Aggregator
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மாதுரி டிக்ஷிற்றின் பாட்டை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறளவிற்கு வசீக்கு வயசாகிவிட்டதா?😱 நம்ம பாட்டு இதூ!
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த பாட்டின் அர்த்தம் தெரியாது ஆனால் 1, 2, 3 என்பது விளங்கும், இன்று இந்த மூவருக்கும் பஞ்சாப்பின் பரிசாக இந்த பாட்டு இப்படிக்கு நண்டுகள் குலாம்🤣
ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே. ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும். ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும். இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரெண்டு பேர் ஓகே, ஆனா மூணாவதா ஒருத்தர் சேர்ந்திருக்கார் பாருங்க அங்கதான் சனிபகவானே இருக்கார்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு செஞ்சரி அடிச்சால்தான் என்ன!
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்...
அப்படி மங்காமல் இருப்பதும் ஒரு நடிகரின் / நடிகையின் திறமையில் ஒன்று. உடனாக தேடி எடுத்து, ஆயினும் இதை முறையான பே ட்டிகளிலும் சொல்லி உள்ளார். (அதே போல தமிழின் மீது பற்று இல்லாவிட்டாலும், திறமை, சிந்தனை உள்ளவர்கள் இருப்பார்கள்)
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு பேரும் சேர்ந்து இறங்கிறோம். பஞ்சாப்பை பறக்க விடுறம். சூர்யா ஒரு 90 அடிக்கிறான் நாளைக்கு.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மூன்று பேர்தானா. கன பேரா இருப்பினம் என்று நினைத்தேன்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு பும்ராவின் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் பறக்குது! மும்பை இந்தியன்ஸ் வெல்லுது. எனக்கு மூண்டு புள்ளிகள் கொடுக்குது😃 பிரீத்தி தலையில் கைவைக்கிறா!
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நண்டுகள் நாளையும் வரலாம் 😍
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை ஞாயிறு (01 ஜூன்) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 76) ஞாயிறு 01 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI மூன்று பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என எவரும் கணிக்கவில்லை! போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று மூன்று பேருக்கு புள்ளிகள் கொடுக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைகளைப் பரிமாறுமா?
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
தேர்தல்சமயங்களில் திமுக அதிமுகவை கூட்டணிபேரத்தில்கதறவிடும் கட்சி இன்று கதறிக்கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களைப்பெற்ற கட்சி. வன்னிய மக்களின் வாக்குகளை கொத்தாக அள்ளும்கட்சி இன்று அன்புமணியின் பதவி ஆசையால் உடைந்து கிடக்கிறது. அன்பு மணிக்கு கட்சியைப்பற்றியோ அதன் உறுப்பினர்களைப்பற்றியோ எந்த அக்கறையும் இல்லை. அவருக்கு எம்பிப்பதவி அதுவும் ராஜ்ய சபா உறுப்பினராக வேண்டும். அதுதான் அவரது கொள்கை. அதற்கு யாரின் காலையும் பிடிக்கத்தயார்.
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடாகவில் படம் ஓடாது. மன்னிப்புக்கேட்டால் தமிழகத்தில் படம் ஓடாது. ஆப்பிழுத்த குரங்கின் நிலை கமலுக்கு. எப்படியும் ஓடாத படத்தை ஓடப்பண்ண இதுபோல சர்ச்சைகளை படம் சம்பந்தப்பட்டவர்கள் செய்வது வழமை;. இப்படித்தான் புரட்சித்தமிழன் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் திராவிடப்பங்காளி சத்தியராஜ் மன்னிப்புப் கேட்டார். இப்பொழுது கமலை மன்னிப்புக் கேட்கச்சொல்லி இருப்பதாக ஒரு செய்தி. இதுவெல்லாம் கமலுக்கு சின்னப் பிரச்சினை திமுகவை ஒழிக்க என்று கட்சி தொடங்கி ரோச்லைற்றால் ரிவி உடைத்து விட்டு இப்பொழுது உதயசூரியன் ஒளி இருககையில் ரோச்லைற் தேவை இல்லை என்று ராஜ்யசபா எம்பியாகி நம்பிவந்தவர்களை கைவிட்டு விட்டார். இப்பொழுது அவர்பேசியிருப்பதும் வழக்கம் போல மன்னிப்புக்கேட்டாரா இல்லையா என்று புரியாத மாதிரி பேசியிருக்கிறார்.
முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?
பயறு போன்றவைகளை முளை வளரவிட்டுத் தானே சாப்பிடுகின்றோம் . ...... ! 😂
Imagine Dragons - Thunder
Lady Gaga - Always Remember Us This Way (from A Star Is Born) That Arizona sky burnin' in your eyes You look at me and, babe, I wanna catch on fire It's buried in my soul like California gold You found the light in me that I couldn't find So when I'm all choked up And I can't find the words Every time we say goodbye Baby, it hurts When the sun goes down And the band won't play I'll always remember us this way Lovers in the night Poets tryin' to write We don't know how to rhyme But, damn, we try But all I really know You're where I wanna go The part of me that's you will never die So when I'm all choked up And I can't find the words Every time we say goodbye Baby, it hurts When the sun goes down And the band won't play I'll always remember us this way Oh, yeah I don't wanna be just a memory, baby, yeah Hoo, hoo, hoo, hoo Hoo, hoo, hoo, hoo Hoo, hoo, hoo, hoo, hoo So when I'm all choked up And I can't find the words Every time we say goodbye Baby, it hurts When the sun goes down And the band won't play I'll always remember us this way, way, yeah When you look at me And the whole world fades I'll always remember us this way
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
மொழிகளை ஒப்பிட்டு இதிலிருந்து இது பிறந்தது என்று அடிபடுவது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் பிரிவினையையுமே ஏற்படுத்தும். இவ்வாறு செய்யும் போது மொழிவெறியை மட்டுமே வைத்து மக்களிடையே அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தீய சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையும். உண்மையில் இது மொழியியல் ஆராய்சசி சம்பந்தமான விடையம். மொழியியல் அறிஞர்கள் மட்டுமே தங்களுக்குள் அறிவியல் ரீதியாக விவாதிக்க வேண்டிய விடயம். ஒரு அளவுக்கு மேல் தரவுகள் இல்லாததால் இதை 100 வீதம் நிறுவுவதும் கடினமான விடயம். உண்மையில் தூய மொழி என்று ஒன்று கிடையாது. எல்லாமே நீண்ட மனித வரலாற்றில் மொழிகள் எல்லாமே கலப்படம் தான். அதில் தவறும் இல்லை. உதாரணமாக இலவசமாக கிடைப்பதை ஓசியில் கிடைத்தது என கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. இது வந்தது பிரிட்டில் கிழக்கிந்திய கொம்பனி இந்தியாவை நிர்வாகம் செய்யயும் போது கடிதங்களை அனுப்பும் போது On Company Service (OC) என்ற முத்திரை சீல் பாவித்தால் கடிதங்களுக்கு முத்திரை ஒட்ட தேவையில்லை. அந்த பாவனை பின்னர் மருவி இலவசமாக பெறுவதற்கெல்லாம் ஓசி என்று கூறும் வழக்கம் உண்டானது. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் கூட இலவசத்தை ஒசி என்று தமிழில் கூறுமளவுக்கு அந்த சொல் மக்களிடையே இரு நூற்றறாண்டு கடந்து சென்றடைந்துள்ளது. யோசித்து பாருங்கள் இரு நூறு ஆண்டுகளிலேயே இவ்வாறு என்றால் நீண்ட மனிதவாழ்வில் எந்த சொற்கள் எப்படி வந்தது என்பதை கண்டறிவது கடினமானது.
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
சித்தார்ததர் சைவரல்ல. இது தவறு. சித்தார்த்தர் அன்றைய சனாதன வேத மதத்தை எதிர்ததார். கடவுளை மறுத்தார்.
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? முப்படைத் தலைமைத் தளபதி பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்த மாதத் தொடக்கத்தில் (2025 மே) பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் பதிலளித்துள்ளார். சிங்கப்பூரில் இன்று (2025 மே 31 சனிக்கிழமை) ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், 'எத்தனை விமானங்கள் சேதமடைந்தன என்பதை தெரிந்துக் கொள்வதை விட, சேதம் ஏன் ஏற்பட்டது என்பதை அறிவதே மிக முக்கியமானது' என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், ஆறு இந்திய விமானங்களுக்கு சேதம் விளைவித்ததாக பாகிஸ்தான் கூறியதை அவர் மறுத்தார். "ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதைவிட, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதே கவனிக்க வேண்டியது என்று நான் நினைக்கிறேன்," என்று பதிலளித்த அவர், சேதமடைந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) அனில் செளகான் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் தான் ப்ளூம்பெர்க்கிற்கு அவர் நேர்காணலை வழங்கியுள்ளார். இந்த மாதத் தொடக்கத்தில், முப்படைகளின் பிரதிநிதிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, "நாம் போர்ச் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா இந்தக் கூற்றுகளை நிராகரித்தது. படக்குறிப்பு,இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் ஜெனரல் அனில் செளகான் தெரிவித்த கருத்துக்கள் இந்த மாதம் பாகிஸ்தானுடனான நான்கு நாள் ராணுவ மோதலில் இந்திய போர் விமானம் ஏதேனும் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று சிடிஎஸ் அனில் செளகானிடம் கேட்கப்பட்டது. இந்த பேட்டியின் ஒரு நிமிடம் ஐந்து விநாடிகள் கொண்ட ஒரு பகுதியை ப்ளூம்பெர்க் டிவி தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், ஜெனரல் அனில் செளகானிடம், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பாகிஸ்தானின் கூற்றை உறுதிப்படுத்த முடியுமா என்று ப்ளூம்பெர்க் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் செளகான், "ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டது முக்கியமல்ல, இது ஏன் நடந்தது என்பதுதான் முக்கியம்" என்றார். முப்படைகளின் தளபதியிடம் இருந்து விஷயத்தை தெரிந்துக் கொள்ள கேள்வி வேறுவிதமாக கேட்கப்பட்டது. "குறைந்தபட்சம் ஒரு ஜெட் விமானமாவது சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது சரியா?" என பத்திரிகையாளர் வினா எழுப்பினார். "ஆம், அது ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டது. நல்ல விஷயம் என்னவென்றால், எங்களது உத்தி சார்ந்த தவறுகளை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் இரண்டு நாட்களுக்குள் சரிசெய்து, பிறகு அதை செயல்படுத்தினோம். இதற்குப் பிறகு நாங்கள் அனைத்து ஜெட் விமானங்களையும் பறக்கவிட்டு தொலைதூர இலக்குகளை குறிவைத்தோம்." "ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. அந்த நாடு சொல்லும் கணக்கு சரியானதா?" என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்டார். "இது முற்றிலும் தவறு. ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், இந்த தகவல் முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்." என்று ஜெனரல் அனில் செளகான் பதிலளித்தார். இதற்கு முன்பு ராணுவம் என்ன சொன்னது? மே 7ஆம் தேதியன்று, இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது . அதற்கு பிறகு, பாகிஸ்தான் விமானப்படை ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறினார், அதில் பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் விமானங்களும் அடங்கும் என்று கூறப்பட்டது. "இதுவரை, மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு எஸ்.யூ-30 மற்றும் ஒரு மிக்-29 உட்பட ஐந்து இந்திய விமானங்கள் மற்றும் ஒரு ஹெரான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்" என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் செளத்ரி தெரிவித்த வீடியோவை, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை பகிர்ந்தது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரின் இந்தக் கூற்றுக்கு இந்தியா எந்தவித பதிலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கவில்லை. இருப்பினும் மூன்று படைகளின் பிரதிநிதிகளான, டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை டிஜிஏஓ (விமான நடவடிக்கைகள்) ஏர் மார்ஷல் ஏகே பார்தி மற்றும் கடற்படையைச் சேர்ந்த டிஜிஎன்ஓ (கடற்படை நடவடிக்கைகள்) வைஸ் அட்மிரல் ஏஎன் பிரமோத் மற்றும் மேஜர் ஜெனரல் எஸ்எஸ் ஷார்தா ஆகியோர் மே 11 அன்று பாகிஸ்தானுடனான மோதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய தகவல்களை வழங்கினார்கள். பட மூலாதாரம்,ANI ரஃபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி , "நாம் ஒரு போர் சூழ்நிலையில் இருக்கிறோம், இழப்புகளும் அதில் ஒரு பகுதி தான். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? என்பதாகவே இருக்கவேண்டும். அதற்கான பதில் ஆம்" என்று சொன்னார். "நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நாங்கள் அடைந்துவிட்டோம், நமது அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும்" என்றும் அவர் கூறியிருந்தார். எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தானுடனான ராணுவ மோதலில் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது. இந்தியா-பாகிஸ்தான் மோதலை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் ஒரு மதிப்பாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் ஊடகப் பதிவில், இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேள்வி கேட்டிருந்தார். ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா சுமத்திய குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலுமாக நிராகரித்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 6 மற்றும் 7ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் மொத்தம் ஒன்பது இடங்களை இந்தியா தாக்கியது. மே 7ஆம் தேதி மாலை ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவம் இந்தத் தகவலை வழங்கியது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி, இந்திய ஆயுதப்படைகள் 2025 மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதில் ஒன்பது தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் கூறினார். பட மூலாதாரம்,ANI காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சிடிஎஸ் ஜெனரல் அனில் செளகான் ப்ளூம்பெர்க் டிவிக்கு வழங்கிய பேட்டியின் காணொளியை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 1999 ஜூலை 29ஆம் தேதியன்று, அப்போதைய வாஜ்பாய் அரசாங்கம், தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் தந்தையும், மூலோபாய விவகார நிபுணருமான கே. சுப்பிரமணியம் தலைமையில் கார்கில் மறுஆய்வுக் குழுவை அமைத்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கார்கில் போர் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தக் குழு அமைக்கப்பட்டு, 5 மாதங்களில் விரிவான அறிக்கையை மறுஆய்வுக் குழு சமர்ப்பித்தது. தேவையான திருத்தங்களுக்குப் பிறகு, மறுஆய்வுக் குழுவின் 'From Surprise to Reckoning' என்ற அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது என ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் பாதுகாப்புப் படைத் தலைவர் அளித்த தகவலுக்குப் பிறகு மத்திய அரசு இப்போது அத்தகைய நடவடிக்கை எடுக்குமா? என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும், ஆனால் இப்போது அந்த அபாயம் நீங்கி வருவதாகவும் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கார்கில் மறுஆய்வுக் குழுவின் மாதிரியில், நாட்டின் பாதுகாப்பு தயாரிப்புகளை ஒரு சுயாதீன நிபுணர் குழு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோருவதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93l1ergk6eo
வைபவ் சூரியவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறும் அறிவுரை என்ன?
14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன? - இந்திய அணியில் இடம் கிடைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனுபம் ப்ரதிஹாரி பதவி, பிபிசி ஹிந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான திறமை நம் கண் முன்னே வெளிச்சத்திற்கு வந்தது. கிரிக்கெட் உலகம் இவரின் திறமை மற்றும் ஆட்டத்தை வியந்து கொண்டாடியது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில், பதினான்கே வயதான வைபவின் அதிரடியான ஆட்டம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ரஷித் கான், முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா, ப்ரசித் கிருஷ்ணா போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தார் அவர். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு ஆட்டங்களில் அவர் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல், பூஜ்ஜியம் மற்றும் நான்கு ரன்களில் வெளியேறியது அவரின் ஆட்டம் குறித்த கவலைகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த 101 ரன்களை எப்படி ஒருவர் மறக்க இயலும்? குறுகிய காலத்தில் இவர் அடித்து ஆடிய ஆட்டங்கள் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக சில நாட்கள் ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன. அப்போது இந்த இளம் ஆட்டக்காரர் தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டது போல் இருந்தது. முதலில் பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் அவர் 40 ரன்கள் குவித்தார். அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்து தன்னுடைய ஆட்டத்தை வலுப்படுத்தினார். வைபவின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மெனுமான சபா கரிம், "19 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டிகளிலும் வைபவின் ஆட்டத்தை வீடியோக்களில் பார்த்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போதே, இந்த சிறுவனிடம் ஒரு சிறப்புத் திறமை இருக்கிறது என்று உணர்ந்தேன்," என்று கூறினார். வைபவின் திறமைக் குறித்து பேசும் போது, "அவர் ஒரு சதம் அடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மணிக்கு 145 கிலோமீட்டர்கள் வேகத்தில் வரும் சிறப்பான பந்துகளை எதிர்த்து ஒரு 14 வயது பேட்டர் ஆடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று கூறினார். கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ப்ரவீன் அம்ரேவால், வைபவின் ஆட்டம் குறித்து எழுந்த குதூகலத்தை வெளிப்படுத்தினார். "நேரத்தை சரியாக பயன்படுத்துவது தான் வைபவின் விளையாட்டில் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று. நீங்கள் ஆட்டத்திற்கு புதிதோ அல்லது நல்ல அனுபவம் மிக்கவரோ, பேட்டிங் என்பது எப்போதுமே நேரம் சார்ந்தது. வைபவின் ஆட்டம் அவர் எப்படி துல்லியமாக நேரத்தை பயன்படுத்துகிறார் என்பதை காட்டுகிறது. எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும், எப்போது பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்பதை நன்றாக அவர் அறிந்து வைத்திருக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்." திறமையான மனிதர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருக்கின்றனர். மிகவும் துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள். எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வைபவின் பயிற்சியாளருமான பிகாரின் மணீஷ் ஓஜா இது குறித்து பேசும் போது, "2018-ஆம் ஆண்டு வைபவும் அவருடைய அப்பா சஞ்சீவும் முதன்முறையாக என்னுடைய பயிற்சி மையத்திற்கு வந்தது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. வெறும் 7 வயதே ஆன வைபவ், ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் உறுதியாக இருந்தார். முதல் நாளில் அவருக்கு சில உடற்பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினேன். பிறகு வலைப்பயிற்சி மேற்கொள்ளுமாறு கூறினேன். அந்த வயதிலேயே அவரிடம் இருந்த அற்புதமான திறனை நான் கண்டறிந்தேன்," என்று கூறினார். அன்று, அந்த முதல் நாளிலேயே தியாகம் மற்றும் கடின உழைப்பிற்கான பயணம் துவங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும், எப்போது பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்பதை நன்றாக அவர் அறிந்து வைத்திருக்கிறார் என முன்னாள் வீரர்கள் புகழாரம் கடின உழைப்பும், வெற்றிக்கான பயணமும் பாட்னாவின் புறநகர் பகுதியில் ஜென்-நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாதெமி என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் மணீஷ், "ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்கு வைபவின் அம்மா, அவருடைய மகனுக்கும் கணவருக்கும் உணவு தயாரிப்பார். இருவரும் நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி காலை 7.30 மணிக்கு பயிற்சி மையத்திற்கு வருவார்கள். பிறகு வைபவின் பயிற்சி மாலை நான்கு மணி வரை நீடிக்கும். அவரின் பயிற்சி முடியும் வரை, அவருடைய தந்தை பொறுமையாக அவருடைய காரில் அமர்ந்திருப்பார்," என்று தெரிவிக்கிறார். இடது கை ஆட்டக்காரரான அவர் தொடர்ச்சியாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் இவ்வாறு பயிற்சிகள் மேற்கொள்வார். பயிற்சிக்காக அப்பாவும் மகனும் சமஸ்திபூரில் அமைந்திருக்கும் தாஜ்பூர் என்ற கிராமத்தில் இருந்து 90 கிலோமீட்டர்கள் பயணித்து பயிற்சி மையத்திற்கு வருவார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த பயணம் தொடர்ந்தது. ஆனால் இது மட்டும் போதவில்லை. சஞ்சீவ் அவருடைய வீட்டின் முகப்பில் பயிற்சிக்காக வலைகளுடன் கூடிய சிறிய பயிற்சி மையத்தையே உருவாக்கியிருந்தார். "அவர்கள் இருவரும் மிகவும் வித்யாசமானவர்கள் என்று நான் புரிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் மிகவும் தைரியமானவர்கள். அவர்களின் கனவை நோக்கி, நிற்காமல் சென்று கொண்டிருந்தனர். இப்படியான ஒரு எடுத்துக்காட்டை என்னுடைய வாழ்வில் நான் முதன்முறையாக பார்த்தேன்," என்று மணீஷ் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இடது கை ஆட்டக்காரரான அவர் தொடர்ச்சியாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் இவ்வாறு பயிற்சிகள் மேற்கொள்வார். ஆரம்பகால அறிகுறிகள் ஏழு வயதிலேயே அவருடைய 'டைமிங்' மிகவும் துல்லியமாக இருந்தது. "அவன் என்னிடம் வரும் போது அவனிடம் இருந்த மூன்று முக்கிய சிறப்புகளை நான் கவனித்தேன். வைபவின் டைமிங் துல்லியமாக இருந்தது. பந்துகளை விளாசும் போது அவருடைய உடல் நல்ல சமநிலையில் இருந்தது. பலவிதமாக பந்துகளை அடிக்கும் கலைகளை கற்றிருந்தார். ஆனால் சிறுவனாக இருந்ததால் பலம் குறைவாக இருந்தது. ஆனால் விரைவில் எதையும் கற்றுக் கொள்ளும் திறனும், பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக இருந்தது," என்று மணீஷ் கூறுகிறார். "ஒரே விதமான ஷாட்டை, ஒரு நாளில் 400 முறை விளையாட வேண்டும் என்று பல நேரம் நான் அவரிடம் கூறியுள்ளேன். சில நேரங்களில் பயிற்சி பெறும் வீரர்கள் பந்து வீசுவார்கள். சில நேரங்களில் மெஷின்கள் மூலம் பந்து வீசப்படும். சில நேரங்களில் ஒரு போட்டியில் இருக்கும் போது எப்படி இருக்குமோ அத்தகைய சூழலை உருவாக்கி அதில் விளையாடும்படி கூறுவேன். அவருடைய நினைவில் (muscle memory) ஒரு அங்கமாக இத்தகைய ஷாட்டுகள் மாற வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டன." இந்த ஆண்டு ஏப்ரல் 28, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நாளாக மாறியது. வெறும் 35 பந்துகளில், பதின்பருவ வீரர் ஒருவர் சதம் அடிப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அவரின் அதிரடி ஆட்டத்திற்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக இளம் வயதில் இத்தகைய சாதனையைப் படைத்த முதல் வீரராகவும் அவர் அன்று அறியப்பட்டார். இது சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான். சஞ்சீவ் மற்றும் மணீஷ் இதற்கான அறிகுறிகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்துவிட்டனர். "2022-ஆம் ஆண்டில் எங்களுடைய அகாடமியில் ஒரு ஆட்டம் நடைபெற்றது. அப்போது எதிரணியினரின் பந்துகளை எதிர்கொண்டார் வைபவ். ராஞ்சி மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த எதிரணியில் இடம் பெற்றிருந்தனர். தடுமாற்றம் ஏதுமின்றி 118 ரன்கள் எடுத்து அசத்தினார் வைபவ். அந்த போட்டியில் வைபவ் விளாசிய அனைத்து சிக்ஸர்களும் 80-90 மீட்டர் நீளம் கொண்டவை," என்று கூறுகிறார் மணீஷ். "2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற, அண்டர் 19 யூத் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் இன்னிங்ஸில் 62 பந்துகளில் 104 ரன்களை குவித்தார் வைபவ். இது சாதாரண ஆட்டம் இல்லை என்று நான் வைபவின் அப்பாவிடம் அன்று கூறினேன். இது கடவுளின் ஆசிர்வாதம்," என்றும் கூறுகிறார் மணீஷ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஏப்ரல் 28, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நாளாக மாறியது. வெறும் 35 பந்துகளில், பதின்பருவ வீரர் ஒருவர் சதம் அடிப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் வைபவின் ஆட்டத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்த நிபுணர்கள் வைபவின் பேட் சுழலுவது மற்றும் அதன் வேகத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர் கிரிக்கெட் வீரர்கள். இந்த இளம் வயதில், அனுபவம் வாய்ந்த வீரர்களாலும் கூட வெளிப்படுத்த முடியாத அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பேட்டை சுழற்றும் தன்மை மிகவும் தனிச்சிறப்பு கொண்டதாக இருக்கிறது. முதலில் அவருடைய பேட் கீழே சென்று உடனடியாக மேலே திரும்பும். பிறகு பந்தை முழு வீச்சில் அடிப்பதற்கு முன்பு அவருடைய பேட் கீழே வரும். பந்தை அடித்த பிறகு, அவருடைய பேட் அவருடைய வலது தோள்பட்டையில் இருக்கும். இந்த உத்தி, தூரத்தில் இருந்து வரும் பந்துகளை சிக்ஸராக மாற்ற உதவுகிறது. "நீங்கள் பேஸ்பால் பேட்டர்களின் ஆட்டத்தைப் பார்த்தால் புரியும். அந்த பேட்டர்கள் 'நிலை', 'பிக்-அப்', மற்றும் நேரம் என்ற மூன்று படிகளைக் கொண்டிருப்பார்கள். இன்று டி20 பேட்டர்களில் பெரும்பாலானோர் தெரிந்தோ, தெரியாமலோ இதே படிகளைப் பின்பற்றி பவர்ஃபுல்லான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இது வைபவிற்கு மிகவும் இயற்கையாகவே வருகிறது," என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம் தெரிவிக்கிறார். "சாட்டைப் போன்று அவர் பேட்டை சுழற்றுகிறார். இது பெரிஸ்கோபிக் பேக்-லிஃப்ட் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனை சாத்தியமாக்க உடல் இயக்கம் சரியாக இருக்க வேண்டும். சுழற்சியும் மிகவும் 'ஸ்மூதாக' இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பேக்-லிஃப்டை உயர்த்த இயலும். இதன் மூலமாகவே சாட்டையைப் போன்று பேட்டை சுழற்றி பலமாக பந்துகளை அடிக்க இயலும்," என்றும் அவர் விளக்கினார். அவரிடம் இருக்கும் மற்றொரு திறமை பந்தின் தூரத்தை துல்லியமாக கணிப்பது. "இது பேட்டருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பந்தின் தூரத்தை விரைவாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்து பந்தை அடித்து ஆட முடியும்," என்றும் சபா கூறுகிறார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்த இளம் வயதில், அனுபவம் வாய்ந்த வீரர்களாலும் கூட வெளிப்படுத்த முடியாத அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் ஆட்டம் குறித்து எழும் கவலைகள் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய வைபவ், அடுத்து ஆடிய இரண்டு ஆட்டங்களில் பூஜ்ஜியம் மற்றும் நான்கு ரன்களில் வெளியேறினார். இரண்டு முறையும், ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வந்த பந்துகளை அடிக்க முயன்றே அவுட் ஆனார். அவரின் பலவீனம் என்ன என்பதை பந்துவீச்சாளர்கள் கண்டறிந்துவிட்டனரா? இது வைபவின் மோசமான ஆட்டம் தான். சமீபத்தில் 40 பந்துகளில் 57 ரன்கள் அவர் குவித்ததும் இதையே காட்டுகிறது. இது குறித்து பேசிய ப்ரவின் அம்ரே, "வைபவின் பேட்டிங்கில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். இது இயற்கை. அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் மூலம் அவர் இதை கற்றுக் கொள்வார். நீண்ட நாட்களுக்கு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அவருடைய பேட்டர் இன்னிங்கிஸில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இன்னிங்ஸில் ஆடிய ஷாட்களை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஆட வேண்டும். இப்போது தான் ஆட்டம் பற்றிய மனவோட்டம் முக்கிய பங்காற்றும். இது போன்ற சூழ்நிலைகளை கையாளும் திறன் வைபவின் தற்போதைய பயிற்சியாளரிடம் இருக்கிறது என்று நம்புகின்றேன்," என்றார். சபாவும் இதே கருத்தை முன்வைக்கிறார். "மிட்செல் ஸ்டார்க், பும்ரா போன்ற தேர்ந்த பந்துவீச்சாளர்கள், வைபவை வெளியேற்றும் வழிகளை நிச்சயமாக கண்டறிவார்கள் என்று நான் நம்புகிறேன். தன்னிடம் இருந்து விலகிச் செல்வதாக தோன்றும் பந்துகளை அவர் அடிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால் அவர் ஆஃப் சைடில் நன்றாக விளையாடும் வீடியோக்களை நான் பார்த்திருக்கின்றேன். சிறப்பான பந்துவீச்சாளர்களை அவர் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் போது, போட்டியின் தன்மையை அவர் அதிகமாக அறிந்து கொள்வார். பந்து வீச்சாளர்கள் அவரை வெளியேற்ற பயன்படுத்தும் உத்திகள் குறித்தும் அவர் விரைவாக புரிந்து கொள்ள முடியும்," என்று கூறினார் சபா. "ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர், சைராஜ் பஹுதுலே, மற்றும் ஜூபைன் பருசா உள்ளிட்ட பயிற்சியாளர்களைக் கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் விளையாடுகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் கூறினார். இளம் வீரர்கள் வளர்வதற்கான சூழலை அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். இந்த வீரர்களின் ஆட்டத்தை மேம்படுத்த கடின உழைப்பை அவர்கள் செலுத்தி வருகின்றனர். ஆனால் இத்தகைய இளம் வீரர்கள் முன்னால் இருக்கும் பெரிய சவால் என்னவென்றால், இப்படியான அதிரடியான துவக்கத்தை கொடுக்கும் இவர்கள் தங்களின் முழு கவனத்தையும் தொடர்ச்சியாக விளையாட்டில் காட்டுவார்களா என்பது தான். "தொடர்ச்சியாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கான வழக்கத்தைக் கொண்டிருப்பது முக்கியம். அவர் அப்படியான, சிறப்பான வழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய திறமைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மைதானத்திற்கு வெளியே அவர் செய்யும் செயல்கள், அவருடைய விளையாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. வைபவைக் காட்டிலும் அதிக திறமைக் கொண்ட வீரர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர்களின் கவனம் சிதறிவிட்டது. இவருக்கும் அது நிகழக் கூடாது என்று விரும்புகிறோம்," என்று அம்ரே தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இளம் வீரர்கள் வளர்வதற்கான சூழலை ராஜஸ்தான் ராயல்ஸின் பயிற்சியாளர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர் வைபவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தற்போது பேசுபொருளாகியுள்ள இந்த பேட்டரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? "உடல் தகுதி, உணவு மற்றும் செயல்பாடு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சௌகரியமான, எளிமையானவைகளை அவர் தொடர்ந்து பின்பற்றும் போது, அது அவருக்கு பலனளிக்கும். அவருடைய பெற்றோர்கள் மற்றும் அவரின் ஆட்டம் குறித்து நன்கு அறிந்த முன்னாள் பயிற்சியாளர் உள்ளிட்டோரிடம் தொடர்பில் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான புகழ் தனித்து செயல்படும் இளமையின் தன்மையை அழித்துவிடும். இதனை அவர் தவிர்க்க வேண்டும். அவரின் கவனம் சிதறும் வகையிலான சுதந்திரமாக செயல்படும் போக்கை அவருக்கு வழங்கக்கூடாது," என்று சபா கூறுகிறார். "மற்றொரு பரிந்துரை என்னவென்றால் அவர் அவரின் படிப்பை முடிக்க வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதற்கான வழியை கண்டுபிடிக்கும். குறைந்தபட்சம் அவருடைய கல்லூரி படிப்பையாவது முடிக்க வேண்டும்," என்று சபா கூறுகிறார். வைபவின் முழுத்திறனை வெளிப்படுத்த இந்த சில இன்னிங்ஸ்கள் மட்டும் போதுமா? ஓரிரண்டு ஆண்டுகளில் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் நேரடியாக இடம் பெற வாய்ப்புகள் வழங்கப்படுமா? "ஏன் கூடாது? அவர் ஏற்கனவே அண்டர்-19 அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இது போன்றே அவர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால், அவரின் பெயர் பரிசீலனைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன," என்று சபா கூறுகிறார். இதே கேள்வியிடம் மணீஷிடம் கேட்ட போது, "அவர் உடனடியாக இந்திய டி20 அணியில் இடம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய அணியில் விளையாட ஆரம்பித்த பிறகு அவரின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சச்சின், விராட் போன்று பெரிய வீரராக வர வேண்டும் என்றும், அதிக ரன்கள் எடுத்து இந்தியா மற்றும் பிகாருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce39eyy2eydo