Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 3 weeks ago
www.freehit.eu இதுக்கை போனால் பார்க்க‌லாம் த‌லைவ‌ரே..................... நான் கைபேசியில் இருந்து வேறு ஆப் மூல‌ம் பார்க்கிர‌ நான்...............இணைய‌த்தில் பார்ப்ப‌து மிக‌ குறைவு............ நான் த‌ந்த‌ லிங்கை அம‌த்துங்கோ வேலை செய்யும்.........................

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

2 months 3 weeks ago
சுமத்திரன் தானாக பதவிவிலக வேண்டும். தமிழரசுக்கட்சியில' இருந்து சுமத்தரனால் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெpரிவு செய்யப்பட வேண்டும். சுமத்திரன் விலக மறுத்தால் தமிழ்மக்கள் வெகுஜனப்புரட்சி செய்து சுமத்தரனை ஓட ஓட விரட்ட வேண்டும். கோத்தபாயவைப் போல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று அரசியலை விட்டே அவர் ஒதுங்க வேண்டும்.

ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு

2 months 3 weeks ago
ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு 06 Oct, 2025 | 11:24 AM பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த 20 அம்சத் திட்டம், காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்மதம் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினருக்கு ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேரக் கெடு விதிக்கப்பட்டது. கெடு முடிந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் 20 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளதுடன், இதுகுறித்து விரிவாகப் பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, காசாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டிரம்பின் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணய கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும் நன்றி. நல்ல செய்திக்காகக் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கெய்ரோவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் 20 அம்சத் திட்டம் குறித்து விரிவாகப் பேசப்பட இருக்கிறது. https://www.virakesari.lk/article/227008

ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு

2 months 3 weeks ago

ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சு : கெய்ரோவில் முக்கிய சந்திப்பு

06 Oct, 2025 | 11:24 AM

image

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீடித்து வரும் இரண்டு ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை( 6) எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 20 அம்சத் திட்டம், காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்மதம் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேரக் கெடு விதிக்கப்பட்டது. கெடு முடிந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் 20 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளதுடன், இதுகுறித்து விரிவாகப் பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, காசாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டிரம்பின் அமைதித் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணய கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும் நன்றி. நல்ல செய்திக்காகக் காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.

அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கெய்ரோவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் 20 அம்சத் திட்டம் குறித்து விரிவாகப் பேசப்பட இருக்கிறது.

https://www.virakesari.lk/article/227008

நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன்

2 months 3 weeks ago
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன் 06 Oct, 2025 | 10:34 AM நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச ரீதியாக சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினம் என உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை இந்தக் கிராமத்தில் ஒழுங்குசெய்து சிறார்கள் மற்றும் முதியவர்களை அழைத்து மதிப்பளிப்பது உண்மையிலே ஒரு சிறப்பான விடயம். அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாதனையாளர்களும் மதிக்களிக்கப்படுகின்றனர். அந்தவகையிலே எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிக மிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் பத்துவருடங்கள் இருந்தேன். அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் எமக்கு நேரமுகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்தவகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது. இவ்வாறாக நேரமுகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக்கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடையவேண்டும். எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல்செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப்பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன். இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொகுசுப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றோம். இந்நிலையில் பின்தங்கியுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே நாம் முன்கொண்டுசெல்லமுடியும். எனவே சிறுவர்கள் அனைவரும் நல் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். தற்போது எமது சமூகங்களில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக போதைப்பொருள் ஊடுருவல்களும் அவற்றால் ஏற்படும் சீர்கேடுகளும் மிகப் பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துமாறு தொடர்சியாகக் கோரிவருகின்றோம். அந்தவகையில் அனைத்து வகையான சீர்கேடுகளும் கட்டுப்படுத்தப்படுமென உரியவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இவ்வாறான சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகின்றோம். அத்தோடு நிச்சயமாக எமது மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே உயர்த்த முடியும். நாம் தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்தநிலை மாறவேண்டும். முல்லைத்தீவை முல்லைத்தீவு பிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். வவுனியாவினை வவுனியாபிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். மன்னாரிலும் அந்த நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆட்சிசெய்வதென்றால் அரசியல் ரீதியாக ஆட்சிசெய்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை. சிறார்கள் அனைவரும் நல்லமுறையில் கல்விகற்று அந்தந்த மாவட்டங்களில் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை தாமே நிரப்பக்கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டுமென்பதையே தெரிவிக்கின்றேன். இந்தநிலை ஏற்பட்டால் வன்னியும், முல்லைத்தீவும் தன்னிறைவுபெறும் என்றார். https://www.virakesari.lk/article/226999

நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன்

2 months 3 weeks ago

நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன்

06 Oct, 2025 | 10:34 AM

image

நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05)  இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

சர்வதேச ரீதியாக சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினம் என உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை இந்தக் கிராமத்தில் ஒழுங்குசெய்து சிறார்கள் மற்றும் முதியவர்களை அழைத்து மதிப்பளிப்பது உண்மையிலே ஒரு சிறப்பான விடயம். அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாதனையாளர்களும் மதிக்களிக்கப்படுகின்றனர்.

அந்தவகையிலே எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிக மிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் பத்துவருடங்கள் இருந்தேன். 

அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் எமக்கு நேரமுகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்தவகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது.

இவ்வாறாக நேரமுகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக்கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடையவேண்டும்.

எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல்செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப்பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன்.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொகுசுப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அடுத்ததாக கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன்.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றோம்.

இந்நிலையில் பின்தங்கியுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே நாம் முன்கொண்டுசெல்லமுடியும்.

எனவே சிறுவர்கள் அனைவரும் நல் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். தற்போது எமது சமூகங்களில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்றுவருகின்றன. 

குறிப்பாக போதைப்பொருள் ஊடுருவல்களும் அவற்றால் ஏற்படும் சீர்கேடுகளும் மிகப் பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துமாறு தொடர்சியாகக் கோரிவருகின்றோம். 

அந்தவகையில் அனைத்து வகையான சீர்கேடுகளும் கட்டுப்படுத்தப்படுமென உரியவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இவ்வாறான சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகின்றோம்.

அத்தோடு நிச்சயமாக எமது மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே உயர்த்த முடியும். நாம் தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்தநிலை மாறவேண்டும். முல்லைத்தீவை முல்லைத்தீவு பிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். 

வவுனியாவினை வவுனியாபிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். மன்னாரிலும் அந்த நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆட்சிசெய்வதென்றால் அரசியல் ரீதியாக ஆட்சிசெய்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை. 

சிறார்கள் அனைவரும் நல்லமுறையில் கல்விகற்று அந்தந்த மாவட்டங்களில் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை தாமே நிரப்பக்கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டுமென்பதையே தெரிவிக்கின்றேன். இந்தநிலை ஏற்பட்டால் வன்னியும், முல்லைத்தீவும் தன்னிறைவுபெறும் என்றார்.

https://www.virakesari.lk/article/226999

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

2 months 3 weeks ago
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் ! 06 Oct, 2025 | 10:41 AM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைக்கும் பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன. பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்றது. அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/227005

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

2 months 3 weeks ago

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

06 Oct, 2025 | 10:41 AM

image

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைக்கும் பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன.

பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரியவருகின்றது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்றது. அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/227005

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

2 months 3 weeks ago
சுமந்திரன்… இதுவரை தமிழ் மக்களுக்கு, ஒரு ஆணியும் புடுங்கவில்லை. அவர் புடுங்கின ஆணி முழுக்க சிங்களவருக்குத்தான். ஆன படியால் சிங்கள சம்பந்தி சுமன்…. கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பகுதிகளில் போட்டியிட்டு… அவரின் “பாராளுமன்ற கனவை” நிறைவேற்றும் படி… வேண்டிக் கொள்கின்றோம். 😂 தமிழ் பகுதிகளில் நின்றால்… மீண்டும், மீண்டும் மண் கவ்வுவது நிச்சயம். 🤣

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

2 months 3 weeks ago
சுமந்திரன்.... தமிழருக்கு துரோகம் செய்து, சிங்கள அரசியல்வாதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி விட்ட நன்றிக் கடனுக்கு... சென்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை... தமது கட்சியின் சார்பில் சிங்களப் பகுதிகளில் போட்டியிட வைத்திருந்தால்... சிங்கள மக்கள் சுமந்திரனை, அமோக வெற்றி பெற வைத்திருப்பார்கள். ஏனென்றால்.... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை விட சிங்கள இனத்துக்கும், சிங்கள மக்களுக்கும் ஆற்றிய சேவை அதிகம். சிங்களவர்கள் உண்மையான இனப்பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 3 weeks ago
வினா 7) 88 ஓட்டங்களினால் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)ஏராளன் - 15புள்ளிகள் 2)கிருபன் - 15புள்ளிகள் 3)அகஸ்தியன் - 15புள்ளிகள் 4)ஆல்வாயன் - 13 புள்ளிகள் 5)வாதவூரான் - 13 புள்ளிகள் 6) ரசோதரன் - 13 புள்ளிகள் 7) வீரப்பையன் - 13 புள்ளிகள் 8)சுவி - 12 புள்ளிகள் 9)புலவர் - 11 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 11 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 11 புள்ளிகள் 12)வாத்தியார் - 9 புள்ளிகள் 13) வசி - 9 புள்ளிகள் 14)கறுப்பி - 9 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 9 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 7, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

கருத்து படங்கள்

2 months 3 weeks ago
ஹம்பாந்தோட்டையில்.... ஒரே "ஐஸ்" போதை வஸ்து. பென்குயின் எல்லாம் உண்மையான ஐஸ் என்று நம்பி.... சறுக்கி விளையாட வந்திருக்குது. 😂

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

2 months 3 weeks ago
சம்பந்தன் உயிரோடு இருக்கும் மட்டும்... சுமந்திரனை பின்கதவால் பாராளுமன்றத்துக்குள் கூட்டிக் கொண்டு போனார். சம்பந்தன் செத்த பின்.... சுமந்திரனுக்கு பாராளுமன்ற பின்கதவும் அடைக்கப் பட்டு, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். 😂 சென்ற பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மண் கவ்விய பின்.... பாராளுமன்றத்துக்குள் நுழைய... வென்ற பாராளுமன்ற உறுப்பினரான சத்தியமூர்த்திக்கும் வேறு சிலருக்கும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வேறு பதவி பெற்றுத் தருவதாகவும், அவர்கள் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா பண்ணி.. அந்த இடத்தை தமக்குத் தரும்படி பல வழிகளில் கெஞ்சி, ஆசை வார்த்தை காட்டியும்... சுமந்திரனை நம்பி அவர்கள் நடுத் தெருவில் நிற்க தயார் இல்லாததால்... அவர்கள் சுமந்திரனின் சூழ்ச்சி வலையில் விழாமல் ஒரேயடியாக மறுப்பு தெரிவித்து விட்டார்கள். 😅 சம்பந்தன் செத்தவுடன்.... சுமந்திரனின் பின்கதவு பாராளுமன்ற ராசியும் கை விட்டுப் போய் விட்டது. இனி சுமந்திரன் தனது வாழ்நாள் முழுக்க பாராளுமன்றத்துக்கு வெளியில் நின்று பாராளுமன்றத்தை "ஆ" வென்று அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣

நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago
நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் குறித்த நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு அவசர சேவைகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு நாடு தழுவிய பொது விடுமுறை நாட்களாக நேபாள அரசு அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1449597

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 3 weeks ago
IND-W vs PAK-W: இந்திய கேப்டனை ஏமாற்றிய ரெப்ரீ.. பாகிஸ்தான் டாஸ் ஜெயிக்கவே இல்லை.. நடந்தது என்ன? By Aravinthan Updated: Monday, October 6, 2025, 7:46 [IST] கொழும்பு: கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியில், முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது. போட்டியின் டாஸ் நிகழ்வின்போது, போட்டி நடுவர் (Match Referee) செய்த ஒரு பெரிய தவறால், பாகிஸ்தான் அணிக்குத் தவறாக டாஸ் வழங்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நாணயத்தைச் சுண்டினார். அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, தெளிவாக "Tails" (பூ) என்று கேட்டது பதிவானது. ஆனால், நாணயம் தரையில் விழுந்ததும், வர்ணனையாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் மெல் ஜோன்ஸ், அது "Heads" (தலை) என்று அறிவித்தார். Read more at: https://tamil.mykhel.com/cricket/ind-w-vs-pak-w-toss-controversy-pakistan-captain-given-wrong-advantage-due-to-refree-s-blunder-100595.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

2 months 3 weeks ago
அது மட்டுமா? அவர் அறிவித்த கடையடைப்பு, படுதோல்வி! இவருக்கு அளிக்கும் வாக்கு, மஹிந்தவையோ, ரணிலையோ குஷிப்படுத்தி இவருக்கு பதவி பட்டாடை கிடைக்கும். மக்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதிலும் பார்க்க மக்கள் தமக்கு பிடித்த அனுராவை தெரிவதில் தப்பில்லையே. அப்போதும், அனுரா அலையில் அடிபட்டுப்போனாலும் நமக்கு வெற்றியே என்று பிதற்றுவார். இனிமேல் இவர் வென்றாலென்ன தோற்றாலென்ன? இவருக்கு பதவி கிடைக்கப்போவதில்லை, ஆளுநர் மூலமாகவே காரியங்கள் நடைபெறும். முன் போல் தேர்தல் நேரம் வந்து வாக்கு அறுவடை செய்ய முடியாது. உடம்பை வளைத்து வேலை செய்ய முடியாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. இருந்தமாதிரி தன் தொழிலையே செய்து கொண்டிருந்திருக்கலாம், தேவையில்லாமல் அரசியலில் செருகப்பட்டு, சொந்த தொழிலையும் இழந்ததுதான் மிச்சம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய்ப்போச்சு இப்போ சுமந்திரனின் தொழில்.