Aggregator

Demand justice for Tamil disappeared

2 months 3 weeks ago
https://chng.it/ZZCGSdj7Bn Justice for the Forcibly Disappeared: Ensure Truth, Justice, and Accountability for Chemmani and Beyond We, the undersigned, call upon the Government of Sri Lanka to take immediate, transparent, and meaningful action to address the long-standing issue of enforced disappearances and mass graves, including the recent discovery at Chemmani, Jaffna. The excavation at the Ariyalai Siththupaaththi Hindu Crematorium has already uncovered 19 bodies, including three infants. This painful discovery has reopened the wounds of thousands of families whose loved ones were forcibly disappeared during Sri Lanka’s brutal civil war. Chemmani is not just a site of unmarked graves—it symbolizes decades of state denial, coverups, and broken promises. மேலே உள்ள சுட்டியை அழுத்தி உங்கள் விபரங்ளை பதிந்து நீதி கேளுங்கள்.

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 3 weeks ago
யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கட்டி..எழுப்பும்போது...தயிட்டி விகாரை மாதி பத்தை கட்டிவிட்டல் ...கம்பீரமாக எழுந்து நிற்கும்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
அமெரிக்கா எடுத்த‌துக்கை எல்லாம் மூக்கை நுழைக்குதே குரு........................ சீனாவின் நோக்க‌ம் பொருளாதார‌த்தை க‌ட்டி எழுப்புவ‌து , அமெரிக்காவின் நோக்க‌ம் அடுத்த‌வ‌ன் நாட்டில் குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணி குளிர் காய்வ‌து........................... நான் உங்க‌ளுக்கு முன்பும் ஒரு முறை சொல்லி இருக்கிறேன் அமெரிக்க‌ன் விளையாட்டை நேசிக்கும் அள‌வுக்கு அமெரிக்கா அர‌சிய‌லை முற்றிலுமாய் வெறுக்கிறேன் என‌ அதுக்கு பல‌ கார‌ன‌ங்க‌ள் இருக்கு ஆமை புகுந்த‌ வீடும் அமெரிக்கா புகுந்த‌ நாடும் இந்த‌ உல‌கில் முன்னேறி இருக்கா😛......................... ஈரான் என்ர‌ நாட்டை அமெரிக்கா என்ர‌ ந‌ச்சு பாம்பு எவ‌ள‌வு கால‌த்துக்கு வ‌ஞ்சிக்குது..........................அந்த‌ நாட்டின் மீது பொருளாதார‌ த‌டை அதோட‌ அவ‌ர்க‌ள் அந்த‌ குண்டை செய்ய‌க் கூடாது இந்த‌க் குண்டை செய்ய‌க் கூடாது என்று சொல்ல‌ அமெரிக்காவுக்கு யார் அந்த‌ உரிமையை கொடுத்த‌து இவ‌ர்க‌ள் ம‌ட்டும் உல‌கை அழிக்கும் குண்டுக‌ள் போர் விமான‌ங்க‌ளை செய்து ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு விற்று காசு பாப்பின‌ம்...........................த‌ன‌து நாட்டின் இறையான்மைய‌ பாதுகாக்க‌ ஈரான் அணுகுண்டு செய்வ‌து இவ‌ர்க‌ளுக்கு உருத்துது..............................ஈரான் துணிவோட‌ அமெரிக்காவை தூக்கி எறிந்து விட்டின‌ம் , இனி எல்லாம் நீ சொல்வ‌தை கேட்க்க‌ முடியாது என்று.........................20வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ உல‌க‌ம் வேறு இப்ப‌ இருக்கும் உல‌க‌ம் வேறு.........................ஒரு வ‌ல்ல‌ர‌சு நாடு என்றால் எப்ப‌வும் ந‌டு நிலையா செய‌ல் ப‌ட‌னும் , த‌ன‌க்கு வேண்ட‌ ப‌ட்ட‌வ‌னுக்கு ம‌ட்டும் பின்னால் போய் க‌ழுவி விடுவ‌து தான் அமெரிக்காவின் செய‌ல் , ஒரு கோடி யூத‌ர்க‌ளுக்காக‌ எத்த‌னை கோடி ம‌க்க‌ளின் வெறுப்புக்கு இப்போது அமெரிக்கா ஆளகி இருக்கு.........................ஈரான் மீது அமெரிக்கா கைவைத்தால் ஈரானின் ந‌ட்பு நாடுக‌ள் வேடிக்கை பார்ப்பின‌மா.....................ஈரானின் ந‌ட்பு நாடுக‌ளிட‌மும் அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ குண்டுக‌ள் இருக்கு அதை அவ‌ர்க‌ளும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ தொட‌ங்கினால் உல‌கில் அமைதி இருக்குமா............................. ஹாசாவில் அத்த‌னை ம‌ருத்துவ‌ம‌னைய‌ த‌க‌ற்க்க‌ ஆயுத‌ம் கொடுத்த‌ நாடு அமெரிக்கா , புது வ‌கை ஆயுத‌ங்க‌ளை ஹாசா ம‌க்க‌ள் மீது போட்டு ஆராச்சி ப‌ண்ணின‌வை அந்த‌ குண்டுக‌ள் எப்ப‌டி வெடிக்குது எப்ப‌டி க‌ட்டிட‌ம் இடிந்து விழுகுது என்று பார்க்க‌........................யாராவ‌து புற்றுநோய் ம‌ருத்துவ‌ம‌னையை தாக்குவார்க‌ளா...................மன‌ ந‌ல‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் அப்ப‌டி செய்வாங்க‌ள் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ந‌ங்கு பொருந்தும்😡.............................

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2 months 3 weeks ago
ஈரானை அமெரிக்கா விமானங்களால் தாக்கும் நிலைமைக்கு இஸ்ரேல்-இரான் போர் விரிவடைந்தால் ஐரோப்பாவை தளமாக வைத்தே அந்த விமானங்கள் இயக்கப்படும். மாறாக அமெரிக்காவின் கட்டார் விமானத்தளம் பயன்படுத்தப்பட்டால் கட்டாரை இரான் பதிலுக்கு தாக்க முற்படும். இதனால் எண்ணை விநியோகம் தடைப்படுவதுடன் அமெரிக்காவின் இதர முஸ்லிம் கூட்டு நாடுகளும் இந்தப் போருக்குள் இழுத்து விடப்படும் அபாயம் உண்டு. போரை இரானுக்குள் மட்டும் நடத்தி அதை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு நாடுகளுக்கு பரவிவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதிலும் இஸ்ரேல் அமெரிக்க அணி ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 3 weeks ago
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! adminJune 20, 2025 வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது. முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது. வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது. இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/217092/

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 3 weeks ago

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது!

adminJune 20, 2025

43-1-1.jpg?fit=800%2C533&ssl=1

வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

43-4-2.jpg?resize=800%2C533&ssl=1

இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.

முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.

இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை  மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு   மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.  அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட,  மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/217092/

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
பையன் சார், அமெரிக்கா அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் புதிதாக எதுவும் இல்லை. பலரும் இப்படியே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போல. சாதாரண வேலிச் சண்டையிலேயே பக்கத்து வீட்டுக்காரர்களை பாம்பு கடிக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் நாங்கள். இவ்வளவு செய்யும் அமெரிக்காவை விட்டு விடுவோமா என்ன. அமெரிக்கா போக இன்னொருவர் அந்த இடத்திற்கு வரப் போகின்றார் என்றால், அந்த மாற்றம் நடக்காமலேயே இருக்கலாம். எந்த தனி வல்லரசுமே தர்மம் அற்றது, சுயநலம் மிக்கது. வேற்றுமையில் ஒற்றுமை தேடுவோம் என்ற அடிப்படை சீனாவிடமோ அல்லது ரஷ்யாவிடமோ கிடையாது, அதனாலேயே நாங்கள் அங்கே குடியேறுவது கிடையாது. மேற்கு நாடுகளில் சிலரிடமாவது இந்த இயல்புகள் உண்டு. அதனாலேயே நாங்கள் மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றோம். சைனா தனிப்பெரும் வல்லரசாவதும், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக வந்ததும் ஒரே மாதிரியான நிகழ்வுகள். அவலை நினைத்து உரலை இடிப்பது போல...................

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

2 months 3 weeks ago
இவர் தான் புத்தகோவில் விவகாரத்தில் அரசுக்கு சார்பாக போய் பார்த்து அங்கே எதுவுமே இல்லை என்று சொன்ன ஆளோ?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
உல‌கில் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக்கு யார் கார‌ன‌மாய் இருப்பார்க‌ள் என்று ஆய்வை ப‌டித்தால் அது அமெரிக்காவில் போய் நிக்குது😛..................... நீங்க‌ள் ஈரானின் சிறு வ‌கை ஆயுத‌க் குழுக்க‌ளை ப‌ற்றி எழுதுறீங்க‌ள் , உல‌க‌ அள‌வில் அமெரிக்க‌ன் எத்த‌னை தீவிர‌வாத‌ குழுக்க‌ளை உருவாக்கின‌வ‌ர்க‌ள்............................... ஒரு கோடி யூத‌ர்க‌ளுக்காக‌ அமெரிக்கா ஏன் இப்ப‌டி ப‌த‌ருது.........................ஹ‌மாஸ் சிறு தாக்குத‌ல் செய்த‌ போது கூட‌ இதோ அனுப்புகிறேன் என‌து க‌ப்ப‌லை என‌ இஸ்ரேல் ப‌க்க‌ம் அனுப்பி வைச்ச‌வை........................ பிரிடிஷ் கார‌னின் ராஜ்ஜிய‌ம் எப்ப‌டி அட‌க்க‌ப் ப‌ட்ட‌தோ அதே போல் அமெரிக்காவின் கொட்ட‌த்தை இன்னொரு நாட்ட‌வ‌ன் அட‌க்குவான்......................அமெரிக்காவுக்கு இந்த‌ உல‌கை யாரும் ப‌ட்டாவா எழுதி கொடுக்க‌ல‌ உன‌து க‌ட்டு பாட்டின் கீழ் தான் உல‌க‌ம் இருக்க‌னும் என‌..................................அமெரிக்க‌னை விட‌ சீன‌ன் வ‌ள‌ந்து விட்டான் இந்த‌ நூற்றாண்டில் சீன‌ன் ம‌றைமுக‌மாக‌வோ அல்ல‌து நேர‌டியாக‌வோ யார் கூட‌வும் ச‌ண்டைக்கு போன‌து கிடையாது......................தைவானை த‌ங்க‌ளுட‌ன் இணைக்க‌ப் போகிறோம் என‌ அறிக்கை விட்ட‌வை , ர‌ம்ப் க‌ன‌டாவை அமெரிக்கா கூட‌ இணைக்க‌னும் , ஹிரின்லாந்தை அமெரிக்கா கூட‌ இணைக்க‌னும் , ப‌ன‌மா நாட்டை அமெரிக்கா கூட‌ இணைக்க‌னும்....................இப்ப‌டி ப‌ல‌ வீர‌ வ‌ச‌ன‌ம் , ஆனால் சீனா தைவானை த‌ங்க‌ளுட‌ன் இணைக்க‌ போகிறோம் என்று சொன்னால் அது அமெரிக்காவுக்கு பிடிக்காது.........................

“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” ஆவணப்படம்

2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 03:31 PM சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினால் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க, 2013 ஆம் ஆண்டு தி ரோயல் பவுண்டேஷனுடன் இணைந்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் “வனவிலங்குகளுக்காக ஒன்றுபடுவோம்” (United for Wildlife) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்புடன் இணைந்து இளவரசர் வில்லியம் நடத்தும் Guardians Of The Wild நிகழ்ச்சியில் இலங்கை வனவிலங்கு தொடர்பான ஆவணத் தொடர் வெளியிட்டப்பட்டுள்ளது. “யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” என்ற ஆவணப்படம் பிபிசி எர்த் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிந்தக பத்திரணவை பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி குழு வரவேற்றது. இதன்போது வனவிலங்கு சுகாதார மற்றும் வனவிலங்கு பாதுகாப்புது்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் தாரக்க பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையின் காட்டு பகுதிகளில் யானைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் விரைவாக மாறுவதால், அவை புதிய சவால்களை எதிர்கொள்கின்றன, அவை மனிதர்களுடன் மேலும் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் வருகின்றன. இருப்பினும், சிந்தக தலைமையில் அர்ப்பணிப்புடன் வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழு, இந்த மென்மையான இராட்சத உயிரினத்தை பாதுகாக்க போராடி வருகின்றது. மேலும் மக்களும் யானைகளும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுகின்றார்கள். https://www.virakesari.lk/article/217999

“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” ஆவணப்படம்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2025 | 03:31 PM

image

சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தினால் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க, 2013 ஆம் ஆண்டு தி ரோயல் பவுண்டேஷனுடன் இணைந்து பிரித்தானிய இளவரசர் வில்லியம் “வனவிலங்குகளுக்காக ஒன்றுபடுவோம்” (United for Wildlife) என்ற அமைப்பை உருவாக்கினார்.

இந்த அமைப்புடன் இணைந்து இளவரசர் வில்லியம் நடத்தும் Guardians Of The Wild நிகழ்ச்சியில் இலங்கை வனவிலங்கு தொடர்பான ஆவணத் தொடர் வெளியிட்டப்பட்டுள்ளது.

“யானைகளும் மனிதர்களும் அருகருகே வாழும் தீவு” என்ற ஆவணப்படம் பிபிசி எர்த் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Gt3jzKoX0AEyn4_.jpg

வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த சிந்தக பத்திரணவை பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி குழு வரவேற்றது.

இதன்போது வனவிலங்கு சுகாதார மற்றும் வனவிலங்கு பாதுகாப்புது்துறையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் மாரசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் டாக்டர் தாரக்க பிரசாத் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Gt3jzLUW8AAYJXp.jpg

இலங்கையின் காட்டு பகுதிகளில் யானைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகம் விரைவாக மாறுவதால், அவை புதிய சவால்களை எதிர்கொள்கின்றன, அவை மனிதர்களுடன் மேலும் நெருக்கமான தொடர்பு எல்லைக்குள் வருகின்றன.

Gt3jzKxWQAAvr8-.jpg

இருப்பினும், சிந்தக தலைமையில் அர்ப்பணிப்புடன் வனப்பகுதி, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் பாதுகாப்பில் ஈடுபடும் குழு, இந்த மென்மையான இராட்சத உயிரினத்தை பாதுகாக்க போராடி வருகின்றது. மேலும் மக்களும் யானைகளும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை அவர்கள் திட்டமிடுகின்றார்கள். 

510341018_1138294205002393_1712425770343

510271839_1138294195002394_6551030851486

510913108_1138294185002395_5806423614571

509375962_1138294191669061_7948117819326

https://www.virakesari.lk/article/217999

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

2 months 3 weeks ago
வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025 மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448, +94 77 959 1047 (WhatsApp, Viber)