Aggregator

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months 1 week ago
நீங்கள் வெள்ளை பெயின்ற் வாளியும் கையுமாய் திரிஞ்சாலும் அப்பப்ப பல்டி அடிக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...பிடிச்ச பிடியை விடாதேங்கோ 😂 பெயின்ற் வாளிய சொன்னனான்..😎

விமர்சனம் : இட்லி கடை!

3 months 1 week ago
உந்த சின்ன வயசிலையே ஆள் பெரிய கில்லாடி போல கிடக்கு... படமெல்லாம் வாங்கி விக்க வெளிக்கிட்டாச்சு.... அடுத்தது நடிப்பு துறையிலையும் இறங்கிடுவார்....😂

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months 1 week ago
ஆனால் அந்த மண் குதிரைக்கு பயந்து நீங்கள் பந்தயத்துக்கு வரவில்லை என்பது எனக்கும் தெரியும் என நான் சொல்ல மாட்டேன்🤣. பிகு பந்தையம் சீமான் 15% க்கு மேல் எடுக்க மாட்டார் என்பது என நினைக்கிறேன் (எத்தனை சதவீதம் என்பது மறந்து போய்விட்டது, ஆனால் இரெட்டை இலக்கம்). அதில் இப்போதும் மாற்றம் இல்லை. ஆனால் பந்தயத்தில் கலந்து கொள்ளும் கால எல்லை முடிந்து விட்டது. நானா…. வாத்தியார் அண்ணாவா… 🤣🤣🤣 ரோமபுரி கிளேடியேட்டர்ஸ் போல, யாழ்கள கிளேடியேட்டர்ஸ் இருவரில் யார் சிங்கத்து இரையாக போகிறார் என்பதே இப்போ கேள்வி🤣.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
ந‌வ‌ம்ப‌ர் 2தெரியும் ஜ‌க்க‌ம்மாவை ப‌ற்றி க‌ல் ஓட‌ விளையாட‌லாம் ம‌ண்ணோட‌ விளையாட‌லாம் ஜ‌க்க‌ம்மாவோட‌ ம‌ட்டும் விளையாட‌க் கூடாது...............இன்னொரு முறை ஜ‌க்க‌ம்மாவை அக்க‌ம்மா என்று அழைதால் நான் ஜ‌க்க‌ம்மாவுக்கு இதை தூது அனுப்புவேன் லொள்😁👍...............................

கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்

3 months 1 week ago
இது தான் பாஜக கரூருக்கு அனுப்பிய அந்த உண்மை கண்டறியும் குழுவா

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 1 week ago
"என்ன மாதிரியான கட்சி இது.. கரூரில் இருந்து தவெக நிர்வாகிகள் ஓடியது ஏன்.." சென்னை ஐகோர்ட் காட்டம் By Vigneshkumar Updated: Friday, October 3, 2025, 17:28 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரித் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கரூர் துயரத்தைக் குறிப்பிட்டு காட்டமான கருத்துகளைக் கூறினர். அதை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனக் குறிப்பிட்ட நீதிபதி, தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது.. அங்குக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாகப் பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி பி.எச்.தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மிகக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். முதலில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு நீதிபதி செந்தில் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் வழக்கு விசாரணையின் போது, விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து விழுந்ததைப் பார்த்தீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். ஏன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். Also Read இனி சாலையோர பிரச்சாரத்திற்கு.. எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தெளிவாக சொன்ன தமிழக அரசு வேதனை நீதிபதி மேலும் கூறுகையில், "அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும்போதே மிகுந்த வேதனையாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இவ்வளவு நடந்த பிறகும் காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர்.. பாதிக்கப்பட்டோரை நேரில் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்த பின் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். எல்லாக் கட்சிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள். தலைமைப் பண்பே இல்லை உலகமே இந்தச் சம்பவத்தைப் பார்த்திருக்கிறது.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், தலைவர் எல்லாரும் தொண்டர்களை, ரசிகர்களை, மக்களைக் கைவிட்டுப் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர்.. இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார்" என்றார். மேலும், அவருக்குத் தலைமைப் பண்பே இல்லை என்றும் நீதிபதி கூறினார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்கக் கூடாது என்றும் கூறிய நீதிபதி, கரூரில் நடந்த சம்பவத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) என்று குறிப்பிட்டார். Recommended For You 6 வழக்கறிஞர்களை களமிறக்கிய தவெக! 30 நிமிடங்கள் தொடர்ந்து வாதம்! ஒரே பாயிண்டில் ஆஃப் செய்த தமிழக அரசு தவெக என்ன மாதிரியான கட்சி கரூர் பிரச்சாரத்திற்குப் பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன என்றும் மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "என்ன மாதிரியான கட்சி இது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?" என்று மிக காட்டமான கேள்விகளை எழுப்பினார். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-kind-of-party-is-tvk-chennai-high-court-slams-vijay-over-karur-stampede-as-leader-fled-the-spot-740355.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links-DMP&ref_content=740361-p2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
நான்நலமாக இருக்கிறேன். உடம்பில் கவனம் எடுக்கவும். சுவர் இருந்தால்தான் சித்திரம்வரையலாம்.விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். VAT 69 என்று அந்தக்காலத்தில் பிரபலமான குடிவகை இருந்தது.வெறியில் தலைகீழாகப்பார்த்தாலும்69 என்றுதான் தெரியுமாம்.நானும் சுவைத்திருக்கிறேன்.

விமர்சனம் : இட்லி கடை!

3 months 1 week ago
ஆம்... @ஈழப்பிரியன் தேர்தல் நெருங்கும் நேரம், கிடுக்கிப் பிடி போடுவார்கள். இப்போ... எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். #################### ################## படிச்சு படிச்சு சொன்னேன் இந்த மாதிரி நேரத்தில இட்லி கடைய திறக்காதனு கேட்டாதானே 😌 வடக்குபட்டி ராமசாமி சோக சம்பவங்களுக்கு.... அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜியின் இந்தப் படங்களை வைத்தே... கொஞ்ச காலத்துக்கு ஓட்டலாம். நன்றி அமைச்சர்களே. 😂

விமர்சனம் : இட்லி கடை!

3 months 1 week ago
உலக வரலாற்றில் முதற் தடவையாக ஒரு 20 வயது இளைஞன் 104 கோடி பட்ஜட் படத்தை வாங்கி இந்தியா முழுவதும் வெளியிடுகின்றான். அதுவும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் பெருமையடைகின்றோம். இளவயதில் ஒரு பெரும் நிறுவனத்தை வழிநடத்தி வெற்றிவாகை சூடும் இன்பநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் நிறைவடைகின்றோம். Inuvaijur Mayuran புரிந்தவன் பிஸ்தா.

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

3 months 1 week ago
சீமான் பற்றி விளங்க நினைப்பவன் யாழில் எழுதிய முதல் பாசிடிவ் கருத்து இது என நினைக்கிறேன் 🤣. யாழின் சீமானியர்களுக்கு இது ஒரு #ஸ்வீட் எடு, #கொண்டாடு தருணம்🤣. பிகு வி. நி யே போற்றும் அளவுக்கு சபரீசன் பெட்டி சீமானை மாற்றி உள்ளது🤣

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
அண்ணாவின் பெயரையும் சேர்த்து எழுதுவதில் என்ன தயக்கம், இப்பவே எழுதுவோம் என்று நினைத்து, அண்ணாவின் தெரிவுகளையும் ஒரு தடவை போய்ப் பார்ப்போம் என்று பார்த்தால்.................... 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? தென்னாபிரிக்கா .............. ஜக்கம்மா, அக்கம்மா, எந்த அம்மா துணைக்கு வந்தாலும் நிலைமை கொஞ்சம் கஷ்டம் போலத்தான் தெரியுது, அண்ணா.................🤣.

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

3 months 1 week ago
ஒரு பூப்புனித(?) நீராட்டில் முதல்வர், உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொள்ளும் போது, அழைத்தவர்கள் கூட இப்படி ஒரு படத்தை வேண்டி கேட்டு எடுத்திருக்கலாம். ஒரு அரசியல்வாதி, இன்னொருவரை இனத்தின் வைரி என சொல்லிப்போட்டு, ஒண்டவீட்ட அண்ணன் செத்ததை, தேர்தலில் வென்றதை எல்லாம் சாக்கு சொல்லி போய் சந்திப்பது போல அல்ல இது. அல்லது ஏ1 அக்யூஸ்டை சிறையில் இருந்து வந்ததும் சந்தித்துவிட்டு, பின்கதவால் ஓடியது போலவும் அல்ல இது. ஒரு நீதியரசர் தனிப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, ஒரு முதல்வர் வந்தால் முகத்தையா திருப்ப முடியும். இதை வைத்தே இவர் திமுக அனுதாபி என கூற முடியாது.