை தொடர்பாக அரசாங்கம்  வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்.

சீனா தொடர்பாக உரையாற்றும் போது இந்தியா தொடர்பிலும் உரையாற்ற வேண்டியது கட்டாயம். இந்தியா என்று நாங்கள் பேசினால் இங்குள்ள சிலருக்கு அது கசக்கும்.

இந்தியா எனக்கொன்றும் இனிப்பல்ல. ஆனால் யதார்த்தம் புரிய வேண்டியது அவசியம். பொருளாதார சிக்கலில் நாம் மூழ்கியிருந்த போது நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசிய மருந்து, எரிபொருட்களுக்காக  எந்தவொரு நிபந்தனையுமின்றி இந்தியா வழங்கியது.

ஆனால் அந்த வேளையில் சர்வதேச நாணய நிதியம் கூட.2.9 பில்லியன் டொலர்களை பல்வேறு  நிபந்தனைகளுடன்தான் வழங்கியது நான் ஒன்றும் இந்திய ஆதரவாளன் அல்ல.

ஆபத்தில் கை கொடுப்பவனே நண்பன். ஆபத்து நேரத்தில் உதவுவதுபோல் தனது நலனை நிறைவேற்ற நினைப்பவன் நண்பனல்ல. இந்திய, சீன உறவு தொடர்பாக இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது. நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின்  ஊடாக சீண்டுவதனை நாம் தவிர்க்க வேண்டும். நமது கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எமக்கு  உற்ற நண்பனாக விளங்குவது இந்தியா  மாத்திரமே.

அண்மைக்காலமாக எமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களை அவதானிக்கின்றோம்.  இது நமது தேசிய கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்மைய நாட்களில் சீன பாதுகாப்புத்துறை தொடர்பான உளவுக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் சஞ்சரிப்பதும் நமது கடலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வருகை தெரிவதாக கூறுவதும் அதற்கு எமது நாடு செங்கம்பளம் விரித்து வரவேற்பதும் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எமது வெளிநாட்டுக் கொள்கை சீனாவுடன் எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்பதல்ல. எமது சீன சார்பு என்பது இந்து சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கு நமது நாடு காரணமாகிவிடக்கூடாது.

சீனாவை விட இந்தியா எமது நட்பு நாடு. பௌத்த,இந்து மக்களின் ஆணிவேரின் மூலம் இந்தியாவே பாரம்பரிய கலாசார தொடர்புகள் மட்டுமல்ல இங்கு நீங்கள் பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழி இந்தியாவில் தான் தோன்றியது. பௌத்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றதும்  இந்தியாவில்தான். இத்தகைய வரலாற்று தொடர்புகளை  சீனாவுக்காக அறுக்க கொள்ளப் போகின்றீர்களா? என்றார்.

https://www.virakesari.lk/article/171663

சிவில் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களை பணி நீக்கத் தயாராகும் அரசாங்கம் - சஜித்

3 months 2 weeks ago
13 DEC, 2023 | 05:46 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

யுத்த காலத்தில் எல்லைப் புறக் கிராமங்களை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் தலா 30 இலட்சம் ரூபாவை வழங்கி பணி நீக்குவதற்கு தயாராகி வருகிறது என  எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நிலையியற் கட்டளை 27/2 கீழ் பாதுகாப்பு அமைச்சு சார் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில், அரச வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும் துறையாக பாதுகாப்புத் துறையை கூறலாம்.  இன்று நாட்டில் யுத்த நிலைமை இல்லை என்றாலும், இந்த ஒதுக்கீடு  அவ்வாறே இருப்பதால், அந்த நிதிப் பாதுகாப்புத் துறைகளின் தரங்களை உயர்த்தவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கவும்  இந்த ஒதுக்கீடுகளை பயன்படுத்த முடியும் .

பாதுகாப்புப் படையினருக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாத காரணத்தினாலும், இராணுவ அதிகாரிகளின் குறைந்தபட்ச நலன்புரி நிலைகளும் சம்பளமும் குறைவாகவே உள்ளதால் கீழ் நிலையிலுள்ள இராணுவ வீரர்கள் சேவையை விட்டு வெளியேறும் நிலையை காணமுடிகின்றது. இதனால் பாதுகாப்பு தரப்பினர் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்

முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு ஆகிய துறைகளில் எண்ணிக்கையை குறைப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. யுத்த காலத்தில் எல்லைப் புறக் கிராமங்களை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களை நல்லாட்சி காலத்தில் நிரந்தர சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட போதும் தற்போதைய அரசாங்கம் தலா 30 இலட்சம் ரூபாவை வழங்கி பணி நீக்குவதற்கு தயாராகி வருகின்றது. இது நியாயமற்ற செயல்.

ஜனாதிபதித் தேர்தலின் போது அங்கவீனமுற்ற முப்படையினர் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ராஜபக்ஷவினர் வந்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதும், அங்கவீனமான முப்படை வீரர்களின் சலுகைகளை குறைத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இது தொடர்பில் பல தடவைகள் பாராளுமன்றத்திற்கு அறிவித்த போதும், அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை  

நமது நாடு போதைப்பொருள் சொர்க்கபுரியாக மாறிவிட்டது. 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ   வீரர்களை பயன்படுத்தி போதைப்பொருள் மாபியாவை தோற்கடிக்க முடியும் . சிறைச்சாலைகளிலும் போதைப்பொருள் மாபியா மிகவும் தீவிரமாக உள்ளதால் முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு துறையினரை பணி நீக்கம் செய்யாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இவர்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/171640

தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான நகைகளுக்கு நேர்ந்ததென்ன ? - செல்வராசா கஜேந்திரன்

3 months 2 weeks ago

Published By: VISHNU   13 DEC, 2023 | 09:51 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தமிழீழ வைப்பகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பலகோடி பெறுமதியாக தங்க நகைகளுக்கு நேர்ந்ததென்ன, தமது நகை தமக்கு கிடைக்கும் என தமிழ் மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆகவே கைப்பற்றிய தங்கங்களை இலங்கை அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் வன்னி பகுதியில் இருந்து எமது  தேசத்தின் அரசு கோலோச்சிய  பகுதியில் இருந்து பல கோடி பெறுமதியான தங்கங்கள் மீட்கப்பட்டு அவை கொழும்புக்கு கொண்டு வரப்பட்டன.  தமிழீழ வைப்பகத்தில்  அடகு வைக்கப்பட்டிருந்த மற்றும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தங்கங்கள்  பாதுகாப்பான முறையில் உரியவர்களின் பெயர் மற்றும் முகவரி குறிக்கப்பட்டு, பாதுகாப்பாக பொதியிடப்பட்டிருந்ததாக அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது.

இவ்வாறு இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் தமக்கு மீளவும் கிடைக்கும் என தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரை  உரியவர்களுக்கு அவர்களின்  தங்கம் கையளிக்கப்படவில்லை. தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த தங்கம் பற்றி வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்மணி  ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு 'தமது நகைகளுக்கு நேர்ந்தது என்ன, அவை கிடைக்காதா' என்று வினவினார்.

கைப்பற்றப்பட்ட தங்கங்களுக்கு என்ன நேர்ந்தது. ஏன் உரியவர்களிடம் கையளிப்படவில்லை. ஆகவே உரியவர்களிடம் அவர்களின் நகைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/171653

ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி திட்டங்கள் : சத்திரசிகிச்சை வெற்றி; நோயாளி மரணம் என்பதற்கு ஒப்பானது - ஹர்ஷ டி சில்வா

3 months 2 weeks ago

Published By: VISHNU    13 DEC, 2023 | 05:29 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோமா, இல்லையா என்பதை  ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. சர்வதேசமே அதனை தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி திட்டங்கள் 'சத்திரசிகிச்சை வெற்றி  ஆனால் நோயாளி மரணம் ' என்பதற்கு  ஒப்பானது. கண்கட்டி வித்தையால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது இறுதி வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். நான் குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி அவர் உரையாற்றியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாடு தற்போது சற்று ஸ்திரநிலையடைந்துள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

நாட்டில் தற்போது எரிபொருள், எரிவாயுவுக்கான வரிசை இல்லை. ஆனால் மக்களின் வாழ்க்கை தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான காலப்பகுதியில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தின் மாத செலவு 85 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த தொகை 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவுகள் 95 சதவீதமளவில் உயர்வடைந்துள்ள பின்னணியில் தான் நாடு சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் கிடைக்கப்பெற்றுள்ளதையிட்டு நாட்டு மக்களுக்காக மகிழ்வடைகிறோம். பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் கட்சி என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதில்லை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பொருளாதார படுகொலையாளிகள் தொடர்பில் ஜனாதிபதி ஏதும் குறிப்பிடவில்லை. நாட்டு மக்களால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி பேசுகிறார். இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதா, இல்லையா என்பதை உலகமே தீர்மானிக்கும், எம்மால் தீர்மானிக்க முடியாது.

பொருளாதார மீட்சிக்காக தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை தவிர மாற்றுத்திட்டங்கள் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அத்துடன் திட்டங்களை செயற்படுத்திக் கொண்டு செல்லும் போது தனித்து விட வேண்டிய நிலை ஏற்படுமா என்றும் குறிப்பிடுகிறார். சத்திரசிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம் என்பதற்கு அமைவாகவே ஜனாதிபதியின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

விவசாயத்துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. விவசாயத்துறையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வற் வரியில் உழவு இயந்திரம் முதல் மண்வெட்டி வரையிலான சகல பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது.

2048 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் பொருளாதார வளர்ச்சி வருடாந்தம் 07 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும்.

ஆனால் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதத்தாலும், 2025 ஆம் ஆண்டு  2.7 சதவீதத்தாலும், 2026 ஆம் ஆண்டு 3 சதவீதத்தாலும், 2027 ஆம் ஆண்டு 3.1 சதவீதத்தாலும் அதிகரிக்க கூடும் என அரசாங்கம் குறிப்பிடுகிறார். இவ்வாறான நிலையில் 2048 ஆம் ஆண்டு பொருளாதார முன்னேற்றம் என்பது சாத்தியமற்றது. அத்துடன் கண்கட்டி வித்தையால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/171631

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது(Photos)

3 months 2 weeks ago

யாழ். சாவகச்சேரிக்கு கிளிநொச்சி பகுதியில் இருந்து கஞ்சாவினை கொண்டு வந்த இருவர் இன்று(13.12.2023)மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

 

 

மேலதிக விசாரணை

இதன்போது கிட்டத்தட்ட ஏழு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மற்றும் கஞ்சாவினை எடுத்து வந்த வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது(Photos) | Two Arrested With Drugs In Jaffna

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamilwin.com/article/two-arrested-with-drugs-in-jaffna-1702481615

இலங்கையில் பாரிய போராட்டம் வெடிக்கும் அபாயம்! IMF எச்சரிக்கை

3 months 2 weeks ago

இலங்கையில் பாரிய அளவில் போராட்டம் ஒன்று வெடிக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பிலான மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் மீண்டும் சமூக அமைதியின்மை மற்றும் போராட்டங்கள் வெடிக்க கூடிய சாத்தியங்கள் அதிக அளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய போராட்டம் வெடிக்கும் அபாயம்! IMF எச்சரிக்கை | Lanka Risks Have Increased Social Unrest

வரி அறவீடு சக்தி வளத்துறையில் விலை அதிகரிப்பு, ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக போதிய அளவு நடவடிக்கை எடுக்கப்படாமை, உள்ளூர் தேர்தல் நடத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு சமூக முரண்பாடுகள் அல்லது போராட்டங்கள் வெடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

மேலும் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படும் நிலையானது நிதி துறையில் நம்பிக்கையீனத்தை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/lanka-risks-have-increased-social-unrest-1702442690?itm_source=parsely-detail

அழிந்துபோகப்போகும் அரச உத்தியோகத்தர்கள் இனமும் புதிய வரிக்கட்டுப்பாடுகளும் - TIN No

3 months 2 weeks ago

அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி.....

 

வைத்தியசாலையில் ஒரு நாள்  நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய்  நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்......

சரி விடயத்திற்கு வருவோம்

FmN-9-JX0BUqsdD.jpg

 

 

இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்றார்கள் அதாவது இன்னும் 1 மாதம்தான் இருக்கின்றது. இதனால் பெற்றோல் விலையுடன் அனைத்துப்பொருட்களின் விலையும் ஒரு சுற்று அதிகரிக்கப்போகின்றது. மிடில் கிளாஸில் இருந்து ஒரு படி கீழே இறங்கிய அனைவரும் மீண்டும் ஒரு படி கீழே இறங்கப்போகின்றோம். சாதாரணமாக SL grade இல் இருப்பவர்களைத்தவிர அவளவு இலகுவாக சம்பளம் யாருக்கும் 1 இலட்சங்களை தாண்டுவது அரிது, வேண்டுமானால் பிரைவேட்டாக உழைக்கவேண்டியிருக்கும். 95% ஆன அரச உத்தியோகத்தர்களுக்கு நிச்சயம் லோன் இருக்கும் வீட்டுக்காகவோ அல்லது வாகனத்துக்கோ ஏதாவது ஒரு தேவைக்காக லோன் எடுத்திருப்பார்கள், எனவே அது போக மிகுதிதான் சம்பளம் அதுவும் இப்போது வரியையும் கழித்தால் இன்னும் குறையத்தான் போகின்றது ஆனால் ஒட்டுமொத்த சம்பளம் அதிகரிக்கப்போவதில்லை.

Image_richmans_tax.jpg

 

 

வைத்தியசாலையில் குடிபோதையில் கூறிவரின் கருத்து ஒருவகையில் சரிதான் அவர் சாராயம் வாங்க கொடுத்த பணத்தில் இருக்கும் டக்ஸில் இருக்கும் ஒரு பகுதியில் இருந்தும் கூட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது, ஆனால் இலங்கையில் எந்த ஒரு அரச உத்தியோகத்தருக்கும் சாராயம்வாங்கும்போது, அரிசி, பருப்பு, சீனி என்ற எந்த பொருட்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படுவதில்லை, அதாவது சாதாரணமக்கள் கொடுக்கும் அதே வரிப்பணத்தை அரச உத்தியோகத்தர்கள் கட்டுகிறார்கள் அதோடு அதைவிட கூடுதலாக சம்பளத்திலும் வரி அறவிடப்படுகின்றது.

 

சுருக்கமாக விரும்பியோ விரும்பாமலோ வரிகட்டவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பவர்கள் அரச ஊழியர்கள்தான். நாட்டில் ஏற்படும் திடீர் பொருளாதாரச்சிக்கல்களுக்காக மாதாந்த வேதனத்தை 2 மாதங்கள் தள்ளிப்போடவும் அரசாங்கத்தால் முடியும் ஆனால் இப்படி எதுவும் தனியார் துறைக்கு நடக்கப்போவதில்லை. இப்படி வேறு எந்த நாட்டிலும் நடக்காதுதான் ஆனாலும் இப்படியான சூழ் நிலைக்கு நமது நாடு என்றோ தள்ளப்பட்டுவிட்டது.

இதுதொடர்ந்தால் அரசவேலையைவிட்டுவிட்டு வேறுதொழிலுக்கு செல்வதைதவிர பலருக்குவேறுதெரிவு இருக்கப்போவதில்லை.

ஒரு லட்சம் என்பது இப்போது ஒன்றும் அவளவு பெரிய சம்பளமேயல்ல  என்பதால் அரசு 120000க்கு மேல் சம்பளம் எடுக்கும் அனைவருக்கும் வரியை அமல்படுத்தியிருக்கின்றது.

ஒரு முடிவெட்டும் நபரை எடுத்துக்கொள்வோம்

முடிவெட்டுவதற்கு ஒருவருக்கு 500 ரூபாய், ஒரு நாளில் குறைந்தது 10 பேர் வெட்டுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் மாதத்திற்கு 150 000 ரூபாய்களை அவர் உழைக்கத்தான் போகின்றார் ஆனால் அவர் இதற்கு எந்த வரியையும் கட்டப்போவதில்லை ஆனால் சமுர்த்திப்பதிவும் அதற்கான கொடுப்பனவையும் அவரால் பெறமுடியும்.

வீதியோரத்தில் பகோடா, மிக்ஸர் விற்கும் தள்ளிவண்டிவைத்திருப்பவராலும் அண்ணளவாக இதே சம்பளத்தைப்பெறமுடியும் (  தெரிந்தவர்கள் இருவர் இருக்கின்றார்கள் )

sd1.jpg

 

 

ஓரு ஆட்டோ ஒட்டுனராலும் அவரது ஓட்டத்தைப்பொறுத்து இவை சாத்தியம்தான். இப்போதாவது Pick Me யாழ் வந்ததால் தப்பித்தோம் 2018 இல் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் என் ஊருக்கு வருவதற்கு 2000 ரூபாய் கொடுத்தேன் அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பஸ் ரிக்கட் 1300 ரூபாய் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து என் ஊருக்கு 2000 ரூபா

இவர்களையெல்லாம் விடுங்கள் மன்னிப்போம் கஸ்ரப்பட்டால்தான் பணம்கிடைக்கும், 2019 இல் இறந்த என் தந்தையின் கிரியைகளைசெய்வதற்காக கீரிமலை சென்றிருந்தேன் அங்கே கொடுக்கவேண்டிய பணம் 10 000 ரூபாய், அரை மணித்தியாலத்திற்கு ஒருவர் என்றவாறு கிரியைகள் நடக்கும் எப்படியும் குறைந்தது 20 நபர்களை போட்டுக்கொள்வோம் ( உண்மையில் மிக அதிகம்) ஒரு நாளில் 2 லட்சம் கிடைக்கும் மாதத்திற்கு 60 லட்சம் ஆனாலும் அங்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று சமுர்த்திப்பதிவு இருப்பதாக கேள்வி... இங்கும் வரி கட்டப்படுவதில்லை. இதேபோன்று 3 மாடி வீடுகளை கட்டிவாழும் கோயில் பூசாரிகள், சர்ச் பாதிரிகள் என்று ஒரு பெரிய கூட்டத்திற்கே படியளப்பதற்கும் அரச ஊழியர்களே பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களை வென்றவர்கள் நமது அரசியல்வாதி சகாக்காள்....

 

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வரி உண்மையில் எமது நாட்டைவிட மிக அதிகம்தான்

income tax

 

 

ஆனால் அதிகமான வரி மக்களை அவளவாகப்பாதிக்காது காரணம் அங்கே எந்தத்தொழிலாக இருந்தாலும் மணித்தியாலத்திற்கு 20 அல்லது 22 டாலர்கள் வழங்கவேண்டும் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனால் எந்த ஒரு மனிதனதும் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணத்தை அனைவராலும் உழைத்துக்கொள்ளலாம், அதோடு வயோதிபத்தில் பண உதவி போன்று பல திட்டங்கள் இருக்கின்றன இவற்றினால் கட்டப்பட்ட வரி மீண்டும் ஏதாவது ஒருவிதத்தில் கிடைக்கும் துரதிஸ்டவசமாக இலங்கை நிலை நான் சொல்லித்தெரியவெண்டியதில்லை.

 

அனைவரது பணப்பரிவர்த்தனையையும் கவனிபதற்காக இலங்கை அரசு TIN -tax identification no என்ற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, இதை அரசு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலக வங்கியின் நிபந்தனைகளின்பேரில் இப்போது இது கடுமையாக்கப்பட இருக்கின்றது.

TIN%20registration%20(process%20flow).png

 

 

வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும். காணி,வீடு, கார் என எது வாங்கினாலும் எந்த source இல் இருந்து பணம் கிடைத்தது என்பதில் கேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு டக்ஸில் சகலதும் முடிவடையும். இதை இன்னும் திறம்பட செய்யவேண்டுமானால் இந்தியாவில்  Gpay பயன்படுத்துவதைப்போல் இங்கேயும் பயன்படுத்தினால் சலூன் முதற்கொண்டு சைக்கிள்கடை வரை அனைத்துமே இலகுவில் கண்காணிக்கப்படும்.

 

எதிர்காலத்தில் இந்த TIN இலக்கம் இல்லாமல் ஒரு வங்கிக்கணக்குக்கூட திறக்கமுடியாமல்போகலாம். இந்தியாவில் இருக்கும் ஆதார் காட் போல் இங்கேயும் அனைத்தும்வரலாம்.

TIN இலக்கத்தை ஒன்லைனிலும் பெற்ருக்கொள்ளமுடியும். இங்கே கிளிக் செய்து படிவத்தை பூர்த்திசெய்துகொள்ளுங்கள்.

இந்தக்கட்டுரை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் கொமண்டுங்கள் பார்ப்போம்.

https://www.manithanfacts.com/2023/12/tin no tax srilanka.html

இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானம்

3 months 2 weeks ago

Published By: NANTHINI   13 DEC, 2023 | 09:34 PM

image

இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். 

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் ஆளுநரை இன்று (13) சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ, ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் நிரான் மல்லவராச்சி, வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பெற்றிக் நிரஞ்சன், தொல்பொருளியல் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பிராந்திய அலுவலகத்தின் அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாதுவதற்குரிய திட்டங்கள், அதற்கு தேவையான வளப்பகிர்வு, இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அந்த வகையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இந்நிகழ்வை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்காக எரிவாயு விசையாழி விமான இயந்திரங்களை வழங்கவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் உதவிகளை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்துடன் யாழ். மாவட்டத்திலுள்ள 73 பாடசாலைகளை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும், 73,000 தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்களை வழங்கவும், மருத்துவ முகாம், பற்சிகிச்சை முகாம், கண் சிகிச்சை முகாம், இலவச கண்ணாடிகளை வழங்குதல், இரத்த தான முகாம் நடத்துதல், 73 ஆயிரம் மரக்கன்றுகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  விமானப்படையின் படைத்தளபதி கூறினார்.

அத்துடன், சைக்கிள் ஓட்டப்போட்டி, கல்விக் கண்காட்சி, மாலை நேர இசைநிகழ்ச்சி என்பவற்றை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படைத்தளபதி தெரிவித்தார்.

படைத்தளபதியின் இத்திட்டங்களை கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கூறுகையில், 

இன நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் இந்த செயற்பாடுகள் வழிவகுக்கும். பாடசாலைகளின் புனரமைப்பின்போது கழிவறை மற்றும் குடிநீர் வசதி தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழிற்துறைசார் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் முப்படைகளின் செயற்பாடுகள், படைத்தளங்கள் குறித்து கல்வி சுற்றுலாக்கள் ஊடாக மாணவர்களை தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தியை இம்முறை வடக்கு மாகாணத்தில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆளுநர் படைத்தளபதியிடம் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/171659

மாவீரர் நினைவேந்தலில் கைதான த.தே.ம. முன்னணி அமைப்பாளருக்கும் அவரது மகனுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

3 months 2 weeks ago
13 DEC, 2023 | 05:33 PM
image

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர், அவரது மகன் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் இன்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தினை அலங்கரிக்க மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் மற்றும் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். 

அப்போது அவர்களது வாகனத்தை மறித்த  பொலிஸார், வாகன சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கைதான சாரதியை பார்ப்பதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) மற்றும் அவரது மகன் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீதியில் மாவீரர்களுக்காக விளக்கேற்றி நினைவேந்தலில் ஈடுபட்டனர். 

அதன் பின்னர், அவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன், 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, கைதான நபர்களை டிசம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். 

அதன் பிரகாரம், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதியை பிணையில் விடுவிப்பதற்காக கடந்த வாரம் முன்நகர்வு விண்ணப்பப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட  நிலையில், சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார். 

அதேவேளை, ஏனைய இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் இருந்த இருவரும் இன்று  (13) வழக்கு விசாரணைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதன்போது, அந்த இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/171649

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகள் ;உறுதியான பதிலை அளிக்க தவறினார் பிரிட்டன் அமைச்சர்

3 months 2 weeks ago

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை அறிவிக்கவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து இடம்பெற்ற கடுமையான விவாதங்களின் போது பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார்.

கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோர்ல்பேர்ன் அமைச்சர நோக்கி நேரடியாக பின்வரும் கேள்வியை எழுப்பினார்.

இலங்கையின் உயர் சமூகத்தை சேர்ந்த யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்களிற்கு எதிராக  தடைகளை விதிப்பதற்காக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு ஆதாரங்களை ஆராய்கின்றது என  சபைக்கு உறுதி செய்யுங்கள்

டிரெவெல்யன் பின்வருமாறு பதிலளித்தார்.

நம்பகதன்மை மிக்க உள்நாட்டு  பொறுப்புக்கூறல் செயன்முறை குறித்தஇலங்கையின் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களின் கரிசனையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் .

இந்த கரிசனைகளிற்கு தீர்வை காணுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகின்றோம் 

நான் அங்கு விஜயம் மேற்கொண்டவேளை இது குறித்த கரிசனையை எழுப்பினேன் மனித உரிமைகள் குறித்தும் நீதி விடயங்கள் குறித்தும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகள் ; உறுதியான பதிலை அளிக்க தவறினார் பிரிட்டன் அமைச்சர் | Virakesari.lk

பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது

3 months 2 weeks ago
பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது

விமானத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்  49 வயதுடைய இந்திய பிரஜையாவார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இலங்கையை சேர்ந்த 8 வயதுடையவராவார்.

இன்று புதன்கிழமை (13) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறித்த விமானத்திலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி பரிசோதனைக்காக விமான  நிலைய பொலிஸாரால்  நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

https://www.virakesari.lk/article/171654

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த ஆகியோரின் படுகொலை : விசேட விசாரணைக் குழுவை நியமியுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர்

3 months 2 weeks ago

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதை போன்று லசந்த விக்கிரமதுங்க, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த ஆண்டு மார்ச் 21,செப்டெம்பர் 09,ஒக்டோபர் 04,ஒக்டோபர் 18,நவம்பர் 24, நவம்பர் 30, டிசெம்பர் 06 மற்றும் டிசெம்பர் 08 ஆகிய திகதிகளில் இருபத்தேழு இரண்டின் கீழ் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தேன்.

ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்திலாவது இந்த  கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய  குழுவை அமைச்சரவை  நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.ஹென்ரி பேதிரிஸ் படுகொலை மிலேட்சத்தனமானது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  சம்பவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்,,சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரிச்சட் சொய்சா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ்,மகேஸ்வரன் படுகொலை  மற்றும் சாகரிகா கோமஸ்,பிரேம கீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

காலனித்துவ ஆட்சியில்  படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் செலுத்த வேண்டும் என்றார்.

ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த ஆகியோரின் படுகொலை : விசேட விசாரணைக் குழுவை நியமியுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் | Virakesari.lk

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்!

3 months 2 weeks ago
ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்!

 

 

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் don davis கூறியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறினார். அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் உறுதி செய்யுமென அவர் தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=181351

 

 

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனி தட்டுப்பாடு

3 months 2 weeks ago
13 DEC, 2023 | 02:25 PM
image
 

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12)  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனி தனியார் இறக்குமதியாளர்களிடம் இருப்பதாகவும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார்.

https://www.virakesari.lk/article/171611

இரண்டாவது கடன் தவணை – 337 மில்லியன் டொலர்களுக்கு IMF அனுமதி!

3 months 2 weeks ago
இரண்டாவது கடன் தவணை – 337 மில்லியன் டொலர்களுக்கு IMF அனுமதி!
adminDecember 13, 2023
imf-1.jpg?fit=1170%2C731&ssl=1

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி வசதியை உடனடியாக இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி SDR 508 மில்லியன்களாகும்.

இலங்கையின் மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.

 

https://globaltamilnews.net/2023/198502/

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாரால் அழைக்கப்பட்டு மீண்டும் விசாரணை

3 months 2 weeks ago
13 DEC, 2023 | 09:57 AM
image

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை  (12)  மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் புத்தர் சிலையும் வைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருந்ததுடன், ஆதிசிவன் ஆலய விக்கிரகங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் பின்னர் தொல்பொருட்களை சேதப்படுத்தாது வழிபாடு செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் ஆகியோரை அழைத்த நெடுங்கேணி பொலிசார்  அவர்களிடம், 2019-2020ஆம் ஆண்டு வருடாந்த திருவிழாவிற்கு அனுமதி தந்தது யார்?, 2019ஆம் ஆண்டு ஏணிப்படி அமைப்பதற்கு நிதி உதவி வழங்கியது யார்?, ஏணிப்படியினை மலைக்கு கொண்டுசென்று நிறுவியவர்கள் யார்?, 2019-2020ஆம் ஆண்டு திருவிழாவிற்கு ஒலி பெருக்கியினை பயன்படுத்த அனுமதி தந்தது யார்?, 2019ஆம் ஆண்டு  ஆலய சூழலை அடையாளப்படுத்தும் நோக்கில் சில முக்கிய மரங்கள் தொல்பொருள் சாராத இடங்களுக்கு வெள்ளைநிற  சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அதனை செய்தது யார்? என விசாரணைகளை மேற்டகொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/171578

Checked
Fri, 03/29/2024 - 04:26
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr