Aggregator

அனீரிஸம்: இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

3 months 2 weeks ago
இவர்கள் எல்லோரையும்விட இன்று அதிகமாக அரசியல்வாதிகளாக வருவோருக்கு ஏற்படவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். உதாரணத்திற்கு தற்போதைய உலகநடப்பை ஆராய்ந்தால் அறியலாம்.🫣

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

3 months 2 weeks ago
நானும் தான் மேசையில் குத்தியே ராஜதந்திரிகளை கிலிகொள்ள வைக்குமளவுக்கு இன்னொமொரு தமிழ் அரசியல்வாதி பிறக்கவில்லை என்பதால்

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

3 months 2 weeks ago
Published By: VISHNU 09 JUL, 2025 | 01:43 AM யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/219526

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

3 months 2 weeks ago

Published By: VISHNU

09 JUL, 2025 | 01:43 AM

image

யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி - அச்செழு சூரசிட்டி பகுதியை சேர்ந்த 28 வயது என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த 2ஆம் திகதி முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மனைவி கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 4ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் தாயார் வீட்டிற்கு சென்று அங்கிருந்துள்ளார்.

இதனால் மன விரக்தியடைந்த கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/219526

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

3 months 2 weeks ago
தமிழர்களின் தலைவர்களை அறிந்துள்ளேன். சிலரை நேரிலும் கண்டுள்ளேன், தலைவனையும் நேரில் கண்களால் காணும் பாக்கியத்தையும் பெற்றுள்ளேன். சம்பந்தரை ஊடகங்களில்தான் அறிந்தேன், அந்த அறிவு பச்சைப் பூச்சி மூக்கில்பட்டுத் தெறித்துபோன்ற உணர்வை ஏற்படுத்தியது, அதன் தாக்கம் குறைந்து மறந்துவரும் நேரத்தில் மீண்டும் இந்தப்பதிவு 👇 பூச்சியை மூக்கின் உள்ளேயே நுளைத்துவிட்டது.😩

யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; பொலிஸார் தீவிர விசாரணை

3 months 2 weeks ago
09 JUL, 2025 | 09:51 AM யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219537

யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; பொலிஸார் தீவிர விசாரணை

3 months 2 weeks ago

09 JUL, 2025 | 09:51 AM

image

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை. 

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/219537

15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 10:27 AM 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார். உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை கழித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே, 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவனை அவனின் சம்மதத்துடனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோதமானது. பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையில் உள்ள சொரபொர வெவ எனும் குளம் பகுதியில் சுமார் 15 சிறுவர்கள் சுற்றித்திரிவது பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/219535

வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை! வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர், மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது. இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நிதியை கையாள்வது இப்போது நிச்சயமற்றதாகவே உள்ளது. மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமிட்டபடி இறக்குமதிக்கு கிடைக்குமா அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த விரைவில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவோம் என்று நம்புகிறோம். நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், சந்தை தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து உள்ளூர் வாகன விலைகள் தவிர்க்க முடியாமல் மீண்டும் உயரும். தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறைந்தது 9,000 வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அத்துடன், வாகன அசெம்பிளி ஆலைகளுக்கு வரி சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் முடிவையும் விமர்சித்த அவர், அது அர்த்தமுள்ள பொருளாதார நன்மைகளை வழங்கத் தவறிவிட்டது என்றும் கூறினார். https://athavannews.com/2025/1438545

வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

3 months 2 weeks ago

New-Project-110.jpg?resize=750%2C375&ssl

வாகன விலைகள் மீண்டும் உயரலாம் – வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை!

வாகன இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் நிபந்தனைகளை விதித்தால், உள்ளூர் வாகனச் சந்தை கடுமையான விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானகே எச்சரித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் உரையாற்றிய அவர்,

மத்திய வங்கியின் அண்மைய அறிக்கைகளின்படி, நிதி நிறுவனங்கள் ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்களை (LCs) திறந்துள்ளது.

இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நிதியை கையாள்வது இப்போது நிச்சயமற்றதாகவே உள்ளது.

மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமிட்டபடி இறக்குமதிக்கு கிடைக்குமா அல்லது புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த விரைவில் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவோம் என்று நம்புகிறோம்.

நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், சந்தை தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து உள்ளூர் வாகன விலைகள் தவிர்க்க முடியாமல் மீண்டும் உயரும்.

தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக குறைந்தது 9,000 வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

அத்துடன், வாகன அசெம்பிளி ஆலைகளுக்கு வரி சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் முடிவையும் விமர்சித்த அவர், அது அர்த்தமுள்ள பொருளாதார நன்மைகளை வழங்கத் தவறிவிட்டது என்றும் கூறினார்.

https://athavannews.com/2025/1438545

பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!

3 months 2 weeks ago
பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்! சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை. ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை என்றார். இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க மோதலை பிரதானமாக பயன்படுத்தி சீனா பாகிஸ்தானுக்கு தீவிர இராணுவ ஆதரவை வழங்கியதாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் மேற்படி பதில் வந்தது. https://athavannews.com/2025/1438489

பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!

3 months 2 weeks ago

New-Project-105.jpg?resize=750%2C375&ssl

பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!

சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை.

ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர்,

சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன.

பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.

மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை என்றார்.

இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க மோதலை பிரதானமாக பயன்படுத்தி சீனா பாகிஸ்தானுக்கு தீவிர இராணுவ ஆதரவை வழங்கியதாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் மேற்படி பதில் வந்தது.

https://athavannews.com/2025/1438489

இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை!

3 months 2 weeks ago
இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை! அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் தங்கள் பாதணிகளைக் கழற்ற வேண்டிய அவசியம் இனி ஏற்படாது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem)தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புதிய கொள்கை அமலுக்கு வருவதாக நோயம் கூறினார். இது வரை காலமும் விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் தங்கள் பாதணிகள், இடுப்புப் பட்டி உள்ளிட்ட பொருட்களை கழட்ட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்நிலையிலேயே பயணிகளின் நலன் கருதி அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விமான நிலையத்தில் தனிநபர்களை தங்கள் காலணிகளுடன் சோதனையிடக்கூடிய நவீனமயப்படுத்தப்பட்ட திரையிடல் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது ‘தான் முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் நோயம் உறுதியளித்தார். https://athavannews.com/2025/1438549

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

3 months 2 weeks ago
தமிழ் மக்களின் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, சம்பந்தனின் இறுதிக்காலத்தில் தேர்தலுக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது வேதனை. தற்போது எவருடன் சேர்ந்தாவது ஆட்சியமைத்தால் சரியென்கிற நிலைக்கு இக்கட்சியினர் இறங்கியிருப்பது சம்பந்தரின் காலத்தின்பின்னர் இக்கட்சி மேலும் மேலும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.