Aggregator

உண்மையிலேயே NPP தீய சக்தியா?

3 months 2 weeks ago

எழுத்தாளர் கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.

1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?

2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்?

3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்?

4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா?

5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?

6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?

7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?

8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.

9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை?

இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் இவை

1. 'NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா?

இதற்கு முக்கிய காரணம். மேற்படி கட்சிகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரசியற் களத்தில் தேசிய மக்கள் சக்தி மிகவும் பலத்துடன் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ளது. வடகிழக்கில், மலையகத்தில் எல்லாம் இவ்வித தென்னிலங்கைக் கட்சியொன்று இதுவரை ஆதிக்கம் செலுத்தவில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இதுவரை காலமும் இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் கட்சிகளால் தம் கைப்பிடிகளிலிருந்து அதிகாரம் இன்னொரு சக்தியிடம் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் பிரதான காரணம்.

தேசிய மக்கள் சகதி ஒரு புரட்சிகர அமைப்பிலிருந்து உருவான கட்சி. வர்க்கரீதியாகச் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் வர்க்க விடுதலையை மையமாக வைத்து , இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பிலிருந்து உதித்து முதலாளித்துவ அரசியலுக்குள் குதித்த கட்சி. தத்துவார்த்தரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இதுவரை காலமும் அவர்கள் அவர்களது அரசியல் தத்துவத்துக்கேற்ப எடுத்த முடிவுகளுக்கெல்லாம் தமிழ்க்கட்சிகள் இனவாதம் பூசின. அதே சமயம் இனவாதக் கூறுகளும் அக்கட்சியின் கடந்த கால அரசியலில் ஆதிக்கம் செலுத்தியதும் தவிர்க்கப்படாத உண்மை. எவ்விதம் வர்க்கவிடுதலைக்காகப் போராடிய மார்க்சியவாதிகளைத் தமிழ்த்தேசிய அரசியல் உருமாற்றியதோ, அது போலவே ஜேவிபியையும், ஏனைய தென்னிலங்கை மார்க்சியக் கட்சிகளையும் சிங்களத்தேசியவாத அரசியல் உருமாற்றியது. அதே சமயம் ஈர் இனங்களிலும் உருமாறாத இடதுசாரிகள் தொடர்ந்தும் இருந்து வந்திருந்தாலும், அவர்கள் பலமற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகள் பெற்று , தம்மை வளர்த்தெடுத்து, நாட்டு மக்களின் பேராதரவைப்பெற்றுத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை,அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கின்றது. இனவாதமிருக்கும் வரையில் நாட்டைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற முடியாது என்பதைத்தேசிய மக்கள் சக்தி உணர்ந்திருப்பதையே அதன் தலைவரும் , ஜனாதிபதியுமான அநுர குமார திசநாயக்கவிம் இனவாதத்துக்கெதிரான உரைகளும், செய்ற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. உண்மையில் இது , தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், கத்தியில் நடப்பதைப் போன்றது. அவர் அவ்விதமே நடக்கின்றார். ஒவ்விரு அடியையும் நிதானமாகவே எடுத்து வைக்கின்றார்.

தென்னிலங்கையில் ஆட்சியை இழந்தவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மைப்பாதுகாக்கும் பொருட்டு இனவாதத்தைக்கிளப்புவார்கள். உதாரணத்துக்கு மாவீரர் நினைவு கூரலின்போது தமிழ், சிங்கள் அரசியலில் இன்வாதம் கிளப்பப்பட்டது. இனவாதிகளால் பொய்யான தகவல்கள் சமூக, ஊடகங்களில் பரப்பப்பட்டன. ஈரினத்திலிருந்தும் பயங்கரவாததடைச்சட்டத்தின் மீது கைதுகள் இடம் பெற்றன. இதனையொட்டி பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதியொருவரால் இனவாதம் கிளப்பப்பட்டது. அப்போது தேசிய மக்கள் சக்தி அமைச்சர் ஒருவர் அவரை இனவாதி என்றார். அதை நீக்கும்படி இனவாதம் கிளப்பியவர் கேட்டபோதும் அவர் கிளப்பியது இனவாதமே. நீக்கமுடியாது என்று தேசிய மக்கள் சக்தி அரசு மறுத்து விட்டது. அண்மையில் கூட யுத்த முடிவினை நினைவூகூரும் நிகழ்வுகளில் அவரது உரையினையொட்டி இனவாதம் கிளப்பப்பட்டது. ஆனால் அதனை வெற்றிகரமாக முறியடித்ததாகவே உணர்கின்றேன். தமிழ்ப் போராளிகளின் , மக்களின் நினைவு கூரல்களையும் அவர்கள் நியாயப்படுத்தி உரையாற்றினார்கள். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நம் அரசியல்வாதிகள் எவரும் அதனை உணர்ந்ததாகவோ , வரவேற்றதாகவோ தெரியவில்லை.

இதுபோல் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் இனவாதம் கிளப்பப்பட்டு வருகின்றது. இதனை அமைதியாக, ஆனால் உறுதியாக எதிர்த்துச் செயற்பட்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு. இந்த உறுதி நிலைத்து நிற்குமா அல்லது தேசிய மக்கள் சகதியும் நிர்ப்பநதங்களுக்குப் பணிந்து விடுமா என்பதைக் காலம் வெளிப்படுத்தும். பணிந்து விடாமல், உறுதியுடன் செயற்பட்டால், அதற்குரிய பல்லின மக்களின் ஆதரவும் நிலைத்து நிற்கும். மேலும் வளரும். இல்லாவிட்டால் இனவாத அரசியல் மீண்டும் வெல்லும். அதைத் தடுக்கும் வகையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் தேசிய அரசியல் சக்தி நிலைத்து நிற்கும் சாத்தியமுண்டு.

இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி இனவாதத்துக்கெதிராகச் செயற்படுகையிலேல்லாம் தார்மிக ஆதரவை வழங்க வேண்டியது அவசியமென்பதை உணர்ந்து ஏனைய இன அரசியல் கட்சிகள் செயற்படுவதாகத்தெரியவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதுதான்.அதற்கு ஒரே வழி இனவாத அரசியல்தான். வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியலுக்கு அது ஒருவகையில் உதவியிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். ஆனால் அது ஆரோக்கிய்மான அரசியலா?

2. 'உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? ' என்றும் கருணாகரன் கேள்வியினை எழுப்பியிருக்கின்றார். மக்கள் தேசிய மக்கள் சக்தியைத் தீய சக்தியாகக் கருதவில்லை. அநுர குமார திசநாயக்கா தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவராகக் கருதுகின்றார்கள். தற்போது தேசிய மக்கள் சக்தியின் பலமே அநுர குமார திசநாயக்காதான். அவரது குடும்பப்பின்னணி, எளிமை, தர்க்கரீதியாகப் பேசும் ஆற்றல், உணர்வு பூர்வமாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்து உரையாற்றும் தன்மை எல்லாம் மக்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதுதான் பல்லின மக்களையும் அவர் கவரக் காரணம்.

3. 'ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?'

இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி நிதானமாகச் செயற்படுவதாகத் தெரிகின்றது. சின்ன மீன்களைப் பிடித்துப்போட்டுப் பெரிய மீன்களைப்பிடிக்கும் தந்திரத்தைக் கையாளவ்துபோல் தெரிகின்றது. ஆரம்பத்திலேயெ பெரிய மீன்களின் மீது கை வைத்தால், அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆதரவால் நிலைமை கட்டு மீறி விடலாம். ஆனால் சின்ன மீன்களைப் படிப்படியாகப் பிடித்து ,மக்களைத் தயார் படுத்திய பின், பெரிய மீன்கள் மீது கை வைக்கையில் ,மக்கள் அதனை ஏற்கனவே எதிர்பார்க்கும் மனநிலையில் இருப்பார்கள். எனவே கிளர்ச்சிகளுக்குப் பதில் ஆதரவளிப்பார்கள். இவ்விதமே எனக்குத் தோன்றுகின்றது. இத்தந்திரத்தையே அவர்கள் கையாள்கின்றார்கள் என்று கருதுகின்றேன்.

4. 'ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை? ' தமிழ்க்கட்சிகள் தம் அதிகாரத்தைக்காப்பாற்ற இப்படித்தான் கூறுவாரகள். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் , புகலிடத்தமிழர்களின் பணத்தில் தங்கியிருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களைக் காறித்துப்பிவிடும். இதுவரை சுமந்திரனுக்கு நடந்தது அதுதான். ஆனால் அதை மீறி அவர் தன்னை உறுதியாக்கி விட்டார். இனிக் காறித்துப்பிய ஊடகங்களும், புகலிடச் சக்திகளும் அவரை அரவணைத்துச் செல்லும் நிலைதான் யதார்த்தம்.

அநுர அரசு பதவிக்கு வந்ததிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான செயற்பாடு. இத்னைப் புகலிட வானொலியொன்றில் நேயர் சுட்டிக்காட்டியபோது,இனவாதத்தைத்தொடர்ந்து கக்கி வரும் அறிவிப்பாளர் கூறுகின்றார் 'எங்கள் காணிகளை அவர்கள் விடுவிக்கின்றார்கள். அதிலென்ன இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது.' இதுவரை காலமும் ஆட்சிக்கட்டிலிருந்த அரசுகளால் விடுவிக்கப்படாமலிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருகின்றன. அதனை வரவேற்கும் மனநிலை அந்த ஊடகவியலாளருக்கில்லை. நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை.

இவை கருணாகரனின் கேள்விகளுக்கான் என் பொதுவான பதில்கள். தேசிய மக்கள் சக்தி அரசு இனவாதத்துக்கெதிராக உறுதியுடன் செய்ற்பட்டால், இனவாதிகளின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து விடாமல் உறுதியுடன் இருந்தால், ஊழல்களுக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், சிறுபான்ம இனங்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டால், நாட்டைப் பொருளாதாரரீதியில் முன்னேற்றும் செயற்பாடுகளை இன, மத,மொழி வேறுபாடற்ற்று முன்னெடுத்தால், இலங்கை அரசியலில் நிலைத்து நிற்கும், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். செய்யுமென்று எதிர்பார்ப்போம். யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்துச் சாதித்திருக்கின்றார்கள். இதையும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நம்மிடமுள்ள ஒரேயொரு வழி.

502833191_10161311523968372_265693266980

502503833_10161311524318372_348294325509

502579085_10161311576648372_459077745366

https://www.facebook.com/search/top/?q=NPP%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D


உண்மையிலேயே NPP தீய சக்தியா?

3 months 2 weeks ago
எழுத்தாளர் கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். 1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? 3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்? 4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா? 6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை? 7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன? 8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சொல்லும் சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள். 9. ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை? இறுதியில் 'ஆனால், எவையும் NPP யோடு உறவில்லை. இது எதைக் காட்டுகிறது? (நாளைய கட்டுரையில்)' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.இவரது பதில்களைப் பார்க்க முன்னர் இவற்றுக்கான என் பதில்கள் இவை 1. 'NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? இதற்கு முக்கிய காரணம். மேற்படி கட்சிகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்திய அரசியற் களத்தில் தேசிய மக்கள் சக்தி மிகவும் பலத்துடன் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ளது. வடகிழக்கில், மலையகத்தில் எல்லாம் இவ்வித தென்னிலங்கைக் கட்சியொன்று இதுவரை ஆதிக்கம் செலுத்தவில்லை. மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இதுவரை காலமும் இப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் கட்சிகளால் தம் கைப்பிடிகளிலிருந்து அதிகாரம் இன்னொரு சக்தியிடம் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான் பிரதான காரணம். தேசிய மக்கள் சகதி ஒரு புரட்சிகர அமைப்பிலிருந்து உருவான கட்சி. வர்க்கரீதியாகச் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் வர்க்க விடுதலையை மையமாக வைத்து , இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பிலிருந்து உதித்து முதலாளித்துவ அரசியலுக்குள் குதித்த கட்சி. தத்துவார்த்தரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இதுவரை காலமும் அவர்கள் அவர்களது அரசியல் தத்துவத்துக்கேற்ப எடுத்த முடிவுகளுக்கெல்லாம் தமிழ்க்கட்சிகள் இனவாதம் பூசின. அதே சமயம் இனவாதக் கூறுகளும் அக்கட்சியின் கடந்த கால அரசியலில் ஆதிக்கம் செலுத்தியதும் தவிர்க்கப்படாத உண்மை. எவ்விதம் வர்க்கவிடுதலைக்காகப் போராடிய மார்க்சியவாதிகளைத் தமிழ்த்தேசிய அரசியல் உருமாற்றியதோ, அது போலவே ஜேவிபியையும், ஏனைய தென்னிலங்கை மார்க்சியக் கட்சிகளையும் சிங்களத்தேசியவாத அரசியல் உருமாற்றியது. அதே சமயம் ஈர் இனங்களிலும் உருமாறாத இடதுசாரிகள் தொடர்ந்தும் இருந்து வந்திருந்தாலும், அவர்கள் பலமற்றவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த காலங்களிலிருந்து படிப்பினைகள் பெற்று , தம்மை வளர்த்தெடுத்து, நாட்டு மக்களின் பேராதரவைப்பெற்றுத் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை,அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கின்றது. இனவாதமிருக்கும் வரையில் நாட்டைப் பொருளாதாரரீதியாக முன்னேற்ற முடியாது என்பதைத்தேசிய மக்கள் சக்தி உணர்ந்திருப்பதையே அதன் தலைவரும் , ஜனாதிபதியுமான அநுர குமார திசநாயக்கவிம் இனவாதத்துக்கெதிரான உரைகளும், செய்ற்பாடுகளும் புலப்படுத்துகின்றன. உண்மையில் இது , தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், கத்தியில் நடப்பதைப் போன்றது. அவர் அவ்விதமே நடக்கின்றார். ஒவ்விரு அடியையும் நிதானமாகவே எடுத்து வைக்கின்றார். தென்னிலங்கையில் ஆட்சியை இழந்தவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மைப்பாதுகாக்கும் பொருட்டு இனவாதத்தைக்கிளப்புவார்கள். உதாரணத்துக்கு மாவீரர் நினைவு கூரலின்போது தமிழ், சிங்கள் அரசியலில் இன்வாதம் கிளப்பப்பட்டது. இனவாதிகளால் பொய்யான தகவல்கள் சமூக, ஊடகங்களில் பரப்பப்பட்டன. ஈரினத்திலிருந்தும் பயங்கரவாததடைச்சட்டத்தின் மீது கைதுகள் இடம் பெற்றன. இதனையொட்டி பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதியொருவரால் இனவாதம் கிளப்பப்பட்டது. அப்போது தேசிய மக்கள் சக்தி அமைச்சர் ஒருவர் அவரை இனவாதி என்றார். அதை நீக்கும்படி இனவாதம் கிளப்பியவர் கேட்டபோதும் அவர் கிளப்பியது இனவாதமே. நீக்கமுடியாது என்று தேசிய மக்கள் சக்தி அரசு மறுத்து விட்டது. அண்மையில் கூட யுத்த முடிவினை நினைவூகூரும் நிகழ்வுகளில் அவரது உரையினையொட்டி இனவாதம் கிளப்பப்பட்டது. ஆனால் அதனை வெற்றிகரமாக முறியடித்ததாகவே உணர்கின்றேன். தமிழ்ப் போராளிகளின் , மக்களின் நினைவு கூரல்களையும் அவர்கள் நியாயப்படுத்தி உரையாற்றினார்கள். வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நம் அரசியல்வாதிகள் எவரும் அதனை உணர்ந்ததாகவோ , வரவேற்றதாகவோ தெரியவில்லை. இதுபோல் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் இனவாதம் கிளப்பப்பட்டு வருகின்றது. இதனை அமைதியாக, ஆனால் உறுதியாக எதிர்த்துச் செயற்பட்டு வருகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு. இந்த உறுதி நிலைத்து நிற்குமா அல்லது தேசிய மக்கள் சகதியும் நிர்ப்பநதங்களுக்குப் பணிந்து விடுமா என்பதைக் காலம் வெளிப்படுத்தும். பணிந்து விடாமல், உறுதியுடன் செயற்பட்டால், அதற்குரிய பல்லின மக்களின் ஆதரவும் நிலைத்து நிற்கும். மேலும் வளரும். இல்லாவிட்டால் இனவாத அரசியல் மீண்டும் வெல்லும். அதைத் தடுக்கும் வகையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் தேசிய அரசியல் சக்தி நிலைத்து நிற்கும் சாத்தியமுண்டு. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி இனவாதத்துக்கெதிராகச் செயற்படுகையிலேல்லாம் தார்மிக ஆதரவை வழங்க வேண்டியது அவசியமென்பதை உணர்ந்து ஏனைய இன அரசியல் கட்சிகள் செயற்படுவதாகத்தெரியவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் இழந்த அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதுதான்.அதற்கு ஒரே வழி இனவாத அரசியல்தான். வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியலுக்கு அது ஒருவகையில் உதவியிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அதற்கு நல்லதோர் உதாரணம். ஆனால் அது ஆரோக்கிய்மான அரசியலா? 2. 'உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? ' என்றும் கருணாகரன் கேள்வியினை எழுப்பியிருக்கின்றார். மக்கள் தேசிய மக்கள் சக்தியைத் தீய சக்தியாகக் கருதவில்லை. அநுர குமார திசநாயக்கா தம் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவராகக் கருதுகின்றார்கள். தற்போது தேசிய மக்கள் சக்தியின் பலமே அநுர குமார திசநாயக்காதான். அவரது குடும்பப்பின்னணி, எளிமை, தர்க்கரீதியாகப் பேசும் ஆற்றல், உணர்வு பூர்வமாக மக்களின் பிரச்னைகளை உணர்ந்து உரையாற்றும் தன்மை எல்லாம் மக்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. இதுதான் பல்லின மக்களையும் அவர் கவரக் காரணம். 3. 'ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?' இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி நிதானமாகச் செயற்படுவதாகத் தெரிகின்றது. சின்ன மீன்களைப் பிடித்துப்போட்டுப் பெரிய மீன்களைப்பிடிக்கும் தந்திரத்தைக் கையாளவ்துபோல் தெரிகின்றது. ஆரம்பத்திலேயெ பெரிய மீன்களின் மீது கை வைத்தால், அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆதரவால் நிலைமை கட்டு மீறி விடலாம். ஆனால் சின்ன மீன்களைப் படிப்படியாகப் பிடித்து ,மக்களைத் தயார் படுத்திய பின், பெரிய மீன்கள் மீது கை வைக்கையில் ,மக்கள் அதனை ஏற்கனவே எதிர்பார்க்கும் மனநிலையில் இருப்பார்கள். எனவே கிளர்ச்சிகளுக்குப் பதில் ஆதரவளிப்பார்கள். இவ்விதமே எனக்குத் தோன்றுகின்றது. இத்தந்திரத்தையே அவர்கள் கையாள்கின்றார்கள் என்று கருதுகின்றேன். 4. 'ஏனைய சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPP யும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்‘ என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் எது உண்மை? ' தமிழ்க்கட்சிகள் தம் அதிகாரத்தைக்காப்பாற்ற இப்படித்தான் கூறுவாரகள். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் , புகலிடத்தமிழர்களின் பணத்தில் தங்கியிருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களைக் காறித்துப்பிவிடும். இதுவரை சுமந்திரனுக்கு நடந்தது அதுதான். ஆனால் அதை மீறி அவர் தன்னை உறுதியாக்கி விட்டார். இனிக் காறித்துப்பிய ஊடகங்களும், புகலிடச் சக்திகளும் அவரை அரவணைத்துச் செல்லும் நிலைதான் யதார்த்தம். அநுர அரசு பதவிக்கு வந்ததிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான செயற்பாடு. இத்னைப் புகலிட வானொலியொன்றில் நேயர் சுட்டிக்காட்டியபோது,இனவாதத்தைத்தொடர்ந்து கக்கி வரும் அறிவிப்பாளர் கூறுகின்றார் 'எங்கள் காணிகளை அவர்கள் விடுவிக்கின்றார்கள். அதிலென்ன இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நாம் மயங்கக்கூடாது.' இதுவரை காலமும் ஆட்சிக்கட்டிலிருந்த அரசுகளால் விடுவிக்கப்படாமலிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டிருகின்றன. அதனை வரவேற்கும் மனநிலை அந்த ஊடகவியலாளருக்கில்லை. நம் அரசியல்வாதிகளுக்கும் இல்லை. இவை கருணாகரனின் கேள்விகளுக்கான் என் பொதுவான பதில்கள். தேசிய மக்கள் சக்தி அரசு இனவாதத்துக்கெதிராக உறுதியுடன் செய்ற்பட்டால், இனவாதிகளின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து விடாமல் உறுதியுடன் இருந்தால், ஊழல்களுக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், சிறுபான்ம இனங்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட்டால், நாட்டைப் பொருளாதாரரீதியில் முன்னேற்றும் செயற்பாடுகளை இன, மத,மொழி வேறுபாடற்ற்று முன்னெடுத்தால், இலங்கை அரசியலில் நிலைத்து நிற்கும், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். செய்யுமென்று எதிர்பார்ப்போம். யாருமே எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்துச் சாதித்திருக்கின்றார்கள். இதையும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நம்மிடமுள்ள ஒரேயொரு வழி. https://www.facebook.com/search/top/?q=NPP%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

3 months 2 weeks ago
விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலான சிங்களவர் தவிர பட்டியிலில் உள்ளவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமே. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-47_T.pdf

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?

3 months 2 weeks ago
நெறிமுறயை மேற்கு எப்போதாவது கடைபிடித்ததா அதுக்கு வரும் போது? இன்று வட கொரியாவை மேற்கு தாக்காத காரணம் என்ன? அனல், ஈரானை தாக்குவோம் என்று நிற்பதும். இந்தியாவுக்கு ஆயுதம் வழங்குவது, வழங்கும் போக்கை காட்டுவது மேற்கு, குறிப்பாக us. ஏனெனில், மிகவும் உயர் மட்டத்தில் சீனாவுக்கு எதிரான சமப்படுத்தும் அரசாக நோக்குவது. அத்துடன் , குறிப்பாக, இந்தியா இப்போதும் அதன் மதி காலனித்துவத்தில் இருந்து விடுபட முடியாமையும். அதாவது காலனித்துவதில் இருந்த, உருவாக்கிய மட்டங்களை (hierarchy) ஐ விரும்புவதும்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

3 months 2 weeks ago
இப்போது ஆயுத போராட்டத்துக்குரிய சூழ்நிலையும் இல்லை. ஒரு அறிவார்ந்த அரசியல் போராட்டத்தை செய்யக்கூடிய புலிகள் அமைப்பில் இருந்த( பாலகுமார், யோகி, புலித தேவன் போன்ற) உறுப்பினர்களும் உயிருடன் இல்லை. இந்த நிலையில் புலிகள் அமைப்புக்கான தடை நீடிக்கப்படுவது தமிழருக்கு நல்லதே. தடையை எடுத்து விட்டால் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த இருந்த சுயநலமிகளும் புலம் பெயர்ந்த மாபியாக்களும் இயக்க சின்னங்களை தகது சுயநலத்துக்கு பயன்படுத்தி தமிழர் நிலையை இருப்பதை விட இன்னும் மோசமாகுவர். தம்மை ஏக தலைமை என்ற பல்லவியை பாட தொடங்குவர். ஆகவே இப்போதைய நிலையில் தடை தொடர்வது தமிழருக்கு நன்மையே. ஒரு அறிவார்ந்த அரசியல் போராட்டதை முன்னெடுக்கவோ ஒரு நியாயமான நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை செய்ய புலிகள் அமைப்பு தேவையில்லை. விருப்பமிருந்தால் மனமிருந்தால் இப்போதிருபவர்களாலேயே அதற்கான அரசியலை சுதந்திரமாக செய்ய முடியும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months 2 weeks ago
01 JUN, 2025 | 10:57 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன. அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார். வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது, இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/216228

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 10:57 AM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.

அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.

வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது,  இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

https://www.virakesari.lk/article/216228

மாரடைப்பு, பக்கவாத சிகிச்சையில் 'கோல்டன் ஹவர்' என்பது என்ன? உடனிருப்பவர் என்ன செய்ய வேண்டும்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல தமிழ் திரைப்படி நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஊடகங்களிடம் பேசிய நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்ட காலதாமதமே இறப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "அதிகாலையே உடம்பு சரியில்லை என என்னையும் அவரது மகனையும் அவரின் அறைக்கு அழைத்தார். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, மூச்சுத் திணறல் இருந்தது எனக் கூறினார். நாடித் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை வீட்டிலேயே பரிசோதித்துப் பார்த்தார். நான் மருத்துவரை அழைத்து வரச் சென்றேன். ஆனால் பாதி வழியிலே உடல்நிலை சீராகிவிட்டது, வேண்டாம் என திரும்பி வந்துவிடச் சொன்னார். நான் வீட்டிற்கு வந்தபோது அவரின் நண்பரான சித்த மருத்துவர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டே இரண்டு மணி நேரம் கால தாமதம் செய்துவிட்டார். அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் வழியிலே இறந்துவிட்டார். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்" என்றார். இந்த நிகழ்வு மருத்துவ சிகிச்சையில் கோல்டன் ஹவரின் முக்கியத்துவம் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். கோல்டன் ஹவர் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிகிச்சை வழங்குவதற்கான நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நோய் அல்லது மருத்துவம் தேவை என்கிற நிலை ஏற்படுகிற போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை வழங்கிவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். சிகிச்சை வழங்குவதற்கான அந்த நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது. கோல்டன் ஹவர் என்பது ஒவ்வொரு நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோல்டன் ஹவர் என்பது சாலை விபத்து தொடங்கி இதய நோய், பக்கவாதம் மற்றும் பிரசவம் வரை அனைத்துக்கும் பொருந்தும் என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி. முதலுதவி வழங்குவதில் தொடங்கி முறையான சிகிச்சைக்கு பரிந்துரைப்பது வரை அனைத்துமே கோல்டன் ஹவர் என்று தெரிவித்தார் அவர். இதனை மேலும் விவரித்தவர், "கோல்டன் ஹவர் என்பது சுய விழிப்புணர்வில் இருந்தே தொடங்குகிறது. ஒருவர் தனக்கு உடல்நிலை மோசமடைகிறது என உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சுய பரிசோதனை அல்லது சிகிச்சை செய்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்" என்றார் அவர். முதலுதவியின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது என்கிறார் குழந்தைசாமி. "ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று வைத்துக் கொண்டால் முதலாவதாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்ஸில் உள்ளவர்கள் தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உடனடி சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கோல்டன் ஹவரில் தான் வருகின்றன." "இதனை மருத்துவத் துறையில் Right side error, Wrong side error என அழைப்பார்கள். ஒருவர் தான் நெஞ்சுவலி இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து பார்க்கிறார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு எந்தத் தீவிரமான பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தால் அது Right side error ஆகும். அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் அவர் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டுள்ளார். இதற்கு ஆகின்ற நேரம் மற்றும் செலவை விரயமாக கருதக்கூடாது." "அதே நேரம் ஒருவர் தனக்கு பெரிய பாதிப்பு இல்லை என எண்ணி சிகிச்சை எடுக்காமலோ அல்லது மருத்துவமனைக்குச் சொல்லாமலோ தவிர்த்து அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதனை Wrong side error என்பார்கள். முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்றார். உடன் இருப்பவர்களின் பங்கு என்ன? உடல்நலக் குறைவு ஏற்படுகிறபோது பாதிக்கப்படுவரால் துரிதமாக முடிவெடுக்க முடியவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதும் கோல்டன் ஹவரில் தான் அடங்கும் என்றார் குழந்தைசாமி. "உதாரணத்திற்கு ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என்றால் அவரை நடக்க வைக்கக்கூடாது. பரவலாக ஏற்படுகிற நோய் பாதிப்புகளின் போது என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும். அது தாமதமாகிறது என்றால் உடனடியாக சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியுமா என்பதைப் பார்க்க முடியும். எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமோ செல்ல வேண்டும்" என்றார். பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்னைகள் ஏற்படுகிறபோது தான் கோல்டன் ஹவர் முக்கியமாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES பக்கவாதம் போன்ற நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிற போது நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார் நரம்பியல் மருத்துவரான சதிஷ்குமார். "ஒவ்வொரு நிமிடமும் 1.9 மில்லியன் செல்கள் செயலிழக்கும். நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பேச்சுத்திறன், சிந்திக்கும் திறன் பாதிப்படைந்துவிடும். இந்த நிலை தீவிரமடைந்தால் மூளை ரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பாதிப்பு ஏற்படாமல் சரி செய்துவிட முடியும்." "அதற்கு முன் முழுமையாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் எங்கு இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருக்காது. இதில் உடனடி மரணம் ஏற்படுவது அரிதென்றாலும் நாள்பட்ட பாதிப்புகள் உருவாகும். 30-40 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதற்கான சுகாதாரப் பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டு தொடக்க நிலையிலே கண்டறிந்தால் எளிதாக சரி செய்துவிட முடியும்" என்றார். மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? மாரடைப்பு ஏற்படுகிறபோது ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்கிறார் இதயவியல் மருத்துவரான மதன் மோகன். மாரடைப்பு என்பது ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுகிறபோது வருகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தம் செல்லாத சதைகளில் வலி உருவாகும். ரத்தத்தை உந்தி செலுத்தும் திறன் குறைந்து இதய தசைகள் இறந்துபோக ஆரம்பிக்கும். எனவே ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும். இதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மாரடைப்பு சிகிச்சைக்கான கோல்டன் ஹவர் என்பது அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை அடங்கும். மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தக் கட்டை முறிக்கிற மருந்து வழங்கப்பட வேண்டும். மிகவும் தீவிரமான நிலை என்றால் ஆஞ்சியோகிராம் வரை செல்லும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான மருந்துகள் உள்ளன. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c787vq23xpxo

மாரடைப்பு, பக்கவாத சிகிச்சையில் 'கோல்டன் ஹவர்' என்பது என்ன? உடனிருப்பவர் என்ன செய்ய வேண்டும்?

3 months 2 weeks ago

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மோகன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரபல தமிழ் திரைப்படி நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஊடகங்களிடம் பேசிய நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்ட காலதாமதமே இறப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "அதிகாலையே உடம்பு சரியில்லை என என்னையும் அவரது மகனையும் அவரின் அறைக்கு அழைத்தார். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, மூச்சுத் திணறல் இருந்தது எனக் கூறினார். நாடித் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை வீட்டிலேயே பரிசோதித்துப் பார்த்தார்.

நான் மருத்துவரை அழைத்து வரச் சென்றேன். ஆனால் பாதி வழியிலே உடல்நிலை சீராகிவிட்டது, வேண்டாம் என திரும்பி வந்துவிடச் சொன்னார். நான் வீட்டிற்கு வந்தபோது அவரின் நண்பரான சித்த மருத்துவர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டே இரண்டு மணி நேரம் கால தாமதம் செய்துவிட்டார். அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் வழியிலே இறந்துவிட்டார். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்" என்றார்.

இந்த நிகழ்வு மருத்துவ சிகிச்சையில் கோல்டன் ஹவரின் முக்கியத்துவம் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

கோல்டன் ஹவர் என்றால் என்ன?

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிகிச்சை வழங்குவதற்கான நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நோய் அல்லது மருத்துவம் தேவை என்கிற நிலை ஏற்படுகிற போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை வழங்கிவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். சிகிச்சை வழங்குவதற்கான அந்த நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது.

கோல்டன் ஹவர் என்பது ஒவ்வொரு நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோல்டன் ஹவர் என்பது சாலை விபத்து தொடங்கி இதய நோய், பக்கவாதம் மற்றும் பிரசவம் வரை அனைத்துக்கும் பொருந்தும் என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி.

முதலுதவி வழங்குவதில் தொடங்கி முறையான சிகிச்சைக்கு பரிந்துரைப்பது வரை அனைத்துமே கோல்டன் ஹவர் என்று தெரிவித்தார் அவர்.

இதனை மேலும் விவரித்தவர், "கோல்டன் ஹவர் என்பது சுய விழிப்புணர்வில் இருந்தே தொடங்குகிறது. ஒருவர் தனக்கு உடல்நிலை மோசமடைகிறது என உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சுய பரிசோதனை அல்லது சிகிச்சை செய்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்" என்றார் அவர்.

முதலுதவியின் முக்கியத்துவம்

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை, முதலுதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது

கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது என்கிறார் குழந்தைசாமி. "ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று வைத்துக் கொண்டால் முதலாவதாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்ஸில் உள்ளவர்கள் தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உடனடி சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கோல்டன் ஹவரில் தான் வருகின்றன."

"இதனை மருத்துவத் துறையில் Right side error, Wrong side error என அழைப்பார்கள். ஒருவர் தான் நெஞ்சுவலி இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து பார்க்கிறார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு எந்தத் தீவிரமான பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தால் அது Right side error ஆகும். அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் அவர் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டுள்ளார். இதற்கு ஆகின்ற நேரம் மற்றும் செலவை விரயமாக கருதக்கூடாது."

"அதே நேரம் ஒருவர் தனக்கு பெரிய பாதிப்பு இல்லை என எண்ணி சிகிச்சை எடுக்காமலோ அல்லது மருத்துவமனைக்குச் சொல்லாமலோ தவிர்த்து அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதனை Wrong side error என்பார்கள். முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம்" என்றார்.

உடன் இருப்பவர்களின் பங்கு என்ன?

உடல்நலக் குறைவு ஏற்படுகிறபோது பாதிக்கப்படுவரால் துரிதமாக முடிவெடுக்க முடியவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதும் கோல்டன் ஹவரில் தான் அடங்கும் என்றார் குழந்தைசாமி.

"உதாரணத்திற்கு ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என்றால் அவரை நடக்க வைக்கக்கூடாது. பரவலாக ஏற்படுகிற நோய் பாதிப்புகளின் போது என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும். அது தாமதமாகிறது என்றால் உடனடியாக சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியுமா என்பதைப் பார்க்க முடியும். எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமோ செல்ல வேண்டும்" என்றார்.

பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்னைகள் ஏற்படுகிறபோது தான் கோல்டன் ஹவர் முக்கியமாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்?

கோல்டன் ஹவர், மருத்துவம், சிகிச்சை, முதலுதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பக்கவாதம் போன்ற நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிற போது நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார் நரம்பியல் மருத்துவரான சதிஷ்குமார். "ஒவ்வொரு நிமிடமும் 1.9 மில்லியன் செல்கள் செயலிழக்கும். நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பேச்சுத்திறன், சிந்திக்கும் திறன் பாதிப்படைந்துவிடும். இந்த நிலை தீவிரமடைந்தால் மூளை ரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பாதிப்பு ஏற்படாமல் சரி செய்துவிட முடியும்."

"அதற்கு முன் முழுமையாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் எங்கு இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருக்காது. இதில் உடனடி மரணம் ஏற்படுவது அரிதென்றாலும் நாள்பட்ட பாதிப்புகள் உருவாகும். 30-40 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதற்கான சுகாதாரப் பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டு தொடக்க நிலையிலே கண்டறிந்தால் எளிதாக சரி செய்துவிட முடியும்" என்றார்.

மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மாரடைப்பு ஏற்படுகிறபோது ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்கிறார் இதயவியல் மருத்துவரான மதன் மோகன்.

மாரடைப்பு என்பது ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுகிறபோது வருகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தம் செல்லாத சதைகளில் வலி உருவாகும். ரத்தத்தை உந்தி செலுத்தும் திறன் குறைந்து இதய தசைகள் இறந்துபோக ஆரம்பிக்கும். எனவே ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும். இதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மாரடைப்பு சிகிச்சைக்கான கோல்டன் ஹவர் என்பது அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை அடங்கும்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தக் கட்டை முறிக்கிற மருந்து வழங்கப்பட வேண்டும். மிகவும் தீவிரமான நிலை என்றால் ஆஞ்சியோகிராம் வரை செல்லும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான மருந்துகள் உள்ளன. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c787vq23xpxo

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கும் சாத்தியம்

3 months 2 weeks ago
01 JUN, 2025 | 10:11 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது. இதன் பிரகாரம் பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் உள்வீட்டு மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதன் பிரகாரம், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் ஆளும் கட்சியின் உள்வீட்டு மோதல்களை சுட்டிக்காட்டி கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இருப்பினும் ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான இணக்கப்பாடின்மையை சரிசெய்வதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216216

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கும் சாத்தியம்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 10:11 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். 

எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது. இதன் பிரகாரம் பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் உள்வீட்டு மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

இதன் பிரகாரம், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் ஆளும் கட்சியின் உள்வீட்டு மோதல்களை சுட்டிக்காட்டி கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இருப்பினும் ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான இணக்கப்பாடின்மையை சரிசெய்வதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216216