ஊர்ப்புதினம்

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை பொது தனியார் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படுமா?

2 months 3 weeks ago

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடும் சூழலுக்கு இடமளிக்காமல் பொது தனியார் கூட்டு முயற்சியாக பேண வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் வருடாந்த அறிக்கைகள் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அண்மையில் (20) கவனத்திற்க் கொள்ளப்பட்ட போதே குழுத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதால், திருத்தியமைக்க 1.2 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார். எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்படாததால், இதனை அரச தனியார் கூட்டு முயற்சியாக நடத்துவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சுற்றுலாத்துறைக்காக காணி ஒதுக்கப்பட்டதால் அனுமதி வழங்கப்படவில்லை.

1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களை பழுதுபார்த்தால் நாளொன்றுக்கு 5 தொன் உற்பத்தி செய்வதன் மூலம் மாதம் 22 மில்லியன் ரூபா இலாபம் ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முழு நிலத்தையும் ஒரு பகுதியை மட்டும் சுற்றுலா வலயமாக மாற்ற பரிசீலிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. வாழைச்சேனை காகித ஆலையை மூடுவதாக இருந்தால், அதனை விற்பனை செய்வதற்குப் பதிலாக, பொதுத் தனியார் கூட்டு நிறுவனமாக நடத்துவது முக்கியம் என்றும், குழுவின் பரிந்துரை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குழுத் தலைவர் தெரிவித்தார்.

மேலும், சுற்றுலாத் துறையையே சார்ந்திருக்காமல், நாட்டின் தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15% மட்டுமே என்றும், அபிவிருத்தியடைந்த நாட்டில் இந்த எண்ணிக்கை 30% என்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். தொழில்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிலம் நாட்டின் மொத்த நிலத்தில் 0.04 சதவீதம் என்றும், அபிவிருத்தியடைந்த நாட்டில் இது பொதுவாக 3 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/293582

ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்களை கோரும் யாழ் மாவட்ட செயலகம்!

2 months 3 weeks ago
28 FEB, 2024 | 08:41 PM
image

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்துக்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து. அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை பாதுகாப்பாகப்பேணல் மற்றும் காட்சிப்படுத்தல் செயற்பாட்டை திறம்பட மேற்கொள்ள இதுவரை தங்களால் பாதுகாக்கப்பட்டு வந்த பாரம்பரியம் மிக்க பாவனைப்பொருட்கள், அணிகலன்கள், ஏட்டுச்சுவடிகள், புராதன நூல்கள் என்பவற்றை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கு இலவசமாக வழங்கி உதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன், பாரம்பரியப்பொருட்களை வழங்கியவர்கள் தொடர்பான விபரங்கள் ஆவணப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/177542

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!

2 months 3 weeks ago
28 FEB, 2024 | 05:33 PM
image

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/177523

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால் வெளிநாடு சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க!

2 months 3 weeks ago

Published By: VISHNU    28 FEB, 2024 | 05:42 PM

image

தற்போது வெளிநாட்டில்  வசிக்கும்  பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபரும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளாார்.

அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபான இம்ரானும் ஒருவர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ குறித்த அச்சுறுத்தல் தொடர்பான   ஒலி நாடாக்கள்  குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன எனக் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/177531

அரச வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் நிலை: அமைச்சர் தகவல்

2 months 3 weeks ago

இரண்டு அரச வங்கிகளினால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 602 பில்லியன் ரூபாவாகும், அதில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு ஒரு நிதிக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் பொருளாதாரமும் வலுவாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு கணிசமான அதிகாரம் உள்ளது.

அரச வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் நிலை: அமைச்சர் தகவல் | Bank Loan In Sri Lanka

கடந்த காலத்தில் இலங்கையில் கருத்தாடலுக்கு உட்பட்ட பரேட்டா சட்டம் பற்றி குறிப்பிடுவதென்றால், இவ்விடயத்தில் மத்திய வங்கி, நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் மாத்திரமே கவனம் செலுத்தியது. இரண்டு அரச வங்கிகளினால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 602 பில்லியன் ரூபாவாகும்.

அதில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக தள்ளுபடி செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையை நம் நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் பயன்படுத்த முடிந்திருந்தால், அந்தத் துறைகளில் பெரும் வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கும்.

பரேட் சட்ட நெருக்கடி

நாட்டில் நிதிக் கட்டுப்பாடு இல்லாததால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டது. இங்கு வர்த்தகர்களும், நிதி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்காத வகையில் செயல்பட வேண்டும். அதன்படி, பரேட் சட்டத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் நிலை: அமைச்சர் தகவல் | Bank Loan In Sri Lanka

அதற்காக, நாடாளுமன்றத்தில் சில திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (Small and Midsize Enterprise) தனியான கடன் திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதே கருத்தையே கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/bank-loan-in-sri-lanka-1709048948

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

2 months 3 weeks ago
sandhan.jpg சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன்,  கல்லீரல் செயலிழப்புக் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார்.

சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371552

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது - அருட்தந்தை மா.சத்திவேல்

2 months 3 weeks ago

Published By: VISHNU   27 FEB, 2024 | 06:30 PM

image

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் செவ்வாய்க்கிழமை (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் நீதி கேட்டு தொடர் போராட்டம் ஆரம்பித்து அதன் ஏழாவது ஆண்டு நிறைவு தினத்திலே மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்ட பேரணியை நடத்தி ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். 

இக் கோரிக்கைகள் நியாயமானது. உறவுகளை பறிகொடுத்த வலிகளோடு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் வடகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் தமது முழுமையான ஆதரவை நடத்துவதோடு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையை வலியுறுத்துகின்றது.

யுத்த காலத்தில் தமது உறவுகளை தேடி அலைந்த அவர்களின் உறவுகள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அமைப்பு ரீதியில் நீதி கேட்டு தலைநகர் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டங்களை நடாத்தியவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தன் உறவுகளை தேடி தேடித் மன வேதனைக்கு உட்பட்டவர்கள் பல்வேறு நோய் தாக்கத்தின் காரணமாகவும், வயது மூப்பினாலும், இரத்த உறவுகளின் பிரிவினாலும் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இதனை இயற்கை மரணம் என கடந்து விட முடியாது. இலங்கை அரசு நீதி மறுத்து இவர்களை கொலை செய்தது என்றே அடையாளப்படுத்தல் வேண்டும். இந்நிலை இனியும் தொடர சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்,ஐ.நா மனித உரிமை பேரவையும் இனியும் இடமளிக்கக் கூடாது என்பது எமது உருக்கமானதும் அளுத்தமானதுமான வேண்டுகோள்.

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. இது விடயம் தொடர்பில் அரசின் செயற்பாடுகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல வடகிழக்கிற்கு வெளியே நீதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் நம்பிக்கை இல்லை. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.

இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு பாரதூர சம்பவங்கள் தொடர்பில் ஆழ ஆராய்ந்து அதன் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டுவதற்கும், அவ்வாறான நிகழ்வுகள் மீழ் நிகழ்வதை தடுப்பதற்கு என 1956 லிருந்து இதுவரை 36 வரை ஆணை குழுக்கள் அமைக்கப்பட்ட போதும் அவ் ஆணை குழுக்களின் அறிக்கைகள் முழுமையாக மக்கள் முன் வைக்காது மறைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சித்துள்ளனர். அது மட்டுமல்ல அவ் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் துணிவு இருக்கவில்லை.காரணம் உண்மையை மூடி மறைத்து அரசியல் குளிர் காய்வதே அவர்களின் நோக்கம். 

அவ்வாறே யுத்தம் முடிவற்றதன் பின்னர் காணமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் பல்வேறு ஆணை குழுக்கள் நியமிக்கப்பட்டன.அவ் ஆணைக்குழுக்கள் நியாயமான பரிந்துரைகளை முன் வைத்த போதும் அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்கள் துணியவில்லை.

தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவி உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டப் போவதாக அறிவிக்கலாம். இதற்கு வலிந்து காணாமலாக்கட்ட உறவுகளின் அமைப்போ நாமோ உடன்பட போவதில்லை என உரத்து கூறுகின்றோம். ஆதலால் இச்சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அளுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், இலங்கை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறப்படுகின்ற உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தேவையை நிறைவேற்றலாமே தவிர அதன் மூலம் எதிர்பார்க்கும் நீதியை அடைய முடியாது என்பதே உண்மை. எனவே சர்வதேச உதவி அமைப்புகளும்,நலன் விரும்பிகளும் வலிகளோடு வாழும் உறவுகளின் அமைப்பால் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்திலும், யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ,ஐ. நா மனித உரிமை பேரவையும் இலங்கை ஆட்சியாளர்களை இனியும் நம்பக் கூடாது என்பதோடு எனது வாலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அவசர உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என ஐநா மனித உரிமை பேரவையிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வதோடு யுத்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமாறும் தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இன அழிப்பினை சர்வதேசம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது என்பது அதனை அங்கீகரிப்பதாக அமைந்து விடுமாதலால் ஆதலால் அதனை தடுப்பதற்கு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/177450

கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்

2 months 4 weeks ago
27 FEB, 2024 | 03:49 PM
image

தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால், அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். 

குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது  கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும்.

2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர்.

என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன். அதற்காக எனது அமைச்சு பதவியை துறந்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177432

இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலைச் சம்பவங்கள் பதிவு!

2 months 4 weeks ago
27 FEB, 2024 | 01:04 PM
image

இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (26)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கையில் இவ்வருடம்  இரு மாத காலப் பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 1,180 திருட்டு சம்பவங்களும் 310 கொள்ளைச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இரு மாத காலப்பகுதிக்குள் 20 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகின.

அவற்றில் 10 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் பாதாள உலக குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177411

மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை; நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் பாதிப்பு

2 months 4 weeks ago

Published By: DIGITAL DESK 3   27 FEB, 2024 | 12:38 PM

image

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர். 

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி, விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார். 

அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/177414

புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !

2 months 4 weeks ago
wijeyadasa-750x375.jpg புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் புதிய கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தும் அதேவேளையில், குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக, கைதிகளை திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1371327

யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது!

2 months 4 weeks ago
spacer.png யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது!
யாழில் சக  பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து  மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் நேற்று முன்தினமிரவு மதுபோதையில்  உள்நுழைந்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

 
அதேவேளை நிர்வாக ரீதியான விசாரணைகளை முன்னெடுத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் , பணி இடைநிறுத்தம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள்

2 months 4 weeks ago
மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள்

ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் கன்றை ஈன்றுள்ளது. குறை மாதத்தில் பிறந்த கன்றால் எழும்பிகூட நிற்க முடியவில்லை. இந்த கன்று குட்டி. இது அநியாயம்தானே? இது வாய்பேச முடியாத மிருகம் தானே இது? இது மின்சாரக் கம்பியா? இல்லையா என இதுக்கு தெரியுமா? பௌத்த தர்மத்தை மதிக்கும் அனைவரும் பாருங்கள்.

வாய்பேச முடியாத ஜீவன்களுக்கு இவ்வாறு செய்கிறீர்கள்? சுடுகிறீர்கள். வாய் வெடியை போடுகிறீர்கள். கட்டுத் துப்பாக்கியை கட்டுகிறீர்கள். வெட்டுகிறீர்கள். நீங்களா, பௌத்த தர்மத்தை மதிப்பவர்கள்?” என கால் பண்ணையாளர் ஒருவர் கவலை வெளியிடுகின்றார்.

மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக் விடுத்து வருகின்றனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை சந்திப்பதாக நேற்று (பெப்ரவரி 25) தெரிவித்த, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தம்மை சந்திக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகள், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளதாகவும் இதுத் தொடர்பில் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தாகத்தைத் தீர்க்க வழியின்றி பண்ணையாளர்கள் தடுமாறுவதாக அவர் வலியுறுத்துகின்றார்.

சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பேர் வரையில் தங்கியிருப்பதாகவும் பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.

தனக்கு சொந்தமான 50 மாடுகளில், 15 மாடுகளை விவசாயிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கும் பண்ணையாளர் ஒருவர், தமது வாழ்வதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

“காலங்காலமாக மாடுகள் கொண்டுவந்து கட்டும் இடம். இவர்கள் அத்துமீறி குடியேறியமைால் எங்கள் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதும், இதோடு வெட்டிடி போட்டுள்ளார்கள். இதோடு 15 மாடுகள். என்னுடைய 50 பதிவு செய்து, 15 மாடுகள் இவ்வாறு கிடக்கின்றன. இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. மாடுதான் எங்களின் வாழ்வாதாரம். இவர்கள் வந்ததால்தான் இந்த அழிவு கூட.”

மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பால் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்றன.

இவர்கள் அனைவரது வாழ்வதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.
 

http://www.samakalam.com/மேய்ச்சல்-தரையை-மீட்க-போ/

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கையின் இருப்பு

2 months 4 weeks ago

தேசிய மக்கள் சக்தியின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்தியா பயணம், இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளின் தலைவர்களை அழைப்பதில் இந்தியாவின் நோக்கங்கள் பற்றிய ஊகங்களை எழுப்பியது.

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி ஒரு வலுவான மூன்றாம் தரப்பாக தோற்றம் பெற்றுள்ளமை, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிர் சமநிலையாக இருக்கக்கூடிய வகையில் அவர்களுடன் உறவுகளை வளர்க்க இந்தியாவை தூண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி போன்ற ஒரு சோசலிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவை அமைப்பதில் இந்தியாவின் ஆர்வம், இந்தியப் பெருங்கடலில் அதன் மூலோபாய இலக்குகள் மற்றும் பொருளாதார நலன்களுடன் ஒத்துப்போகிறது.

தமிழ் சமூகத்தைப் பாதிக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இந்தியா வரலாற்று ரீதியாக கவலை தெரிவித்தாலும், இந்திய உள்நாட்டு அரசியலில் சமீபத்திய மாற்றங்கள், குறிப்பாக பிஜேபியின் ஆதிக்கம், எதிர்கால இருதரப்பு உறவுகளை பாதிக்கலாம்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வரலாற்று ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ்நாட்டு காரணி, இந்தியாவில் தற்போதுள்ள ஒரு கட்சி மேலாதிக்கத்தின் கீழ் குறையக்கூடும், இது இலங்கை-இந்திய உறவின் இயக்கவியலை மாற்றியமைக்கக்கூடும். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இருதரப்பு உறவின் பலன்களை அதிகப் படுத்தும் வகையில் இலங்கை தனது அணுகுமுறையை மாற்றியமைக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.

 

https://newuthayan.com/article/இந்தியாவின்_வெளியுறவுக்_கொள்கையில்_இலங்கையின்_இருப்பு

யாழ். புத்தூரில் வீடும் பெறுமதியான பொருட்களும் தீயில் எரிந்து நாசம்

2 months 4 weeks ago
யாழ். புத்தூரில் வீடு தீக்கிரை ; பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

Published By: DIGITAL DESK 3    27 FEB, 2024 | 10:51 AM

image

யாழ்ப்பாணத்தில் வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன. 

புத்தூர் கலைமதி பகுதியில் உள்ள வீடொன்றே நேற்று திங்கட்கிழமை (26) இரவு தீப்பற்றியுள்ளது. 

அதனை அடுத்து வீட்டார், வீட்டில் இருந்து வெளியேறிய அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காத நிலையில், யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மின் கசிவு காரணமாகவே வீடு தீப்பிடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177400

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சஜித்தின் மகளது புகைப்படம்!

2 months 4 weeks ago
WhatsApp-Image-2024-02-25-at-21.16.42_e0

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் கடந்த சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் தான் ஒரு பெண் குழந்தையின் தந்தை என அறிவித்தார். இந்நிகழ்வில் அவரது மனைவி ஜலானியும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் .

இந்நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கைப் பெண்களின் நலனுக்காக தாம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த சஜித் அண்மையில் தமது மகளை குறிப்பிட்ட அரசாங்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தைக்குத் தாங்கள் கோரிய குறிப்பிட்ட ஊசி கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
sajith-1.jpg

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

https://thinakkural.lk/article/293157

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

2 months 4 weeks ago

Published By: VISHNU    26 FEB, 2024 | 06:21 PM

image

அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை குறிப்பிட்டு கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் தெரியபடுத்துமாறு கல்வி அமைச்சு ,அனைத்து மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலில் மாணவர்களுக்கான விசேட  குறிப்பிடுவதாவது ,

1. கறுப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும் 

2. தொப்பி அணிந்து அல்லது குடையைப் பிடித்தவாறு வெயில் செல்லுங்கள்

3. வீட்டிலிருந்து செல்லும் போது சுத்தமான குடிநீரை எடுத்து செல்லவும்

4. அதிகளவில் தண்ணீர் அல்லது இளநீர் அருந்தவும்

5. அதின வெப்பநிலை காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் பாடசாலை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்கவும்

6. உடல் சூட்டை குறைக்க தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவும்

7. தேவையற்ற சந்தர்ப்பங்களில்  டையை இறுக்கமாக கட்டிக் கொள்வதனை தவிர்க்கவும்

https://www.virakesari.lk/article/177373

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை

2 months 4 weeks ago
அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை:  கணக்கெடுப்பில் தகவல்!

Published By: VISHNU    26 FEB, 2024 | 05:21 PM

image

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71 சத வீதமானவை முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பின்படி,  அரச  நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 29 சத வீதமானவை மட்டுமே சரியாக இயங்குவதாகவும் 49 சத வீதமானவை இயங்கவில்லை  என்றும், 22 சத வீதமானவை செயற்பாட்டில் இருந்தாலும்  யாருக்கும் பதிலளிப்பதில்லை என்றும்  தெரிய வந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் இந்த கணக்கெடுப்புத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கணக்கெடுக்கப்பட்ட 276 பிரதேச சபைகளில் 98 பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 14 சத வீதமான தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை, 42 சத வீதமானவை  பதிலளிக்கப்படவில்லை.  44 சத வீதமானவை மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் பதிலளிக்கப்பட்ட   உத்தியோகபூர்வ  தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக   வழங்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பயனும் அல்லது பொருத்தமும் இல்லை என்றும் பேராசிரியர் அத்துகோரள மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/177367

யாழில் விமானப்படையின் கண்காட்சி

3 months ago

Published By: DIGITAL DESK 3   26 FEB, 2024 | 03:35 PM

image

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்”  எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்யும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை வடக்கில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் “தொழினுட்பம் , கல்வி மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் நடத்தவுள்ளன.

கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.

இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் ஆகும். கண்காட்சிக்கு, 2 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ஜெட் விமான இயந்திரம் ஒன்றினையும் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தவுள்ளோம். கண்காட்சியின் முடிவில், அதனை யாழ். பல்கலைகழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177349

அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!

3 months ago
26 FEB, 2024 | 12:33 PM
image
 

யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா பிரைவேட் லிமிடெட் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் உள்ளூர் சந்தையில் பெற்றோலிய பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்க்ஷனா ஜயவர்தன மற்றும் யுனைடெட் பெற்ரோலியம் அவுஸ்திரேலியா சார்பாக அதன்  நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் எடி ஹேர்ஸ் (Eddie Hirsch) ஆகியோர்  இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பெற்ரோலிய சில்லறை விற்பனையாளர் மற்றும் இறக்குமதியாளருக்கு இலங்கை முழுவதும் 150 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/177317

 
Checked
Sun, 05/26/2024 - 11:16
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr