Aggregator

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!

2 months 4 weeks ago
தமிழரசு கட்சியின் உறுப்பினர் நீக்கம் ?? adminJune 19, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், நேற்றைய தினம் புதன்கிழமை (18.06.25) மதியம் நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் மிகத் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் நடுநிலைவகித்துள்ளீர்கள். ஆகையால் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள். தங்களது இந்த நடவடிக்கை சம்மந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என்ற அடிப்படையிலும் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இல்லாவிட்டாலும் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள் – என்றுள்ளது. https://globaltamilnews.net/2025/217021/

மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்

2 months 4 weeks ago
மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர் இளைஞர்கள் குறிவைப்பு பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் ஊழல் சோதனைப் பிரிவால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பருத்தித்துறை, கட்கோவளத்தில் வசிக்கும் 29 வயது சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 12 கிராம் 40 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. குறித்த இளைஞர் சமூகத்தை குறிவைத்து செயற்பட்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தாரென விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://newuthayan.com/article/மனைவியுடன்_ஐஸ்_விற்பனை;_பருத்தித்துறையில்_சிக்கிய_நபர்

மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்

2 months 4 weeks ago

மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்

1914324678.jpeg

இளைஞர்கள் குறிவைப்பு

பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் ஊழல் சோதனைப் பிரிவால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பருத்தித்துறை, கட்கோவளத்தில் வசிக்கும் 29 வயது சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 12 கிராம் 40 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

குறித்த இளைஞர் சமூகத்தை குறிவைத்து செயற்பட்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தாரென விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://newuthayan.com/article/மனைவியுடன்_ஐஸ்_விற்பனை;_பருத்தித்துறையில்_சிக்கிய_நபர்

காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்!

2 months 4 weeks ago
காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்! adminJune 19, 2025 காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை குழு ஆகியவை கூட்டிணைந்து ,சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசாவை முன் மொழிந்தனர். வேறு பெயர்கள் முன் மொழியப்படாததால் , கோவிந்தராசா தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில், ஆண்டிஐயா விஜயராசா தெரிவானர். அதேவேளை , சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டே ஆதரவு வழங்க உடன்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217018/

காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்!

2 months 4 weeks ago

காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்!

adminJune 19, 2025

Karainahar.jpg?fit=1065%2C718&ssl=1

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.

காரைநகர்  பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு  ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும்,  தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர்.

அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை குழு ஆகியவை கூட்டிணைந்து ,சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசாவை முன் மொழிந்தனர்.

வேறு பெயர்கள் முன் மொழியப்படாததால் , கோவிந்தராசா தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில், ஆண்டிஐயா விஜயராசா தெரிவானர்.

அதேவேளை , சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டே ஆதரவு வழங்க உடன்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/217018/

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!

2 months 4 weeks ago
வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்! adminJune 19, 2025 வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர். தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும், நடுநிலையாக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். அதனை அடுத்து பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றதை அடுத்து சுகிர்தன் தவிசாளராக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில் பொன்னுத்துரை தங்கராசாவும் தெரிவானர் https://globaltamilnews.net/2025/217015/

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!

2 months 4 weeks ago

வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!

adminJune 19, 2025

Sukirthan.jpg

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர்.

தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும்,
நடுநிலையாக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

அதனை அடுத்து பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றதை அடுத்து சுகிர்தன் தவிசாளராக தெரிவானர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில் பொன்னுத்துரை தங்கராசாவும் தெரிவானர்

https://globaltamilnews.net/2025/217015/

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 4 weeks ago
யாராவது போட்டியை நடாத்த விரும்பினால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். ஒருவரும் போட்டியை நடாத்த விரும்பாவிடில் நான் நடத்துகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
உண்மையில் இஸ்ரேல் ஈரானில் தாக்கியிருந்தால் அதனால் மக்கள் கதிர் வீச்சால் இறந்திருப்பர், அப்படியெதுவும் நடக்காமையால் தாக்குதல் பொய் என்கிறீர்கள்?? இந்த வீடியோக்களைப் பார்த்து விடயங்களை அரை குறையாகப் புரிந்து கொள்வதை விட, இங்கே இணைக்கப் பட்டிருக்கும் பிபிசி செய்திகளைப் பார்த்தால் விடயம் தெளிவாகும் என நினைக்கிறேன். IAEA என்ற அமைப்பு கதிர் வீச்சு ஈரானில் தாக்குதல் நடந்த இடங்களில் அதிகரித்திருக்கிறதா என கண்காணித்து வருகிறது (இதே கண்காணிப்பு உக்ரைனிலும் நடந்தது). அழிக்கப் பட்ட இடங்களில் வெளியே கதிரியக்கம் அதிகரிக்கவில்லை. கட்டிடங்களின் உள்ளே அதிகரிப்பு இருப்பதாக செய்தியில் இருக்கிறது. அணு ஆயுதம் இங்கே அழிக்கப் படவில்லை. அணு ஆயுதத்தைத் தயாரிக்க அவசியமான யுரேனியத்தை செறிவு படுத்தும் நிலையங்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் கூட 60% செறிவான யுரேனியம் பெரும் தொகையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சுத்திகரித்த யுரேனியத்தை மலைக்குக் கீழே தான் பதுக்கியிருப்பர், ஏனெனில் அது போனால் அணுவாயுதக் கனவும் போய் விடும். எனவே, அணுவாயுதம் அழிக்கப் பட்டது, அணு வாயுதம் தயாரிக்கும் இடம் அழிக்கப் பட்டது என்ற உங்கள் புரிதல் தவறு. யுரேனியம் செறிவாக்கும் மைய நீக்க சுழலிகள் (centrifuges) என்ற உபகரணங்கள் தான் இலக்கு என்பதை வெளிப்படையாக செய்திகளில் காண்கிறோம். இதைக் காணாமல் எங்கேயோ மூலையில் இருக்கும் வீடியோவை நம்பி நீங்கள் கருத்துரைப்பது ஆச்சரியம் தான்!

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

2 months 4 weeks ago
செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட இராணுவத்தினனே சாட்சி வழங்கி இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளான். அதோடு அந்த உடல்களில் உடைகள் எதுவும் காணப்படவில்லை என்று அறிய முடிகிறது.

புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..!

2 months 4 weeks ago
இந முறுகலை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது யார்? எங்கள் நிலத்தில், அவர்கள் விகாரைகளை கட்டி எழுப்பும்போது புத்தர் சிலைகளை வைக்கும்போது இனமுறுகலை ஏற்படுத்த வேண்டாம் என்று யாரும் போதிப்பதில்லை. ஆனால் எங்கள் நிலத்தில் எங்களுக்கு தடைகளாய் இருப்பவற்றை அகற்றும்போது கேள்வி கேட்க்கும்போது மட்டும் பொலிஸ்நிலையங்கள் விழித்துக்கொள்கின்றன. இனமுறுகல் பற்றி பாடம் நடத்துகின்றன. பிழைகளை சுட்டிக்காட்டி தவறு எங்கே என்று சொல்ல போலீசாருக்கு முதுகெலும்பு இல்லை, அதனாலேயே இவ்வளவு முரண்பாடுகள் ஏற்பட காரணம்.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

2 months 4 weeks ago
கிட்டத்தட்ட போர்க்காலத்தில் சொல்லப்பட்ட பொய் மூட்டைகளை சொப்பிக் பாக்கில் கொண்டு செல்கிறாரா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
அணுக்கதிர் வீச்சால் யாராவது இறந்ததாக எங்கே நீங்கள் கேள்விப் பட்டீர்கள்? இணைப்பை இங்கே தாருங்கள், உண்மையைப் பரிசோதிக்கலாம். அணு ஆயுதங்கள் அழிக்கப் பட்டதாக யார் சொன்னார்கள்? எந்த ஊடகம்?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா? ஏன் ஏன் ஏன் எப்படி அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டது என்று செய்திகள் வந்தனவே?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
இஸ்ரேலினுள் ஏற்பட்ட சேதங்கள் பற்றி பிபிசியிலே படங்களோடு போடுகிறார்களே? அயன் டோம் அதைத் தயாரித்த கம்பனியின் தரவுகளின் படி 80% - 90% வினைத்திறனானது. எனவே 100 ஏவுகணைகள் வந்தால் 20 உள்ளே விழும். ஆனால், 20<<100 என்பதால் சேதம் இஸ்ரேலுக்கு இது வரை குறைவு தான். கதிர் வீச்சினால் மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் வரவில்லை. எந்த தகவல் மூலத்தில் இந்த தகவலைப் பார்த்தீர்கள்?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி. எப்படி அயன் டோம் இஸ்ரேலை தாக்கி அழிக்க முடியவில்லை என சொல்ல முடியுமா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
உங்களின் உலகப்போர் என்பதன் அர்த்தம் வேறாகலாம். அமெரிக்காவை தாக்க பலர் தருணம் காத்திருக்கிறார்கள். இதோ தருணம் வந்து விட்டது. இரானின் சகாக்கள் யார் எனில் ரஸ்யா,சீனா, வடகொரியா. உதிரிகள் கிஸ்புல்லா மற்றும் குழுக்கள். இராணுவத்தை இறக்கிய ஆப்கானிஸ்தானில் நிலை என்ன(அமெரிக்காவின்) ஈரானில் குண்டு மழை பொழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன. சதாம் அல்லது கடாபி போல அழிந்து நாட்டை பிடிக்கும் வாய்ப்பு ஏற்படுமா? ஏன் இஸ்ரேலின் அழிவுகள் பற்றி மேற்கு ஊடகங்கள் தெரிவிக்க மறுக்கின்றன

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
நிச்ச்சயமாக இராணுவம் இறங்க போவதில்லை. டோறா போறாவில் குண்டு வீசிய தருணங்கள் மட்டும் வந்து போகின்றது. இஸ்ரேல் பெரிய பிஸ்தா எனில் ஏன் அமெரிக்கா அழைக்கப்பட்டது என சிந்தித்தீர்களா?