Aggregator
சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் ; “புகையிலைப் பொருட்கள் தொடர்பான தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்”
Published By: DIGITAL DESK 3
30 MAY, 2025 | 04:46 PM
புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர்
தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு செலவிடப்படுகின்றது.
வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன.
புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது.
புகைத்தல் பாவனையினால் அகால மரணமடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடுசெய்வதற்காக இளைஞர்களையும், சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும், சந்தைப்படுத்தல் நுட்பமுறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக்கப்படுகின்றது. இவை இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் பாவனையை இயல்பாக்குவது மாத்திரமின்றி பொது சுகாதாரக் கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
புகையிலை நிறுவனத்தால் எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் சில தலையீடுகள் கீழ்வருமாறு,
- சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் புகையிலை பொருட்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காண்பித்தல்.
- இளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் மற்றும் நிகழ்வுகளில் புகையிலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சில பிரமல்யமானவர்களை சிகரட் புகைத்தலில் ஈடுபட வைத்தல், அதனூடு புகைத்தல் பாவனையை இளைஞர்கள் மத்தியில் இயல்பாக்குவதற்கு முயற்சித்தல்.
- இளம் சமுதாயத்தினரை ஈர்க்கும் வகையில் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு சுவைகளில் இலத்திரனியல் சிகரட்டுக்களை அறிமுகம் செய்தல்.
- “சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை தடை” எனும் வாசகத்தை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி சிறுவர்களுக்கு புகைத்தல் மீதான ஆர்வத்தை தூண்டுதல்.
தற்போது இளைஞர்கள் புகையிலை பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவும் தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் பல்வேறு வகையான நுட்ப முறைகளை புகையிலை நிறுவனம் கையாளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “பாதுகாப்பான மாற்றீடு”, “ பாதிப்புக்கள் குறைவானது”, “சமூகத்திற்கு ஏற்றது” மற்றும் “நாகரீகமானது” என இலத்திரனியல் சிகரட்டுக்களை விளம்பரம் செய்வதானது தற்போது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சூட்சமமான விளம்பரமாகும். ஆனால் இதில் எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்தும் கருவியாக இலத்திரனியல் சிகரட்டை அறிமுகப்படுத்தினாலும் அவற்றை பாவனை செய்வோர் இலத்திரனியல் சிகரட்டுடன் இணைத்து சிகரட் துண்டுகளையும் புகைப்பதற்கு ஆரம்பிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலத்திரனியல் சிகரட்டை விளம்பரப்படுத்தும் இந்த நுட்ப முறைகள் மிகவும் தவறான வழிகாட்டல்களை வழங்குவதோடு ஆபத்தானதாகவும்கருதப்படுகிறது.
எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்). எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமாகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. எமது நாட்டில் மாத்திரம் தினமும் ரூபா மில்லியன் 520 எனும் தொகை புகைத்தல் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. இது தனிநபர், குடும்பம் சமூகம் என அனைத்து தரப்பினரினதும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகின்ற நிலைமையாகும். புகைத்தலினால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவைகளான கல்வி, உணவு, உறையுள் போன்றவற்றை சரியான முறையில் தீர்த்துக்கொள்ள முடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கததிற்கு சிகரட்டினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும். (The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019).
தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7,000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன.
2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. எனினும் ஆதிக்கம் வாய்ந்த புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளால் நிறுவப்பட்ட கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வது சவாலாகக் காணப்படுகிறது. குறிப்பாக எமது நாட்டில் வரிக்கொள்கைகளை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பெரும் சவால்கள் ஏற்படுகின்றன.
இவ்வரிக்கொள்கை சரியான முறையில் அமையாதமையின் காரணமாக சிகரட் மீது வரி அதிகரிக்கப்பட்டாலும் புகையிலை தொழில்துறை விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தை ஈட்டி வருகின்றது. அதிகளவு விற்பனையாகும் சிகரட் வகையின் மீதான கலால் வரி ஒரு சிகரட்டிற்கு ரூ. 4.51 அதிகரித்த போது, சிகரட் நிறுவனம் ஒரு சிகரட்டிற்கான சில்லறை விலையை 10 ரூபாவாக உயர்த்தி, இலாப வேறுபாட்டில் கணிசமான பகுதியைப் பெற்றது. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது.
வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் சிகரட் விற்பனை 54வீதத்தால் குறைந்துள்ளது. எனினும், அதே காலகட்டத்தில் இலங்கை புகையிலை நிறுவனத்தின் (CTC) வரிக்குப் பின்னரான இலாபம் 179வீதத்தால் அதிகரித்துள்ளது, இது ஒரு நாட்டில் நிலவக்கூடிய மோசமான வரிக் கொள்கையினால் ஏற்படுகின்ற விளைவாகும். ஆகவே இந்நிலைமையை மிகவும் விரைவாக மாற்றியமைக்க வேண்டியது இன்றியமையாததாகும் என்றார்.
இச்சவால்களை வெற்றிக்கொள்வதற்காக கீழ்காணும் பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது.
- தனி சிகரட் விற்பனையை தடை செய்தல்
- எமது நாட்டில் புகையிலை இல்லாத தலைமுறையை நிறுவுவதற்காக 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்
- முறையான மற்றும் அறிவியல் பூர்வமாக சிகரட் வரிவிதிப்புக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்
- கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் புகையிலை விற்பனையைத் தடை செய்தல்
- புகையிலை பொருட்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் புகையிலைத் தொழில் துறையால் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிலையான செயற்றிட்டமொன்றை பாடசாலை மட்டங்களில் அமுல்படுத்துதல்.
- சந்தையில் காணப்படுகின்ற தடைசெய்யப்பட்டுள்ள அனைத்து வகையான இலத்திரனியல் சிகரட்டுக்களையும் பறிமுதல் செய்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு 7ஆம் இலக்க NATAசட்டத்தின் 2016 திருத்தத்தில் கீழ் காணப்படும் சட்டங்கள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளை அறிமுகப்படுத்துதல்
- வெற்றுப் பொதியிடல் முறைமையை அறிமுகப்படுத்துதல்
- சிகரட் வடிகட்டிகளைத் (cigarette filters)தடை செய்தல்
- இணையம் வழியாக இடம்பெறுகின்ற புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடை செய்தல்
- NATA சட்டத்தின் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் அதன் முன்மொழியப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
புகையிலைத் தொழில் துறையின் தலையீடுகளிலிருந்து இளைஞர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம், சமூக நிறுவனங்கள், சுகாதார திணைக்களங்கள், பாடசாலைகள் என அனைத்து தரப்பினரினதும் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். எமது நாட்டில் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்தல், பொது மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல், புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். பொது மக்கள் புகையிலை தொழில் துறையின் தலையீடுகளை அறிந்து கொண்டு அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கான வழிப்புணர்வையும், வலுப்படுத்தல்களையும் ஏற்படுத்த வேண்டும். இறுதியாக புகையிலை பாவனையால் தனி நபரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அனைத்து விதமான விளைவகளுக்கும் புகையிலை நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்
மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.
அதில், மதுபானம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, வெரிட்டே ரிசர்ச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசேட குழு, இலங்கை வைத்தியர் சங்கம் வைத்தியர் சுஜீவ ரன வீர புகையிலை தொழிற்றுறை அவதானிப்பு நிலையத்தின் பிரம ஆசிரியர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் மனோஜா பெரேராா மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் த சேரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் ; “புகையிலைப் பொருட்கள் தொடர்பான தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்”
இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு வரிகளை இரட்டிப்பாக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முடிவு
இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு வரிகளை இரட்டிப்பாக்கும் அமெரிக்கா: டிரம்ப் அதிரடி முடிவு
31 MAY, 2025 | 11:26 AM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, தனது உலகளாவிய வர்த்தகப் போரின் சமீபத்திய தீவிரமாக, இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரிகளை 25 சதவீதட்டிப்பாக்குவதாக அறிவித்தார்.
பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள US Steel’s Mon Valley Works–Irvin ஆலையில் பேசிய டிரம்ப், இரும்பு இறக்குமதி மீதான வரி 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதேபோன்ற உயர்வு விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
ஜனவரியில் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் இரும்பு விலைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 நிலவரப்படி, அமெரிக்க எஃகு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 984 டாலர் ஆகவும், ஐரோப்பாவில் 690 டாலர் ஆகவும், சீனாவில் 392 டாலர் ஆகவும் இருந்தது.
ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் அமெரிக்க எஃகு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தையும் டிரம்ப் குறிப்பிட்டார்.
ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி
வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி
வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி
வடக்கை நாம் இழந்துவிட்டோமா? சரத் வீரசேகர கேள்வி
“பிரிவினைவாதக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அடிபணிந்து வடக்கில் காணி மீள் நிர்ணயம் நிறுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தில் வடக்கில் ஏன் செய்ய முடியாது? வடக்கை நாம் இழந்துவிட்டோமா?”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“காணி அமைச்சால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வலியுறுத்தியதாகவும், இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும், இதனை வரவேற்பதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது.
வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் அழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் நோக்கிலேயே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கிலுள்ள காணிகள் தொடர்பிலும் நிர்ணயம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில் தமக்குரிய காணி என்பதற்குரிய சான்று இருந்தால் உரித்து வழங்கப்படும். இல்லையேல் அரசாங்க காணியென அடையாளப்படுத்தப்படும்.
முழு நாட்டிலும் செய்யப்படும் ஒரு விடயத்தை வடக்கில் செய்யக்கூடாதென கூறுவதன் மூலம் “ இது எமது இடம், மத்திய அரசுக்கு அதில் உரித்து இல்லை” என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது விடயத்தில் அரசாங்கமும் மௌனம் காத்தால், நாடு சமஷ்டியாக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கமும் ஏற்கின்றது என்றாகிவிடும்.”- என்றார்.
https://oruvan.com/have-we-lost-the-north-sarath-weerasekara-questions/
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று முன்தினம் (29) மேற்கொண்டார்.
இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.
இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை
இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை
இரண்டு பிள்ளைகளின் தாய் கொடூரமாகக் கொலை
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார். மேலும், அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.
இந்தக் கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmbbikebv016rqpbsob2cvcxs
பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!
பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!
பேச்சுக்களில் முழு இணக்கம் இல்லை- தொடர்ந்து பேச இணக்கம்!
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழுமையான இணக்கம் எட்டப்படவில்லை.
கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் ஆட்சியமைப்பது அவசியம் என தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதாகவும், அதன்படி தமது இரு கட்சிகளும் ஒத்துழைப்புடன் இணைந்து செயற்பட்டால் அவ்விரு மாகாணங்களிலும் கணிசமான சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிக்கையில், இருதரப்பினருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் இணைந்து ஆட்சியமைக்க முடியும் எனவும், மாறாக வெறுமனே தேர்தலை இலக்காகவைத்து சபைகளையும், பதவிகளையும் கைப்பற்றுவதற்காக மாத்திரம் கூட்டிணையவேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியத்தைப் பாதுகாப்பதற்கே தமிழ்மக்கள் ஆணை வழங்கியிருப்பதாகவும், எனவே தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி வாக்கு கோரிய சகல கட்சிகளும் அதனைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்தும் வகையில் இணைந்து செயற்படவேண்டும் எனவும் தான் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியதாக கஜேந்திரகுமார் கூறினார்.
இதேவேளை இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.
https://seithy.com/breifNews.php?newsID=334001&category=TamilNews&language=tamil
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. (a)
https://www.tamilmirror.lk/செய்திகள்/தடை-செய்யப்பட்ட-அமைப்புகள்-வர்த்தமானி-வெளியீடு/175-358299