ஐரோப்பிய ஒன்றியத்தால் ஹிட்லருக்கு சமமாக விமர்சிக்கப்படும் புட்டினுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புட்டினும் டொனால்ட் ரம்ப் அவர்களும் பள்ளி தோழர்கள் போல் கை குலுக்கி உரையாடுகின்றார்கள். இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் வாய் மூடிக்கொண்டு ஆதரிக்கும் போல்.....உக்ரேனில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுக்கொடுப்பதுதான் நியாயம். அமெரிக்காவின் திரைமறைவு அரசியல் எப்படி பலமானதோ அதே போல் ரஷ்ய ரஷ்ய திரைமறைவு அரசியலும்.....
படத்தில் பார்க்க பூட்டின் டிரம்ப்புடன் ஒப்பிடும்போது வயது போனவர் போல் தென்படுகின்றது. இன்னும் நான்கு ஐந்து வருடம் வண்டியை இழுப்பாரோ? பூட்டினுக்கு பிறகு யார்?
அரசியலை விட சினிமாவில் நிலைத்திருப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதிலும் அன்று தொடக்கம் இன்று வரை சிறுவர்கள் தொடக்கம் முதியோர்கள் வரை விருப்பும் நடிகராக இருக்கின்றார். நடிப்பு பெரிதாக இல்லாவிட்டாலும்.......! இந்திய சினிமாவில் பேசு பொருளாக இருப்பவர்.சினிமா வியாபார ரீதியிலும் முன்னணியில் இருப்பவர். மற்றும் படி சினிமாத்துறை அறைகளில் சீமான் விட்ட தவறுகளைத்தான் ரஜனிகாந்த்தும் செய்தார்.😁 ரஜனிகாந்த் பிரபலம்,சினிமா பலம் காரணமாக வெளியே சொல்லப்படுவதில்லை. வெளிக்கொண்டுவரப்படுவதில்லை.
பப்பாவில எத்தி ரணகளமாக்கிறதிலையே குறியாய் கொஞ்ச சனம் திரியுது.... எற்கனவே ஜேர்மன்காரன் ஆரை எப்ப தூக்கலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை விட்டு பாத்துக்கொண்டு திரியிறாங்கள். இதுக்குக்குள்ள அதிபர் சோக்கு வேற....😂 சரியாத்தான் யோசிச்சிருக்கிறியள்..😄 எங்களுக்கு கள்ளு எப்படியோ ஜேர்மன்காரனுக்கு, ஐரோப்பியனுக்கு பியர்.....😎 பருத்தித்துறை வடை,ரின் மீன் கட்லட்,பற்றீஸ்,உழுந்து வடை,போண்டா,மட்டன் றோல்ஸ்,சிவப்பு வெல்வெட் கேக். வீட்டிலை பங்சன் செய்தால் பலகாரம் கட்டிக்கொடுக்கப்படாது😎 எங்கடை வீடுகளிலை கோயில் திருவிழாக் காலம் எண்டால் மச்சச்சட்டியும் கள்ளு போத்திலும் பறணைக்கு ஏறீடும். ஒரே சிவ சிவ பக்தி மயம்.😂 இந்த முறை வித்தியாசமான அதிரடி நடவடிக்கை...போன கிழமை பக்கத்து கோயில்ல திருவிழா முடிஞ்சு வைரவர் மடை நடந்தது. ஐயா இரண்டு வடை மாலையோட எஸ்கேப் 😎
இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள், இலங்கையும் இந்தியாவும் கிட்டதட்ட ஒரே காலப்பகுதியில் (ஒராண்டு) சுதந்திரம் பெற்ற நாடுகள், ஆரம்பத்தில் இலங்கைவளர்ச்சிப்பாதையில் பயணித்தது, தற்போது இலங்கை மிக மோசமான 3 ஆம் உலக நாடாக மாறுகிறதோ எனும் ஒரு வருத்தம் உள்ளது, ஆரம்பத்தில் அரச சேவையில் இலஞ்சம் பெறுபவர்களை சிறைக்கனுப்பிய அரசு தற்போது பெருமளவில் ஊழல் செய்து நாட்டை திவாலாக்கியது. இலங்கை உள்நாட்டுப்போரின் பின்னர் மிக மோசமான நிலை நோக்கி அதன் பாதை வழியே தொடர்ந்தும் செல்கிறது, இலங்கையிலும் இந்தியாவிலும் ஊழல், சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறை என பொதுவான அம்சம் இருந்தாலும் ஒப்பீட்டலவில் இந்தியா இலங்கை இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இலங்கை சுதந்திரம் பெறாமல் இருந்திருந்தால் ஒரு அபிவிருத்தி அடைந்த நல்ல சிறந்த தேசமாக வந்திருக்கும், 77 வருடங்களின் பின்னர் இலங்கை வாழ்மக்களின் இந்த நிலையினை உருவாக்கிய இந்த சுதந்திரதினத்தினை வெக்கம் இல்லாமல் கொண்டாடுகிறார்கள்.
பிஜேபி காரர்கள் மீது சீமானின் தனி பாசம் தெரிந்ததே 🤣 கள்ளு உணவு என்று சொல்லி போராடி சமுதாயத்தை சீரழிப்பவர் ரஜினிகாந்தின் உழைப்பை முன்மாதிரியாக எடுக்கும்படி சொல்வது ஒகே
நினைவு வைத்து வாழ்த்திமைக்கு மிக்க நன்றி.. உங்கள் வாழ்த்திற்கு நன்றி. நன்றி தோழர். நன்றி கிருபன் நன்றி ஐயா நன்றி...இன்னொரு முறை சந்திக்கும் நிலை வரும் போல் இருக்கின்றது. உங்கள் வாழ்த்திற்கு நன்றி சுவியர்! மனிதர்களிடம் வாழ்த்து பெறுவது தெய்வ கடாட்சத்திற்கு சமன். நியாயமான உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்திற்கு நன்றி சிறித்தம்பி வாழ்த்திற்கு நன்றி ரசோதரன். நான் உங்கள் எழுத்துக்களின் வாசகன் . உங்கள் பிரமாண்ட வாழ்த்திற்கு நன்றி ஏராளன். மனமார்ந்த நன்றிகள்.நேரம் கிடைக்கும் போது ஏதாவது எழுதுங்கள்.யாழ்களத்தில் உங்கள் வெற்றிடம் பெரிது. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிழலி. ஓடி வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி. யாழில் மீண்டும் காண்பதில் மிகுந்த சந்தோசம். நலமோடு இருங்கள்.
49 வயது என்பது கேள்வி....அதுவும் பிரபலமான் இதய அறுவை சிகிச்சௌ நிபுணர்....அவருடைய உடல்பருமனை வைத்தாவது ..தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது என் கவலை....இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ...எங்கடை வைத்தியர் அப்படிச் சொன்னவர் ...இப்படிச் சொன்னவர் என்று...நாம் யாருமே சந்தோசப்பட முடியாது....எல்லாம் அவன் செயல் மீண்டும் எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரீழப்பின் ஒன்றிற்கு அழ்ந்த கவலையடைகின்றேன்