2 months 3 weeks ago
'இரவு முழுக்க அடித்தனர்': பெண் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாக புகார் - என்ன நடந்தது? படக்குறிப்பு, வழக்கறிஞர் ஆர்த்தி. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "இரவு முழுக்க பெண் காவலர்கள் அடித்தனர். ஒருவர் கூட சீருடையில் இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா எனக் கேட்டு அடித்தனர்" என வீடியோ பதிவு ஒன்றில் பேசுகிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை ஆதரித்ததற்காக சமூக செயற்பாட்டாளர் வளர்மதி, வழக்கறிஞர் ஆர்த்தி மீது ஆகஸ்ட் 14 அன்று காவல்துறை தாக்குதல் நடத்தியதாக, வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான வழக்கில், 'நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது? சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி நுழைவு வாயில் முன்பாக ஆகஸ்ட் 1 முதல் 13-ஆம் தேதி வரை இரவு பகலாக அவர்களின் போராட்டம் நீடித்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று மாலை முதலே மாநகராட்சி வளாகம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறை கூறியது. ஆனால், 'முடிவு தெரியும் வரை கலைந்து செல்ல மாட்டோம்' என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இரவு சுமார் 11.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டனர். அவர்களை சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர். படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை இரவு பகலாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீடித்தது. இந்தநிலையில், வேளச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை காவல்துறை கைது செய்துள்ளது. "வேளச்சேரியில் தன்னைக் காவல்துறை வளைத்துவிட்டதாக வளர்மதி கூறியுள்ளார். அதைக் கேட்டு வழக்கறிஞர் என்ற முறையில் உதவி செய்வதற்காக ஆர்த்தி சென்றுள்ளார். அவர் போராட்டத்தில் இல்லை. ஆனால், அவரையும் காவல்துறை அழைத்துச் சென்றது" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இருவரையும் இரவு 2 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு கூட்டி வந்துள்ளனர். அங்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்" என்கிறார். "கையை உடைத்துவிட்டனர்" - வழக்கறிஞர் ஆர்த்தி ஆகஸ்ட் 14 அன்று காலை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் தங்களை சந்திக்க வந்த சமூக ஆர்வலர்களிடம் வழக்கறிஞர் ஆர்த்தியும் வளர்மதியும் பேசியுள்ளனர். அப்போது பேசிய இருவரும், "இரவு முழுக்க அடித்துக் கொண்டே இருந்தனர். ஒருவர் கூட காவல்துறை சீருடையில் இல்லை. 'தூய்மைப் பணியாளர்களுக்காக பேசுவீர்களா?' எனக் கேட்டு அடித்தனர்" என்றனர். "ஆய்வாளர் எங்கே, உதவி ஆணையர் எங்கே எனக் கேட்டோம். இருவரும் வந்துவிட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு 15 முதல் 20 பெண் காவலர்கள் வந்தனர். அவர்கள் சுடிதார் மற்றும் புடவை அணிந்திருந்தனர். யார் எனக் கூறாமல் தொடர்ந்து அடித்தனர்" எனவும் அவர்கள் கூறினர். இதில், தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாகவும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவில்லை எனவும் பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் பரவியது. படக்குறிப்பு, தனது கையை பெண் காவலர்கள் உடைத்துவிட்டதாக பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். "இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் கூறி காவலர்கள் அழைத்துச் சென்றனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி எனப் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றனர். ஆனால், சிச்சைக்காக உள்ளே அழைத்துச் செல்லவில்லை" எனக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். "தாக்குதல் சம்பவத்தில் ஆர்த்தியின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார் ராதாகிருஷ்ணன். காணாமல் போன 13 பேர்? இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இவர்கள் தொடர்பான விவரம் எதுவும் வெளிவராததால், வழக்கறிஞர் ஆர்த்தி உள்பட 13 பேர் காணாமல் போய்விட்டதாகக் கூறி வழக்கறிஞர் எஸ்.விஜய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தூய்மைப் பணியாளர் போராட்டத்தை ஒருங்கிணைத்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கே.பாரதி, வழக்கறிஞர்கள் சுரேஷ், மோகன்பாபு, ராஜ்குமார், ஆர்த்தி, சட்டக்கல்லூரி மாணவி வளர்மதி உள்பட 13 பேரின் பெயர்களையும் அவர் மனுவில் பட்டியலிட்டிருந்தார். இவர்கள் அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவர்களை விடுவிப்பதற்கு காவல்துறை உத்தரவிடுமாறும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு வந்தது. "காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதைகள் குறித்து பெண் வழக்கறிஞர் ஆர்த்தி பேசிய வீடியோ பதிவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். இதைப் பார்த்துவிட்டு நீதிபதிகள் விசாரணையை தொடங்கினர்" என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார். 'அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை இருந்தாலும் பாதைகள், நடைபாதைகள் மற்றும் சாலைகளில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை இல்லை' என உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்டார். படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாடு அரசு சொன்னது என்ன? 13 பேர் காணாமல் போனதாக கூறப்படுவது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. " வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஏழு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெரியமேடு காவல்நிலையத்திலும் அண்ணா சாலை காவல்நிலையத்திலும் பதிவாகியுள்ளன" என, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன் கூறினார். கு.பாரதி, சுரேஷ், மோகன்பாபு மற்றும் ராஜ்குமார் ஆகிய நான்கு வழக்கறிஞர்கள் மீதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முத்துசெல்வன் மற்றும் வளர்மதி என ஆறு பேர் மீதும் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற ஏழு பேரை காவல்துறை விசாரித்துவிட்டு வெளியே செல்ல அனுமதித்ததாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்தது. 6 பேர்... 9 பிரிவுகளில் வழக்கு கைதான ஆறு பேர் மீதும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்பட ஒன்பது பிரிவுகளில் (191, 191(3), 125, 121(1), 126(2), 132, 324(4), 351(3) of Bharatiya Nyaya Sanhita (BNS), 2023 r/w Section 3(1) of The Tamil Nadu Public Property (Prevention of Damage and Loss) Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக சில வீடியோ பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கைது சம்பவத்தின்போது பெண் காவலர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் வளர்மதி ஆகவே, நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது சட்டவிரோதமாக இருக்கலாம் எனக் கருதுவதால் அவர்களை உடனே விடுவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். "இவர்கள் ஆறு பேரும் அடுத்த விசாரணை தேதி வரும் வரை ஊடக நேர்காணல்கள், அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள் என எதையும் மேற்கொள்ளக் கூடாது" எனக் கூறி ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். "சமூக செயற்பாட்டாளர் வளர்மதியை கைது செய்ததை அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டனர். ஆனால் ஆர்த்தி கைது செய்யப்படவில்லை எனக் கூறியது. ஆனால், அனைத்து வீடியோ பதிவுகளிலும் இருவரும் ஒரேநேரத்தில் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்" என்கிறார், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். பெண் வழக்கறிஞர் ஆர்த்தி தாக்கப்பட்டது தொடர்பாக திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். காவல்துறை கூறுவது என்ன? சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. வாட்ஸ்ஆப் உள்பட அவரிடம் விளக்கம் பெறும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. "சீருடை அணியாத பெண் காவலர்கள் தாக்கியது உண்மையா?" எழும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சமயா சுல்தானாவிடம் பிபிசி தமிழ் பேசியது. " எனக்குத் தெரியவில்லை. நான் அப்போது வேறு ஓர் இடத்தில் பணியில் இருந்தேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqnlq2vnnpo
2 months 3 weeks ago
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும். இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும். 1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும், தேடலும் கொண்டு துடிப்புடன் நடித்து, ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தாரோ, இன்றளவும் சற்றும் குறைவின்றி உழைப்பினைச் செலுத்தும் அவருடைய அர்ப்பணிப்புதான், அவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் இமாலய வெற்றிகள் பெறச் செய்தன. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவருடைய புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும். எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த், என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! ரஜினிகாந்த், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, 'கூலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்' எனத் தெரிவித்துள்ளார் ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! | Rajinikanth hard work is a life lesson for the youth Seeman congratulates to coolie - hindutamil.in
2 months 3 weeks ago
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!

சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும்.
இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும்.
1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும், தேடலும் கொண்டு துடிப்புடன் நடித்து, ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தாரோ, இன்றளவும் சற்றும் குறைவின்றி உழைப்பினைச் செலுத்தும் அவருடைய அர்ப்பணிப்புதான், அவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் இமாலய வெற்றிகள் பெறச் செய்தன. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவருடைய புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும்.
எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த், என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
ரஜினிகாந்த், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, 'கூலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்' எனத் தெரிவித்துள்ளார்
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! | Rajinikanth hard work is a life lesson for the youth Seeman congratulates to coolie - hindutamil.in
2 months 3 weeks ago
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு! யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு மீனவர்கள், படகு பழுதடைந்து நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறைப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு மீனவர்களுமே, நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டு கடலோரக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
2 months 3 weeks ago
யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்! இந்தியாவிலிருந்து MV Express அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. இன்று (15) மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. 10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர். குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!
2 months 3 weeks ago
யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!
இந்தியாவிலிருந்து MV Express அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
இன்று (15) மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!
2 months 3 weeks ago
பாவம் புண்ணியம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்பது இவனது மரணத்தின் மூலம் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுகின்றது. ஒரு பூச்சியை கூட இம்சிக்க விரும்பாத பலர் நோய் வந்து, புற்றுநோய் வந்து, விபத்துகளில் சிக்கி நாட்கணக்காக வலியால் துடி துடித்து வருடக்கணக்கில் அதை அனுபவித்து இறந்து போவதை இப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் இந்த மனிதப் படுகொலையாலியோ சில மாதங்கள் மட்டுமே ஈரல் பிரச்சனைகளால் அவதியுற்று, உயர்தர சிகிச்சைகளும் பெற்று இறந்து விட்டான். 2001 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, 10 முஸ்லிம் இளைஞர்களை கட்டுக்கஸ்தோட்டையில் வைத்து படுகொலை செய்தவன் இவன். தகப்பன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையாலும் அரசியல் செல்வாக்காலும் உயர் நீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவன்.
2 months 3 weeks ago
Published By: PRIYATHARSHAN 15 AUG, 2025 | 01:11 PM கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32) இட் நாளை சனிக்கிழமை (16/08) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா வருகை தரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்தக் கப்பலின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்புத் துறைமுகம் செயற்படும். அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு அங்கமான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ள, உலகின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையினை வழிநடத்துகிறது. “யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க மற்றும் இலங்கையின் பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். கடற்படையின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையான அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு பகுதியான இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதுடன் பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் உருவாக்க பெருமையடைகிறோம்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும். 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி பெயர் சூட்டப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7 இன் ஒரு அங்கமாக செயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222609
2 months 3 weeks ago
Published By: PRIYATHARSHAN
15 AUG, 2025 | 01:11 PM

கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32) இட் நாளை சனிக்கிழமை (16/08) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரவுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்திற்கு யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா வருகை தரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அமெரிக்க - இலங்கை பங்காண்மையின் உறுதியினையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினையும் இந்தக் கப்பலின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால உறவுகளையும், உறவை வரையறுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இது பிரதிபலிக்கிறது. கப்பல் தனது பயணத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு எரிபொருள் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரு குறுகிய நிறுத்தமாக கொழும்புத் துறைமுகம் செயற்படும்.
அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு அங்கமான யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா (LCS 32), நட்பு நாடுகள் மற்றும் பங்காளர்களுடனான ஈடுபாடுகள் ஊடாக பிராந்திய ஸ்திரத்தன்மையினையும் கடல்சார் பாதுகாப்பினையும் மேம்படுத்தும் அதே வேளை, மேற்கு பசிபிக் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய பெருங்கடல்களில் அதன் படைகளுக்கு நடவடிக்கைக் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலை வழங்குவதை முதன்மை செயற்பணியாகக் கொண்டுள்ள, உலகின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையினை வழிநடத்துகிறது.
“யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா இலங்கைக்கு வருகை தருவதானது, அமெரிக்க மற்றும் இலங்கையின் பங்காண்மையின் சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகும். கடற்படையின் மிகப்பெரிய முன்னோக்கி அணிவகுக்கப்பட்ட கப்பற்படையான அமெரிக்க 7ஆவது கப்பற்படையின் ஒரு பகுதியான இக்கப்பலின் வருகையானது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் ஆகியவற்றிற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதுடன் பிராந்தியம் முழுவதும் அமைதியையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகையில் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் உருவாக்க பெருமையடைகிறோம்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.
யு.எஸ்.எஸ். சான்டா பாப்ரா என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும்.
2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி பெயர் சூட்டப்பட்டு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இக்கப்பலானது தற்போது Destroyer Squadron (DESRON) 7 இன் ஒரு அங்கமாக செயற்படுகிறது. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவும், கூட்டணிகள் மற்றும் பங்காண்மைகளை பலப்படுத்துவதற்காகவும், எதிர்கால போரிடும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் சான்டா பாப்ரா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வழக்கமான ரோந்துகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


https://www.virakesari.lk/article/222609