Aggregator
ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்
ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது.
ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியின் ஆலோசகர் பட்டிரிக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினர், ஐ.ஓ.எம். நிறுவனத்தினர், யு.என். ஹபிட்டாட் நிறுவனத்தினர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி நில அளவையாளர் நாயகம், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட ஆளுநர், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2 ஆண்டுகளில், வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணியுடன் தொடர்புடைய முக்கிய சவால்களைத் தீர்ப்பதற்கும், அதற்குப் போதுமான முக்கியத்துவமுள்ள வகையில், அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இடையிலான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்குமான திட்டமாக இது அமைகின்றது.
இத்திட்டம், இலங்கையின் நீண்டகாலப் போர் பின்னணியில் காணிக்கான சம அளவிலான அணுகல் இல்லாமை தொடர்ச்சியான முரண்பாடுகளுக்கான மூலக்காரணமாக இருந்து வந்ததையும், மக்களின் இடம்பெயர்வு, மீளக்குடியமர்தல் மற்றும் சமூகங்களின் மீளிணைவு உள்ளிட்ட சிக்கல்களை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான இவ்வகை நம்பிக்கையின்மை நீண்டநாள் அமைதிக்குத் தடையாகவும், சமூக மாற்றத்துக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. இவை, ஒழுங்கற்ற கொள்கைகள், செயலாக்க வலுவிழப்புகள் மற்றும் நுட்பக்குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்தும் உருவாகின்றன.
இந்தச் சவால்கள் பலதரப்பட்டவையாக உள்ளன — தனிநபர் உரிமை விவகாரங்கள், இடம்பெயர்வின் தாக்கங்கள், சமூகங்களுக்கிடையிலான வளங்களுக்கான முரண்பாடுகள், இராணுவம் கைப்பற்றியுள்ள குடியேற்ற நிலங்கள், சமூக கலந்தாய்வின்றி பாதுகாப்பு அல்லது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் என வௌ;வேறு நிலைத்தன்மையற்ற சிக்கல்கள் உள்ளன.
இந்தச் சூழலில், இடம்பெயர்ந்தோர், அகதிகள், மீண்டுவருபவர்கள், குடும்பத் தலைவியரான பெண்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், இளையோர்கள் ஆகியோரது நுட்பமான நலன்கள் கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.
நில உரிமையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட தடைகள், பெண்களுக்கு சட்டப்படி உரிமைகள் இருப்பினும் நடைமுறையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்தத் திட்டம் இதனை முற்றாக உணர்ந்தும் கவனத்துடனும் செயல்படுகிறது.
அரசாங்க நிறுவனங்கள், மாகாண சபை, சிவில் சமூகம், சமூகத் தலைவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு காணிகளை விடுவித்தல், மீளக்குடியமர்தல், சமூக மீளிணக்கம் மற்றும் வீடு மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான நீடித்த, சமச்சீர் தீர்வுகளை வழங்கும் திறனுடன் செயல்படுதல் – இதன் மூலமாக எதிர்கால முரண்பாடுகளைத் தவிர்த்து, சமாதானத்தையும் சமூக நம்பிக்கையையும் கட்டியமைக்குதல் என இந்தத் திட்டத்தின் நோக்கம் தெளிவானது.
எனவே, இந்தத் திட்டத்தை எங்களால் முடிந்த அளவு நேர்த்தியான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள முடியும். இந்தத் திட்டம், நம்பிக்கையை மீட்டெடுத்து, காணி என்பது உறுதியான சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும், அனைத்து சமூகங்களுக்கும் ஒரு நிலைத்தமைப்பாக அமையும் வகையில் அமையவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர், யு.என். ஹபிட்டாட் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் திட்டம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணிப் பிரச்சினைகள் வேறு வேறானவை என மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் தற்போது அங்குள்ள காணிப் பிரச்சினைகள் எத்தகைய தன்மை வாய்ந்தவை அவற்றைத் தீர்ப்பதற்கு எவ்வாறான உதவிகளை இந்தத் திட்டத்தின் ஊடாக வழங்கலாம் என்பது தொடர்பிலும் மாவட்டச் செயலர்களும், மாகாண காணி ஆணையாளரும் குறிப்பிட்டனர்.
இதன்போது வடக்கின் 4 மாவட்டச் செயலர்களும், சூம் செயலி ஊடாக இணைந்த வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும் வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அந்தத் திணைக்களத்தின் முறைய வர்த்தமானியை மீளப்பெறுவது தொடர்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றபோதும் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை எனவும் விசனத்துடன் அதிகாரிகளும், ஆளுநரும் சுட்டிக்காட்டினர். அது முக்கிய பிரச்சினை என்றும் அதுவும் இந்தத் திட்டத்தின் ஊடாகவேனும் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தத் திட்டத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் தொடர் கலந்துரையாடல்கள் நடைபெறும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர் குறிப்பிட்டார்.
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்வு!
கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்வு!
Published By: DIGITAL DESK 2
31 MAY, 2025 | 02:04 PM
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வந்த கலாநிதி சுதர்சினி உபேந்திரன் சனிக்கிழமை (31) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில், பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய, திறமை மற்றும் தகைமையின் அடிப்படையில் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் வழங்கிய விண்ணப்பத்தின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றை அண்மைய முறையில் பரிசீலித்த பேரவை, அவரை பௌதிகவியல் துறையின் பேராசிரியராக நியமிப்பதற்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
2009 இல் இலங்கை விவகாரத்தில் ஐநா இழைத்த தவறை மீண்டும் நினைவுபடுத்தினார் டொம் பிளெச்சர் - “ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது”
2009 இல் இலங்கை விவகாரத்தில் ஐநா இழைத்த தவறை மீண்டும் நினைவுபடுத்தினார் டொம் பிளெச்சர் - “ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது”
Published By: RAJEEBAN
31 MAY, 2025 | 02:46 PM
இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான மே 14ம் திகதி உரையில் பிளெச்சர் காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவர் ஏன் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார் என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிளெச்சர் காசாவில் பலவந்தமாக இடம்பெயரச்செய்தல் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன பட்டினி குறித்து தகவல்கள் கிடைக்கின்றன சித்திரவதைகள் பெருமளவு உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.
இலங்கை, ருவாண்டா, ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் ஐநா உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது என குறிப்பிட்டுள்ள அவர் அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் உலகிற்கும் நான் வேண்டுகோள் விடுத்தேன் எனக்குறிப்பிட்டுள்ளதுடன் நீங்கள் இனப்படுகொலையை தடுப்பதற்காக செயற்படுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
களைத்த மனசு களிப்புற ......!
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி
ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!
மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா?
மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா?
30 May 2025, 7:00 AM
திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் செல்லவிருப்பவர்கள் பட்டியலில் ரொக்கையா மாலிக் என்கிற சல்மா என்னும் பெயரைப் பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி. ஆனால் ஆரவாரமான அரசியலுக்கோ பரபரப்பான எழுத்துக்கோ இவரிடம் இடம் இல்லை. அதனாலேயே பலருக்கும் இவரைத் தெரியாது. ஆனால், இவரைத் தெரிந்தவர்களுக்கு இவர் மீது மரியாதை அதிகம். காரணம், அவருடைய நேர்மை, உழைப்பு, அன்பு, எழுத்துத் திறமை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இலக்கிய உலகில் அழுத்தமான தடம் பதித்துவருபவர் சல்மா.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கினார். சிறிய ஊர்களையும் கிராமங்களையும் சேர்ந்த பலர் எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள். இவர் மட்டும் என்ன சிறப்பு என்ற கேள்வி எழலாம்.
சல்மா எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை. படிக்கவைக்க அவர் குடும்பத்துக்குப் பண வசதி இல்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் பிறந்த ஊரில், அவர் சார்ந்த தமிழ் இஸ்லாமியச் சமூகத்தில் பெண்கள் படிப்பது என்பது இயல்பான ஒன்றல்ல. பெண்கள் வயதுக்கு வரும்வரை படிக்கவைப்பார்கள். அதன் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு படிப்பது என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத சங்கதிகள். ரொக்கையா பேகம் என்னும் இயற்பெயர் கொண்ட சல்மாவுக்கும் 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. ஆனால் அதுவரை படித்திருந்தாலும் குறைந்தது 10ஆம் வகுப்பு தேறியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமாதான் சல்மாவின் கல்வியை முடக்கிப்போட்டது என்று சொன்னால் நம்புவீர்களா?
8ஆம் வகுப்பு படிக்கும்போது சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளித் தோழிகளுடன் உள்ளூர்த் திரையரங்கிற்குச் சென்றிருக்கிறார். அவர் படம் பார்த்த விஷயம் குடும்பத்திற்கும் ஊருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் முகம் சிவந்த அவர் குடும்பம் பள்ளிக்கூடத்திற்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டது.
இலக்கிய வாசனை
என்றாலும் சல்மா தளரவில்லை. தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல் ஹமீதின் (கவிஞர் மனுஷ்யபுத்திரன்) உதவியால் நிறைய புத்தகங்களைப் படித்தார். அந்த நூல்கள் அவருடைய சிந்தனையின் வாசல்களை அகலமாகத் திறந்தன. உலகை அறிய வழி வகுத்தன. இந்த உலகில் தான் யார், தன்னுடைய இடம் எது, ஏன் சிலருக்கு மட்டும் சில விஷயங்கள் கிடைப்பதில்லை என்பது குறித்த கேள்விகள் முளைத்தன. இந்தக் கேள்விகளை முன்வைத்து அவர் எழுதத் தொடங்கினார். இப்படித்தான் ராஜாத்தி என்னும் சிறுமி, சல்மா என்னும் கவிஞராகப் பரிணமித்தார்.
சல்மாவின் படைப்புலகம்
சல்மாவின் கவிதைகள் பெண்களின் அக உலகையும் தனிமையையும் பாடுபொருளாகக் கொண்டவை. பெண்கள்மீதான அடக்குமுறைகள் எவ்வளவு நுட்பமான தளங்களில் செயலாற்றுகின்றன என்பதை அவர் கவிதைகள் கூர்மையாகவும் ஆரவாரமற்ற தொனியிலும் கூறுகின்றன. அவருடைய சமூகமும் குடும்பமும் அவர் எழுதிய இந்தக் கவிதைகளை ரசிக்கவில்லை. என்றாலும் அவர் எழுத்தின் மூலம்தான் விடுதலை என்பதை உணர்ந்தவராகத் தொடர்ந்து எழுதிவந்தார். பிறரது கட்டுப்பாடுகள் தன் எழுத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த உறுதியே இலக்கிய உலகில் இவருக்கென்று ஓர் இடத்தை உறுதிசெய்தது.
1990களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை அதிகம் பங்குபெறாமல் இருந்த பிரிவுகளிலிருந்து பலரும் எழுதத் தொடங்கினார்கள். தலித்துகள், இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்ட இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இது புது வரவாக இருந்தது. இந்தப் புதிய எழுத்துக்களில் சல்மாவின் பங்களிப்பு கணிசமானது. பெண்களின் அக உலகையும் வெளியில் தெரியாத விதங்களில் அவர்கள் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கான புழங்குவெளி குறுக்கப்படுவதையும் சல்மா வலுவான கவிதை மொழியில் வெளிப்படுத்தினார். பல பெண்களுக்கு உத்வேகமூட்டும் கவிதைகளாக அவை அமைந்தன. தமிழில் பெண் கவிதைகளின் புதிய அலையை உருவாக்கியதில் சல்மாவின் கவிதைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமியின் அறிமுகம் 1995இல் ஏற்பட்டது. சுந்தர ராமசாமியின் வழிகாட்டுதலும் அவர் தந்த ஊக்கமும் சல்மாவின் இலக்கியப் பயணத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தன. சல்மாவின் நூல்களை வெளியிட்டுவரும் காலச்சுவடு பதிப்பகமும் அவருடைய எழுத்து தமிழகத்திலும் அதைத் தாண்டியும் பலரைச் சென்றடைவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இரண்டாம் சாமங்களின் கதை என்னும் நாவலை 2003இல் எழுதினார். தமிழ்நாட்டின் சிறு நகரங்களைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களின் அக உலகைச் சித்தரித்த அந்த நாவல், தமிழ் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் ஆங்கில மொழியாக்கம் ஆசியப் படைப்புகளுக்கான புக்கர் விருதின் தேர்வுப் பட்டியலில் இடம்
பெற்ற முதல் தமிழ்ப் படைப்பு. இதையடுத்து மனாமியங்கள், அடைக்கும் தாழ் என இன்றைய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய நாவல்களையும் முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலையை உணர்த்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.
உலகமே வீடு
சல்மாவின் படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் ஆங்கிலம், மராத்தி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. சிற்றூரில் பிறந்து பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத நிலையில் வாழ்ந்துவந்த சல்மா, தன் எழுத்தின் மூலம் உலகம் சுற்றும் படைப்பாளியாக மாறினார். வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து உலகமே என் வீடு என்ற நிலைக்கு அவர் வாழ்க்கை விரிவடைந்தது. 2002இல் இலங்கையில் நடந்த சர்வதேசப் பெண்ணுரிமை மாநாட்டில் பங்குகொள்ள அழைக்கப்பட்டார். 2006இல் ஃப்ராங்க்பர்ட் புத்தக விழா, 2009இல் லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010இல் பெய்ஜிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். 2007இல் சல்மாவின் படைப்புகளை முன்வைத்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. 2007இல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FETNA) தமிழ் விழா, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சிக்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார்.
அரசியல் பணிகள்
எழுத்துப் பயணத்துடன் அரசியலிலும் ஈடுபட்ட சல்மா, தன் கணவர் அப்துல் மாலிக் சார்ந்திருந்த திமுகவில் இணைந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2004இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சல்மா அதில் போட்டியிட்டுத் தேர்தலில்
வென்றார். தொகுதியில் சிறப்பான பணிகளைச் செய்ததால் பரவலாக அவர் கவனிக்கப்பட்டார். 2006இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார். சமூகநல வாரியத்தில் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.
திருச்சி நகரில் பிச்சை எடுப்பவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்தார். கிராமத் தத்தெடுப்புத் திட்டம் மூலம் கிராமத்தில் பெண் முன்னேற்றம், அனைவருக்குமான கல்வி, போன்ற திட்டங்களை முன்னெடுத்தார். திருச்சி மாவட்டத்தில் திருநங்கையருக்கான ஆலோசனை மையங்கள், ஆதரவற்ற பெண்களுக்கான கணினி மையங்கள்,மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை அவரது தலைமையில் சமூகநல வாரியம் ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ‘தந்தை பெரியார் விருது’ சல்மாவுக்கு வழங்கப்பட்டது.
இவருடைய அசாத்தியமான பயணத்தைச் சித்தரிக்கும் விதமாக ‘சல்மா’ என்னும் ஆவணப்படம் 2013இல் எடுக்கப்பட்டது. இது சல்மாவின் தன்வரலாற்றையும் அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளின் பின்னால் உள்ள சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் சிக்கல்களையும் பற்றியது. இப்படத்தை கிம் லோங்னோரோ (Kim Longinotto) இயக்கினார். இப்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு, பின்னர் பல நாட்டு விழாக்களிலும் நிகழ்வுகளில் திரையிடப்பட்டது.
தன் சமூகம் தனக்கு முன் கட்டியெழுப்பியிருந்த தடைகளையும், அதனால் விளைந்த பிரச்சனைகளையும் அவர் தாண்டி வந்த விதம் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் தன்னம்பிகையை அளிக்கின்றன. அரசியலை அதிகாரத்துக்கான வாகனமாக எண்ணாமல் மக்கள் தொண்டுக்கான வாய்ப்பாகப் பார்த்து இவர் செய்துவந்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகவே திமுக தலைமை அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியிருக்கிறது.
சல்மாவின் நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
🔷ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
🔷பச்சை தேவதை
🔷 தானுமானவள்
நாவல்கள்
🔷இரண்டாம் ஜாமங்களின் கதை
🔷மனாமியங்கள்
🔷அடைக்கும் தாழ்
சிறுகதைத் தொகுப்புகள்
🔷 சாபம்
🔷பால்யம்
அபுனைவு
🔷 கனவு வெளிப் பயணம்
தொகுப்பு: மின்னம்பலம் ஆசிரியர் குழு
https://minnambalam.com/who-is-salma-and-what-her-background/#google_vignette