Aggregator
சிரிக்கவும் சிந்திக்கவும் .
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கொஞ்சம் ரசிக்க
நான் ரசித்த விளம்பரம் .
மலரும் நினைவுகள் ..
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு
பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!
பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!
13 Nov, 2025 | 03:21 PM
![]()
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார்.

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தி.இராஜகோபாலன் காலமானார்!
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் - தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம்
2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் - தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம்
2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம்
Published By: Digital Desk 1
13 Nov, 2025 | 01:29 PM
![]()
2025ஆம் ஆண்டுக்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசியநிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
"நமது நிகழ்காலத்தைப் பாதுகாக்கவும், நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்" என்ற தலைப்பில் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பு மையத்தால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக வருடந்தோறும் 10 மில்லியன் உயிரிழப்புக்கள் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு என்பது பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாக உருவாகும் ஒரு நிகழ்வாகும். இது உலகளாவிய சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்படுகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் AMR பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிப்பதையும் மருந்து எதிர்ப்புத் தொற்றுகளின் தோற்றம் மற்றும் பரவலைக் குறைப்பதற்கான சிறந்த நடைமுறைகளை இனம்காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மருந்து எதிர்ப்பின் விளைவாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம் இதன்காரணமாக நோய் பரவும் அபாயம், கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அதிகரிக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்புக்கான தேசிய மையத்தின் தலைவர் பிரதி பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் பிரியந்த அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2019ஆம் ஆண்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.27 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.95 மில்லியன் ஆகும். இதனை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டுக்குள் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான நோய் காரணமாக நீண்டகால வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் விலையுயர்ந்த மருந்துகளின் தேவை ஆகியவற்றுடன், நுண்ணுயிர் எதிர்ப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்களும் அவர்களது குடும்பங்களும் பெரும் நிதிச்செலவுகள் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
2030ஆம் ஆண்டுக்குள், நுண்ணுயிர் எதிர்ப்பு 24 மில்லியன் மக்களை தீவிர வறுமையில் தள்ளக்கூடும். மேலும், 2050ஆம் ஆண்டுக்குள், நுண்ணுயிர் எதிர்ப்பு தாக்கம், அதிக விலை கொண்ட மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளால் 1.2 டிரில்லியன் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளுக்கு வழிவகுக்கும்.
நுண்ணுயிர் எதிர்ப்பை எதிர்த்துப் போராட நாம் செய்யக்கூடிய முக்கிய விடயங்களில் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் தேவையற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகும் என குறிப்பிடப்படுகிறது.
மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதனூடாக, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் தொற்று பரவுவதைத் தடுக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இரசித்த.... புகைப்படங்கள்.
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்
வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்
வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்
13 Nov, 2025 | 12:47 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பதிலளித்ததாவது,
மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
வீதி விளக்குகளுக்கான விசேட மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே அறிவிடப்படுகின்றன.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளன. இவ்விடயம் குறித்து மாநகர சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.