ஊர்ப்புதினம்

விழுமியங்களை வளர்ப்பதும், தொழிற்கல்விக்கு வழிநடத்துவதுமே கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் - ஹரிணி அமரசூரிய

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

08 AUG, 2025 | 04:40 PM

image

(நமது நிருபர்)

பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை  இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும்  கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவௌவும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த முழுமையான விளக்கத்தை முன்வைத்தனர்.

எல்லா பிள்ளைகளுக்கும் உயர்தரமாகக் கருதப்படும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுடன், கடற்றொழில், மின் பொறியியல் துறை மற்றும் வாகன பழுதுபார்ப்பு போன்ற தொழிற்கல்வித் துறைகளின்  பெறுமதியை விளக்கி, அத்துறைகளில் நிபுணர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தை பாடசாலைக்குள்ளேயே எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் பாடத்துறை நிபுணர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், அந்த தேர்வு செயல்முறையை முறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை ஆயர் பேரவையின் தலைவர் மேன்மைதங்கிய ஆயர் ஹரோல்ட் அந்தோணி உள்ளிட்ட ஆயர்கள் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/222104

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!

2 months 3 weeks ago

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியாக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியாக் காய்ச்சல் காரணமாக இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
மலேரியாக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் 38 வயதுடையவர். மற்றையவர் 29 வயதுடைய நபர். 38 வயதுடைய நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 29 வயதுடைய நபர் மருத்துவ விடுதியிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐரோப்பியாவுக்குச் செல்வதற்காகச் சென்று ஆபிரிக்க நாடொன்றில் என்ற நாட்டில் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் விமானம் மூலம் கட்டுநாயக்கவுக்குத் திரும்பியவர்கள். எனவே வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புபவர்கள் கூடுதல் அக்கறையுடன் செயற்படவேண்டும்.


இது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசேட செயற்றிட்டங்களை 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில் முன்னெடுத்தல் அவசியம் - என்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம்

2 months 3 weeks ago

08 Aug, 2025 | 09:06 AM

image

யாழ்ப்பாணத்தின் புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணிக்கும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் , ஓடி ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது. 

அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம் | Virakesari.lk

நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

2 months 3 weeks ago

08 Aug, 2025 | 09:57 AM

image

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில்  விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார்.

நுவரெலியாவில் பிரதான வீதிகளை  ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை  பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம்  பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் த நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.

அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நாட்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில்  விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்கள் கடந்து உரிமை கோரப்படாத மட்டக்குதிரைகள்  பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர சபை முதல்வர் எச்சரித்துள்ளார்.

நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில்  வழுக்குதன்மையும்  அதிகரித்து  விபத்துகளும்  ஏற்படுகின்றன அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது இவை தவிர, வீதியில்  திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும், அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.

மேலும் நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர்.  மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில்  அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது இதன் காரணமாக  விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன.

விபத்தில் இறப்பு  வீதம் குறைவு என்றாலும் கை,கால் முறிவு ,தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இதன் காரணமாக  திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன் அதனையும் மீறி பட்சத்தில் பொது ஏலத்தில் விட நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும் பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில்  சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.

IMG-20250808-WA0029__1_.jpg

IMG-20250808-WA0024__1_.jpg

IMG-20250808-WA0022__1_.jpg

IMG-20250808-WA0028.jpg


நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | Virakesari.lk

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

2 months 3 weeks ago

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

written by admin August 8, 2025

speakers-vavunia.jpg?fit=650%2C433&ssl=1

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.   இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது: ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார்.


https://globaltamilnews.net/2025/218987/

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: என்னால் உத்தரவாதம் வழங்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

07 AUG, 2025 | 04:31 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இவ்விடயத்தில் எனக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே  தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான  எஸ்.சிறிதரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த  அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் அடிப்படையில்  தமிழ் அரசியல் கைதிகள்  மற்றும் சந்தேக நபர்கள்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் 4 பேர்,  விடுதலை புலிகள் அமைப்பின் 8 உறுப்பினர்கள்,   ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் ,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள  2 கைதிகள்,  2 மரண தண்டனை கைதிகள் 2 பேர் வெலிக்கடை, மெகசின், மஹர, தும்பர, பூஸா  மற்றும் நீர்கொழும்பு  ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக்  காலம் நிறைவடைந்ததன் பின்னர்  விடுதலையாவார்கள்.  அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணையளிக்கப்படும் பட்சத்தில் விடுவிக்கப்படுவார்கள் அல்லது மேன்முறையீடு செய்து பிணை பெற்றுக்கொள்ளலாம்.

சிறைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர்  ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில் என்னை சிலர் சந்தித்தனர். இவ்விடயத்தில் எனக்கு எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது.  ஏனெனில் அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்  என்றார்.

https://www.virakesari.lk/article/222065

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

2 months 3 weeks ago

07 AUG, 2025 | 04:33 PM

image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளின் தீர்மானத்தால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது. ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சுகாதார கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும். எது எவ்வாறிருப்பினும் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மருத்துவ சேவையை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

நாட்டில் 23,000 சிரேஷ்ட வைத்தியர்கள் காணப்படுகின்றனர். வருடாந்தம் 2,000 வைத்தியர்கள் இந்த கட்டமைப்பில் இணைகின்றனர். எனவே இவர்களுக்கான நியமனங்களை முறையாக வழங்க வேண்டியதும் அவசியமானதாகும்.

அத்தோடு இடமாற்றங்களும் முறையாக இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே சுகாதார கட்டமைப்பின் இருப்பினை தீர்மானிக்க முடியும். சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப்பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளால் 23,000 சிரேஷ்ட வைத்தியர்களின் இடமாற்றங்கள் முற்றாக சீர்குலைந்துள்ளன. இது சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்ட ஒரு குழப்பமாகும்.

ஆனால் சுகாதார அமைச்சரிடமிருந்து இதற்கான ஸ்திரமான தீர்வு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினை தீவிரமடைந்தமைக்கான காரணமும் இதுவேயாகும். 2025ஆம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் 9 மாதங்கள் தாமதமாகவே வெளியானது.

அதில் சுமார் 5,000 வைத்தியர்கள் உள்ளடங்குகின்றனர். அந்த பட்டியலில் காணப்பட்ட 78 வெற்றிடங்கள் சட்டத்துக்கு முரணாக தன்னிச்சையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த 78 வைத்தியர்கள் மாத்திரமின்றி, பட்டியலுள்ள அனைவரும் பாதிக்கப்படுவர்.

அது மாத்திரமின்றி பின்தங்கிய பிரதேசங்களுக்கான வைத்தியர் நியமனங்களும் இவ்வாறு தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் பிரதான வைத்தியசாலைகள் உட்பட சுமார் 135 பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படவுள்ளது.

ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் அவர்கள் இந்த யுகத்துக்கே அழைத்துச் செல்லவே முற்படுகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு அமைச்சரிடமிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பிரச்சினைகளுக்கான முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது தீர்மானத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/222066

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

2 months 3 weeks ago

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

August 8, 2025

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக, தற்போதைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், நிகழ்நிலை காப்புச்சட்டத்தை மாற்றம் செய்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் ஜி.எஸ்.பி பிளஸ் வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதில் அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

https://www.ilakku.org/anti-terror-law-repeal-eu-agreement/

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

2 months 3 weeks ago

மன்னார் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது. (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னார்-காற்றாலை-திட்டத்தை-இடைநிறுத்த-தீர்மானம்/175-362550

பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்!

2 months 3 weeks ago

பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்!

1231278800.png

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு  விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று மாலை கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி  இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். பற்றி எரியும் தீ ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக பரவியது.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள்.

இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு தெரியவில்லை,ஆனாலும் இந்த பகுதி இராணுவத்தினுடைய எல்லை இல்லை, பொதுமக்கள் வந்து இங்கே  மட்டைகளை வெட்டுவது, பனம் பழம் பொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களை ஒருபோதும் இராணுவத்தினர் தடுத்ததில்லை.ஆனாலும்  இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு காட்டுப்பகுதியால் சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்துள்ளார்கள்

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.[

https://newuthayan.com/article/பனை_மரங்களுக்கு_தீ_வைத்த_விஷமிகள்!

திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்!

2 months 3 weeks ago

திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்!

981131598.jpeg

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டமானது நேற்றையதினம் (07) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றுவரை முன்னெடுக்கப்படவுள்ளது.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரைக்கு_எதிரான_போராட்டம்!

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு

2 months 3 weeks ago

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு

August 7, 2025 6:53 pm

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் மற்றும் பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அகலங்க உக்வத்தே, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார். குறித்த பதிவு, ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், ஒரு பெண் மற்றும் ஜனாதிபதி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் படங்கள் மற்றும் பிற பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியதாகக் கூறினார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்தப் புகாரைப் பதிவு செய்ததாகவும், இந்தச் செய்தி மற்றும் தொடர்புடைய தகவல்களைப் புகாரளித்த சமூக ஊடகக் கணக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும், முற்றிலும் ஆதாரமற்ற இந்த பதிவுகள் சமூகத்தை தவறான வழியில் வழிநடத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/rumor-linking-the-president-with-a-woman-complaint-filed-with-cid/

செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு! கண்கலங்க வைத்த நிமிடங்கள்

2 months 3 weeks ago

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றையதினம்(6) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகள் 

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு! கண்கலங்க வைத்த நிமிடங்கள் | Chemmani Mass Graves Updates Tamil

இந்த நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://tamilwin.com/article/chemmani-mass-graves-updates-tamil-1754502270

பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்புகள் அதிகரிப்பு

2 months 3 weeks ago

பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு 

Published By: DIGITAL DESK 3

07 AUG, 2025 | 01:30 PM

image

பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி,

  • 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர்.

  • 11.9 சதவீதமான 13–17 வயதுடைய  மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர்.

  • 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன.

  • 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை.

  • 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என  எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.

அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில், 

நாட்டில்  நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம்  கணிசமாகக் குறைந்தது.

தற்போது, 100,000 பேரில் 15 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது."

அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள்  இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத்  தெரிவித்துள்ளார்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன: 

- அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926

- சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570

- லங்கா லைஃப் லைன்: 1375

- CCCline : 1333 (இலவச சேவை)

https://www.virakesari.lk/article/222035

இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்

2 months 3 weeks ago

Published By: VISHNU

07 AUG, 2025 | 01:59 AM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது  இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால்  இன்று  இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது.

பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த  பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக்குற்றம் இளைத்தவர்கள். அவர்கள்  மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்தபகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில்  கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.

6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம்.

அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது  அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது.

இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலிணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக்குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக்கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம். இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/222005

''நான் அவன் அல்ல'' - வி.இராதாகிருஷ்ணன்

2 months 3 weeks ago

07 AUG, 2025 | 06:31 PM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் உள்ள பி.இராதாகிருஷ்ணன் நானல்ல. நான் வி.இராதாகிருஷ்ணன் ஆகவே ''நான் அவன் அல்ல'' என  மலையக மக்கள் முன்னணியின்  தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ரவீந்திர பண்டாரவினால் பிரதமரிடம் கேட்கப்பட்ட வாய்மூல கேள்வியின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டது பற்றி கடந்த 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  கேள்வி எழுப்பப்பட்டது.

குறித்த பெயர்ப் பட்டியலில் 2006 ஆம் ஆண்டின் முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பி.இராதாகிருஷ்ணுகாக திருமதி கே.இராதாகிருஷ்ணனுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தலை அடிப்படையாக கொண்டு தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பரவுகின்றன.

ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள "பி.இராதாகிருஷ்ணன்" என்னும் பெயர் "பெருமாள் பிள்ளை இராதாகிருஷ்ணன்" ஆக இருக்க வேண்டும் என்றும், அதில் குறிப்பிடப்படுவது "வேலுசாமி இராதாகிருஷ்ணன்" என்ற என்னைப் பற்றியல்ல என்றும், அந்த நேரத்தில் நான் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினராக இருந்தேன் என்றும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் இந்த உயரிய சபைக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் வாய்மூல வினாக்களுக்கான விடைகளையும் எதிர்பார்த்து தனிப்பட்ட உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு அவதூறுகளை ஏற்படுத்தும் வகையில் வினாக்களையும் விடைகளையும் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இதை நிவர்த்தி செய்யுமாறும், பொறுப்பானவர்களை சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/222074

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவித்தல்!

2 months 3 weeks ago

07 AUG, 2025 | 06:52 PM

image

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை இன்று வெள்ளிக்கிழமை (07) முடிவடைகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 19 ஆம் திகதி முடிவடையும்.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/222078

ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்

2 months 3 weeks ago

ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது.

ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் குமணன் விசாரணைக்கு அழக்கப்பட்டார் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.

மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.

Journalist Kumanan is being continuously threatened by the TID. Last year, his parents were already threatened. Following that, Kumanan was summoned for questioning, after which there was no further contact.

Now, he has been summoned for questioning again, with false claims related to “ Facebook post related to LTTxxe .” being cited as the reason.

We cannot stand by and watch the TID investigate an independent journalist like Kumanan, who continuously brings important issues like chemmani to the world.

NoAt this time, it is highly condemnable that a journalist, who provides news based on media ethics, is being threatened and subjected to false accusations. We cannot let this go , everyone must oppose this terrible repression by the government in its entirety.

https://x.com/JDSLanka/status/1953344960842833923?t=ri0qqy_2hxV42Dt6eiTExA&s=19

2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?

2 months 3 weeks ago

2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?

ranil-maithri-1.jpg

2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன.

ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.

பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது.

அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர்.

இந்தக் குறிவைப்பில் ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் சிலவற்றின் சார்பில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை.

பொதுவெளியில் தமது நிகழ்ச்சிநிரல் பற்றிய தடயங்கள் அதிகம் வெளிப்படாத வகையில் செயற்படவேண்டும் என்ற திட்டத்தோடு இவை இயங்குகின்றன.

இந்த மறைபொருளான நிகழ்ச்சிநிரல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களிடம் இது பற்றிக் கேட்டால், அக் கேள்விகளைச் சதிக் கோட்பாடுகளாக கருதி அவற்றைத் தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு பலரிடம் 2015 இல் காணப்பட்டதைப் போலவே தற்போதும் காணப்படுகிறது.

இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்படவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ள பின்னணியில் ஈழத்தமிழர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானம், தமிழர்கள் எதிர்ப்பார்ப்பது போன்று அமையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

இப் பின்னணியில்தான் 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை ஒத்த கருத்தியல் மீண்டும் எழக்கூடும் என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை.

https://akkinikkunchu.com/?p=335891

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!

2 months 3 weeks ago

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!

ஆகஸ்ட் 07, 2025

AVvXsEjtWOEmQGteKdQPUMcsnKWYuSVbb1eXDK-Ds37Ko6MEYLk8tsefDMjjIlATdIBm6jk05sBweSVZu6Zi2-9uCdffzXBcgiFmhifmZRw3rTBViuE20674wbJPyUyD6HAqjL03GwH2_S0qS4y-ISnhoSrGwmGMNIHlGon4o8co0Fum-HwIBfcACgodLJkiXIf-

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (07.08.2025) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மன்னார் காற்றாலை மின் கோபுரங்கள்

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

https://www.battinatham.com/2025/08/blog-post_37.html

Checked
Sun, 11/02/2025 - 08:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr