Aggregator

மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்; ஒட்டுசுட்டானில் சம்பவம்

3 months 2 weeks ago
நண்பர் இப்போது ஓரளவு குணமாகிவிட்டார். இன்று மாலை மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறார்.

சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் ; “புகையிலைப் பொருட்கள் தொடர்பான தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்”

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2025 | 04:46 PM

image

புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர்

தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு  செலவிடப்படுகின்றது. 

வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன.

புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. 

புகைத்தல் பாவனையினால் அகால மரணமடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடுசெய்வதற்காக இளைஞர்களையும், சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும், சந்தைப்படுத்தல் நுட்பமுறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது. இவை இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் பாவனையை இயல்பாக்குவது மாத்திரமின்றி பொது சுகாதாரக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 

புகையிலை நிறுவனத்தால் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சில தலையீடுகள் கீழ்வருமாறு, 

- சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் புகையிலை பொருட்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காண்பித்தல்.  

- இளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் மற்றும் நிகழ்வுகளில் புகையிலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சில பிரமல்யமானவர்களை சிகரட் புகைத்தலில் ஈடுபட வைத்தல், அதனூடு புகைத்தல் பாவனையை இளைஞர்கள் மத்தியில் இயல்பாக்குவதற்கு முயற்சித்தல். 

- இளம் சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு சுவைகளில் இலத்திரனியல் சிகரட்டுக்களை அறிமுகம் செய்தல். 

- “சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை தடை” எனும் வாசகத்தை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி சிறுவர்களுக்கு புகைத்தல் மீதான ஆர்வத்தை தூண்டுதல்.

தற்போது இளைஞர்கள் புகையிலை பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவும் தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பல்வேறு வகையான நுட்ப முறைகளை புகையிலை நிறுவனம் கையாளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “பாதுகாப்பான மாற்றீடு”, “ பாதிப்புக்கள் குறைவானது”, “சமூகத்திற்கு ஏற்றது” மற்றும் “நாகரீகமானது” என இலத்திரனியல் சிகரட்டுக்களை விளம்பரம் செய்வதானது தற்போது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சூட்சமமான விளம்பரமாகும். ஆனால் இதில் எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்தும் கருவியாக இலத்திரனியல் சிகரட்டை அறிமுகப்படுத்தினாலும் அவற்றை பாவனை செய்வோர் இலத்திரனியல் சிகரட்டுடன் இணைத்து சிகரட் துண்டுகளையும் புகைப்பதற்கு ஆரம்பிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலத்திரனியல் சிகரட்டை விளம்பரப்படுத்தும் இந்த நுட்ப முறைகள் மிகவும் தவறான வழிகாட்டல்களை வழங்குவதோடு ஆபத்தானதாகவும்கருதப்படுகிறது. 

எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்). எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமாகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். 

புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. எமது நாட்டில் மாத்திரம் தினமும் ரூபா மில்லியன் 520 எனும் தொகை புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது தனிநபர், குடும்பம் சமூகம் என அனைத்து தரப்பினரினதும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகின்ற நிலைமையாகும். புகைத்தலினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளான கல்வி, உணவு, உறையுள் போன்றவற்றை சரியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. 

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கததிற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும். (The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019).

தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7,000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.  

இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன.

2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. எனினும் ஆதிக்கம் வாய்ந்த புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளால் நிறுவப்பட்ட கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வது சவாலாகக் காணப்படுகிறது. குறிப்பாக எமது நாட்டில் வரிக்கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன. 

இவ்வரிக்கொள்கை சரியான முறையில் அமையாதமையின் காரணமாக சிகரட் மீது வரி அதிகரிக்கப்பட்டாலும் புகையிலை தொழில்துறை விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தை ஈட்டி வருகின்றது. அதிகளவு விற்பனையாகும் சிகரட் வகையின் மீதான கலால் வரி ஒரு சிகரட்டிற்கு ரூ. 4.51 அதிகரித்த போது, சிகரட் நிறுவனம் ஒரு சிகரட்டிற்கான சில்லறை விலையை 10 ரூபாவாக  உயர்த்தி, இலாப வேறுபாட்டில் கணிசமான பகுதியைப் பெற்றது. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. 

வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

8.jpg

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிகரட் விற்பனை 54வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், அதே காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனத்தின் (CTC) வரிக்குப் பின்னரான இலாபம் 179வீதத்தால் அதிகரித்துள்ளது, இது ஒரு நாட்டில் நிலவக்கூடிய மோசமான வரிக் கொள்கையினால் ஏற்படுகின்ற விளைவாகும். ஆகவே இந்நிலைமையை மிகவும் விரைவாக மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றார்.

இச்சவால்களை வெற்றிக்கொள்வதற்காக கீழ்காணும் பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது.

- தனி சிகரட் விற்பனையை தடை செய்தல்

- எமது நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறையை நிறுவுவதற்காக 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் 

- முறையான மற்றும் அறிவியல் பூர்வமாக சிகரட் வரிவிதிப்புக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்

- கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்தல்

- புகையிலை பொருட்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் புகையிலைத் தொழில் துறையால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிலையான செயற்றிட்டமொன்றை பாடசாலை மட்டங்களில் அமுல்படுத்துதல்.  

- சந்தையில் காணப்படுகின்ற தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சிகரட்டுக்களையும் பறிமுதல் செய்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க NATAசட்டத்தின் 2016 திருத்தத்தில் கீழ் காணப்படும் சட்டங்கள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளை அறிமுகப்படுத்துதல்

- வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்துதல்

- சிகரட் வடிகட்டிகளைத் (cigarette filters)தடை செய்தல்

- இணையம் வழியாக இடம்பெறுகின்ற புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல் 

- NATA சட்டத்தின் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல். 

புகையிலைத் தொழில் துறையின் தலையீடுகளிலிருந்து இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம், சமூக நிறுவனங்கள், சுகாதார திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். எமது நாட்டில் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தல், பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல், புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பொது மக்கள் புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை அறிந்து கொண்டு அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கான வழிப்புணர்வையும், வலுப்படுத்தல்களையும் ஏற்படுத்த வேண்டும். இறுதியாக புகையிலை பாவனையால் தனி நபரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து விதமான விளைவகளுக்கும் புகையிலை நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

Image_06.jpeg

மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.

அதில்,  மதுபானம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி  நிஷான் டி மெல்,  மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட குழு, இலங்கை வைத்தியர் சங்கம் வைத்தியர் சுஜீவ ரன வீர புகையிலை தொழிற்றுறை அவதானிப்பு நிலையத்தின் பிரம ஆசிரியர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் மனோஜா பெரேராா மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/216093

சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் ; “புகையிலைப் பொருட்கள் தொடர்பான தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்”

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 04:46 PM புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர் தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு செலவிடப்படுகின்றது. வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. புகைத்தல் பாவனையினால் அகால மரணமடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடுசெய்வதற்காக இளைஞர்களையும், சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும், சந்தைப்படுத்தல் நுட்பமுறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது. இவை இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் பாவனையை இயல்பாக்குவது மாத்திரமின்றி பொது சுகாதாரக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. புகையிலை நிறுவனத்தால் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சில தலையீடுகள் கீழ்வருமாறு, - சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் புகையிலை பொருட்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காண்பித்தல். - இளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் மற்றும் நிகழ்வுகளில் புகையிலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சில பிரமல்யமானவர்களை சிகரட் புகைத்தலில் ஈடுபட வைத்தல், அதனூடு புகைத்தல் பாவனையை இளைஞர்கள் மத்தியில் இயல்பாக்குவதற்கு முயற்சித்தல். - இளம் சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு சுவைகளில் இலத்திரனியல் சிகரட்டுக்களை அறிமுகம் செய்தல். - “சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை தடை” எனும் வாசகத்தை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி சிறுவர்களுக்கு புகைத்தல் மீதான ஆர்வத்தை தூண்டுதல். தற்போது இளைஞர்கள் புகையிலை பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவும் தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பல்வேறு வகையான நுட்ப முறைகளை புகையிலை நிறுவனம் கையாளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “பாதுகாப்பான மாற்றீடு”, “ பாதிப்புக்கள் குறைவானது”, “சமூகத்திற்கு ஏற்றது” மற்றும் “நாகரீகமானது” என இலத்திரனியல் சிகரட்டுக்களை விளம்பரம் செய்வதானது தற்போது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சூட்சமமான விளம்பரமாகும். ஆனால் இதில் எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்தும் கருவியாக இலத்திரனியல் சிகரட்டை அறிமுகப்படுத்தினாலும் அவற்றை பாவனை செய்வோர் இலத்திரனியல் சிகரட்டுடன் இணைத்து சிகரட் துண்டுகளையும் புகைப்பதற்கு ஆரம்பிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலத்திரனியல் சிகரட்டை விளம்பரப்படுத்தும் இந்த நுட்ப முறைகள் மிகவும் தவறான வழிகாட்டல்களை வழங்குவதோடு ஆபத்தானதாகவும்கருதப்படுகிறது. எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்). எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமாகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. எமது நாட்டில் மாத்திரம் தினமும் ரூபா மில்லியன் 520 எனும் தொகை புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது தனிநபர், குடும்பம் சமூகம் என அனைத்து தரப்பினரினதும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகின்ற நிலைமையாகும். புகைத்தலினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளான கல்வி, உணவு, உறையுள் போன்றவற்றை சரியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கததிற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும். (The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019). தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7,000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன. 2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. எனினும் ஆதிக்கம் வாய்ந்த புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளால் நிறுவப்பட்ட கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வது சவாலாகக் காணப்படுகிறது. குறிப்பாக எமது நாட்டில் வரிக்கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன. இவ்வரிக்கொள்கை சரியான முறையில் அமையாதமையின் காரணமாக சிகரட் மீது வரி அதிகரிக்கப்பட்டாலும் புகையிலை தொழில்துறை விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தை ஈட்டி வருகின்றது. அதிகளவு விற்பனையாகும் சிகரட் வகையின் மீதான கலால் வரி ஒரு சிகரட்டிற்கு ரூ. 4.51 அதிகரித்த போது, சிகரட் நிறுவனம் ஒரு சிகரட்டிற்கான சில்லறை விலையை 10 ரூபாவாக உயர்த்தி, இலாப வேறுபாட்டில் கணிசமான பகுதியைப் பெற்றது. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிகரட் விற்பனை 54வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், அதே காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனத்தின் (CTC) வரிக்குப் பின்னரான இலாபம் 179வீதத்தால் அதிகரித்துள்ளது, இது ஒரு நாட்டில் நிலவக்கூடிய மோசமான வரிக் கொள்கையினால் ஏற்படுகின்ற விளைவாகும். ஆகவே இந்நிலைமையை மிகவும் விரைவாக மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றார். இச்சவால்களை வெற்றிக்கொள்வதற்காக கீழ்காணும் பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது. - தனி சிகரட் விற்பனையை தடை செய்தல் - எமது நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறையை நிறுவுவதற்காக 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் - முறையான மற்றும் அறிவியல் பூர்வமாக சிகரட் வரிவிதிப்புக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் - கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்தல் - புகையிலை பொருட்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் புகையிலைத் தொழில் துறையால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிலையான செயற்றிட்டமொன்றை பாடசாலை மட்டங்களில் அமுல்படுத்துதல். - சந்தையில் காணப்படுகின்ற தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சிகரட்டுக்களையும் பறிமுதல் செய்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க NATAசட்டத்தின் 2016 திருத்தத்தில் கீழ் காணப்படும் சட்டங்கள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளை அறிமுகப்படுத்துதல் - வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்துதல் - சிகரட் வடிகட்டிகளைத் (cigarette filters)தடை செய்தல் - இணையம் வழியாக இடம்பெறுகின்ற புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல் - NATA சட்டத்தின் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல். புகையிலைத் தொழில் துறையின் தலையீடுகளிலிருந்து இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம், சமூக நிறுவனங்கள், சுகாதார திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். எமது நாட்டில் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தல், பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல், புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பொது மக்கள் புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை அறிந்து கொண்டு அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கான வழிப்புணர்வையும், வலுப்படுத்தல்களையும் ஏற்படுத்த வேண்டும். இறுதியாக புகையிலை பாவனையால் தனி நபரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து விதமான விளைவகளுக்கும் புகையிலை நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது. அதில், மதுபானம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட குழு, இலங்கை வைத்தியர் சங்கம் வைத்தியர் சுஜீவ ரன வீர புகையிலை தொழிற்றுறை அவதானிப்பு நிலையத்தின் பிரம ஆசிரியர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் மனோஜா பெரேராா மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216093

இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு வரிகளை இரட்டிப்பாக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முடிவு

3 months 2 weeks ago
31 MAY, 2025 | 11:26 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, தனது உலகளாவிய வர்த்தகப் போரின் சமீபத்திய தீவிரமாக, இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரிகளை 25 சதவீதட்டிப்பாக்குவதாக அறிவித்தார். பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள US Steel’s Mon Valley Works–Irvin ஆலையில் பேசிய டிரம்ப், இரும்பு இறக்குமதி மீதான வரி 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதேபோன்ற உயர்வு விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. ஜனவரியில் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் இரும்பு விலைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 நிலவரப்படி, அமெரிக்க எஃகு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 984 டாலர் ஆகவும், ஐரோப்பாவில் 690 டாலர் ஆகவும், சீனாவில் 392 டாலர் ஆகவும் இருந்தது. ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் அமெரிக்க எஃகு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தையும் டிரம்ப் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/216165

இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு வரிகளை இரட்டிப்பாக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முடிவு

3 months 2 weeks ago

31 MAY, 2025 | 11:26 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, தனது உலகளாவிய வர்த்தகப் போரின் சமீபத்திய தீவிரமாக, இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரிகளை 25 சதவீதட்டிப்பாக்குவதாக அறிவித்தார்.

பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள US Steel’s Mon Valley Works–Irvin ஆலையில் பேசிய டிரம்ப், இரும்பு இறக்குமதி மீதான வரி 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதேபோன்ற உயர்வு விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

ஜனவரியில் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் இரும்பு விலைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 நிலவரப்படி, அமெரிக்க எஃகு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 984 டாலர் ஆகவும், ஐரோப்பாவில் 690 டாலர் ஆகவும், சீனாவில் 392 டாலர் ஆகவும் இருந்தது.

ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் அமெரிக்க எஃகு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தையும் டிரம்ப் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/216165

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?

3 months 2 weeks ago
'ஒன்று கூட சரியான நேரத்தில் முடியவில்லை' - இந்திய விமானப்படை தளபதி கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதிலும், அதை வழங்குவதிலும் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்தார். அத்துடன், சில தீவிரமான முக்கிய கேள்விகளையும் அவர் எழுப்பினார். 2025 மே 29-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, எந்தவொரு பாதுகாப்பு குறித்த திட்டமும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதில்லை என்றும், உள்நாட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சில முக்கியமான விஷயங்களையும் அவர் குறிப்பிட்டார். இந்திய விமானப்படை, ராணுவ தளவாட பற்றாக்குறையால் நீண்ட காலமாக போராடி வருகிறது என்பதும், அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானங்கள் இந்தியாவிடம் இல்லாததும் குறையாகவே இருக்கிறது. 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அவை உற்பத்தி செய்யப்படுவதற்கும், தயாரிக்கப்பட்ட பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கும் இன்னும் நீண்ட காலம் எடுக்கும். ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் தெரிவித்த கவலைகள் உண்மையானவை என இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி ஆமோதிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES "கொள்முதல் செய்ய யாரிடம் ஒப்புக்கொள்கிறீர்களோ அவர்களிடம் இருந்து உறுதியான உத்தரவாதத்தைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. வாக்குறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வேலையை முடிப்பார்கள் என்ற உறுதியான உத்தரவாதத்தை அவர்களிடம் இருந்து பெற வேண்டும். அவர்கள் வேலையை முடிக்கத் தவறினால், அல்லது சில ஆண்டுகளுக்கு முன்னரே, காலக்கெடுவிற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் நம்மிடம் கூறியிருந்தால், மாற்று வழிகளைக் கண்டறிந்திருக்கலாம்," என்று NDTV செய்தி சேனலிடம் பேசிய இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் வி.ஆர். செளத்ரி தெரிவித்தார். பாதுகாப்பு கொள்முதல் மற்றும் விநியோகங்களில் காணப்படும் நீண்ட இடைவெளி மற்றும் திட்டமிடப்பட்ட நேரத்தை விட பல மடங்கு காலதாமதம் ஏற்படுவது போன்றவற்றால் விரக்தி அதிகரித்து வருவதாகக் கூறும் பாதுகாப்பு நிபுணர்கள், இதையே விமானப்படை ஏர் சீஃப் மார்ஷலின் அறிக்கை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர். கடந்த மாதம் ஏப்ரல் 22ஆம் நாளன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலும், அதற்கு பதிலடி கொடுக்க மே 7ம் தேதியன்று பாகிஸ்தானுக்குள் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலும், அதனையடுத்து சில நாட்கள் நடைபெற்ற சண்டையின் பின்னணியில் ஏர் சீப் மார்ஷலின் கவலை பார்க்கப்படுகிறது. நான்கு நாள்கள் நடைபெற்ற ராணுவ மோதலுக்குப் பிறகு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தீவிரப்படுத்துவது தொடர்பான வாத-விவாதங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மேலும் முனைப்பு காட்ட வேண்டிய அவசியத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு அமைப்பு விமானப்படைத் தளபதி என்ன சொன்னார்? வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) வருடாந்திர வணிக மாநாட்டில் பேசிய விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங், 'ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை' என்று கூறினார். "ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே, அவை ஒருபோதும் சரியான நேரத்தில் வந்து சேராது என்பது எங்களுக்குத் தெரியும். காலக்கெடு என்பது முக்கியமான பெரிய பிரச்னை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை ஏன் வழங்க வேண்டும்?" என்று ஏர் மார்ஷல் கேள்வி எழுப்பினார். டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது நாம் மேக் இன் இந்தியா' என்பதுடன் சேர்த்து 'டிசைன் இன் இந்தியா' என்பதையும் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று கூறினார். உள்நாட்டிலேயே ஆயுதங்களை உருவாக்க இந்திய அரசு முயற்சிக்கிறது. இருந்தபோதிலும், தற்போதும்கூட இந்தியாவிற்கு தேவையான ஆயுதங்களில் பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்தே வாங்கப்படுகிறது. பல சமயங்களில், இவற்றை வாங்குவதற்கான முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றால், அவற்றை வழங்குவதிலும் நிறுவனங்கள் பெரும்பாலும் தாமதம் செய்கின்றன. "கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் போது, அது விரைவில் செயல்படுத்தப்படாது என்பது தெரிந்தாலும்கூட அடுத்து என்ன செய்வது என்பதை பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற நினைப்பிலேயே கையெழுத்திடுகிறோம். இயற்கையாகவே, செயல்முறைகள் தடம் புரண்டு விடுகின்றன" என்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கூறினார். 83 தேஜாஸ் எம்கே 1ஏ இலகுரக போர் விமானங்கள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்தின் பின்னணியில் விமானப்படைத் தளபதியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம், 2021ஆம் ஆண்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் கையெழுத்தானது. 70 எச்டிடி-40 ரக பயிற்சி விமானங்களை வாங்குவதற்காக எச்ஏஎல் உடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. "விமானப்டையை பொறுத்தவரை, எங்கள் கவனம் திறன் மற்றும் திறமையை சார்ந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வது பற்றி மட்டுமே இனி பேச முடியாது, இந்தியாவிலேயே வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்க வேண்டும்" என்று விமானப்படைத் தளபதி கூறினார். பாதுகாப்புப் படைகளுக்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பிக்கை மற்றும் வெளிப்படையான உரையாடலின் அவசியத்தை வலியுறுத்திய அவர், "மேக் இன் இந்தியா திட்டத்தைப் பொருத்தவரை, ஐஏஎஃப், சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்றார். முன்னதாக, இந்திய விமானப்படை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தன்னிறைவு மட்டுமே ஒரே தீர்வு என்பதை உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார். "எதிர்காலத்தில் தயாராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்போது நாம் செயல்பட வேண்டும் என்பதே கவலையாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியத் தொழில்துறையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) அதிக உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும், இன்றைய தேவைகளை இப்போதே பூர்த்தி செய்யவேண்டும்" என்று விமானப்படைத் தளபதி தெரிவித்தார். "இப்போதைய தேவைகளுக்காக துரிதமான சில மேக் இன் இந்தியா திட்டங்கள் தேவைப்பட்டாலும், எதிர்காலத்தில் டிசைன் இன் இந்தியா திட்டங்களே தொடர்ந்து பலனைத் தரும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய விமானப்படையிடம் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன நிபுணர்களின் கருத்து என்ன? இது குறித்து பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடியிடம் பிபிசி பேசியது. "பாதுகாப்பு அமைச்சகத்தில் செயல்படும் அமைப்பு, காலவரையறை இல்லாமல் செயல்படுவது ஆயுதப்படையினரிடமும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார். "எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் செயல்முறையிலும், ஒப்பந்தம் தொடங்கிய பிறகு, திட்டம் 36 முதல் 40 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், திட்டம்12 கட்டங்களைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் சிற்சில தடைகளும் தாமதங்களும் ஏற்படுவதால் தான், இந்தத் திட்டங்கள் முடிவடைய சராசரியாக ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகிறது" என்று ராகுல் பேடி கூறுகிறார். இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் (AMCA) பற்றி பேசும் ராகுல் பேடி, "இதற்கு தற்போதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதன் முதல் மாடல் 2035 இல் வரும், அதற்கு பிறகு உற்பத்தி செய்ய மேலும் மூன்று ஆண்டுகள் ஆகும். அதாவது, அது விமானப்படையில் சேர சுமார் 13 ஆண்டுகள் ஆகும், அதுவும் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால்மட்டுமே" என்று கூறினார். மேலும், "5வது தலைமுறை போர் விமானத்தை உருவாக்க இந்தியா 2007-08 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் 11 ஆண்டுகள் தொடர்ந்தன, அதற்காக சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர்களும் செலவிடப்பட்டன, ஆனால் 2018 இல் அது தோல்வியுற்றதாகக் கருதப்பட்டு கைவிடப்பட்டது. ஆனால் ரஷ்யா AFGFAவில் தொடர்ந்து பணியாற்றி, சுகோய்-57 ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கிவிட்டது. நாம் அந்த பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முடித்திருந்தால், தற்போது நம்மிடம் ஒரு ஸ்டெல்த் போர் விமானம் இருந்திருக்கும்." "இந்திய விமானப்படைக்கு சுமார் 42 ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதில் 30 ஸ்குவாட்ரன்கள் தான் இருக்கிறது. இவற்றிலும், இரண்டு முதல் மூன்று ஸ்குவாட்ரன் போர் விமானங்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளன. இதன் பொருள் விமானப்படையில் சுமார் 28 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே இருக்கும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,எதிர்காலத்தில் போர்களில் விமானப்படை ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 2018-19 ஆம் ஆண்டில் 114 போர் விமானங்கள் தேவை என இந்திய விமானப்படை முன்மொழிந்திருந்தது. அதில் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறும் ராகுல் பேடி, விமானப்படைத் தளபதியின் ஆதங்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என்று சொல்கிறார். மேலும் "ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளில் இந்திய விமானப்படையின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் சில விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எதுவுமே தெளிவாகக் கூறப்படவில்லை. நிச்சயமாக இந்திய விமானப்படை தனது தயார்நிலையை மதிப்பீடு செய்து வருகிறது." ரஃபேல் ஒப்பந்தத்தை பாதுகாப்பு கொள்முதல் தாமதத்திற்கு மற்றொரு உதாரணமாக கூறலாம். 2007-08இல் தொடங்கிய பேச்சுவார்த்தை, 2016இல் பிரதமர் மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டபோது இறுதியானது, அதன் விநியோகம் 2018இல் தொடங்கியது. "தேஜாஸ் வடிவத்தில் இன்று நமக்கு முன் இருக்கும் இலகு ரக போர் விமானம் (LCA) தொடர்பான பேச்சுவார்த்தை 1981 இல் தொடங்கியது. அதன் வன்பொருளில் 45 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று CAG அறிக்கை கூறியது. விமானத்தின் மிக முக்கியமான பகுதி என்ஜின் தான். அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெல்த் போர் விமானத்திற்கான என்ஜினையும் நாம் உருவாக்கவில்லை. நம்மால் சொந்தமாக எந்தவொரு என்ஜினையும் உருவாக்க முடியவில்லை" என்று ராகுல் பேடி கூறுகிறார். "ஹெலிகாப்டர் என்ஜின்களுக்கான தொழில்நுட்பம் பிரான்சிலிருந்து வாங்கப்பட்டு, உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது. அர்ஜுன் டேங்கில் ஜெர்மன் என்ஜின் என்றால், தேஜாஸின் என்ஜின் அமெரிக்காவிலிருந்து வருகிறது. மிகச்சிறிய என்ஜின் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. இது உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்குவதில் பெரிய தடையாக இருக்கிறது" என்கிறார் அவர். ராகுல் பேடியின் கூற்றுப்படி, "விமானப்படைத் தளபதியின் கவலையின் அர்த்தம் என்னவென்றால், உள்நாட்டில் தயாரிக்க முடியாத எந்தவொரு உபகரணத்தையும் வெளிநாட்டிலிருந்து வாங்கி இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்." பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,'ஆகாஷ் தீர்' இலக்கு துல்லியமானது என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது இந்திய ராணுவத்தின் பலம் குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, ராணுவ பலத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எட்டு இடங்கள் இடைவெளி உள்ளது. 2025ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ராணுவ பலத்தைப் பொருத்தவரை, 145 நாடுகளில் இந்தியா தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தானின் 12ஆம் இடத்தில் உள்ளது. இந்திய ராணுவத்தில் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், சுமார் 1.5 லட்சம் கவச வாகனங்கள், 100 தானியங்கி பீரங்கிகள் மற்றும் 3,975 இழுத்துச் செல்லப்படும் பீரங்கிகள் உள்ளன. இது தவிர, மல்டி-பேரல் ராக்கெட் பீரங்கிகள் 264 உள்ளன. இந்திய விமானப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் வீரர்கள் மற்றும் மொத்தம் 2,229 விமானங்கள் உள்ளன. இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளிடமும் மொத்தம் 899 ஹெலிகாப்டர்கள் உள்ளன, அவற்றில் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகும். இந்திய கடற்படையில் 1.42 லட்சம் வீரர்கள் உள்ளனர், இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள், 13 டெஸ்ட்ராயர் கப்பல்கள், 14 போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள், 18 சிறிய ரக போர் கப்பல்கள் உட்பட மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w3zjrzdj2o

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
மிரட்டிய தமிழக ஜோடி: மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய 'ஆலோசனை' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 31 மே 2025, 03:07 GMT நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் எனும் மாபெரும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியையடுத்து, 2வது தகுதிச்சுற்றில் பஞ்சாப் அணியுடன் நாளை ஆமதாபாத்தில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதும். மும்பையின் கச்சிதமான திட்டம் குஜராத் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் 230 ரன்கள் வரை சேர்த்த ஆட்டங்களில் அழுத்தம் தாங்காமல் தோல்வியைத் தழுவியது. அதிலும் முக்கிய பேட்டர் ஜாஸ் பட்லர் அணியில் இல்லை. இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்ட மும்பை அணி, தன்னுடைய இலக்கை 200 ரன்களுக்கு மேல் வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியது. மும்பை அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ (47), ரோஹித் சர்மா (81) உறுதுணையாக இருந்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் கேமியோ (22) 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியது. 229 ரன்கள் என்ற நெருக்கடியான இலக்கைத் துரத்தத் தொடங்கிய குஜராத் அணி முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை இழந்தபோதே பாதி தோல்வி அடைந்துவிட்டது. சாய் சுதர்சன் மட்டும் நம்பிக்கையுடன் ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்றார். இதில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர்(48), சாய் சுதர்சன் களத்தில் இருந்தவரை ஆட்டத்தில் பரபரப்பு இருந்தது. முடிவு எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பும்ரா 14-வது ஓவரில் யார்கரில் வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாகச் செய்துதான் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 16வது ஓவரில் சாய் சுதர்சன் போல்டான போது குஜராத் அணியின் ஒட்டுமொத்த போராட்டமும் முடிவுக்கு வந்தது. நம்பிக்கையும் தொலைந்தது. ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில், பெரிய இலக்கு நிர்ணயம், சுப்மான் கில், சுதர்சன் இருவரில் ஒருவரை விரைவாக ஆட்டமிழக்க வைப்பது என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்ததுதான் மும்பை அணி களமிறங்கி ஒவ்வொன்றாக கச்சிதமாகச் செய்து முடித்தது. ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் பிரமாஸ்திரம் பும்ரா மும்பை அணி பும்ராவின் பந்துவீச்சு இல்லாமல் இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளையும், சிரமங்களையும் சந்தித்தது. முதல் 5 லீக் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே மும்பை வென்றது. ஆனால், 4 போட்டிகளுக்குப் பின் பும்ரா அணிக்குள் வந்த பின் அணியின் உத்வேகமும், பந்துவீச்சில் கட்டுக்கோப்பும் வேறுவிதத்தில் இருந்தது. அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை வந்தது. மும்பையின் நம்பிக்கை நாயகன் பும்ரா இல்லாத நிலையில் தீபக் சஹரைத் தான் தொடக்க பந்துவீச்சாளராக மும்பை பயன்படுத்தியது. டெத் ஓவர்களில் சத்யநாராயண ராஜூவை பயன்படுத்தியது. அந்த நேரத்தில் மும்பையின் டெத் ஓவர் 17-20 வரை ரன்ரேட் 11 ஆக இருந்தது. ஆனால், பும்ரா அணிக்குள் திரும்பியபின், சஹர், போல்ட் பவர்ப்ளேயில் மட்டும் பயன்படுத்தப்பட்டு, ஹர்திக் நடுப்பகுதி ஓவர்களை கவனித்துக்கொண்டார். பந்துவீச்சு தலைமையை பும்ரா தனது துல்லியமான யார்கர், கட்டுக்கோப்பான எக்கானமி, டெத் ஓவர்களில் பந்துவீசும் பொறுப்பை ஏற்றார். பும்ரா அணிக்குள் வந்தபின் ஹர்திக் பாண்டியாவின் அழுத்தமும், பந்துவீசு்சு சுமையும் சற்று குறைந்தது. அது மட்டுமல்ல டெத் ஓவரில் பும்ரா இல்லாமல் இருந்தபோது அணியின் ரன்ரேட் 11 ஆக இருந்தநிலையில், அவரின் வருகைக்குப் பின் 9.48 ஆகக் குறைந்தது. மும்பையின் பந்துவீச்சிலும் ஒருவிதமான கட்டுக்கோப்பு, துல்லியம், மிரட்டல் உருவானது. அதுதான் நேற்றைய ஆட்டத்திலும் நடந்தது. வாஷிங்டன் சுந்தரும், சுதர்சனும் ஆட்டத்தை வேறுவிதத்தில் கொண்டு சென்றனர். ஆட்டத்தில் திருப்பம் தேவை என்ற நிலையில் பும்ராவை 14வது ஓவரை வீச அழைத்தனர். ஏற்கெனவே பும்ரா ஓவரில் இரு பவுண்டரிகளை வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார். ஆனால், 14வது ஓவரை பும்ரா வீசும்போது, துல்லியம் தவறாமல், கடினமான லென்த்திலும், யார்கரிலும் வீசினார். இதனால் தொடக்கத்திலிருந்தே வாஷிங்டன் ரன் சேர்க்க சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்கு யார்கரை துல்லியமாக பும்ரா வீச, அதை எதிர்கொள்ள முடியாத வாஷிங்டன் சுந்தர் தலைகுப்புற கீழே விழுந்து போல்டாகினார். பும்ராவின் இந்த ஓவர்தான் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஆட்டத்தை மும்பையின் கரங்களுக்கு மாற்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES போல்டின் முதல் ஓவர் விக்கெட் ஐபிஎல் போட்டிகளில் டிரன்ட் போல்ட், முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குஜராத் அணியின் முக்கிய தூண்களில் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் நிலைகுலைந்துவிடும் என்ற திட்டத்துடன் போல்ட்டுக்கு முதல் ஓவர் தரப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட பணியை போல்டும் கச்சிதமாகச் செய்து முதல் ஓவரிலேயே சுப்மான் கில் விக்கெட்டை சாய்த்தார். இதன் மூலம் 33-வது முறையாக முதல் ஓவரில் போல்ட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். டிரன்ட் போல்டின் இந்த விக்கெட் வீழ்த்தும் திறனை சரியாகப் பயன்படுத்தி, புதிய பந்தில் அதிகமாக ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதாலும், போல்ட்டிற்கு முதல் ஓவரை மும்பை வழங்கியது. அதற்கு ஏற்றபடி போல்ட் முதல் ஓவரிலேயே சுப்மான் கில்லை கால்காப்பில் வாங்க வைத்து விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல டெத் ஓவர்களில் பும்ராவுடன் இணைந்து போல்ட் பந்துவீசும்போது மும்பை அணியால் எதிரணியின் ரன் எடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்த முடிகிறது. லீக் போட்டிகளில் இதுவரை டெத் ஓவர்களில் 19 யார்கர்களை போல்ட் வீசியுள்ளார், டெத் ஓவர்களில் 2.75 எக்னாமி ரேட் வைத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 53 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, 8.29 எக்னாமி ரேட் வைத்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மாவின் அனுபவம் ரோஹித் சர்மா மும்பை அணிக்குள் வந்தபின் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து இறங்கிய போதிலும்கூட மும்பை அணிக்கு தன்னால் முடிந்த 100 சதவீத உழைப்பை வழங்கத் தவறியதில்லை. விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஒரு அணிக்காக அதிகபட்ச ரன்களை சேர்த்துக் கொடுத்ததில் 2வது இடத்தில் 7ஆயிரம் ரன்களுக்கு அதிகமாக சேர்த்து ரோஹித் சர்மா இருக்கிறார். இந்த சீசனின் தொடக்கத்தில் ரோஹித்தின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு சில போட்டிகளில் அடித்த அரைசதத்தின் மூலம் பதில் அளித்தார். ஆனால், ரோஹித் சர்மாவின் அனுபவம், இதுபோன்ற பெரிய தொடர்களில், எலிமினேட்டர், ப்ளே ஆஃப் கட்டங்களில்தான் உதவுகிறது. மும்பை அணியின் திட்டத்தை கச்சிதமாக தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா செயல்படுத்தினார். ஒரு புறம் பேர்ஸ்டோ அதிரடியாக ஆடத் தயங்கியபோது, ரோஹித் சர்மா 2வது ஓவரிலிலிருந்தே பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டி ஸ்கோரை உயர்த்தினார். பேர்ஸ்டோ முதல் பவுண்டரி அடித்த பின்புதான் அவருக்குள் நம்பிக்கை துளிர்விட்டது. அதுவரை ரோஹித் சர்மாதான் களநாயகனாக இருந்தார். இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்த ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சுழற்பந்துவீச்சில் ரோஹித் சர்மா பலவீனமானவர் என்ற விமர்சனங்களை நேற்று உடைத்தெறிந்தார். குஜராத் சுழற்பந்துவீச்சாளர்கள் சாய் கிஷோர், ரஷீத் கான் வீசிய ஓவர்களில் ஸ்வீப் ஷாட்கள் மூலம் சிக்ஸர், பவுண்டரிகள் என 27 ரன்களை குவித்தார் ரோஹித் சர்மா. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவுடன் சேர்ந்து 84 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா வலுவான அடித்தளத்தை தனது அனுபவத்தால் மும்பைக்கு அமைத்துக் கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES நடுப்பகுதி ஓவர்களில் ஸ்கையின் பலம் மும்பை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் அணியைத் தாங்கிப் பிடிக்க நடுப்பகுதியில் சூர்யகுமார் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் சூர்யகுமார், தேவைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வதில் வல்லவர். அணியின் இக்கட்டான நிலையில் ஆங்கர் ரோலையும், டெத் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். இந்த ஆட்டத்திலும் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சூர்யகுமார் அமைத்த 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ரோஹித் சர்மாவுக்கு ஸ்ட்ரைக் வாய்ப்புக் கொடுத்து ஆடிய சூர்யகுமார் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து 14 முறை, 25 ரன்களுக்கும் அதிகமாக சூர்யகுமார் சேர்த்து உலக சாதனையும் படைத்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் ஓர் அணிக்கு அதிகபட்ச பங்களிப்பு செய்த பேட்டர்களில் சூர்யகுமார்தான் முதலிடத்தில் உள்ளார். லீக் போட்டிகள் வரை 480 ரன்களை நடுப்பகுதியில் குவித்த சூர்யகுமார் 41.17% பங்களிப்பு செய்துள்ளார். சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக கிளாசன், பட்லர், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே.எல் ராகுல் ஆகியோர் உள்ளனர். ஆதலால் நடுப்பகுதியில் சூர்யகுமார் யாதவ் இருப்பது மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாகும். தொடக்க வீரராக இல்லாமல், நடுவரிசையில் களமிறங்கி 2023, 2025 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் ஐபிஎல் வரலாற்றிலே முதல் வீரர் சூர்யகுமார்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையை வெற்றிப் பாதைக்கு திருப்பிய 'ஆலோசனை' மும்பை அணியில் 4 வீரர்கள் கேப்டன்சி அனுபவத்துடன் இருப்பது எந்த அணிக்கும் இல்லாத மிகப்பெரிய பலமாகும். எந்தவிதமான இக்கட்டான தருணங்களிலும், சிக்கலான சூழல்களிலும், 4 கேப்டன்களின் வேறுபட்ட அணுகுமுறை, ஆலோசனைகள் நிச்சயமாக சிக்கலில் இருந்து மீள வழிவகுக்கும். மும்பையின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் கேப்டனாக இருந்த பும்ரா ஆகியோர் இருப்பது இக்கட்டான தருணங்களில் தெளிவான ஆலோசனைகளையும், திட்டங்களையும் வகுக்க துணை புரியும். இந்த ஆட்டத்தில் கூட வாஷிங்டன் சுந்தர், சுதர்சனைப் பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். அப்போது ரோஹித் சர்மா, சூர்யகுமார், ஹர்திக், பும்ரா ஆகிய 4 பேரும் கூடி ஆலோசனை செய்ததையும் காண முடிந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் அடுத்த சிறிது நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியை தவறவிட்ட குஜராத் குஜராத் அணியின் தோல்வி சேஸிங்கில் எழுதப்படவில்லை, அவர்களின் பந்துவீச்சில் 2வது ஓவரிலேயே எழுதப்பட்டு, அதன்பின் 4வது ஓவரில் அழுத்தமாக எழுதப்பட்டுவிட்டது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் ரோஹித் சர்மா அடித்த ஷாட்டில் கைமேல் கிடைத்த பந்தை கோட்ஸி, பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்க தவறியபோது, கேட்ச் தவறவில்லை ஆட்டம் தவறியது. அடுத்ததாக சிராஜ் வீசிய ஓவரில் ரோஹித் சர்மா பேட்டிலிருந்து தெறித்து சென்ற பந்தை விக்கெட் கீப்பர் மெண்டிஸ் கோட்டை விட்ட போது, தோல்வி என்பது அழுத்தமாகப் பதிவானது. இரு தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா, மும்பையின் வெற்றிக்கு அழுத்தமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c74qw1l02e3o

கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?

3 months 2 weeks ago
இனவழிப்பு என்பது மட்டுமல்ல, புலிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் சிங்களத்தின் இந ஒடுக்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடி தமது நிலத்தையும் பண்பாட்டையும் மக்களையும் விடுவிக்க போராடிய விடுதலை வீரர்கள் என்பதையும் நோக்கி சர்வதேசத்தை நகர்த்துகிறார்கள். இவர்கள் விடும் கண்டனம் கோசம் சவால் எல்லாம் நமக்கு ஆதரவாகவே திரும்புகின்றன. இனக்கலவரம் வெடிக்கும், இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பது, இவர்களது கடந்தகால வரலாற்றுக்கு சாட்சியம். பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற நடத்திய மனிதாபிமானப்போர் என்கிறது. அப்படியெனில் மக்களின் பாதுகாப்பை கருதாமல் அவர்கள்மேல் குண்டுகளை பொழிந்து, அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்துகளை தடுத்தது ஏன்? அவர்கள் தப்பித்து சென்று உயிர் வாழும் சந்தர்ப்பங்களை மறுத்து, வீதிகளை அடைத்து கெடுபிடிகளை ஏற்படுத்தியதும் ஏன்? அவர்கள் உயிர் காக்க தஞ்சமடைந்த இடங்களை அழித்து அவர்களை விரட்டியது ஏன்? சரணடைந்தவர்களை கொன்றது ஏன்? புலிகள் வெற்றிகொள்ளப்பட்ட பின்னும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருப்பது ஏன்? அவர்கள் நிலங்களில் அவர்கள் வாழ்வியலை தடுத்து அவர்களுக்கு பொருத்தமில்லாத விகாரைகளை எழுப்பி அவர்களை சீண்டுவது ஏன்? மக்கள் இவர்களிடம் புலிகளுக்கெதிராக முறையிட்டார்களா? பாதுகாப்பு கேட்டார்களா? இன்னுமேன் மாவீரர் தினத்தை நினைவு கூர முண்டியடிக்கிறார்கள்? இன்னும் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அப்போ எங்கே தவறு புலிகளிலா சிங்களத்திலா? சர்வதேசம் ஒன்றும் முட்டாளல்ல என்பதை சிங்களம் தனது முடிவின்போது கண்டு அதிர்ச்சியுறும்.

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

3 months 2 weeks ago
வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி May 31, 2025 10:50 am “பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வலியுறுத்தியதாகவும், இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது. வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் நோக்கிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலுள்ள காணிகள் தொடர்பிலும் நிர்ணயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் தமக்குரிய காணி என்பதற்குரிய சான்று இருந்தால் உரித்து வழங்கப்படும். இல்லையேல் அரசாங்க காணியென அடையாளப்படுத்தப்படும். முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தை வடக்கில் செய்யக்கூடாதென கூறுவதன் மூலம் “ இது எமது இடம், மத்திய அரசுக்கு அதில் உரித்து இல்லை” என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காத்தால், நாடு சமஷ்டியாக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமும் ஏற்கின்றது என்றாகிவிடும்.”- என்றார். https://oruvan.com/have-we-lost-the-north-sarath-weerasekara-questions/

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

3 months 2 weeks ago

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

May 31, 2025 10:50 am

வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி

“பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வலியுறுத்தியதாகவும், இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது.

வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் நோக்கிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலுள்ள காணிகள் தொடர்பிலும் நிர்ணயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் தமக்குரிய காணி என்பதற்குரிய சான்று இருந்தால் உரித்து வழங்கப்படும். இல்லையேல் அரசாங்க காணியென அடையாளப்படுத்தப்படும்.

முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தை வடக்கில் செய்யக்கூடாதென கூறுவதன் மூலம் “ இது எமது இடம், மத்திய அரசுக்கு அதில் உரித்து இல்லை” என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காத்தால், நாடு சமஷ்டியாக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமும் ஏற்கின்றது என்றாகிவிடும்.”- என்றார்.

https://oruvan.com/have-we-lost-the-north-sarath-weerasekara-questions/

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

3 months 2 weeks ago
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர். ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சா...ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேக...கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார்.https://adaderanatamil.lk/news/cmbbpk68p016yqpbszibgoe31

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

3 months 2 weeks ago

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார். 

இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார். 

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சா...
No image previewஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேக...
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார்.

https://adaderanatamil.lk/news/cmbbpk68p016yqpbszibgoe31

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

3 months 2 weeks ago
இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmbbikebv016rqpbsob2cvcxs

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

3 months 2 weeks ago

இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30)  கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். 

இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmbbikebv016rqpbsob2cvcxs

பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!

3 months 2 weeks ago
பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்! உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை. கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்துக் கலந்­து­ரை­யாடும் நோக்கில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணிக்கும் இடை­யி­லான சந்­திப்பு வெள்­ளிக்­கி­ழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள தனியார் விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது. இச்­சந்­திப்பில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் பதில் செய­லாளர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர். இதன்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. இச்­சந்­திப்­பின்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய அர­சியல் கட்­சிகள் ஆட்­சி­ய­மைப்­பது அவ­சியம் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­ட­தா­கவும், அதன்­படி தமது இரு கட்­சி­களும் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­பட்டால் அவ்­விரு மாகா­ணங்­க­ளிலும் கணி­ச­மான சபை­களில் பெரும்­பான்மை ஆச­னங்­களைக் கைப்­பற்­ற­மு­டியும் என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் கஜேந்­தி­ர­குமார் தெரி­வித்தார். அதற்குப் பதி­ல­ளிக்­கையில், இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்­கப்­பாடு எட்­டப்­படும் பட்­சத்தில் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முடியும் எனவும், மாறாக வெறு­மனே தேர்­தலை இலக்­கா­க­வைத்து சபை­க­ளையும், பத­வி­க­ளையும் கைப்­பற்­று­வ­தற்­காக மாத்­திரம் கூட்­டி­ணை­ய­வேண்­டிய அவ­சியம் தமக்கு இல்லை எனவும் எடுத்­து­ரைத்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அத்­தோடு நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் தமிழ்த்­தே­சி­யத்தைப் பாது­காப்­ப­தற்கே தமிழ்­மக்கள் ஆணை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும், எனவே தமிழ்த்­தே­சி­யத்தை முன்­னி­றுத்தி வாக்கு கோரிய சகல கட்­சி­களும் அதனைப் பாது­காத்து நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் எனவும் தான் தமி­ழ­ர­சுக்­கட்சிப் பிர­தி­நி­தி­க­ளிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக கஜேந்­தி­ர­குமார் கூறினார். இதே­வேளை இச்­சந்­திப்பு தொடர்பில் கருத்து வெளி­யிட்ட இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=334001&category=TamilNews&language=tamil

பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!

3 months 2 weeks ago

பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!

உள்ளூராட்சி மன்றங்களில்  ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை.

  

கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்துக் கலந்­து­ரை­யாடும் நோக்கில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணிக்கும் இடை­யி­லான சந்­திப்பு வெள்­ளிக்­கி­ழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள தனியார் விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் பதில் செய­லாளர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.

இச்­சந்­திப்­பின்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய அர­சியல் கட்­சிகள் ஆட்­சி­ய­மைப்­பது அவ­சியம் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­ட­தா­கவும், அதன்­படி தமது இரு கட்­சி­களும் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­பட்டால் அவ்­விரு மாகா­ணங்­க­ளிலும் கணி­ச­மான சபை­களில் பெரும்­பான்மை ஆச­னங்­களைக் கைப்­பற்­ற­மு­டியும் என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் கஜேந்­தி­ர­குமார் தெரி­வித்தார்.

அதற்குப் பதி­ல­ளிக்­கையில், இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்­கப்­பாடு எட்­டப்­படும் பட்­சத்தில் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முடியும் எனவும், மாறாக வெறு­மனே தேர்­தலை இலக்­கா­க­வைத்து சபை­க­ளையும், பத­வி­க­ளையும் கைப்­பற்­று­வ­தற்­காக மாத்­திரம் கூட்­டி­ணை­ய­வேண்­டிய அவ­சியம் தமக்கு இல்லை எனவும் எடுத்­து­ரைத்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­தோடு நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் தமிழ்த்­தே­சி­யத்தைப் பாது­காப்­ப­தற்கே தமிழ்­மக்கள் ஆணை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும், எனவே தமிழ்த்­தே­சி­யத்தை முன்­னி­றுத்தி வாக்கு கோரிய சகல கட்­சி­களும் அதனைப் பாது­காத்து நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் எனவும் தான் தமி­ழ­ர­சுக்­கட்சிப் பிர­தி­நி­தி­க­ளிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக கஜேந்­தி­ர­குமார் கூறினார்.

இதே­வேளை இச்­சந்­திப்பு தொடர்பில் கருத்து வெளி­யிட்ட இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

https://seithy.com/breifNews.php?newsID=334001&category=TamilNews&language=tamil

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

3 months 2 weeks ago
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/தடை-செய்யப்பட்ட-அமைப்புகள்-வர்த்தமானி-வெளியீடு/175-358299

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

3 months 2 weeks ago

தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
 
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/தடை-செய்யப்பட்ட-அமைப்புகள்-வர்த்தமானி-வெளியீடு/175-358299

முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்

3 months 2 weeks ago
முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் adminMay 30, 2025 முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றத்தான் வேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு பல சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை வினைத்திறனாக மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் சிறந்த தலைமைத்துவம் இருக்கவேண்டும். சில இடங்களில் தீராத பிரச்சினைகள் கூட சிறப்பான தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற பின்னர் தீர்ந்துவிடும். ஆனால் சில இடங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தலைமைத்துவம் ஒழுங்காக அமையாவிட்டால் இழுபடும். முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார். உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை எதிர்காலத்தில் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் வருமானத்தில் 20 சதவீதம் வரையில் தமது சபையின் ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவு செய்யவேண்டியுள்ளன. எஞ்சிய நிதியிலேயே அபிவிருத்தி வேலைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டியதாகவுள்ளது. வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தாலும் எங்களின் சில செயலாளர்களின் வேலைகளையும் நான் பார்க்கவேண்டியிருக்கின்றது. சில செயலாளர்கள் மக்களைச் சந்திப்பதேயில்லை. தங்களைச் சந்திப்பவர்களுடன் எரிந்து விழுகின்றார்கள். இதனால் மக்கள் அவர்களைச் சந்திப்பதைவிட என்னைச் சந்திக்கலாம் என்று வருகின்றனர். மக்களுக்காகத்தான் பதவிகளில் இருக்கின்றோம் என்பதை அதிகாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/216142/