Aggregator

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 4 weeks ago
அப்ப நீங்கள் போட்டியில் பங்குபற்றலாம் தானே அண்ணை? கந்தப்பு அண்ணை போட்டியை நடத்த முன்வந்தால் பங்குபற்றுவீர்களா அண்ணை? @செம்பாட்டான் அண்ணை நடத்த முன்வந்தாலும் மகிழ்ச்சியே. முதலாவது போட்டியாளர் தயார், போட்டியை நடத்தப்போவது யார் யார்?! பத்துப்பேர் கையை தூக்கினால் 31 - 35 (31போட்டிகள் தானே) கேள்விகளுடன் சுருக்கமாக போட்டியை நடத்தலாமே அண்ணை.

குட்டிக் கதைகள்.

2 months 4 weeks ago
Ravindran Tharmalingam Srtdopseon:,1u741h77laaa822 30210i373nul 3a1fc8lj50tafmfihm1 · தெருவில் பணக்காரன் நடக்கும் போது ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது. அந்த வாசனையை அவனால் கடந்து போகவே முடியவில்லை. அப்படியே நின்று விட்டான். தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப் பார்த்து வரவேற்றான். அந்த ஏழையின் வீடு பிடிக்காவிட்டாலும் வீட்டில் இருந்து வந்த உணவின் மணம் பணக்காரனை உள்ளே போக சொன்னது. போய் தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தான். “என்ன உன் வீட்டில் இறைச்சி கறி வாசமாக வீசுகிறது”. “ஆம் ஐயா கொஞ்சம் பட்டையும், ஏலமும், கிராம்பும், மிளகும், இஞ்சியும், பூண்டும் தூக்கலாக போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்த காரணத்தால் இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டு விட்டு போங்கள்”. பணக்காரன் தலை அசைத்தான். இலையில் சோற்றை வைத்து கட்டியாக வைக்கப்பட்ட கறிக்குழம்பை ஊற்றினான். ஆசையாக பணக்காரன் ஒருவாய் கறியை எடுத்து வாயில் வைத்தான். “இது என்ன கறி. சுவை அற்புதம்..” “ஐயா இது முயல் கறி”. “முயல் கறியா... முயல் கறி உனக்கு ஏது. விலைக்கு வாங்கினாயா” என்று சொல்லி ஆசையாக ரசித்து சாப்பிட்டான் பணக்காரன். ஏப்பம் விட்டு நன்றி சொல்லி வெளியே வரும் போது தெருநாய் ஒன்று ஏழையின் வீட்டு வாசலில் படுத்திருந்தது. “ச்சீ நாற்றம் பிடித்த நாயே நீ இங்கேயும் வந்து விட்டாயா. இந்த சனியனுக்கு நான் தினமும் எச்சில் உணவை வைப்பேன். வாசலில் காவலாய் காத்துகிடக்கும்” என்றான் பணக்காரன். “ஐயா. நீங்கள் சாப்பிட்ட சுவையான முயல் கறியின் முயலை இந்த நாய்தான் பிடித்து வந்தது. அருகில் இருக்கும் காட்டு விளைகளுக்குள் போய் இந்த நாய் நின்று கொண்டிருக்கும். ஒருநாள் அதிர்ஷ்டமாக கொழுத்த முயல் மாட்டியது போல. பிடித்து அது கூட சாப்பிடாமல் என் வீட்டுக்கு தூக்கி வந்து விட்டது” இதைக் கேட்டதும் பணக்காரன் பொறாமையில் சட்டென்று திரும்பி நாயை வெறுப்பாக பார்த்தான். எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். மறுநாள் பணக்காரன் மதிய சாப்பாடு சாப்பிட்டு மீன் முள்ளை தூக்கி வெளியே போடப் போகையில் அந்த தெருநாய் வந்து உணவுக்காக நின்றது. “நன்றி கெட்ட நாயே. தினமும் உனக்கு எச்சில் உணவு கொடுப்பது நான். ஆனால் நன்றியே இல்லாமல் நீ பிடித்த கொழுத்த முயலை அந்த பஞ்சத்து ஏழைக்கு கொடுத்து விட்டாயே” என்று திட்டினான். பசிதாங்காமல் நாய் அந்த மீன் முள்ளை பார்த்துக் கொண்டே இருந்தது. ”உனக்கு கிடையாது போ” என்று கல்லை எடுத்து நாய் மீது எறிந்த பணக்காரன் முள்ளை காக்கைகளுக்கு வீசினான். இந்த காட்சி எல்லாம் முடியவும், ஏழை அப்பக்கம் வரவும் சரியாக இருந்தது. அவன் பணக்காரனை சட்டை செய்யாத அவசரசத்தில் இருந்தான். “வா வா என்ன ரொம்ப பசியா இருந்தியோ... எனக்கு இன்னைக்கு அரைநாள் கூலியா இரண்டு ஆப்பம் கிடைச்சது... தொட்டுக்க கொஞ்சம் துவையலும் இருக்கு. வீட்டுக்கு வா ஆளுக்கொரு ஆப்பம் சாப்பிடலாம்” என்று நாயை அழைத்தான். கதவை திறந்து விட்டான். நாய் உரிமையுடன் ஏழையின் வீட்டுக்குள் நுழைந்தது. வெளியே இருந்து பார்க்கும் போதே பணக்காரனுக்கு அவர்கள் ஆளுக்கொரு ஆப்பத்தை பகிர்ந்து சாப்பிடுவது தெரிந்தது. நாயும் ஏழையும் அருகருகே இருந்து சாப்பிட்டார்கள். அந்த ஏழை நாயை கொஞ்சவும் இல்லை. அன்பை பொழியவும் இல்லை. ஆனால் அவனுக்கு சரிசமாக வைத்து தன் உணவை பகிர்ந்து கொண்டான். பிறருக்கு கொடுப்பது என்பது தன்னுடைய உணவில் மிஞ்சியதை தூக்கி எறிவது அல்ல, தன்னுடைய உணவை “வா பகிர்ந்து சாப்பிடலாம்” என்று நட்பாக கொடுப்பதுதான் என்ற உண்மையை பணக்காரன் உணர்ந்தான். அந்த ஏழையின் மதிப்பான அன்பிற்கு பரிசாகத்தான் நாய் கொழுத்த முயலை வேட்டையாடி அவனுக்கு கொடுத்திருக்கிறது, தனக்கு கொடுக்கவில்லை என்ற பெரிய உண்மையையும் தெரிந்து கொண்டான். எழுத்தாளர் ஜேக் லண்டன் சுயசரிதையில் தன் பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பற்றி பேசும் போது "என்னப்பா பணக்காரர்கள் தானம் கொடுக்கிறீர்கள். பிறருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை ஏழைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நாய்க்கு எலும்பை வீசுவது அன்பு இல்லை. தனக்கு கிடைத்த எலும்பை நாயோடு பகிர்ந்து சாப்பிடுவதுதான் அன்பு” என்பதை படித்த உடன் இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றியது. All credits goes to the author Voir la traduction

நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 4 weeks ago
18 Jun, 2025 | 04:32 PM முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து, அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியலை நடத்தும் நபர்களாக சிலர் மாறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் அணி தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்களை முன்வைத்தவர்கள், அவர்களுடன் சேர்ந்து தமது அரசியலை முன்னெடுக்கும் கேவலமான நிலை உள்ளது. இப்படியானவர்களே எமக்கு எதிராக போலியான பிரச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர் என்றார். நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk

நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 4 weeks ago

18 Jun, 2025 | 04:32 PM

image

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து, அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது என  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று  (17) உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியலை நடத்தும் நபர்களாக சிலர் மாறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் அணி தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்களை  முன்வைத்தவர்கள், அவர்களுடன் சேர்ந்து தமது அரசியலை முன்னெடுக்கும் கேவலமான நிலை உள்ளது.

இப்படியானவர்களே எமக்கு எதிராக போலியான பிரச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர் என்றார்.

நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk

இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன்

2 months 4 weeks ago
18 Jun, 2025 | 05:13 PM உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதோ, அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம். இதனை ஒரு கோட்பாடாக நாங்கள் கூறி இருந்தோம். இத்தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் கூறியிருந்தோம். பல கட்சிகள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 35 சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றன. அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும். இந்த கோட்பாட்டிற்கு இணங்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலே செயற்பட்டிருக்க வேண்டும். மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன் | Virakesari.lk

இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன்

2 months 4 weeks ago

18 Jun, 2025 | 05:13 PM

image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று புதன்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதோ, அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம். இதனை ஒரு கோட்பாடாக நாங்கள் கூறி இருந்தோம்.

இத்தேர்தலில் மட்டுமல்ல,  இதற்கு முன் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் கூறியிருந்தோம்.

பல கட்சிகள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 35 சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றன. அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும்.

இந்த கோட்பாட்டிற்கு இணங்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலே செயற்பட்டிருக்க வேண்டும்.  

மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றார். 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன் | Virakesari.lk

புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..!

2 months 4 weeks ago
18 Jun, 2025 | 05:35 PM திருகோணமலை - மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கப்பட்டது. மூதூர் 3ம் கட்டை மலையில் விகாராதிபதியினால் அ.ரமேஷ் என்பவருகெதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த ரமேஷ் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இதன்போது சட்டத்தரணி துஷ்யந்தன் குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. பலாத்காரமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது பிறகு வந்து அச்சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர். ஆனால் இன்று வரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் ரமேஷ் புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடம் வழிபாடு செய்தார். கடந்த பொசன் தினத்தன்று விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார். ரமேஷ் எதிர்த்ததால் அவரை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு செய்தார். இது மத சுதந்திரத்தை மீறும் செயல். இன முறுகலை ஏற்படுத்தும் செயல். எனவே அவரை விடுவிக்குமாறு மன்றை கோரினார். நீதவான் ரமேஷூக்கு பிணை வழங்கி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார். புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..! | Virakesari.lk

புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..!

2 months 4 weeks ago

18 Jun, 2025 | 05:35 PM

image

திருகோணமலை - மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கப்பட்டது.

மூதூர் 3ம் கட்டை மலையில் விகாராதிபதியினால் அ.ரமேஷ் என்பவருகெதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த ரமேஷ் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இதன்போது சட்டத்தரணி துஷ்யந்தன் குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது.

பலாத்காரமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது பிறகு வந்து அச்சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர்.

ஆனால் இன்று வரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் ரமேஷ் புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடம் வழிபாடு செய்தார். கடந்த பொசன்  தினத்தன்று விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார். ரமேஷ் எதிர்த்ததால் அவரை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இது மத சுதந்திரத்தை மீறும் செயல். இன முறுகலை ஏற்படுத்தும் செயல். எனவே அவரை விடுவிக்குமாறு மன்றை கோரினார்.

நீதவான் ரமேஷூக்கு பிணை வழங்கி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..! | Virakesari.lk

மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்!

2 months 4 weeks ago
18 Jun, 2025 | 05:42 PM மட்டக்களப்பு வாவியில் நீர்த்தாவரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் முதலைகள் பெருகிவிட்டதாகவும், இவற்றால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் இந்த சூழ்நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர். இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கமடைந்துள்ளன. அத்துடன் வாவி அழிவடைந்து வருவதாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த வாவியில் மீன்கள் பாடல் இசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என மட்டக்களப்பு வாவி அழைக்கப்படுகிறது. இந்த வாவியில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வாவியில் ஆற்றுவாழைத் தாவரம் அதிகமாக வளர்ந்துள்ளதால் மீனவர்கள் தோணிகளை செலுத்த முடியாமல் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வாவியில் முதலை, பாம்பு போன்ற மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்கள் வாழ்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் இந்த ஆற்றுவாழைகளுக்குள் ஒளிந்திருந்த முதலையொன்று மீனவர் ஒருவரை இழுத்துச் சென்று கொன்றுள்ளதுடன், பல கால்நடைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வாவியின் தூய்மையை அழிக்கக்கூடிய ஆற்றுவாழைகளை அகற்றுமாறு மீனவர்கள் உரிய தரப்பினரை கோருகின்றனர். மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்! | Virakesari.lk

மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்!

2 months 4 weeks ago

18 Jun, 2025 | 05:42 PM

image

மட்டக்களப்பு வாவியில் நீர்த்தாவரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் முதலைகள் பெருகிவிட்டதாகவும், இவற்றால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் இந்த சூழ்நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர். 

இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கமடைந்துள்ளன. 

அத்துடன் வாவி அழிவடைந்து வருவதாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். 

download__1_.jpg

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த வாவியில் மீன்கள் பாடல் இசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என மட்டக்களப்பு வாவி அழைக்கப்படுகிறது.

இந்த வாவியில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த வாவியில் ஆற்றுவாழைத் தாவரம் அதிகமாக வளர்ந்துள்ளதால் மீனவர்கள் தோணிகளை செலுத்த முடியாமல் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வாவியில் முதலை, பாம்பு போன்ற மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்கள் வாழ்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் இந்த ஆற்றுவாழைகளுக்குள் ஒளிந்திருந்த முதலையொன்று மீனவர் ஒருவரை இழுத்துச் சென்று கொன்றுள்ளதுடன், பல கால்நடைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வாவியின் தூய்மையை அழிக்கக்கூடிய ஆற்றுவாழைகளை அகற்றுமாறு மீனவர்கள் உரிய தரப்பினரை கோருகின்றனர். 


மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்!  | Virakesari.lk

வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம்

2 months 4 weeks ago
வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம் 18 Jun, 2025 | 06:09 PM நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நேரகாலத்துடன் செலவு செய்து மேலதிக நிதிகளைக் கோரவேண்டும். அதேநேரம் முன்னெடுக்கப்படும் திட்டங்களை திணைக்களத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிடவேண்டும். அதேபோன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களைத் தயாரிக்கும்போதும் களத்துக்குச் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறும் ஆளுநர் திணைக்களத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் புதிய கட்டுமானங்களை அலுவலகத் தேவைகளின் நிமிர்த்தம் அமைப்பதை விரும்பவில்லை. அவ்வாறான திட்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வரும் சுற்றுலாவிகள், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பிரதேசங்களில் தமது இயற்கை உபாதைகளைப் போக்குவதற்குரிய மலசலகூடங்கள் இல்லாமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் எதிர்காலத்தில் இது தொடர்பில் ஒவ்வொரு உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களும் கவனம் செலுத்தவேண்டும். இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண காணித் திணைக்களம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, திட்டமிடல், பொறியியல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாகாண பணிப்பாளர்கள் பங்கேற்றனர். வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம் | Virakesari.lk

வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம்

2 months 4 weeks ago

வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம்

18 Jun, 2025 | 06:09 PM

image

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 

இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நேரகாலத்துடன் செலவு செய்து மேலதிக நிதிகளைக் கோரவேண்டும். அதேநேரம் முன்னெடுக்கப்படும் திட்டங்களை திணைக்களத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிடவேண்டும். 

அதேபோன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களைத் தயாரிக்கும்போதும் களத்துக்குச் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறும் ஆளுநர் திணைக்களத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். 

மேலும்  புதிய கட்டுமானங்களை அலுவலகத் தேவைகளின் நிமிர்த்தம் அமைப்பதை விரும்பவில்லை. அவ்வாறான திட்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வரும் சுற்றுலாவிகள், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பிரதேசங்களில் தமது இயற்கை உபாதைகளைப் போக்குவதற்குரிய மலசலகூடங்கள் இல்லாமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் எதிர்காலத்தில் இது தொடர்பில் ஒவ்வொரு உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களும் கவனம் செலுத்தவேண்டும். 

இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண காணித் திணைக்களம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன. 

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, திட்டமிடல், பொறியியல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாகாண பணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம் | Virakesari.lk

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 4 weeks ago
போட்டியை நடாத்தும் படி கேட்டதற்கு நன்றிகள். ஆனால் மகளிர் போட்டியினை ஒருபோதும் பார்த்ததில்லை . வீராங்கனைகளின் பெயர்களும் தெரியாது. போட்டியை நடத்தினாலும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பது யோசனையாக இருக்கிறது.

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

2 months 4 weeks ago
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை குழிகளில் சில எலும்புக் கூடுகளில் இரும்புச் சங்கிலிகள் இருந்ததாக செய்தி வந்திருந்தது. அந்த எச்சங்களை புளோரிடாவுக்கு அனுப்பும் ஆயத்தங்கள் நடந்த போது சுமந்திரன் "பலருக்கு அதிர்ச்சி தரக் கூடிய முடிவுகள் கிடைக்கலாம்" என்று சொன்னதாக நினைவு. பின்னர், அந்த எச்சங்கள் "300 வருடங்களுக்கு முன் இறந்தவர்களுடையவை" என்று காபன் 14 கணிப்பு வந்ததாக நினைவு. மன்னாரில் சங்கிலியன் மன்னனால், போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய தமிழர்கள் கொல்லப் பட்டது 1544 இல் என்று கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ஈழத்தமிழர் வரலாற்று நூலில் பதிவு செய்திருக்கிறார். திருக்கேதீஸ்வர எச்சங்களின் காபன் 14 வயது முடிவு பற்றி அந்த நேரம் ஓடிய யாழ் திரியில், இந்த வரலாற்றை மறுதலித்து "சிங்களவன் பொய் சொல்லி விட்டான்" என்று சில உறவுகள் வாதிட்டிருக்கின்றனர். அதெப்படி சுமந்திரனுக்கும், ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் இது பற்றித் தெரிந்திருக்க, ஏனையோருக்கு இது புதிராக இருக்கிறது? காரணம் வாய்வழிப் பாரம்பரியமாகக் (oral tradition) கடத்தப் படும் மன்னார் வரலாற்றில் "மன்னார் வேத சாட்சிகள்" பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. மன்னார் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் இந்த வழியாக இந்த வரலாற்றை அறிந்திருக்கிறார்கள். இப்போது உங்கள் கேள்விக்குப் பதில்: ஆம், மன்னாரில் கொல்லப் பட்டவர்களின் வயதைக் கணிக்க இயலும் (பல்லில் இருக்கும் எனாமலின் காபன் 14 இன் அளவை வைத்து இதனைச் செய்யலாம்). ஆனால், எப்படிக் கொல்லப் பட்டார்கள் என்று காபன் 14 இனால் கண்டறிய இயலாது. அதற்கு சட்ட (forensic) மருத்துவ/தொல்லியல் நுட்பங்களைப் பாவிக்க முடியும்.

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

2 months 4 weeks ago
செம்மணியை போல, திருக்கேதீஸ்வரத்தை போல, மண்டைதீவைப்போல இன்னும் ஈழத்தில் கண்டெடுக்கப்படும் ஏனைய மனித புதை குழிகள் போல நீங்கள் கேள்விப்பட்டுள்ள சங்கிலிய மன்னன் விவகாரமும் வெளிப்பட்டால் நிச்சையம் ஜஸ்டின் கூறிய முறையில் சில உண்மைகளையாவது கண்டறியலாம். So அது வரையில் இப்பொழுது வெளிப்படும் தடயங்கள் குறித்து அதன் பின்னணியை ஆராயலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் - ஈரான் 18 JUN, 2025 | 12:20 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நிபந்தனையற்ற விதத்தில் சரணடையுமாறும் பொறுமை குறைகின்றது எனவும் எச்சரித்த நிலையில் புதன்கிழமை இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டெல்அவி மக்கள் தாக்குதலிற்கு தயாராகவேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்த அதேவேளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது ஹைபர்சோனிக் பட்டா ஏவுகணைகள் பாதுகாப்பான பதுங்குமிடங்களை உலுக்கிவருகின்றன என தெரிவித்துள்ளது. நேர்மையான வாக்குறுதி நடவடிக்கையின் 11வது சுற்றுதாக்குதல்களை பட்டா ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொண்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்துமடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்ககூடியவை. நடுவானில் தங்கள் பயணத்தை மாற்றக்கூடியவை இதனால் அவற்றின் பயணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். https://www.virakesari.lk/article/217800

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

2 months 4 weeks ago
தையிட்டி விகாரை விவகாரம், செம்மணி புதைகுழி, காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:43 PM யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (18) வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன், முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார். வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டார். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமானசேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் இதற்குரிய கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார். மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார். இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/217828

11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்

2 months 4 weeks ago
பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை. அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும். ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார். பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார். இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார். மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார். காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார். ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது. சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார். மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன? அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது. தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர். காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார். பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார் டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது. பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார். 2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது. 2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். 2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன. மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார். முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார். 1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam) அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார். மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை. தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது. காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார். 1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை. தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார். இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு இஸ்ரேல் - இரான் மோதல் முற்றுவதால் ரஷ்யா கவலை ஏன்? காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது? இரானை ஆதரிக்கும் பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? இரு மகள்கள் காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை. குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர். 1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார். காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o

11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்

2 months 4 weeks ago

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது.

1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை.

அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும்.

ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார்.

இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார்.

மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார்.

காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார்.

ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது.

சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார்.

மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன?

அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது.

தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர்.

காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்.

மோஜ்தாபா காமனெயி, இரான்

பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES

படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார்

டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது.

பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார்.

2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது.

2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார்.

1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர்.

ஆயதுல்லா அலி காமனெயி, மேசம், இரான்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam)

அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார்.

மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை.

தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது.

காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார்.

1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை.

தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார்.

இரு மகள்கள்

காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை.

குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர்.

1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார்.

காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் ; ரஜீவன் கோரிக்கை

2 months 4 weeks ago
18 JUN, 2025 | 02:54 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார். வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார். கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமே, இலங்கையின் அடுத்தபட்ட சுற்றுலா மையமாக வளரக்கூடிய வளமான பகுதி. யாழ்ப்பாணம் –கிளிநொச்சி பகுதிகள் பண்பாட்டு பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் ஆன்மீக ஆழம் கொண்டவை. திறமையான திட்டமிடலும், சரியான விளம்பர முயற்சிகளும், முதலீடுகளும் இடம்பெற்றால், இது இலங்கையின் வடக்கு சுற்றுலா மையமாக மாறும். தற்போது வடக்கு மாகாணம், இலங்கையில் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சுமார் 3-5% மட்டுமே ஈர்க்கிறது. இது கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, தம்புள்ளை போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இவ்வாறு ஒப்பீட்டளவில் பின்னடைவில் இருக்கும் வடமாகாணத்தின் சுற்றுலா துறையை முன்னேற்ற, பல தளங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தனியார் முதலீடுகளுடன் ஹோட்டல் மற்றும் விடுதி வசதிகள், நவீன விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், சிறப்பான இளைஞர் பயிற்சிகள், கிராமப்புற அனுபவத்துடன் வீட்டு விடுதிகள், யாழ் உணவுப் பாதைகள், நல்லூர் திருவிழா போன்ற திருவிழாக்களை சர்வதேச நாட்காட்டியில் இணைத்தல் போன்றவற்ரை நடைமுறைப்படுத்தவேண்டும் இவை யாவும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், 2030ஆம் ஆண்டுக்குள் யாழ் மற்றும் வடமாகாணத்தில் மொத்த சுற்றுலா பங்கு 15-18% வரை உயரலாம். மேலும் வடமாகாணத்தில் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு விசேட உபக்குழுவை அமைத்து வடக்கு அபிவிருத்திக்காக திட்டமிட வேண்டும் என்றார். குறித்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் இவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/217826