3 months 1 week ago
கான்டீன் காரர் அடிக்கிற கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டனும், நோயாளர் நலன்புரிச்சங்கம் என்ற பெயரில் எத்தனை பேரின் பாக்கெட் நிறைகிறதோ தெரியல. காலைல சுடுதண்ணி கேட்க போனால் சுடுதண்ணீர் தரமாட்டினம் தங்களின் டி வியாபாரம் படுத்திடுமாம் காலை ஆறு மணிக்கு போய் நின்றால் 6:30 பிறகே கூப்பிடுவார்கள் எந்த பொருளுக்கும் பில் இல்லை water dispenser (hot &கூல்) சிலவற்றை ஆங்காங்கே பொருத்திவிட்டால் புண்ணியமாக போகும் வைத்தியசாலையின் முன்னாடி உள்ள கழிவு வாய்க்கால் கழிவுகளால் நிரம்பி தூர் வாரப்படாமல் உள்ளது வைத்தியசாலை நிர்வாகம் மாநகரசபைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாதம் ஒரு தடவையாவது அதனை சீர்படுத்தி பராமரிக்கலாம் யாழ்நகரின் பிரதான பாதையும் கூட அது
3 months 1 week ago
புலிகளை இல்லாமல் அழித்து விட்டோம், நாட்டில் மக்கள் அச்சமில்லாமல் எந்தப்பகுதிக்கும் போய்வரலாம், அந்த சுதந்திரத்தை நாங்கள் பெற்றுக்கொடுத்தோம், இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று கூறி, விகாரைகளையும் இராணுவ முகாம்களையும் எழுப்பி வெற்றி விழா கொண்டாடியவர்கள் இப்போ, தாங்கள் அந்தப்பகுதிக்கு வரத்தயாரில்லை. புலிகள் இல்லை நாட்டில் எங்கும், வடக்கில் இருப்பது புலிகளை அழித்த இராணுவம் (என்று சொல்லிக்கொள்கிறார்கள்) சிங்கள அரசின் காவற்துறை நீதி சட்டம். இருந்தும் வரத் தயக்கமேன்? செய்த கொலைகள். முதுகில புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம். லலித், குகனை கொன்றது இலங்கை புலனாய்வுப்படை கோத்தாவின் உத்தரவின் பேரில். அதன் அடுத்த கட்டம் குமார் குணரட்ணம் கடத்தல் நாடகம். அவரையும் போட்டுத்தள்ளி இருப்பார் கோத்தா அவுஸ்ரேலிய தூதரகம் நேரடியாகவே களத்தில் இறங்கி, கோத்தாவை தொடர்பு கொண்டதினால் குமார் தப்பினார். அப்போ சர்வதேச நாடுகளுக்கு தெரிந்திருந்தது, இலங்கையில் நடக்கும் கொலை கொள்ளை கூட்டத் தலைவன் கோத்தா, அதன் படைகள் இராணுவ காவற்துறை புலனாய்வாளர்கள் என்பது. நாட்டில் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, சாட்சிகளை அச்சுறுத்துவது, காணாமல் போகச்செய்வது, தடயங்களை அழிப்பது, இந்த இராணுவ காவற்துறை அதிகாரிகள். இதற்கு சம்பள, பதவி உயர்வு, மக்களாணை பெற்ற அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இவர்களுக்கு உயரதிகாரிகள் என்ற பட்டயம் வேறு. நாடு உருப்படுமா? நீதியை எதிர்பார்க்க முடியுமா? சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் இவர்களுக்கே அமைச்சு பதவி சம்பளம் என்றால் அந்த துறை எப்படியானது என்று அதன் வண்டவாளங்கள் வரிசையாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. நாடே தாங்கமுடியாமல் தள்ளாடுது. அதை மறைக்க கொலைக்கு மேல் கொலை, திசை திருப்பும் குற்றச்சாட்டு. இந்தப்பிரச்சனை எங்கு போய் முடியுமென்று தெரியவில்லையே?
3 months 1 week ago
இந்த கருத்து ஜேர்மனியின் அன்றாட, உண்மையான உள் நிலவரங்கள் தெரியாமல் எழுதப்பட்டு இருக்கின்றது. நாஷிகளின் கொள்கை என்ன என தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.
3 months 1 week ago
வணக்கம் சாத்திரியார்! மீண்டும் யாழ்களத்தில் கண்டதில் சந்தோசம். ஏன் முன்னரைப்போல் யாழ்களத்தில் எழுதுவதில்லை?
3 months 1 week ago
தலைவர் இருந்திருந்தால் இப்ப அவருக்கு 71 வயதாகி இருக்கும். இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுள் 73. அவரோ சுகர் வருத்தகாரன். கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை என்பார்கள். 2009 இல் தப்பி இருந்தால் கூட அவர் இப்போ இயற்கை மரணம் எய்தி இருப்பார். இன்னும் இதை வைத்து வண்டி ஓட்டாமல் - நடக்கிற காரியத்தை பார்க்கலாம்.
3 months 1 week ago
வணக்கம் ஆயுத எழுத்து.பாகம் 2.அடுத்த வாரத்திலிருந்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். பக்கம் .288 அட்டை.நூல் வடிவமைப்பு. ஜீவமணி விற்பனை உரிமை பூபாளம் புத்தகப் பண்ணை பிரதியின் விலை. 350 இந்திய ரூபாய்கள். ஐரோப்பா இங்கிலாந்து தபால் செலவுடன் 15 யூரோக்கள் கனடா, அமேரிக்கா தபால் செலவுடன் 25 டொலர்கள். அவுஸ்திரேலியா. நியூசிலாந்து தபால் செலவுடன் 25 அவுஸ்திரேலிய டொலர்கள். தொடர்புகளுக்கு. சிராஜுதீன். வாட்ஸ் அப். +91 94430 66449 வங்கி கணக்கிலக்கம். Mohammed sirajudeen, INDIAN BANK, ASHOK NAGAR BARANCH, A/C NO: 786149344 IFSC CODE: IDIB000A031 கனடாவில் காலம் செல்வம் அவர்களிடமும். இலங்கையில் வடக்கில் கவிஞர் கருணாகரனிடமும். கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகள் அனைத்துக்கும் பாத்திமா புத்தக நிலையம் (ஏறாவூர்) பெற்றுக்கொள்ளலாம். இலங்கைக்கு புத்த பொதி சென்றடைய சிறிது காலமெடுக்கும் என்பதால் மேலே குறிப்பிட்ட நபர்களோடு தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள். நன்றி.
3 months 1 week ago
அது ஒரு ஆதாரம் என்பதிலிருந்து தொடங்கலாமே தவிர அதனூடான கேள்விகள் சந்தேகங்கள் மற்றும் சாட்சியங்கள் இதுவரை இல்லை இனியும் கிடைக்கப்போவதுமில்லை. ஆகையால் இப்போது தொடங்கப்பட்டவை அனைத்தும் இனி பைலை மூடுவோம் என்பதற்கானது மட்டுமே. என்னைப் பொறுத்தவரை மூடுவதாலோ மூடாமல் விடுவதாலோ எதுவும் மாறப் போவதில்லை. கடவுளாக்கி மக்கள் தொழுவது தொடரும். அதில் நானும் ஒருவன். இத்தனைக்கும் தனது உடலை மக்கள் பார்க்கவேண்டும் என்ற தலைவரின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்தவனான போதும்.
3 months 1 week ago
ஊரில் உள்ள முன்னாள் போராளிகள் எல்லோரும் வீரச்சாவை உறுதிசெய்கின்றனர். ஆனால்இறுதி நேரத்தில் தலைவரை விட்டு வந்த விட்டோடிகள்மட்டும் வயிறு வளர்க்க பல முயற்சிகளில்.....
3 months 1 week ago
பாரதூரமான சேதங்கள் எதுவும் இல்லை. சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டு விட்டது.
3 months 1 week ago
பிரான்ஸின் மானத்தையே வாங்கி விட்டு கதை வேற. இந்திய இராணுவத்தின் வலிமையைப் பற்றிஈழத்தமிழர்களைத்தவிர யாருக்கும் புளுகலாம்.
3 months 1 week ago
நான் கூற வந்த விடயத்தினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன். உதாரணத்திற்காக நீங்கள் வீடு வாங்க முடிவு செய்து சந்தை விலையில் வாங்குவதனை விட மலிவாக வாங்குவதற்காக ஒரு வாங்கும் முகவரை அணுகுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் (இரண்டு வகை முகவர்கள் உள்ளார்கள் பொதுவாக விற்கும் முகவர்களே அனைவருக்கும் தெரியும், விற்கும் முகவர்கள் விற்பவர்களின் நலனை அடிப்படையாக கொண்டு செயற்படுபவர்கள்). உங்களுக்கு பிடித்த வீட்டினை சந்தை விலையில் 3 மடங்கு அதிக விலையில் விற்க முனைகிறார், அதற்கு அவர் கூறும் காரணம் பொதுநலம் என கூறி உங்களை வாங்குமாறு கூறினால் அவர் கூறிய மாதிரியே 3 மடங்கு விலையில் வீட்டை வாங்குவீர்களா அல்லது முகவரை மாற்றுவீர்களா?
3 months 1 week ago
லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.
3 months 1 week ago
இப்படியான நடைமுறை திட்டங்கள் தமிழ்தேசிய கோட்பாட்டிற்கு எதிரானவை அல்லவா
3 months 1 week ago
👍 கள்ளு குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை சாப்பிட கூடிய உணவு பொருள், போதை பொருள் இல்லை என்று சமுதாயத்திற்கு தீங்கு விதைக்கின்ற கூட்டத்தின் பேச்சுகளை பார்க்காமல் இருப்பது நல்தொரு செயல்.
3 months 1 week ago
😂 "மக்கள் ஒருவரைத் தெரிவு செய்தால் அவர் செய்வது மக்கள் நலன் சார்ந்து தான் இருக்கும்" என்ற மூட நம்பிக்கையை ட்ரம்ப், பிறேசிலின் பொல்சனாரோ, ஹங்கேரியின் ஓர்பான் இவர்களைக் கண்ட பின்னும் நாம் வைத்திருக்கிறோம் என்பது அதிசயம். மக்களின் தெரிவு வெறுப்புணர்வு, கடைந்தெடுத்த சுய நலம் என்பன சார்ந்ததாகவும் இருக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஜேர்மனியின் கிழக்குப் பாதி பெருவாரியாக நவநாசிகளான AfD இற்கு வாக்களித்தமை. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையாக நின்று firewall மூலமாக அந்த மக்கள் முடிவை நிராகரித்தமை தான் ஜேர்மனியில் மீண்டும் நாசிகள் கையோங்காமல் தடுத்தது!
3 months 1 week ago
பிரபாகரனின் இறந்த உடலின் காணொளி மட்டும் தான் "ஆதாரம்" என்ற வகைக்குள் வருகிறது எனக் கருதுகிறேன். எனவே எந்த ஆதாரமும் இல்லை என்பது சரியல்ல. அந்தக் காணொளியில் இருப்பதை நம்ப மறுப்பவர்கள் இருக்கலாம், ஆனால் அது தான் முடிவு செய்ய உதவியாக இருக்கும் ஒரே ஆதாரம்.
3 months 1 week ago
Facebook55K views · 698 reactions | நினைவில் கொள்வோம். | Delft Pa...நினைவில் கொள்வோம்..மைக்கல் ஜக்சனுடன் நடனமாடிய யமுனா சங்கரசிவம். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
3 months 1 week ago
இயற்கையின் மாற்றங்கள் இயல்பானது, இந்த கண்ட மேடை நகர்வுகள் ( டெக்டோனிக் பிளேட்) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இதனாலேயே மலைகளும் மடுக்களும் உருவானது, மயோசின் காலத்தில் கடலின் கீழே இருந்த யாழ்ப்பாணம் தரையுயர்தல் மூலம் உருவாகியது இதனாலேயே கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களின் தோற்றுவாயாக சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்து வருகிறது, இயற்கை இவ்வாறிருக்க அங்கு வாழும் மனிதர்கள் ஆளுக்கொரு சாதியினை எவ்வாறு உருவாக்கினார்கள், வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது வந்தேறு குடிகளா?
3 months 1 week ago
மக்களால் தெரிவு செய்யப்படாத ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எதோ ஒரு நிகழ்ச்சி நிரலிற்காக செயற்படுகிறார்களோ என முன்பு கூறிய விடயம் மீண்டும் உறுதிப்படுத்துவது போன்ற நிகழ்வு இது. அதிகரித்த உற்பத்தி செலவினால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் செல்ல போகின்றன, வெறும் 30 பில்லியன் வாகன சந்தைக்காக ஜேர்மனி இதனை ஆதரிப்பதாக கருத்தில் எடுத்தாலும் நடைமுறையில் அதிகரித்தவிலையினால் மறைமுகமாக அந்த வாய்ப்பினை கூட இழக்கின்ற நிலைதான். ஒரு புறம் திறமையான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டாலும் மறுபுறம் பொருளாதாரம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் செயற்பட்டு அமெரிக்காவினை மோசமான மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார். அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ள நிலையில் அரச கடனுக்காகவும் தற்காலிக பங்கு சந்தை உயர்விற்காகவும் மத்திய வங்கி ஆளுநருடன் வட்டி விகிதத்தினை குறைக்க சண்டை இடும் ட்ரம்ப் நிச்சயமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தினை புதைகுழியில் தள்ளாமல் விடமாட்டார்.
3 months 1 week ago
வணக்கம் செலுத்துபவர்களிடமும் சரி செலுத்த வேண்டாம் என்று சொல்பவர்களிடமும் சரி இருக்கிறார் என்று சொல்பவர்களிடமும் சரி இல்லை என்று சொல்பவர்களிடமும் சரி நிரூபிக்க தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. எனவே கண்டதை சொல்லி மக்களை ஏமாற்றாமல் மக்களின் தெரிவு எதுவோ அவர் அதுவாகவே இருக்கட்டுமே.