Aggregator

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

3 months 2 weeks ago
உக்ரைன் போர் எதிரொலி; 3,07,900 இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்ய அமைச்சகம் உத்தரவு உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 3,07,900-க்கும் மேற்பட்ட இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்யாவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போருக்கு முன்னர் இதுபோன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய கொள்முதல்களின் அளவு படையெடுப்புக்கு முந்தைய நிலைகளை விட மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு, இறந்த வீரர்களின் உறவினர்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. உக்ரைனில் சேவைக்கும் பிற மோதல்களுக்கும் இடையில் பதிவுகள் வேறுபாட்டைக் காட்டவில்லை. இருப்பினும் கொள்முதலில் ஏற்பட்ட அதிகரிப்பு ரஷ்யாவின் போரில் ஏற்பட்ட பாரிய இழப்புகளுடன் ஒத்துப்போகிறது. ரஷ்யா அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும், சுயாதீன மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க இழப்புகளைக் குறிக்கின்றன. இந்தாண்டு இதுவரை அமைச்சகம், 357,700 சான்றிதழ்களை ஆர்டர் செய்துள்ளது. 3,17,500 முன்னாள் படை வீரர்களுக்கும், 40,200 வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறப்புச் சான்றிதழை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, ஆர்டர்கள் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன, 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இறந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு 2,50,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், போர் வீரர்களுக்கு 8,00,000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கிடையே, உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று புலனாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனின் இராணுவம், மே 27 நிலவரப்படி படையெடுப்பிலிருந்து கொல்லப்பட்ட அல்லது தீவிரமாக காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை 9,82,840 எனக் காட்டுகிறது. இந்த புள்ளிவிவரங்களில் இறப்புகள் மட்டுமல்ல, காயம் காரணமாக போரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட துருப்புக்களும் அடங்கும். https://thinakkural.lk/article/318507

குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!

3 months 2 weeks ago
எமக்கு புலிகள் எப்படியோ… அப்படித்தான் சிங்களவருக்கு ஆமி… வடமாகாண முதலமைச்சர் மாவீரர் நினைவு நிகழ்வில் “மாவீரர்” என்ற பதத்தை தவிர்த்து “போராளிகள்” என அழைத்தால் எம் எதிர் வினை எப்படி இருக்கும். எனக்கு வந்தா தக்காளி சோஸ், உனக்கு வந்தா இரத்தம் என்பதே இரு பகுதியினரதும் நிலைப்பாடு. உண்மையில் அனுர செய்தது ஏமாற்று வேலை. ஆமியை ரணவிரு என அழைக்க வேண்டாம் என எந்த தமிழரும் கேட்டோமா? சிங்கள இன மேலாண்மையை பேண, உங்களது என நீங்கள் கோரும் நிலத்தினை உடையாது பேண உயிரை கொடுத்த அவர்கள் உங்களுக்கு எப்போதும் மேன்மக்களே. நாம் கேட்பது எமது அரசியல் உரிமையை. அதை தராமால் பேய்காட்ட இப்படி ஒரு கலக நாடகத்தை அனுரா நடத்துகிறார்.

குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!

3 months 2 weeks ago
இறுதி யுத்தத்தின் போது புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு, தப்பியோடினால் கண்டு பிடிக்கும் வகையில் தலை மயிர் கட்டையாக கத்தரிக்கப் பட்டு, சில சந்தர்ப்பங்களில் இத்தகையோரை வெளியேறும் தறுவாயில் புலிகளே சுட்டுக் கொன்றது..இவையெல்லாம் அமெரிக்காவில் பனி வனத்தில் வசிக்கிற உங்களுக்கு "காணிச் சண்டை எல்லைச் சண்டை" ரேஞ்சுக்குச் சுருங்கி விட்டது அதிசயமில்லை😂. ஆனால், இந்த அனுபவங்களூடாக வாழ்ந்து வந்த மக்களுக்கு இவை சாதாரண நிகழ்வுகளாக இருக்காது. இப்படிப் பாதிக்கப் பட்ட மக்கள்- அவர்கள் சிங்களவரால் பாதிக்கப் பட்டவர்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்- கவனமாகக் கையாளப் பட வேண்டியோர். யாழ் களத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் சுய வாக்குமூலங்களின் படி, இதைச் சொல்லும் நீங்களே, ஒரு காலத்தில் உங்கள் உயிர் முக்கியம் என்று விமானமேறி அமெரிக்கா வந்த ஒருவர். உங்களுக்கிருக்கும் சொந்த உயிர் மீதான அக்கறையை விட ஏன் வன்னி மக்கள் குறைவாக அக்கறை கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள்?

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
இது கூவாத சேவல் போட்ட முட்டையாய் இருக்கும்😂. மூளையால் யோசிக்க தவறுபவருக்கு மீண்டும் ஒரு தரம். கோவிலில் இருந்து எத்தனை தூரத்தினுள் மச்சம் விற்கலாம் என நிர்ணயிக்க வேண்டும் என நான் ஒரு போதும் எழுதவில்லை. கோவில் வளாகம் என கொள்ளப்படும் வெளிவீதி வரைக்குமே கோவில் நியமங்கள் செல்லும். செல்ல வேண்டும். அதற்கு அப்பால் அல்ல என்பதே என் நிலைப்பாடு. அதற்கு அப்பால் அது பொது வெளி. நல்லூரானாக இருந்தாலும், எந்த அப்பாடக்கராக இருந்தாலும். இல்லை நல்லூருக்கு தனி வழக்கம் வேண்டும் என வாதாடுவது, உண்மைக்கும், இதுகாறும் இருந்த நடைமுறைக்கு புறம்பானது, ஏனைய எமது கோவில்களை நாமே தரம் தாழ்த்துவது போன்றது, புனித பூமி என சங்கிகள், பெளத்த பிக்குகள் ஆடும் மிலேச்ச ஆட்டம் போன்றது.

திருக்கேதீச்சரத்தின் வருடாந்த திருவிழாவுக்காக யாழிலிருந்து கொடிச்சீலை எடுத்துச்செல்லப்பட்டது!

3 months 2 weeks ago
30 MAY, 2025 | 05:29 PM மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்துக்கு இன்று (30) எடுத்துச்செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் என்பவரின் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, கொடிச்சீலை திருக்கேதீச்சர ஆலயத்துக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை (31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 1982ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்த நிலையில், யுத்த காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டிருந்தது. 2022ஆம் ஆண்டு திருக்கேதீச்சரம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் 3ஆவது முறையாக இந்த ஆண்டு கொடிச்சீலை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216113

திருக்கேதீச்சரத்தின் வருடாந்த திருவிழாவுக்காக யாழிலிருந்து கொடிச்சீலை எடுத்துச்செல்லப்பட்டது!

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 05:29 PM

image

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்துக்கு இன்று (30) எடுத்துச்செல்லப்பட்டது.

கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் என்பவரின் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, கொடிச்சீலை திருக்கேதீச்சர ஆலயத்துக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை சனிக்கிழமை (31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

1982ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்த நிலையில், யுத்த காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டிருந்தது.

2022ஆம் ஆண்டு திருக்கேதீச்சரம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் 3ஆவது முறையாக இந்த ஆண்டு கொடிச்சீலை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216113

“நீ கும்பிடுவது சிலையின் தலையையா? காலையா? - தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க மனோ எம்.பி. வலியுறுத்தல்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 04:51 PM ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என, கொச்சை தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கி உள்ளனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் இதுபற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிசுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்ன, நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளேன். அவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர் என்றும் மனோ குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி மனோ எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது, தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கமலநாதனை தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி தங்கி உள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளேன். https://www.bbc.com/tamil/articles/clygd5pn5j8o

“நீ கும்பிடுவது சிலையின் தலையையா? காலையா? - தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க மனோ எம்.பி. வலியுறுத்தல்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2025 | 04:51 PM

image

ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என, கொச்சை தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கி உள்ளனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்கு கொண்டு வந்த நிலையில் இதுபற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிசுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த குணரத்ன, நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளேன். அவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர் என்றும் மனோ குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி மனோ எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது,

தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கமலநாதனை தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறி தங்கி உள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.

https://www.bbc.com/tamil/articles/clygd5pn5j8o

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஷக்கீல் அக்தர் பதவி, பிபிசி செய்தியாளர் 30 மே 2025, 08:04 GMT இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (ஸ்டெல்த் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'ரகசிய' என்று அர்த்தம். எதிரிகளே அறியாத வகையில் அவர்களின் ரேடார்களுக்கு சிக்காமல் எதிரி நாட்டிற்குள் ஊடுருவக் கூடியவை) இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்கியுள்ளன. இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்கும் ஒரு பெரிய திட்டம் ஆகும். தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 'மேம்பட்ட நடுத்தர போர் விமானம்' (AMCA) மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பொறுப்பு இந்திய அரசின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு (ADA) வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும். "இந்த திட்டம் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் சோதனை மாதிரியை உருவாக்க நாட்டின் நிபுணத்துவம், திறன்கள் மற்றும் திறனைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்" என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளித் துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதில் அனுபவம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானமான தேஜஸை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் பொறுப்பு ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் எஃப்-35 போர் விமானம் தனியார் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த உள்ளூர் திட்டத்தில் சேருவதால் இது சாத்தியமாகும் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவில், 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்' என்பது பாதுகாப்புத் துறைக்கான விமானங்களை உற்பத்தி செய்வதிலும், அசெம்பிள் செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு மார்ச் 2024 இல் பாதுகாப்புக்கான இந்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் ஏர் ஷோவில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தின் மாதிரியை ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி காட்சிப்படுத்தியிருந்தது. இது ஒற்றை இருக்கை, இரட்டை என்ஜின் கொண்ட போர் விமானமாக இருக்கும். இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்களின் தயாரிப்பு தொடங்கும் என்றும், ஆரம்பத்தில் குறைந்தது 120 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமானது, இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் இதை எவ்வாறு பார்க்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் சுகோய்-57 போர் விமானம் 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் என்றால் என்ன? அலெக்ஸ் பிட்சாஸ் அட்லாண்டிக் கவுன்சிலில் ஒரு மூத்த ஆராச்சியாளர் மற்றும் பாதுகாப்பு, வான்வெளி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப துறைகளில் நடைபெறும் டிஜிட்டல் மாற்றம் குறித்தும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்தும் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் பென்டகன் அதிகாரி ஆவார். பிபிசியின் முன்சா அன்வரிடம் பேசிய அவர், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கிய அம்சம் "ஸ்டெல்த் தொழில்நுட்பம்" ஆகும் என்று குறிப்பிட்டார். " இது விமானத்தின் ரேடார் குறுக்குவெட்டு மற்றும் வெப்ப கண்டறிதலைக் குறைக்கிறது, இதனால் விமானத்தின் இருப்பை ரேடாரால் கண்டறிவது மிகவும் கடினம்" என்றார். அலெக்ஸ் பிட்சாஸின் கூற்றுப்படி, இந்த விமானங்கள் ஆயுத தளவாட அமைப்புகள், எளிதாக திசை மாற்றி இயக்கும் திறன் மற்றும் சூப்பர்சோனிக் வேகத்தில் பறந்து செல்லுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன. "ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் அதிநவீன போர் விமானங்கள், அவை ஸ்டெல்த், சூப்பர் க்ரூயிஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. ரேடாரைத் தவிர்க்கும் திறன் அவற்றுக்கு உள்ளது. இதன் காரணமாக எதிரிகளால் அவற்றின் இருப்பை எளிதில் கண்டுபிடிக்க முடியாது" என்று விளக்கினார் பிட்சாஸ். மேலும், "புதிய இயந்திர வடிவமைப்புகள், குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் உள்ளடங்கிய ஆயுத அறைகள் விமானத்தின் வெப்பநிலையை குறைக்கின்றன, இதனால் வெப்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தை கண்டறிவது கடினம்." என்றார். ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட இயக்கம் மற்றும் நீண்ட தூரத்தில் தாக்கக் கூடிய ஆயுதங்கள் போன்ற இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகின்றன என்று பிட்சாஸ் கூறுகிறார். "அவற்றைக் கண்டறிந்து குறிவைப்பது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு கூட ஒரு பெரிய சவாலாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார். பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?9 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு ஸ்டெல்த் போர் விமானங்கள் ஏன் முக்கியம்? பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் விமானப்படையின் முக்கியத்துவத்தை அல்லது எதிர்கால போரில் விமானப்படை மற்றும் போர் விமானங்களின் முக்கியத்துவத்தை தெளிவாகக் காட்டுகிறது என்றார். ராகுல் பேடி கூறுகையில், "இந்த சமீபத்திய மோதல் முக்கியமாக இரு நாட்டு விமானப்படைகள் சம்பந்தப்பட்டது. நான்கு நாட்கள் நீடித்த இந்த போரில் போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது இரு நாடுகளிடமும் உள்ள விமானங்கள் நான்காம் தலைமுறை விமானங்களாகும்." என்றார். இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் விமானப்படை மீது குவிந்துள்ளதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். ஸ்டெல்த் போர் விமான தயாரிப்பு திட்டமும் இந்த கொள்கையின் ஒரு பகுதியாகும். இதனால், தரைப்படையின் முக்கியத்துவம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், பாதுகாப்பு ஆய்வாளர் பிரவீன் சாஹ்னி, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கியத்துவம் இப்போது இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் '(ஊடக ஆதாரங்களின்படி) ஜே -35 ஏ என்கற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா வழங்க முடிவு செய்துள்ளது' என்று கூறுகிறார். "பாகிஸ்தானிடம் இந்த போர் விமானங்கள் இருந்தால், இதுபோன்ற ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இது நடந்தால், அது இந்திய விமானப்படைக்கு கடினமான சூழ்நிலையாக இருக்கும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப்படை சமநிலையை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்றும். இந்தியாவிடம் தற்போது ஐந்தாம் தலைமுறை விமானங்கள் எதுவும் இல்லை." என்பது அவரது கருத்து. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐந்தாம் தலைமுறை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகலாம். இந்தியா ஒப்புதல் அளித்துள்ள ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்தின் முன்மாதிரி அல்லது சோதனை மாதிரி 2028ஆம் ஆண்டில் தயாராக இருக்கும் என்று பிரவீன் சாஹ்னி கூறுகிறார். அவர் கூறுகையில், "ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் தற்சார்புக்கு ஒரு நல்ல யோசனை. ஆனால் தற்போது அமைதியான சூழல் இல்லை. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, தற்போது போர் நிறுத்தம் மட்டுமே உள்ளது, அமைதி நிலைநாட்டப்படவில்லை" என்றார். மேலும், "எனவே இந்த சூழ்நிலையில், இந்தியா மிக விரைவில் வெளிநாடுகளில் இருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வாங்க வேண்டியிருக்கும். (ஏனென்றால் இந்திய திட்டங்களின்படி, உள்நாட்டிலேயே தயாராகும் போர் விமானங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும்). ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டம் நீண்ட காலத்திற்கு நல்லது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை." என்றார். ராகுல் பேடி கூறும்போது, "இந்த திட்டமும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது, ஏனெனில் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னை விமானத்தின் என்ஜினை தயாரிப்பதுதான். இந்தியா இதுவரை எந்த போர் விமான இயந்திரத்தையும் தயாரித்ததில்லை. கூடிய விரைவில் இந்தியாவில் விமான என்ஜின் தயாராகிவிடும் என்ற நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் இப்போது அந்த பேச்சுவார்த்தைகளும் பலவீனமடைந்துள்ளன" என்றார். இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டம் நிறைவேற நிறைய காலம் எடுக்கும் என்றும் சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பேடி கூறுகிறார். இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யாவின் சுகோய்-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 போர் விமானம் இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஐந்தாம் தலைமுறை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதால், அதுவரையிலான சவாலான காலகட்டத்தை சமாளிக்க வேறு தெரிவுகளை நாடலாம். சீனா தவிர, அமெரிக்காவின் எஃப் -35 மற்றும் ரஷ்யாவின் சுகோய் -57 ஆகிய இரு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றை இந்தியா வாங்கலாம். சில மாதங்களுக்கு முன்பு, இந்திய பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, இந்தியாவுக்கு எஃப் -35 போர் விமானங்களை விற்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் ராகுல் பேடி, "இந்த விமானத்திற்கு இந்தியா ஆம் அல்லது இல்லை என்ற பதிலை அளிக்கவில்லை. இதற்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலாவதாக, இந்த விமானம் அதிக விலை உடையது, அது ஒரு மணி நேரம் பறக்க இந்திய மதிப்பில் சுமார் 30 லட்ச ரூபாய் செலவாகும். இரண்டாவதாக, விமானப்படை அதன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு தனி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்." என்று கூறினார். "போர் விமான தயாரிப்பில் சீனா ஒரு படி முன்னேறியுள்ளது, இப்போது சீனா ஆறாவது தலைமுறை இரட்டை என்ஜின் போர் விமானத்தை உருவாக்கி விட்டதாகக் கூறுகிறது. அதன் சோதனை கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டது." என்றார் பேடி. ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தவிர, அவசரகால போர் உபகரணங்களை வாங்க இந்த மாதம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதிக்கான ஒப்புதலையும் இந்திய அரசு அளித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, இந்தியா தனது வான் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நிதியிலிருந்து சுமார் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள டிரோன்களை வாங்க தயாராகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நான்கு நாள் மோதலின் போது, இரு தரப்பினரும் டிரோன்களைப் பயன்படுத்தினர். பிரவீன் சாஹ்னி, "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், டிரோன்கள் இனி அத்தகைய பங்கு வகிக்காது. உண்மையான சண்டை இரு நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும். 'ஆபரேஷன் சிந்தூரில்' டிரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. இரு நாடுகளின் விமானப் படைகளுக்கும் இடையே ஒரு இரவு மட்டுமே சண்டை நடந்தது, ஆனால் ஒரு பெரிய சண்டை ஏற்பட்டால், அந்த சண்டை விமானப் படைகளுக்கு இடையிலானதாக இருக்கும்" என்கிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்போதைய நிலைமை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடரும் என்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அதிகரிக்கவும் கூடும் என்று சாஹ்னி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygd5pn5j8o

இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது

3 months 2 weeks ago
“வாங்கோ, வாங்கோ” என அழைக்கிறீர்கள்?, நம்பி வந்தால் கைது செய்வதா?; மனோ எம்.பி. கேள்வி வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால் – திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பில் மனோ எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து விசாரித்து ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் கைது செய்து பிணையில் வெளியே விடாமல் சிறையில் அடைக்கிறீர்கள்? 75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார். https://thinakkural.lk/article/318567

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

3 months 2 weeks ago
சின்ன மாங்காவ அப்பவே சாகவிட்டிருக்கலாம். சவுமியா ஆன்டிக்கு புதுவாழ்க்கை ஒண்டு கிடைச்சிருக்கும்!!

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 months 2 weeks ago
கனடாவில் தமிழர் இனப்படுகொலை தூபி இன்றுவரைக்கும் சேதப்படுத்தப்படவோ, நொறுக்கப்படவோ இல்லை. அவ்வாறு வந்த சில சமூகவலைத்தள செய்திகள் பொய்யானவை. இப்படியான ஆதாரமற்ற வெறும் சமூகவலைத்தள தகவல்களை நம்பாதீர்கள். இதைப் பரப்புகின்றவர்களின் அரசியல் தம் வயிற்றை பாதுகாக்கும் அரசியல். பற்றிக் பிரவுண் உணர்ச்சி வேகத்தில் அப்படிச் சொல்லி விட்டார். மாநகரசபை யிற்கு இப்படியான ஒரு அதிகாரமும் இல்லை .

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 months 2 weeks ago
நான் மேலே எழுதியதில் ஒரு தவறு உள்ளது. மாகாண அரசால், மாநகர சபையின் அதிகாரங்களில் கைவைக்க முடியும். ஏனெனில் மாநகர சபை என்பது மாகாண அரசின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தின் அங்கம் என்பதால். ஆனால் மாநகர சபையால் சட்டத்திற்குற்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு தூபியை, கட்டிடத்தை அகற்ற இலகுவில் முடியாது.