Aggregator

“நீ கும்பிடுவது சிலையின் தலையையா? காலையா? - தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க மனோ எம்.பி. வலியுறுத்தல்

3 months 2 weeks ago
கடவுள் இந்த வேலையை மனோவிடமே கொடுத்துள்ளார். இனி அடுத்தவர் போய் தட்டிப் பறிப்பது சரியில்லையல்லவா?

திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கேள்வி

3 months 2 weeks ago
இப்படி எல்லோரும் வந்திறங்கினால் சிங்கள குடியேற்றத் திட்டத்தை செய்ய இடையூறாக இருக்கும். ஆரம்பத்திலேயே ஒரு உலுக்கு உலுக்கினால் நாடு திரும்ப திட்டம் போட்டுள்ளவர்கள் கொஞ்சம் பின்வாங்கலாம்.

மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்

3 months 2 weeks ago
நானுங்கூட இப்படித்தான் யோசித்தேன். எத்தனை தமிழ்ப் பெற்றோர் பிள்ளைகளை பெற்று, எதிர்பார்ப்போடு வளத்தார்கள். இன்று பிள்ளைகளும் இல்லை, வாழிடமும் இல்லை, தனிமரமாக ஏக்கத்தோடும் வலிகளோடும் ஊமைகளாய் செய்வதறியாது திகைக்கிறார்கள். அதற்கு காரணமானவர்கள் அந்த வலியை உணரவேண்டும், பிராயச்சித்தம் தேட வேண்டும். ஆனால் ஜெ. ஆர் .ஜெயவர்தனா செய்த கொடுமைகளுக்கு சாதாரண மனிதன் போலவே அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றதாம், அவருக்கும் புற்றுநோய் என நினைக்கிறன். தாம் செய்த அனிஞாயங்களுக்கு வருந்தி தங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது அவர்களின் இறுதிக்காலத்தில். ஆனால் யாரும் தங்களை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்வதில்லை. பண்டார நாயக்காவின் வாரிசுகள் அதனை தொடர்ந்தார்கள். அவர் தான் விட்ட தவறை ஏற்றுக்கொள்ளவுமில்லை சரி செய்யவுமில்லை. அவரின் மனைவி, மகள், மகன் அதன் வழியே தொடர்ந்தார்கள். சந்திரிகா இப்போ, அந்த தவறை ஒப்புக்கொண்டாலும் சரியான நேரத்தில் அதை செய்யாமல் காலத்தை தவறவிட்டு ஒப்புக்கொள்வதால், அரசியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறது. அரசியல் கதிரை ஏறுவதற்கு முன் தமிழருக்கு பிரச்சனையுண்டு, அவர்கள் எங்களால் வஞ்சிக்கப்பட்டார்கள், நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் அவற்றிற்கு முடிவு காண்போம் என வாக்குறுதியளித்து அதை பிரட்டிப்போட்டு, அதன் மேலே அரசியல் செய்து வருகிறார்கள் தற்போது வரை. குற்றம் செய்பவர் தன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சரியென விளக்கமளித்து போதித்து வந்தால், அந்த வினை கட்டுப்பாடின்றி வளர்ச்சியுற்று இறுதியில் வீழ்ச்சியில் முடிவடையும் அதுவரை வீரியத்துடன் இருக்கும். அது அறமென போற்றப்படும் பின்பற்றப்படுபவர்களால்.

திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கேள்வி

3 months 2 weeks ago
திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கே http://seithy.com/siteadmin/upload/mano-ganesan-190525-seithy.jpg தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம் தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பில் மனோ எம்பி தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது; ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து, பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? 75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? என மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=333979&category=TamilNews&language=tamil

திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கேள்வி

3 months 2 weeks ago

திரும்பிய அகதியை கைது செய்தது சரியா?- மனோ கணேசன் கே

http://seithy.com/siteadmin/upload/mano-ganesan-190525-seithy.jpg

தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி வந்தால், திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? என தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

  

சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம் தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்கு தெரியாதா? என மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஊழல் பேர்வழிகளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாக சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவன செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்குங்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால், எதற்காக தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், கைது செய்து, பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்?

75 வயதான சின்னையா சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கை துணை தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசாங்கத்துக்கு தெரியாதா? வெளிநாட்டு அமைச்சுக்கு தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன.

ஐநா அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்கு பயண சீட்டு வாங்கி கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள் தானே திரும்பி வர சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைதா? என மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=333979&category=TamilNews&language=tamil

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
பொதுவாகவே யாழ்பாண தமிழர்களை பொறுத்தளவில் குடாநாடு தாண்டி அதற்கு அப்பால் சென்றால் எல்லோரும் வேற்றினம் தான். பேச்சு நடையில் சற்று வேறுபட்டு இருந்தாலே போதும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அந்நியர்களாகவே பார்ப்பது எமது கலாச்சாரம். அமைச்சர் சந்திரசேகரனை அவரது அரசியல் கொள்கைகளுக்காக எதிர்க்கும் தமிழ் தேசியவாதிகளை விட விட அவரின் மலையக தமிழ் மொழிநடையை கிண்டல் செய்பவர்களே அதிகம் டக்லஸை கூட இந்தளவுக்கு கிண்டல் செய்யவில்லை. சந்திரசேகரனை அவரின் மொழிநடையை மிகவும் கீழ்தரமாக கிண்டல் செய்கிறார்கள். இந்த யாழ் குறுகிய தேசியவாதிகள். நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள் சந்திரசேகரம் கப்பலில் வந்தவர் என்று வேற கேலி. அதற்குள் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி வேணுமாம் இவர்களுக்கு. 😂😂😂

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
அவர்களின் பிற இன திராவிட வெறுப்புக்களை இங்கே அடக்கி கொண்டு அவரின் அம்மாவை பிடித்து அவர் யாழ்ப்பாண தமிழன் தான் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவது அவர் சாதி எதிர்ப்பு பாடல்கள் பாடியவர் என்பதற்காக இல்லை இது எனக்கு பிடித்திருக்கின்றது சாதி வெறியர்களை தலையை பிய்த்து கொள்ள வைக்கும் 🤣

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
எனது நண்பரின் ஊர் பற்றி ஒருவருக்கும் தெரியாது என நினைக்கிறேன், ஆனால் யாழ்ப்பாணம் இல்லை என்பதால்த்தான் இந்த கேள்வி எழுந்திருக்கும் என கருதுகிறேன்.

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
இந்தக் கேள்வியை என் மகனிடம் முந்த நாள் ஒரு யாழைச் சேர்ந்தவர் இங்கு கேட்டு இருக்கின்றார். அவர் genuine னாக கேட்டும் இருக்கலாம், அல்லது நீ என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிய கேட்டும் இருக்கலாம் என அவனிடம் தெளிவுபடுத்தினேன். ஏற்கனவே சாதி பற்றி கதைத்துள்ளதால் விளக்க முடிந்தது.

ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?

3 months 2 weeks ago
சீனா, பாகிஸ்தானும், இந்தியாவும் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் காஸ்மீரை விடுவித்து காஸ்மீரை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் இப்படி தேவையில்லாத வலிகள் இருக்காது பிராந்தியம் நிம்மதியாக இருக்கும் (எதுக்கு அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படுவது?). முதலில் அன்றாட வாழ்க்கைக்கு வழியில்லாமல் அல்லாடும் மக்களை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனும் மனநிலை சாதாரண மக்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே உசுப்பேற்றும் போலி தேசி அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியும். முதலில் தேசமாக ஒன்றினையாமல் (மதம், சாதி, வர்க்க) இந்த ஆயுதங்களை உருவாக்குவதால் எந்த பலனும் ஏற்படாது (இந்தியாவில் அது எப்போதும் நிகழாது).

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
மும்பையின் பந்து வீச்சுதான் அவர்களின் பலம். பஞ்சாப் எப்படி அவர்களை எதிர் கொள்ளும் என்பதில்தான் எல்லாம் தங்கியுள்ளது. எனக்கென்றால், அந்த அழுத்தமே அவர்களுக்குப் பாதகமாகப் போகின்றது. நல்ல ஒரு போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சூரியா மீண்டும் ஒரு அடி அடிப்பாரா.

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
மாறாக ஊரை சொன்னீர்களாயின்…வடக்கோ தெற்கோ, எத்தனையாம் குறிச்சி, கோவிலுக்கு எந்த பக்கம் என கேள்விகள் தொடரும். நீங்கள் எங்க வாறியள் எண்டு தெரியும், ஏனக்கு கல்யாணம் பேச போறியளோ எண்டு கேட்டால் இன்னொரு லோடு அசடு வழியும். ஆனாலும் விடமாட்டார்கள்🤣. இவர்களோடு விளையாட எனவே நான் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு ஊரை சொல்லி வைப்பேன் 🤣.

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
இதன் அர்த்தம் உங்கள் அப்பா விவசாயியா? என்பதா அல்லது உங்கள் அப்பாவின் ஊர் என்ன என்பதா? பிகு பல யாழ்பாணத்தவர் வெளி நாடு ஒன்றில் இன்னொரு ஈழத்தமிழரை கண்டு பேசி முதல் ஐந்து கேள்விக்குள் நிச்சயம் - “யாழ்பாணத்தில் நீங்கள் எவடம்” எண்ட கேள்வி இருக்கும்🤣. ஏன் இலங்கையில் யாழ்பாணம் மட்டுமா தமிழ் ஊர் நான் மட்டகளப்பு/வன்னி/ மன்னார் என சொல்லிப்பாருங்கள்…. வழியும் அரை லோடு அசடை காண கண்கோடி வேண்டும்🤣.

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 months 2 weeks ago
மாநில, மத்திய அரசுகளின் அதிகாரம் பற்றிய என் கருத்துகள் இலங்கை அரசின் அழுத்தங்கள் இப்போதைக்கு இந்த இனப்படுகொலை நினைவுத் தூபியை ஒன்றும் செய்யாது என்பதற்காக எழுதியவை. அக் கருத்துகளுக்கும் நீங்கள் குறிப்பிட்ட நடக்காத விடயம் பற்றிய என் பதில்களுக்கும் ஏன் முடிச்சு போடுகின்றீர்கள் எனப் புரியவில்லை.