Aggregator

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 months 2 weeks ago
ஒரு மாநகரால் கட்டப்பட்ட மற்றும் இதை எதிர்ப்பவர்கள் வெளியேறலாம் என்று பகிரங்கமாக அறிவித்த தூபி ஒன்று அங்கே வைத்தே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. யாரிடம் என்ன அதிகாரம் இருந்து என்ன பயன்???

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
அடுக்குமுறைக்கெதிரான எந்த ஆயுதத்தையாகினும் கையில் ஏந்தியபடி நிற்பவர் எவராக இருந்தாலும் போற்றுதற்குரியோரே. பலம் சேர்ப்பதே. இணைவுப்பாலமே.....

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அவரை நம்பிப் பணம் போட முடியாது. இங்கிலாந்து அணியிலும் அவரின் இடம் உறுதியாய் இல்லை. எப்போ அடிப்பார் என்று அவருக்கும் தெரியாமல் போய் கன நாளாச்சு.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
மும்பாய் அணியால் Bairshow வினை அடுத்தவருடத்துக்கு தக்க வைக்க முடியாது. 17 பந்துகளில் 44 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருக்கிறார். அடுத்த வருட ஐபிஎல்லில் இவரை வாங்க மும்பாய் உட்பட பல அணிகள் விரும்பலாம்

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
வேடன் யாழ்ப்பாண தமிழன் என்று என்று எல்லோரும. பெருமை பேசுறாங்க. ஆனால் வேடனோ நான் (யாழ்) பாணன் அல்ல என்று பாடியுள்ளார். 😂

தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது

3 months 2 weeks ago
இவராவது கட்சியை விட்டுப்போவதாவது. அப்படியிருந்திருந்தால் எப்பவோ போயிருக்க வேண்டுமே, ஏன் ஒட்டிக்கொண்டு இருந்தார்? பதவியாசை! இவர் சுமந்திரன் ஆளுமல்ல, சுமந்திரன் இவர் ஆளுமல்ல. ஒவ்வொருவரும் தம் நலனுக்காக ஒருவரை ஒருவர் பாவிக்கிறார்கள். இரண்டு கட்சி கூட்டத்திற்கு போகவில்லையாம் பிறகு போனவாரம், ஒன்று கூட்டத்திற்கு போகாததின் காரணத்தை சுட்டிக்காட்டி பிழையை திருத்திய பின் கூட்டத்திற்கு போயிருக்க வேண்டும், இல்லையேல் அன்றே கட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும். தான் ஓரத்தில் பேசாமல் இருந்தவராம். இவர் தலைவர்? இனிமேல் மாற்றிக்காட்டுவாராம், யாப்பை திருத்த முடியவில்லையாம், ஆனால் தலைவர் எப்படி? இந்தக்கேள்வியை விடுங்கோ, அதற்கு என்னால் பதில் சொல்லமுடியாது என நழுவுகிறார். அப்போ தலைமை என்பது பதவி மட்டுந்தான் செயற்பட தேவையில்லை, பதில் சொல்லத்தேவையில்லை, இது இவரின் விவாதம். வழக்கு போட்டவர் மீளப்பெறுவதற்காகவா என கேட்க்கிறார். இதுவரையில் இவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஒன்றுதானும் மீளப்பெறவில்லையா அல்லது சிவஞானத்திற்கு அறளை பிறந்து விட்டதா? இவர் ஒரு தலைவர் அவரை ஒரு பேட்டி. இன்று ஒரு பேட்டி கொடுப்பார் நாளை அதை மறுத்து வேறொரு பேட்டி கொடுப்பார். நேர்மையான நீதியான கட்சி என்று மக்கள் வாக்கு போடுகிறார்களாம். மக்கள் வாக்கு போடுவார்கள் என்பதற்காகவே இங்கு ஒட்டிக்கொண்டு இருந்து வேறு கட்சி தாவுபவர்களும் வேறு கட்சியிலிருந்து இங்கு வந்து ஓடிக்கொள்கிறார்களே தவிர இவர்கள் யாரும் உண்மை நீதியுள்ளவர்களல்ல. யார் பெரியவன் என்பதே கட்சிக்குள் இவர்களின் போட்டி.

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 months 2 weeks ago
இது போன்ற அதிகாரப் பரவலாக்கல் பாதுகாப்பு அமெரிக்காவில் இல்லை. ஒரு நகரம், மாநிலம் செய்வது பிடிக்கவில்லையென்றால் ஏதாவது மத்திய அரசின் சட்டத்தைச் சுட்டிக் காட்டி மத்திய அரசு தடை போடும் (அண்மையில் வாஷிங்ரன் டி.சி யில் BLM இனால் அமைக்கப் பட்டிருந்த ஓவியங்களை (murals) இப்படி அழித்திருந்தார்கள்). அவ்வாறு சட்டங்களால் தடை போட இயலா விட்டால், மத்திய அரசு வழங்கும் நிதியைத் தடுப்பதன் மூலம் அழுத்தம் கொடுப்பார்கள். ட்ரம்பின் விருப்பமான ஆயுதமாக இரண்டாவது வழி முறை இருக்கிறது.

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
புள்ளிராஜா மைன்ட் வொய்ஸ்: "வசமாக பெண் புரசு சல்லாபங்களில் மாட்டிக் கொண்டு விட்டோம். இனி தமிழ், ஈழம், புலி, பிரபாகரன் என்று கலர் கலராகப் போர்வையைப் போர்த்திக் கொண்டால் தான் தப்பி நிலைக்கலாம்!😎"

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

3 months 2 weeks ago

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

Yogeshwaran MoorthiUpdated: Thursday, May 29, 2025, 12:40 [IST]

PMK Founder Ramadoss Alleges Anbumani s Suicide Threat to Push for BJP Alliance

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி செளமியா அன்புமணி மட்டும் கடுமையான சவால் அளித்து, கடைசியில் தோல்வியை அடைந்தார்.

ராமதாஸ் பேட்டி

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியே எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தகப்பனிடம் தோற்பது மானக்கேடு அல்ல.

அதிமுக கூட்டணி

அன்புமணி கூசாமல் பொய் பேசுவார்.. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமியுடன் பேசுமாறும் அறிவுறுத்தினேன். அதன்பின் அவரும் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

கதறிய அன்புமணி

ஆனால் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், குறைந்தது 3 தொகுதிகளில் வென்றிருப்போம். அவர்களும் 6 முதல் 7 தொகுதிகளில் வென்றிருப்பார்கள். அதிமுக - பாமக இயல்பான கூட்டணி. ஆனால் எனது ஒரு காலினை அன்புமணி பிடித்து கொண்டார்.

தற்கொலை மிரட்டல்

இன்னொரு காலினை அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி பிடித்து கொண்டு கதறினார். எதற்கு அழுதார்கள் என்றால், பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், அன்புமணி வாயில் இருந்து, இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும்.

பாரத் மாதா கி ஜே

பாஜக கூட்டணிக்காக ஏற்பாடுகளை செளமியா செய்துவிட்டார். அண்ணாமலையுடன் அவர்களே பேசிவிட்டார்கள். அடுத்த நாள் காலையிலேயே பாரத் மாதா கி ஜே என்று ஒரு கோஷம் கேட்கிறது. காலையிலேயே அண்ணாமலையும் வந்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே இது நடந்தது. இப்படிதான் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/villupuram/pmk-founder-ramadoss-alleges-anbumani-s-suicide-threat-to-push-for-bjp-alliance-708047.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

பிகு

அரசவை புலவர் பாலபத்ர ஓணாண்டி க்கு யாராவது @ போட்டு விடுங்கப்பா.

பெரிய மாங்கா- சின்ன மாங்கா மோதலுக்கு பிஜேபி காரணம் அல்ல, அது குடும்ப உட்பூசல், நான் “பிஜேபி-நோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறேன்” என சொன்னவர்.

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

3 months 2 weeks ago
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்! Yogeshwaran MoorthiUpdated: Thursday, May 29, 2025, 12:40 [IST] 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி செளமியா அன்புமணி மட்டும் கடுமையான சவால் அளித்து, கடைசியில் தோல்வியை அடைந்தார். ராமதாஸ் பேட்டி இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியே எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தகப்பனிடம் தோற்பது மானக்கேடு அல்ல. அதிமுக கூட்டணி அன்புமணி கூசாமல் பொய் பேசுவார்.. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமியுடன் பேசுமாறும் அறிவுறுத்தினேன். அதன்பின் அவரும் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார். கதறிய அன்புமணி ஆனால் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், குறைந்தது 3 தொகுதிகளில் வென்றிருப்போம். அவர்களும் 6 முதல் 7 தொகுதிகளில் வென்றிருப்பார்கள். அதிமுக - பாமக இயல்பான கூட்டணி. ஆனால் எனது ஒரு காலினை அன்புமணி பிடித்து கொண்டார். தற்கொலை மிரட்டல் இன்னொரு காலினை அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி பிடித்து கொண்டு கதறினார். எதற்கு அழுதார்கள் என்றால், பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், அன்புமணி வாயில் இருந்து, இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும். பாரத் மாதா கி ஜே பாஜக கூட்டணிக்காக ஏற்பாடுகளை செளமியா செய்துவிட்டார். அண்ணாமலையுடன் அவர்களே பேசிவிட்டார்கள். அடுத்த நாள் காலையிலேயே பாரத் மாதா கி ஜே என்று ஒரு கோஷம் கேட்கிறது. காலையிலேயே அண்ணாமலையும் வந்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே இது நடந்தது. இப்படிதான் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்தார். https://tamil.oneindia.com/news/villupuram/pmk-founder-ramadoss-alleges-anbumani-s-suicide-threat-to-push-for-bjp-alliance-708047.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel பிகு அரசவை புலவர் பாலபத்ர ஓணாண்டி க்கு யாராவது @ போட்டு விடுங்கப்பா. பெரிய மாங்கா- சின்ன மாங்கா மோதலுக்கு பிஜேபி காரணம் அல்ல, அது குடும்ப உட்பூசல், நான் “பிஜேபி-நோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறேன்” என சொன்னவர்.

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

3 months 2 weeks ago
கனடாவில் மாநகரசபை தன் அதிகாரத்துக்குட்பட்ட ஒன்றை செய்தால் அதனை மாகாண மற்றும் மத்திய அரசால் நிராகரிக்க முடியாது. அவ்வாறு கடும் அழுத்தம் கொடுத்து நிராகரிப்பின், வழக்கு போட்டு, அரசியலமைப்புக்கு எதிரான செயல் என தீர்ப்பை வாங்கிவிடுவார்கள். ஆகவே இலங்கை அரசு தலையைக் குத்தி தாளம் போட்டாலும், கனடிய மத்திய அரசு கடும் அழுத்தம் கொடுத்தாலும் இந்த நினைவுத்தூபியை இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பற்றிக் பிரவுணது மேயருக்கான பதவிக் காலம் முடிவடைந்த பின் அடுத்து வருகின்றவர் நினைத்தால், மிச்ச மாநகர சபை உறுப்பினர்களும் சம்மதித்து வாக்களித்தால் இந்த நினைவுத் தூபியை ஏதும் செய்ய முடியும்.

பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!

3 months 2 weeks ago
சிவநேசதுரை சந்திரகாந்தனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சடலங்கள் வெளிவருமா?

சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்

3 months 2 weeks ago
வாழ்த்துக்கள் அஸ்வின் 👏 Fussballclub Thun 1898 is a Swiss football team from the Bernese Oberland town of Thun. The club plays in the Swiss Super League from 2025–26, the top tier of the Swiss football league system, following promotion from the Swiss Challenge League in the 2024–25 season.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
எனது வாக்கும் குஜராத்திற்கே! யாழ்களப் போட்டியில் முன்னுக்கு நிற்பவர்கள் மேலே ஏறக்கூடாது என்ற நண்டுக்குணம்தான்🦀. வேறு ஒன்றுமில்லை!