சீமான் பேச்சு
https://.YouTube.be/nMdQ_YCXbxo?si=3ByUJOSXspbyssnu
6 minutes ago, Paanch said:https://.YouTube.be/nMdQ_YCXbxo?si=3ByUJOSXspbyssnu
https://.YouTube.be/nMdQ_YCXbxo?si=3ByUJOSXspbyssnu
6 minutes ago, Paanch said:https://.YouTube.be/nMdQ_YCXbxo?si=3ByUJOSXspbyssnu
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
Mani Singh SUpdated: Wednesday, October 8, 2025, 12:20 [IST]

டெல்லி: நடிகை பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியது. இதேபோல் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also Read
இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண்டும் விசாரித்தது. சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஆஜராகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று கூறினார்.
இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது.
இந்த நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிஸ்கி
மண்டியிடாத மானம்…
முழந்தாளிட்டு…ஊ….
ஊரறிய மன்னிப்பு கேட்ட தருணம்🤣.
பிகு
பாஜக அனுசரானையில் சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்திருக்காவிடின் சைமனுக்கு விளைவு இன்னும் மோசமாய் இருந்திருக்கும்.

வலிந்து காணாமல் போனோர் விசாரணை; இலங்கை தொடர்பில் ஐ.நா. குழு கவலை!
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் இலங்கையின் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) செயல்திறனும் இதில் அடங்கும்.
குறித்த அலுவலகம் காணாமல் போனோர் தொடர்பான 17,000 முறைப்பாடுகளில் ஒரு பகுதியை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு (UNCED), கட்டாயமாக காணாமல் போனதாகக் கூறப்படும் விசாரணை, வழக்குத் தொடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது அதிக அளவிலான தண்டனை விலக்கு செயல் என்றும் குறிப்பிட்டது.
இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) திங்களன்று நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பின்னர் UNCEDவின் இந்த அறிக்கை வந்துள்ளது.