Aggregator

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் இலங்கையில் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கலாம் . மலையக மக்கள் மட்டும் அப்படியே எல்லாவற்றையும் துறந்து இன்னொரு பிரதேசத்தில் ஏதும் இல்லாதவர்களாக, குடியேறிகளாக வாழ வேண்டுமா? அவர்களுடைய பிரச்சனைகளுக்காக அவர்கள் போராடும் நிலையில் நாம் வட கிழக்குத் தமிழர்கள் அவர்களுக்கான தார்மீக ஆதரவை வழங்குவதுதான் சிறப்பான தெரிவாக இருக்கும் இன்றும் தமிழ் நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் வாழும் வட கிழக்குத் தமிழர்களின் நிலை எல்லோருக்கு தெரியும் வடகிழக்கில் குடியேறி வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களுடைய நிலை போராட்ட காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படியான நிலையில் உள்ளது என்பதும் யாவரும் அறிந்ததே.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
இலங்கைக்கு அடிமைகளாக இருந்தவர்களை இப்போது இலங்கைத் தமிழர்களும் அவர்களை அடிமைகளாக மாற்றலாம் என்ற ஒரு முயற்சிகவே இந்த வரவேற்பினை நான் பார்க்கின்றேன் மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம். அங்கெ அவர்களுக்கு உரிய உரிமைகள் அதாவது முதன்மையாக காணி உரிமை இல்லை . பல சதாப்தங்களாக மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் குறிப்பாக மலையகத் தமிழக கட்சிகளும் அந்த மக்களுடைய வாழ்வுரிமையை எந்த விதத்திலும் மேம்படுத்தல் செய்யாமல் தங்கள் அரசியல் தேவைகளுக்காக ஏற்ற நேரத்தில் வாய்ப்பு பேச்சுக்களால் ஏமாற்றி வந்துள்ளனர். மனோ கணேசன் மீண்டும் மலையக மக்களை ஏமாற்றி அல்லது அவர்களை முன்னிறுத்தித் தனது அரசியல் ஆதாயத்தை தேட முயல்கின்றார். மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரும் தோட்டம் மற்றும் சிறு தோட்டங்களை நம்பி இருக்கும் நிலையில்..... வட கிழக்கில் அகதிகளாக அவர்களை மீண்டும் ஒருமுறை இடம்பெயர வைக்க முயற்சிப்பதா ? அந்த முடிவு எப்போதும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவாகவே இருக்கும் மனோ கணேசன் யார்? அவர் ரணிலை இத்தனை காலம் ஆதரித்தவர் இப்போது சஜித் அவர்களின் ஆதரவாளர்.. அனுராவின் ஆட்சிக்கு எதிராக வினையாற்ற மலையக மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கின்றார் மனோ கணேசன் . அதற்கு எங்கள் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்த சஜித்தின் ஆதரவு நிலையில் இருக்கும் சுமந்திரனும் துதி பாடுகின்றார் . மலையகத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பேணப்பட்டு அவர்களை அவர்களின் இடத்திலேயே வாழ வழி சமைக்க வேண்டும். மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம் என்று ரோஹண விஜேவீர 70 களிலேயே அறை கூவியிருந்தார்

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து டேவிட் ஐயா (எஸ். ஏ. டேவிட்) இந்த அமைப்பை நிறுவி அதன் மூலம் 1970களில் ஏற்பட்ட இன வன்முறைகளால் / இனப்படுகொலைகளா; இடம்பெயர்ந்த சுமார் 5000 மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்தினர். 80 களின் பின் வன்னியில் பிறந்து போராட்டத்தில் இணைந்து மாவீரர்களான பலரின் முழுப்பெயரை கவனித்தால் தெரியும், அதில் பலரது தந்தையின் பெயர் மலையக / இந்திய வம்சாவளி தமிழர்களின் பெயர்களாக இருக்கும். வன்னி மண்ணின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் இவர்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்தது. தாயகத் தமிழர்கள் வாஞ்சையுடன் இவர்களை அணைத்து அரவணைத்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

வாழைப்பூ வடை

2 months 3 weeks ago
நண்பன் இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தான் விரும்புகின்றேன், கவிஞரே. அது சாத்தியமும் கூட. ஏராளமானோர் இதே குறைபாட்டுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதை ஒரு நோய் என்று சொல்லாமல், குறைபாடு என்றே சொல்கின்றார்கள். அசட்டுத்தனமாக அவசரப்பட்டு கேட்கும், வாசிக்கும், பார்க்கும் எல்லாவற்றையும் அவன் அப்படியே நம்பி விடாமல் இருந்திருக்கலாம். 'உணவே மருந்து............' என்பது ஆரோக்கியமாக இருக்கும் நாட்களுக்கு பொருந்தும். நோயோ அல்லது குறைபாடு ஒன்றோ வந்துவிட்டால், சரியான சிகிச்சை மிக அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்..............🙏.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
இது தான் அந்தக் குறிப்பு☝️ இரண்டு விடயங்கள் நினைவில் வந்தது: முதலாவது மலையக மக்கள் கிழக்கில் குடியேறினால் அங்கு அவ்வளவு பிரச்சினை இருக்காது. ஆனால் வடக்கில் குடியேறினால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு வாழ் தமிழர்கள் மலையக மக்களை இளக்காரமாகவே கையாளுவார்கள். அது அவர்களின் தோலை மாற்ற முடியாத பிறவிக் குணம். இரண்டாவது சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகளின் சிறப்பியல்பு. சுமந்திரனின் இந்த மலையக மக்களுக்கான அழைப்பானது மிகச் சிறந்ததும் உன்னதமானதும் ஆகும் என்பது எனது கருத்து. ஆனால் சிவிங்கி தனது புள்ளிகளை எப்படி மாற்றமுடியாதோ அவ்வாறுதான் சுமந்திரனுக்கெதிரான போராளிகளும் இருக்கிறார்கள். ஒருபோதும் இதனை அவர்கள் வரவேற்கப்போவதில்லை!

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

2 months 3 weeks ago
ஏன் ...அவ்வளவுதூரம் ...போகத்தேவையில்லை ...இந்த யாழ் களத்திலேயே தருவினம்.. இன்று வெள்ளிக்கிழமை மத்தியானம் ஒருமணிக்கு ..ரோட்டெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
இப்படியான விளக்கங்கள் தான் இணையத்தில் கிடைக்கின்றன: ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 13:23

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
நான் நுனிப்புல் மேய்ந்ததில் கதை இல்லை... நீங்கள் சொன்ன வந்த எத்தியோப்பிய + சிவிங்கி கதையை சொல்லுங்கோ என்று கேட்டேன்

ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்

2 months 3 weeks ago
செலன்ஸ்கி மீது தற்போது பலருக்கு வன்மம் ஏற்பட்டுள்ளது, உக்கிரேனியர்களே அவரது சகாக்களின் ஊழலின் பின்னர் மேற்கு ஊழலின் அடிப்படையாக கொண்டு உக்கிரேனுக்கான ஐரோப்பிய ஒன்றிய இணைவு மற்றும் உதவிகளில் தடங்கல் ஏற்படலாம் என அவரின் மீது வெறுப்பை காட்டுகிறார்கள், ஆனால் செலன்ஸ்கி ஒரு அங்குல நிலத்தினையும் விட்டு கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அமெரிக்க புதிய கொளகையினடிப்படையில் மீண்டும் அமெரிக்காவினை தன்பக்கம் இழுப்பதற்காக இரஸ்சியாவில் சீனாவின் பங்கு பற்றி பேசியுள்ளார். போரின் மூலமோ அல்லது இராஜதந்திர ரீதியிலோ சூழ்நிலைக்கேற்ப தகவமைப்பு செய்ய முயற்சிக்கும் அதே நேரத்திலே தனது அடிப்படை கொள்கையிலிருந்து சிறிதும் பின்வாங்காத தலைவராக உள்ளார். ட்ரம்ப் அடிக்கடி செலன்ஸ்கியினை திறமையான சேல்ஸ்மன் என கூறுவதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை செலன்ஸ்கி ஊழலில் ஈடுபட்டதாக எந்த குற்றச்சாட்டும் வரவில்லை என கருதுகிறேன்.

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

2 months 3 weeks ago
அனேக விடையங்கள் இப்போ யூருப்காரர்களால் வெளி வருவதனால் யூருப்களை இணைக்க வேண்டிய நிலை.இறப்பதற்கு முன் தன்னுடைய நிலைமைய அந்தப் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்..இப்படியான இறப்புக்களுக்கு பின்னராவது தமிழ்கடைகள் வைத்திருப்பவர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடவுங்கள்.

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

2 months 3 weeks ago
எண்பதுகளில் நாங்கள் பட்ட துன்பங்கள் பெரிது. விசா இல்லாமல், வேலையில்லாமல், ஊரில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல், கரிகளைப் போட்டு எரித்து குளிர் காய்ந்து, புரியாத மொழியில் விழி பிதுங்கி, மூன்று வருடங்கள் முகாம்களில் முடங்கிக் கிடந்து……. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்தது நிம்மதி தேடு..” என்ற பழைய பாடல் வரியொன்றுதான் நினைவுக்கு வந்தது.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 3 weeks ago
உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏

வாழைப்பூ வடை

2 months 3 weeks ago
ஆக வாழைப்பூ ( வடை) நீரழிவு நோய்க்கு மருந்தாக பாவிப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மருத்துவர் தந்த மாத்திரைகளை ஒழுங்காக எடுத்திருந்தால் ஒருவேளை உங்கள் நண்பர் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. அதுசரி விமானத்தைப் பிடிக்கும் அவசரத்த்தில் உங்கள் நண்பரின் வாகனத்துக்கான பணத்தை கொடுக்க மறக்கவில்லைத்தானே. முன்பெல்லாம் மூங்கில் கதிரைகள் பாவனையில் இருந்தன. இப்போ பிளாஸ்ரிக் காலம். இயற்கைப் பொருட்களை பாவனைப் படுத்துவதை விட்டு நாங்கள் வெகு தூரம் வந்து வட்டோம். கதையோடு பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.👏🏽

வாழைப்பூ வடை

2 months 3 weeks ago
👍........... இந்தச் சிக்கல் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர் கவனத்துடன் நன்றாகவே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், ஏராளன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை மருத்துவத்திற்கு பொருந்தாது...................

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

2 months 3 weeks ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile (Pvt) Ltd நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:58 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Thilakawardena Textile (Pvt) Ltd இன் தலைவர் சுனில் திலகவர்தன, வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Thilakawardena Textile (Pvt) Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ரவிந்து திலகவர்தனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233126

மின்னல் எச்சரிக்கை!!

2 months 3 weeks ago

மின்னல் எச்சரிக்கை!!

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute

டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை  தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது.

பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

image-1.png?w=392

  1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று.  இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை  இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.

  2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.

  3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.

  4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.

  1. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.

  2. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

  3. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது).

  4. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.

  5. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.

  6. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.

  7. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.

  8. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.

  9. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. 

596290138_1431503705652682_4835439587807

அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு  முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா?

உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

மேலும் தற்காலத்தில் ChatGPT  இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது

சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி  அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும்.  

 மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.

முற்றும்     

https://tinyurl.com/5emrm568

மின்னல் எச்சரிக்கை!!

2 months 3 weeks ago
மின்னல் எச்சரிக்கை!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று. இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும். உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும். சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும். தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது). மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும். மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும். இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும். இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா? உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும் தற்காலத்தில் ChatGPT இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும். மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி. முற்றும் https://tinyurl.com/5emrm568