Aggregator

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை

2 months 3 weeks ago
மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்று (20) நடைபெற்றது. விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். https://akkinikkunchu.com/?p=329597

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை

2 months 3 weeks ago

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை

MediaFile-9-3-780x470.jpeg

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்று (20) நடைபெற்றது.

விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

https://akkinikkunchu.com/?p=329597

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து

2 months 3 weeks ago
தமிழரசுக்கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி கூட்டு ஆட்சி – சந்தர்ப்பவாத தமிழ்த்தேசிய விரோதம்! சுமந்திரனுடன் தமிழரசுக்கட்சி சார்பில் ஒப்பந்தம் செய்துள்ளமை திரு.க.வி.விக்னேஸ்வரனின் சந்தர்ப்பவாத தமிழ்தேசியவிரோத சக்திகளுடனான வங்குரோத்து அரசியல் வியாபாரம் என்பதால் மிகவும் ஏமாற்றத்துடன் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இவ்வாறு முன்னாள் தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர் ச.ஸ்ரார்லின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் அனுப்பப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது, தமிழ்தேசிய பரப்பில் இவருக்காக மீன்சின்னத்தை வழங்கி பாராளுமன்றம் அனுப்பிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் யாரின் பதவிமோகத்திற்காகவும் எதற்காகவும் இந்த ஒப்பந்தம் என்பதை மான் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்தேசிய விரோத மேல்சாதிய கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் திரு.விக்னேஸ்வரன் பிரத்தியேக ஆலோசகரையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பின்னர் அதுபற்றி எதுவும் தெரியாதவர்போன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த நாடகத்தை நாம் நன்கு அறிவோம்.தமிழ்தேசிய கொள்கைபற்றுள்ளவர்கள் கட்சியிலிருந்து மட்டுமல்ல அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்படுவது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது. தமிழ்தேசியத்தை நேசிப்பவர்களால் தமிழினத்துரோகிகளாக அடையபளப்படுத்தப்பட்ட ஈபிடீபி யினருடன் தமிழ்தேசியநலன்களை புறம்தள்ளி பதவிக்காகவும் தமிழ்தேசியம் ஒற்றுமைபடுவதை சிதைக்கும் எண்ணகருவுடன் ஒப்பந்தம் செய்த சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான தமிழரசுக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததன்முலம் முன்னர் வி.மணிவண்ணன் முதல்வர் பதவிக்காக ஈபிடீபியுடன் இனைந்து ஆட்சியமைத்தமையை போன்று இப்போதும் தமிழ் மக்கள் கூட்டணியில் நடப்பதால் இப்படியான அரசியல் வியாபாரத்திற்காகதானோ தமிழ்தேசியகொள்கை பற்றாளர்கள் திரு.மணிவண்ணனின் உள்வருகையுடன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது நிதர்சனமாகின்றது. திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியபோது அவர் தமிழ்தேசிய வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் என்ற பெரும்நம்பிக்கையுடன் மக்கள் ஆதரவுகாட்டினர் நாமும் அவ்நம்பிக்கையுடனே தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்காக உழைத்தோம் எனினும் முன்னர் திரு.ஆ.சுமந்திரனிடம் சூடு வாங்கிய திரு.விக்னேஸ்வரன் மீண்டும் சூடு வாங்க உள்நுழைந்துவிட்டார் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு போதும். அவனே கொள்கை பற்றாளனாக மதிக்கப்படுவான் போற்றுதலுக்குரியவன். சூடு சொரணை இல்லாதவர்கள் எம் தமிழ்தேசியப்பரப்பில் எதற்காக? எம்வாக்குகளால் அவர்களும் அவர் சார்ந்தவர்களும் சொந்த நலன்களை அனுபவித்தது போதும். இவ்வாறானவர்களை இணங்கண்டு நீக்கிவைத்து நாம் தமிழர்களாக எம்தேசியத்திற்காக ஒன்றிணைவோம்.- என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=329609

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

2 months 3 weeks ago
"ரஜ லுனு"க்கு தீர்வு வழங்கியாச்சோ சந்திரா....உப்புக்கே தீர்வு வழங்க காணவில்லை இதில புலம்பெயர்வை தடுக்க போகின்றாராம்...ம்ம்ம்ம்ம் ..

கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

2 months 3 weeks ago
ஒருதடவை சந்திரிகா சொன்னார், மஹிந்த குடும்பம் கள்ளர் கூட்டம் (ஊழல் நிறைந்தவர்கள்) என்று. அப்போ நான் நினைத்தேன், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறாரென. ஆனால் அண்மையில் ஒரு செய்தியறிந்தேன். அதாவது மஹிந்தவின் தந்தையார் அரசியலில் ஈடுபட்டு வங்குறோத்து நிலையடைந்து சொந்த வீட்டையே ஈடுவைத்து மீளமுடியாமல் ஜப்தி ஆகும்போது, அன்றைய அரசியல்வாதிகளே ஒன்று சேர்ந்து அதை மீட்டுக்கொடுத்தனரென்று. அதன்பின் தந்தையார் இறந்தபின் மஹிந்தா ஒரு சிறிய நூலகத்திலோ எங்கேயோ வேலை செய்தாராம். சிறிமாவோ அம்மையார் ஒரு அரசியல் கூட்டத்தில் மஹிந்தவை சந்தித்து அரசியலுக்கு அழைத்தாராம், அப்போது தனது ஒருவருட சம்பளத்தை கடனாக பெற்றே அரசியலில் இறங்கினாராம் மஹிந்தர். அதன்பின் சிறிமாவின் குடும்ப அரசியலையே அழித்தார் மஹிந்தா. அவரோடு சேர்ந்தவர்கள் சும்மாவா இருப்பார்கள்? அவர்களோடு நாட்டிலுள்ள ஊழல்வாதிகளனைவரும் கூட்டுச்சேர்ந்தனர். நாடு அழிவுப்பாதையில் சென்றது, அதை மறைக்க இனவாதத்தை கையிலெடுத்து தம்மை மறைத்தனர். தர்மம் வெல்லும்! அதற்கு கொஞ்சம் காலம் தேவை.

பயந்தாங்கொள்ளி

2 months 3 weeks ago
பயந்தாங்கொள்ளி ---------------------------- புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும். பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன. ஆனாலும் பதுங்கிப் பாய்வதும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு நாக்கால் நீவி நீவி சுத்தம் செய்வதும் இரண்டு விலங்கிடமும் அப்படியே இன்னமும் இருக்கின்றது. பூனைக்கும் பொல்லாத கோபம் வருகின்றது. மியாவ் என்னும் வழமையான ஒரு மெல்லிய ஒலியை விட, அது இன்னொரு கடுமையான ஒலியை கோபத்தில் எழுப்புகின்றது. காட்டில் புலி சந்தோசமான தருணங்களில் மியாவ் போல மெலிதான ஒலி ஏதாவது எழுப்புகின்றதா என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து போகும் கறுப்பு வெள்ளை பூனைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பல வகைச் சாப்பாடுகள் வாங்கி வைத்திருக்கின்றோம். அது ஒரு தெருப்பூனை. அது எங்கே படுக்கின்றது, என்ன செய்கின்றது என்று கூட எங்களுக்கு தெரியாது. சில நாட்களில் அதிகாலையிலே வாசலில் நிற்கும். அதன் உணவைக் கொடுத்தால் சாப்பிடும். பின்னர் போய்விடும். மதியம் வரும், பின்னேரத்திலும் சில நாட்களில் வரும். இன்னும் சில நாட்களில் நன்றாக இருட்டும் வரை வீட்டின் பின்பக்கம் படுத்திருக்கும். இரண்டு வருடங்களின் பின், அதன் வாய் திறந்து மியாவ் என்று சொல்ல ஆரம்பித்தது. நன்றி என்று சொல்வதைப் போல அதன் மியாவ் இருப்பதில்லை. 'நீங்கள் நல்லா இருக்கிறீர்களா..............' என்று கேட்பது போலவே அதன் மியாவ் இருக்கின்றது. சில நாட்களில் ஒன்றும் சொல்லாது. அதன் பிரச்சனை அதற்கு என்று நினைத்துக்கொள்வேன். சேர்ந்தால் போல ஒரு மாதம் வரை வீட்டுப் பக்கம் வராமலும் இருந்துவிடும். அதன் கதை முடிந்து விட்டது போல, இனி இந்த மூட்டை மூட்டையாக கிடக்கும் பூனை உணவுகளை என்ன செய்வது என்று நினைக்க, ஒரு நாள் திடீரென்று வாசலில் வந்து நிற்கும். ஒரு நாள் நான்கு குட்டிகளை கூட்டிக் கொண்டு வந்து, அவைகளுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன். ஆனால் இது ஆண் பூனை. ஆண் விலங்குகள் பொதுவாக அவ்வளவு பொறுப்பாக நடப்பது இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கின்றன, ஆனால் பூனைகளில் இல்லை என்று நினைக்கின்றேன். ஆகவே நான்கு குட்டிகள் என்றும் வீட்டுப் பக்கம் வரப் போவதில்லை என்றே இருந்தேன். பல வருடங்களின் முன் இங்கிருக்கும் ஒரு வார இறுதி திறந்த வெளிச் சந்தையில் ஒரு மாதுளம் கன்று வாங்கி வீட்டில் நட்டோம். அதை ஏசியன் மாதுளை என்று அவர்கள் சொன்னதாலேயே வாங்கினோம். அமெரிக்கன் மாதுளை கடும் சிவப்பு முத்துகள், அத்துடன் பெரும்பாலானவை பல்லைக் கூச வைக்கும் கூர்மையான புளிப்புச் சுவையும் கலந்தவை. பல்லுப் போனால் சொல்லும் போய்விடும் என்பது ஊரில், இங்கே பல்லுடன் சேர்த்து சொத்தும் போய்விடும். சொத்து ஏற்கனவே இல்லாவிட்டால் பல் வைத்தியம் பார்த்த கடன் ஒரு தலைமுறைக்கு நிற்கும். அதனால் எதுக்கு இந்த அமெரிக்கன் மாதுளை என்று அதை நாங்கள் வீட்டில் வைக்கவில்லை. ஏசியன் மாதுளை ஏசியன் மாதுளை தான். ஊரில் இருக்கும் அதே மாதுளம் பழத்தின் இயல்புகள் தான். ஒரே ஒரு வித்தியாசம் மரத்தில் இருந்தது. மாதுளை மரம் ஒரு சின்ன ஆலமரம் போல பெரிதாக வளர்ந்து வந்தது. இங்கு எல்லாமே பெரிதாகவே இருக்கும், அதற்காக மாதுளை மரமுமா ஆல் போல வளர வேண்டும். அது வளர்ந்து பக்கத்து வீடு, பின் வீடு என்று இரு வீடுகளுக்குள்ளும் புகுந்து நின்றது. அந்த மனிதர்கள் அருமையானவர்கள். இதுவரை எதுவும் சொன்னதில்லை. இந்த மாதுளை மரத்தின் கீழே ஒரு சின்ன கொட்டகை இருக்கின்றது. அதை முன்னர் பார்க்கும் போது பெரிய கொட்டகையாகத்தான் இருந்தது. ஆனால் மாதுளை பிரமாண்டமாக வளர்ந்த பின், கொட்டகை சிறியதாக தெரிய ஆரம்பித்தது. ஒரு நாள் காலை அந்தப் பக்கமாக போன பொழுது கொட்டகையின் கூரையில் சில அசைவுகள் தெரிந்தன. என்னுடைய உயரத்துக்கு கொட்டகைக் கூரையின் மேற்பகுதி முழுவதுமாகத் தெரியாது. ஏணி ஒன்றில் ஏறிப் பார்த்தால், அங்கே நான்கு பூனைக் குட்டிகள் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றன. நான்கில் ஒரு குட்டி கறுப்பு வெள்ளை. ஆனால் எங்களின் கறுப்பு வெள்ளை இவ்வளவு பொறுப்பானவர் இல்லையே, இந்த நான்கும் எங்கேயிருந்து இங்கே வந்திருக்கும் என்று யோசனையாக இருந்தது. மண் நிறத்திலான வரிவரிப் பூனை ஒன்றும் வந்து போவதுண்டு. எங்களைக் கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம். ஆனாலும் அதன் குட்டிகளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் விடும் அளவிற்கு அது எங்களை நம்புமா என்று தெரியவில்லை. நான்கு குட்டிகளில் இரண்டு வரிவரிப் பூனைக் குட்டிகளே. பூனைக் குட்டிகள் ஏற்கனவே ஓரளவு வளர்ந்திருந்தன. ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. இரவிரவாக நித்திரை குழம்பிக் கொண்டேயிருந்தது. கூரையில் இருந்து அவை கீழே விழுந்து விடுமா, வேறு ஏதாவது விலங்கு ஒன்று வந்து இந்தக் குட்டிகளை பிடித்து விடுமா என்று பலப்பல யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன. எங்கோயோ பிறந்து இவ்வளவு நாட்களும் மிக ஆரோக்கியமாக ஒரு தாய்ப்பூனையால் மட்டும் வளர்க்கப்பட்ட அந்தக் குட்டிகள் இன்று என் கண்ணில்பட்டதால் என் கற்பனையில் பல ஆபத்துகளின் ஊடாக போய் வந்து கொண்டிருந்தன. காலை பொழுது விடிந்தும் விடியாததுமாக பின்பக்கம் ஓடினேன். ஏணியில் ஏறி எட்டிப் பார்த்தேன். மண் நிற வரிவரி அம்மா அங்கே குட்டிகளுடன் படுத்திருந்தார். என்னை அது நன்றாகப் பார்த்தது. உடனேயே ஏணியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் அது அங்கே இல்லாத நேரங்களில் நான்கு குட்டிகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். எது துணிந்த குட்டி, எது பயந்தாக்கொள்ளி என்று அடையாளம் கண்டுகொண்டேன். பயந்தாங்கொள்ளிக் குட்டிக்கு வெளி உதவிகள் கிடைக்காவிட்டால் அது தப்பிப் பிழைப்பது கஷ்டம் என்று வாசித்தது மனைதில் வந்து கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலை அவைகளை பார்த்து விட்டு, மதிய நேரம் மீண்டும் போனேன். மூன்று குட்டிகள் மட்டுமே கூரையில் நின்றன. ஒரு வரிவரிக் குட்டியைக் காணவில்லை. அது தான் பயந்தாங்கொள்ளிக் குட்டி. அய்யய்யோ............ நான் நினைத்தது நடந்து விட்டதோ என்று நன்றாகத் தேடினேன். கொட்டகையின் ஒரு பக்கத்துடன் ஒட்டி இருந்த மாதுளைக் கிளை ஒன்றுக்கு இடையில் அந்தக் குட்டி மாட்டுப்பட்டிருந்தது. கீழேயும் விழாமல், மேலேறி கூரைக்கும் போக முடியாமல் அது கிளைக்கும் கொட்டகை சுவருக்கும் இடையில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன். 'னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............' 'அதைப் பிடித்து விடுகிறது தானே................' 'நீங்கள் ஒருக்கால் வாங்கோ............' மனைவி அவசரம் அவசரமாக வந்தார். அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன். நான் இந்த மரக் கொப்பை இழுக்கின்றேன், நீங்கள் குட்டியை கீழு பிடித்து கூரைக்கு தள்ளி விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். குட்டி துள்ளிப் பாய்ந்து கூரைக்கு ஓடியது. போன உயிர் வந்தது. பயந்தாங்கொள்ளிகளுக்கு எப்போதும் ஒரு துணையும் உதவியும் தேவைப்படுகின்றது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
வசியவர்களே நன்றி, யப்பானியர்களது கொடுமையைக் கண்ட உலகு அதையே திருப்பி ஏன் மற்றைய இனங்கள் மீதும்,நாடுகள் மீதும் தொடர்கிறது. எல்லாம் பொருண்மிய நலன். அகதியாக ஈராயிரமாண்டுகள் அலைந்ததாகக் கூறும் இஸ்ரேலியர்கள் இன்று பலஸ்தீனர்களை அகதியாக்கி நாடற்றவராக்கும் செயற்பாடு ஏன் நிகழவேண்டும். ரஸ்யா அச்சத்தில் போரிடவில்லை. அது தற்காப்பு நிலையெடுக்கிறது. ஒன்றாக இருந்து இன்று அயலவராக இருக்கும் உக்ரேன் தனது பகைச்சக்திகளைக் குடியேற்ற முனையத் தாக்குகிறது. இன்னும் சில ஆண்டுகளின் பின் மகிந்த சொல்லியது போல் நாம் மேற்கின் போரை நடாத்தினேன் என ஜெலன்ஸ்கி சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
அமெரிக்கா இந்த‌ப் போரில் நேர‌டியாக‌ த‌லையிடாது போல் தெரிகிற‌து வ‌ரும் செய்திக‌ளை கேட்க்க‌...................இஸ்ரேலின் வான் தாக்குத‌லுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌ப் ப‌டும்.......................ஈரான் பேச்சு வார்த்தைக்கு போக‌ வில்லை என‌ ஒரு த‌ர‌ப்பு சொல்லுது இன்னொரு த‌ர‌ப்பு வேறு மாதிரி சொல்லுகின‌ம் இதில் எது உண்மையென‌ தெரிய‌ வில்லை..................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ஈரான் பின் கதவு வழியாக பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நடத்துவதாக கூறுகிறார்கள், ஈரானிடம் வான் மேலாதிக்கம் இல்லை, அதனால் ஈரானின் வான் பரப்பிற்குள் தங்கு தடையின்றி இஸ்ரேல் விமானங்கள் நுழைகின்றன, இப்படியான நிலையில் ஈரானால் போரில் வெல்ல முடியாது அதனை மீறி வீம்பிற்கு போரில் தொடர்ந்து ஈடுபட்டால் தேவையற்ற மனித அழிவுகளே ஏற்படும், ஈரான் அணு ஆயுத முயற்சியினை கைவிட்டு சமாதானமாகவே செல்லும் என கருதுகிறேன். ஆனால் இஸ்ரேலால் தொடர்ச்சியாக 3 வாரத்திற்கு மேலாக வான் தாக்குதலில் ஈடுபட முடியாது தற்போது 30% சுழ்ற்சியினை விமானங்களிடையே செய்கிறது அதனை இவ்வாறு தொடரமுடியாது அல்லது அமெரிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ர‌ம் இர‌ண்டு வார‌ம் என்று சொல்லி இருக்கிறார் இர‌ண்டு வார‌ம் முடிய‌ இன்னும் சில‌ நாட்க‌ள் எடுக்கும் என்பார் அதுக்கிடையில் இஸ்ரேலில் முக்கிய‌ இட‌ங்க‌ளை ஈரான் ஏவுக‌னைக‌ள் மிசேல்க‌ள் மூல‌ம் அழித்து விடுவின‌ம்..................... ஹாசா ம‌க்க‌ள் விட்ட‌ க‌ண்ணீர் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இஸ்ரேல‌ சும்மா விடாது😉......................எல்லாரையும் விட‌ பெரிய‌வ‌ர் ஆண்ட‌வ‌ர்🙏🙏🙏............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா? குருவை மிஞ்சிய சிஸ்சியனாகிவிட்டீர்கள், உங்கள் எழுத்துக்களை பார்ப்பதில் சந்தோசம்.