Aggregator

மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்

2 months 4 weeks ago
எங்களுக்கு தெரியாமல் அப்படி என்ன முன்னேற்றத்தை கண்டுள்ளார்கள்? எமது காணிகளில் சிலதை விடுவிக்கப்பட்டதை சொல்கிறார்களோ? இன்றைக்கு விட்டுவித்ததாக அறிவிப்பார்கள், நாளைக்கு செல்வதற்கு தடை என்பார்கள். இந்தளவிற்கும் எங்கள் சொந்தக்காணியை பார்வையிடுவதற்கு இத்தனை கெடுபிடிகள்.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

2 months 4 weeks ago
இங்கு உண்மையான பிரச்சனை கள் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது அல்ல. ஒரு வேளை தமிழ் நாடு அரசு கள் தவறணைகளை திறந்திருந்தால், பனை, தென்னையில் இருந்து எவ்வளவு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்கள. செய்யலாம். மக்களை குடிக்கப்பழக்க அரசு கள்ளை உற்பத்தி செய்கிறது. கள்ளிறக்கும் பனை தென்னை அதன் மற்றைய நல்ல பயன்பாடுகளை கெடுத்துவிடும் என்றறெல்லாம் செபஸ்ரியன் சைமன் புலம்ப தற்குறி தம்பிகளும் அதற்கு ஆமாம் சாமி போடுவார்கள். அத்தோடு ஏதாவது சிறிய எளிதில் வெளியே வரக்கூடிய போரா ட்டம் செய்து சில நாள் உள்ளே இருந்தால் நான் பெருய ஆளா வந்திடுவனில்ல என்ற அடி வாங்கி அவுந்த வேட்டியை கட்டும் வடிவேலு பாணியும் இந்த போராட்டதுக்கு காரணம். என்ன தான் இப்படி சர்க்கஸ் காட்டினாலும் அடுத்த தேர்தலில் டெபாசிற் கிடைக்கப்போவதில்லை. 😂

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

2 months 4 weeks ago
இத அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும் இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு அத்தனையும் சொல்லி போடு

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

2 months 4 weeks ago
கள்ளசாராய மதுவால் வரும் உயிரிழப்புகளுக்குத்தான் இழப்பீடு கொடுப்பார்கள். அதுவும் ஒரே நாளில் நஞ்சாகி பலர் இறக்கும் போது மட்டுமே. சட்டபூர்வ மது குடித்து இறப்போருக்கு அல்ல. கருத்துக்கு பதில் எழுதலாம். புலம்பலுக்கு🤣

"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.

2 months 4 weeks ago
நேற்று கொஞ்சம் நேரம் இருந்ததால் சில நாட்களுக்கு முன் அறுந்த எனது செருப்பு ஒன்றை ஒட்டுவதற்காக பசை குப்பி ஒன்றை தேடி எடுத்து கொண்டுவந்தேன் ....... அதில் இது பேப்பர் , பிளாஸ்ட்டிக், மெட்டல் போன்ற எல்லாவற்றையும் ஒட்டலாம் என எழுதி இருந்தது ........ ஆஹா . ....நல்லது என நினைத்து செருப்பை ஒட்டினேன் ....... பின் அதை மூடியால் மூடும்போது " எல்லாவற்றையும் ஒட்டும் என்றால் எப்படி இந்த முடியும் குப்பியும் இதுவரை ஓட்டாமல் இருக்கு " என்னும் யோசனை வந்தது . ......! இன்று இந்த பதிவு கண்ணில் பட்டது ........ எதிர்பாராது சில நிகழ்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் நடந்து கொண்டுதான் இருக்கு . ....... ! 😂

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 4 weeks ago
போட்டியில் கலந்து கொள்ள தயார், துணிச்சலிருந்தால் யாராவது இந்த போட்டியினை நடத்தலாம் (செம்பாட்டான்).🤣 போட்டியில் கலந்து கொண்டால் அனைவரும் ஆர்வமாக பார்ப்பார்கள், அதனால் போட்டியினை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும்.

வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)

2 months 4 weeks ago
கலை என்ற தமிழ் சொல் சமஸ்கிரதத்தில் உள்ள கலா எனும் சொல்லில் இருந்து தோன்றியதாக கூறுவார்கள், கலா என்பதற்கு வளர்ச்சி எனும் பொருள்படலாவதாலேயே கலை எனும் சொல் வந்ததாக கேள்விப்பட்டேன், பாரதியார் வளர்கலை என இரண்டையும் வேறுபடுத்தியுள்ளார்.

மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்

2 months 4 weeks ago

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
தவறான கருத்தினை பதிந்து விட்டேன் கீரோசீமாவில் வீசப்பட்ட அணுகுண்டு 15 கிலோ 350000 மக்களை சனத்தொகை கொண்ட நகரில் இக்குண்டு வீசப்பட்ட போது 200000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். நாகசாகாவில் வீசப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியம் வகையினை சேர்ந்த குண்டு பையந்தான் 64 கிலோ எடை கொண்டது 240000 சனத்தொகை கொண்ட இந்த நகரத்தில் 140000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இராணுவ மற்றும் அரச உயர்பீடங்கள் இருந்த போதும் இந்த இரு நகரங்களும் தேர்வு செய்யப்பட்டமைக்கான காரணமாக கூறப்படுவதற்கான காரணம் குறித்த ஆண்டில் இரண்டு நாளில் டோக்கியோவில் நடத்தப்பட்ட எரிகுண்டுத்தாக்குதலில் டோக்கியோ பெரும் சேதத்திற்குள்ளாகி இருந்தது அத்துடன் 100000 மக்களும் கொல்லப்பட்டிருந்தனர், இந்த நிலையில் ஏற்கனவே பாதிப்பில்லாத நகரில் இரு வேறுபட்ட இரக குண்டுகளை சோதனை முயற்சியாக இந்த அணுகுண்டு தாக்குதல் 3 நாள்கள் இடைவெளியில் நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை முயற்சியின் படி பார்த்தால் யுரேனிய அணுகுண்டு அதிக அழிவு ஏற்படுத்தும் என கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
உண்மை எனவே கூறப்படுகிறது, IAEA கருத்தின்படி ஈரானிடம் கிட்டத்தட்ட 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது இதனடிப்படையில் சில மாதங்களுக்குள்ளாகவே அணுவாயுதத்தினை தயாரிக்க முடியும் (ஈரானிடம் அதற்கான வசதிகள் மற்றும் தொழில்னுட்பம் இருந்தால்) என கருதுகிறேன். இது கீரோசீமாவில் வீசப்பட்ட குட்டிப்பையனை போன்ற 6 - 7 அணுகுண்டுகளை தயாரிக்கலாம் என கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
ஈரான் மேல் அணுஆயுத தாக்குதல் நடைபெறலாம் என பரவலாக கூறுகிறார்கள், ஆனால் அது ஈரானின் எண்ணெய் வளத்தினை பாதிக்கும் என்பதால் அணுவாயுத தாக்குதல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. அணு ஆயுதத்தினை எடுத்து சென்று தாக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு கலமாக இதனை கூறுகிறார்கள்.

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

2 months 4 weeks ago
18 JUN, 2025 | 09:29 AM நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (26) தொடங்கி அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது. மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்கவும் என்றார். இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டன நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுதல் குடிநீர் தேவைப்பாடுகள் ; ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வழங்குதல் பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ; அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்தல். பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குதல். ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்தல். முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்தல். திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாதல் மற்றும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்குப்படுத்தல். குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் அறவிடுதல். அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல். திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்தல். யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல். குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுத்தல். ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுதல். நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வதல். தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுத்தல். நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல். பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல். அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்குதல். மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217773

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

2 months 4 weeks ago

18 JUN, 2025 | 09:29 AM

image

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.   

இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், 

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி  அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (26) தொடங்கி அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை (11)  ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 

அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது. 

மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்கவும் என்றார். 

இக் கலந்துரையாடலில்  பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில்  தீர்மானிக்கப்பட்டன  

யினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு  இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுதல் 

குடிநீர் தேவைப்பாடுகள் ; ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை  வழங்குதல் 

பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ; அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம்  மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்தல்.  

பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குதல். 

ஆலயத்திற்கு அருகிலுள்ள  வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்தல். 

முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல்  மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்தல். 

திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாதல் மற்றும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும்  ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்குப்படுத்தல். 

குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் அறவிடுதல். 

அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல். 

திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்தல். 

யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல். 

குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுத்தல். 

ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுதல். 

நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வதல். 

 தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுத்தல். 

நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல். 

பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்தல். 

அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்குதல்.  

மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை,  அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

IMG-20250618-WA0005__1_.jpg

IMG-20250618-WA0004.jpg

IMG-20250618-WA0002.jpg

IMG-20250618-WA0009.jpg

IMG-20250618-WA0001.jpg

IMG-20250618-WA0007.jpg

IMG-20250618-WA0003.jpg

IMG-20250618-WA0006.jpg

IMG-20250618-WA0008.jpg

https://www.virakesari.lk/article/217773

நோயாளிகளுக்கு 30 மில்லியன் ரூபா நிதி இழப்பு : கைதுசெய்யப்பட்ட பெண் வைத்திய நிபுணருக்கு விளக்கமறியல்

2 months 4 weeks ago
18 JUN, 2025 | 09:23 AM அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வைத்தியர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பிரபல நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன ஆவார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, வைத்தியர் மகேஷி விஜேரத்னவும் மற்றைய நபரும் சில மருந்து வகைகளை தமது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு ரூபா 30 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217771

நோயாளிகளுக்கு 30 மில்லியன் ரூபா நிதி இழப்பு : கைதுசெய்யப்பட்ட பெண் வைத்திய நிபுணருக்கு விளக்கமறியல்

2 months 4 weeks ago

18 JUN, 2025 | 09:23 AM

image

அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வைத்தியர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பிரபல நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன ஆவார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, வைத்தியர் மகேஷி விஜேரத்னவும் மற்றைய நபரும் சில மருந்து வகைகளை தமது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு ரூபா 30 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/217771