Aggregator
Demand justice for Tamil disappeared
மனிதநேயம் எங்கே
யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது!
adminJune 20, 2025
வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.
முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.
வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.
இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார்.
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இரசித்த.... புகைப்படங்கள்.
யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” ஆவணப்படம்
“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” ஆவணப்படம்
Published By: DIGITAL DESK 3
20 JUN, 2025 | 03:31 PM
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினால் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க, 2013 ஆம் ஆண்டு தி ரோயல் பவுண்டேஷனுடன் இணைந்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் “வனவிலங்குகளுக்காக ஒன்றுபடுவோம்” (United for Wildlife) என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த அமைப்புடன் இணைந்து இளவரசர் வில்லியம் நடத்தும் Guardians Of The Wild நிகழ்ச்சியில் இலங்கை வனவிலங்கு தொடர்பான ஆவணத் தொடர் வெளியிட்டப்பட்டுள்ளது.
“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” என்ற ஆவணப்படம் பிபிசி எர்த் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிந்தக பத்திரணவை பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி குழு வரவேற்றது.
இதன்போது வனவிலங்கு சுகாதார மற்றும் வனவிலங்கு பாதுகாப்புது்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் தாரக்க பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையின் காட்டு பகுதிகளில் யானைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் விரைவாக மாறுவதால், அவை புதிய சவால்களை எதிர்கொள்கின்றன, அவை மனிதர்களுடன் மேலும் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் வருகின்றன.
இருப்பினும், சிந்தக தலைமையில் அர்ப்பணிப்புடன் வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழு, இந்த மென்மையான இராட்சத உயிரினத்தை பாதுகாக்க போராடி வருகின்றது. மேலும் மக்களும் யானைகளும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுகின்றார்கள்.