Aggregator

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 12:24 PM

image

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது .

இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 572 ஆகவும் பதிவு செய்யப்பட்ட இறப்புகளாக ஆயிரத்து 373 ஆகவும் பதிவாகியுள்ளன.

இறப்புகளை விட 199 பிறப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216068

மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்; ஒட்டுசுட்டானில் சம்பவம்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 12:17 PM முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி தேன் குளவிகள் கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இருந்த நிலையில் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர். இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன் குளவிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/216067

மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்; ஒட்டுசுட்டானில் சம்பவம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2025 | 12:17 PM

image

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி தேன் குளவிகள் கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இருந்த நிலையில் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர்.

இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன் குளவிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிறது.

1000297963.jpg

1000297962.jpg

1000297967.jpg

https://www.virakesari.lk/article/216067

இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது

3 months 2 weeks ago
இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் - சுமந்திரன் 30 MAY, 2025 | 12:40 PM இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது? https://www.virakesari.lk/article/216073

இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது

3 months 2 weeks ago

இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் - சுமந்திரன்

30 MAY, 2025 | 12:40 PM

image

இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது?

https://www.virakesari.lk/article/216073

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

3 months 2 weeks ago
30 MAY, 2025 | 02:32 PM ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (29) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/216078

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 02:32 PM

image

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (29) மேற்கொண்டார்.

இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

DSC_3741.jpg

DSC_3745__2_.jpg

https://www.virakesari.lk/article/216078

பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி

3 months 2 weeks ago
ஆயுதமேதுமில்லாமல் தங்கள் வாழ்வை கொண்டுசென்ற மக்களை இனவழிப்பு செய்து, தப்பியவர்களை கப்பலில் ஏற்றி விரட்டியதை மனிதாபிமானம் என்பீர்களா? தங்கள் இனம் அழிக்கப்படுவதை தடுக்க ஆயுதம் ஏந்தியதை பயங்கரவாதம் என்பீர்களா? தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தனியார் காணியில் விகாரைகள் எழுவதை தடுத்தீர்களா? இனவாதம் கக்கியவர்களை தண்டித்தீர்களா? தங்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்களை சொந்த இடங்களில் குடியேற்றினீர்களா? காணாமல் ஆக்கியவர்களை உறவுகளிடம் ஒப்படைத்தீர்களா? போர்குற்றவாளிகளை காப்பாற்றி அவர்களாலேயே கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர். கடிதம் எழுத்துவதாலேயோ, கண்டனம் தெரிவிப்பதாலேயோ நாட்டில் சுபீட்ஷத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாது. அப்படி நீங்கள் நினைத்தால்; உங்கள் அறம் பற்றியபுரிதலில் ஏதோ தவறு இருக்கிறது. உங்களுக்கு அறத்தை கற்பித்தவர்கள் தவறாக போதித்து வழி நடத்தியுள்ளார்கள். காசுக்கு வழக்கு பேசுவதற்கும், மக்கள் மேல் தொடுக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் உங்களது புரிதலும் குற்றம் சாட்டுதலும். நீங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் அதன் பின் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டாரா என்பதே கேள்வி. ஆமா, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு சிங்களம் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் உங்கள் முகவர்களாகவே செயற்பட்டிருக்கிறார்கள். அதையே காலங்காலமாக செய்து வருகிறீர்கள், அதில் எந்த சந்தேகமுமில்லை எங்களுக்கு. சட்டத்தை, அதிகாரத்தை எல்லோருக்கும் சமமாக பயன்படுத்தும் கனடாவில் பிரிவினைவாதம் தலைதூக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அதை செய்யாமல் விட்டு, மற்றைய இனத்தின் சுதந்திரத்தை, வாழ்விடத்தை அபகரித்ததனாலேயே பிரச்சனை தோன்றியது. பிரச்சனையின் தோற்றுவாயே சிங்களம், பௌத்தம் என்கிற வெறியே. அதை ஏற்றுக்கொண்டு தீர்வுகாணாதவரை நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். மற்றைய இனத்தின் பாரம்பரியம், உரிமையை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்களை சீண்டிக்கொண்டிருந்தால் சமாதானம் ஏற்படாது. உண்மை நீதி என்றால் என்னவென்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு நீதியமைச்சர் பதவி ஒரு கேடு. சரியாக சொன்னீர்கள். நீங்கள் நாட்டில் வன்முறைகளை தூண்டுவதும், இனங்களை பிரித்தாழுவதும், இனமத முறுகலை ஏற்படுத்துவதும் நாட்டை அழிப்பதும் உங்கள் அரசியல் தேர்தல் ஆதாயங்களுக்காகவே!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இன்றைய போட்டியில் மும்பை அணி பெயரளவில் பலமான அணியாக இருந்தாலும் குஜராத் அணி வெல்லும் என கருதுகிறேன் . மும்பை அணி வெல்லும் என கருதுபவர்கள் மும்பை எனவும் குஜராத் அணி வெல்லும் என கருதுபவர்கள் குஜராத் எனவும் குறிப்பிடவும், பெரும்ப்பான்மையானோர் இந்த் போட்டியில் இரு அணியினை தெரிவு செய்யாதமையால் இந்த முயற்சி. அந்த 5 நபர்கள் விதிவிலக்கு ஆனாலும் மும்பை வெல்லும் என குறிப்பிட்டு மும்பையினை வாக்குகாளால் ஆவது வெல்ல வைக்கலாம். உறுதியாக மும்பாய்க்கு 5 வாக்குகள்தான் கிடைக்கும்.🤣 எனது வாக்கு குஜராத்திற்கே! GT 1 VS MI 0 தற்போது குஜராத் முண்ணனியில் உள்ளது.😂

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இன்றைய மும்பை, குஜராத் போட்டியில் மும்பை அணிக்காக ரிக்கில்ட்டனின் இடத்திற்கு ஜொனி பரிஸ்டோ களமிறங்குவார், ஜாக்கின் இடத்திற்கு அசல்ங்கா அல்லது ஜாக்கோப் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குஜராத்திற்காக குசால் மென்டிஸ் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இந்த ஆடுகளம் ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக புற்களுடன் காணப்படுவதாமாகவும் மறுபக்கம் புற்கள் அற்று சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படுகிறது என கூறப்படுகிறது ஆனால் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக ஸ்குயார் எல்லைக்கோடுகள் 62 மற்றும் 65 மிட்டர்கள் மட்டும் கொண்டவையாக காணப்படுவதால் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக காணப்படும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை எடுப்பதன் மூலம் ஓட்டங்கலை மட்டுப்படுத்துவதற்கு ஏற்ப ஆடுகளம் காணப்பட்டாலும் பக்க எல்லைகள் குறுகலாக இருப்பது பாதகமாக இருக்கலாம். பந்து வீச்சாளர்கள் பந்தினை விக்கெட்டு டு விக்கெட் என போட முயல்வதுடன் துடுப்பாட்டக்காரர்களை நேர் கோட்டாக விளையாடாமல் குறுக்காக விளையாட வைக்கவும் உள்ளே இருந்து வெளியே அடிக்க கால் உள்ளடங்கலாக உடலின் கீழ் பகுதிகளை குறிவைத்து பந்து வீசுவார்கள், குறிப்பாக சரியான அளவிற்கு சற்று குறைவாக (Back of length) பந்து வீச முயற்சிப்பார்கள். ஆனால் அளவு குறைந்த பந்துகளின் (short ball) தாக்கம் குறைவாக இருக்கும். மைதான ஈரலிப்பு காணப்படும் என்பதால் நாணய சுழற்சி முக்கியம் பெறும், நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என கருதுகிறேன். இந்த மைதான மற்றும் ஆடுகள நிலவரங்களின் அடிப்படையில் 180 - 190 வெற்றிக்குரிய ஓட்டங்களாக இருக்கும் என கருதுகிறேன். இறுதிப்போட்டியில் தீபக் சாகர் மற்றும் திலக் வர்மா தசைப்பிடிப்பு காரணமாக ஆடுகளத்திலிருந்து வெளியேறி இருந்தார்கள் என கருதுகிறேன், இவர்களில் யாராவது ஒருவர் இன்று காயம் காரணமாக விளையாட முடியாமல் போனால் இன்னுமொரு புதிய வீரர் களமிறங்குவார்கள், இவ்வாறு புதிய வீரார்க்கள் வாழ்வா சாவா போட்டிகளில் பெருமளவில் களமிறங்கும் அணி பலவீனமாக காணப்படும்,

"சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்"

3 months 2 weeks ago
காமம்தான் காதலுக்கு அத்திவாரம் என்ற ரீதியில் பல கவிஞர்களும், அறிஞர்களும் கூறியுள்ளார்கள், எழுதியம் வருகிறார்கள. ஆனால் மனித அறிவுப் பசியும் காதலுக்கு உரமாகி அத்திவாரம் இடும் என்ற உண்மையை கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் இந்தப் பதிவு துல்லியமாக உணர்த்துகிறது. நூலகத்தை மனித மிருகங்கள் எரித்துத் தமிழினத்தை உலகில் அழித்துவிட முயன்றாலும், அது சாம்பல் ஆகியபின்பும், தமிழினத்தின் நெற்றியில் அமர்ந்து உலகம் உள்ளளவும் துலங்கி, அந்த இனம் அழியாது காப்பாற்றிவரும். இந்த உண்மையை எவராலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது நம்பலாம்.😠

பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி

3 months 2 weeks ago
அங்கு கியூபெக் மக்க@ பிரிந்து போக நினைத்த போது கனேடிய அரசு சர்வஜன வாக்கேடுப்பு ஒன்றை அம்மக்களிடம் நடாத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்தியது. உங்களால் வடக்கு கிழக்கில் அப்படி ஒன்றை நடாத்த துணிவுள்ளதா? மக்களை சிறிய பரப்புக்குள் வர செய்து அவர்கள் மேல் குண்டு போட்டி கொன்றதை சிங்களத்தில் எப்படி கூறுவார்கள்?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!

3 months 2 weeks ago
ஆம் என்னுடைய பதின்ம வயதில் பார்த்த , என்னால் இன்னும் மறக்கமுடியாத‌ ஒரு படம் என்றால் இது சிறைதான். ஒரு ஐயாரின் மனைவியை (லக்க்ஷிமி) கற்பழித்து அதன் பின் அவர் படும் வேதனைகளை படம் விபரிக்கின்றது. ஆழ்ந்த அஞலிகள்! மரணம் கணிக்கவே முடியாது. இங்குதான் இயற்கை வலிமையானது. நேற்று கொழும்பு Havlock city இல் உள்ள தியேட்டரில் Final Destination Bloodlines என்னும் படம் பார்த்தேன் அந்த மாதிரி உறைய வைக்கும் மரணங்களை காட்சிகளை கொண்ட படம்